Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Exam papers – Sample III

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மாதிரி வினாத் தாள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்: தமிழ் இரண்டாம் தாள்

(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்) (தொடர்ச்சி)

ஐய. பின்வரும் வினாக்களுள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதுக.

2*10 = 20

13. “பால்வண்ணம் பிள்ளை (அல்லது) “சட்டை’ கதையைக் கருப்பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.

(அல்லது)

“ஓர் உல்லாசப் பயணம்’ (அல்லது) “பழிக்குப் பழி’ கதையில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடகமாக வரைக.

14. “ஒவ்வொரு கல்லாய்’ (அல்லது) “மண்’ சிறுகதையில் நும் மனம் கவர்ந்த கதை மாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.

(அல்லது)

ஒரு குடும்பத்தில் பொறுப்பான தந்தை, அன்பான தாய், நல்ல குழந்தைகள் அமைந்துள்ள சூழலைக் கருவாய் அமைத்து ஒரு கதை எழுதுக.

(அல்லது)

சுனாமியில் சிக்கி வழி தவறி வந்த குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்குவது போல் ஒரு கதை எழுதுக.

ய. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து அதில் அமைந்துள்ள மையக் கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம், கற்பனை ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.

1*10 = 10

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்தே

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தை!

கோலம்முழு தும்காட்டி விட்டால் காதற்

கொள்கையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்தனிப் பூவோ நீதான்?

சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அதிக ஊற்றோ?

காலை வந்த இளம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

– கவிஞர் பாரதிதாசன்

யஐ. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம் தருக:

3*2 = 6

16. ஆஹழ்ந்ண்ய்ஞ் க்ர்ஞ்ள் ள்ங்ப்க்ர்ம் க்ஷண்ற்ங்.

17. உம்ல்ற்ஹ் ஸ்ங்ள்ள்ங்ப்ள்ம்ஹந்ங்ற்ட்ங்ம்ர்ள்ற்ய்ர்ண்ள்ங்.

18. ஏஹள்ற்ங் ம்ஹந்ங் ஜ்ஹள்ற்ங்.

19. ரட்ங்ழ்ங் ற்ட்ங்ழ்ங் ண்ள் ஜ்ண்ப்ப், ற்ட்ங்ழ்ங்ண்ள்ஹஜ்ஹஹ்.

20. அப்ப் ஸ்ரீர்ஸ்ங்ற், ஹப்ப் ப்ர்ள்ள்.

21. ஓண்ய்க்ய்ங்ள்ள் ஸ்ரீஹய்ய்ர்ற் க்ஷங்க்ஷர்ன்ஞ்ட்ற்.

யஐஐ. 22. பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில் வாழ்க்கை நிகழ்வில் அமைத்து (பத்து வரிகளில்) எழுதுக.

1*4 = 4

அ) உரிய காலத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்

ஆ) சிறுதுளி பெருவெள்ளம்

இ) வருமுன் காத்தலே சிறந்தது

(அல்லது)

“எரிபொருள் சிக்கனம் தேவை’ (அல்லது) நல்ல நண்பன்’ என்ற தலைப்பில் சிந்தித்து உமது சொந்தப் படைப்பாகக் கவிதை ஒன்றை (எட்டு அடிகளுக்குக் குறையாது பத்து அடிகளுக்கு மிகாது) எழுதுக.

யஐஐஐ. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விடை எழுதுக.

10*1 = 10

23. புலி வந்தன; எருதுகள் ஓடியது.

(வாக்கியப் பிழையைத் திருத்துக)

24. நெல்லிகாய், தான்றிகாய், கடுகாய் ஆகிய மூன்று சரக்குகளை கொண்டது திரிபலை எனப்படும்.

(தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக).

25. அலை, அழை (அல்லது) ஆணி, ஆனி (பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி வாக்கியங்களில் அமைத்து எழுதுக?)

26. டி.வி.யில் சீரியல் பார்க்காவிட்டால் லைஃபே போர் அடித்து விடும்’ என்கிறாள் பாட்டி.

(பிறமொழிச் சொற்களை நீக்கி இனிய தமிழில் எழுதுக)

27. சுபதினத்தில் கிருகப் பிரவேசம் முடித்த தம்பதிகள் அனைவரையும் உபசரித்தார்கள்.

(பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி நல்ல தமிழில் எழுதுக)

28. கோளிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

(கொச்சையான வழுஉச் சொற்களைத் திருத்தி எழுதுக)

29. நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்.

(தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி எழுதுக.)

30. தோட்டத்தில் உள்ள வாழைச் செடி பார்க்க அழகாக உள்ளது.

(மரபு வழுவை நீக்கி எழுதுக)

31. பரவை இறையாகப் பயரு வகைகளைத் திண்ணும்.

(எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)

32. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது என்று என் தந்தை சொன்னார்.

(பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக)

விடைகள் -கேள்வி எண் 16-21; 23-32

16. குரைக்கின்ற நாய் கடிக்காது

17. குறைகுடம் தளும்பும்

18. பதறிய செயல் சிதறும்

19. மனம் இருந்தால், மார்க்கமுண்டு

20. பேராசை பேரிழப்பு

21. அருளை வாங்க முடியாது

23. புலி வந்தது; எருதுகள் ஓடின.

24. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று சரக்குகளைக் கொண்டது திருபலை எனப்படும்.

25. அலை -கடல் அலை, அலைந்து திரிதல்

அழை -கூப்பிடு

ஆணி -கூரிய இரும்புத்துண்டு

ஆனி -ஒரு மாதம்

26. “தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்காவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்’ என்கிறாள் பாட்டி.

27. நன்னாளில் புதுமனை புகுவிழாவை முடித்த கணவன் மனைவியர் அனைவரையும் ஒப்பினார்கள்.

28. கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது.

29. நீரோ சோறோ எது கிடைத்தாலும் உண்டு செல்வேன்.

30. தோட்டத்தில் உள்ள வாழைக்கன்று பார்க்க அழகாக உள்ளது.

31. பறவை இரையாகப் பயறு வகைகளைத் தின்னும்.

32. “”ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது”, என்று என் தந்தை சொன்னார்.

22 பதில்கள் to “Tamil Exam papers – Sample III”

  1. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை: பொதுத் தமிழ்

    9) ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல்.

    தமிழ் வினாத்தாளில் கேட்கப்படும் மிக எளிமையான பகுதி இதுவே ஆகும். இப்பகுதியிலிருந்து இரண்டு அல்லது மூன்று வினாக்கள் உறுதியாகக் கேட்கப்படுகின்றது.

    தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு. இந்த 42 எழுத்துகளுக்குரியப் பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும். 42 எழுத்துகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    42 எழுத்துகளின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின்வருமாறு:

    1. உயிர் இனம் 6

    ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

    ஆ -பசு, எருது, ஆச்சா மரம்

    ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

    ஊ -இறைச்சி, உணவு, விகுதி

    ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

    ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

    ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

    2. ம இனம் 6

    மா, மீ, மூ, மே, மை, மோ

    மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

    மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

    மூ -மூப்பு (முதுமை), மூன்று

    மே -மேல், மேன்மை

    மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

    மோ -முகர்தல்

    3. த இனம் 5

    தா, தீ, தூ, தே, தை

    தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை

    தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

    தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு

    தே -கடவுள்

    தை -தமிழ் மாதம், தையல், திங்கள்

    4. ப. இனம் 5

    பா, பூ, பே, பை, போ

    பா -அழகு, பாட்டு, நிழல்

    பூ -மலர், சூதகம்

    பே -அச்சம், நுரை, வேகம்

    பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

    போ -செல்

    5. ந இனம் 5

    நா, நீ, நே, நை, நோ

    நா -நாக்கு, தீயின் சுவாலை

    நீ -நீ

    நை -வருந்து, இகழ்ச்சி

    நோ -நோவு, துன்பம், வலி

    6. க இனம் 4

    கா, கூ, கை, கோ

    கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

    கூ -பூமி, ஏவல், கூழ், கூவு

    கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்

    கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

    7. வ இனம் 4

    வா, வீ, வை, வெü

    வா- வருகை

    வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு

    வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

    வெü -வவ்வுதல் (அ) கெüவுதல் (ஒலிக்குறிப்பு)

    8. ச இனம் 4

    சா, சீ, சே, சோ

    சா -சாதல், சோர்தல், பேய், மரணம்

    சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை

    சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்

    சோ -மதில், அரண்

    9. யா -1

    யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

    10. நொ -1

    நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

    11. து -1

    து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

    ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும், இதை நன்குப் படித்து பின்வரும் அசல் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

    6+6+5+5+5+4+4+4+1+1+1 = 42

  2. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு : பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை

    ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்

    1. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறில் -கா

    அ. சோலை, ஆ. குயில், இ. கத்துதல், ஈ. மயில்

    2. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருளைத் தேர்க -ஏ

    அ. கருவி, ஆ. பொருள், இ. அம்பு, ஈ. எழுத்து

    3. ஓரெழுத்து ஒரு பொருளியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -வா

    அ. வருதல், ஆ. வந்த, இ. வந்து, ஈ. வருக

    4. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ

    அ. பேசுதல், ஆ. கோயில், இ. விலங்கு, ஈ. பசு

    5. மா என்பதன் பொருள்

    அ. மாதிரி, ஆ. வீசிய, இ. சிறிய, ஈ. பெரிய

    6. வீ என்பதன் பொருள்

    அ.மலர், ஆ. சிலர், இ. பலர், ஈ. களர்

    7. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை எழுது -வீ

    அ. காய், ஆ. கனி, இ. மலரா மொட்டு, ஈ. பூ

    8. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -பா

    அ. பாடல், ஆ. அழைத்தல், இ. கத்துதல், ஈ. ஒலி

    9. ஏ என்னும் எழுத்து குறிக்கும் பொருள்

    அ. வாள், ஆ. வேல், இ. அம்பு, ஈ. பொருள் இல்லை

    10. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ

    அ. காளை, ஆ. பசு, இ. எருமை, ஈ. வியப்பு

    11. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிக -ஈ

    அ. ஓர் எழுத்து, ஆ. கொடு, இ. உயிர், ஈ. இளித்தல்

    12. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -தீ

    அ. தீய்த்தல், ஆ. தீமிதி, இ. நெருப்பு, ஈ. வெப்பம்

    13. கா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்குரிய பொருள் யாது?

    அ. காசு, ஆ. சோலை, இ. மாடு, ஈ. காலம்

    14. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -தூ

    அ. செம்மை, ஆ. பசுமை, இ. கருமை, ஈ. வெண்மை

    15. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தெளிக -கா

    அ. சோலை, காகம்; ஆ. பூ, காவல்; இ. தோப்பு, காக்கை; ஈ. சோலை, காப்பாற்று

    16. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -சா

    அ. இறந்து போதல், ஆ. நடத்தல் இ. ஓடுதல், ஈ. குதித்தல்

    17. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -போ

    அ. பேசுதல், ஆ. வைத்தல், இ. செல்லுதல், ஈ. கொடுத்தல்

    18. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -கை

    அ. செய்கை, ஆ. ஓர் உறுப்பு, இ. சேர்க்கை, ஈ. வாழ்க்கை

    19. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக -பூ

    அ. மலர், ஆ. மல்லிகை, இ. முல்லை, ஈ. மணம்

    20. கா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?

    அ. காக்கை, ஆ. சோலை, இ. குயில், ஈ. தோட்டம்

    21. தா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?

    அ. காடு, ஆ. கொடு, இ.பாடு, ஈ. தேடு

    22. ஐ என்ற எழுத்தின் பொருள்

    அ. தலைவன், ஆ. உருபு, இ. தகுதி, ஈ. மந்திரம்

    23. மா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?

    அ. பாடல், ஆ. மாண்பு, இ. பெரிய, ஈ. அறிவு

    24. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -ஈ

    அ. கொடு, ஆ. கெடு, இ. ஏசு, ஈ. எடு

    25. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -பா

    அ. பார், ஆ. கேள், இ. ஓடு, ஈ. பாட்டு

    26. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -கா

    அ. காத்தல், ஆ. காக்கை, இ. சோலை, ஈ. பொய்கை

    விடைகள்:- 1) A, 2) C, 3) D, 4) D, 5) D, 6) A, 7) D, 8) A. 9) C, 10) B, 11) B, 12) C, 13) B, 14) D, 15) D, 16) A, 17) C, 18) B, 19) A, 20) B, 21) B, 22) A, 23) C, 24) A, 25) D, 26) C

    ùRôÏl×: EAGLE’s EYE

  3. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை

    10. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்

    ஒரு சொல்லை கொடுத்துவிட்டு அதற்குரிய முதனிலை அல்லது பகுதியை அல்லது வேர்ச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் ஒன்றினைத் தேர்வு செய்தலே இப்பகுதியாகும். மிக எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில் உறுதியாக ஒன்று அல்லது இரண்டு வினாக்களும் இதை தொடர்புபடுத்தி ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படும்.

    வேர்ச்சொல்

    வேர்ச்சொல் என்றால் தர்ர்ற் என பொருள்படும்.

    வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது

    எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.

    சொற்கள்

    வேர்ச் சொல்

    கண்டான்

    நாடினான்

    போகின்றான்

    வென்றான்

    தேடினான்

    பாடுவாள்

    ஓடுகிறான்

    செல்வான்

    அறிந்தான்

    நடந்தான்

    நடித்தான்

    எழுதினான்

    பார்த்தான்

    பருகினான்

    சென்றான்

    கூவினான்

    பணிந்தான்

    உண்டான்

    -காண்

    – நாடு

    – போ

    – வெல்

    – தேடு

    – பாடு

    – ஓடு

    – செல்

    – அறி

    – நட

    – நடி

    – எழுது

    – பார்

    – பருகு

    – செல்

    – கூவு

    – பணி

    – உண்

    காண், உடை, பூசு, பிள, படு, எடு, ஓது, உழு, எழு, வா, போ போன்றவை வேர்ச் சொற்களாகும்.

    வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்

    1. வேர்ச்சொல்லைத் தேர்க -வெந்த

    அ. வே, ஆ. வெகு, இ. வெந்து, ஈ. வேதல்

    2. வேர்ச்சொல்லைத் தேர்க -செத்தது

    அ. செத்து, ஆ. செத்த, இ. சே, ஈ. சா

    3. வேர்ச்சொல்லைத் தேர்க செய்க -போகின்றான்

    அ. போனான், ஆ. போனாள், இ. போகின்றன, ஈ. போ

    4. வினைச்சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -உண்டான்

    அ. உண்ட, ஆ. உண்ணும், இ. உண், ஈ. உண்டு

    5. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்

    அ. வந்த, ஆ. வா, இ. வந்து, ஈ. வருக.

    6. வேர்ச் சொல்லைத் தேர்க -கற்றான்

    அ. கல், ஆ. காண், இ. கற்றான், ஈ. கற்றது

    7. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -ஓடினான்

    அ. ஓடுதல், ஆ. ஓடின, இ. ஓடு, ஈ. ஓடுக

    8. வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக -தருகின்றான்

    அ. தரும், ஆ. தரு, இ. தா, ஈ. தருக.

    9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) -செல்வான்

    அ. சென்ற, ஆ. செல், இ. சென்று, ஈ. செல்கி

    10. வேர்ச்சொல்லைத் தேர்க -நொந்தான்

    அ. நொ, ஆ. நோ, இ. நொவு, ஈ. நொண்டு

    11. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -படித்தான்

    அ. படித்த, ஆ. படித்து, இ. படி, ஈ. படித்தல்

    12. வேர்ச்சொல்லை தேர்க -கண்டு

    அ. கண், ஆ. காண்கு, இ. காண், ஈ. காண்க

    13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்

    அ. வ, ஆ. வந்து, இ. வந், ஈ. வா

    14. வேர்ச்சொல் அறிந்து எழுதுக -கண்டு

    அ. காண், ஆ. கண், இ. காண்க, ஈ. காணல்

    15. வேர்ச்சொல்லை கண்டுணர்ந்து குறிக்க -பாடிய

    அ. பாடு, ஆ. பா, இ. பண், ஈ. பாடி

    16. சென்றன -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க

    அ. சென், ஆ. சென்ற, இ. சென்று, ஈ. செல்

    17. கற்றவர் -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க

    அ. கற்க, ஆ. கள், இ. கற்று, ஈ. கல்

    18. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -நின்றார்

    அ. நில், ஆ. நின், இ. நின்ற, ஈ.நின்று

    19. நடக்கின்றான் என்றச் சொல்லின் சரியான வேர்ச்சொல்லைத் தேர்க

    அ. நடந்தன, ஆ. நட, இ. நடந்தான், ஈ. நடந்து

    20. சென்றான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?

    அ. சென்று, ஆ. செல்லு, இ. செல், ஈ. செல்லுதல்

    21. படித்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?

    அ. படிர், ஆ. படித்து, இ. படிக்கு, ஈ.படி

    22. தந்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?

    அ. தன், ஆ. தா, இ. தருக, ஈ. தந்து

    23. கீழ்க்காண் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டு வட்டமிடுக -வருக

    அ. வா, ஆ. வாழ்தல், இ. வாழ்வு, ஈ. வாழ்க்கை

    24. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல்… கெட்டான்

    அ. கேடு, ஆ. கெடு, இ. கெட்ட, ஈ. கெட்டு

    25. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க சொல் -நின்றான்

    அ. நில், ஆ. நின், இ. நின்று, ஈ. நின்

    26. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல் -கண்டான்

    அ. கண், ஆ. கண்டு, ஈ. கண்ட, ஈ. காண்

    விடை:

    1. C, 2. C, 3. D, 4. C, 5. B, 6. A, 7. C, 8. D, 9. B, 10. A, 11. C, 12. C, 13. D, 14. A, 15. A, 16. D, 17. D, 18. A, 19. B, 20. C, 21. D, 22. B, 23. A, 24. B, 25. A, 26. D.

  4. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு : பொதுத் தமிழ் மாதிரி வினா} விடை

    4. எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்

    தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்ப்பதம் எழுதுவதைத்தான் இப்பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகின்றது. சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்குரிய எதிர்ப்பதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். இப் பகுதியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் உறுதியாக கேட்கப்படுகின்றது. இப்பகுதி எளிதில் மதிப்பெண் பெற உதவக்கூடிய பகுதி.

    ஆடவர் – பெண்டிர்

    அழித்தல் – ஆக்கல்

    அண்மை – தொலைவு, சேய்மை

    அரிய – எளிய

    அடிமை – சுதந்திரம்

    அடி – நுனி

    அன்பு – பகை

    அற்றை – இற்û

    ஆகும் – ஆகாது

    அன்பான – அன்பற்ற

    அடைத்தல் – திறத்தல்

    அகம் – புறம்

    அன்றே – இன்ú

    அறப்போர் – மறப்போர்

    அமைதி – ஆரவாரம்

    அளித்தார் – பறித்தார்

    அமர்ந்து – எழுந்து

    அல்லும் – பகலும்

    அற்றகுளம் – அறாதகுளம்

    இன்பம் – துன்பம்

    இனிய – இன்னாத

    இழிவு – உயர்வு

    இணை – பிரி

    இடம் – வலம்

    இளமை – முதுமை

    இயற்கை – செயற்கை

    இறுதி – தொடக்கம்

    இன்சொல் – புன் சொல், கொடுஞ்செயல்

    இம்மை – மறுமை

    இளமை – முதுமை

    இன்னா – இனிய

    இல்லை – உண்டு

    இழப்பு – ஆதாயம்

    இரவு – பகல்

    உயர்வு – தாழ்வு

    உறங்கு – விழி

    உண்மை – பொய்மை

    உரிமை – அடிமை

    உடன்பாடு – மாறுபாடு

    உற்றுழிவு – உறாவுழி

    உள்ளரங்கம் – வெளியரங்கம்

    உத்தமர் – அதமர்

    உள்பொருள் – வெளிப்பொருள்

    ஒற்றுமை – வேற்றுமை

    ஏற்றம் – இறக்கம்

    நிறை – குû

    மலர்தல் – கூம்பல், குவிதல்

    மிகுதி – குறைவு

    முதுகலை – இளங்கலை

    தண்மை – வெம்மை

    வெற்றமை – இழந்தமை

    தட்பம் – எளிமை

    புகழ்ச்சி – இகழ்ச்சி

    பிரிந்து – சேர்ந்து

    பலர் – சிலர்

    பாவம் – புண்ணியம்

    பழி – புகழ்

    பழமை – புதுமை

    பல – சில

    புதிய – பழைய

    பற்பல – சிற்சில

    பள்ளம் – மேடு

    பழம் – காய்

    புதுமை – பழமை

    பழம்பாடல் – புதுப்பாடல்

    பின்னர் – முன்னர்

    பிரிக்கலாம் – சேர்க்கலாம்

    பிழை – திருத்தம்

    பெருந்தொகை – சிறுதொகை

  5. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை

    பொதுத் தமிழ்

    (எதிர்ச்சொல்லைக் கண்டறிதல் -நேற்றைய தொடர்ச்சி)

    செலவு- வரவு

    சோம்பல்- சுறுசுறுப்பு

    விழைந்தார்- வெறுத்தார்

    சிற்றூர்- பேரூர்

    பெருமை- சிறுமை

    விருப்பு- வெறுப்பு

    வென்று- தோற்று

    பெருகி- சுருங்கி

    சிற்றாறு- பேராறு

    நீதி- அநீதி

    எளிது- அரிது

    பெரியவர்- சிறியவர்

    குழு- தனி

    நண்பன்- பகைவன்

    கூடி- பிரிந்து

    வெற்றி- தோல்வி

    வெளியே- உள்ளே

    மேலே- கீழே

    கேடு- நலம்

    முன்- பின்

    வேறுபாடு- ஒருமைப்பாடு

    தூய்மை- மாசு

    சிற்றரசர் – பேரரசர்

    வளர்ச்சி- தளர்ச்சி

    தொன்மை- அண்மை

    குடியரசு – முடியரசு

    மகிழ்ச்சி- வருத்தம்

    மகிழ்ச்சி- துயரம்

    பிறந்தார்- மறைந்தார்

    மூத்த- இளைய

    தொடக்கம்- முடிவு

    ஒழுங்காக- ஒழுங்கின்றி

    தந்தை- தாய்

    மகன்- மகள்

    நம்பி- நங்கை

    குமரன்- குமரி

    தூயன்- வீராங்கனை

    கீழைநாடு- மேலை நாடு

    எழுச்சி- வீழ்ச்சி

    எளிய- அரிய

    மற- நினை

    தோன்று- மறைய

    செய்வோம்- செய்யோம்

    முதன்மை- இறுதி

    ஓங்கிய- தாழ்ந்த

    எட்டிய- எட்டா

    நட்பு- பகை

    நன்மை- தீமை

    செம்மை- கருமை

    நண்பர்- பகைவர்

    காலை- மாலை

    செல்வர்- ஏழை

    ஏறி- இறக்கி

    வேண்டும்- வேண்டாம்

    வாழ்த்தல்- தூற்றல்

    சிறியவர்- பெரியவர்

    தலைவர்- தொண்டர்

    ஒன்று- பல

    நீண்ட- குறுகிய

    தீது- நன்று

    பொய்- மெய்

    தவறு- சரி

    முடியும்- முடியாத

    திண்மம்- நீர்மம்

    குழி- மேடு

    வளைத்தல்- நிமிர்த்தல்

    வடக்கு- தெற்கு

    வடநாடு- தென்னாடு

    வரவு- செலவு

    வாடுதல்- தழைத்தல்

    வாழ்வு- தாழ்வு

    பல்வேறு பசடநஇ பொதுத் தமிழ் வினாக்களில் எதிர்ச்சொல்லை கண்டறிக என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட வினாக்கள் பின் வருமாறு.

    1. களிப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.

    அ. கோபம், ஆ. எரிச்சல்,

    இ. மகிழ்ச்சி, ஈ. துயரம்

    2. பகைவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.

    அ. நல்லவன், ஆ. நண்பன்,

    இ. எதிரி, ஈ. வல்லவன்

    3. எதிர்ச்சொல் தருக -இசை

    அ. வசை, ஆ. ஞானம்,

    இ. புகழ், ஈ. பெருமை

    4. எதிர்ச்சொல் தருக -தண்மை

    அ. தட்பம், ஆ.மழை,

    இ. வெம்மை, ஈ.குளிர்

    5. எதிர்ச்சொல் தருக -நன்மை

    அ. பகை, ஆ. வெறுப்பு,

    இ. தீமை, ஈ. இன்மை

    6. எதிர்ச்சொல் தருக -நிû

    அ. எடை, ஆ. வெறுப்பு,

    இ. தடை, ஈ. குû

    7. இனிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.

    அ. நல்ல, ஆ. இடரான,

    இ. இன்னாத, ஈ. இன்பமான

    8. கனி என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.

    அ. நனி, ஆ. பனி, இ. காய்,

    ஈ. பழம்

    9. நன்மை இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக.

    அ. தீமை, ஆ. உண்மை,

    இ. வன்மை, ஈ. தூய்மை

    10. வெப்பம் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.

    அ. தண்மை, ஆ. அழை,

    இ. மிதம், ஈ. பனி

  6. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: பிறமொழிச் சொற்களை நீக்குதல்

    தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது நல்ல தமிழில் அமைந்த தொடர் என கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆங்கிலச் சொற்கள்: தமிழ்ச் சொற்கள்

    ஹேர்கட்டிங் சலூன் – முடிதிருத்தகம்

    ஹோட்டல் – உணவகம்

    மெடிக்கல் ஷாப் – மருந்தகம்

    கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி

    பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்

    லேட் – காலம் கடந்து

    மீட்டிங் – கூட்டம்

    இம்ப்ரூ – பெருக்கு

    பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்

    கம்பெனி – குழுமம்

    இண்டஸ்ட்ரி – தொழிலகம்

    டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்

    ஸ்டேஷனரி ஷாப் – எழுதுபொருள் அங்காடி

    காபி பார் – குளம்பியகம்

    டீ ஸ்டால் – தேநீர் அங்காடி

    பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்

    ஸ்கூல் – பள்ளிக்கூடம்

    ஆஸ்பிடல் – மருத்துவமனை

    டெலிபோன் – தொலைபேசி

    கம்ப்யூட்டர் – கணினி

    டிஸ்க் – குறுந்தகடு

    டாக்டர் – மருத்துவர்

    டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு

    டைம் – நேரம், மணி

    நாலெட்ஜ் – அறிவு

    பஸ் – பேருந்து

    ஹாஸ்டல் – விடுதி

    போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்

    போலீஸ் ஸ்டேஷன் – காவல் நிலையம்

    சிட்டி – நகரம்

    வோல்டு – உலகம்

    கண்ட்ரி – நாடு

    ரிவர் – நதி

    பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு

    சூப்பர் – சிறப்பு

    ஸ்பெஷல் – தனி

    பேரண்ட்ஸ் – பெற்றோர்

    பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்

    அட்மிஷன் – சேர்க்கை

    ஏஜென்ஸி – முகவாண்மை

    ஆக்ஸிடெண்ட் – நேர்ச்சி

    ஜெராக்ஸ் – ஒளிப்படி

    ஆடியோகேசட் – ஒலிப்பேழை

    விடியோகேசட் – ஒளிப்பேழை

    டைப்பிஸ்ட் – தட்டச்சர்

    பிளாட்பாம் – நடைபாதை

    பிளாஸ்டிக் – நெகிழி

    நோட்புக் – குறிப்பேடு

    லாரி – சரக்குந்து

    லாண்டரி – வெளுப்பகம்

    எவர்சில்வர் – நிலைவெள்ளி

    அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு

    ஆட்டோமொபைல் – தானியங்கி

    பைண்டிங் – கட்டமைப்பு

    கேபிள் – கம்பிவடம்

    செக் – காசோலை

    லைன் – வரிசை

    சக்ஸஸ் – வெற்றி

    ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட் – மழைநீர் சேகரிப்பு

    பாஸ் – தேர்ச்சி

    டிரை – முயற்சி

    பேமிலி – குடும்பம்

    ஸ்மால் – சிறிய

  7. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினாக்கள்

    18. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.

    மெட்ராஸ் சிட்டிக்கு செல்லவேண்டும்.

    அ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்.

    ஆ. சென்னைப் பட்டணத்திற்கு

    இ. சென்னை சிட்டிக்கு

    ஈ. சென்னை நகரத்திற்கு

    19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.

    ஆஸ்பத்திரிக்குச் சென்று டெஸ்ட் செய்துவா

    அ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்துவா

    ஆ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா

    இ. மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா

    ஈ. மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா

    20. தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக.

    கந்தன் தொழிலில் டெவலப் அடைந்தான்

    அ. முன்னேற்றம், ஆ. பின்நிலை,

    இ. உயர்ந்த நிலை, ஈ. வளரும் நிலை

    21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.

    ரெகுலர் அட்டெண்டன்ஸ் தேவை

    அ. விருப்பத்துடன் வருகை தேவை

    ஆ. ஒழுங்கான வருகை தேவை

    இ. கவனத்துடன் வருகை தேவை

    ஈ. குறைவு இல்லா வருகை தேவை

    22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி

    மெடிக்கல் ஷாப் போனேன்

    அ. மருந்து ஷாப் போனேன்

    ஆ. மருந்துக் கடைக்குப் போனேன்.

    இ. ஷாப் கடைக்குப் போனேன்

    ஈ. மெடிக்கல் வாங்கப் போனேன்

    23. ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் -இச்சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தருக.

    அ. ஆளறி மனு, ஆ. ஆளறி சான்றிதழ்,

    இ. அடையாள அட்டை, ஈ. அடையாளச் சீட்டு

    24. கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக.

    அ. ஆட்சியர், ஆ. வட்டாட்சியர்,

    இ. சேகரிப்பவர், ஈ. கோட்டாட்சியர்

    25. தஹண்ப்ஜ்ஹஹ் நற்ஹற்ண்ர்ய் என்பதன் தமிழ்ச் சொல் எது?

    அ. புகைவண்டி நிலையம், ஆ. புகைவண்டி ஸ்டேஷன், இ. ரயில்வே நிலையம், ஈ. புகை நிலையம்

    26. ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் வங்ஹழ் என்பதன் தமிழ்ச் சொல் எது?

    அ. வரும் ஆண்டு, ஆ. நடப்பாண்டு,

    இ. நிதியாண்டு, ஈ. சென்ற ஆண்டு

    27. ஈண்ஸ்ரீற்ண்ர்ய்ஹழ்ஹ் என்பதன் தமிழ்ச்சொல் எது?

    அ. அகராதி, ஆ. பொருள், இ. அர்த்தம், ஈ. உணர்தல்

    28. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக

    நூற்றுக்குச் சேஞ்ச் இருக்குமா?

    அ. சில்லறை, ஆ. சில்லரை, இ. மாற்றம், ஈ. துண்டு

    29. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக.

    கவுண்டிங் என்றைக்கு?

    அ. சரிபார்ப்பு, ஆ. பெருவேலை,

    இ. எண்ணிக்கை, ஈ. பதிவு

    30. அஞ்ங்ய்ற் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்

    அ. முதலாளி, ஆ. தொழிலாளி, இ. முகவர், ஈ. வாடிக்கையாளர்

    விடைகள்:
    18. D, 19. C, 20. A, 21. B, 22. B, 23. B, 24. A, 25. A, 26. C, 27. A, 28. C, 29. C, 30. C

  8. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினாக்கள்

    (நேற்றையத் தொடர்ச்சி)

    21. உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

    அ. துரோகம், ஆ. அழிவு, இ. ஆக்கம்,

    ஈ. கடமையின்மை

    22. பிறமொழிச் சொல் கலவாத வழு இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.

    அ. வருசக் கடைசி, ஆ. வருடக் கடைசி

    இ. வருஷக் கடைசி, ஈ. ஆண்டுக் கடைசி

    23. பிறமொழிச் சொல் இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.

    அ. கும்பாபிஷேகம், ஆ. குடஅபிசேகம்,

    இ. குடம் அபிஷேகம், ஈ. குடமுழுக்கு

    24. பிறமொழிச் சொற்களை நீக்குக.

    அ. தினசரி உடல் பயிற்சி செய்

    ஆ. நாள்தோறும் உடற்பயிற்சி செய்

    இ. தினமும் உடற்பயிற்சி செய்

    ஈ. தினமும் உடல் பயிற்சி செய்

    25. பிறமொழிச் சொற்களை நீக்குக.

    அ. விஷயம், ஆ. ஹாஸ்டல், இ. ஆஸ்தி, ஈ. செய்தி

    26. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?

    அ. ஆஸ்தி, விஷயம், ஹாஸ்டல்

    ஆ. சொத்து, விஷயம், ஹாஸ்டல்

    இ. சொத்து, செய்தி, விடுதி

    ஈ. சொத்து, செய்தி, ஹாஸ்டல்

    27. பிறமொழிச் சொல்லை நீக்குக.

    பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    அ. பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம்

    நடந்தது

    ஆ. பிள்ளையார் கோயிலுக்கு ஆராதனை நடந்தது

    இ. பிள்ளையார் கோயிலுக்கு திருவிழா நடந்தது

    ஈ. பிள்ளையார் கோயிலுக்கு நீராட்டு விழா நடந்தது.

    விடைகள்: 21. அ, 22. ஈ, 23. ஈ, 24. ஆ, 25. ஈ, 26. இ. 27. ஈ.

    14. பெயர்ச் சொல்லின் வகையறிதல்

    பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

    1. பொருட்பெயர்

    பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.

    2. இடப்பெயர்

    இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.

    3. சினைப்பெயர்

    சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.

    மரம் -பொருட்பெயர். இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.

    உடல் -பொருட்பெயர்

    கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.

    4. காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

    திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.

    5. பண்புப் பெயர்

    ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.

    எடுத்துக்காட்டு -பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)

    6. தொழிற்பெயர்

    தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.

    ஓங்குதல், சாக்காடு, வெறுக்கை, தருக்கல், காண்பு, ஒருவுதல், மனம் கவல்வு, செய்கை, இகழ்தல், உணர்வு, கொலல், நந்தம், நீட்டம், ஆண்மை, பெருக்கல், ஒழுக்கு, உண்டி, செய்தல், கொடுமை, உரைத்தல், காண்பு, நல்குரவு, கடத்தல்.

    பெயர்ச்சொல்லின் வகையறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்

    1. மலர் என்பது

    அ. சினைப் பெயர், ஆ. பொருள் பெயர், இ. இடப் பெயர், ஈ. பண்புப் பெயர்

    2. பெயர்ச்சொல்லின் வகை அறிக -செம்மை

    அ. இடப் பெயர், ஆ. பண்புப் பெயர்,

    இ. சினைப் பெயர், ஈ. தொழிற் பெயர்

    3. பெயர்ச் சொல்லின் வகை அறிக -நல்லன்

    அ. இடப் பெயர், ஆ. சினைப் பெயர்,

    இ. குணப் பெயர், ஈ. தொழிற் பெயர்

    4. பெயர்ச்சொல்லின் வகையறிக -மதுரை

    அ. சினைப் பெயர், ஆ. பொருட் பெயர்,

    இ. குணப் பெயர், ஈ. இடப் பெயர்

    5. செய்தல் என்பது

    அ. பொருட் பெயர், ஆ. சினைப் பெயர்,

    இ. தொழிற் பெயர், ஈ. பண்புப் பெயர்

    6. பின்வரும் பெயர்ச் சொல்லின் எவ்வகை எனக் குறிப்பிடுக -வற்றல்

    அ. பொருட் பெயர், ஆ. இடப்பெயர்,

    இ. தொழிற்பெயர், ஈ. சினைப் பெயர்

    7. பெயர்ச்சொல்லின் வகையறிக -ஊதியம்

    அ. பொருட்பெயர், ஆ. சினைப்பெயர்,

    இ. குணப் பெயர், ஈ. காலப்பெயர்

    8. உலகம் என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க.

    அ. காலப்பெயர், ஆ. பொருட்பெயர்,

    இ. இடப்பெயர், ஈ. சினைப் பெயர்

    9. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க -பணிவு

    அ. காலப்பெயர், ஆ. இடப்பெயர்,

    இ. சினைப்பெயர், ஈ. தொழிற்பெயர்

    10. பெயர்ச்சொல்லின் வகை தெளிக -தோள்

    அ. தொழிற்பெயர், ஆ. சினைப்பெயர்,

    இ. காலப்பெயர், ஈ. பொருட்பெயர்

    விடைகள்:
    1. A, 2. B, 3. C, 4. D, 5. C, 6. C, 7. A, 8. C, 9. D., 10. B

  9. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை – விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

    தொகுப்பு: ஈகிள்ஸ் ஐ

    கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வினாவில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

    கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் வினா வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான விடையை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடையில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

    வினா

    வினா ஆறுவகைப்படும்

    1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

    அறிவினா

    தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது

    ஆசிரியர் மாணவரிடம் கேட்பது

    திருக்குறளை எழுதியவர் யார்?

    அறியா வினா?

    தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் மாணவர் ஆசிரியரிடம் கேட்பது

    ஐயா, இதன் பொருள் யாது?

    ஐய வினா

    தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது

    ஐயா, பாரிமுனைச் செல்லும் வழி இதுவா?

    கொளல் வினா

    ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல்

    உப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்டல்

    கொடை வினா

    ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல்

    காசு வேண்டுமா?

    ஏவல் வினா

    ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா

    படித்தாயா?

    விடை எட்டு வகைப்படும்.

    1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.

    கட்டு விடை

    கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது. பாரிமுனைக்குச் செல்லும் வழி இதுதான்.

    மறை விடை

    கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்

    நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன்

    நேர் விடை

    வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல்

    நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன்

    ஏவல் விடை

    கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல்

    கடைக்கு செல்வாயா? நீயே செல்

    வினா எதிர் வினாதல் விடை

    கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது.

    நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா

    உற்றது உரைத்தல் விடை

    கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல்

    நீ பாடுவாயா? பல் வலிக்கிறது.

    உருவது கூறுதல் விடை

    கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது

    எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்

    இனமொழி விடை

    கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும்

    நீ ஆடுவாயா? பாடுவேன்

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்

    1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க

    சிலப்பதிகாரம் -மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும்.

    அ. இரட்டைக் காப்பியங்கள் யாவை?

    ஆ. இரட்டைக் காப்பியத்தை விளக்குக.

    இ. இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.

    ஈ. இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?

    2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.

    வேத மனத்திற்கு வித்தாவது ஆண்டாள் பாடிய திருப்பாவை ஆகும்.

    அ. வேதமனத்திற்கு வித்தாவது எது?

    ஆ. திருப்பாவையை எவ்வாறு புகழ்வர்?

    இ. திருப்பாவையை எவ்வாறு போற்றுவர்?

    ஈ. ஆண்டாள் பாடிய நூலை எவ்வாறு போற்றுவர்?

    3. விடைக்கேற்ற வினாத் தொடரை தேர்க.

    தமிழின் இனிமையை எவரும் மறுக்க மாட்டார்

    அ. தமிழின் இனிமையை எவரே மறுப்பர்?

    ஆ. தமிழின் இனிமையை மறுப்பவர் உண்டோ?

    இ. தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர்?

    ஈ. தமிழின் இனிமையை மறுப்பவர் இல்லை ஏன்?

    4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

    உழைத்தவர் உண்ண முடியும்.

    அ. எதைச் செய்ய வேண்டும்?

    ஆ. யார் உண்ண முடியும்?

    இ. உழைத்தவர் உண்ண முடியுமா?

    ஈ. உண்ண உழைக்க வேண்டுமா?

    5. முருகன் சென்னைக்குச் சென்றான். இதற்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

    அ. முருகன் எதற்கு சென்றான்?

    ஆ. முருகன் எங்கு சென்றான்?

    இ. முருகன் எப்படிச் சென்றான்?

    ஈ. முருகன் யாருடன் சென்றான்?

    விடைகள்:
    1. A, 2. D, 3. C, 4. B, 5. B.

  10. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

    தமிழக வரலாற்றில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை 1. பழைய கற்காலம், 2. புதிய கற்காலம், 3. உலோக காலம், 4. பெருங்கல் காலம் என வகைப்படுத்தலாம்.

    மனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம் என்கிறோம். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும் கற்களை பயன்படுத்தினார்.

    ராபட் புரூல் பூட் முதன்முதலில் இத்தகைய கருவிகளை சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தார்.

    சென்னையை அடுத்துள்ள கொறட்டலையாற்றின் சமவெளியிலும், வட மதுரையிலும் இக்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகள் மற்றும் சிறிய கற்கருவிகள் கிடைத்துள்ளன.

    பழைய கற்காலம் சுமார் கி.மு. பத்தாயிரம் ஆண்டு வரை நீடித்தது என்று கருதலாம். பயிரிடும் மற்றும் மண் பாண்டங்கள் செய்தல் போன்றவற்றை இவர்கள் அறிந்திருக்கவில்லை.

    இரண்டு சிக்கிமுக்கி கற்களை உரசுவதன் மூலம் பழைய கற்கால மக்கள் நெருப்பை உருவாக்கினர்.

    புதிய கற்காலம்

    மென்மையான படிக்கற் பாறைகளாலான கருவிகளை புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்தினர்.

    புதிய கற்கால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தார்கள். களிமண் குடிசை மற்றும் கூரை வீடுகளை அமைத்து அவற்றில் வாழ்ந்தனர்.

    வேளாண்மை அவர்களது முக்கியத் தொழிலாகும். நெல், தினை, காய்கள், கனிகள் போன்றவற்றை பயிரிட்டனர். உணவைத் தேடும் கூட்டத்தினராக இருந்தவர்கள் மண்பாண்டங்களையும் செய்தனர்.

    சக்கரத்தைக் கொண்டு மண் பாண்டங்களையும் செய்தனர். தமிழகத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மண் பாண்டங்கள் திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கிடைத்துள்ளன.

    புதிய கற்கால மக்கள் இறந்தோரை வழிபட்டனர்.

    உலோகக் காலம்

    மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு.

    தென்னிந்தியாவில் மனிதன் இரும்பைக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான். சென்னையை அடுத்துள்ள பெரும்புதூர் என்ற இடத்தில் கற்காலக் கருவிகளுடன் இரும்பினால் ஆன கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.

    பெருங்கல் காலம்

    பெருங்கல் என்ற சொல்லுக்கு நீத்தார் நினைவுச் சின்னம் என்பது பொருள்.

    பெருங்கற்கால நீத்தார் நினைவுச் சின்னங்கள் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மற்றொரு வகை உடல் அடக்கத்திற்கு மண் தாழி அடக்கம் என்று பெயர். திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் இத்தகைய தாழிகள் கிடைத்துள்ளன. தங்கம் மற்றும் இரும்பினாலான பொருட்கள் இத்தாழிகளில் கிடைக்கப் பெற்றுள்ளன. இரும்பினாலான வேல் இங்கு கண்டெடுக்கப்பட்டது.

    தமிழகத்தின் தெளிவான வரலாறு சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. சங்கம் என்ற சொல்லுக்கு கழகம் என்பது பொருள்.

    தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன சங்க இலக்கியங்களாகும். இவற்றில் தொல்காப்பியம் மிகவும் தொன்மையான சங்க இலக்கண நூலாகும்.

    அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் மற்றும் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டு தமிழக அரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. பழங்காலத் தமிழ்பிராமி எழுத்துக்களைப் பற்றி அறிந்துக் கொள்ள கழுகு மலைக் கல்வெட்டுகள் பயன்படுகின்றன. திருக்கோவிலூர் கல்வெட்டு குறுநில மன்னர்களைப் பற்றியும் தமிழ்ப் புலவர் கபிலரின் துயரமான முடிவைப் பற்றியும் கூறுகிறது.

    புகலூருக்கு அருகிலுள்ள ஆர்நாட்டார் மலைக் கல்வெட்டு சேர மன்னர்களை பற்றி கூறுகின்றது.

    திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் ராபர்ட் புரூஸ்பூட் என்பவர் அகழாய்வுகளை மேற்கொண்டார்.

    புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்ற இடத்தில் துப்ரேல் மற்றும் மார்டிமர்வீலர் போன்ற அறிஞர்கள் அகழாய்வுகள் செய்தனர். அப்போது ரோமானிய மண் பாண்டங்கள், கண்ணாடிக் குவளைகள், இரத்தினங்கள், நாணயங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

    காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் கீழையூர் என்ற இடத்தில் சங்கம் மருவியக் காலத்தைச் சேர்ந்த புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பூம்புகார் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்ககாலத்தைச் சேர்ந்த கப்பற் சிதைவுகள் மிகச் சிறந்த தொல்லியல் சான்றாகும்.

    மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகாவிலும், ஸ்ட்ராபோ, பிளினி, தாலமி போன்ற ஆசிரியர்களும் சங்க காலத்தைப் பற்றி பல அரிய தகவல்களை அளித்துள்ளனர். இலங்கை நூல்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகியன சங்கத்தின் காலத்தை நிர்ணயிக்கின்றன.

    முதற்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும் செயல்பட்டது. இப்பகுதிகள் இந்துமாக்கடலில் மூழ்கிவிட்டதால் பாண்டிய அரசர்கள் மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கத்தை நிறுவினர்.

    கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சங்கம் காலம் நீடித்தது.

  11. bsubra said

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

    சேர அரசு

    சங்ககாலச் சேரர்கள் வானவர், வில்லவர், மலையர் எனப்பட்டனர். முதலாவதாக உதியன் சேரலாதன் மரபும், இரண்டாவதாக இரும்பொறை மரபும் சேர நாட்டை ஆட்சி புரிந்தன. சேரர்களின் தலைநகரம் வஞ்சி. அவர்களின் துறைமுகம் தொண்டி. சேரர்களின் சின்னம் வில் அம்பு ஆகும்.

    சங்க காலச் சேரர்களில் தலைசிறந்த மன்னர் செங்குட்டுவன். பதிற்றுப்பத்து, அகநானூறும், செங்குட்டுவன் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன.

    செங்குட்டுவனின் இளவலான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

    சேரலாதன் பெரு சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை ஆகியோர் புகழ்மிக்கவராவர் சங்க கால சேர நாடு தற்கால கேரளப் பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது.

    சோழ அரசு

    சோழ நாடு, காவிரி சூழ்நாடு, நீர்நாடு மற்றும் புனல் நாடு எனப்பட்டது. காவிரி நதிப் பள்ளத்தாக்கில் நீர் பாய்வதால் சோழ நாடு நீர்வளம் மிக்கதாக விளங்கியது.

    சோழர்களின் தலைநகரம் உறையூர், துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம்.

    சோழர்களின் சின்னம் புலியாகும்.

    கிள்ளி, வளவன், சென்னி, சோழன் போன்ற பெயர்களைத் தாங்கிய சோழநாடு தற்போதைய தஞ்சை, திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

    கரிகாலன்

    கரிகாலன் சங்ககாலச் சோழர்களின் புகழ்மிக்கவனாகத் திகழ்ந்தான்.

    பட்டினப்பாலை மற்றும் பொருநகராற்றுப்படை கரிகாலனைப் பற்றி விவரிக்கின்றன.

    காவிரியின் குறுக்கே கல்லணையை அமைத்தார்.

    சங்ககாலத்தில் புகார் நகரம் சிறந்த வாணிப நகரமாகவும், துறைமுகமாகவும், இரண்டாவது தலைநகரமாகவும் திகழ்ந்தது.

    கரிகாலனுக்குப் பிறகு நலங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.

    சங்ககாலச் சோழரின் ஆட்சி கோச் செங்கணான் காலத்தோடு முடிவுக்கு வந்தது.

    பாண்டிய அரசு

    சங்க காலப் பாண்டிய அரசு மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

    பாண்டிய அரசர்கள் மாறன், வழுதி, செழியன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

    மதுரை பாண்டியர்களின் தலைநகரமாகவும், கொற்கை துறைமுகமாகவும், மீன் சின்னமாகவும் விளங்கியது.

    முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் தனது வெற்றிகளைப் போற்றும் வகையில் பல வேள்விகளைச் செய்ததால் பல்யாக சாலை என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.

    பூதப்பாண்டியன் என்ற அரசன் சிறந்த வீரனாகவும் புலவரைப் போற்றும் வள்ளலாகவும் விளங்கினான்.

    பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த பெண்பாற் புலவராவார்.

    ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற மன்னன் சிலப்பதிகார நாயகனாக கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கி, பின் உணர்ந்தவுடனே உயிரை விட்டான்.

    தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் சேர, சோழ மற்றும் குறுகிற மன்னர்களின் கூட்டுப்படைகளை முறியடித்தான்.

    சிறந்த கொடை வள்ளலாக விளங்கிய இவன் மாங்குடி மருதனார் போன்ற பல புலவர்களை ஆதரித்துப் போற்றினார்.

    குறுநில மன்னர்கள்

    தமிழகத்தின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்தனர். இவர்கள் வேளிர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    வேளிர்களில் மிகச் சிறந்தவர்கள் கடையேழு வள்ளல்கள் ஆவார்கள்.

    பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகியோர் கடையெழு வள்ளல் ஆவார்.

    கபிலர், அவ்வையார், நல்லாதனார், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர்கள் ஆதரித்தனர்.

    அதியமானின் அவைப் புலவராக அவ்வையார் சிறந்த சமாதானத் தூதுவராக திகழ்ந்தார்.

    அன்றாட நிர்வாகத்தில் அரசனுக்கு உதவியாக இரண்டு குழுக்கள் செயல்பட்டன. அவை ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்.

    சங்க காலத்தில் அரசுகள் மண்டலம், நாடு, வளநாடு, கூற்றம் என அழைக்கப்பட்டன.

    கிராமங்கள் மூத்தோர் அடங்கிய அவைகள் மன்றம், பொதியில், அவை மற்றும் அம்பலம் என்று அழைக்கப்பட்டன.

  12. sheik nagoor mydeen said

    thanks

  13. sheik nagoor mydeen said

    Thanks..

  14. santhi said

    sir , i want vao exam coching class books please help me
    your phone no please :

  15. K.Rajasekaran said

    it is very clear to understand, explanation are simple and useful thank you………

  16. hi

  17. imaya said

    Hello sir, thank you very much. it is very useful for me. please can you publish scince and maths question also.

    thanking you

  18. ANANDABABU.P said

    IT IS VERY SIMPLE AND LATOF USEFUL, THANKYOU SO MUCH…

  19. Thenmozhi said

    Hello sir, thank you very much. it is useful for me

  20. Rajendran said

    Nanri

  21. shamila nathan said

    Dear sir,Thank you very much sir It’s very useful for me

  22. sapiyathas said

    m

பின்னூட்டமொன்றை இடுக