Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Loans’ Category

Employment Opportunities & Education Facilities – Job Guarantee Schemes & Export Processing Zones

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பகல் கனவாகும் வேலை வாய்ப்பு

ப.செ. சங்கரநாராயணன்

ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)

இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.

உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.

இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).

இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.

Posted in Agriculture, City, Contract, Contractors, Education, Employment, EPZ, Export, Farmers, Farming, IIM, IIT, Industry, Jobs, Loans, Metro, MNC, Opportunities, SEZ, Suicides, Union, Villages, Work | Leave a Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Kalainjar Mu Karunanidhi – DMK Rule and achievements: Party Conference in Nellai

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

அவர்கள்: கருணாநிதி காட்டம்

Friday, 23 November , 2007, 12:49

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா?

நேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா?

அது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை?

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.

மேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா?

இது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா?

ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா?

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா?.

1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா?

10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா?.

1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா?

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா? மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை? இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான்! அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

இளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.

அதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம்! எங்கும் சமதர்ம சங்க நாதம்! தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு! ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல்! சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்!.

பட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு! சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தி எதிர்ப்பு! சிறைச்சாலை! தாளமுத்து நடராஜன் களப்பலி! தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு! மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி! ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம்! – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா? 84 வயதில்? இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது! நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான்! பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது!

1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார்! என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு! நல் – எண்ணங்களை எங்கணும் நடு! எனத் தீட்டிடுக! தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.

மாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.

மாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது! மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Achievements, Agriculture, Commodity, Conference, DMK, Elections, Farmers, Farming, Freebie, infrastructure, investments, Justifications, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Laments, Loans, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, Marriages, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Stalin, Nellai, News, Party, peasants, Politics, Polls, Poor, Prices, Reports, rice, Rule, Sops, Statements, Thirunelveli, TIDCO, Tirunelveli, TV, Villages, Votes, Weddings, Welfare | Leave a Comment »

Convict to MLAs – State of BJP and Gujarat Police & Politics nexus

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

தினமலர்

காக்கி சட்டையிலிருந்து கதருக்கு மாறும் குஜராத் மாஜி போலீசார்

ஆமதாபாத் :குஜராத்தில், காக்கி சீருடையில் இருந்து அரசியலுக்கு தாவுவது சாதாரணமாக நடந்து வருகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் போலீசார், அரசியலில் வெகு கைத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில், லிம்டி தொகுதியின் காங்., எம்.எல்.ஏ., பவன் பர்வாத், ஆரம்பத்தில் ஆமதாபாத் நகரில் ஏட்டாக பணியாற்றியவர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இந்த போலீஸ் வேலை யே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்தவர், எம்.எல். ஏ.,வாகிவிட்டார்.

இவர் மட்டுமின்றி, இவர் போல ஏராளமானோர், போலீஸ் துறையில் இருந்து அரசியலுக்கு தாவி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், ஆமதாபாத் நகர் சோலா சாலையில் பா.ஜ., தொண்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார் பர்வாத்.

இதற்கு நேரடி சாட்சி பா.ஜ.,வின் இன்னொரு இளம் தொண்டர் அமித் ஷா. ஆனால், கோர்ட்டில் சாட்சியத்தை மாற்றி கூறியதால், பர்வாத் இன்னொரு தண்டனையில் இருந்து தப்பினார்.

இப்போது அமித் ஷாவின் நிலை என்ன தெரியுமா?

அவர் தான் மாநிலத்தின் உள் துறை இணை அமைச்சர்.ஆமதாபாத்தை சேர்ந்த இன்னொரு கான்ஸ்டபிள், ஜெதா பர்வாத்தும், சிறை உடைப்பு குற்றத்துக்காக, கைதியை தப்ப விட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இப்போது தோடா மாவட்டம், ஷெகிரா தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., இவர். இப்போது, இந்த பட்டியலில் இன்னும் பலர் சேர்ந்துள்ளனர்.

சூரத் மாவட்டம் கொரியாசி தொகுதியில் பா.ஜ., டிக்கெட் கேட்டிருப்பவர் சி.ஆர்.பட்டேல். சூரத் நகரில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தவர் இவர். இவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்ததால், 1991ம் ஆண்டில் அரசியலுக்கு தாவிவிட்டார். நாளிதழ் நடத்தி பிரபலமடைந்தார். வைரவிழா கூட்டுறவு வங்கியில் ரூ. 58 கோடி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாததால், ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அனுபவித்த சி.ஆர்.பட்டேல், இப்போது பா.ஜ.,வில் ஒரு முக்கியப் பிரமுகர்.

இவர் முதல்வர் நரேந்திரமோடி தீவிர ஆதரவாளர். அவரை இன்னொரு சத்திரபதி சிவாஜியாக வர்ணிப்பவர். மோடிக்காக பல இயக்கங்களை நடத்தியவர். சமீபத்தில் கூட ஜென்மாஷ்டமியின் போது, மோடியை கடவுள் கிருஷ்ணர் போல சித்தரித்து இளைஞர்களுக்கு 12 ஆயிரம் டி ஷர்ட்கள் வழங்கியவர். இதனால், தனக்கு உறுதியாக, “சீட்’ கிடைக்கும் என்று சி.ஆர்.பட்டேல் நம்புகிறார்.

குட்ச் தொகுதிக்கு பா.ஜ.,வில் சீட் கேட்டு இருப்பவர் ஜயேஷ் காத்வி. இவரும் முன்னாள் கான்ஸ்டபிள் தான். சூரத்தில் வேலை பார்த்துவிட்டு, சாராய வழக்கு காரணமாக, குட்ச்சுக்கு தண்டனை இடம் மாற்றம் பெற்றவர். அரசியலுக்கு தாவிவிட்டதால், இனி போலீஸ் வேலையில் நீடிக்க அவர் விரும்பவில்லை.

ஆமதாபாத் கிரைம் பிராஞ்சில் வேலை பார்த்த பி.கே.ஜடேஜாவும் குட்ச் தொகுதி, “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவர் தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற அடிப்படையிலும், குஜராத் பூகம்பத்தின் போது, புதையுண்ட பகுதிகளில் பொருட்களை திருட முயன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தவர் இவர்.

இதேபோல, எந்த தண்டனையும் பெறாத, சூரத் நகர உதவி போலீஸ் கமிஷனர் எம்.கே.பும்படியாவும், சபர்காந்தா மாவட்டத்தில் பா.ஜ.,வில், “சீட்’ கேட்டிருக்கிறார். தனக்கு எப்படியும், “சீட்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது போலீஸ் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

மறைந்த சிமன்பாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எம்.ஷா, தனது சொந்த தொகுதியான தான்துகாவில் காங்., “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegations, Arrest, Belief, BJP, Bribe, Bribery, Campaign, Congress, Convict, Correctional Forces, Corrupt, Corruption, crimes, Elections, Employment, escape, Exploit, Finance, God, Gujarat, Hinduism, Hindutva, inmates, Jail, job, Justice, kickbacks, Kutch, Law, Loans, MLA, Modi, MP, Narendhra Modi, Narendra Modi, Narenthira Modi, Narenthra Modi, nexus, Order, Police, Politics, Polls, Power, Prison, Prisoners, Religion, resign, resignation, Retired, Scams, State, Surat, Suspend, Suspension, Vote, voters | Leave a Comment »

Agricultural Loans – Rich vs Poor farmers: Banking

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

கைப்புண்ணுக்குக் கண்ணாடி!

sainath_farmer_suicides_agriculture.jpgவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.

ஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.

2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் deaths_suicides_india_farming_peasants.jpgகடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, more_deaths_dead.jpgஇரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.

எங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

—————————————————————————————————————————————————

விவசாயத்தில் ரசாயனங்கள் ஆதிக்கம்

இரா. மகாதேவன்

இயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

விவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.

நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.

இந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.

விவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.

இயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.

உதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.

ஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.

இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.

இயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

நவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

கடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.

இந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.

சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.

அவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.

வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.

ரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.

—————————————————————————————————————————————————-

தேவை புதியதொரு பார்வை!

எம். ரமேஷ்

ஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.

இந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.

பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.

நேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.

மானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.

இது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

உரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.

60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை?

1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது? 2007-ல் எப்படியிருக்கிறது? 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா? இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன? அது சேராததற்கு என்ன காரணம்? இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே? ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.

மானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.

நிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.

உலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

——————————————————————————————————————
விவசாயக் கடன் யாருக்கு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா? விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா? “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்?

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.

1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.

2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.

ஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது?

விவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.

இந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

ஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.

விவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.

எப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.

பல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.

எனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

——————————————————————————————————————

Posted in Agriculture, Artificial, Assets, Banking, Banks, BT, chemicals, Commerce, dead, Death, Economy, Farmers, Farming, Farmlands, Fertilizers, genes, Heritage, Inorganic, Labor, Land, Loans, Modern, Monsanto, Natural, organic, peasants, Suicide, Tariffs, Tax, Urea, Vidarba, Vidarbha, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Villages, Vitharabha, Vitharba, Vitharbha | Leave a Comment »

State of Job Growth in India – Employment & Business Opportunities

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2007

வேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை!

எஸ். கோபாலகிருஷ்ணன்


இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.

இங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.

முதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

இரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது? வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.

மூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.

அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.

அதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது? இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.

ஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.

ஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Posted in Biz, Business, City, Commerce, Compensation, Divide, Economy, employee, Employers, Employment, GDP, Growth, Industry, Jobs, Loans, Metro, Poor, Rich, Rural, Self-employed, Small Business, unemployment, Village, Villages | Leave a Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Self-suffiency in Foodgrain Production – KB Prabhakaran

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

உணவு தன்னிறைவு… நிஜமா?

கே.பி. பிரபாகரன்

நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.

எந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.

1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.

விளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.

உணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.

பெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.

இதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள்ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.

இவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.

இந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.

உணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.

ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன?

கிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே!

——————————————————————————————————————-

வேளாண்மை மேம்பட..!

சி. வேழவேந்தன்

நமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.

கிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.

நஷ்டமானாலும் பரவாயில்லை, தமது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.

இன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.

விவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.

கட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.

இந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.

நிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.

சில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.

Posted in Agriculture, Apples, Arid, Australia, Bengal, China, Commerce, Dhal, Drought, Eat, Economy, Farmer, Farming, Flood, Food, Foodgrain, Foodgrains, GDP, Grains, Grams, Growth, GWB, Loans, Orissa, Policy, Poor, Rains, rice, Rich, Storage, Sudeshi, Sudesi, Sudheshi, Sudhesi, Suicides, Swaminathan, Tamil, Tariffs, Tax, Vidharba, Vidharbha, Vietnam, Vitharba, Vitharbha, War, WB, Wheat | Leave a Comment »

Remove ban on milk powder exports

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்!

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.

குளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.

பாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.

விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.

“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.

இலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.

தொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.

கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.

அமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Posted in Assets, Assistance, Commerce, Coop, Coops, Cows, dairy, Drink, Economy, Exports, Farming, Fees, Industry, Law, Liquid, Loans, Manufacturer, Manufacturing, Marketing, milk, Order, Powder, Price, quantity, retail, revenue, Skimmed, Surplus, Tariff, Tax | Leave a Comment »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

International Financial Instituitions and their influence in Indian Govt Policymaking

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

வரலாறு திரும்பிவிடக் கூடாது!

அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

அடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.

விஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா? “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது!’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம்? கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்?

இந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்!

——————————————————————————————————————

அமெரிக்காவைப் பின்பற்றலாமே…!

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.

மற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.

தற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.

8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.

தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன்? நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா?

——————————————————————————————————————

Posted in Agriculture, Assets, bank, Banking, Banks, Big, City, Commerce, Deflation, Dept, Development, Economy, Farming, Foreign, GDP, Govt, Growth, History, Index, Indices, Inflation, Loans, Metro, nexus, Opportunity, Policy, Poor, RBI, Recession, Rich, Rural, solutions, Stagflation, Suburban, Syndicate, Village, WB, World | Leave a Comment »

Rupee full convertibility – American sub-prime Mortgage Loan imbroglio: Economic Analysis

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

ரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்

எஸ். கோபாலகிருஷ்ணன்

நல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது!

அண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது! ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன? தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.

இப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.

ஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.

இன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.

ஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

கடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.

மூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).

Posted in America, Analysis, Assets, Banks, Cash, Commerce, Deflation, Economics, Economy, Inflation, Loan, Loans, Mortgage, Recession, Rupee, Rupees, Stagflation, USA | Leave a Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »