Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ. ராஜசேகரனின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பழ. நெடுமாறன் மேலும் பேசியது:

“”தியாகிகளின் தியாகங்களை மதிக்காவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் 14 பேரின் உயிரிழப்புக்கும் பொறுப்பாளி மத்திய அரசுதான். இதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் உணர்த்தப்படும். ராஜசேகரனின் மரணம் ஈடுசெய்ய முடியாததுதான் என்றாலும், அவரது குடும்பச் சூழல் கருதி சிறு உதவியாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் விரைவில் வழங்கப்படும்” என்றார் பழ. நெடுமாறன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: “”இவையெல்லாமும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்றாலும்கூட, தீயில் வெந்து சாக வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது மன வேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பாமக தலைவர் கோ.க. மணி: முத்துக்குமார் தொடங்கி ராஜசேகரன் வரை தீக்குளித்து உயிரிழந்தவர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை வீரமுள்ள, மானமுள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக