Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Editorial’ Category

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

The management of MRF Limited: lockout & strikes – Viduthalai Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.

இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.

உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.

ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.

அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.

நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.

வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.

தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.

மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!

Posted in Ads, Advt, Editorial, employees, Employers, Employment, Expenses, Jobs, lockout, Loss, Management, MRF, Poor, Productivity, Profit, Revenues, Rich, Strikes, Tyres, Union, Viduthalai, Work | Leave a Comment »

Chennai Bandh & Oct 1 Fasting by Kalainjar Karunanidhi – Anandha Vikadan Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

கருமமே கண்ணாயினார்!

Ôதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாதுÕ என்று கோபம் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக ஆளும் கூட்டணியில் அதற்குச் சில எதிர்வினைகள்..!

Ôகோர்ட் சொன்னால் என்ன… பஸ்ஸை நிறுத்திப் பார்ப்போமே என்று என்னைப் போன்றவர்கள் எங்கள் தலைவரிடம் சொன்னோம்!Õ என்று உண்ணாவிரத மேடையில் நின்று பொங்கியிருக்கிறார் ஓர் அமைச்சர்.

Ôகர்நாடக அரசும் கேரள அரசும் தீர்ப்புகளை மதிக்காமல் போனபோது, உச்ச நீதிமன்றம் ஏன் இதுபோன்ற கடுமையைக் காட்டவில்லை?Õ என்று கேட்டிருக்கிறார் இன்னொரு தலைவர்.

உணர்வுகளில் என்னதான் வேகம் இருந்தாலும்… கடைசியில் என்ன ஆனது? நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் அவசரமாக Ôஓட்டப்பட்டனÕ; Ôமூடப்பட்டÕ கடைகள் காவல்துறை உந்துதலோடு Ôதிறக்கப்பட்டனÕ; அரசு ஊழியர்கள் உடனே ஆஜராகும்படி அழைக்கப்பட்டனர்!

Ôவேண்டாம் அரசு பந்த்Õ என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும், Ôஅதே நாளில் வேறு வழியில் எதிர்ப்பைக் காட்டுவோம்Õ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கத் தேவையில்லை! உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரே ஒருநாள் மட்டும் தள்ளிவைத்து, அந்தத் தத்துவத்தின் ஆதிகர்த்தாவான மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று நடத்தியிருந்தால்… உணர்வுகள் இன்னும்கூடப் பலமாக வெளிப்பட்டு இருக்குமே! அரசு விடுமுறை என்பதால், எந்தக் கேள்விக்கும் இடமில்லாமலும் போயிருக்கும்.

தமிழகத்தின் நலனுக்காகவே சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவது அரசின் நோக்கமாக இருந்தால்… இனியாவது, உணர்ச்சிவேகத்தில் முடிவுகள் எடுக்கக் கூடாது; யார் வாய்க்கும் அவல் போடக் கூடாது; யார் பெரியவர் என்கிற கௌரவ யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடாது; நோக்கமே மறந்துபோகுமளவு விவகாரம் திசை திரும்பிச் செல்ல துளியும் இடமளிக்கக் கூடாது!

கருமமே கண்ணாயினார்க்கு இவையும்தான் தகுதிகள்!

Posted in Bandh, Chennai, Editorial, Fast, Hartal, Harthal, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Madras, MK, Op-Ed, Sathyagraha, Satyagraha, Vikadan, Vikatan | Leave a Comment »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Kalki Editorial: Hyderabad Bomb Blasts – Religious sectarianism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

இஸ்லாமியர்களே! இணைந்து குரல் கொடுங்கள்!

ஹைதராபாத்தில் நடந்த அதிகோர குண்டு வெடிப்பைத் தவிர்த்திருக்க முடியும் – மத்திய உளவுத்துறை அளித்த ரகசிய எச்சா¢க்கை அறிக்கை மீது ஆந்திர அரசு உ¡¢ய நடவடிக்கை எடுத்திருந்தால்!

எச்சா¢க்கை செய்யப்பட்டும் கடமையில் தவறிய ஆந்திர அரசின் தயக்கமும் அலட்சியமும் கடுமையான கண்டனத்துக்கு உ¡¢யவை.

இஸ்லாமியர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினால் அதன் மூலம் மதவாதப் பிரச்னையைக் கிளப்ப நேருமே என்று ஆந்திர அரசு தயங்கியதாகச் செய்திகள் வருகின்றன!

தங்க ஊசி என்பதற்காக அதைக்கொண்டு கண்ணைக் குத்திக் கொண்ட கதைதான் இது!

இந்தியாவில் இஸ்லாமியர்களைச் சிறுபான்மை இனத்தினர் என்று பாகுபடுத்தி ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறோம். ஆனால்,
இந்த தேசத்துக்குச் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகக் கொடூரமான சேதங்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் விளைந்தவையே! ‘ஜிஹாதி’ என்ற பெயா¢ல், திட்டமிட்ட கொலை வெறியாட்டம்
நிகழ்த்தி வருகின்றன இவ்வமைப்புகள்! கடந்த ஆறு மாதங்களாக
பாகிஸ்தான் ஜிஹாதி பத்தி¡¢கைகளில், ‘ஹிந்துக்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும்’ என்று பகிரங்க பிரசாரம் நடந்து வந்திருக்கிறது.
இந்தியாவை முஸ்லிம் தேசமாக்க வேண்டும் என்றும்
எழுதப்பட்டிருக்கிறது! இச் செய்திகளை ஆதார பூர்வமாக இந்தியப் பத்தி¡¢கைகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், இந்த எழுத்துக்கள் பற்றி
அறியாதிருக்கக்கூடும். ஆனால், இங்கு நடக்கும் குண்டு வெடிப்பு கோரங்களைக்கூட இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்யவில்லை; தங்கள் மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இந்தப் பாதகத்தை நிறுத்த வேண்டும் என்று தார்மிகக் கோ¡¢க்கை விடுக்கவும் முன்வரவில்லை.

நமது அரசியல்வாதிகளும் (பா.ஜ.க. நீங்கலாக) இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலை வெறியை நேரடியாகக் கண்டனம் செய்யத் தயங்கி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது பழி சுமத்துவதுடன்
நிறுத்திக்கொள்கிறார்கள்! இந்தப் பிரச்னையை இவ்வாறு கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதம் மேலும் வளரும். இன்னொரு பக்கத்தில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு
எதிரான உணர்வுகள் கொழுந்துவிட்டு எ¡¢ய ஆரம்பிக்கும். அவ்வாறு உணர்வுகள் பெருக்கெடுக்கிற கட்டத்தில் ஹிந்துத்வா சித்தாந்தத் துக்கே ஆதரவு பெருகும் (ஏற்கெனவே இந்தப் போக்கு
ஆரம்பித்துவிட்டது); காங்கிரஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது துர்லபம் ஆகும்.

இந்தியா இன்று மதச்சார்பற்ற நாடாகத் திகழ்கிறது; நாளை பா.ஜ.க. மற்றும் அதன் ஆதிக்க அமைப்புகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால்
ஹிந்துத்வா கோட்பாடுகள் வலுப் பெறும். எத்தனை ஜிஹாதி அக்கிரமங்கள் நடந்தாலும் இந்தியா முஸ்லிம் நாடாக மாறவே முடியாது. ஆனால், முஸ்லிம் பயங்கரவாதிகளுடைய நடவடிக்கைகளின்
எதிர்விளைவாக அது ஹிந்து நாடாக மாறுவது வெகு எளிது. அப்போது இங்கே இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்புக்கும் இப்போது அவர்கள் அனுபவிக்கும் உ¡¢மைகளுக்கும் கடுமையான சவால்கள் ஏற்படும்.

தார்மிக உணர்வுத் தூண்டலால் இல்லாவிட்டாலும் இந்தத் தொலைநோக்கின் அடிப் படையிலாவது இந்திய முஸ்லிம் சகோதரர்கள் விழிப்புகொள்ள வேண்டும். தங்கள் மதத்தின் பெயரால்
இங்கே இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்தும்படி அழுத்தம்
திருத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். “எங்கள் தேசத்தைச்
சிதைத்து, எங்கள் வாழ்க்கையைக் கேள்விக் குறி ஆக்காதீர்கள்!” என்று இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அவர்கள் விடுக்கும்
எச்சா¢க்கை மட்டுமே பயன்தர வல்லது.

Posted in Andhra, AP, BJP, Blasts, Bomb, Center, Congress, Editorial, Govt, Hindu, Hyderabad, Islam, Jihad, Kalki, Muslim, Naidu, Op-Ed, Religion, TDP, YSR | Leave a Comment »

Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu’s Law Enforcement – Kalki Editorial

Posted by Snapjudge மேல் மே 9, 2007

குஜராத்: சாம்பலான மனித நேயம்

தமிழகக் காவல்துறை மண்டல ஐ.எ. ஒருவர், ஒரு யுக்தியைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு காவல் நிலையங்களுக்கு, அப்பகுதியைச் சாராத காவல் துறை ஊழியர்களை மாறுவேடத்தில் அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியர்கள் சில புகார்களை (புனைந்துதான்) அந் நிலையங்களில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்கள். மூன்று நாட்களில் திரும்பி வந்த அவர்கள், தங்கள் கண்ணீர்க் கதையைத்தான் விவரிக்க வேண்டியிருந்தது! புகார் தர முயன்ற சிலருக்கு வசவு, வேறு பலருக்கு அடி உதை! கடைசியில், பரிசோதனைக்கு உட்பட்ட அத்தனை போலீஸ்காரர்களும் ஆடிப் போய், தாங்கள் இனி ஒருபோதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

– இந்த விவரத்தை தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, தேசிய மனித உரிமைக் கழகம் நடத்திய ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

காக்கி உடுப்பணிந்து, கையில் லத்திக்கட்டையைத் தூக்கிவிட்டாலே ஆணவமும் முரட்டுத்தனமும் வந்துவிடுகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இந் நிலையில், காவல் துறையினருடைய தோரணையில் மாற்றங்களைப் புகுத்தத் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் நாம் மனமார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு நேர்மாறான போக்கு குஜராத்தில் காணப்படுகிறது!

ஷொராபுத்தீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கௌசர் கொல்லப்பட்டதுடன், அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் வயல்வெளிகளில் தூவப்பட்டிருக்கிறது! இத்தகைய அசுரத்தனமான செயல்களைச் செய்ததோடல்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் என்கவுன்டரில் இறந்து போயினர் என்றும் கதை கட்டியிருக்கிறது போலீஸ்! அதனால் கிடைத்த மீடியா கவனத்தாலும் விளம்பரத்தாலும் மக்கள் மத்தியில் “ஹீரோ’க்களாக இந்தப் போலீஸார் சித்தரிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந் நிலையில்தான், மாண்டுபோன ஷொராபுத்தீன் ஷேக்குடைய சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்திருக்கின்றன!

குஜராத் சம்பவம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் அல்ல; அது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. சிறுபான்மை இனத்தவர் பேரில் அம் மாநிலக் காவல்துறை காட்டிவரும் ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடாக நடந்த இச் சம்பவம் குறித்து இப்போது சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இத்தகைய துவேஷமும், சக உயிர்களைத் துச்சமாக எண்ணும் குரூரமும், ஆட்சியாளர்களின் மௌன அங்கீகாரமின்றி வளர்வதும் வெளிப்படுவதும் சாத்தியமில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத துவேஷம் காரணமாக நிகழ்ந்த பல கொடூரக் குற்றங்களைக் கண்டு நாடே நடுங்கியது.

இன்று அதே வகையான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் விமரிசையாக நடக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் பொருளாதார ரீதியில் பாய்ந்து முன்னேறியிருக்கலாம்; ஆனால், மனித நேய அடிப்படையில் பார்த்தால் சுடுகாடாகத்தான் இருக்கிறது. மோடி அரசு, சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வாதாடுவது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால், பாரதிய ஜனதா கட்சி தனது தீவிர ஹிந்து அடிப்படைவாதத்தைக் கைவிட வேண்டும். பிற மத துவேஷத்தை வளர்க்கிற பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளிடமிருந்து விடுபட்டு, சுதந்திர அரசியல் இயக்கமாகி, சமதர்ம சமுதாயம் என்ற உயர் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில், அக் கட்சி மெள்ள அழிவதுடன் “”வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் இந்தியாவின் ஜீவ கொள்கையின் மீது ரணகாயங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச் செல்லும்.

———————————————————————————————

மனித உரிமைக் கல்வியின் அவசியம்…?

என். சுரேஷ்குமார்

இந்தியாவில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவினர் தற்போது மனித உரிமை கல்விக்கான கல்லூரி, பள்ளிகளுக்கான மாதிரி பாடத் திட்டம், அந்த பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவற்றை வெளியிட்டு, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தீர்மானித்திருக்கிறது.

வளர்ந்து வரும் எந்தச் சமுதாயத்திலும் மனித உரிமை மீறல் என்பது எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னை. மனித உரிமை மதிக்கப்படும்போதுதான் எந்தவொரு சமுதாயமும் முழுமையான நாகரிகத்தை எட்டியிருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த வகையில் மனித இனம் இன்னும் கடக்க வேண்டிய தடைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏராளம், ஏராளம். மனித உரிமை மீறலைத் தடுப்பது அதன் முக்கியமான முதல் கட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்த கிராமத்தில் பய்யாலால் போட்மாங்கே என்ற விவசாயியின் குடும்பத்தின் மீது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் பய்யாலாலின் மனைவி சுரேகா, மகள் பிரியங்காவை ஊருக்கு நடுவில் பய்யாலாலின் மகன்கள் ரோஷன் மற்றும் சுதிரைக் கொண்டு மானபங்கம் செய்ய வலியுறுத்தியதும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருவரையும் படுகொலை செய்ததோடு சுரேகாவையும், பிரியங்காவையும் கிராமத்து ஆண்களால் மானபங்கம் செய்ததோடு கொன்றும் வீசினர்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது என்று கேட்டால் – ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஒன்று – மனித உரிமை மீறல் குறித்த கல்வியறிவு இல்லாதது. இரண்டாவது – இம்மாதிரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காததும், சுட்டிக்காட்டத் தவறியதுமே.

மனித உரிமை குறித்த கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக இன்றியமையாதது. இதன்மூலம் மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம் காக்கப்படும்.

மனித உரிமைக் கல்வியை ஊக்குவிக்க யுனெஸ்கோ 1974-ம் ஆண்டு உலகநாடுகள் அனைத்துக்கும் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பயிற்றுவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு வியன்னாவில் 1979-ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி குறித்தும் அதைப் பயிற்றுவிப்பது குறித்தும், மனித உரிமைக் கல்வி குறித்து தனி நபர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1987-ம் ஆண்டு மால்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி மற்றும் கற்பித்தலை பொது நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் விரிவான பங்கேற்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது மாநாடு 1993 மார்ச் மாதம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜனநாயகத்திற்கான கல்வி என்பது, மனித உரிமைகள் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்தது. மேலும், மனித உரிமைக் கல்வி, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மெய்யாக்க ஓர் அடிப்படை தேவை என்பதையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கல்வியின் அவசியம் 1993-ம் ஆண்டு 171 நாடுகள் பங்கேற்ற மனித உரிமைகளுக்கான உலக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாடு மனித உரிமைகள் மீதான மரியாதையையும் அது ஒரு மெய்யான ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் ஆதரித்தது. இதைத்தொடர்ந்து ஐநா சபை மனித உரிமைகள் கல்விக்கான தீர்மானத்தை 1994-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்ட அமல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறுப்பை ஐநா மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனிடம் ஒப்படைத்தது.

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான முழுமையான கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது யுனெஸ்கோவின் நீண்டநாள் நோக்கமாகும். முறையான கல்வித் திட்டத்துடன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை கட்டமைக்க கல்வியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாலேயே முடியும்.

மனித உரிமைகள் கல்விக்கான திட்டத்தை 1995-ம் ஆண்டுவரை 125 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, BJP, deaths, Editorial, Enforcement, Govt, Gujarat, Hindu, Hinduism, HR, Human Rights, Influence, Kalki, Law, Lockup, Modi, Murder, Order, Police, Police Station, Power, RSS, Tamil Nadu, TN | Leave a Comment »

The Quattrocchi fallout: Sonia’s gift to India?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

குவாத்ரோச்சி சிக்குவாரா?

போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மத்திய அரசை பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும் வற்புறுத்தியுள்ளன.

மோசடி, ஏமாற்று வேலை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தென்அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் சர்வதேச போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள குவாத்ரோச்சி இப்போது அந்நாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தது. முதலாவதாக, இந்திய அரசு இதில் தீவிர முனைப்புக் காட்டியாக வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய அளவுக்கு குவாத்ரோச்சி குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஆர்ஜென்டீனா திருப்தி அடைந்தாக வேண்டும்.

இந்தியாவை உலுக்கிய ஊழல் விவகாரங்களில் போபர்ஸ் விவகாரம் மிகப் பிரபலமானது. 1980களில் இந்திய அரசு சுவீடனைச் சேர்ந்த போபர்ஸ் என்னும் நிறுவனத்திடமிருந்து பெரிய பீரங்கிகளை வாங்கியது. இந்தப் பீரங்கிகளை வாங்கும்படி செய்ய இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சுவீடனின் வானொலி 1987ல் செய்தி ஒலிபரப்பியபோது இந்த விவகாரம் வெடித்தது. இதில் சிலர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.

போபர்ஸ் விவகாரத்தின் விளைவாக 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. இந்த ஊழலில், யார் யார் பணம் பெற்றார்கள் என்பது தொடர்பாகப் பலரின் பெயர்கள் அடிபட்டன. வழக்குகளும் போடப்பட்டன. ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என வர்ணிக்கப்பட்ட இத்தாலியரான குவாத்ரோச்சி அந்த இடைத்தரகர்களில் ஒருவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கடந்த பல ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர். சிலர் காலமாகிவிட்டனர். எஞ்சி நிற்கிற ஒருவர் குவாத்ரோச்சியே.

குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்தபோதே அவரைக் கைது செய்திருக்க முடியும். ஆனால் 1993 ஜூலையில் அவர் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார். வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து ஒப்படைக்க நாடுகள் இடையே பரஸ்பர உடன்பாடுகள் செய்து கொள்வது உண்டு. மலேசியாவுடன் இந்தியாவுக்கு அப்போது அவ்வித உடன்பாடு இல்லை. இப்போது ஆர்ஜென்டீனாவுடனும் இந்தியாவுக்கு அப்படிப்பட்ட உடன்பாடு கிடையாது.

குவாத்ரோச்சியை பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கை மலேசிய உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசு தகுந்த ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அது கூறியது. இத் தீர்ப்பின் மீது இந்திய அரசு மேல் முறையீடு செய்ய இருந்த சமயத்தில் குவாத்ரோச்சி அங்கிருந்தும் தப்பினார்.

இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் வங்கிகளில் குவாத்ரோச்சி போட்டிருந்த ரூ. 21 கோடி பணத்தை இந்திய அரசு கோரியதன் பேரில் பிரிட்டிஷ் அரசு முடக்கி வைத்தது. ஆனால் வேடிக்கையான வகையில் இப் பணம் போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய பணம் என்று நிரூபிக்க ஆதாரம் இல்லையென இந்திய அரசு கடந்த ஆண்டில் தெரிவித்ததன் பேரில் குவாத்ரோச்சியின் பணம் விடுவிக்கப்பட்டது.

குவாத்ரோச்சி ஆர்ஜென்டீனாவில் இம்மாதம் 6-ம் தேதி பிடிபட்டார். இருந்தாலும் இந்திய ஊடகங்கள் இதுபற்றி பெரிதாகச் செய்தி வெளியிட்டதற்குப் பிறகே இந்திய அரசு அதுபற்றி வாய் திறந்துள்ளது. மார்ச் 5-ம் தேதிக்குள் ஆர்ஜென்டீனா அரசிடம் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் குவாத்ரோச்சி விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் இப்போதுள்ள நிலைமையாகும்.

“சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குவாத்ரோச்சி விஷயத்தில் இதுவரை நடந்துள்ளவை அவ்விதமாக இல்லை என்றே கூறியாக வேண்டும்.

Posted in Analysis, Argentina, BJP, Bofors, Congress, Corruption, Defense, Dinamani, Editorial, extradition, kickbacks, Military, Op-Ed, Opinion, Quattrocchi, Sonia Gandhi | Leave a Comment »

Population Explosion – Birth Rates, Demography: Study & Analysis

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

மக்கள்தொகைப் பெருக்கம் — ஒரு சவால்!

இராதாகிருஷ்ணன்

எவ்வளவு வலிமை வாய்ந்த அரசாக இருப்பினும், எந்த அளவிற்கு மக்கள் நலம் பேணுவதாக அது அமையினும், அதன் திட்டங்களை, முயற்சிகளைச் சிதைக்கின்ற தனிப்பெரும் காரணியாக இன்று அமைந்திருப்பது, கட்டுப்படுத்த இயலாத “மக்கள்தொகைப் பெருக்கமே’ ஆகும்.

நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த மக்கள்தொகை, அன்றிலிருந்து இன்று வரை பெருகியுள்ள அளவு, அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்ற கணிப்பு என இவை மூன்றையும் கருத்தில்கொண்டால், நமக்கு முன்னர் உள்ள பிரச்சினையின் முழு வடிவம் நன்கு புலப்படும்.

1950-க்கும் பிறகு உலகில் அனேக நாடுகள் சுதந்திரம் பெற்ற காரணத்தால் அவற்றில் தோன்றிய “மக்கள் நல அரசுகள்’ இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கின. அறிவியலில் ஏற்பட்ட உன்னத வளர்ச்சியும் அதற்கு உதவியது.

ஆனால் இவற்றின் மாறுபட்ட விளைவால் மக்கள்தொகைப் பெருக்கம் என்றுமில்லாத உச்சத்தை எட்டியது. 1950-ஆம் ஆண்டில் சுமார் 250 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2000-ம் ஆண்டில் சுமார் 610 கோடியாக உயர்ந்தது.

அதேசமயம், இந்தப் பெருக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் பரவலாக மாறுபட்டு, ஒரு சில நாடுகளின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. (நமது மாநிலங்களுக்கிடையேயும் இதே நிலைதான் நிலவியது). குறிப்பாக 33-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷியா மற்றும் ஜப்பான் போன்றவற்றில் “நாமிருவர் நமக்கொருவர்’ என்ற கட்டுப்பாடு காக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 0.4 சதவீதத்தோடு நிலைபெற்ற மக்கள்தொகை நாடுகளாக வெற்றி பெற்று தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும், அடிப்படைக் கட்டமைப்பையும் அவை உயர்த்திக் கொண்டன.

ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகள் ஆகியவை ஆண்டுக்கு 4 சதவீதத்திற்கும் மேலான மக்கள்தொகைப் பெருக்கத்தால் அவதியுற்று வாழ்க்கை ஆதாரங்களுக்கு வழியில்லாமல் இன்னலுறுகின்றன. உலக மக்கள்தொகை வல்லுநர்களின் கூற்றுப்படி, அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை சுமார் 940 கோடியாக உயரக்கூடும். இந்தியாவைப் போன்று 150 வளரும் நாடுகளிடையே இவ்வுயர்வு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் எந்த வகையிலாவது அதைக் கட்டுப்படுத்தியே தீரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை வளரும்போது மறுபக்கம் வசதியற்றவர்களின் எண்ணிக்கையும் அதைவிட பன்மடங்கு வளர்ந்து வருகிறது. இதனால் மக்களிடையே முன்னரே உள்ள ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகி, நல்லிணக்கம் குறைகிறது. தீவிரவாதம் தலைதூக்கி வன்முறைகள் உருவாகின்றன.

இன்றுள்ள இந்தியாவின் மக்கள்தொகை 112 கோடி என்பது அடுத்த 50 ஆண்டுகளில் சுமார் 160 கோடியையும் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படப்போகும் நிலைமையை சமாளிக்க இப்போதே திட்டமிடும் அமெரிக்காவை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

நமது திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்குக்கு கூட திறன் பெற்றவை அல்ல. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இன்றைக்கு நாம் பெற்று வருகிற பிரமாண்ட வளர்ச்சியின் காரணமாக எத்தனை சதவீத இந்தியர்கள் அதன் பலனை நேரடியாக நுகர்கின்றனர் என்பதைக் கணக்கிட்டால், நமது பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற நிலை மேலும் மோசமடைந்து வருவது எளிதில் உணரப்படும்.

நமது அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வராத மக்கள்தொகைப் பெருக்கத்தால் எதையெல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஊதியம், கல்வி வசதி, வீட்டு வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, போதுமான உணவுப் பொருள்கள் உற்பத்தி, நிலத்தடி எரிபொருள் ஆதாரம், நிலத்தடி நீர், வேளாண் விளைநிலம், சமுதாய நலத்திட்டங்கள், மாசுபடாத சுற்றுச்சூழல்… போன்ற அனைத்திலும் பற்றாக்குறையையும் இல்லாமையையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த முயலும்போது, இருக்கும் இயற்கை வளங்களை மிச்சமில்லாத வகையில் சுரண்டி எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வைத் தகர்த்து வருகிறோம் என்பதையும் உணர வேண்டும்.

நாம் வாழும் பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களையும் கணிக்க முடிந்த நமக்கு, நமது நாட்டில் உள்ள இயற்கை வள ஆதாரங்களைக் கொண்டு நமது மக்கள்தொகை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணிக்க முடியாமல் போவது ஏன்? அல்லது அக் கணிப்பில் நாட்டம் செல்லாதது ஏன்?

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டு ஏமாந்து போய்விடக் கூடாது; தனிநபர் சராசரி வருமானத்தின் உயர்வாலும் திசைமாறிவிடக் கூடாது; நம்மிடையே நிலவும் பொருளாதார சமச்சீரின்மையைப் போக்க வேண்டுமெனில், நமது மக்கள்தொகை நிலை பெற வேண்டும்.

அறிவியல் வளர்ச்சியால் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடிந்த நம்மால் பிறப்பு விகிதத்தையும் குறைக்க வலுவான “எண்ணம்’ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் 0.4 சதவீதம் என்ற நிலையை அடைந்தால்தான் மக்கள்தொகை நிலைபெறும். இதற்கு “நாமிருவர் நமக்கொருவர்’ என்ற சிறு குடும்பத்துக்குத் தயாராக வேண்டும்.

இம் முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுச் செயல்பட்ட சீனா, 2050-ல் மக்கள்தொகையில் தனக்குள்ள முதலிடத்தை நம்மிடம் இழந்து, அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தனையோ இடர்பாடுகளில் வெற்றி பெற்ற நாம், மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

(கட்டுரையாளர்: அரசு கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்).

Posted in Analysis, Birth Rates, Demography, Economy, Editorial, Finance, Op-Ed, Opinion, Population, Study | 1 Comment »

AIDS & Diabetes – Gross custodial violence by the police and corruption by jail officials in prisons for women

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

எய்ட்ஸ், நீரிழிவு- கூடுதல் தண்டனை?

சிறைக்கூடங்களில் பெண் கைதிகளின் நிலைமை, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் யாவும் அதிகாரிகள் சொல்லிக்கொள்வதைப் போல இல்லை என்கிறது மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் அளித்துள்ள அறிக்கை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோரது உத்தரவின்பேரில், தமிழகச் சிறைகளில் ஆய்வு செய்தபின் இந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார்.

சிறைக் கைதிகளைப் பார்க்கவும், உறவினர்கள் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கவும் கையூட்டுத் தொகை அளிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண ஏழைக் கைதிகள் படும் மனஉளைச்சலுடன் இத்தகைய ஊழலும் சேர்ந்து அவர்களது குடும்பத்தாரை மேலும் கவலையில் ஆழ்த்தும் சூழலை அந்த அறிக்கை மூலம் உணர முடிகிறது.

கைதி வசதிகள் படைத்தவராகவோ அல்லது செல்வாக்கு பெற்றவராகவோ இருந்தால் அவரால் எதையும்- விரும்புகிற உணவு, அறை வசதிகள், செல்போன், மருத்துவம், மருந்துகள், மது வகைகள்- பெற முடியும் என்பதை சிறைக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒருவர் சிறைக்குள் இருக்கும்போதும் வெளியுலகில் அவருக்கு ஆதரவு, செல்வாக்கு இருக்கும் என்றால்தான் சிறைக்குள் அவர் மனிதனாக மதிக்கப்படுகிறார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய முறைகேடுகளைவிட மனவருத்தம் தருகிற இரு விஷயங்கள் சிறைக்கூடங்களில் கவனிக்கப்படாமல் உள்ளன.

அவை: எய்ட்ஸ், நீரிழிவு நோய்.

சிறைக்கூடங்களில் கைதிகளிடம் எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. சிறையில் ஓரினச் சேர்க்கை பரவலாக இருப்பதால் அங்கு எய்ட்ஸ் வேகமாகப் பரவுகிறது என்பதைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லியும்கூட, சிறைக்கூடங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எய்ட்ஸ் நோய் உள்ள கைதிகளைத் தனியாகப் பிரிக்க வேண்டிய அவசியம் சிறைக்கூடத்திற்கு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

இன்றைய நாளில், நீரிழிவு நோய் என்பது சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கிறது. இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கு அல்லர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

நீரிழிவு நோயாளிக்கு முதன்மையான மருந்து உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால், சிறைக்கூடங்களில் நீரிழிவு நோயாளிக்கென தனி உணவுகள் கிடையாது. இதனால் பல நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். சில நேரங்களில் இறந்தும்போகிறார்கள்.

சிறைக்கூட பிரச்சினைகளைவிட மோசமானது எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய். தற்போது சிறையில் உள்ளவர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயாளிகள், எத்தனை பேர் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் என்பதை சிறைக்கூடங்கள் வெளிப்படையாக பரிசோதனைகள் நடத்தி அறிவிப்பதன் மூலம்தான் இக்குறைகளைப் போக்க முடியுமே தவிர, இதை மூடி மறைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

சிறைக்குச் சென்ற ஒருவர் விடுதலையாகும்போது திருந்தி வருவார் என்ற நம்பிக்கையைவிட நோய்களுடன் வருவார் என்ற பீதி அவர்களது உறவினர்களிடத்தில் எத்தகைய பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted in Advocate Commissioner, AIDS, AP Shah, Chennai, Chief Justice, Correctional facility, Corruption, Courts, diabetes, Disease, Doctor, Editorial, Female Correction Centres, Gay, GLBT, Healthcare, Jail, Judge, Justices, K Chandra, Lady Prisoners, Law, Lesbian, Madras High Court, Medicine, Order, Police, Prison, Registrar General, Sex, Sudha Ramalingam, Tamil Nadu, TN, Violence, Women Cells | Leave a Comment »

Sealing resumes in Delhi amid tight security – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

யார் செய்த தவறுகள்?

சட்டத்துக்குப் புறம்பாக உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து வணிகர்கள் தில்லி மாநகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய தில்லி அரசும் மத்திய அரசும் “”வர்த்தகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று சொல்லி சலுகை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.

தில்லியைத் தவிர, வேறு எங்கு இப்பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த அளவுக்கு மத்திய அரசு “கருணை’காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய அரசு, சட்டத்தை வளைந்து போகச் செய்வது சரியானதல்ல. தில்லியில் இன்று ஏற்பட்டுள்ள இதே பிரச்சினை எல்லா நகரங்களிலும் இருக்கிறது. தில்லியில் அரசு மேற்கொள்ளும் உறுதியான முடிவினால் இந்தியாவில் அனைத்து நகரங்களுக்கும் புதிய விடிவு பிறக்கும். மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.

“”கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசு வலிமையற்றது அல்ல. கழுத்தில் கத்தியை வைத்து சலுகையை யாரும் கேட்க முடியாது. சட்டம் ஒழுங்கை மீறி மக்களை பணயம் வைத்து சலுகை கேட்க முடியாது” என்று நீதிமன்றம் அளித்துள்ள பதில் மிக அழுத்தமானது.

நாற்பது ஆயிரம் வர்த்தகர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதை வர்த்தகர்களும் ஏற்க வேண்டும்.

தேவையற்ற ஆக்கிரமிப்புகளால் திணறிக் கொண்டிருக்கும் தில்லி நகரை சீரமைக்கும் முதல் முயற்சிக்கே இந்த அளவுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதற்குக் காரணம் அரசியல். வாக்குவங்கிகளை வசமாக்கும் முயற்சியில் எந்த வழியை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்ற அரசியலால் இந்த நிலைமை.

சட்டத்துக்குப் புறம்பான கடைகளைத் தொடக்க நிலையிலேயே தடுக்க வேண்டிய நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளே பல இடங்களில் இவை நிரந்தரமாக நீடிக்கக் காரணமாக இருக்கின்றனர்.

பல ஊர்களில், நிரந்தரக் கட்டடத்தில் கடை இருந்தாலும் அதை “தினசரி கடை’ என்பதாகக் குறைந்த கட்டணத்துக்கு (அதிகக் கையூட்டுப் பெற்று) நாள் வாடகை ரசீது கொடுக்கிறார்கள். அதே இடத்தில் பல ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாக ஒரு “ஆதாரத்தை’ ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஒரு நேர்மையான அதிகாரி இந்த ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டால், இந்த ரசீதுகளை ஆதாரமாகக் காட்டி, “தினசரி கடைகளை’த் தொடர்ந்து நடத்த அனுமதி கேட்டு வழக்குப்போட்டு, வழக்கு முடியும் வரை தினசரி கடைகள் மீது நடவடிக்கை கூடாது என்று தடையுத்தரவும் பெற்று, நிரந்தரக் கடைகள் நீடிக்கின்றன.

அண்மையில், ஒரு மாநகராட்சிக்குச் சொந்தமான 3.4 ஏக்கர் நிலம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் (பல ஆண்டுகள் கழித்து) கையகப்படுத்தப்பட்டது. அங்கிருந்த நூறு கடைக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் போராட்டத்தைக் கைவிட்ட கடைக்காரர்கள் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை இதுதான்: “”….நாங்கள் (ஓர் அரசியல்வாதியிடம்) முப்பதாயிரம், நாற்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம். அட்வான்ஸ் மட்டும் திரும்பக்கிடைக்க வகை செய்யுங்கள்”.

இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது, தில்லி போன்ற பெருநகரில் 40,000 வர்த்தகர்கள் மூலம் அரசுக் கருவூலத்துக்கு வராமல் திசைமாறிய தொகை எத்தனை கோடியாக இருக்கும்?
The areas being targetted are:

  • Category A – Defence Colony, Friends Colony, Panchsheel Park, Vasant Vihar.
  • Category B – G K 1, 2, 3 4, Green Park, Green Park Extension, Hauz Khas, Gulmohar Park, Panchsheel Enclave, South Extension.

டெல்லியில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு இன்று தொடங்கியது

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதி இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை இடித்தும், சீல் வைத்தும் டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செப்டம்பர் மாதம் நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.

இதை தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு பகுதி களில் உள்ள 44 ஆயிரம் கடைகளுக்கும் சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி யாக உத்தரவிட்டது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பில் ஈடுபட்டனர். தடியடி நடந்தது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. வியாபாரிகள் கல்வீசியதில் பஸ்கள் சேதம் அடைந்தது. துணை ராணுவத்தால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்று முதல் மீண்டும் கடைகளுக்கு சீல் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டெல்லி குடியிருப்பு பகுதிகளில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு பணி இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதங்கள் நடைபெற்று விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Ashram Chowk, Business, Commerce, Corruption, Customers, Delhi Shops, Dinamani, Editorial, Kapil Sibal, Municipal Corporation of Delhi, New Delhi, nexus, Politicians, Safdarjung, Shop owners, Supreme Court | Leave a Comment »

Dogs Attack – Healthcare Reform : Dinamani Editorial

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

தேவை-பாதுகாப்பான தெருக்கள்!

நாய் மனிதனைக் கடித்தது செய்தியல்ல…மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி என்று செய்தி பற்றிய இலக்கணம் சொல்வதுண்டு. நமது யதார்த்த வாழ்க்கை, இந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்துவிடுகிறதல்லவா? இன்றோ நாய் மனிதனைக் கடித்ததே முக்கிய செய்தியாகிவிட்டது. சில தினங்கள் முன்பு உதகையின் கோத்தகிரிப் பகுதியில் ஒரு பள்ளிச் சிறுவன் தெருநாய்க் கூட்டத்தின் கொலைவெறித் தாக்குதலால் உடலெங்கும் கடும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி வெளியானபோது நம்மில் பலர் திடுக்கிட்டிருப்பார்கள்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து அச் சிறுவனின் உடல் நலம் குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும் குன்னூர் நகராட்சி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான வெங்கடாசல மூர்த்தி அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது.

தெருநாய்க் கூட்டங்களால் மனித உயிர்களுக்கு ஆபத்து நேரும் நிலை ஏற்பட்டது எவ்வாறு? இதற்கு யார் பொறுப்பு? நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மீதும் குற்றம் சொல்ல முடியாது. காரணம் தெருநாய்களைப் பிடிக்கவும் கொல்லவும் நீதிமன்றத் தடைகள் உள்ளன.

இப்படித் தடைபெற்றுள்ள பிராணி நலச் சங்கங்கள் தெரு நாய்களின் தொல்லையைத் தவிர்க்க அவற்றுக்குக் கருத்தடை செய்வதையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போடுவதையும் பரிந்துரை செய்கின்றன. ஆனால் இன்று சென்னை நகரின் சந்துகளில் ராஜாங்கம் நடத்தும் லட்சக் கணக்கான நாய்கள் அனைத்துக்கும் இப்படி ஊசி போட சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. இதனிடையே மழைக்கால இருளில் இரவுப் பணி முடிந்து போவோர் தொடங்கி பள்ளிக் குழந்தைகள் வரையில் நாய்க்கடிபடும் சம்பவங்கள் அதிகரித்தவாறே உள்ளது கவலைக்குரியது. இந்தப் பிரச்சினையின் ஒரு தீவிர முகம்தான் கோத்தகிரியில் பள்ளிச் சிறுவன் நாய்க்கூட்டங்களால் கடிபட்ட சம்பவம்.

நம் நாட்டைக்காட்டிலும் நாய் வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணி வளர்ப்பில் அதிக முனைப்புக் காட்டும் வெளிநாடுகள் அனைத்திலும் இந்தத் தெருநாய்ப் பிரச்சினை இல்லை. அந்த நாடுகள் இப்பிரச்சினையை எப்படித் தீர்த்தன என்பதை நமது உள்ளாட்சி நிர்வாகிகள் கவனித்துக் கற்று அறியலாம். லைசென்ஸ் இல்லாத தெரு நாய்களைப் பிடித்துச்சென்று அவற்றை தனியார் பிராணி நல அமைப்புகளின் கண்காணிப்பில் பராமரிப்பதன் மூலம் நம் தெருக்களைப் பாதுகாப்பானதாக ஆக்கலாம்.

தெரு நாய் பிரச்சினையில் இன்னொரு கிளைப் பிரச்சினையும் உள்ளது. அது வெறிநாய்க் கடி மருந்துக்கு அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடு. சமீபத்தில் கூட பொன்னேரி அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இன்று தமிழகத்தில் காணப்படும் தெருநாய்ப் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது வெறிநாய்க்கடி தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்வது அவசர அவசியமாகும்.

பெரும்பாலும் நகரம், புறநகரங்கள் சார்ந்த இந்த முக்கியப் பிரச்சினை பற்றி பேசும் போது இதே போன்ற கிராமப் பிரச்சினை ஒன்றையும் இங்கு மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும். அது, ஆண்டுதோறும் அதிக அளவில் பாம்புக் கடிக்குப் பலியாகும் கிராம மக்கள் பற்றியது. இச்சாவுகளுக்குப் முக்கிய காரணம் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் பாம்புக் கடிக்கான மருந்து தயார் நிலையில் இல்லாமையே. இம் மையங்களில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், அவை இங்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.

Posted in Animals, Bite, Dinamani, Dogs, Editorial, Healthcare, Hospitals, Maneka Gandhi, Medicines, Menaka Gandi, Op-Ed, Snakes, SPCA, Stock | Leave a Comment »

DMK Government’s undemocratic collusion with election commission

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, தன் மணிமகுடத்தில் மீண்டும் அந்த வைரத்தைப் பதித்துக்கொண்டது.

சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது மட்டுமன்றி, முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இப்போது சுமார் 7 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு முன் 35 ஆயிரம் வாக்குகள் பெற்ற அதிமுக இத்தேர்தலில் 19,909 வாக்குகளே பெற முடிந்துள்ளது. ஆனால், தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. கடந்த தேர்தலைவிட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, மொத்தம் 17 ஆயிரம் வாக்குகளுடன் அதிமுகவை மிக நெருங்கி, 3-வது இடத்தில் வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதே நிலைதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் தொடர்கிறது.

மதுரை மாநகரின் வெற்றி திமுகவுக்குப் பெருமை சேர்த்தாலும், சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குப் பதிவை நிறுத்தி வைக்கும் அளவுக்கு நடந்த வன்முறை, அதன் பெருமையைக் குறைப்பதாய் அமைந்துவிட்டது.

உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளுங்கட்சி விரும்பாத சம்பவங்களை சில அதிகாரிகள் பூசிமெழுகுவது வழக்கமான ஒன்றுதான். இது வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜெண்ட்டுகள் என்ற அளவில் முடிந்து போகும்.

2001-ல் அதிமுக ஆட்சியில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலிலும் கள்ளவோட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது தகராறு என பல சம்பவங்கள் இருந்தன. இருப்பினும் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரும், எந்தக் கூட்டணியிலும் இல்லாத பாஜக, தேமுதிகவினரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவைக் குற்றம் சாட்டியதைப் போன்ற சம்பவம் இதுவே முதல்முறை.

சென்னை மாநகர முந்தைய மேயரும் இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அப்பதவியிலிருந்து விலக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடுதான்-ஓர் இடத்தில் கூட அதிமுக வந்துவிடக்கூடாது என்ற தீவிரமும், அதைத் தொடர்ந்த வன்முறையும் எனக் கருதப்படுகிறது. திமுகவின் கோபம் நியாயமானதாக இருக்கலாம். அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது.

வன்முறைகள் தலைகாட்டியவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். “முரசு சின்னத்தை முடக்கிவிட்டீர்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதும் உடனே எச்சரிக்கை விடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, வன்முறை நடந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால் இன்று நீதிமன்றத்தில் குட்டுப்படும் நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.’

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தன. அதேபோன்ற நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் செய்யத்தவறி விட்டது. மக்களுக்கு, குறிப்பாக ஊரக மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இதுபோன்ற செயல்களால் குறைந்து போகும்.

தமிழகத்தில் நடந்த பிரசாரங்களில் மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் முழுமையாகத் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இதுவே ஒரு பொதுவான ஜனநாயகத்தன்மைக்கு விரோதமானது. இது எதிர்மறை அரசியலாகும். யார் ஆட்சி செய்தாலும் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கம்.

Posted in anti-people, autocrat, Chennai, Chief Minister, civic poll, Democracy, Dinamani, DMK, Editorial, election commission, Elections, Karunanidhi, Local Body, Madras, Madurai, MK Stalin, Polls, Tamil Nadu, Violence | Leave a Comment »

Meningo encephalitis & Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன் குனியாவும் சுற்றுப்புறத் தூய்மையும்

“”என் மகள் சிக்கன் சாப்பிடுவதே இல்லைங்க. அவளுக்குப் போய் “சிக்கன் குனியா’ வந்துவிட்டது” என்று புலம்பினார் கிராமத்து நண்பர். “”ஐயா, அது சிக்கன் குனியாவும் அல்ல; மட்டன் குனியாவும் அல்ல; சிக்குன் குனியா” என்று திருத்தினேன்.

கிழக்கு ஆப்பிரிக்க பாண்டு இன மக்களின் மொழியாகிய ஸ்வாஹிலி (Swahili) யில் “சிக்குன் குனியா’ என்பதற்கு “வளைத்துப் போட்டுவிடுவது’ (that which bends up) என்று பொருள். இந் நோயால் தாக்கப்படுபவர்களின் மூட்டுகள் பாதிக்கப்பட்டு முடக்கப்படுவதால் சிக்குன் குனியா என்ற பெயர் படைத்தது.

ஏடெஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுக்கள் கடிப்பதனால் இந்தக் கொடிய நோய் ஏற்படுகிறது. குளிர்காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுக்கு மூட்டு வலி, வாய்க்கசப்பு எனப் பல்வேறு சிரமங்களை இந்த நோய் உண்டாக்குகிறது.

சிக்குன் குனியாவின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாடுதான். இங்குதான் 1952 – 53 ஆண்டுகளில் இந்நோய் கண்டறியப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள க்ளாங் (Klang) துறைமுகத்திலும் சிக்குன் குனியாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்துமாக் கடலில் மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே பிரான்சுக்குச் சொந்தமான “ரியூனியன்’ (Reunion) என்று ஒரு தீவு உள்ளது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை நோயாக சிக்குன் குனியா கோரத் தாண்டவம் ஆடியது. தீவில் வாழும் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் சிக்குன் குனியாவால் கடுமையாக முடக்கப்பட்டனர். அருகே இருந்த மொரிஷியஸ் தீவையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. இங்கு சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறு.

இந்த ஆண்டிலும் (2006) ரியூனியன் தீவில் எழுபதாயிரம் பேர் இந்நோயினால் அவதிக்கு உள்ளாயினர். பிரான்சு நாடு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, கொசுக்களை அழித்திட 3,600 பேரைப் பணியில் ஈடுபடுத்தியது. மேலும் ராணுவ வீரர்களும் இப்பணியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

இந்தச் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயன்று என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ரியூனியன் தீவில் டைலான் (Dylan), ட்ரிசியா (Tricia) என்ற பத்து வயது சிறார்கள் இருவர் இறந்து போயினர். டைலான், சிக்குன் குனியா பாதித்த இரண்டு நாள்களிலும், ட்ரிசியா ஒரு வாரம் கழித்தும் மரணத்தைத் தழுவினர். மொரிஷியஸ் தீவிலும் சங்கீத் எம்ரித் (Sangeet Emrith) என்ற முப்பத்து மூன்று வயது நபரும் இந் நோய் தாக்கி மரணமடைந்தார். மூளையின் நரம்புகளை சிக்குன் குனியா வைரஸ் பாதித்ததால் மெனிங்கோ என்செஃபாலிட்டிஸ் (Meningo encephalitis) நோயினால் இவர்கள் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மரணங்கள்தான் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயாக இருக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டை முதன்முதலாக மருத்துவ உலகில் விதைத்தன எனலாம். 2004-ல் 3884 ஆக இருந்த இத்தகைய மரணங்கள் 2005ஆம் ஆண்டில் 4272 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் இடெல்மேன் (Robert Edelman) அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தடுப்பூசி (Vaccine) மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்தத் தடுப்பூசி சிக்குன் குனியாவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை இருபது பேருக்கு மட்டுமே சோதனை முயற்சியாகப் போடப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ராபர்ட் இடெல்மேனின் இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் உலக அளவில் இந்நோயின் பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். சிக்குன் குனியா வைரஸ் வேறு வேறு மனிதர்கள் மீது வேறு வேறு வகையான உயிரியல் அறிகுறிகளை (different biological symptoms on different persons) உருவாக்கக் கூடும் என்கிறார் இடெல்மேன்.

சிக்குன் குனியா மட்டுமல்ல டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு ஆட்கொல்லி நோய்களுக்கும் கொசுக்களே மூலகாரணம். அதுவும் ஏடெஸ் எஜிப்டி கொசுவுக்கு “மாவீரன் ஏடெஸ்’ என்று விருதே வழங்கலாம். தமிழக எதிர்க்கட்சிகளைக் கைகோர்த்து வீதிக்கு வந்து போராட வைத்துவிட்டதே!

கொசுக்களை மனிதர் ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லையேல் கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை ஒழிக்க முற்படும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், தேங்கியுள்ள நீர் நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதும் இன்றைய அவசரத் தேவைகள்.

கொசு ஆசான், நம்மை “முட்டிக்கு முட்டி தட்டி’ச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் இது; கற்போமா?

Posted in Background, Chicken Kunya, Chikan Kunya, Chikun Kunya, Clenaliness, Dinamani, Editorial, Healthcare, History, Meningo encephalitis, Op-Ed, World | Leave a Comment »

Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது

டிசம்பர் 2005-ல் மகாராஷ்டிர மாநிலத்தில் பெயர் தெரியாத காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ததில் அது சிக்குன் குனியா எனத் தெரிய வந்தது. அது பரவும் வேகமும் அதன் தன்மையும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அப்போதே எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. விளைவு? மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என 6 மாநிலங்களுக்குப் பரவிய சிக்குன் குனியா இப்போது அரசையும் கடிக்கிறது.

இது ஆட்கொல்லி நோய் அல்ல. ஆள்முடக்கி நோய். இதற்கான மருந்து (காய்ச்சலுக்கான பாரசிடமால் போன்ற) குறைந்த செலவு மாத்திரைகளும் முழு ஓய்வும்தான். இந்த எளிய தகவல் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்தும்கூட, அவர்களது சேவைக்கரம் கிராமங்களுக்கு நீளவில்லை. இதனால் மக்கள் அதிகம் செலவிட நேரிட்டது.

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் காய்ச்சல் மருந்துடன், செலவுமிக்க வைட்டமின் மாத்திரைகள், வலிநிவாரணிகளை சில மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் சில வலிநிவாரணிகள் இரைப்பையைப் பொத்தலாக்கியிருப்பதை அங்கே தற்போதுதான் உணர்கிறார்கள். சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் இறப்பதற்கு இதுபோன்ற பக்கவிளைவுகளும் முதுமையுமே முக்கிய காரணம். இந்த நோய் ஏழை-நடுத்தரக் குடும்பத்தினரைப் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வோரும், அன்றாட உடல்உழைப்பில் வாழ்வோரும் பலநாள் ஊதியத்தை இழந்ததோடு, மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டியதாயிற்று. பல இடங்களில் குடும்ப அங்கத்தினர் அனைவருமே நோயால் பாதிக்கப்பட்டு யாருமே வேலைக்குச் செல்ல முடியாத சூழல்களும் பல குடும்பங்களில் ஏற்பட்டன.

காய்ச்சல் நின்றபின் மூட்டுகள் வலிக்கும். அதனால் எந்த வேலையும் செய்ய முடியாது. செய்தால் நோயின் மீள்தாக்குதலுக்கு ஆளாக நேரும். ஆனால் அன்றாடம் உழைத்துச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்போர், வலியைப் பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய் மீண்டும் அவதிப்பட்டுள்ளனர். இந்த ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நின்ற பிறகு 15 நாட்களுக்கு, மருந்துக்குப் பதில் ஒரு கிலோ ரேஷன் அரிசி (ரூ.2 தான்) கொடுத்திருந்தால்கூட இவர்கள் போதுமான ஓய்வு எடுத்து, நோயின் மீள்தாக்குதலைத் தவிர்த்திருப்பார்கள். சிக்குன் குனியா நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை, அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தினமும் “சீரியல்‘ நேரத்தில் இரண்டு முறை இலவசமாக ஒளிபரப்பச் செய்திருந்தால், ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாத பகுதியில் வசிக்கும் கிராம மக்களும்கூட விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். காய்ச்சலுக்கு உண்டான மருந்தை- குறைந்த விலை என்பதால் வாங்கிச் சாப்பிடவும் செய்திருப்பார்கள். மருத்துவச் செலவும் குறைந்திருக்கும். அரசு இதை யோசிக்கத் தொடங்கியபோது சிக்குன் குனியாவுக்கு அரசியல் காய்ச்சல் வந்துவிட்டது.

தற்போது 6 மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாற்காலிகச் சுகாதார மையங்களை அமைத்தல், இலவசமாக அல்லது குறைந்த செலவில் மாத்திரைகள் கிடைக்கச் செய்தல், பாதிக்கப்படும் ஏழைகளின் ஊதிய இழப்புகளை உணவுப் பொருளால் ஈடுசெய்ய வழிகாணுதல் ஆகியவற்றை அமைச்சர்கள் கூட்டம் விவாதிக்கும் என நம்பலாம்.

Posted in Chicken Kunya, chickun gunya, Chikun Kunya, Dengue, Dinamani, Editorial, Healthcare, Outbreak, solutions, Tamil | Leave a Comment »

Dinamani Editorial on Eezham – Sri Lanka Situation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

மற்றொரு முயற்சி

இலங்கையில் மீண்டும் லேசான நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது. அண்மைக்காலத்தில் நிகழ்ந்து வரும் ரத்தக்களரி ஓய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இலங்கையில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜூலை 22 லிருந்து செப்டம்பர் 26 வரை நடந்த சண்டையில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். இது, இலங்கைத் தீவில் மனிதாபிமானத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சோதனையை வெளிப்படுத்துகிறது என்று அங்கு போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாயை மூடியதால் ஆத்திரமடைந்த இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்தது. புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். அதே சமயம், திரிகோணமலை மாவட்டத்தில் ஏற்கெனவே புலிகள் வசம் இருந்த பகுதியை ராணுவம் கைப்பற்றியதால் சண்டை தொடர்ந்தது. இதன் மூலம் இரு தரப்பினருமே சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரலிலிருந்து அவ்வப்போது நடைபெறும் மோதல்களால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைக் காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று விட்டனர். இது நாட்டின் கிழக்கு வடக்குப் பகுதிகளில் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நெடுஞ்சாலை ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து யாழ். நகரும், யாழ்ப்பாண தீபகற்பப் பகுதியும் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. உணவுப்பொருள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல், இலங்கை செலாவணிப்படி ரூ. 500க்கு உயர்ந்து விட்டது. 10,000 பேர் கொழும்பு வழியாக திரிகோணமலை செல்ல அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனங்களிலிருந்து பணம் எடுக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் பெரும்பாலான பொருளாதார, உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2002 ல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு அர்த்தமில்லாததாகி விட்டது. எனவே, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை முலம் தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமைதிப் பேச்சைத் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே தூதர் ஜான் ஹான்சன் பாயர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார். அமைதிப் பேச்சைத் தொடங்க புலிகள் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் முதலில் அரசுத் தலைவர்களையும் பின்னர் கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் பிரபாகரனை நார்வே தூதர் சோல்ஹைம் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறை ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இரு தரப்பினரும் சந்தித்துப் பேச கடந்த 7 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளிப்போடப்பட்டது. இப்போது அக்டோபர் 2 வது வாரத்துக்குள் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை இரு தரப்பினரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும்.

Posted in Dinamani, Editorial, Eezham, Ilanagai, Kilinochi, LTTE, Negotiation, Norway, Peace, Situation, Sri lanka, Tamil, Triconamalee, War | Leave a Comment »