Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘UP’ Category

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Accident triggers riots, curfew in Taj Mahal city of Agra: Truck crushes four

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

ஆக்ராவில் வன்முறை

வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்
வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் புதன்கிழமை காலை, நான்கு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஷபே –பராத் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியபோது, நான்கு இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்புப் படை வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அத்துடன், போலீசார் மீது சரமாரியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். சில தொழிற்சாலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில்தான் உள்ளது. அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

——————————————————————————————-

லாரி மோதி 4 இளைஞர்கள் இறந்ததால் ஆக்ராவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு

ஆக்ரா, ஆக.30: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நான்கு இளைஞர்கள் புதன்கிழமை அதிகாலை லாரி மோதி இறந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 12 லாரிகள் உள்பட 22 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.

நகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இறந்த 4 இளைஞர்கள்: சுபாஷ் பூங்கா பகுதி அருகே 4 இளைஞர்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் இறந்தனர். சந்த், கம்ரான், வாஸிம், வாஹித் ஆகியோர் அந்த இளைஞர்கள். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் நடத்திய தாக்குதல் வன்முறையில் முடிந்தது.

வன்முறையாளர்கள் கடைகளுக்குத் தீ வைத்தனர். இரண்டு ஆலைகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் போலீஸ், தீயணைப்பு வாகனங்களும் அடங்கும்.

5 அதிகாரிகள் உள்பட 50 போலீஸôர் காயம்: வன்முறையாளர்கள் தாக்குதலில் 50 போலீஸôர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் ஒன்றில் புகுந்த கும்பல் போலீஸôரை தாக்க முயன்றது.

வன்முறை கும்பலைக் கலைக்க வானை நோக்கி போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு பட்டதில் ஒருவர் இறந்தார். போலீஸ் தடியடி பிரயோகம் செய்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

மதுரா, அலிகார், பெரோஸôபாத் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து போலீஸôர் வரவழைக்கப்பட்டனர். ஆக்ராவில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அவதி: சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்கி யுள்ளனர். அந்தப் பகுதியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதியில் வருகிறது. ஹோட்டலை விட்டு தாங்கள் குறிப்பிடும் வரை வெளியே வர வேண்டாம் என்று போலீஸôர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

நஷ்டஈடு: வன்முறை சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நஷ்டஈடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

“விபத்தில் நான்கு இளைஞர்கள் இறந்த சம்பவத்துக்கு போக்குவரத்து நிர்வாக குறைபாடே காரணம். கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட லாரி வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்’ என்று உள்துறை உயரதிகாரி ஜே.என்.சேம்பர் லக்னௌவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நகர நிர்வாகம் மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அமைதி காக்குமாறு மதத் தலைவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Posted in Accident, Agra, Aligar, Aligarh, Curfew, Ferozabad, Ferozebad, Hindu, Hinduism, Islam, Lorry, Madhura, Madura, Muslim, Politics, Religion, riots, Taj, Truck, UP, Violence | Leave a Comment »

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Lok Sabha MP of Samajwadi Party, Rasheed Masood is the Third Front Vice-Presidential nominee

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்

மும்பை, ஜூலை 17: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மூன்றாவது அணி சார்பில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரஷீத் மசூத்.

இத்தகவலை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங் மும்பையில் திங்கள்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மசூத் பல சிறப்புகளைப் பெற்றுள்ளவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.

மத்தியில் வி.பி. சிங்கின் ஜனதா தள அரசில் அமைச்சராக இருந்துள்ளார் மசூத்.

மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசூத் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார். இப்பதவிக்கு மேலும் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவர்களைக் குறித்து இப்போது குறிப்பிடுவது சரியல்ல.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மசூத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.

எமது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், பாஜக கூட்டணியினரிடம் பேசவில்லை. அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவும் இல்லை.

அதேவேளையில் இடதுசாரிகளிடம் மசூத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளோம்.

இடதுசாரிகளுடன் எப்போதுமே எங்களுக்கு தொடர்பு உண்டு. இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிப்பர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றார் அமர் சிங்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பெயரை அறிவித்த முதல் அரசியல் அணி என்ற பெருமை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

Posted in ADMK, Amarsingh, Cabinet, candidate, Choice, Congress, Elections, Gandhi, Janatha, JD, JJ, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Masood, MP, Mulayam, NDA, Nominee, North, Patil, Polls, Prathiba, President, Rasheed, Rashid, Saharanpur, Samajwadi, Shekavath, Shekawath, Shekhawat, SJP, Sonia, Third, United National Progressive Alliance, UNPA, UP, Uttar Pradesh, UttarPradesh, vice-president, Votes, VP, VP Singh | Leave a Comment »

Former Prime Minister Chandrasekhar – Biosketch, Anjali

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு

புதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.

ஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்தவர்:

அவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

7 நாள் அரசு துக்கம்:

7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

——————————————————————————————————————-
“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.

கிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.

ஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

சந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…

சென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி:

4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை:

பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்:

சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்:

1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்:

மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்:

மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்:

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு:

மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்:

கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்:

ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

—————————————————————————————————————
சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்பு…

1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.

1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.

1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.

1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.

1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.

1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.

பிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

லாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.

சீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.

சரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.

————————————————————————————————

Dinamani op-ed

தேசிய இழப்பு!

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.

மிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.

பதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.

வீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.

“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.

அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

இளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.

எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு!

Posted in Agriculture, Allahabad, Alliance, Anjali, Ayodhya, Biography, Biosketch, BJP, Bofors, Bribery, Bribes, Cabinet, Capitalism, Cargil, Caste, Chandrasekar, Chandrasekhar, CharanSingh, Chat, Coalition, Communism, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corrupt, Corruption, Democracy, Economy, Emergency, Faces, Farming, FDI, Feroze, Finance, Freedom, Fundamentalism, Gandhi, Govt, Incidents, Income, Independence, Indhira, Indira, Indra, infrastructure, Inquiry, Interview, investments, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, JP narayan, Kargil, kickbacks, Liberation, Life, LokSaba, LokSabha, Mandal, Manmohan, Marxism, MNC, Morarji, MP, Musharaf, Musharaff, Narain, Narasimha Rao, Narasimharao, Narayan, Nehru, NRI, Opinions, Pakistan, people, PM, Poor, Praja Socialist, PVNR, Rajeev, Rajiv, Rajya Sabha, Rajyasabha, Religion, Republic, Reservations, Rich, Socialism, Sonia, Tax, UP, Uttar Pradesh, UttarPradesh, VP Singh, Wealth | Leave a Comment »

Lamenting the corrupt Political Powers – Uttar Pradesh to Tamil Nadu & its Party Leaders

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

கோடிக் கோடி இன்பம் பெறவே…

இரா.சோமசுந்தரம்

“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”

உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு!.

ஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.

இந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்!

தற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.

கட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.

ஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.

“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.

இதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.

வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா?

“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.

மகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.

வினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.

காமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.

அண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.

இப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.

அரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா? “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா?

ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.

ஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).

Posted in abuse, Anna, BJP, Bribes, Camapign, Contributions, Corruption, Finance, Gandhi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, kickbacks, Law, Mahatma, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mulayam, NGO, Order, Politics, Power, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, Pratibha Patil, reforms, Sonia, SP, UP, Vinoba, Vinobha, Yadav | Leave a Comment »

State of the BJP in Madhya Pradesh – Uma Bharti, BJS, Dalit, Bypolls

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

ம.பி. பாரதீய ஜனதாவில் அதிருப்தி பரவுகிறது

போபால், ஜூன் 27: “”பிஜ்லி, சடக், பானி” (பி.எஸ்.பி.) என்ற 3 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சிக்குள் இப்போது அதிருப்தி புகைந்து கொண்டிருக்கிறது.

மின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய இம் மூன்றையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க பாரதீய ஜனதா அரசால் முடியவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைமையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. விலைவாசியும் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சித்தி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், சிவபுரி சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.

கட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை, மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களும், பணம்-செல்வாக்கு உள்ளவர்களும்தான் கவனிக்கப்படுகின்றனர் என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் வேலைகளில் அவர்கள் உற்சாகம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் தொண்டர்களை மதிப்பதே இல்லை.

உமா பாரதி, பாபுலால் கெüர் ஆகியோருக்குப் பிறகு சிவராஜ் சிங் செüஹான் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். உமா பாரதியின் கட்சிக்கு அமோக செல்வாக்கு வந்துவிடவில்லை என்றாலும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வாக்குகளைப் பிரித்து அதைத் தோல்வி அடையச் செய்யும் செல்வாக்கு அதற்கு இருப்பதையே சித்தி, சிவபுரி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

புதிய அணி சேர்ப்பு:

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியால் மத்தியப் பிரதேசத்திலும் புதிய அணி சேர்ப்பு நடக்கிறது. முற்பட்ட வகுப்பினர் தலித்துகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம், ஒழுங்கை அமல் செய்வதிலிருந்து தவறியது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தத் தவறியது என்று பாரதீய ஜனதா அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் வேரூன்றி வருகிறது. அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சி என்ன என்று பார்க்கும் தேடலில் மக்கள் மனத்தைச் செலுத்தி வருகின்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸýக்குள் இப்போது ஒற்றுமை இல்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பான தலைவர் அங்கு இல்லை.

பாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமார், முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் இடைத் தேர்தலில் சித்தி, சிவபுரி தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள தோல்வி தலைமையைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமையைச் சீர்திருத்தும் ஆற்றல் முதல்வருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை.

Posted in Alliance, Assembly, Babulal, Bhander, Bharathiya Jan Shakthi, Bharathiya Jan Shakti, Bharathy, Bharatiya Jan Shakthi, Bharatiya Jan Shakti, Bharatiya JanShakti, bhopal, BJP, BJS, BSP, by-elections, Caste, Center, Chauhan, Congress, Dabra, Dalit, Deosar, Dhauni, Drink, Elections, Electricity, FC, Gantantra, GGP, Gondwana, Gondwana Gantantra, Gondwana Gantantra Party, Govt, Gwalior, Inflation, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, Law, Lok Saba, LokSaba, LokSabha, Madhya Pradesh, MadhyaPradesh, Manifesto, Mid-term, midterm, MLA, MP, Necessity, OC, Order, Party, Polls, Power, Reserved, Roads, RSS, SC, Scindia, Shivapuri, Shivpuri, Shivraj, Shivraj Singh Chauhan, siddhi, Sidhi, Sithi, Sivapuri, Sivarajsingh, Sivpuri, ST, State, Transport, Transportation, tribal, Udaipura, Uma, Uma Bharathi, Uma Bharathy, Uma Bharthi, Uma Bharti, UP, Water, Yashodhara | Leave a Comment »

A tourist in Himalayas – Urbanization, Environment protection, Traveler

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

இமயமலைப் பகுதி மாநிலங்கள் வளமானவையா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் உள்ள சிறு நகரான சக்ரதா என்ற இடத்தில் சமீபத்தில் சில நாள்கள் தங்கினேன். அது ராணுவ கன்டோன்மென்ட் பகுதி.

கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் இருக்கிறது. டேராடூன் நகரிலிருந்து ஜீப்பில் போக மூன்றரை மணி நேரம்.

தில்லியின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சக்ரதாவுக்குச் சென்றேன். வனத்துறையின் ஓய்வில்லத்திலிருந்து அந்த மலையைப் பார்க்க பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.

டோன்ஸ் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான அங்கு மரங்கள் அடர்ந்த காடு நேர்த்தியாக இருந்தது. பருவநிலை மிக அற்புதமாக, ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருந்தது. சொர்க்கத்துக்கு அருகிலேயே வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன்.

உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதி வளர்ச்சியில் அக்கறை செலுத்தப்படவில்லை என்பதால் தனியாகப் பிரிக்கப்பட்ட மலை மாநிலம் இது. இமாசலத்தை ஒட்டியிருக்கிறது. இம் மாநிலம் உதயமாகி 8 ஆண்டுகள் இருக்கும். அதற்குள் அதன் வளர்ச்சி அல்லது நிர்வாகம் குறித்துக் குறை கூறுவது சரியல்ல. ஆனாலும் மாநிலத்தின் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பது தவறல்ல.

ராணுவத்தின் தரைப்படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் சக்ரதா இருக்கிறது. இங்கு வெளிநாட்டவர் வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் தலைவாயிலான கல்சி என்ற இடத்திலிருந்து சக்ரதா வரையுள்ள பகுதிக்குச் செல்வதாக இருந்தால் ராணுவத்தின் அனுமதியோடுதான் செல்ல முடியும்.

கல்சி என்ற இடத்தில்தான் டோன்ஸ் நதி, யமுனையில் சேர்கிறது. இந்த இடத்தில் மாமன்னர் அசோகர் பற்றிய பாறைக் கல்வெட்டு இருக்கிறது. இதை இந்தியத் தொல்லியல் துறை பராமரிக்கிறது. 19-வது நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயர்தான் இதைக் கண்டுபிடித்தார். இந்தியாவின் இதுபோன்ற தொல்லியல் சின்னங்களையும், கலாசாரத்தையும் வெள்ளைக்காரர்கள்தான் ஆர்வமுடன் கண்டுபிடித்துள்ளனர், நம்மவர்கள் அந்த அளவுக்குக் கண்டுபிடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இப்பகுதியின் பாதி வனப்பகுதியை வனத்துறை நேரடியாகவும் மற்றதை சிவிலியன்களும் நிர்வகிக்கின்றனர். இந்த பாகுபாட்டை அங்கு வளர்ந்துள்ள மரங்களிலிருந்தே அறியலாம். வனத்துறையினர் பராமரிக்கும் பகுதியில் காடு நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறது.

இந்தப் பிராந்தியம் முழுவதிலும் வன விலங்குகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காட்டு மான் அல்லது பன்றி மட்டுமே எப்போதாவது கண்ணில்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். குஜ்ஜர்கள் வளர்க்கும் காட்டெருமைகளும் பசுக்களும்தான் கண்ணில்பட்டன. சில ஒப்பந்ததாரர்கள் மட்ட குதிரைகளை சரக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்துள்ளனர்.

இப்பகுதியில் ஜெüன்சார்-பப்பார் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பஞ்ச பாண்டவர்களின் வழித் தோன்றல்கள். ஹிந்து பண்டிகைகளை இவர்கள் தங்களுக்கென்றுள்ள தனி பஞ்சாங்கப்படி கொண்டாடுகின்றனர். மிகவும் அமைதியானவர்கள். இப்பகுதியில் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நிகழ்வதில்லை. மாடு மேய்வது தொடர்பான சிறு புகார்கள் அதிகம்.

வனப்பகுதியில் சில ஓய்வில்லங்கள் உள்ளன. சில மிகவும் வசதியாக, அழகாக உள்ளன. சில பராமரிப்பின்றி மோசமாக இருக்கின்றன. ஆனால் அற்புதமான வனத்துக்கு நடுவே இவை உள்ளன.

பிரிட்டிஷ்காரர்களின் ரசனையே அலாதி. இங்குள்ள ஒரு ஓய்வில்லத்தில் லேடி எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி 3 நாள்கள் தொடர்ந்து தங்கியிருந்திருக்கிறார். தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து 7 ஆயிரம் மைல்கள் தள்ளி வந்த நாட்டில், ஆளரவமே இல்லாத மலைப்பகுதி காட்டில் இயற்கையை ரசிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல!

காட்டிலே ஒரு கிளையைக்கூட வெட்டக்கூடாது என்று 1996-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வன வளத்தைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

ஆனால் காடுகளை அறிவியல்ரீதியாக பராமரிப்பதென்றால், அவ்வப்போது மரங்களை வெட்டி அல்லது கிளைகளைக் களைத்து சீர்படுத்த வேண்டும். பழைய மரங்களை வெட்டிவிட்டு புதிய கன்றுகளை நட வேண்டும். “”காடுகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள்” அதில் அக்கறை காட்டாததால்தான் நீதித்துறை தலையிட நேர்ந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

உத்தரகண்ட் மலைப்பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாகப் பலமுறை சென்று வந்துள்ளேன். குமான், கர்வால் என்ற இருவகை மலைப் பகுதிகளிலும் அதிகம் பயணம் செய்துள்ளேன்.

அப்பகுதியில் கிராமங்களும் சிற்றூர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. சாலை வசதி மட்டும் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. கிராமங்களில் செல்போன், ஜீன்ஸ் பேண்ட், கோக-கோலா மட்டுமே புதிய நாகரிகச் சின்னங்களாகக் கண்ணில்படுகின்றன. பெரும்பாலான மக்கள் பட்டினி இல்லாமல் ஏதோ ஒரு வேளையோ இரு வேளையோ சாப்பிடுகிறார்கள் என்பதைத் தவிர எந்தப் பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. கிராமங்களிலிருந்து ஒரு மைல் சுற்றளவுக்குள் ஆரம்பப்பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்வாக இல்லை. பல குடும்பங்களில் சிறுவர்களை அதிகம் படிக்க வைப்பதில்லை.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் மூன்று.

1. கல்வி பயில போய் வரும் போக்குவரத்துச் செலவு கட்டுப்படியாவதில்லை.

2. படிக்கப் போய்விட்டால் குடும்பச்செலவுக்கு வருவாய் குறைகிறது.

3. படித்து முடித்ததும் வேலையா கிடைக்கப்போகிறது?

ஓரளவு படித்த இளைஞர்கள் வேலைதேடி சமவெளியில் உள்ள நகரங்களுக்குச் செல்கின்றனர். அங்கு வீட்டு வேலை செய்கின்றனர் அல்லது ராணுவத்தில் சேர்கின்றனர்.

வனப்பகுதியில் காண்ட்ராக்டர் வேலையைச் செய்கிறவர் மட்டும் வியாபாரி போல, கொஞ்சம் காசு பார்க்கிறார். ஆனால் அதற்கு பொறுமையும், புத்திசாலித்தனமும் அவசியம்.

குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நல்ல தண்ணீருக்காக பெண்களும் குழந்தைகளும் குடங்களைத் தூக்கிக்கொண்டு 3 அல்லது 4 மைல்தூரம் கூட செல்கின்றனர். எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் தரும் திட்டம் 1980-களில் வெகு ஆடம்பரமாக தொடங்கப்பட்டது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இன்னும் இக் கிராமங்களை அத்திட்டம் எட்டவில்லை.

தொழில் வளர்ச்சியும் அதிகம் இல்லை. காடுகளில் கிடைக்கும் பழம், இலை, பூ, மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆலை எதுவும் ஏற்படவில்லை. டேராடூன் நகர்ப் பகுதியில் மட்டும் பெயருக்கு சில தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் மலையின் அழகை ரசித்தபடியே சிலநாள்கள் தங்கிவிட்டுச் செல்ல கூடாரங்களை நிறுவலாம்; அங்கு சாலை, குடிநீர், கழிப்பிடம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மட்டும் செய்துதரலாம் என்று இப்போது யோசனை கூறப்பட்டிருக்கிறது.

மலையேறும் சாகசத்தை நிகழ்த்த நினைப்பவர்களை ஈர்க்க இந்த சுற்றுலாத் திட்டம் பயன்படும். ஆனால் இதனால் நிரந்தர வருவாய் கிடைக்காது.

நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆனபிறகும், விவசாயியோ, கிராமவாசியோ தான் பிறந்த மண்ணிலிருந்துகொண்டே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தத் தவறிவிட்டோம்.

முன்னேற வேண்டும் என்றால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை நாடு முழுவதும் ஏற்படுத்திவிட்டோம்.

தேசியக் கொள்கைகளை வகுப்பதில் நாம் அடைந்துள்ள தோல்விக்கு இது நல்ல உதாரணம்.

மாநிலத்தின் அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் திறமையானவர்கள், நல்லவர்கள். மாநில முதல்வர் நாராயண் தத் திவாரி நல்ல அனுபவம் பெற்ற தேர்ந்த நிர்வாகி. அப்படியும் மாநிலத்தின் வளர்ச்சி சமச்சீரானதாகவோ, மெச்சத்தகுந்ததாகவோ இல்லை.

இந்த மாநிலத்தில் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், ஆனால் 80 வளர்ச்சிக் கோட்டங்கள் உள்ளன. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கும் கோட்டங்களின் தலைவர்களுக்கும் இடையே, வருவாயைப் பகிர்ந்துகொள்ள போட்டி ஏற்படும். இது இப்பகுதி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. வளர்ச்சி கோட்டங்களையும் பேரவைத் தொகுதிகளுக்குச் சம எண்ணிக்கையில் இருக்குமாறு முதலிலேயே பிரித்திருக்க வேண்டும்.

மக்களின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கினாலும் அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போக்கு எங்குமே இல்லை. மக்கள் இன்னமும் விழிப்படையாமலேயே இருக்கின்றனர் என்பது உண்மையே.

எனவே ஆட்சியாளர்கள் இந்த நிலைமையை மாற்ற நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். எல்லாம் வழக்கம்போலவே நடப்பதால் முன்னேற்றம் வந்துவிடாது. முன்னேற்றம் இல்லாவிட்டால் மோசமாகப் போய்விடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

———————————————————————————————————

வன வளம் காப்போம்!

ஆர்.எஸ். நாராயணன்

கடந்த இரு நூற்றாண்டுகளில் வன வளம் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. தாவரங்கள் மட்டுமன்றி, விலங்கினங்களும் கணிசமாக அழிந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மனிதர்களே காரணம்!

அரசு தரும் ஒரு புள்ளிவிவரப்படி 1875-லிருந்து 1925 வரை 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 50 ஆயிரம் சிறுத்தைகள், 2 லட்சம் ஓநாய்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. 1925-க்குப் பின் இன்றுவரை கொல்லப்பட்டவை எவ்வளவு?~வனங்கள் சுத்தமாகிவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த வேட்டையை விட இன்றைய ஆட்சியில் வேட்டையின் விளைவால் காடுகளில் சிங்கம், புலி, நரி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை, கவலை தரும் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஐம்பதாண்டு முதிர்ந்த தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், கருங்காலி, ரோஸ்வுட் எதுவும் இல்லை. ஒருகாலத்தில் காட்டில் ஒரு வீரப்பன் இருந்தான். இப்போது நாட்டில் இருந்து கொண்டே பல வீரப்பர்கள் வனத்தை அழித்து வருகிறார்கள். வனக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மரவியாபாரிகளுக்கு வைரம் பாய்ந்த மரம் கிடைக்கும். பன்மடங்கு வனச் செல்வங்கள் கொள்ளை போகும்போது, ஒருபக்கம் பழியை வனத்தில் வாழ்வுரிமை கேட்கும் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு புதிய பசி வந்துள்ளது. அதன் பெயர் “வளர்ச்சி’. வளர்ச்சி என்ற போர்வையில் வனத்தைச் சுரண்ட புதிய வரையறையைப் பெரும் பொருள்செலவில் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் வனம் மற்றும் சூழலியல் அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு “”வனம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஒரு வரையறை விளக்கத்தை வழங்கும்படியும், இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப சட்ட நெளிவுசுளிவுகளிலிருந்து தப்பும் ஆலோசனைகளை வழங்கும்படியும், அதற்குரிய கட்டணத்தையும் கேட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கைவிட்டிருந்தது. பதில் அனுப்பியிருந்த பல ஆய்வு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்திற்கு அசோகா அறக்கட்டளை முன்வந்தது. அப்பணி முடிவுற்று அது தொடர்பான முடிவுக்கூட்டம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. அதில் “வனத்தின் வரையறை’ முன்வைக்கப்பட்டது.

வனம் என்றால் என்ன? இதற்கு ஐ.நா. அமைப்புகள் வழங்கும் அறிக்கைகள் உள்ளன. வனம் பற்றிய வரையறை வகைகள், பணிகள், நிர்வாகம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை அறிக்கைகள் வனம் – மற்றும் சூழலியல் அமைச்சக நூலகத்தில் நிறையவே உள்ளன. இவ்வளவு இருந்தும் புதிய வரையறை இப்போது தேவைப்படுகிறது. ஓட்டைகள் பல போட்டு ஒழுகும் பானையில் மேலும் ஓர் ஓட்டை போட ஆலோசகர்களும் அலுவலர்களும் முயல்வது ஏன்? அவர்கள் அப்படி என்ன வரையறுத்தார்கள்?

“”வனம் என்பது அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பாதுகாப்பு அடிப்படையில் சட்டரீதியாக வனம் என்று பதிவு செய்யப்பட்ட நிலம். இப்படிப்பட்ட நிலப்பிரிவு எல்லைகளுக்குட்பட்ட ஏரி, குளம், நதி போன்ற நீர்நிலைகள், மரங்கள், புல்வெளிகள், நன்செய், புன்செய் நிலங்கள், பாலைவனம், மண்ணியல் ஆய்விடம், பனி மண்டலங்கள்…..”

இந்தியாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக – நீர் மின்திட்ட அணைகள், ராணுவக் கட்டுமானம், சுரங்கம், குடியிருப்பு மாற்றம், நெடுஞ்சாலை.. போன்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக – பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 1300 வழக்குகள் – வளர்ச்சிக்கு வனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் உள்ளனவாம். இப்போது புரிகிறதா? நாட்டில் உள்ள நரிகள் ரொம்பவும் பொல்லாதவை. வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களைச் சுரண்ட பெரு முதலாளிகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் வழங்கவும், காலம்காலமாக வனமே வாழ்வு என்று வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளுக்குப் பச்சைத் துரோகமும் செய்ய இப் புதிய வரையறை உதவும்.

வழக்கில் சிக்கியுள்ள பகுதி 6 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர்தான். இன்று மரம்வெட்டுவதற்காக வனம் என்று ஒதுக்கப்பட்ட காடுகளின் பரப்பு 3.1 கோடி ஹெக்டேர், காப்பிடம் என்று பதிவான நிலப்பரப்பு 1.5 கோடி ஹெக்டேர். ஆக மொத்தம் 4.6 கோடி ஹெக்டேர் நிலத்தின் சொந்தக்காரர், ஒரு மகாநிலப்பிரபுவாகத் திகழ்ந்துவரும் அரசு, 8 கோடி வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்குக் கட்டுப்பட்ட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுபவப் பாத்தியதைக் கொண்டாடி சொந்தமாக்கிக் கொள்ளும் தந்திரம் நாட்டு நரிகளுக்கு உண்டு. அந்த உரிமை காட்டு நரிகளுக்கு இல்லை. டன் டன்னாக மரம் வெட்டிக் கொள்ளை அடிக்கப்படுவது ஒருபுறம். பாவப்பட்ட வனவாசிகள் தங்கள் ஆடு, மாடுகளை வனங்களுக்கு ஓட்டிச் சென்று மேய்க்க அவர்களுக்கு உரிமை இருந்தும் உரிமை மறுக்கப்படுகிறது. வனவாசிகள்தான் வனத்தை அழிப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. காடுகளில் உலர்ந்து விழும் விறகைப் பொறுக்குவதும், விதை, பழம் பொறுக்குவதும் மரங்களை வெட்டுவதும் ஒன்றாகிவிடுமா?

1970-களில்தான் காடுகளில் வனவிலங்குகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்கள். மரக்களவுபற்றி கண்டுகொள்ளவில்லை. 1972-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் காரணமாக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் உருப்பெற்றுக் காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான சூழலில் காப்பாற்றி இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இப்படி வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டதைப்போல் வனவாசிகளின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் உத்தராஞ்சல் மாநிலத்தில் தாசோலியில் வனவாசிகள் ஒன்றுகூடி சிப்கோ இயக்கத்தை உருவாக்கினர். இதை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சாந்தி பிரசாத் பட் தொடங்கிவைத்து தலைமையேற்று நடத்தினார்.

இமயமலைக் காடுகளில் சட்டபூர்வமாக மரங்களை வெட்ட வந்த ஒப்பந்தக்காரர்களை மரங்களை வெட்ட முடியாதபடி மரத்தை இரு கரங்களால் அணைத்துக் கொண்டு, “”முதலில் எங்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டுங்கள்” என்று வனவாசிகள் கூறினர். மலைக்காடுகளில் மரங்களை வெட்டும்போது நிலச்சரிவும் வெள்ளமும் உருவாகும் என்ற உண்மை வனவாசிகளுக்கு நன்கு தெரியும். 1972, 73 ஆண்டுகளில் “சிப்கோ’ இயக்கம் தீவிரமானபோது சுற்றுச்சூழல் காப்பு இயக்கத் தலைவர்கள் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா ஆகியோர் அதில் பங்கேற்றனர். அதுபோன்ற இயக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருப்பெறவில்லை. குறிப்பாக கொடைக்கானல் அமைந்துள்ள பழனிமலைக்காடுகளில் வன அழிவு காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும்போது ஆண்டுதோறும் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் கொண்டுவந்த நெருக்கடிகால ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் எனலாம். 1980-ல் நெருக்கடிகால வனப்பாதுகாப்புச் சட்டம் வந்தது. மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வனத்துறை ஊழல்கள் – மரம் கடத்தல் – மலிந்திருந்த காலகட்டத்தில், மத்திய அரசு அனுமதி இல்லாமல் வனங்களில் மாநிலங்கள் கைவைக்க இயலவில்லை. பின்னர் ராஜீவ்காந்தி காலத்திலும் பழனிமலைப் பாதுகாப்பு உள்பட வனப்புனர் வாழ்வுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. வனவாசிகளின் வாழ்வுரிமை மேலும் மேலும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. வனத்தை வரையறை செய்யும்போது, வனவாழ் மக்களின் உரிமை அன்று சற்று கவனம் பெற்றது. இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. வனவிஷயத்தில் மட்டுமாவது வருவாய் நோக்கை மறந்துவிட்டு, உயிர்ச்சூழல் – சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும். வனத்திலே பிறந்து, வனத்திலே வளர்ந்து, வனத்திலே வாழ்ந்து மடியும் வனவாசிகளை வெளியேற்றும் ஒரு பாவச்செயலை இனியும் தொடர வேண்டாம்.

“”இந்தப் பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் அவற்றின் நலன்களுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது. எந்த உயிரினமும் அடுத்த உயிரின உரிமைகளைப் பறிப்பது பெரும்பாவம்” என்று ஈசோபநிஷதம் கூறுகிறது. காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க. அதைக் காப்பாற்றுங்க!

——————————————————————————————————————————-
முசௌரி உணர்த்திய பாடம்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

கடந்த வாரம் முசௌரி சென்றிருந்தேன். பிரிட்டிஷ்காரர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது, அவர்கள் விரும்பிக் குடியேறிய மலைவாசஸ்தலத்தில் முசௌரியும் ஒன்று. தில்லிக்கு வடக்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு டேராடூனிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தேசிய பயிற்சி மையம் இங்குதான் இருக்கிறது. இதர மத்திய அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கும் நிலையமும் இங்கு இருக்கிறது. இதை மலைகளின் ராணி என்றும் அழைக்கின்றனர்.

1998-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அதிகாரிகளுக்கு, நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து உரை நிகழ்த்த சென்றிருந்தேன். 160 அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களில் பாதிப்பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். ஆனவர்கள். மற்றவர்கள் வெவ்வேறு மாநில அரசுகளால் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத் தேர்வு செய்து அனுப்பப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிகாரிகள். அமெரிக்காவைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவராக நான் அங்கு சென்றிருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி தர டியூக் பல்கலைக்கழகத்தின் உதவியை இந்திய அரசு நாடியிருந்தது.

டேராடூனிலிருந்து காரில் சென்றேன். “”அடடா, சுற்றுச்சூழல் எவ்வளவு பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருக்கிறது” என்று அகாதெமியின் காரை ஓட்டிவந்த டிரைவரைப் பார்த்துக் கூறினேன். அவர் சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 1980-களில் லக்னெüவில் உயர் பதவியில் இருந்த ஓர் அதிகாரி, முசௌரியில் மரங்களை வெட்டவோ, நகராட்சிக்குள் புதிய கட்டடங்களைக் கட்டவோ அனுமதிக்கவே முடியாது என்று கண்டிப்பாகக் கூறி அமல்படுத்தியதால் இந்தப் பிரதேசம் பிழைத்தது என்றார். அவர் சொன்ன அந்த அதிகாரி நான்தான்.

நைனிதாலிலும் முசௌரியிலும் மரங்களை வெட்டுவதிலும் கட்டடங்களைக் கட்டுவதிலும் கண்மூடித்தனமான வேகத்தில் சிலர் இறங்கிவிட்டனர் என்று எனக்குத் தகவல் வந்தது. உடனே அந்த தடை உத்தரவைப் பிறப்பித்தேன். நைனிதால், முசௌரியில் யாரும் மரங்களை வெட்டக்கூடாது, முசௌரி மலையில் யாரும் பாறைகளை வெட்டவோ, இதர கனிமங்களைச் சேகரிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டேன்.

“”மலைப்பகுதியின் வளர்ச்சியைத் தடுக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் தடையாக இருக்கிறேன்” என்றெல்லாம் என்னைப்பற்றி குற்றம்சாட்டி எனக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பலர் மிரட்டினார்கள். அதில் கொலை மிரட்டலும் உண்டு. முதலமைச்சரைக்கூட தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் உறுதியாக என்னை ஆதரித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் போட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நானே பார்த்து பூரித்துப் போனேன்.

காலாகாலத்துக்கும் மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்பெருமையாக இதை நான் கூறவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நல்ல முடிவில் அதிகாரிகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். ஊழல் அரசியல்வாதியும் முதுகெலும்பில்லாத அதிகாரிகளும்தான், மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நல்ல முடிவுகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். இதை மேலும் ஒரு நல்ல உதாரணம் கொண்டு விளக்க விரும்புகிறேன்.

1960-களில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1970-களின் பிற்பகுதியில் அதுவே சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்குத் தமிழகம்தான் முன்னோடி. தரக்குறைவான அரிசி, தானியங்களைப் பயன்படுத்துவார்கள், கணக்கில் தில்லுமுல்லு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்வார்கள் என்றெல்லாம் இத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உறுதியாக இருந்ததால் இத்திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பலனை மாநிலம் அனுபவித்து வருகிறது. சத்துணவு காரணமாக தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் உடலும் – அறிவும் திடமாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது.

தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்தால் எத்தனையோ நன்மைகள் மாநிலத்துக்குக் கிடைத்தாலும் சத்துணவுத் திட்ட பலன் அவற்றில் முதன்மை பெறுகிறது. ஒரு கொள்கை முடிவால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஊகித்து மதிப்பிட முடியாது; ஆனாலும் சில நல்ல நிர்வாகத்துக்கு சில கடுமையான, உறுதியான முடிவுகள் மிகமிக அவசியம்.

ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தின் காரை ஓட்டிய அந்த டிரைவர், அந்த அகாதெமி மாணவர்களிடையே மிகவும் பிரபலமான குதிரைப் பயிற்றுனர் நவல் கிஷோர் என்பவரின் உறவினர். அதை அவர் சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்ததால் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது. “என்னப்பா, இப்போதும் பயிற்சி மாணவர்கள் குதிரையை ஓட்ட ஆரம்பித்து கீழே விழுகிறார்களா?’ என்று கேட்டேன். ஆமாம் சார், ஆனால் ஒரு வித்தியாசம், பழைய மாணவர்களைப் போல இப்போதுள்ள இளைஞர்களுக்கு எலும்பு உறுதியாக இல்லை, அதிக நாள்கள் மருத்துவமனையில் படுத்துவிடுகிறார்கள் என்றார் அதே உற்சாகத்துடன்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடந்தோ, சைக்கிளிலோ போனார்கள். வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் செய்தார்கள். கிணற்றிலிருந்து நீர் இறைத்துத் தந்தார்கள். இப்போது நொறுக்குத் தீனி தின்றுவிட்டு பஸ்ஸிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். எனவே உடலில் வலு இல்லை. பள்ளிக்கூடத்தில் சத்துணவைப் போட்டு ஊருக்கே உரம் ஊட்டிய அந்த நாள் எங்கே, வீட்டிலேயே சாப்பிட்டு வலுவில்லாமல் இருக்கும் இந்த நாள் எங்கே?

எல்லோருக்கும் வரும் சந்தேகம் எனக்கும் வந்ததால் பயிற்சி அகாதெமியின் இயக்குநர் ருத்ர கங்காதரனிடம், “”இப்போதைய மாணவர்களின் தரம் எப்படி?” என்று கேட்டேன். “நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இயக்குநராக இருக்கிறேன்; இப்போது பயிற்சிக்கு வருகிறவர்கள், பழைய மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது உலக ஞானத்திலும் அவர்களுடைய பாடத்திலும் சிறந்து விளங்குகின்றனர். கடுமையான பயிற்சிகளைக்கூட எளிதாக முடிக்கின்றனர். நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.

நான் ஏற்கெனவே கூறியபடி, டியூக் பல்கலைக்கழகம் சார்பில் சென்றிருந்தேன். என்னுடன் வந்த இதர பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. இந்த பல்கலைக்கழகம் ஹார்வர்ட், ஸ்டேன்ஃபோர்டு, யேல் பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. இங்கு மட்டும் அல்ல, உலகின் முன்னணி பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இந்தியர்கள்தான் இப்போது பேராசிரியர்களாகவும் மாணவர்களாகவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அளவுக்கு அறிவில் சிறந்தவர்கள் இந்த நாட்டில் இருந்தும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் உழல்வதும், அரசியல்வாதிகள் அப்பட்டமான சுயநலத்தில் மிதப்பதும், அதிகாரவர்க்கம் அவர்களுக்கு அடிபணிவதும் தாளமுடியாத வருத்தத்தைத் தருகிறது. நிர்வாகச் சீர்திருத்தம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

முசௌரியில் பார்த்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். முன்பைவிட கடைகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு தென்னிந்தியச் சிற்றுண்டியகமும் உடுப்பி ஓட்டலும் கண்ணில்பட்டன. தென்னாட்டு இட்லி, வடை, சாம்பார், மசாலா தோசை வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Adventure, Analysis, Animals, Archeology, Ashoka, Ashokar, ASI, Asoka, Asokar, Backgrounder, Cantonement, City, dead, Deforestation, Dehradoon, Dehradun, Delhi, Economy, Education, Environment, Finances, Forests, Fox, Ganga, Ganges, Govt, Growth, guns, Haridwar, Hiking, Hills, Himachal, HP, Hunt, Hunting, Industry, infrastructure, Jobs, Kill, Kulu, Lives, Manali, Metro, Military, Mountains, Mussoori, Mussouri, Nature, Pollution, Protect, Protection, Rafting, Rishikesh, River, Rural, Sandalwood, Shot, Sports, State, Statistics, Stats, Tour, Tourism, Tourist, Transport, Traveler, Tree, Trees, Trekking, Tribals, UP, Urbanization, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Veerappan, Village, Water, Welfare, Wild, Wolf, Wolves | Leave a Comment »

TTD vs Himalaya Sampadha Samratchana Samithi

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

திருப்பதி தேவஸ்தான நிலத்துக்கு ஆபத்து!

ஹைதராபாத், ஜூன் 13: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக ரிஷிகேசத்தில் உள்ள நிலங்களைக் கைப்பற்ற நில ஆக்கிரமிப்பாளர்களும், “”ரியல்-எஸ்டேட் மாஃபியா”க்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

70 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்களைக் காப்பாற்ற, இவற்றுக்கு வேலி அமைப்பது என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்திருக்கிறது.

ஆஸ்ரம வரலாறு:

ஸ்வாமி சச்சிதானந்த சரஸ்வதி என்பவர் ஆந்திர ஆஸ்ரமத்தை 1942-ம் ஆண்டு ரிஷிகேசத்தில் தொடங்கினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். சமீபத்தில் அந்த இடங்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மாற்றப்பட்டன.

இந் நிலையில், ஆந்திர ஆஸ்ரமத்தில் உள்ள நிலங்களையும் கட்டடங்களையும் மேம்படுத்தியும் புதிதாக வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்போவதாகவும் உள்ளூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சமீபகாலமாக விளம்பரப்படுத்த ஆரம்பித்தன.

தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை இல்லாமல் நன்கொடைகளைத் திரட்டி இப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அவை கூற ஆரம்பித்தன. இப்போது இந்த நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் பொறுப்பாளராக உதவி செயல் அதிகாரி ஒருவர் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சமிதியின் விஷமம்:

ரிஷிகேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும், “”இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி” என்ற அமைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை ஏற்படாமல் 200 கடைகளை அந்த ஆஸ்ரமத்தில் கட்டித்தர விரும்புவதாக 2004 செப்டம்பரில் தெரிவித்தது.

வியப்பைத் தரும் வகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகக்குழுவில் முன்னர் பணியாற்றிய உறுப்பினர் ஒருவர் அந்த யோசனையைப் பரிசீலிக்கலாம் என்று தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தார்.

தேவஸ்தானத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூட அவர் அந்த சமிதியுடன் செய்துகொண்டார்.

ஊழல் வாடை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான ஏ.பி.வி.என். சர்மா இதில் ஏதோ ஊழல் வாடை தெரிகிறதே என்று சந்தேகப்பட்டார். இணை நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரியை ரிஷிகேசத்துக்கு உடனே சென்று விசாரித்து நேரில் வந்து அறிக்கை தருமாறு பணித்தார். அவரும் அவ்விதமே விசாரணை நடத்திவிட்டு வந்து அறிக்கை தந்தார்.

“இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி’ என்ற அமைப்புக்கு நிதி ஆதாரம் ஏதும் கிடையாது; தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதை வெளியில் காட்டி நிதி வசூலிக்க திட்டமிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் தேவஸ்தானத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்பதையும் உணர்ந்து கொண்டார். தேவஸ்தானம் வசம் உள்ள நிலங்களைச் சுற்றி உடனே வேலி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் ஆஸ்ரமத்துக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்குக் குடியிருப்பு வீடுகளைக் கட்டித்தரவும் உத்தேசித்திருக்கிறது.

இந்த நிலங்களை தேவஸ்தானத்தின் செலவிலேயே மேம்படுத்துவதா அல்லது பொது ஏலம் மூலம் நிலங்களை விற்றுவிடுவதா என்ற முடிவை தேவஸ்தானம் பிறகு மேற்கொள்ளும்.

வரவு எட்டணா, செலவு பத்தணா?

ரிஷிகேசத்தில் உள்ள ஆந்திர ஆஸ்ரமத்தின் ஆண்டு வரவு ரூ.5.73 லட்சம்தான். ஆனால் செலவு ரூ.52.32 லட்சம்! எனவே இதன் வருவாயைப் பெருக்கும் வழிகளை யோசிக்குமாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான போர்டு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Andhra, Andhra Pradesh, Andhrapradesh, AP, Apartments, Ashram, Assets, Bribery, Bribes, Chamundi, Complex, Construction, Corruption, Devasthanam, Devaswom, Don, Expenses, Flats, Ganga, Ganges, Haridhwar, Haridwar, Himalaya, Himalayas, Himalya, Hindu, Hinduism, Hrishikesh, Hundi, Imalaya, kickbacks, Land, Loss, mafia, Malls, Naidu, Plots, Profit, Property, Rao, Real Estate, Religion, Revenues, Rishikesh, Rowdy, Sambadha, Sambatha, Samithi, Samithy, Sampadha, Sampatha, Samratchana, Shakthi sthal, Shopping, TD, Temple, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, YSR | Leave a Comment »

Mayavathi’s corruption supported by TR Balu with Congress Blessings – Presidential Elections

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

அரசியல் பேரமா, அதிகார துஷ்பிரயோகமா?

மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்கிற நிலைமை 1989-ல் எழுந்தது முதல் அரசியல் என்பது தினசரிப் பேரங்களுக்கு உட்பட்ட வியாபாரமாகிவிட்டது என்பதுதான் யதார்த்த நிலைமை. அமைச்சர் பதவியைப் பெறுவது முதல் எந்தவொரு விஷயத்திலும் எனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்கிற வகையில்தான் ஆட்சியில் அமரும் கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.

உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருப்பது இந்த வியாபார நாடகத்தில் மற்றுமொரு காட்சி. முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வாடிக்கையான விஷயம்தான் என்றுதான் கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான் இது என்பது பள்ளிக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

இந்தியாவின் புராதன சரித்திரச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களைப் பாதுகாக்க 1958-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைச் சுற்றிலுமுள்ள நூறு மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த சரித்திரச் சின்னங்கள் சிதைந்து விடாமல் இருக்கவும், அதன் அழகு கெட்டுவிடாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தை முறையாக அமல் நடத்தும் பொறுப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடமும் (Archeaological Survey of India), மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தாஜ் கலாசார வணிகவளாகம் (Taj Heritage Corridor்) என்கிற பெயரில் தாஜ்மஹாலைச் சுற்றியும் ஆக்ரா கோட்டையைச் சுற்றியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வணிக வளாகம் அமைத்து மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டினார். சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த இந்த வணிக வளாகத்துக்கு, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியும் வழங்கினார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

மத்திய அரசு தனது பங்குக்கு முதல் தவணையாக சுமார் 17 கோடி ரூபாயை இந்த வணிக வளாகத் திட்டத்திற்கு வழங்கியது. அதுவும் எப்படி? முறையாக எந்தவிதத் திட்ட வரைமுறைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல், சுற்றுச்சூழல் அமைச்சரகமும் எந்தவொரு சோதனைகளையும் நடத்தாமல், மாயாவதியின் நிர்பந்தத்தின் பேரில் பணம் தரப்பட்டு, வேலையும் தொடங்கியது. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விஷயம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கும் வண்ணம் அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி வணிக வளாகம் எழுப்பப்படுகிறது என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட, இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனை விசாரிக்க, அதன் விளைவாகத்தான் இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை மூடி மறைக்க மத்தியப் புலனாய்வுத் துறை 2005-ல் முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இப்போது, மாயாவதியின் மீதும், அவரது அன்றைய அமைச்சரவை சகா நஜீமுதீன் சித்திக் மீதும் எத்தகைய குற்றமும் தனக்குத் தென்படவில்லை என்று கூறி, இந்த விசாரணையை மேலும் தொடரவோ, வழக்குப் போடவோ மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்க ஆளுநர் ராஜேஸ்வர் மறுத்திருக்கிறார்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிக்கு ஆளுநர் துணை போயிருக்கிறார். ஆளுங்கட்சியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளரை ஆதரிக்க சோனியா காந்திக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் இடையே நடைபெற்றிருக்கும் இந்தப் பேரத்தில் களங்கப்பட்டிருப்பது ஆளுநரின் மரியாதை.

அதிகார துஷ்பிரயோகம் என்று வரும்போது அது ஆளுநராக இருந்தால் என்ன ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? அரசியல் பேரத்தில் இதுவும் ஒரு பரிணாமம் என்று கருதி நம்மை நாமே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

———————————————————————————————-

கட்சித் தொண்டர்கள் வழங்கிய பணத்தில் சேர்ந்தது எனது ரூ. 52 கோடி சொத்து: உ.பி. முதல்வர் மாயாவதி

லக்னெü, ஜூன் 28: தன்பேரில் உள்ள ரூ. 52 கோடி சொத்து பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் நன்கொடையாக அனுப்பிய பணத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

தனக்கு ரூ. 52 கோடி சொத்து இருப்பதாக மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவில் அளித்த தகவலில் முதல்வர் மாயாவதி கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விளக்கத்தை தந்துள்ளார் மாயாவதி.

நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இதற்கு முன்னர் தொண்டர்கள் நன்கொடையை கட்சிக்கு அனுப்பினார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கருதி எனக்கு நேரடியாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது தில்லியில் பங்களா கூட கட்டலாம். அந்த அளவுக்கு எனக்கு அவர்கள் சுதந்திரம் தந்துள்ளனர்.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. வரி அனைத்தையும் கட்டி வருகிறேன். எல்லா விவரமும் வருமான வரிக்கணக்கில் உள்ளன. வருமான வரி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள நான் அப்பீல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரம் இல்லாதது.

முலாயம் அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை: முலாயம் சிங் தலைமையிலான முந்தைய அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதை சிறப்பு விசாரணைக் குழு ஆராயும். இந்த முறைகேடு பற்றி 3 மாதங்களில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

ஊழலில் போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு தொடர்பு இருந்ததா? வேறு மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் திருப்பிவிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைக் குழு ஆராயும்.

அமைச்சர் மிஸ்ரா விலகுகிறார்: மாநில அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலருமான எஸ்.சி.மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். 2009-ல் மக்களவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர் சாதியினரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஈர்க்கும் பணியில் மிஸ்ரா ஈடுபடுவார்.

அமைச்சர் பதவியில் அவருக்கு நாட்டம் இல்லவே இல்லை. நான் அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கினேன். இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருப்பார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் உள்பட பலதரப்பட்ட ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது.

மிஸ்ரா குடும்பத்தாருக்கு நான் எந்த சலுகையும் காட்டவில்லை. இது பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன.

கஷ்டமான கால கட்டத்தில் எனக்கு உதவியுள்ளார் மிஸ்ரா. அவரது சகோதரிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியும், மைத்துனருக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் அளித்ததில் தவறில்லை. அவர்களின் தியாகத்துக்கு நான் தந்த வெகுமதி அது.

மிஸ்ரா எனக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானபோது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இருவரும் அவரை கவனித்துக் கொண்டதால் எனக்கு எதிரான வழக்கில் மிஸ்ரா ஆஜராக முடிந்தது. அதற்கு வெகுமதியாக அந்த இருவருக்கும் பதவி அளித்தேன். இதில் தவறு இல்லை.

மேலும் பதவி நியமனம் என்பது எனக்கு உள்ள சிறப்புரிமை. இதில் எனக்கு ஆணையிட பத்திரிகைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்றார் மாயாவதி.

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, APJ, Archeaological Survey of India, ASI, Azagiri, Azakiri, Azhagiri, Baalu, Balu, Bribery, Bribes, Business, CBI, Coalition, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, DMK, Environment, Governor, Interrogation, Investigation, Kalam, kickbacks, Law, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, nexus, Order, Party, Pollution, Power, President, support, Taj Heritage Corridor, Taj mahal, Tajmahal, TR Balu, UP, Uttar Pradesh, UttarPradesh | Leave a Comment »

Avoid the Identity Crisis for the Alternate Front – Support APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் ஜூன் 9, 2007

யாரை ஆதரிக்”கலாம்’?

மூன்றாவது அணி என்று சொன்னாலே மூன்றாவதாக வரும் அணி என்று கேலி பேசும் அளவுக்கு அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டிருக்கிறது. 1989 மற்றும் 1996-ல் அமைந்த மூன்றாவது அணியின் தலைமையிலான ஆட்சிகள் அற்பாயுசுடன் முடிந்ததன் விளைவுதான் இந்த நம்பிக்கை இன்மைக்குக் காரணம்.

ஒருபுறம் காங்கிரஸ். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி. இரண்டுமே தேசிய கட்சிகள் என்பது மட்டுமல்லாமல், பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை அதிக மாற்றம் இல்லாத தன்மை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இந்த இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதுடன், கட்சியின் அடிப்படை அமைப்புகளும் பலமாக இல்லாத நிலைமை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிப்பட்ட பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இந்த இரண்டு கட்சிகளாலும் முடியாது என்கிற நிலைமை.

மூன்றாவது அணி அமைவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு பெரிய அரசியல் சக்திகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும்போது அதற்கு மாற்றாக ஒரு சக்தி இருப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதுவும், பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல், தாராளமயம் என்கிற பெயர்களில் விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் முக்கியம் இழக்கின்ற நிலை ஏற்படும்போது, மாற்றுப் பொருளாதாரக் கொள்கையுடைய மூன்றாவது அணியின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.

இவ்வளவு இருந்தும் மூன்றாவது அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததன் காரணம் என்ன? முதலாவதாக, இந்த மூன்றாவது அணியில் பங்கு பெறும் சக்திகள் அனைத்துமே மாநிலக் கட்சிகள் என்பதால் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உடைய சக்திகளாக இருக்கின்றன. இந்த மாநிலக் கட்சிகளின் எந்தவொரு தலைவருக்கும் தேசிய அளவில் செல்வாக்கு இல்லை என்பது மூன்றாவது அணியின் மிகப் பெரிய பலவீனம்.

இந்த மூன்றாவது அணியில் பங்குபெறும் கட்சிகளைப் பொருத்தவரை அடிப்படையில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அவற்றின் ஆதாரமாக இருப்பது இன்னொரு பலவீனம். தெலுங்கு தேசம், இந்திய தேசிய லோக்தளம், அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகளைப் பொருத்தவரை பாரதிய ஜனதாவைவிட காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. அடுத்த நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதில் இந்தக் கட்சிகளுக்கு எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் யதார்த்த நிலைமை.

மூன்றாவது அணிக்கு எப்போதுமே இடதுசாரிக் கட்சிகளின் ரகசிய ஆதரவு உண்டு என்பது தெரிந்த விஷயம். மூன்றாவது அணி என்கிற பெயரில் ஏற்படும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்காமல் பார்த்துக் கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளின் நோக்கமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இடதுசாரி சிந்தனையிலான பொருளாதாரக் கொள்கையும் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்ள வேண்டிய அரசியல் நிர்பந்தமும் இந்த மூன்றாவது அணிக்கு இருப்பதுதான், இந்த அணியின் நம்பகத்தன்மைக்குச் சவாலாக இருக்கும் விஷயம்.

காங்கிரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் முடியாமல், பாரதிய ஜனதாவுடன் உறவாடவும் முடியாமல் இருக்கும் இந்த மூன்றாவது அணி தன்னை முன்னிறுத்த, அடையாளம் காட்டிக்கொள்ள இப்போது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருத்துக் கணிப்புகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பது தெரிகிறது. அப்துல் கலாமே குடியரசுத் தலைவராகத் தொடர்வதற்குத் தனது ஆதரவை அறிவிப்பதன் மூலம், ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை இந்த மூன்றாவது அணியால் ஏற்படுத்த முடியும். அதன் விளைவாக, மூன்றாவது அணி தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தும் சாத்தியமும் உண்டு.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட இருக்கும் அரசியல் மாற்றங்கள், மூன்றாவது அணிக்குச் சாதகமாக அமைய வேண்டுமானால், அந்த அணி குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொருத்துதான் அமையும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மூன்றாவது அணி வழக்கம்போல மூன்றாவதாக வரும் அணியாகத்தான் தொடரும்!

—————————————————————————-

இழந்த பெருமையை மீட்க மூன்றாவது அணி!

நீரஜா செüத்ரி

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

எட்டு பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து ஹைதராபாதில் அமைத்துள்ள புதிய அணியை, “”அரசியல் வாழ்விழந்தவர்களின் கூட்டணி” என்று கிண்டலாகச் சிலர் அழைக்கின்றனர்.

ஒரு அணியைப் போன்ற “”மாயத் தோற்றம்”தான் இது என்று பாரதிய ஜனதா வர்ணித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியும் இதை “அணியாகவே’ கருதவில்லை.

தேர்தலில் தோற்ற முன்னாள் முதல்வர்கள் கூட்டு சேர்ந்து, இழந்த பெருமையை மீட்கவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும், மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்கவும் மேற்கொண்டுள்ள அரசியல் உத்திதான் இது என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை. ஆனால், இந்த அணி சேர்ந்துள்ள நேரம்தான் முக்கியமானது.

நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்யும் நேரத்தில் இந்த அணி உருவாகியிருக்கிறது. இந்த அணியைச் சேர்ந்த கட்சிகளிடம் மொத்த வாக்குகளில் 9 சதவீதம் இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ் தலைமை), தேசிய ஜனநாயக கூட்டணி (பாரதிய ஜனதா தலைமை) ஆகிய இரு அணிகளிலிருந்தும் விலகி, தனி வழியில் செல்ல புதிய அணி ஏற்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிற்க பைரோன் சிங் ஷெகாவத் முடிவெடுத்தால் இந்த மூன்றாவது அணி அவரை ஆதரிக்கக்கூடும். இத் தேர்தலில் ஷெகாவத் வெற்றி பெற்றால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு ஆரம்பமாக இருக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாயாவதியின் ஆதரவு இருக்கிறது. எனவே அவர்கள் நிறுத்தும் வேட்பாளர், ஷெகாவத் சுயேச்சையாகப் போட்டியிட்டால்கூட அவரைவிட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெறுவது நிச்சயம்.

அதாவது, ஷெகாவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும் சமாஜவாதி, தெலுங்கு தேசம், அஇஅதிமுக, அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் ஆதரித்தாலும் கூட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரால் வெற்றி பெற முடியும்.

ஷெகாவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தோ இடதுசாரி அணியிலிருந்தோ நிறையப் பேர் வாக்களித்தால்தான் அவரால் வெல்ல முடியும். அப்படி வாக்களித்து 50 ஆயிரம் வாக்குகள் அவருக்குக் கிடைத்தால்தான் வெற்றி கிட்டும். அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருப்பது அதன் வேட்பாளருக்கு சாதகமான அம்சம். இப்போது நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தும்படியான சூழ்நிலை வரக்கூடாது என்றே முலாயம் விரும்புவார்.

உத்தரப்பிரதேசத்தில் அவருக்குக் கிடைத்த பெரும் தோல்வியிலிருந்து மீண்டு எழ அவருக்குச் சிறிது அவகாசம் தேவை. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவால் மக்களவையின் ஆயுள் கெட்டிப்பட்டுவிட்டது. எனவே எந்த அணியிலும் சேராத அணிகள் ஷெகாவத் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பே இல்லை.

தெலுங்கு தேசம், அதிமுக போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் இடம் பெற்றவை என்றாலும் இப்போது அவரவர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தேவை என்று உணர்ந்துள்ளன. எனவே இடதுசாரி கட்சிகளின் ஆலோசனையைக் கேட்கத் தயாராக உள்ளன.

மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே யோசனை கூறிய ஜெயலலிதாவையே அணியின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதா தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவும் முலாயமும் விரும்புகின்றனர்.

திமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பால் அடுத்த பொதுத்தேர்தலில் தமக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று ஜெயலலிதா நம்புகிறார். அடுத்த முதல்வர் என்பதைவிட அடுத்த பிரதமர் என்ற பேச்சு தனக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.

சோனியா காந்தியை மற்ற அரசியல் தலைவர்கள் தாக்குவதைவிட ஜெயலலிதா தாக்கிப் பேசினால் அது வித்தியாசமாக பார்க்கப்படமாட்டாது. ஜெயலலிதாவும் அப்படிப் பேசத் தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணி இடதுசாரி கட்சிகளுடன் கூட்டை விரும்புகிறது; ஆனால் இடதுசாரி முன்னணி, அரசியல் அதிகாரத்துக்காக அல்லாமல் மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடும் அரசியல் அணிதான் முக்கியம் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

சாமான்ய மக்களை வாட்டிவதைக்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும், அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டையும் தங்கள் அணி எதிர்ப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இயைந்ததாக இருக்கிறது.

அரசியல் வரலாற்றைப் பார்த்தால், மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாகக் கொண்டவை. 30 சதவீதம் முதல் சதவீதம் வரையிலான வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியால், பிற எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வந்ததால் எளிதில் வெற்றி பெற முடிந்தது.

1967-ல் சில வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி (சம்யுக்த விதாயக் தளம்) வெற்றிபெற்று முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை ஏற்படுத்த முடிந்தது.

நெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய லோக தளம் போன்ற கட்சிகள் 1977-ல் இணைந்து ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி உருவானது. அதன் தலைமையில் ஏற்பட்ட கூட்டணி, ஆட்சியைப் பிடித்தது.

1989-ல் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். அவரை பாரதிய ஜனதாவும் இடதுசாரி கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரித்தன. பிறகு 1996-ல் தேவெ கெüட தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தேய ஆரம்பித்தது, பாரதிய ஜனதா வளர ஆரம்பித்தது. பிறகு வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதா ஏற்படுத்திய கூட்டணி, ஆட்சிக்கு வர முடிந்தது.

இப்போது காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே செல்வாக்கை இழந்து வருகின்றன. 2009 மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகள்தான் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும்.

எனவே ஆட்சியமைக்கும் உரிமை அவற்றுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்னால் இடதுசாரி கட்சிகளுடனும், தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியுடனும் இந்த அணி அரசியல் உறவு கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

இப்போதைக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டையும் பிடிக்காதவர்களுக்கு “”ஒரு மாற்று” இருக்கிறது!

Posted in ADMK, Alliance, Analysis, Andhra, Andhra Pradesh, Andra, AP, APJ, BJP, Cabinet, Chandrababu, Coalition, Comunists, Congress, CPI, CPI (M), CPI(M), Democracy, DMK, Election, Insights, Janatha, Jayalalitha, Jeyalalitha, Kalam, LokSaba, LokSabha, Manmohan, Marxists, Minister, Ministry, MP, Mulayam, Naidu, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Op-Ed, Opinion, Party, Politics, Poll, President, Sonia, Strategy, TD, Telugu, Third, TN, UP, Uttar Pradesh | Leave a Comment »

iRama Srinvasan – Economic Improvements does not guarantee Poverty Abolishment: Statistics, Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்

இராம. சீனுவாசன்

அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.

இப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.

இதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு

  • 1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,
  • 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.

வறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.

தனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

வருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.

  • 1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து
  • 2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.

ஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

இப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.

வறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.

இந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.

1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

கணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.

மாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.

வறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

மகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்

  • 1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த
  • 1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

எனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.

  • 2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,
  • நகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.
  • மொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
  • இதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்
  • 8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.

தேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –

  • பிகார்,
  • சத்தீஸ்கர்,
  • ஜார்க்கண்ட்,
  • உத்தரப் பிரதேசம்,
  • உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.

வறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.

(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)

———————————————————————————————-

ஏன் இந்த மௌனம்?

மத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

சொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.

தரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்?

ஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.

எந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.

லாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.

————————————————————————————————–

சரியான நேரத்தில் சரியான யோசனை

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

அதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.

நாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.

சமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது!
————————————————————————————————–

Posted in Analysis, Backgrounder, Banks, Bihar, Calculations, Changes, Chattisgar, Chattisgarh, City, Consumer, Customer, Disparity, Divide, Economy, Education, Employment, Expenses, Finance, Food, GDP, Globalization, Govt, Healthcare, Hygiene, IMF, Improvements, Income, Industry, Inflation, Insights, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Luxury, maharashtra, Manufacturing, Metro, Mumbai, Necessity, Need, Needy, Numbers, Op-Ed, Percentages, Policy, Poor, Poverty, Power, Pune, Purchasing, Recession, Rich, Rural, Schemes, service, SEZ, Society, Stagflation, States, Statistics, Stats, Suburban, Survey, UP, Utharkhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Village, WB, Wealthy, Welfare | Leave a Comment »

Health ministers meeting on polio eradication on June 6

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு

புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • உத்தரப் பிரதேசம்,
  • பிகார்,
  • தில்லி,
  • ஹரியாணா,
  • பஞ்சாப்,
  • குஜராத்,
  • ராஜஸ்தான்,
  • ஆந்திர பிரதேசம்,
  • மகாராஷ்டிரம் மற்றும்
  • மத்திய பிரதேசம்

ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில்

  1. உ.பி.யில் 36 பேரும்,
  2. பிகாரில் 16 பேரும்,
  3. உத்தரகண்டில் 3 பேரும்,
  4. ஆந்திரத்தில் 2 பேரும்,
  5. ஹரியாணா,
  6. குஜராத்,
  7. மகாராஷ்டிரம்,
  8. ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.

செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Posted in Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra, Andhra Pradesh, AP, Bihar, Delhi, Eradication, Gujarat, Haryana, Health, Healthcare, Immunization, Immunize, Madhya Pradesh, maharashtra, medical, MP, New Delhi, Nigeria, Outbreak, Polio, Prevention, Punjab, Rajasthan, Shot, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, Uttrakand | Leave a Comment »

Two SC judges differ on courts giving directives to Government

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

  • குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
  • அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
  • இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்

என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.

ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது

என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.

எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.

மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.

ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.

Posted in activism, administrators, Allahabad, Bench, Center, Centre, Citizen, Consumer, Consumer Court, Consumer Protection Act, Consumer Rights, Court, CPA, Customer, directives, domain, Government, Govt, High Court, Judges, Jury, Justice, Katju, Law, Lawsuit, legislators, Legislature, Markandey Katju, Order, Party, Politics, Protection, provisions, rights, S.B. Sinha, SC, Sinha, State, temptation, UP, Uttar Pradesh, verdict | Leave a Comment »