Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே, 2008

May 30: Eezham, Sri Lanka News & Updates

Posted by Snapjudge மேல் மே 31, 2008

தேவகுமாரன் கொலை: யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் இடையே அச்சம் பரவியுள்ளது

யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரன் என்ற செய்தியாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் ஊடகவியலாளர்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பத்திரிகையாளர்களின் தற்போதைய மனோநிலை குறித்தும் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வட இலங்கை பத்திரிகையாளர் சங்க செயலாளர் பரமேஸ்வரன், யார் அடுத்து இலக்குவைக்கப்படுவார் என்ற ஒரு அச்சவுணர்வு யாழ் பத்திரிகையாளர்களிடையே காணப்படுவதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிரதேசம் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் நிறைந்த ஒரு இடம் என்பதை ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்’ என்ற ஊடகச் சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்பு ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது என்பதையும அவர் குறிப்பிட்டார்.

தமிழோசையில் அவர் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு அழைப்பு வரவில்லை: தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தகவல்

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல் முறையாக சனிக்கிழமை நடக்க இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு, அந்தக் குழுவின் உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களின் செவ்வியையும், அவரது புகாருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க செயலர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களின் பதில்களையும் நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


ஏறாவூரில் முஸ்லிம்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி வெள்ளியன்று ஏறாவூரில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

ஜாமி-உல்-அக்பர் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை முடித்த பின்பு பள்ளிவாசல் முன்றலில் கூடிய நூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குறிப்பிட்ட தூரம் வரை பேரணியொன்றையும் நடத்தினார்கள்.

இப்பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டவர்கள் குறிப்பாக ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் விமர்ச்சிக்கும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் காட்டுப்பள்ளி சந்தியில் குறிப்பிட்ட 4 முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொடும்பாவிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது.


மூதூர் மீனவர்களைச் சந்தித்தார் ரவூஃப் ஹக்கீம்

ரவூஃப் ஹக்கீம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூஃப் ஹக்கீம் இன்று மூதூருக்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கு கடல் வலயத் தடையால் பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்தப் பேசியுள்ளார்.

இந்த நிலையில் மீன்பிடித் தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கட்சியின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணத் தொகையினையும் அவர் மீனவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலக மட்டத்திலும் கடற்படை அதிகாரிகள் மற்றும்ஆளுநர் மட்டத்திலும் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கான அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள விருப்பதாகவும் அவர் கூறினார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

LTTE attacks Sri Lankan Navy detachment in Jaffna: Tamil Tigers kill 13 in camp raid – rebels

Posted by Snapjudge மேல் மே 30, 2008

கடற்படைத் தளம் தாக்கியழிப்பு – புலிகள்

இலங்கையின் வடக்கே யாழ் குடாகடலில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் இருதரப்பு எறிகணை வீச்சுத் தாக்குதல்களில், 5 பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கே யாழ் குடாக்கடலின் சிறுத்தீவில் அமைந்துள்ள கடற்படைத்தளம் ஒன்றினை இன்று அதிகாலை 1.25 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலி கமாண்டோ அணியினர் தாக்கி அழித்ததுடன், அங்கிருந்த ராடார் கருவி உட்பட பல இராணுவ தளபாடங்களையும் கைப்பற்றியிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட படையினரின் 3 உடல்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சிறுத்தீவு முகாம் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை உறுதிசெய்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், விடுதலைப் புலிகளின் தாக்குதலை, கடற்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து முறியடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.

சிறுத்தீவு கடற்படைத்தளத்தினுள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் மீது படையினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியிருக்கின்றது.

அத்துடன் இந்தச் சண்டைகளின்போது இரண்டு கடற்படையினரும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது,

இந்த அதிகாலை நேர மோதல்களின் போது இரு தரப்பினரும் சரமாரியாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும், இதனால் யாழ் நகரப்பகுதி, குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்ததாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எறிகணை தாக்குதல்களின்போது கொழும்புத்துறை, பாஷையூர், குருநகர் பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

எறிகணை குண்டுச்சத்தங்களினால் இந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பு தேடி ஆலயங்களுக்குச் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Sakthi TV journalist killed; Outcry as Sri Lanka’s defence chief Gotabhaya urges censorship: Colombo & Sri Lanka

Posted by Snapjudge மேல் மே 28, 2008

கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு

கோதாபய ராஜபக்ஷ

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.

பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.

இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.


மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்

கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.


Posted in Govt, Law, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

18 civilians killed in Wanni blasts; Moothoor fishermen protest against fishing ban; Pillayan group supporters attack Muslim traders in Thaazhangkudaa

Posted by Snapjudge மேல் மே 26, 2008

இலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.

கடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழனன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.


மீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை
விலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்
தடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்
கையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை
தொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்
செல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக
தெரிவித்துள்ளனர்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Earaavoor tense, Police imposes curfew & Consecration of Deputy Bishop held in Batticaloa

Posted by Snapjudge மேல் மே 25, 2008

ஏறாவூரில் பதட்டம் தொடர்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலாநிதி. வெள்ளைதம்பி அமீரூதின் அவர்கள், காணாமல் போன இருவரும் பணி நிமித்தமாக மட்டக்களப்புக்கு சென்று மீண்டும் ஏறாவூர் திரும்பும் போதே காணாமல் போனதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டப்போது, இரண்டு தினங்களாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தமிழோசையிடம் தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கின்ற நிலையில் எந்த அமைப்பின் மீதும் சந்தேகப்பட கூடிய நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.


இலங்கையில் கிழக்கிலிருந்து முதலாவது ஆயர் நியமனம்

துணை ஆயர் பொன்னையா ஜோசப்
துணை ஆயர் பொன்னையா ஜோசப்

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது ஆயராக நியமனம் பெற்ற மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த பேரருட் திரு பொன்னையா ஜோசப் அவர்கள் சனிக்கிழமை திருகோணமலை மறை மாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் விசேட திருப் பலிப்பூசை
நடைபெற்று திருநிலை ஒப்புக் கொடுத்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான வாட்டிகன் பிரதிநிதி வண.மரியோ செனாரி மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க ஆயராக
முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளமை அம்மாகாண கத்தோலிக்கர்களை பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது.

இம்மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டும் யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே மக்களுக்கு தான் விடுக்கும் செய்தி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட ஜோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிடுகின்றார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

East Sri lanka Violence: 5 Dead; Hisbolla becomes Minister; UNHRC Elections – Srilanka loses

Posted by Snapjudge மேல் மே 23, 2008

இலங்கையின் கிழக்கே வன்முறை: ஐந்து பேர் கொலை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் வியாழன் நண்பகல் இடம்பெற்ற வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 2 பேரும் 3 முஸ்லிம்களும் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரையம்பதி பிரதேச பொறுப்பாளர் சாந்தன் என்பவரும் அவரது உதவியாளரும் அடையாளம்தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளிலேயே குறிப்பிட்ட 3 முஸ்லிம்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது மேலும் 10 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

இந்தச் சம்பவங்களையடுத்து தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையயடுத்து அந்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன் நண்பகலுக்கு பின்னர் வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சவுணர்வு காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வன்முறை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா ஆகியோரின் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்றார் ஹிஸ்புல்லா

இலங்கையின் கிழக்கு மாகாண அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வியாழனன்று பதவியேற்றார்.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹிஸ்புல்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சுகாதாரம், சமூக நலம், சிறார் பராமரிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி முதலிய துறைகள் ஹிஸ்புல்லாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அவருடன் அவரது ஆதரவு உறுப்பினர்கள் இருவரும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.


ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் தோல்வி இலங்கைக்கு பின்னடைவல்ல: அமைச்சர் சமரசிங்க

ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் (வலது பக்கம்) அமைச்சர் சமரசிங்க – பழைய படம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது துரதிருஷ்டம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

ஆனாலும் இத்தோல்வி ஒரு இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று இலங்கை மனித உரிமை மற்றும் அழிவுகால நிர்வாக அமைச்சர் மஹிந்த சமரங்சிங்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

சில முக்கியப் பிரமுகர்களும், அரசு சாரா சர்வதேச அமைப்புகளும் தங்களுடைய சொந்தக் கருத்தை முன்னிறுத்தி இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததே இத்தோல்வியின் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு பார்வையாளர் நாடாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தொடர்ந்தும் செயற்துடிப்புடன் இலங்கை பங்காற்றும் என்று அவர் அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

அதேநேரம், மனித உரிமைப் பாதுகாப்பு விஷயத்தில் இலங்கை மென்மேலுமாக மோசமடைந்துவந்துள்ளது என்பதையே இந்தத் தேர்தல் தோல்வி காட்டுகிறது என்றும் இலங்கை அரசு இந்தச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காணவேண்டும் என்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மனோகணேசன் கூறுகிறார்.


சாதி மோதலால் மூடப்பட்ட எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறப்பு

எறையூர் மாதா தேவாலயம்
எறையூர் மாதா தேவாலயம்

தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மூடப்பட்ட தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று அந்த தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வு அமைதியாக நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்த செபமாலை மாதா கோயில் வழிபாட்டில் தலித் மக்கள் பல்வேறு வகைகளில் அவமானப்படுத்தப்பப்டுகின்றனர் என்று புகார்கள் எழ, அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களில் இருவர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் தேவாலயமே மூடப்பட்டது.

அதனையடுத்து புதுச்சேரி மறைமாவட்ட நிர்வாகம் இருதரப்பினருடனும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவங்களில் அரச அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெறுகின்ற இத்தகைய தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென இராணுவ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி – அக்கராயன் வீதி 4ஆம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்த வான் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப வைபவம் ஒன்றிற்குச் சென்றவர்களுக்கே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதி கல்விளான் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய, அம்புலன்ஸ் வண்டியொன்றில் பயணம் செய்த, மன்னார் மாவட்ட கடற்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகிய 47 வயதுடைய ஜோசப் போல் ஜுலரியன் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் சிற்றூழியராகிய வசந்தகுமாரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து, முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் பகுதியில் இன்று பிற்பகல் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் காயமடைந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கிறன.

இந்தத் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வடாராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இந்தப் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் குடியிருப்புகளே இந்தத் தாக்குதலில் சேதமடைந்தவையாகும்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Opposition to Sri Lanka’s bid to UN Rights Council (UNHRC) & 15 Tamils missing after Triconmalee Elections

Posted by Snapjudge மேல் மே 21, 2008

ஐ. நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீண்டும் இடம்பிடிப்பதற்கு எதிர்ப்பு

In the Asian group, Bahrain, East Timor, Japan, Pakistan, South Korea and Sri Lanka will compete to fill four seats.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவுக்கு மீண்டும் தேர்தெடுக்கப்படுவதற்கு இலங்கை எடுத்துவரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் மக்கள் காணாமல் போவதும், ஆட்கடத்தலும் நாடு தழுவிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரும் வேண்டுகோளுக்கு, நோபல் பரிசை பெற்றவரான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பேராயர் டெஸ்மாண்ட் டூட்டூ, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜிம்மி கார்டர் மற்றும் ஆர்ஜண்டீனா நாட்டு நோபல் பரிசை வென்ற அமுடால்போ பெரேஸ் எஸ்கிவெல் ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

மிகவும் மோசமான நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் இலங்கையில் திட்டமிட்டு சீரான வகையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளன என டெஸ்மாண்ட் டூட்டூ கூறுகிறார்.

ஆனால், இலங்கை மீது குற்றஞ்சாட்டும் இந்தப் பிரமுகர்கள், அதற்கு முன்னதாக இலங்கையின் தரப்புக் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார் இலங்கை அரசின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

இருந்தபோதிலும், இலங்கை மனித உரிமைகளை மதிக்கின்ற, சர்வாதிகாரப் போக்கற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் போக்குக்கு இணங்க நடக்கும் ஒரு நாடு என்ற கருத்தே பல நாடுகளின் மத்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவில் 4 நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. அதில் இலங்கை உட்பட 6 நாடுகள் போட்டியிடுகின்றன.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


திருகோணமலையில் தேர்தலை அடுத்து 15 பேரைக் காணவில்லை

திருகோணமலையில் 15 பேரைக் காணவில்லை
திருகோணமலையில் 15 பேரைக் காணவில்லை

இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடந்ததை அடுத்த காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 15 தமிழர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 15 தமிழர்கள் திருகோணமலையில் காணாமல் போனதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் பிராந்திய இணைப்பாளரான குளோரியா பிரான்சிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் அனைவரும் 20 முதல் 30 வாயதுக்கு உட்பட்டவர்கள் என்று உறவினர்களால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், இது குறித்து தமது தலைமை அலுவலகத்துக்கும், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.



TamilNet: 21.05.08 Asian rights offenders fight for UN seats: “In what is viewed as the most significant contest, six Asian nations, Japan, South Korea, Pakistan, Sri Lanka, Bahrain and East Timor, are vying for four seats in the UN Human Rights Council where the secret ballot to select the members is being held today. Only Japan and South Korea are designated as ‘free’ by the NGO Freedom House, based on the past voting record and the history of adherence to human rights principles, so the outcome of the Asian race is the one with the most potential to change the council’s overall composition, reports said.”

TamilNet: 20.05.08 Third nobel laureate opposes Sri Lanka's bid to UN Rights Council: “Following objections filed by former U.S. President Jimmy Carter, and South African Archbishop of Cape Town, Desmond Tutu, against selection of Sri Lanka to U.N.’s Human Rights Council, a third nobel peace laureate, Adolfo Pérez Esquivel, from Argentina, in a commentary published by Página 12 in Buenos Aires, ‘compared the routine torture and the hundreds of ‘disappearances’ and extrajudicial killings committed by Sri Lankan government forces to the ‘dirty wars’ waged by various Latin American governments against their own citizens in the 1970s and 1980s,’ a press release issued by the Asian Human Rights Commission (AHRC) said.”

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts

Posted by Snapjudge மேல் மே 20, 2008

ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் கமலின் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் எடுத்த படமாகும்.

பெரிய படஜெட் என்றாலும், படம் வெளியாகும் முன்பே போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். அதற்கேற்ப ‘தசாவதாரம்’ ஏரியா விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

  • வட,தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விநியோக உரிமை பதினைந்து கோடி
  • மதுரை ஏரியா மூன்று கோடி,
  • கோயம்புத்தூர் நான்கு கோடி,
  • சேலம் இரண்டரை கோடி,
  • திருநெல்வேலி மற்றும்
  • கன்னியாகுமாரி ஒன்றரை கோடி,
  • திருச்சி
  • தஞ்சை இரண்டரை கோடி

என மெகா விலைக்கு விற்பனையாகி உள்ளது.

கன்னட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம்.

தசாவதாரம்’ இந்தியிலும வெளியாகிறது. இந்தி உரிமை மட்டும் 12 கோடி.

Dasavatharam Nizam rights for 6.25 crore

The Nizam rights of the film Dasavatharam have been bagged by Siri Media of Dasari Narayan Rao for a record 6.25 crore. This is very high for a Tamil hero film in Nizam. After Rajinikanth’s Shivaji, the craze for a Tamil hero film has reached such heights.

Kamal Hassan’s new film Dasavatharam has already completed the censor formalities and is now set for release on June 6. Kamal plays 10 different roles while heroin Asin is playing a dual role. Mallika Sherawat and Jayaprada are playing special roles in the film.

Posted in Economy, Finance, India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Chennai: Harassed couple ends life – Loving women: Being lesbian in India

Posted by Snapjudge மேல் மே 19, 2008

சென்னையில் ஒன்றாக தீக்குளித்த இரண்டு பெண்கள்

பெண் ஓரினச் சேர்க்கையை குறிக்கும் சின்னம்

மிக நெருங்கிய உறவு கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்கக வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்த, மனம் கசந்து இருவரும் தங்களுக்கு தாங்களே தீயிட்டுக்கொண்டு மரித்திருக்கிறார்கள்.

40 வயதான ருக்மணி மற்றும் 38 வயதான கிறிஸ்டி ஜெயந்தி மலர் ஆகிய இந்த இரு பெண்களுக்கிடையே பாலுறவு இருந்ததாகவும் அதனாலேயே இருதரப்பு உறவினர்களும் கடுமையாக அவர்கள் நட்பிற்கு ஆட்சேபித்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் மணமானவர்கள், அவர்களில் மலருக்கு எட்டு வயது மகன் ஒருவரும் இருக்கிறார். ஆனால் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே இருக்க முயன்றிருக்கிறார்கள். அடிககடி ருக்மணி தனது குடும்பத்தை விட்டு மலரின் வீட்டுககுச் சென்று அங்கேயே தங்கியிருந்ததாகவும் அதனாலேயே பிரச்சினை ஏற்பட்டதாகவும் காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.

இவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, தற்கொலை என்று மட்டுமே வழக்கு பதிவாகியிருப்பதாகவும், இறந்த பெண்களை சந்திக்கக்கூடாது என்று வற்புறுத்தியதாக உறவினர்கள் மீதெல்லாம் முதல் தகவலறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்றார்.

ஆனால் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருந்திருகின்றனர். தத்தம் குடும்பத்தினரின் ஆட்சேபணைகளை மீறி நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்று மட்டும் தெரியவந்திருப்பதாகவும், அவ்விருவருககிடையே என்னமாதிரியான உறவிருந்தது என்பது எல்லாம் மேல்விசாரணையிலேயே தெரியவரும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பெண்களிடையிலான ஓரினச் சேர்க்கை தொடர்பாக பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.நாராயண ரெட்டி தமிழோசைக்கு வழங்கிய சில கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Vijay Tendulkar put Marathi theatre on international map, passes away: A multifaceted personality

Posted by Snapjudge மேல் மே 19, 2008

முன்னணி இந்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் காலமானார்

இந்தியாவின் முன்னணி நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான விஜய் டெண்டுல்கர் புனேவில் தனது இல்லத்தில் காலமானார். எண்பது வயதான விஜய் டெண்டுல்கர் நெடுநாளாக சுகவீனமடைந்திருந்தார்.

தனது தாய்மொழியான மராத்தியிலும் ஹிந்தியிலும் எழுதிவந்த அவர், தனது நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் பிற உரைநடைகளுக்காக பல விருதுகளை வாங்கியவர்.

அவரது பிரபலமான படைப்புகளுக்கு 1970களில் பழமைவாத நேயர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது, ஆனால் காலம் செல்லச் செல்ல அப்படைப்புகள் பெரும் புகழ் பெற்றன.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

South Africa seeks to end anti-foreigner attacks: Anti-Immigrant Violence Continues

Posted by Snapjudge மேல் மே 19, 2008


தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்கள் மீதான தாக்குதல்கள் நீடிக்கின்றன

வீதியில் கிடக்கும் சடலத்தை தூக்கும் பொலிஸ்காரர்

தென்னாப்பிரிக்காவில் குடியேறி சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் நீடித்துவருகின்ற நிலையில் அந்நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் காவல் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த இந்த வன்முறையில் இதுவரையில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் மற்ற இடங்களுக்கும் பரவுகின்ற ஆபத்து தற்போது ஏற்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்க செஞ்சிலுவைச் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க மக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறிக்கிறார்கள் என்ற எரிச்சலுணர்வினால் இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை உருவாகியிருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 மே, 2008


தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக வன்முறை

தென்னாப்பரிக்க காவல்துறையினர்
தென்னாப்பரிக்க காவல்துறையினர்

தென்னாப்பிரிக்கத் தலைநகர் ஜோஹன்னஸ்பர்கின் ஏழ்மையான பகுதிகளில் ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களுக்கு எதிராக அலையலையாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது நகரின் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது.

கிளீவ்லேண்ட் என்ற ஒரு புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர் அடித்தோ அல்லது உயிருடன் எரித்தோ கொல்லப்பட்டுள்ளார்கள். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் ஜிம்பாப்வே குடியேற்றக்காரர்களை இலக்குவைத்து ஒரு வார காலமாக நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள் தென்னாப்பிரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இனவெறி காலத்தில் நடந்த வன்முறையோடு இதனை ஒப்பிட்டும் சில தலைவர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.


தென்னாபிரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான வன்செயல்கள்

பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து அங்கு குடியேறியவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது வன்செயல்கள் ஜோஹனன்ஸ்பேர்க் நகருக்கு அண்மித்த பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதன் காரணமாக 13,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும், காவல் நிலையங்கள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அரங்குகள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவும் உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அரசாங்க அமைச்சர்கள் சரியான ஆவணங்கள் உள்ள எந்த ஒருவரும் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் சட்டங்கள் சரியான முறையில் கடுமையாக அமல் படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் காவல்துறையினரும் அவர்களுக்கு அனுசரணையாக ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 2 Comments »

Islamists Win 24 of 50 Seats in Parliament: Kuwait’s parliamentary elections

Posted by Snapjudge மேல் மே 19, 2008

குவைத் தேசிய தேர்தல்

தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமியவாதிகள்
தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமியவாதிகள்

வளைகுடா நாடான குவைத்தில் நடந்த தேசியத் தேர்தல்களில் இஸ்லாமியவாதக் கட்சிகள் வலுவான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டாவது முறையாக இந்த தடவையும் பெண்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தனர், மொத்த வேட்பாளர்களில் பத்து சதவீதம் பேர் பெண்கள் என்றாலும் ஒரு பெண் கூட இம்முறையும் வெற்றி பெறவில்லை.

குவைத் தேர்தல்களில் மத கடும்போக்காளர்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வலுவான நிலைக்கு வந்துள்ளனர்.

குவைத்தைப் பொறுத்தவரை கட்சிச் சின்னத்தை முன்னிலைப் படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவது தடைசெய்யட்ட விஷயம் என்றாலும் எந்தெந்த வேட்பாளர்கள் எந்தெந்த கட்சியையும் கூட்டணியையும் சேர்ந்தவர் என்பதை வாக்களிக்கக்கூடிய மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கு பிறகு அமைகின்ற தேசிய ஆட்சி மன்றத்தில், 24 இடங்களுடன் மத பழமைவாதிகள் வலுவான நிலையில் இருப்பார்கள். மொத்தம் 50 இடங்களைக் கொண்டது குவைத் நாடாளுமன்றம்.

குவைத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் 2005ஆம் ஆண்டில் அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்ட பின்னர் நடக்கின்ற இரண்டாவது தேர்தல் இது. போன தேர்தலிலும் இந்த தேர்தலிலுமாக 27 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் என்றாலும் ஒருவர்கூட இதுவரை வெற்றிபெறவில்லை.

Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Heavy fighting in Mannaar, Sri Lanka: The war dividend; SLA cordon, search in Vadamaraadchi, Thenmaraadchi

Posted by Snapjudge மேல் மே 19, 2008

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே மோதல் வலுக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு அது கிடைக்காமல் போன ஹிஸ்புல்லா அவர்களும் மேலும் இரு உறுப்பினர்களும் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிள்ளையான் அவர்களுக்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறி தனியாகச் செயல்படப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு உறுப்பினர்கள் தமது தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஹிஸ்புல்லா அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். அமைச்சர் அதாவுல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர் எனவும், சில காரணங்களுக்காக அவர்களின் பெயரை தற்போது வெளியிட இயலாது எனவும் ஹிஸ்புல்லா கூறினார்.

எனினும் இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களுக்கோ அல்லது தற்போதைய முதல்வருக்கோ எதிரான ஒரு நடவடிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் மன்னார் பாலம்பிட்டி பகுதியை அரச படைகள் கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும்போது, இராணுவத்தினர் தற்போது மன்னார் பிரதேசத்தில் அடம்பன் பகுதிக்குள் முன்னேறியிருக்கின்றார்கள் என்றும், இப்போது இராணுவம் அடம்பனுக்கு வடக்கே செயற்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

இதனிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்திர விழாவையொட்டி, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி இன்றும் ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் திறந்திருந்தது என்றும் நாளையும் திங்கட்கிழமை ஓமந்தை சோதனைச்சாவடி காலை முதல் திறந்திருக்கும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.


வட இலங்கையில் உக்கிர மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை ஆகிய முன்னரங்குகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் பரவலாக மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது, இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பிலும் சேர்த்து குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

ஞாயிறன்றைய சண்டைகளில் 58 விடுதலைப் புலிகளும் 21 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3 இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் அந்த ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, மன்னார் கருங்கண்டல்குளம் பகுதியில் தமது பிரதேசத்தை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைகளில் 25க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும். 50க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் 6 இராணுவத்தின் சடலங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் என்பவற்றையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Pillaiyan appointed CM as LTTE strikes in Colombo – Hisbullah parts company in protest

Posted by Snapjudge மேல் மே 17, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008

கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் பிள்ளையான்

இலங்கையின் கிழக்கு மாகாண சபை முதல்வராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றிருக்கிறார். நிதி, திட்டமிடல், சட்டம்-ஒழுங்கு, மாகாண சபை நிர்வாகம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் பல துறைகளுக்கு பிள்ளையான் பொறுப்பேற்றுள்ளார்.

வேறு மூன்று அமைச்சர்களும் இந்த வைபவத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

துரைரட்ணம் நவரத்தின ராஜா வரதன் விவசாயம், கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராகியுள்ளார்.

கல்வி கலாச்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கான அமைச்சராக விமலவீர திஸ்ஸநாயக பதவியேற்றார்.

மீரா சாஹிப் உதுமான் லெப்பே வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு பொறுப்பேற்றார்.

பிள்ளையான் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் மறுப்பு

இதனிடையே, கிழக்கு மாகாணசபைக்கு பிள்ளையான் அவர்கள் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஏ.எஸ்.ஜவாஹர் சாலிஹ் மற்றும் எம்.எஸ்.சுபேர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தாங்கள் மூவரும் தனியொரு குழுவாக செயல்படப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் குழுவுக்கு ஹிஸ்புல்லாவே செயலர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையான் தலைமையில் அமைகின்ற அரசுக்கு தங்களுடைய ஆதரவு கிடையாது என்று தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

சுழற்சி முறையில் தமிழ் முஸ்லிம் இனங்களிலிருந்து முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற யோசனையில் தனக்கு உடன்பாடு இருந்தாலும், அதிக பிரதிநிதிகளைப் பெற்றிருப்பது முஸ்லிம்கள் என்பதால் தன்னையே முதலில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் முஸ்லிமாகும் நிலை வந்தால் அதனை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இந்திய மீனவர்கள் சிக்கிக்கொள்ளும் விவகாரம்: வெளியுறவுத்துறையை அணுகி மீனவர்கள் முறையிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா இலங்கைக்கு இடையிலான கடல்பரப்பில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், இதிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய நடுவணரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கம் வெள்ளியன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.

அது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மீனவர்கள் முதலில் இந்திய வெளியுறவுத் துறையிடம் இவ்விவகாரத்தை முறையிட்டு நடவடிக்கை கோரவேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்தும், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில், குறைந்தது 8 பொலிஸ்காரர்களும், இரண்டு பொதுமக்களும், தற்கொலையாளியும் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரின் சன சந்தடி மிக்க வணிகப் பகுதியில், பொலிஸாரின் பஸ் ஒன்றுடன், தற்கொலையாளி தனது மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்கவைத்ததாக, இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் உட்பட 90 க்கும் அதிகாமனோர் இதில் காயமடைந்ததாக, வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கண்டித்துள்ளார்.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக கருத்துக்கள் எதுவும் வெளிவரவில்லை.


Posted in Govt, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »