Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Black’ Category

iscribe.co.in – Help for visibility Impaired

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

உதவும் கரம்… இணைக்கும் தளம்!

ஞாயிறு

கையையே கரும்பலகையாக்கிக் கொண்டு மொழிகளைக் கற்றவர் ஹெலன் கெல்லர். ஒருவித விஷக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பிறந்த பத்தொன்பது மாதங்களிலேயே பார்க்கிற, கேட்கிற, பேசுகிற புலன்களை இழந்து தவித்தவருக்கு, அவரது அம்மாவைப் போலவே கிடைத்த ஆசிரியைத்தான் மிஸ்.சலிவன். மொழியின் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும் ஹெலன் கெல்லருக்குப் புரிய வைப்பதற்கு சலிவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் சோம்பலில்லா உழைப்பின் அடையாளங்கள்.

தண்ணீர் என்கிற வார்த்தையை எப்படிப் புரிய வைத்தார் தெரியுமா? கொட்டுகிற தண்ணீரில் ஹெலனை நிறுத்தி வைத்து அவரது கைகளில் ‘ர-அ-ப-உ-த’ என்று எழுதிக் காட்டியுள்ளார்.

ஹெலன் பிற்காலத்தில் தனது ஊனத்தை ஊனப்படுத்திவிட்டு உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்காக முழு மூச்சாகப் பாடுபட்டு உலகில் உள்ள எல்லோருக்கும் தன்னம்பிக்கையைப் பரிசளித்தார்.

“என் கதை’ என்கிற அவரது சுயசரிதையில் ஹெலன் தன் ஆசிரியையைப் பற்றிச் சொன்னார்:

“”என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியும் அவருடையதே. என்னுடைய எல்லாச் சிறப்புகளும் அவருக்கே சொந்தமானவை. அவருடைய அன்பான ஸ்பரிசத்தால் விழிப்படையாத எந்த ஒரு திறமையோ அல்லது உத்வேகமோ அல்லது ஒரு சந்தோஷமோ என்னிடம் கிடையாது”

ஹெலனுக்குக் கிடைத்த ஆசிரியை போல் பல ஆசிரியர்கள் புலன்களை இழந்தவர்களுக்காக இப்போது வந்துவிட்டார்கள். புதியபுதிய கருவிகளும் அவர்களுக்காக வந்துகொண்டு இருக்கின்றன. எப்போதும் போல் இப்போதும் அவர்களுக்கு இருக்கிற குறைகளில் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டே இருப்பது தேர்வு எழுத முடியாத நிலைதான். பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோர் பிறர் உதவியுடன்தான் தேர்வு எழுத முடியும். அப்படி உதவி செய்ய வருகிறவர்களுக்குத்தான் பெரும் பற்றாக்குறை. சிலர் உதவுவதற்கு முன் வந்தாலும் யாரை? எப்படி அணுகுவது? என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்தக் குறையைப் போக்குகிற வகையில் வித்யாசாகர் ஊனமுற்றோருக்கான சட்ட மையமும், ராஷ்ட்ரிய லைஃப் சேவிங் சொûஸட்டியின் தமிழகச் செயலாளர் வாசவி சுந்தரும் சேர்ந்து ஓர் இணையதளம் தொடங்கி உள்ளனர். இந்த இணையதளத்தின் முகவரி: iscribe.co.in ் ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் வாசவி சுந்தரத்திடம் இணையதளம் குறித்துப் பேசினோம்:

“”இரண்டு வருடங்களாகப் பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதி வருகிறேன். கடந்த ஆண்டு லயோலா கல்லூரியில் கை, கால் ஊனமுற்ற ஒருவருக்காகத் தேர்வு எழுதுவதற்குப் போயிருந்தேன். அவர் பெயர் ராஜீவ் ராஜன். அப்போது இவரைப் போலவே இரண்டு மூன்று பேர் தேர்வு எழுதுவதற்கு யாரும் இல்லாததால் தவித்ததைப் பார்த்தேன். இது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனது தோழிகளிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, “என்னை அழைத்திருந்தால் வந்திருப்பேனே’ என்று பலர் சொன்னார்கள். தோழிகள் சொன்ன பிறகுதான், “உதவி தேவைப்படுகிற ஊனமுற்றோருக்கும், உதவி செய்யத் தயாராக இருக்கிறவர்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதை உணர்ந்தேன்.

இந்த இடைவெளியைப் போக்குவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தபோதுதான் இணையதளம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதனையடுத்து வித்யாசாகர் அமைப்போடு சேர்ந்து இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளேன்.

ண்என்பது கண்களைக் குறிக்கும் வகையிலும், நஸ்ரீழ்ண்க்ஷங் என்பது தேர்வு எழுதுவதற்கு உதவுகிறவர்களைக் குறிக்கிற வகையிலும் சேர்த்து iscribe.co.in ்என்று இணையதள முகவரிக்குப் பெயர் வைத்துள்ளோம்.

இணையதளம் தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பார்வையற்றோரும், அவர்களுக்கு உதவுவோரும் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். இணையத்தில் பதிவு செய்வதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகத்தான் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ளவர்களும் பதிவு செய்துகொள்ளலாம்.

உதவி தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய முழு விவரத்தையும் தெரியப்படுத்த வேண்டும். பெயர், முகவரி, தொலைபேசி எண், தேர்வு எழுத வேண்டிய தேதி, நேரம் உட்பட அனைத்து விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதைப்போல உதவி செய்ய முன் வருபவர்களும் அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ.மெயில் முகவரி, கல்வி என்று தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவேண்டும்.

கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவைப்படுவோரும், உதவி செய்ய முன்வருவோரும் தாங்களாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்கிறார்கள். தொலைபேசி வசதியோ மற்ற வசதியோ இல்லாதவர்கள் வித்யாசாகர் அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினாலும், இருசாரரும் சந்தித்துப் பேசுவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்று எதுவும் இல்லை. கையெழுத்து அழகாக இருந்தால்தான் எழுதுவதற்கு வரவேண்டும், தேர்வு எழுத வருகிறவர்கள் என்ன படிக்கிறார்களோ, அதே துறையில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சொல்வதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான். எந்தக் கல்லூரியில் தேர்வு எழுதுகிறார்களோ, அந்தக் கல்லூரியில் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது. மற்றபடி வேறு தகுதி எதுவும் தேவையில்லை. இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு யாரும் கட்டணமும் வாங்க மாட்டார்கள். சேவை மனப்பான்மையுடன்தான் எல்லோரும் உதவிச் செய்வார்கள்.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையற்றோர்களாக இருக்கிறார்கள். கை, கால் ஊனமுற்று எழுதமுடியாமல் தவிப்போரையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்தோமானால் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் இவர்களில் தேர்வு எழுதுவோருக்கு உதவி புரிய முன் வருவோர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவிலேயே இருக்கிறது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோருமே பார்வையற்றோருக்கு உதவிச் செய்ய முன் வரவேண்டும்” என்கிறார் ஹெலன் கெல்லர் ஆசிரியை மிஸ்.சலிவன் பார்வையுடன் மிஸ்.வாசவி சுந்தரம்.

Posted in Amitabh, Black, Blind, Dictate, Disabled, Exams, Helen, Help, Impaired, iscribe, Rani, scribe, visibility, Vision, Volunteer, Write | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

Rajni’s ‘Sultan’ trailer screened with ‘Sivaji – The Boss’

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்
sultan sivaji trailer rajni images

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.

இந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

———————————————————————————-

30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி

சென்னை, ஜுன். 19-

ரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முடிந்து விட்டதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.

இதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.

திரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியதா வது:-

சிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.

என் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.

குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.

சிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.

சென்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.

படம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

Posted in Abiraami, Abirami, Action, Adlabs, Animation, Archer, Area, ARR, Availability, Background, Biz, Black, Cinema, Clubs, Collections, Comedy, Counter, Deals, Fans, Films, Loss, Money, Movies, Mystery, Preview, Production, Profits, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Re-recording, Records, Rehman, Rental, revenue, sales, Soundarya, Soundharya, Sountharya, Sowndharya, Sultan, Tickets, trailer, Transactions, Updates, Voice, Warrior | 8 Comments »

CU Sooriyamoorthy: Science Column – The hidden power behind the dark energy

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

“இருளாற்றலை’ விளக்கும் புதிய அறிவியல் கொள்கை

சி.இ. சூரியமூர்த்தி

19-ம் நூற்றாண்டின் முடிவில், மிகச் சிறந்த கண்டுபிடிப்பார்களான மைக்கேல்சன், தாம்சன் போன்றவர்கள் அறிவியலின் புதுக்கண்டுபிடிப்புகள் அநேகமாக முடிந்துவிட்டதாகவே குறிப்பிட்டனர்.

அவர்கள் 20-ம் நூற்றாண்டில் ஒளியின் வேகம், மின்னணுவின் மின்னூட்டம் போன்ற அடிப்படைப் பண்புகள் மிகத் துல்லியமாக அளக்கப்படும் என்றும், புதிய கொள்கைகள் ஒன்றும் தோன்றாது எனவும் எண்ணினர்.

ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல் ஆய்வுகளில் மிகப் பெரிய புரட்சியே நடந்தது என்பது நாம் அறிந்த செய்தி. பிளாங்கின் “ஒளித்துகள்களாக’ வரும் “வெப்பக்கதிர்வீச்சுக் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சிறப்பு ஒப்புமைக் கொள்கையும்’ இயற்பியலின் போக்கையே மாற்றிவிட்டன. அதைத் தொடர்ந்து டென்மார்க் அறிவியலாளர் போர் அறிவித்த அணு அமைப்புக் கொள்கையும், ஷாடிஞ்சர், ஹைசன்பர்க் முதலானோர் நிறுவிய “குவாண்டா எந்திர இயலும்’ உலகப் பொருள்களை மேலும் விளக்கமாக அறிய உதவின.

இந்தப் புதுக் கொள்கையால் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் புதிய புதிய ஆய்வுகளை உலகெங்கும் மேற்கொண்டனர். அவை இன்றும் தொடர்கின்றன.

இனி இந்தப் புதிய 21-ம் நூற்றாண்டின் அறிவியல் ஆய்வுகள் எந்த அமைப்புகளை நோக்கிச் செல்லும் என்பது நமக்குள் எழும் இயற்கையான கேள்வி. இன்றுள்ள ஆய்வுகளின் போக்கை வைத்து ஓரளவுக்கு அதைக் கணிக்கலாம். வருங்கால ஆய்வுகளுக்கு விடைகளை விட கேள்விகளே அதிகமாக உள்ளன.

அறிவியல் ஆய்வுகளில் முதல் தடுமாற்றம் 1930-ல் நிகழ்ந்தது. நட்சத்திரங்களின் நிறையை இரண்டு முறைகளில் அளக்கலாம். ஒன்று, அது வெளியிடும் ஒளியின் அளவை வைத்து அதன் நிறையைக் கணிக்கலாம். மற்றது அது சுழலும் வேகத்தை வைத்தும் கணிக்கலாம்.

ஊட் என்ற அறிவியலாளரும், ஸ்விக்கி என்பவரும், நட்சத்திர மண்டலங்களின் நிறையை இந்த இரண்டு முறைகளிலும் கணித்தார்கள். ஆனால் கணிப்புகள் மிகவும் மாறுபட்டன. அவர்கள் மிகத் துணிச்சலுடன் அண்டத்தைப் பற்றிய ஒரு புதுக் கொள்கையை அறிவித்தனர். அதன்படி நட்சத்திர மண்டலங்களில் நாம் காண முடியாத பொருள்கள் அதிகமாக உள்ளன. இவைகள் ஒளியை உமிழ்வதும் இல்லை, சிதற வைப்பதும் இல்லை. அதனால் இவை அண்டத்தில் மறைந்து உள்ளன. அதற்கு அவர்கள் “”இருள் பொருள்” என்று பெயரிட்டனர்.

இக்கொள்கையின்படி இருள் பொருள்களின் அணுக்கள் நாம் காணும் சாதாரண அணுக்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். இதுவரை நாம் அறிந்த அறிவியல் கொள்கைகள் இவைகளுக்குப் பொருந்தாது. ஆனால் புவியீர்ப்பு விசை மட்டும் இவைகளைக் கட்டுப்படுத்தும்.

வானியல் ஆய்வாளர்கள் சில நட்சத்திரங்கள் சில சமயங்களில் பெரியதாகத் தெரிவதைக் கண்டனர். நட்சத்திர ஒளி, இருள் பொருள்கள் அருகில் செல்லும்போது அவைகள் வளைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இருள் பொருள்களின் ஈர்ப்புத் தன்மையே என்று ஒரு விளக்கம் தரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு “புவியீர்ப்பு ஒளிகுவிப்பு’ என்று பெயர். கடந்த 10 ஆண்டுகளில் இவ்வகை நிகழ்வுகள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டன.

சிறப்பு ஒப்புமைக் கொள்கையால் இதை விளக்கலாம். இந்த நிகழ்வுக்கு, காண முடியாத “”இருள் பொருள்களே” காரணமாக இருக்க வேண்டும். இதற்குப் பிறகு அறிவியல் உலகில் இருள் பொருள்களைப் பற்றிய நம்பிக்கையும், ஆய்வுகளும் தொடங்கின. 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வாராய்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கின.

இதுவரை தெரிந்த முடிவுகளின்படி இந்த இருள் பொருள்களின் அமைப்புகள் மூன்று வகையாக இருக்கலாம். அவைகளாவன 1. விம்ப் 2. மாக்கே 3. நியூட்ரினோ இவைகள் உலகப் பொருள்கள் வழி எந்தத் தடையுமின்றி ஊடுருவிச் செல்லும். இந்தக் கொள்கையின்படி விம்ப் துகள்கள் கோடிக்கணக்கில் ஒவ்வொரு விநாடியும், நம் உடலில் பாய்ந்து செல்கின்றன. இவைகள் சாதாரண உலகப் பொருள்களுடன் தொடர்பு கொள்ளாததால் நாம் எளிதில் உணர முடியாது.

1998-ல் ஜப்பான் நாட்டில் ஒருவகை நியூட்ரினோ இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக நோபல் பரிசும் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் சிறப்பாக நடைபெறுகின்றன.

இதற்கிடையில் மற்றொரு பெரிய கண்டுபிடிப்பும் நிகழ்ந்துள்ளது. 1919-ல் ஹப்பில் என்ற வானியலாளர் அண்டத்தின் விளிம்பில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் வேகமாக வெளிநோக்கி ஓடுவதைக் கண்டார். ஐன்ஸ்டீனின் சிறப்பு ஒப்புமைக் கொள்கைப்படி புவிஈர்ப்பினால் விண் பொருள்கள் மையம் நோக்கி வர வேண்டும். “”பெரு வெடிப்பினால்” ஓடும் விண் பொருள்கள் பின் ஈர்ப்பினால் அண்டத்தைச் சுருங்க வைக்கும்.

ஆனால் தொலைநோக்கி ஆய்வுகளில், அண்டத்தின் விரிவு உந்தப்படுகிறது. இதற்கு தற்போது உள்ள அறிவியல் விளக்கம் இல்லை. பல அறிஞர்கள் புதிய ஒரு கொள்கையை முன் வைத்துள்ளார்கள். அதன்படி புவியீர்ப்புக்கு எதிராக ஒரு எதிர்ப்புவிசை அண்டத்தில் உள்ளது. அது மிக வலிமை வாய்ந்தது. அதற்கு “இருளாற்றல்’ என்று பெயர். இது புதிய அறிவியல் கொள்கை.

இன்றுள்ள அறிவியலின்படி உலகை இயக்குவது நான்குவகை விசைகளே. 1. புவியீர்ப்பு விசை 2. மின்விசை 3. மெல்விசை 4. வல்விசை. கதிர் வீசலுக்கு காரணமாவது “மெல்விசை’ அணுசக்திக்கு ஆதாரம் “வல்விசை’. இந்த நான்கையும் ஒன்றிணைக்க ஐன்ஸ்டீன் தன் கடைசி 20 ஆண்டுகளில் ஆய்வுகள் செய்தார். வெற்றி பெறவில்லை.

உலகின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பல காலம் போராடி ஒரு புதுக் கொள்கையை வகுத்தனர். அதற்கு, சிறந்த இழைக்கொள்கை என்று பெயர். இதன்படி உலகில் நாம் அறிந்த பொருள்கள்யாவும் 16 வகை அடிப்படைப் பொருள்களால் ஆனவை. இந்த 16 பொருள்களும் சிறந்த இழையின் பல்வேறு ஓட்டத்தின் மூலம் உண்டாக்கப்படலாம். இதை மிகப்பெரிய அறிவியல் வெற்றியாகக் கருதினர். ஆனால் இருள் பொருள்களும், இருள் ஆற்றலும் ஓரளவு உண்மை என்று காணப்பட்டபோது, அதை விளக்க “சிறந்த இழைக்கொள்கை’ தவறிவிட்டது.

ஒரு கணிப்பின்படி நம் அண்டம் 70 விழுக்காடு இருளாற்றலாலும், 25 விழுக்காடு இருள்பொருளாலும் 5 விழுக்காடே நாம் கண்டு உணரும் பொருள்களாலும் ஆகியது. நாம் இதுவரை அறிய முடியாத 95 விழுக்காடு அண்டத்தை அறிய புதுக்கொள்கைகளும், புதுப்பரிசோதனைகளும் வேண்டும்.

ஐரோப்பாவில் மிகச் சக்தி வாய்ந்த “துகள் முடுக்கிகள்’ அமைக்கப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அவை இயங்கத் தொடங்கும். அண்டம் தோன்றிய பெருவெடிப்பில் என்ன நிகழ்ந்தது என்பதை இந்த முடுக்கிகள் மூலம் அறிய முடியும். அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் ஒருவேளை இருள் பொருள்கள், இருள் ஆற்றல்கள் ஏன் தோன்றின? அந்த அணுக்களின் பண்புகள் என்ன? அமைப்புகள் என்ன? என்பதற்கு விடைகள் தெரியலாம்.

இன்றைய நம் நாட்டு இளம் அறிவியலாளர்கள்தான் இதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். ஆய்வு உலகம் அகலத் திறந்து அவர்களை எதிர்நோக்கி உள்ளது. இவைகளை விளக்க ராமன்களையும், போஸ்களையும் இந்த நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகளே அண்டத்தின் விதியை நமக்குக் காட்டும். அந்த அறிவு விரைவில் ஒளிவீச வாழ்த்துவோம்.

(கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல் கலைக்கழக இயற்பியல் – சூரிய ஆற்றல் துறை முன்னாள் பேராசிரியர்).

Posted in Astronomy, Atom, Black, Bose, Chemistry, Column, Dark, Discovery, Education, Electircity, energy, Gravity, Institute, Invention, Meteorologist, Nuclear, Physics, Raman, Research, Science, scientist, Sky, Sooriyamoorthi, Sooriyamoorthy, Sooriyamurthy, Stars, Study, Suriyamoorthy, Suriyamurthy, Tamil, Technology | Leave a Comment »