Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Anbumani’ Category

DK vs PMK – DMK, Kalainjar Karunanidhi x Pattali Makkal Katchi Ramadoss

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு!

கலி. பூங்குன்றன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

வீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).

இதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா? இவருக்குத் தகுதி உண்டா? என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.

என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நாங்கள் யார் தெரியுமா? என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.

தோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்!

தனிப்பட்ட பிரச்சினையா?
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும்? காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே!

பிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு? அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா? விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா?

ஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே! திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன்? திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்? அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா? தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.

உண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா? உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.

அதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு? இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.

எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா? என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.
நாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.

பெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே!

எந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.

யாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம்?. ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

திராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா?
திராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.

திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என்ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.

தந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.
நீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா? வெகுதூரம் போவானேன்? பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா? அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ!

பல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.

சமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா? அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா? திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா?

தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம்! ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.

பார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்?
பெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே? பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா?

கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா?

எல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.
(துக்ளக், 15.4.1988)

இப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கைக்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!
பார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம்! பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது!

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)

பேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா? பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா?

வி.பி. சிங் அழுகிய பழமாம்!
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.

ஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா?

இதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.

அதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே! அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே!

மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.

ஆள்காட்டி வேலை
ஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க!).

பிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி! (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? புலிகளின் சரணாகதி என்பதுதான்.

அதைவிட ஒரு துரோகம்! (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா!) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்!

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).

இது துரோகமா? அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா?

10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா?
இத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே! ஆனால், இவருடைய நிலை என்ன? இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது!

இதோ ஒரு எம்டன் குண்டு!
1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா? சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.

போயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா? என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.

சரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா? அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்…! என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா? நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

இதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.

1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.

அண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆசிரியர் வீரமணிபற்றி எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.

வருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே! திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா?

31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா? நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ! அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா? (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).

பா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்!).
69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.

விடுதலை ஆக தூதுவிட்டது யார்?
எப்படியிருக்கிறது கதை? எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்!

யார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.

கலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாட்டையடி – நினைவிருக்கிறதா?
அரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு! என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.

அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே! அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே!

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்!

நானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்! என்று பறைசாற்றியவரும் இவரே!

அடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ!

எவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.

விபூதி வீரமுத்துசாமி பாணியா?
கருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம்! அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்!

Posted in Anbumani, Anna, Contradictions, DK, Dravidar Kazhagam, EVR, family, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MGR, MK, Party, Pattali Makkal Katchi, Periyar, PMK, Politics, Ramadoss, TamilNadu, Veeramani, Viduthalai | 2 Comments »

Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 6, 2008

இது என்ன விபரீதம்?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

தாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது?

இதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை?

——————————————————————————————————–

ஆரம்ப சுகாதார நிலையங்களில்
1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்

ஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்

சென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.

அதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.

6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்

11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.

பேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.

——————————————————————————————————————
ஆரம்பமே சுகாதாரமாக இல்லை!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.

ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.

சுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.

நம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.

நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.

வளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Posted in Anbumani, Awareness, Birth, Care, Chennai, Child, Childbirth, Children, City, Contract, Contractors, DMK, Doc, Docs, doctors, Employment, Experience, Free, Full-time, GH, Govt, Health, Healthcare, Hospital, Hygiene, Immunization, Jobs, Kids, Labor, Labour, M.R.K.Paneerselvam, Madras, medical, Medicine, Metro, MRK Paneerselvam, newborns, Nurses, Pamphlets, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Part-time, PMK, Policy, Polio, Poor, Pregnancy, Prenatal, Ramadoss, Rural, service, Shortage, TN, vaccinations, Vaccines, Villages, Work, workers | 1 Comment »

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Arrangements, Azagiri, Azakiri, Azhagiri, Coalition, Conference, Details, DMK, Election, Issues, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuppasaami, Karuppasaamy, Karuppasami, Karuppasamy, Karuppasamy Pandian, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, MK Alagiri, MK Alakiri, MK Azhakiri, MK Stalin, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Pandian, Politics, Polls, Power, Preparations, Stalin, Students, Thirunelveli, Tirunelveli, V Karuppasamy Pandian, Votes, Youth | 3 Comments »

Makkal TV – Advertisement costs, Special Programmes: Info

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

Makkal TV Logo

makkal TV Programming Offerings Telecast

Makkal TV Ad Rates Tariff Product Promotions

Posted in Ads, Advertisement, Advertisements, Advt, Anbumani, Info, Makkal, Media, PMK, Product, Programmes, Promotions, Ramadas, Ramadoss, Rates, Serials, Tariffs, TV, Viewers, Viewrs | Leave a Comment »

PMK Ramadoss to lead protest against NLC land acquisition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

கேள்விக்குறியாகும் என்.எல்.சி.யின் எதிர்காலம்

என்.முருகவேல்

நெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.

இதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.

2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.

இதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.

இதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.

இதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.

மேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்

“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.

கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.

ஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.

இந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளனர்.

அடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் கடந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.

நிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.

அதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

———————————————————————————————————————————

நிலத்திற்கு நிலம்!

கே.எஸ். அழகிரி

அரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.

விவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.

ஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.

நிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.

ஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன? நிலத்திற்குப் பதில் நிலம்!

1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.

ஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.

அதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.

நெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.

ஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.

ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

நிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.

பொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

விவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் தகுதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.

இவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.

அணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)

Posted in acquisition, Agriculture, Anbumani, arbitrary, Arbitration, Asset, Ban, Bengal, Coal, Commerce, Compensation, Deplete, Depletion, Economy, Electricity, Employment, Farmer, Fight, Govt, Industry, Insurance, Irrigation, Jobs, Land, Lignite, Management, Megawatt, Mgmt, Mine, Minerals, MW, Nandigram, Neiveli, Neyveli, Neyveli Lignite Corporation, peasants, PMK, Power, Private, Protest, Public, Ramadas, Ramadoss, resettlement, rights, Rural, Security, Settlement, Stocks, Strike, Thermal, Trade Union, TU, Union, Uzhavar Paadhukappu Peravai, Valuation, Village, villagers, WB, Work, Worker | Leave a Comment »

Caste-related violence in Madurai – Dalit Lawyer gets abused by PMK Secretary

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு – மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

Posted in Anbumani, Attorney, backward, BC, Caste, Community, Dalit, Discrimination, DPI, Elections, GK Mani, Harijan, Hindu, Hinduism, Law, Lawyer, Madurai, Mani, MBC, MLC, Mob, OBC, Oppression, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Party, PI, PMK, Police, Polls, Ramadas, Ramadoss, Religion, Reservations, Reserved, Samaianalloor, Samaianallur, Samayanalloor, Samayanallur, SC, scheduled castes, Supremacy, untouchable, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

The importance of Sanitary Inspections on Food joints – Health Hazards of Restaurants

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

தேவை விழிப்புணர்வு!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.

மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.

ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.

உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?

எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?

Posted in Anbumani, Awareness, Bacteria, bacterial, Clean, College, Consumers, dead, Dengue, Dine, Disease, Doc, doctors, Drinking, Eat, Eatery, Education, employees, Fever, Food, Germs, Hotel, Hygiene, Infection, Inspections, Kareema, medical, Mosquito, Nurses, Purity, Ramadas, Restaurants, Sanitary, SMC, Society, Stanley, Student, Treatment, Viral, Virus, Water, Welfare | Leave a Comment »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Makkal Tholaikkatchi in Second Year – ‘No compromise TV’: PMK’s Ramadoss

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 2, 2007

2-ம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள்; இதில் சமரசம் இல்லை: ராமதாஸ்

சென்னை, செப். 2: மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி ராமதாஸ் கூறியதாவது: தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள்.

மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

வீரப்பன் தொடர்: இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் “வெங்காயம்’ வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக “ஏலேலங்கடி… ஏலேலோ.’ வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் “கைமணம்’ இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி “கோக்’ “பெப்சி’ போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம்.

தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.

——————————————————————————————
தமிழ் மொழி மூலம் டி.வி. சேனல் வெற்றி பெற முடியும்

சென்னை, செப். 7: ஆங்கிலக் கலப்பின்றி தமிழ் மொழி மூலம் நடத்தப்படும் தொலைக்காட்சியும் வெற்றி பெற முடியும் என்பதை மக் கள் தொலைக்காட்சி நிரூபித்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை காமராஜர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மக் கள் தொலைக்காட்சியின் இரண் டாம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசியது: ஒரு காலத்தில் ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் நாம் இருந் தோம். ஆனால் இன்று ஆங்கில மொழி கலப்பின்றி தமிழ் பேச முடி யுமா என்ற சூழல் எழுந்து, இது ஆங்கிலத்தை எதிர்க்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
இயல்பு தமிழில் பேச்சு மொழி யில் தொலைக்காட்சி நிகழ்ச்சி களை மட்டுமே நடத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கப் பட்டது மக்கள் தொலைக்காட்சி.

இது வணிக ரீதியில் வெற்றி பெறுமா? என்பது ஆதரவாளர்க ளின் ஏக்கம். வெற்றி பெறாது என் பது போட்டியாளர்களின் கருத்து.
ஆனால் இன்று வணிக ரீதியிலும் வெற்றி பெற முடியும் என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது.

சினிமாத் தனம் இல்லாமல், மெகா டி.வி. தொடர் நிகழ்ச்சிகள் இல்லாமல் தொலைக்காட்சி நடத்த முடியும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தற்போது உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எவ்வித ஆபாசமும் இன்றி வெளி யாகும் ஒரே சேனல் மக்கள் தொலைக்காட்சி என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. அரைகுறை, ஆபாச விளம்பரங்கள் தவிர்க்கப்படுகின் றன. பன்னாட்டு நிறுவனங்களான கோக், பெப்சி விளம்பரங்களை ஏற் பதில்லை. அதேசமயம் உள்ளூர் பானங்களின் விளம்பரங்களை ஏற் கிறோம்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்தி ரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் இப்போது தமிழ் மொழிக்காக நடத்தப்படும் இந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தோடு, தங்களது குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். விரைவிலேயே மலே சியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுக ளில் வாழும் தமிழ் மக்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வகை செய்யப்பட்டு வருகி றது.

விளம்பரங்களை வெளியிடுவ தில் நாங்கள் மேற்கொண்ட நடவ டிக்கைகள் இதை நெறிப்படுத்து கின்றன. ஆபாச விளம்பரம் வேண் டாம், மதம், சாதி சார்ந்த பூசல்க ளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் வேண்டாம், அறிவியல் ரீதியில் நிரூ பிக்கப்படாத மருத்துவ நிகழ்ச்சி களை ஒளிபரப்பக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்து அதன் படி செயலாற்றுகிறோம். இந்த கொள்கைகளிலிருந்து ஒரு போதும் நாங்கள் மாற மாட் டோம், தொடர்ந்து வெற்றி பெறு வோம் என்றார் ராமதாஸ்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்களிடையே பொது அறிவை வளர்க்க, விழிப்பு ணர்வை ஏற்படுத்த உதவும் ஒரு ஊடகமாக டி.வி. விளங்குகிறது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி இதுவரை 16,36,853 டி.விக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் மேலும் 30 லட் சம் டிவிக்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள் ளது. கடந்த 20 ஆண்டுகளில் டி.வி.
வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள் ளது.
சமுதாயத்துக்கு பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை அளிக்கும், வழிகாட் டும் மக்கள் தொலைக்காட்சியின் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்து கள் என்றார்.

விழாவில் “அழகின் சிரிப்பு’ என்ற குறுந்தகடை மத்திய அமைச்சர் அன்புமணி வெளி யிட அதை விடுதலை சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி யின் மாநிலத் தலைவர் எம்.
கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொலைக்காட்சியின் 2-ம் ஆண்டு விழாவில்
“அழகின் சிரிப்பு’ என்ற சி.டியை மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வெளியிட, அதை
பெறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன். உடன்
(இடமிருந்து) பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி, மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ்,
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய
நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்.

Posted in Anbumani, Makkal, Media, PMK, Ramadas, Ramadoss, Serials, TV | 6 Comments »

TV wars of Tamil Nadu: DMK vs ADMK vs Congress vs PMK

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

அரசியல் சார்புடன் மேலும் 3 அலைவரிசைகள்: தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது “தொலைக்காட்சிப் போர்’

புதுதில்லி, ஆக. 13: அரசியல் சார்புடன் புதிதாக மேலும் 3 தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் போர் தீவிரமடைகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தொடங்கும் “கலைஞர் டிவி’, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தங்கபாலு தொடங்க உள்ள “மெகா டிவி’ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்க உள்ள “வசந்த் டிவி’ ஆகிய மூன்றும் விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளன. இவற்றில், “மெகா டிவி’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், “கலைஞர் டிவி’ செப்டம்பர் 15-ம் தேதியும் ஒளிபரப்பைத் தொடங்குகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தமக்கென ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கெனவே ஜெயா டிவியை நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் குரலாக 2006 முதல் “மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பாகி வருகிறது.

“இந்தப் போக்கு ஆரோக்கியமானதும் அல்ல; போட்டிச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த முயற்சிகள் எதுவும் வணிக அடிப்படையில் வெற்றிபெறப் போவதில்லை.

தொலைக்காட்சி என்ற வலிமைமிக்க ஊடகத்தை, ஒரு குறிப்பிட்ட ஆள் அல்லது கட்சியின் கருத்துகளை பரப்புவதற்குத்தான் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் மத்தியில் தமது கருத்துகளைத் திணிப்பதற்கு இந்த அலைவரிசைகள் முயற்சி செய்யும்’ என பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆசியுடன் “வசந்த் டிவி’ தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறியுள்ளார் வசந்தகுமார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்திவருகிறார்.

“ஒரு நாளுக்கு 6 முறை செய்தி ஒளிபரப்புடன் கூடிய, 24 மணி நேர பொழுதுபோக்கு அலைவரிசையாக வசந்த் டிவி இருக்கும். எமது செய்திகளில் காங்கிரஸ் தொடர்பான குறிப்பாக சோனியா காந்தி தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி அன்றாடம் இடம்பெறும்’ என்று கூறும் வசந்தகுமார், “தனது அலைவரிசை வணிக அடிப்படையிலும் வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு வரும் சன் டிவியும் ஜெயா டிவியும் தொலைக்காட்சி மூலம் அரசியல் யுத்தம் நடத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும் அரசியல் லாவணியை இவை நடத்தும்.

கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் (கலாநிதி, தயாநிதி) சகோதரர்களுக்கும் இடையே வெடித்த குடும்பச் சண்டையால், மற்றொரு முன்னணி அலைவரிசையான ராஜ் டிவி திமுக ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது. ராஜ் டிவிதான் கலைஞர் டிவிக்கு வேண்டிய அனைத்து ஒளிபரப்பு ஒத்தாசைகளையும் செய்து வருகிறது.

“மக்களை ஏமாற்ற முடியாது. உண்மைக்கும், பொய்ச் செய்திக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பகுத்துப் பார்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு. செய்தியின் உண்மைநிலை ஐயத்துக்கிடமானதாக மாறும்போது உடனடியாக பார்வையாளர் வேறு அலைவரிசைக்குச் சென்று, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்’ என்கிறார் சோ.

“மக்கள் தொலைக்காட்சி, அரசியல் அலைவரிசை அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில்லை. செய்தியை அரசியலுக்காகத் திரிப்பதில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பிற அலைவரிசைகள் சீரழிக்கும் தமிழ்ப் பண்பாட்டை மக்கள் தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை குறிப்பாக செய்திகளை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த அலுவலர் ஒருவர்.

Posted in abuse, ADMK, Anbumani, Cho, Color TVs, Colour TV, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamalar, DMK, Entertainment, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Makkal, Makkal TV, Manipulation, Media, MSM, News, PMK, Power, Ramadas, Ramadass, Ramadoss, Tamil Nadu, TamilNadu, Television, Thangabalu, Thankabalu, Thuglaq, TN, Vasanth, Vasanth&Co, Wars | Leave a Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

State of MBBS – Analysis on Medical education

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

எம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை

ஜே. ரங்கராஜன்

கம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.

இந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை

  • 1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,
  • அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),
  • வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),
  • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • கோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)

ஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.

1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.

2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

வேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.

இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.

அரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.

இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

————————————————————————————————

அட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.

பிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.

இதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.

தகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

——————————————————————————————————

“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

சென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
——————————————————————————————————————————–

எகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை

சென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.

  • சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,
  • கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,
  • கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி

என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  1. செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,
  2. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  3. ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  4. பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.

கட்டணம் உயர்ந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.

புதிய கட்டணம் என்ன?

இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.

பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.

————————————————————————————-

தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.

———————————————————————————————————-

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு

சென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.

இதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.

பிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டணப் பிரச்சினை:

ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.

இந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

————————————————————————————————–

கொள்ளை போகும் உயர் கல்வி
குமுதம்
சாவித்திரி கண்ணன்
18.07.07 கவர் ஸ்டோரி

‘‘நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா?’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.

இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி!’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.

அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.

அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.

மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

கல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்!

‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா?’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.

மற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.

நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?

1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.

இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.

‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன்? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.

1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.

மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன? வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!

—————————————————————————————————————————-
சுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.

மொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.

எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
—————————————————————————————————————————-
ஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி

சென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

மேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.

2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா?

நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.

2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.

மேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.
—————————————————————————————————————————-

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————
Monday November 26 2007

மக்களுக்காக மருத்துவம்சார் கல்வி

எஸ். மணிவாசகம்

மருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.

மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

ஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

மருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.

பல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.

கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.

கிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.

பிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.

செவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.

அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————-

“கிராமப்புற சேவை’யின் மறுபக்கம்

சி. கதிரவன்

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.

கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன?

மருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.

அமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.

நம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.

இந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.

கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.

இதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்?

உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.

வேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.

மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.

Posted in abuse, Admissions, ADMK, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Anna, Anniyan, Assets, BE, Bribes, BTech, Caste, Chemical, Chennai, Chettinaadu, Chettinadu, Civil, Coimbatore, Colleges, Combatore, Community, computers, Corruption, DMK, Doc, doctors, Donations, DOTE, ECE, Education, EEE, Electrical, Electronics, Engg, Engineering, Expense, Exploit, Gentleman, Healthcare, IIT, Instru, Instrumentation, Interest, kickbacks, Kovai, Kulasegaram, Kulasekaram, Kumudam, Kumudham, Loans, MBBS, MD, medical, MMC, Moogamibigai, Moogamibikai, Mookamibigai, Mookamibikai, Operation, Perundhurai, Perundurai, Perunthurai, PMK, Poor, professional, PSG, Quota, Ramadas, Ramadoss, Rates, RBI, REC, Rich, SBI, Schools, service, Shankar, Sivaji, Software, Students, Study, surgery, Technology, University, Wealthy | 2 Comments »

Health ministers meeting on polio eradication on June 6

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு

புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • உத்தரப் பிரதேசம்,
  • பிகார்,
  • தில்லி,
  • ஹரியாணா,
  • பஞ்சாப்,
  • குஜராத்,
  • ராஜஸ்தான்,
  • ஆந்திர பிரதேசம்,
  • மகாராஷ்டிரம் மற்றும்
  • மத்திய பிரதேசம்

ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில்

  1. உ.பி.யில் 36 பேரும்,
  2. பிகாரில் 16 பேரும்,
  3. உத்தரகண்டில் 3 பேரும்,
  4. ஆந்திரத்தில் 2 பேரும்,
  5. ஹரியாணா,
  6. குஜராத்,
  7. மகாராஷ்டிரம்,
  8. ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.

செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Posted in Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra, Andhra Pradesh, AP, Bihar, Delhi, Eradication, Gujarat, Haryana, Health, Healthcare, Immunization, Immunize, Madhya Pradesh, maharashtra, medical, MP, New Delhi, Nigeria, Outbreak, Polio, Prevention, Punjab, Rajasthan, Shot, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, Uttrakand | Leave a Comment »

The rise and fall of Dayanidhi Maran – Biosketch

Posted by Snapjudge மேல் மே 14, 2007

பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் பதவி இழப்பு

சென்னை, மே 14: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 3 ஆண்டுகளில் தனது பதவியை இழக்கிறார்.

முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதி மாறன். 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சன் டி.வி. நிர்வாகத்தின் அங்கமான சுமங்கலி கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் தயாநிதி மாறன்.

அரசியலுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைத்த அவருக்கு, அமோக வெற்றியை மத்திய சென்னை வாக்காளர்கள் அள்ளித் தந்தனர்.

தொடர்ந்து, மத்தியில் அமைந்த கூட்டணி அமைச்சரவையில், மிக முக்கிய பொறுப்பான தகவல் தொழில்நுட்பத் துறை இவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் ஆசியுடன் மிகக் குறுகிய காலத்தில் இவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக வளர்ந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரானார்.

ஒரு கருத்துக்கணிப்பின் விளைவாகத் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்சிக் குழப்பத்தில் நாலாவது நாளில் பதவி பறிக்கப்படுகிறார் தயாநிதி மாறன்.
———————————————————————————————————-

கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.

கடந்த 26 மாதங்களில் என் துறை மூலம் நம் நாட்டுக்கு 2 லட்சத்து 66 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இதில் பெரும் பகுதி நமது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் என் தலைவரும், பிரதமரும், சோனியா காந்தியும் அளித்த வாய்ப்புதான்.
———————————————————————————————————-
தயாநிதி மாறன் பதவி யாருக்கு கிடைக்கும்?:

அழகிரிக்கோ அவரது ஆதரவாளருக்கோ கிடைக்கலாம் ::

பா. ஜெகதீசன்

சென்னை, மே 14மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துவிட்டார்.

இந் நிலையில், இதுவரை அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வரத் தொடங்கி உள்ளன.

தயாநிதிக்கு பதிலாக அவர் வகித்த பதவிக்கு திமுகவின் மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலு, அ. ராசா ஆகியோரில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு தரப்படலாம் என அக்கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

மன்னிப்பு கிடைக்குமா:

Mallikaதயாநிதி மாறனின் தாய் மல்லிகா மாறன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் சென்னைக்கு திரும்பியதும் அவரும், தயாநிதி மாறனும், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடைபெறும்போது இப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக தொடர்ந்து நீடிக்கும் சாத்தியம் உள்ளது.

இதற்கு ஒரு முன்னுதாரணமாக, திமுகவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூருகின்றனர்.

கடந்த 2001-ல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் செயல்பட்டனர்.

இதனால், தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக தோல்வியைத் தழுவியது.

அப்போது கட்சியில் அழகிரிக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டு அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றுகூட திமுக தலைமை கூறியது. ஆனால், சிலமாதங்கள் சென்றபின் நிலைமை மாறியது.

2002 பிப்ரவரியில் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அழகிரி பிரசாரம் செய்தார். அத்தேர்தலில் தனது மனைவியுடன் வீடு வீடாகச் சென்று அழகிரி வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவில் தனக்கு இருந்த செல்வாக்கை அழகிரி வலுப்படுத்திக் கொண்டார் என்பதை திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அழகிரிக்கு சாதகம்:

இதற்கிடையே அழகிரியோ அல்லது அவர் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர் ஒருவரையோ தயாநிதி மாறன் வகித்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மத்திய அமைச்சராக நியமிக்கப்படுபவர் வரும் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

நாடார் சமுதாயத்துக்குப் பிரதிநிதித்தும் கிடைக்குமா?

மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், சமீபத்தில் காமராஜரின் பெயரை முன்னிறுத்தி நடிகர் சரத்குமார் மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் திமுக செயல்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள

  • தினகரன் பத்திரிகையின் முன்னாள் உரிமையாளர் குமரன்,
  • வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்கு தயாநிதி மாறன் வகித்த பதவி கிடைக்கக் கூடும்.

குமரன், சண்முகசுந்தரம் ஆகிய இருவரின் பதவிக்காலமும் வரும் ஜூலையுடன் முடிகிறது. இருந்தாலும் மத்திய அமைச்சராக, இருவரில் எவர் நியமிக்கப்படுகிறாரோ அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.
———————————————————————————————————-
அப்பாவைப் போல இல்லையே பிள்ளை!

சென்னை, மே 14: திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற நண்பனாகவும், அவர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தும் தொண்டராகவும், சிக்கலான கட்டங்களில் ஆலோசனை கூறும் மதியூகியாகவும், அரசியல்ரீதியான சந்திப்புகளுக்கு முக்கியத் தலைவர்களை அணுகக்கூடிய நம்பத்தகுந்த தூதராகவும் செயல்பட்டவர் முரசொலி மாறன்.

கருணாநிதியின் சகோதரி மகன் என்ற உறவு இருந்தாலும் பிற தலைவர்களைப் போலவே அவரிடம் பழகி, அவருடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். தில்லியில் திமுகவின் செல்வாக்குள்ள பிரதிநிதியாகத் திகழ்ந்த போதிலும் அதில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு தேடாமல் அனைத்தையும் கட்சிக்கென்றே பயன்படுத்தினார் முரசொலி மாறன். அவருடைய மறைவு திமுக தலைவருக்கு தாங்கமுடியாத பேரிழப்புதான்.

இந் நிலையில்தான், வயதில் இளைஞராக, அரசியல் அனுபவம் ஏதும் இல்லாதவராக, பார்ப்பதற்கு விளையாட்டுப் பிள்ளையாக இருந்த தயாநிதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க கருணாநிதி முடிவு செய்தார். அதில் வெற்றி கண்டாலும், முரசொலி மாறனைப் போல அல்ல தயாநிதி மாறன் என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டார்.

தனக்கென்று அதிகார மையத்தை ஏற்படுத்த முரசொலி மாறன் விரும்பியதில்லை, ஆனால் தயாநிதியோ அப்படியல்ல. தயாநிதியின் அண்ணன் கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக்கணிப்புகள், அவருடைய பதவி ஆசையைக் காட்டுவதாகவே கருதப்பட்டன. கழகக் குடும்பத்தின் மூத்த தலைவர் வாழும் காலத்திலேயே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடப்பார் என்ற கேள்வி பிறக்கிறது. எனவே அவரைத் தண்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தில்லியில் நிறைவேற்ற வேண்டிய வேலைகளுக்கு தயாநிதியை, கருணாநிதி மிகவும் நம்பியிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக, அதே போல நம்பிக்கைக்குரிய ஒருவர் தேவை. முன்னர் டி.ஆர்.பாலு இந்த வேலைகளைச் செய்துவந்தார். ஆனால் கருணாநிதி “”முழு நம்பிக்கை” வைக்கும் அளவுக்கு ஒருவர் தேவைப்படுகிறார். அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் அவருடைய மகள் கனிமொழி. பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட அவருக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் கருணாநிதி. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி இருந்தால் வியப்பதற்கு ஏதும் இல்லை.
———————————————————————————————–
கட்சிக்கும், ஆட்சிக்கும் பகையை வளர்த்ததால் தான் இந்த கதி: தயாநிதி நீக்கத்தின் பின்னணி நமது சிறப்பு நிருபர்

அனைத்து தரப்பையும் பகைத்துக் கொண்டது, கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்தது, டில்லி செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்றவையே தயாநிதி நீக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட தயாநிதி, முதல் முறையாக எம்.பி.,யானதும் மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையை இவருக்காக தி.மு.க., தலைவர் கேட்டுப் பெற்றார். மத்திய அமைச்சராக்கியதோடு மட்டுமன்றி, பிரதமர், சோனியா மற்றும் தேசிய தலைவர்களுடன் தி.மு.க., சார்பில் பேசுவதற்கும் தகவல்களை பரிமாறுவதற்கும் தயாநிதியை பயன்படுத்தினார். இதனால் டில்லி வட்டாரத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தயாநிதிக்கு கிடைத்தது. ஆனால், ஆரம்பம் முதல் இவரது செயல்பாடு பல்வேறு பிரிவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக,

  • சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தயாநிதியின் செயல்பாட்டை விமர்சித்தே தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அமைந்தது.
  • பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை மிரட்டிய விவகாரம்,
  • தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பகைத்துக் கொண்டது போன்றவை அ.தி.மு.க.,
  • கூட்டணி 69 இடங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின் கட்சிக்குள்ளேயே இவர் மீது அதிருப்தி அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக, முதல்வரின் வாரிசாக கருதப்படும் ஸ்டாலினுக்கும், தயாநிதிக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் மறைமுக மோதல் நடந்தது. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களுக்கு எதிராக அவர்களது பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது, ஸ்டாலினின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது போன்றவை கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முறையிட்ட போதெல்லாம் முதல்வர் சமரசப்படுத்தி வந்துள்ளார்.

கடைசியாக, கடந்த மார்ச் முதல் தேதியன்று ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய போது தி.மு.க.,வின் அனைத்து நிர்வாகிகளும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், கலாநிதியோ, தயாநிதியோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் மதுரையில் இருந்து தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அழகிரியுடன் இதுபற்றி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது தவிர கீழ்மட்ட கட்சித் தொண்டர்களுடன் தயாநிதி பழகாமல் இருந்ததுடன், மூத்த தலைவர்களை கண்டுகொள்ளாமல் அரசியல் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க., சார்பாக மத்தியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடையே தயாநிதி ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன

. டி.ஆர்.பாலு, ராஜா, பழனிமாணிக்கம் போன்றவர்களை பல சந்தர்ப்பங்களில் ஓரங்கட்டும் விதமாக செயல்பட்டதால், இவர் மீது அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தயாநிதியை கட்சியில் முன்னிலைப்படுத்தி முதல்வர் கருணாநிதிக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

மாவட்ட செயலர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் “கேபிள் டிவி’ நடத்தும் உரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தயாநிதிக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுவதற்காகவே கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தியதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் தயாநிதியே முதலிடத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு தி.மு.க., கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களை களங்கப்படுத்தியதாக அக்கட்சியினர் கருதினர். அன்புமணியை வேண்டுமென்றே மட்டம் தட்டியிருப்பதாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

————————————————————————————————-

தி.மு.க.,வில் தயாநிதி ஆதரவாளர்களுக்கு கல்தா!: அனுகூலம் பெற்ற அதிகாரிகள் சிக்குகின்றனர்

தயாநிதிக்கு குறுகிய காலத்தில் கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக கட்சியின் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலரும் தயாநிதியின் ஆதரவாளர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தென் மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்கை மீறி, தயாநிதிக்கு, அங்கு, ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை. அதே போல, மூத்த அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் தயாநிதி ஆதரவாளர்கள் உருவாகவில்லை.

இதை மீறி

  • கோவை,
  • நீலகிரி,
  • திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர், தங்களை தயாநிதியின் ஆதரவாளராக முன்னிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.,விற்கு ஏற்பட்ட பெரும் சரிவால் கட்சித் தலைமை பொங்கலுõர் பழனிச்சாமி மேல் கடும் கோபத்தில் இருந்தது. அமைச்சர் பதவி தராமல் அவரை புறக்கணித்தது. தலைமையின் கோபத்தை உணர்ந்த ஸ்டாலின், இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்பவில்லை.

இந்நிலையில், தயாநிதியின் மூலமாக கட்சித் தலைமையை திருப்திபடுத்தி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை காரணம் காட்டி அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க தயாநிதி தான் காரணம் என்பதால், முழுமையாக அவரது ஆதரவாளர் போல் பழனிச்சாமி செயல்பட்டார். மாதத்திற்கு இரு முறை தயாநிதி கோவைக்கு வந்ததால், இந்த உறவு மேலும் பலப்பட்டது. கோவையில் அமையவுள்ள டைடல் பார்க்கை சுற்றியுள்ள நிலங்களை வளைப்பதில் பொங்கலுõர் பழனிச்சாமி பெரிதும் உதவியுள்ளார்.

பழனியின் மகன் பைந்தமிழ் பாரியை கோவை மேயராக்க, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான வீரகோபாலை மாநகராட்சித் தேர்தலில் தோற்கடிக்க, “உள்ளடி வேலை’களைச் செய்தார். இதை தெரிந்து கொண்ட கட்சித் தலைமை, தயாநிதி வற்புறுத்தியும், மேயர் பதவியை பாரிக்கு வழங்க ஒப்புக் கொள்ளவில்லை.

மண்டலத் தலைவராக பொறுப்பேற்ற பாரி, தனது அறையில் தயாநிதியின் போட்டோவை மாட்டியதோடு, இதர கவுன்சிலர்களின் அறைகளிலும் தயாநிதி படம் மாட்ட வேண்டும் என்று வற்புறுத்தி, மாட்டி வைத்து, நன்றி விசுவாசம் காட்டினார்.

பொங்கலுõர் பழனிச்சாமி பல்வேறு தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர் என்பதால், “தொழில் ரீதியாக’ தயாநிதியோடு நெருக்கம் காட்டினார். சமீபத்தில் கோவையில் நடந்த மேம்பால திறப்பு விழாவில், டி.ஆர்.பாலுவை புறக்கணித்து, தயாநிதியைக் கொண்டு விழா நடத்தினார் பழனிச்சாமி.

நகரின் பல இடங்களில் தயாநிதியின் கட் அவுட்டுகள், ஆயிரக்கணக்கான வரவேற்புத் தட்டிகள் என ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தினார். மற்ற தி.மு.க., பிரமுகர்கள் தயாநிதியை நெருங்க விடாமல், தாங்களே ஒட்டுமொத்த ஆதரவாளர் என காட்டிய பெங்கலுõர் பழனிச்சாமி, இப்போது கட்சித் தலைமையின், “ப்ளாக் லிஸ்ட்’டில் இடம் பெற்றுள்ளார்.

அடுத்ததாய், “ப்ளாக் லிஸ்ட்’டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கதர் துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் இடம் பிடித்துள்ளார். இவரும் தயாநிதி ஆதரவாளராக தன்னை முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டியவர். கோத்தகிரியில் இருக்கும் தயாநிதியின் மாமனாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் குடும்பத்தினர் செய்து வந்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஊட்டியில் தயாநிதி முகாமிடும்போதெல்லாம், கூடவே இருந்து குணசேகரன் என்பவர் உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த குணசேகரன் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் சகோதரர். தயாநிதி மேலான அமைச்சரின் பாசம் இப்படி நீடித்து வருகிறது.

அடுத்ததாய், தயாநிதி ஆதரவாளராக, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இருந்துள்ளார். மறைந்த மாறனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், ம.தி.மு.க.,விற்கு போய்விட்டு வந்த நிலையில், தி.மு.க., அமைச்சரவையில் இடம் பிடிக்க தயாநிதி தான் காரணம். இதனால், செல்வராஜ் பெயரும் தயாநிதி ஆதரவாளர் பட்டியலில் உள்ளது.

இது தவிர, சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க., சார்பில் நிதி சப்ளை செய்தவர் என்ற முறையில் தயாநிதிக்கு பல எம்.எல்.ஏ.,க்களின் அறிமுகம் உண்டு. அது தொடர்பான கணக்க வழக்கு விவகாரங்களையும் தயாநிதியே கவனித்ததால், அவர்களின் தொடர்பும் இருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.,க்களின் மீதும் கட்சித் தலைமையின் பார்வை பதிந்துள்ளது.

அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைக் காட்டிலும் தயாநிதியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் தி.மு.க., தலைமை தயாரித்து வருகிறது. இந்த பட்டியலை தயாரிக்கும் நோக்கோடு, உளவுத் துறையில் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி ஜாபர்சேட் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக தயாநிதி பணியாற்றியபோது, டில்லி தொடர்பு மூலம் தமிழகத்தில் பணியாற்றும் பல வடமாநில அதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான பதவிகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பதவி பெற்றவர்களை தயாநிதியின் ஆதரவாளர்களாக அரசு கருதுவதால், எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்ற கலக்கத்தில் இவர்கள் உள்ளனர்.

கட்சியின் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ள தயாநிதி விசுவாசிகள், காவல்துறை, அரசுத் துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் வரை முழுமையான பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. “டிவி’ நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தயாநிதி விசுவாசிகளை கட்டம் கட்டும் பணியை கட்சித் தலைமை தீவிரமாக மேற்கொள்ளுமானால், 50க்கும் மேற்பட்ட, “அதிரடி டிரான்ஸ்பர்’கள் நடக்க வாய்ப்புள்ளது.

————————————————————————————————————

பதவி பறிப்பு – BBC

 

பத்திரிகை எரிப்பில் ஈடுபட்ட மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்

தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்பட்டதும் நேயர்கள் அறிந்ததே

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தமிழோசை ஒலிபரப்பிய பேட்டிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பில் நேயர்கள் கேட்கலாம்.

தினகரன் நாளிதழ் தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இதில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவும், அழகிரிக்கு மிகக் குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தது.

எரிக்கப்பட்ட தினகரன் அலுவலகத்தின் ஒரு பகுதி
எரியூட்டப்பட்ட தினகரன் அலுவலகம்

இதையடுத்து மதுரையிலுள்ள தினகரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் மூவர் பலியாயினர்.

நடைபெற்ற தாக்குதல் குறித்து தினகரன் பத்திரிகையின் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் முத்துப் பாண்டியனின் பேட்டி.

முத்துப்பாண்டியன் பேட்டி

ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இல்லை எனக் கூறுகிறார் மதுரை மேயர் தேன்மொழி. தங்களது எதிர்ப்பை காட்ட பத்திரிகையை எரித்ததாக மட்டுமே அவர் கூறுகிறார்.

தேன் மொழி பேட்டி

இது தினகரன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதனை விட பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுகிறார் தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ்.

 

ரமேஷ் பேட்டி

காவல் துறை தனது கடமையைச் செய்யும் எனவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் தமிழக காவல்துறை தலைவர். இது தொடர்பாக கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காவல்துறை தலைவர் பேட்டி

கோபத்தின் வெளிப்பாடும் பத்திரை எரிப்பும்
கோபத்தின் வெளிப்பாடும் பத்திரிகை எரிப்பும்

இது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை அல்ல, தமிழகத்தை ஆளும் திமுகவின் தலைவரான கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியினால் எழுந்த பிரச்சினை என்றும் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ஞானி

ஞானி பேட்டி

இந்தச் சமபங்களுக்கு பிறகு நடைபெற்ற திமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. இது குறித்து எமது செய்தியாளர் கோபாலனின் செய்திக் குறிப்பு

கோபாலன் செய்திக் குறிப்பு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்க கட்சி எடுத்த முடிவை அடுத்து தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தான் எப்போதுமே திமுக விசுவாசிதான் என்றும் கருணாநிதியே தனது தலைவர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் கட்சி விரோத நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தயநிதி மாறன் பேட்டி

———————————————————————————————————-

07.06.07  கவர் ஸ்டோரி
குமுதம் ரிப்போர்ட்டர்
தயாநிதியின் புதிய அவதாரம்
கலாநிதியின் அதிரடி வியூகம்

அசுரவேகத்தில் கலைஞர்
உஷார்படுத்திய ஜோதிடம்

1997_ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார் முரசொலிமாறன். அப்போது லண்டன் சென்று, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வர்த்தக உறவுகள் பற்றி மாறன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

தனது பயணத்திற்கு முன்பாக குஜ்ராலைச் சந்தித்து ஆலோசனை பெறப் போனார், மாறன். ‘நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சொல்வதுதான் நம் பாலிஸி’ என்று சொல்லி, அவரை வழியனுப்பி வைத்தார் குஜ்ரால். ஒரு பிரதமருக்குரிய அந்தஸ்துடன் அந்தச் சந்திப்பை நிகழ்த்தப் போனார் மாறன்.

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான எண்:10, டவுனிங் தெரு மாளிகைக்குள் நுழையும் முன்பாக, தன்னம்பிக்கைக்காக ‘ஆத்தா! தாத்தா!’ (கலைஞரின் பெற்றோர் அஞ்சுகம் மற்றும் முத்துவேலர்) என்று முனகிக் கொண்டேதான் உள்ளே போனார் மாறன். முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு, லண்டனில் இருந்தே கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

”இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்கும் முன்பாக, உங்கள் வாழ்த்துக்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை. இதற்காக நான் அழுதேன். (இருவருக்கும் கொஞ்சம் ஊடல் இருந்த நேரம் அது…!) நேற்று உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அழுதேன். இது ஆனந்தக் கண்ணீர். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. நான் உங்கள் தயாரிப்பல்லவா!

என் சிந்தை_அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து என் இதயத் துடிப்புகளாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நீங்களும் நானும்தான் இப்படி கண்ணீர்ப் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஏனெனில், இது ரத்த பாசம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் மாறன்.

கலைஞர் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் ஒருசில கடிதங்களில் இதுவும் ஒன்று.

இது நடந்து மிகச் சரியாக பத்தாண்டுகள் கடந்து விட்டன. அதே கலைஞர்… அதே ரத்த உறவுகள். ஆனால், காட்சியும் களமும் மாறிவிட்டன. ஊடல்களைத் தாண்டி உறுதியுடன் நீடித்த மாறனுடனான உறவுபோல அவரது வாரிசுகளுடன் அப்படி இருக்க முடியவில்லை கலைஞரால்! அப்பாவின் ரத்தம்தான் என்றாலும், அவர் போலவே ஓர் உறவை கலைஞருடன் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மாறனின் வாரிசுகளான கலாநிதியும், தயாநிதியும்! தனி சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட மாறனின் வாரிசுகள், தங்களின் தொழில் கட்டமைப்பைக் காப்பாற்றுவது… எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருப்பது என அவர்களுக்குள்ள நிர்ப்பந்தங்களும் இதற்குக் காரணம்.

இந்தப் பின்னணிதான் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் சமீப காலமாக ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வராமல் விரிசலை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இளமையும் துடிப்பும் நிறைந்த மாறனின் வாரிசுகளுக்கு எதிராக, இந்த வயதிலும் கலைஞர் காய் நகர்த்தும் விதமும் வேகமும் அசாத்தியமானவை. பரபரப்புக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லாதவை…!

இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான மனஸ்தாபங்கள் மறைய, மே_28 அன்று நடைபெற்ற மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்த்தார்கள், இருதரப்புக்கும் வேண்டப்பட்ட சிலர். ஆனால், இந்நிகழ்ச்சியை கலைஞரும், ஸ்டாலினும் புறக்கணித்தார்கள். இருந்தபோதும், ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சமாதான முயற்சிகளுக்கு இவர்களின் வருகை ஒரு சிறு துளியளவுக்கு நம்பிக்கை தந்தது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள் சில நலம் விரும்பிகள்.

இதெல்லாம், கலைஞர் தனது டெல்லி விசிட்டை முடித்துக் கொண்டு மே_29 அன்று இரவு சென்னை திரும்பும் வரையில்தான்! அன்றிரவு கோபாலபுரத்தில் இருந்த கலைஞரைச் சந்திக்க ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட சிலர் போயிருக்கிறார்கள். இவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட கலைஞர், ‘அவர்களை அங்கேயே போகச் சொல்லுங்க. இங்கு அவர்களுக்கு என்ன வேலை?’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் போனதுதான் தாத்தாவின் கோபத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் வாரிசுகள், ‘நாங்கள் போனதற்கான காரணம் சமாதானத்திற்காக அல்ல… விரும்பி அழைத்ததை மறுக்க முடியவில்லை. தவிர, இது ஒரு சுபநிகழ்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்திய பிறகே அமைதியாகியிருக்கிறார் கலைஞர்.

” ‘என்னை மீறி யாரும் சமாதான முயற்சிகளில் இறங்கக் கூடாது. அத்தகைய முயற்சிகளை நான் விரும்பவுமில்லை’ என்பதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார் கலைஞர்” என்கிறார் அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு பிரமுகர்.

கொஞ்சம் ஆறப்போட்டால் வேகம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கலைஞரின் இந்த வேகம் ஆச்சர்யத்தைத் தரத் தவறவில்லை. மாறாக, எதிர்ப்பு வேகமும் அதிகரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிதான். இதற்குப் பின்னணியாக, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.

2005 நவம்பரில் சன் டி.வி.யில் தனது பெயரில் இருந்த 20 சதவிகிதப் பங்குகளை மாறன் சகோதரர்களுக்கே விற்றார், கலைஞரின் மனைவி தயாளு அம்மாள். சன் டி.வி.யின் மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் தயாளு அம்மாவின் 20 சதவிகிதப் பங்குகளுக்கான பணம் (சுமார் 200 கோடி) தரப்பட்டது என்றொரு தகவல் உண்டு. பண விவரங்களை வெளியிடாவிட்டாலும், இந்தப் பரிவர்த்தனை விஷயத்தை அப்போதே பத்திரிகையாளர்களிடம் சொன்னார் கலைஞர்.

இது நடந்து இரண்டாண்டுகள் ஆகவுள்ள நிலையில்தான், இப்போது மீண்டும் அந்த விஷயம் கிளறப்பட்டிருக்கிறது. ‘நமது பங்குகளுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து, அதைத் தந்து நம்மை விலக்கி விட்ட பிறகு, சன் டி.வி.யின் மதிப்பு சுமார் ஆறாயிரம் கோடி என்று நிர்ணயித்து பங்குகளை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்’ என்று கலைஞரின் ரத்த உறவுகள் சிலர் கலைஞரிடம் குமுறியிருக்கிறார்கள்.

”இதில் ஓரளவு நியாயமிருப்பதாக உணர்ந்த கலைஞர், சமீபத்தில் மகாபலிபுரத்திற்கு ஓய்வுக்காகச் சென்றபோது, சன் குழுமத்தின் ஆடிட்டரை வரவழைத்து சில விவரங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகே கலைஞரின் கோபம் இன்னும் அதிகமானது” என்கிறார் இந்த சம்பாஷணைகளின் பின்னணிகளை அறிந்த ஒருவர்.

‘பங்குப் பரிவர்த்தனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நியாயப்படியே எல்லாம் நடந்தது’ என்று சன் குழுமத்தினர் தங்கள் தரப்பை மீண்டும் வலியுறுத்திய போதும், தங்கள் ஆடிட்டரையே அழைத்து விசாரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் இருந்த சில கணக்கு வழக்கு விவரங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றில் கொண்டு போய் வைத்தார்கள்.

இந்த விஷயத்தைப் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தோ என்னவோ… புதிதாக தாங்கள் தொடங்கவுள்ள கலைஞர் டி.வி.க்கான ஏற்பாடுகளை முடுக்கி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கலைஞர். சன் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு பங்குதாரராக கலாநிதியுடன் இணைந்து பணியாற்றி, பின்பு பிரிந்துவிட்ட சரத் ரெட்டிதான், கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்காக கலைஞர் தேர்வு செய்திருக்கும் நபர். இவரைத் தேர்வு செய்த போதே கலைஞரின் வேகமும், கோபமும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள் தி.மு.க. முன்னோடிகள். இதே வேகத்தில் கலைஞர் டி.வி.க்கும் சரத்திற்கும் தனித்தனியே அறிவாலயத்தின் கீழ்த்தளத்தில் அறைகளும் ஒதுக்கப்பட்டன.

இவ்வளவு அரசியல் பணிகளுக்கிடையிலும் தினசரி ஓரிரு மணி நேரங்களாவது சரத்துடன் ஆலோசனை நடத்துகிறார். இதுதவிர, புதிய டி.வி.யில் பொழுதுபோக்கு அம்சங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலசந்தர், ராதிகா உள்ளிட்ட சின்னத்திரை ஜாம்பவான்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் கலைஞர்.

இது ஒருபுறம் இருக்க, தங்களின் புதிய சேனலை ஒளிபரப்ப, மாறன் சகோதரர்களின் ஆதிக்கத்தில் உள்ள சுமங்கலி கேபிள்ஸை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதால், தனியாக ஒரு கேபிள் நெட்வொர்க்கைத் தொடங்கவும் யோசனை செய்திருக்கிறார்கள். ஆற்காட்டாரின் தம்பி தேவராஜ் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சமாதான முயற்சிகளைத் தடுப்பது மட்டுமல்ல… அதைச் செய்ய முனைவோர் மீதும் கலைஞர் கோபம் காட்டுகிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் தயாநிதியும் கலாநிதியும். இளமையும், மூளையும் கைகொடுக்க… அவர்களும் சில காய் நகர்த்தல்களைச் செய்யத் தயாராகிறார்கள்.

இதில் முதல் ஸ்டெப் எடுத்து வைத்திருப்பவர் தயாநிதிமாறன். இதற்காக ‘தினகரன் நாளிதழின் நிர்வாகி’ என்ற அடையாளத்தோடு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் தயாநிதி! மே_28 அன்று தனது தங்கையின் வளைகாப்பு முடிந்த உடனேயே, அன்று காலை தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார். ‘இனி நான்தான் நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறேன். நாம் இனி தினசரி சந்திக்கலாம்’ என்று ஆசிரியர் குழுவினரிடம் அவர் சொன்னபோது, அங்கிருந்தவர்களால் ஆச்சர்யத்தை மறைக்க முடியவில்லை.

சர்ச்சைக்குரிய தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியான சமயத்தில், ‘எனக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொன்ன தயாநிதிமாறன், இன்று இப்படி வெளிப்படையாக வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாகச் சொன்னது சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

”எந்த வகையிலும் தலைவருடன் (கலைஞர்) மோதல் போக்கு வேண்டாம். நாம் மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) அமைதியாக, நமது வேலைகளைக் கவனிப்போம். கொஞ்சம் பொறுமையாக இருந்து செயலாற்றத் தவறிவிட்டோம். மதுரை வன்முறைச் சம்பவம் நடந்த நாளில் நாம் அமைதியாக இருந்திருந்தாலே அல்லது இவ்வளவு வேகமாக அழகிரி மீது விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தாலே மற்ற பத்திரிகைகள் தாங்களாகவே அழகிரியின் செயலை விமர்சித்திருப்பார்கள். ஆனால், நாம் முழுவேகம் காட்டவும் மற்றவர்கள் அமைதியாகி விட்டார்கள். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். இங்கேதான் தவறு நடந்து விட்டது. பரவாயில்லை. நம்பிக்கையோடு பணியாற்றுங்கள். மூன்று மாதம்தான். எல்லாம் சரியாகிவிடும்!” என்று நம்பிக்கையளிக்கும் வகையில், தனது கருத்துக்களை அப்போது சொல்லியிருக்கிறார் தயாநிதி.

அன்றிலிருந்து தினசரி தினகரன் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில செய்திகள் எப்படி வரவேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் தவறுவதில்லை. இந்தப் பணிகளுக்கிடையே தாத்தாவை எப்படியும் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தயாநிதிக்குத் தீவிரமாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது ஒருபுறம் இருக்க… பலரது பார்வையும் இப்போது திரும்பியிருப்பது கலாநிதி மாறனை நோக்கித்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. தயாநிதி வெளி உலகிற்கு அறிமுகம் ஆனதே அரசியலை வைத்துத்தான். அந்த அரசியல் அங்கீகாரம், தனது தந்தை விட்டுச் சென்ற மத்திய சென்னை எம்.பி. பதவியில் ஆரம்பித்து, தி.மு.க. தலைவரான தனது தாத்தாவின் அரவணைப்பால் கிடைத்ததுதான் தயாநிதிக்கு.

கலாநிதி மாறன் இதற்கு நேர்மாறானவர். தனது சொந்த வாழ்க்கையாகட்டும், தனது தொழிலாகட்டும், அதில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கொஞ்சம் தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர் அவர்.

”நான் கூச்ச சுபாவம் உள்ளவனும் அல்ல. நெருங்கிப் பழகுபவனும் அல்ல. நான் சாதாரண ஒரு நபர். அவ்வளவுதான். எனது தேவைகளுக்காக எனது குடும்பப் பின்னணிகளைச் சொல்லி அவற்றைப் பூர்த்தி செய்து கொள்வது எனக்கு உடன்பாடான விஷயமல்ல. நம்புங்கள்… நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தபோது, எனது பணத்தேவைக்காக ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை பார்த்தேனே தவிர, என் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை” என்று அடிக்கடி சொல்வார் கலாநிதி மாறன்.

இப்போது அரசியல் சூறாவளி தன்னையும் தன் குடும்பத்தினரையும் மையமாக வைத்துச் சுழலும்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் கலாநிதி. ‘தனது டி.வி. சாம்ராஜ்யத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிலவற்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் கலாநிதி’ என்கிறார்கள் சன் நெட்வொர்க் வட்டாரத்தில்.

கலைஞர் டி.வி.க்காக தனியாக கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல… ஏற்கெனவே உள்ள சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் கேபிள்களை ஆங்காங்கே சிலர் வெட்டிவிடுவதாகவும் கலாநிதிக்குத் தகவல்கள் வருகின்றன. ‘கேபிள் டி.வி. சர்வீஸை’ அரசே எடுத்து நடத்தலாம் என்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டி கலைஞர் வெளியிட்ட கருத்துக்களும், கேபிள் டி.வி. விரைவில் அரசுடைமை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்ற செய்தியும் கலாநிதியை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.

இனியும் தனது டி.வி. ஒளிபரப்புக்கு கேபிளை நம்பிப் பயனில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள கலாநிதி, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சன் நெட்வொர்க்கின் சார்பில் செயற்கைக் கோள் மூலம் (சிறிய ஆண்டெனா உதவியுடன்) வீடுகளுக்கே நேரடியாக டி.வி. நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்கும் DTH  சேவையைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம்! இதை நிறைவேற்றிவிட்டாலே சன் டி.வி.யின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நம்புகிறாராம் கலாநிதி.

‘தனது இந்த நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு, சன் டி.வி.க்கு DTH  சேவைக்கான உரிமத்தை வழங்கக் கூடாது என்று டெல்லியில் இப்போது சிலர் காய் நகர்த்துவதையும் உணர்ந்துள்ள கலாநிதி, அதை எதிர்கொண்டு சமாளித்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது நோக்கத்தை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்!’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி… மூன்று மாதங்கள் அமைதியாக இருங்கள் என்று தினகரன் ஊழியர்களுக்கு தயாநிதி ஆலோசனை சொல்கிறார்… கலாநிதி, மூன்று மாதத்திற்குள் DTH  சர்வீஸைத் தொடங்கி, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்…. கலைஞர் குடும்பத்திலும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்… ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்… என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

”ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்…?” என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!

”ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த…. ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்” என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!

இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய…. அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்! ஸீ

சில மாதங்களுக்கு முன்பு, போயஸ் கார்டனுக்குள் காரில் தனது நண்பரோடு போய்க் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். அங்கே ஜெயலலிதாவின் வீட்டிற்குப் பாதுகாப்பாக இருக்கும் போலீஸார், ஷிப்ட் மாறும் நேரத்தில் கும்பலாக ஒரு வேனில் இருந்து இறங்குவதைப் பார்த்தார் தயாநிதி. அதன்பிறகு ‘முன்னாள் முதல்வருக்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கேள்விகள் எழ, அடுத்த சில நாட்களிலேயே ஜெ.வின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதையடுத்து, எழுந்த விமர்சனங்களை அரசியல்ரீதியாக கலைஞர் சமாளித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. மத்திய அமைச்சராக இருந்தபோது இருந்த பாதுகாப்புடனேயே இப்போதும் வலம் வருகிறார் தயாநிதி. ‘பதவி போன பின்பும் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கோபாலபுரத்திலிருந்து குரல் கேட்கிறதாம் இப்போது! அதனால், எந்த நேரத்திலும் தயாநிதியின் பாதுகாப்பு வாபஸாகும் என்கிறார்கள் கோபாலபுரத்தின் குரலை அருகில் இருந்து கேட்டவர்கள்.

– எஸ்.பி. லட்சுமணன்

—————————————————————————————-

Posted in Alagiri, Alakiri, Analysis, Anbumani, Andipatti, Arcot, Astrology, Azhagiri, Azhakiri, Backgrounder, Balachander, Balu, Belief, Biosketch, CB-CID, CBI, Chidamabram, CID, Coimbatore, Congress, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Devaraj, Devraj, Dhinakaran, Dinagaran, Dinakaran, DMK, Faces, Gujral, History, IAS, IPS, Jaffer sait, Jaffer seth, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithalaya, Kovai, Kumaran, Lok Saba, LokSaba, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mallika, Manmohan, Maran, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, Nagma, Nilagiri, Nilgiris, officers, P Chidamabram, Pa Chidamabram, Palanichami, Palanisami, Palanisamy, Pazanisamy, Pazhanisami, Pazhanisamy, PC, people, PMK, Police, Pongaloor, Pongalur, Radaan, radan, Radhika, Ramadas, Ramadoss, RAW, Sarath, Sarath Reddy, Sarathkumar, SCV, Selvaraj, Shanmugasundaram, Shanmukasundaram, Shanmukasundharam, Shanumugasundaram, Shanumughasundaram, Sharath, Sharath Reddy, Sharathkumar, Simran, Sonia, Sumangali, Sumangali Cable, Sumangali Cable Vision, Sumankali, Sun, Temple, Thevaraj, Thinakaran, Thiruchi, Thiruchirappalli, Thiruchy, TR Balu, Transfer, Trichirappalli, Trichy, TV, Veeragopal, Veerasami, Veerasamy | 4 Comments »

Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?

மதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கம்ப்யூட்டர் பொறியாளர்கள்

  • வினோத்குமார் (26),
  • கோபிநாத் (25),
  • காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

முருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.

கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.

இறந்தது எப்படி?: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.

பின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.

தீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.


பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா? என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம்? எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.

இச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.


மதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.

இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


It all started here with Dinakaran – Sun TV Network’s Survey Results from AC Nielsen
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது

  • கோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து
  • வேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,
  • திருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக
  • சென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.
  • மதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,
  • புதுச்சேரியில் 65 ஆக உள்ளது.
  • சேலத்தில் 61%.

“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை

  • மதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.
  • மதுரையில் 6 சதவீதம் பேரும்
  • நெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
  • புதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,
  • வேலூர்,
  • கோவை,
  • திருச்சி,
  • நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
  • சென்னை மற்றும்
  • சேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று

  • மதுரையில் 5 சதவீத மக்களும்
  • சேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
  • நெல்லையில் 3 சதவீதமாகவும்
  • நாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.
  • சென்னை,
  • வேலூர்,
  • புதுச்சேரி,
  • கோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.

இந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..


சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார்? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

  • தயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
  • 27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.
  • ஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • வேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.
  • சேலம்,
  • கோவையில் தலா 73 சதவீதம் பேரும்,
  • சென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.
  • புதுச்சேரியில் 67%,
  • திருச்சி,
  • மதுரையில் தலா 58%,
  • நாகர்கோவிலில் 57%,
  • நெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

அமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று

  • மதுரையில் 36 சதவீதம் பேரும்
  • சென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்

  • திருச்சி,
  • நாகர்கோவிலில் தலா 12%.
  • சென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.
  • நெல்லை 9%,
  • சேலம்,
  • மதுரை தலா 4%,
  • புதுச்சேரி 3%.

சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக

  • புதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.
  • சென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.
  • வேலூர்,
  • திருச்சி,
  • நெல்லையில் தலா 1 சதவீதம்.
  • சேலம்,
  • கோவை,
  • மதுரை,
  • நாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.
  1. ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,
  2. செல்போன் கட்டணங்கள் குறைப்பு,
  3. பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
  4. இளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.

அமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.


கருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது?

ஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார்? என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி

தமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்

இதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.

ஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


பத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி

எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்
எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.

இந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

 


தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்

இன்று நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று
இன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று

இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.

தற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


 

தனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 


 

தினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி

தினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.

அதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.


பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி

ஸ்டாலினும், அழகிரியும் சில சமயங்களில் இணைந்தும் பல சமயங்கலில் எதிர்எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்

தினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.

இதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.

மு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

 

பத்திரிக்கையாளர் ஞானி

இந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.


தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.

அதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.

அதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 


மு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்? இல்லையே!

நான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா? அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…

 


தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்
‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்

சென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.

இதில், ஞானசேகரன் பேசியதாவது:

பத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.

கடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.

இது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.
அப்போது முதல்வர் பதிலளிக்கையில்

“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”

என்று அறிவித்தார்.

ஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்

“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”

என்று செய்தி வந்துள்ளது.

அதே செய்தியின் லீடில்

“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”

என்று செய்தி வந்துள்ளது.

இது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.

 


அமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.

  • கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.
  • தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா?
  • அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’

என்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.

 


மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.

இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

 


முதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

  • காங்கிரஸ்,
  • பாமக,
  • விடுதலைச் சிறுத்தைகள்,
  • இந்திய கம்யூனிஸ்ட்,
  • மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில்

  • சிக்கன் பிரியாணி,
  • மீன் வறுவல் மற்றும்
  • தக்காளி ரசம்,
  • மோர் குழும்பு,
  • பாயசம்,
  • குல்பி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, AC Nielsen, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anbumani, Approver, Arrest, Attack, Attack Pandi, Azagiri, Azhagiri, Azhakiri, Baalu, Basha, Batcha, Biotech, Bombs, Cabinet, Celebrations, Chargesheet, Chidambaram, Chidhambaram, Cigar, Cigarette, Dayanidhi, Dayanidhy, dead, destroy, Dharmapuri, Dharmapury, Dhinakaran, Dinagaran, Dinakaran, Dinakaran.com, DMDK, DMK, dynasty, employee, employees, Feast, Finance, FIR, Health, Healthcare, InfoTech, IT, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kiruttinan, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Madurai, Maran, Mayor, Minister, MK Azhagiri, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murder, Nelson, network, Nielsen, Nielson, Opinion, Order, P Chidambaram, Pa Chidambaram, Paandi, Pandi, Police, Poll, Ramadas, Ramadoss, Ransack, Sethu, Smoke, smoking, Statistics, Sun, Sun TV, Survey, Telecom, Television, Tha Krishnan, Thaa Krishnan, Thayanidhi, Thayanidhy, Thenmoli, Thenmozhi, Thenmozi, Thinagaran, Thinakaran, Thinakaran.com, TR Balu, Transport, TV, Velu, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Worker | 12 Comments »