Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Karunanithi’ Category

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

DK vs PMK – DMK, Kalainjar Karunanidhi x Pattali Makkal Katchi Ramadoss

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு!

கலி. பூங்குன்றன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

வீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).

இதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா? இவருக்குத் தகுதி உண்டா? என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.

என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நாங்கள் யார் தெரியுமா? என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.

தோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்!

தனிப்பட்ட பிரச்சினையா?
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும்? காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே!

பிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு? அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா? விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா?

ஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே! திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன்? திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்? அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா? தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.

உண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா? உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.

அதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு? இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.

எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா? என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.
நாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.

பெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே!

எந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.

யாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம்?. ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

திராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா?
திராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.

திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என்ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.

தந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.
நீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா? வெகுதூரம் போவானேன்? பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா? அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ!

பல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.

சமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா? அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா? திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா?

தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம்! ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.

பார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்?
பெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே? பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா?

கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா?

எல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.
(துக்ளக், 15.4.1988)

இப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கைக்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!
பார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம்! பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது!

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)

பேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா? பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா?

வி.பி. சிங் அழுகிய பழமாம்!
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.

ஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா?

இதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.

அதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே! அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே!

மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.

ஆள்காட்டி வேலை
ஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க!).

பிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி! (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? புலிகளின் சரணாகதி என்பதுதான்.

அதைவிட ஒரு துரோகம்! (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா!) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்!

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).

இது துரோகமா? அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா?

10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா?
இத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே! ஆனால், இவருடைய நிலை என்ன? இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது!

இதோ ஒரு எம்டன் குண்டு!
1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா? சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.

போயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா? என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.

சரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா? அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்…! என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா? நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

இதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.

1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.

அண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆசிரியர் வீரமணிபற்றி எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.

வருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே! திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா?

31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா? நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ! அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா? (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).

பா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்!).
69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.

விடுதலை ஆக தூதுவிட்டது யார்?
எப்படியிருக்கிறது கதை? எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்!

யார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.

கலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாட்டையடி – நினைவிருக்கிறதா?
அரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு! என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.

அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே! அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே!

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்!

நானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்! என்று பறைசாற்றியவரும் இவரே!

அடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ!

எவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.

விபூதி வீரமுத்துசாமி பாணியா?
கருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம்! அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்!

Posted in Anbumani, Anna, Contradictions, DK, Dravidar Kazhagam, EVR, family, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MGR, MK, Party, Pattali Makkal Katchi, Periyar, PMK, Politics, Ramadoss, TamilNadu, Veeramani, Viduthalai | 2 Comments »

What is behind DMK’s war of words with Congress? – Dinamani ‘Ajathasathru’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கருணாநிதி கோபப்படுவது ஏன்?

 அஜாத சத்ரு

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.

“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி?” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன்? அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே! இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார்? இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி?” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்?” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.

காங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை?

காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.

காங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால்? அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்?

கருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா?

Posted in Ajathasathru, Alliance, Andhra, Andhrapradesh, AP, Arunkumar, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Dismiss, DK, DMDK, DMK, Govt, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Modi, Sonia, support, Veeramani, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Mu Ka Azhagiri & State-owned Arasu Cable TV Corporation Ltd: Multi System Operator (MSO) – Television network for Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி?

சென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.

இதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

எஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்!’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.

அதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

————————————————————————————————————————-

கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?: தயாநிதி மாறன்

சென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.

அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.

இதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.

கேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா?

இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.

————————————————————————————————————
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்?: சரத்குமார்

சென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.

எஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.

தனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா?

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.

பிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.

—————————————————————————————————————-
ஜூனில் அரசு கேபிள் டிவி

சென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

தமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.

இந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.

எம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.

பின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.

ஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.

“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.

கேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

——————————————————————————————————-

———————————————————————————————————————-
“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா?

நமது சிறப்பு நிருபர் – Dinamani

சென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.

பல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.

வந்தது “ஹாத்வே’:

1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.

“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சிதைந்து போன “ஹாத்வே’:

1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.

ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.

ஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.

வந்தார் பாஸ்கரன்:

2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.

“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

தொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா? கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.

அதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.

“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

இதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.

அன்று அவர்…இன்று இவர்…

வளர்த்த கடா மார்பில் பாய்வதா…? என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.

“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.

அந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.

முடக்கும் வேலை சாத்தியமா?:

“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.

நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

எதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.

இதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Arasu, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, cable, Chennai, Dayanidhi, Gossips, hathway, Jaya, Jeya, JJ, Kalainjar, Kalanidhi, Kanimozhi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Maran, Media, MK, MSO, MuKa, Multi System Operator, network, Rumors, Sasikala, satellite, SCV, Stalin, Sumangali, Sun, Telecom, telecommunications, Television, TV | 1 Comment »

DMDK Vijayaganth vs DMK Kalainjar Karunanidhi: War of words

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

அடக்கம் தேவை; ஆணவமல்ல! புதிய தலைவர்களுக்கு கலைஞர் அறிவுரை

சென்னை, பிப். 12- தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டில் அலங்கோல ஆட்சி நடை பெறுவதாகப் பேசியதைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று விடுத்துள்ள அறிக்கையின் பகுதிகள்:

தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்தக் கட்சியின் தலைவர், தான் திருமண விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங் கோலத்தைப் பார்க்கும்போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். தமிழ் நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்?

எது அலங்கோல ஆட்சி?

தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது? ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே? அதை அலங்கோலம் என்கிறாரா? விவசாயி களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்குக் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறு கிறாரா? மகளிருக்கு எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவச மாக வழங்கப்படும் திட்டம் அலங்கோலமாக இருக்கிறதா? இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா? நிலமற்ற ஏழையெளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, பல ஆண்டுக் காலமாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறதே. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ப தற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறேதே. வேலையில் லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே. இவைகள் எல்லாம் தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு மனிதனிடம் வளரவேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல

ஆனால் கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையைப் பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது! இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர, ஆணவமல்ல!

சந்துமுனையில் சிந்து பாடலாமா?

விருத்தாசலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது எதற்காக? ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது, பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந் தால், அதற்குப் பதில் கிடைத்திருக்குமல்லவா? ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள். ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான்தான் ஆட்சிக்கே வரப் போகிறேன் என்று சொல்லுபவர் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்து பாடினால் என்ன செய்வது?

மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயல் எது?

தி.மு.க.வுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தே.மு.தி.க. தலைவர். இந்தப் பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது? பொய் சொல்வ தற்கும் ஒரு எல்லை இல்லையா? திருமணம் ஆகாமல் ஆண்டுக் கணக்கிலே காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் வீதம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட் டுள்ளதே, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசா இது? அது போலவே கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?

நான்தான் புத்தர்; மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசலாமா?

தேசியக் கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சியின் மீதும் குறை கூறியிருக் கிறார். தேசிய கட்சி தமிழ் மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை? தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசுதானே? சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே? தற்போதைய ஆட்சியில்தானே! கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சிதானே? எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்துவிட்டு, நான்தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதா?

ரசிகர்களின் கூட்டத்தையெல்லாம் கட்சிக்காரர்கள் கூட்டம் என்று நினைத்துக் கொள்வதா?

நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிர்கள் கூட்டத்தை யெல்லாம் தனது கட்சிக்காரர்கள் கூட்டம் என்று எண்ணிக் கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு. கச்சத் தீவைப் பற்றியெல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசி இருக்கிறார். அந்த வகையில் கச்சத்தீவு பற்றிய உண்மை விவ காரங்கள் அவருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசியிருக்கலாமே?

யார் ஊழல்வாதி?

ஊழல் பற்றியெல்லாம் அவர் கூட்டத்திலே பேசியிருக்கிறார். எந்தத் திட்டத்திலே ஊழல்? ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லா வற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடை பெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா? பேசுகிறவர்கள்; அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தைக் கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது – யார் ஊழல்வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து, பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.

ஆட்சிக்கு வர நினைப்பவர் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது

ஆட்சிக்கு வரவேண்டும், முதலமைச்சராக வர வேண்டு மென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல் குற்றச் சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக்கூடாது. மக்களைச் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை, எப்படி என்று விளக்கம் தரவேண்டாமா? எழுப்பப் படும் குற்றச் சாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப் பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறு கின்ற குற்றச் சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல் வதுதானே? எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததையெல் லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது?

செய்தித்தாள்களைப் படிக்க மாட்டாரா?

மின் பற்றாக்குறையைப் போக்க அரசு அன்றாடம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை யெல்லாம் படிக்காமல் தமிழக அரசு மீது அவர் குறை கூறி இருக் கிறார். அரசியல் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திடவும், ஆட்சி நடத்திடவும் விரும்புகிறவர், அன்றாடம் நாளேடுகளைப் பார்ப்பதும் அதிலே அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற முயற்சி களைப் படித்து தெரிந்து கொள்வதும் முக்கியமல்லவா?

டன்னுக்கும், மூட்டைக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?

20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்துவிட்டு 1500 டன் சிமெண்ட் தான் விற்பனையாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலையில் விற்கப்படும் என்று அரசு சார்பில் எப் போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட் டைகள் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்றுதான் அரசு சார் பில் கூறப்பட்டது. 20 லட்சம் டன்னுக்கும் 20 லட்சம் மூட் டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா? தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு அதைக் குறித்து வைத்துக் கொண்டு பேசக் கூடாதா? -இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in DMDK, DMK, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MK, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Words | Leave a Comment »

Chief Minister’s secretary – Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

கோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி?
கருணாநிதி வெளியிட்ட தகவல்

All in the Family - Prodigal Sons and Daughters of DMK: Mu Karunanidhi, MK Azhagiri, MuKa Stalin, Kanimozhi Karunanidhy
சென்னை, பிப்.4-

கோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி? என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.

திருமண நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபம் வந்தால்

40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.

இது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

எண்ணி பார்க்கவில்லை

எப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.

அந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.

மூன்று வழக்குகள்

என்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.

நான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.

திறமையானவர்

இப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.

ஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.

அப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாதச் சம்பளம்

ஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.

எவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.

40 ஆண்டு காலமாக

அப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

மத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,

அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,

செ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Posted in aide, Anna, Anna Arivalayam, Arivalayam, Assistant, associate, Biosketch, Chief Minister, CM, Compatriot, Compensation, DMK, Faces, family, Government, Influence, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Marriages, Memoirs, Minister, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, names, partner, people, Power, Receptions, Salary, Sanmuganadhan, Sanmuganathan, Sanmukanadhan, Secretary, Shanmuganadhan, Shanmuganathan, Shanmukanadhan, Shanmukanathan, Sidekick, Stalin, Wedding | 1 Comment »

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

DMK Youth Wing – MK Stalin: History, Biosketch, Faces, People

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2007

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

 

பிறந்த தேதி: 01-03-1953 அன்று
பெற்றோர்: தலைவர் கலைஞர் தயாளு அம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
உடன் பிறந்தோர்: மு. க. அழகிரி (அண்ணன்), செல்வி (அக்காள்), மு.க. தமிழரசு (தம்பி)
கல்வி: சென்னை, மெட்ராஸ் கிறுஸ்டியன் கல்லூரிப் பள்ளியில் பள்ளிக்கல்வி
சென்னை, மாநிலக்கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை கலையியல் பட்டப்படிப்பு
திருமண நாள்: 25-08-1975
துணைவியார்: திருமதி. துர்கா
குழந்தைகள்: உதயநிதி (மகன்), செந்தாமரை (மகள்)
அரசியல் பணி: சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (1989-1991, 1996-2001, 2001-2006, 2006-இன்றுவரை)
@ 1996 முதல் 2002 வரை சென்னை மாகாண மேயர்.
@ 2006 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
@ தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர்
@ தி.மு.க இளைஞர் அணி செயலாளர்.
பயணம் செய்த நாடுகள்: சிங்கபூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்…
எழுதியுள்ல நூல்: பயணச்சிறகுகள்

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தியாக வரலாறு

 

1968
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 வயது மாணவராக இருக்கும் போதே கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் தன் வயதை ஒத்த இளைஞர்களை இணைத்து 1968ஆம் ஆண்டு இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை உருவாக்கினார். தலைவர் வீட்டுப்பிள்ளை என்று மட்டும் இருந்துவிடாமல் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர்களைக் கொண்ட இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பாக நடத்தி வந்தார். அந்தச் செயல்பாட்டின் தொடக்கமே இளைஞர் அணி வரலாற்றின் தொடக்கம்.
30.09.1968 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே முன்னின்று கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன், அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.உ.சண்முகம், இரா.சனார்த்தனம் முதலானோர் பங்கேற்றனர். மு.க.தமிழரசு அவர்கள் வருகை தந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். முரசொலி மாறன் அவர்களின் மகன் கலாநிதி மாறன் ஏழை எளியவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
முதல் தேர்தல் பணி
1968ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் – சென்னை 99ஆம் வட்டத்தில் டி.கே.கபாலி அவர்களும், 109ஆம் வட்டத்தில் இரா.சடகோபன் ஆகிய கழக வேட்பாளர்களை ஆதரித்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. பிரச்சாரப் பணியாற்றியது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் தேர்தல் பணி இதுவாகும்.
முதல் பொதுக்கூட்டம்
தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் – 30.01.1969 அன்று சென்னை கோடம்பாக்கம் – மாம்பலம் நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகும். அக்கூட்டத்தில் நடிகமணி டி.வி.நாராயணசாமி, நீலநாராயணன், சா.கணேசன், நடிகர் ஓ.ஏ.கே. தேவர், செல்வரத்தினம், பாண்டியன் முதலானோரும் பங்கேற்றுப் பேசினர்.
1969
01.10.1969 பேரறிஞர் அண்ணாவின் மணிவிழா, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இளைஞர் தி.மு.க.வினர் அண்ணா துயிலுமிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்று மாலை வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார். அக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுவை முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1970
13.01.1970ஆம் நாள் தி.மு.கழக முன்னணியினருக்கும், இளைஞர் தி.மு.க. அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அனுப்பி வைத்தார்.
சென்னை 115ஆவது வட்டத்தில் எம்.எஸ்.மணி அவர்கள் தலைமையில் 22.04.1970 அன்று நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அமைச்சர் என்.வி.நடராசன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை 119ஆம் வட்டம் – கோட்டூர் எல்லையம்மன் கோயில் அருகில் என்.எஸ்.கே. நினைவு மன்றத்தின் சார்பில் – சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் எம்.பி., கோவை செழியன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நாடகங்களில்…
நூறு பொதுக்கூட்டங்களுக்கு ஒரு நாடகம் ஈடானது என்பார்கள். அதனால்தான் பேரறிஞர் அண்ணா சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் முதலான நாடகங்களை உருவாக்கி அவற்றில் நடிக்கவும் செய்தார். தலைவர் கலைஞர் காகிதப்பூ முதலான நாடங்களில் நடித்தார். அவர்களின் வழியிலேயே கழகக் கொள்கைப் பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களும் பல்வேறு நாடகங்களில் நடித்தார். அவற்றில் முதல் நாடகம் முரசே முழங்கு. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார். இந்நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. 40ஆம் முறையாகவும், நிறைவாகவும் அதே அரங்கத்தில் நடைபெற்ற போது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியினை நீலநாராயணன் அவர்கள் தலைமையில் தனி அதிகாரி பரமசிவம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1971
25.10.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அண்ணா என்றும் வாழ்வது எதனால்? மனிதாபிமான உணர்வாலா?, மொழிப் பற்றாலா? என்னும் இப்பட்டிமன்றத்திற்கு மனிதாபிமான உணர்வால் என்னும் தலைப்பில் அமைச்சர் அன்பில் தருமலிங்கம், ஔவை நடராசன், துரைமுருகன், ஏ.கே.வில்வம், என்.வி.என்.செல்வம் ஆகியோரும், மொழிப்பற்றால் என்னும் தலைப்பில் அமைச்சர் க.இராசாராம், திருப்பத்தூர் இராமமூர்த்தி, இரகுமான்கான், முரசொலி அடியார், வலம்புரிஜான் ஆகியோரும் வாதப்போர் புரிந்தனர். மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர், கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பங்கேற்றனர். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
1972 அண்ணா ஜோதி
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலின், இளைஞர் தி.மு.க.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973
12.1.1973இல் இளைஞர் தி.மு.க. அலுவலகத்தை கழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு கழக மேடைகளில் எழுச்சி உரையாற்றி வந்தார்.
1973இல் ஏப்ரல் மாதத்தில் கொள்கை விளக்க நாடகமான திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
தேர்தல் ஆணையாளர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தி.மு.கழகத்தில் உள்ள ஜனநாயகப் பண்பான தேர்தல்தான். அடிப்படை உரிமைச் சீட்டுகளை உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த உறுப்பினர்கள் வாக்களித்து கிளைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். பின் கிளைக் கழக செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து நகர, ஒன்றிய கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். நகர, ஒன்றிய செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகளும் வாக்களித்து மாவட்டக் கழக நிர்வாகிகளையும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள். அதன்பின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்து தலைமைக் கழக நிர்வாகிகளையும், தணிக்கைக் குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல்களை கழகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முறையாக நடத்தி வருவது தி.மு.கழகத்தின் தனிச்சிறப்பு. 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று சிறப்புற நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும் ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
1975
20.08.1975 அன்று தளபதி அவர்கள் துர்க்காவதி (எ) சாந்தா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இத்திருமணம் கழக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுடன் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராசர், மத்திய, மாநில அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.
தி.மு.கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாம் மாநில மாநாட்டின் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் நடித்த வெற்றி நமதே நாடகம் நடைபெற்றது.
நெருக்கடி நிலை
1975ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அவரை எதிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்தார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய முயற்சி செய்தார். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் கோவையில் நடைபெற்ற தி.மு.க. 5ஆம் மாநில மாநாட்டில்
(Revoke Emergency – Release the Leaders and Restore Democracy) நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுக – கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்க – ஜனநாயகம் காத்திடுக என்று தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் – 30.01.1976 அன்று கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர் மகன் மு.க.ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையின் தலைவர் இல்லத்துக்கு விரைந்தனர். அப்போது ஸ்டாலின் ஊரில் இல்லாததால், தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தகவல் தருகிறேன் – நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மு.க.ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தலைவர் கலைஞர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் தலைவர் இல்லம் வந்து மு.க.ஸ்டாலினைக் கைது செய்தனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயான நிலையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகளை சிறைச்சாலை சித்திரவதையால் உயிர்நீத்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிறைக் குறிப்புகள் பதிவாக்கியுள்ளன.
சிட்டிபாபுவின் சிறை டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன்.
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன்.
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால்.
பத்து மணிக்கு காலை உணவு. ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு! ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர். அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே. விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்! சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது.
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது.
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை.
கயூம் உருவில் காலன் வந்தான்
மாலை 5 மணி. மீண்டும் உணவு களியுடன் கூடிய தட்டு. யாரோ பயன்படுத்திய தட்டுக்கள்; பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது.
இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் 8 மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது!
காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக் குறைய இருபதுக்கும் மேற்பட்டோர்! சிறை அதிகாரிகள் இருவர். கயூம் அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருதுச் சொல்தான் கயூம்.
ஆமாம் அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கை அசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்!
எப்படி இருகோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர்! அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!
பட்டாளத்தின் வீரர்களைப் போல அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த பள்ளி ஆசிரியர் கம்பீரமாக குரல் எழுப்பினர். அறை பத்து அருகில்! கண்களுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள்; கட்டையாகி விழப் போகிறவர்கள். அதே போல் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப்போல்!
கதவு திறக்கப்படும் ஒலி!
கம்பீரமான குரல் பேசியது!
பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். சர்ச் என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் துவங்கியது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது!
கொலைகாரக் கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டு இருந்தன! அலறல் அழுகுரல்கள். அய்யோ! அப்போ! அம்மா! – என்னும் அபயக் குரல்கள். ஓடு உள்ளே என்ற உத்திரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக் குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்து சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல் கணநேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தை தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது!
அறை பத்து! அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டே இருந்தது! அடுத்து ஓர் அறைதான்! அதற்கு அடுத்து எனது அறைதான். அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்று இருக்கும் நிலை எனக்கு! காரணம் இதுபோன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல. நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்! அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை!
ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போக வேண்டும். அவன் சொல்வது போல் ஆடையைக் கழற்றிவிட்டுப் போகக் கூடாது என்று சொன்னேன். ஆனாலும் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டே இருப்பதைக் காணாமல் இருக்க முடியவில்லை!
அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டும் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். வாங்கடா என்ற குரல். கடைசி அறை – அது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி, என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள் என்று அதட்டுகிறார். உத்திரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்.
சிறையல்ல – சித்திரவதைக் கூடாரம்
கதவு திறந்தது. யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப் போவதில்லை! அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்களல்லவா நாங்கள். எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமான நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்களால் கணநேரம் காண்பது எல்லாம் கார்இருள் போல் இருந்தது. இருகோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! அவர்கள் அசந்தனர்! இது எலி அல்ல புலி என்று!
காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை – தரை நோக்கி. தள்ளினார்கள் மதில் சுவர்மீது; சட்டென்று திரும்பிக் கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும், வலக்காலாலும், துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உதைத்தனர். வீராசாமி நெடுமரமாகக் கீழே சாய்ந்து கிடந்தார்.
வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் வி.எஸ்.ஜி. ஒரே குத்துத்தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம். மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான். குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்! கால் எடுத்து வைத்துகை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஒரு குத்து எனக்கு! மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள்.
கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது; எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்!
தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.
சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு
கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா! அம்மா! என ஒலி.
அன்புத் தம்பி ஸ்டாலினோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை வி.எஸ்.கோவிந்தராசன் மார்பில் சாய்த்திவிட்டு, அவன்தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தை தடவிக் கொண்டே கேட்டான். அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? ஆமாம்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்!
அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை, அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். அடிபலமா உனக்கு என்றேன். அதெல்லாம் இல்லை அண்ணே என்று அனுபவம் பெற்றவன் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள் என்றேன்.
இருக்கட்டும் அண்ணே என்று சொல்லி அவன் என்னை தன் கரங்களால் அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.
ஒருநாள் எங்களுக்கு உணவில் வேப்பெண்ணை ஊற்றிய சோற்றை வழங்கினார்கள். கசக்கிறது என்றனர் கழகத் தோழர்கள். கழுவிச் சாப்பிட வேண்டிய முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் இட்லி கொடுக்கப்பட்டது. நரநரவென்று மண்ணுடன் கூடிய மாவால் செய்யப்பட்டது. பகல் உணவு வந்தது. தட்டுடன் சென்றவர்கள் உப்பு அதிகம் உணவில் என்றனர். நீர் கலந்து கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? (தியாக தீபமாம் கொள்கை மறவர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிட்டிபாபுவின் சிறை டைரியை முழுவதுமாகத் தர இயலவில்லை. சிறைச்சாலைச் சித்ரவதையில் சீறும் வேங்கையாகச் சிறை சென்ற தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார்.)
1977
23.01.1977ஆம் நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து முரசொலி மாறன் எம்.பி., மு.க.ஸ்டாலின், சோமா. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
விடுதலை பெற்ற முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் நேராக முதலில் அறிஞர் அண்ணா துயிலுமிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் இல்லம் சென்று தலைவர் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சுழன்று பணியாற்றி கழகப் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னும் தொடர்ந்து கழகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1980
இந்நிலையில் கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கென ஒரு தனி அமைப்பு தேவையென கருதிய தலைவர் கலைஞர் தி.மு.க. இளைஞர் அணி என்னும் அமைப்பினை உருவாக்கினார். தி.மு.க. இளைஞர் அணியின் தொடக்க விழா, மதுரை மூதூரில், ஜான்சிராணி பூங்கா திடலில் 20.07.1980 அன்று நடைபெற்றது.
இளைஞர் அணி தொடக்க விழாவில் – அமைப்புச் செயலாளர் தென்னரசு, க. சுப்பு, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், வே.தங்கபாண்டியன், காவேரிமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
1982
01.08.1982 தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.. 17.8.82 இல் ஜெயம் ஜுலியஸ், முகவை பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவில் கூடுதலாக அறிவிக்கப்பட்டனர். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனாரின் மணிவிழாவினை கழக இளைஞர் அணி சிறப்பாக நடத்தியது.
1983
10.04.1983 தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க.ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜுலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும், பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர்.
1983 ஆகஸ்ட் 25ஆம் நாள் இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1984
மே மாதத்தில் நடைபெற்ற அண்ணாநகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பம்பரமென சுழன்று தேர்தல் பணியாற்றினார். தொகுதி முழுவதும் சைக்கிள் பேரணி, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என இளைஞர் அணியினரைத் திரட்டிப் பணியாற்றியதன் விளைவாக அத்தொகுதியில் கழகம் வென்றது.
தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவினை தி.மு.க. இளைஞர் அணி மிகுந்த எழுச்சியுடன் ஏற்பாடு செய்தது. நாவுக்கரசர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்களை நடுவராகக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன், துரைமுருகன், இரகுமான்கான், பெ.சீனிவாசன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என்.சோமு ஆகியோர் வாதப்போர் புரிந்தனர்.
ஏப்ரல் மாதத்தில், தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் தி.மு.கழகம் கையெழுத்து இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அப்பணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் கையெழுத்து சேகரித்தார்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.கழகம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மிதப்பில், எம்.ஜி.ஆர். சென்னை அரசினர் தோட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற அலுவலகத்தினை பறித்துக் கொண்டார். இதனைக் கண்டித்த கழக முன்னணியினர் நீலநாராயணன், ஆர்க்காடு நா.வீராசாமி, செ.கந்தப்பன், மு.க.ஸ்டாலின், சி.டி.தண்டபாணி, எல்.கணேசன், நெல்லிக்குப்பம் வெ.கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி வெளியேற்றிய போது தலைவர் கலைஞர் உள்ளத்தில் மேற்கொண்ட உறுதியால், சூளுரையால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயம் உருவாயிற்று.
அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின் போது தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடையில் மாபெரும் அணிவகுப்பை அணியின் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டியது.
1986
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இளைஞர் அணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தியாகிகள் திறந்து வைத்து உரையாற்றினார். அம்மாநாட்டில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்துவது என்ற முடிவுக்கு அமைய அப்போராட்டத்தில் தலைமையேற்போரின் பெயர்களும், இடங்களும் அறிவிக்கப்பட்டன. நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற கழகத்தவர் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டுக் கைதாகினர். அவர்களுள் பேராசிரியர் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க எம்.ஜி.ஆரின் அரசு சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது. இப்பதவி நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான நாவலர் நெடுஞ்செழியன் வாயிலாகவே எம்.ஜி.ஆர். முன்மொழிய வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராவார்.
1987
பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்ததோடு நில்லாது – அ.தி.மு.க. அரசு கழகத்தின் மீது பழி சுமத்த வெடிகுண்டு சதி வழக்குகளையும் புனைந்தது. திருச்சியில், முத்தரசநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும், கோவை, சிங்காநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன் போன்ற கழக முன்னணியினர் மீதும் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக், நவமணி, தங்கவேலு, ராமமூர்த்தி போன்ற இளைஞர் அணியினர் மீதும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கோவை சிறையிலிருந்த இளைஞர் அணியினரை வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைகளில் விலங்கிட்டு வீதிகளில் நடத்தியே அழைத்துச் சென்றனர். அப்புகைப்படக் காட்சியை கண்ட தலைவர் கலைஞர், சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான் என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் தீட்டினார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற கழக பொதுக்குழு தேர்தலுக்குப் பின் கழக இளைஞர் அணி மாநில செயலாளராக – மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை செயலாளர்கள் திருச்சி சிவா, மா.உமாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட பின்னால் கழகத்தின் தலைமைக் கழகம் அங்கே செயல்படத் தொடங்கியது. அதுவரை தலைமைக் கழகம் இயங்கி வந்த அன்பகத்தினைப் பயன்படுத்த சென்னை மாவட்ட தி.மு.க., தொழிற்சங்க பேரவை, இளைஞர் அணி ஆகிய மூன்று அமைப்புகளும் விரும்பின. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் யார் முதலில் 10 லட்சம் ரூபாயை கழகத் தலைமைக்கு நிதியாகச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அவ்வாய்ப்பு கிட்டும் என்று அறிவித்தார். மூன்று அமைப்புகளும் அதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு களமிறங்கின. தளபதி ஸ்டாலின் நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக நிதி திரட்டி தலைவர் கேட்டதற்கும் மேலாக ரூபாய் 11 லட்சத்தை ஒப்படைத்து அன்பகத்தை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றார். 1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் அன்பகத்தில் தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1989
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கண்டு மத்திய அரசில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதுபோன்றே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் கலைஞர் அவர்கள் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலார் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரிதி இளம்வழுதி முதலிய இளைஞர் அணி நிர்வாகிகளும் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை புரிந்தார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். கழக ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை நாடறியச் செய்யும் வகையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாளில் கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி இளைஞர் அணியின் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் நூறு சாதனைகளை விளக்கும் வகையில் நூறு அலங்கார வண்டிகள் பேரணியில் பங்கேற்றன.
1990
1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10 ஆகிய நாள்களில் தி.மு.கழகத்தின் ஆறாம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம்மாநாட்டின் முதல் நாளில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கழக இளைஞர் அணியினரின் வெண்சீருடைப் பேரணி மகத்தானது. அம்மாநாட்டு வளாகத்திற்குள் தி.மு.க. இளைஞர் அணி திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியை அமைத்தது. இக்கண்காட்சியைத் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அக்கண்காட்சியில் இயக்க வரலாற்றை விளக்கும் புகைப்படங்களும், ஓவியங்களும் எழிலுற அமைக்கப்பட்டன. அத்துடன் சேதுசமுத்திரத் திட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, போக்குவரத்துத் திட்டம் ஆகிய தமிழகம் காண வேண்டிய முன்னேற்றத் திட்டங்களை விளக்கும் செயல்விளக்கக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. எண்ணற்ற கழகத் தோழர்களும், பொதுமக்களும் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்து பயனடைந்து பாராட்டினர்.
அதன்பின் அதே ஆண்டு (1990) ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழிக முதல்வர் – தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளின் போது சென்னை கலைவாணர் அரங்கில் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை புகைப்பட – ஓவியக் கண்காட்சியாக இளைஞர் அணி ஏற்பாடு செய்தது. இப்பணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் – இளைஞர் அணி மாநில துணை செயலாளர் மா.உமாபதி, தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் அமைத்தனர். இக்கண்காட்சியை அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மொகந்தா அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
1991
1991ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கினார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ளாத பாரதீய ஜனதா கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகரின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றனர். சந்திரசேகர் 116 நாள்கள் மட்டுமே ஆட்சி செய்தார். எனினும் அக்குறுகிய காலத்தில் சந்திரசேகர் ஆட்சி செய்த ஒரே செயல் தமிழ்நாட்டில் கழக ஆட்சியைக் கவிழ்த்ததுதான். தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கழக அரசை பொய்யான காரணங்களைக் கூறி ஆளுநர் பர்னாலா பரிந்துரை செய்ய மறுத்தும் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் துணையோடு ஆட்சியைக் கலைத்தனர்.
அதற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவாக கழகம் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அத்தேர்தலில் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞரைத் தவிர மற்ற அனைவரும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
1992
பிப்ரவரியில் மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியினரின் வெண்சீருடை அணிவகுப்பு காண்போரை வியக்க வைத்தது. அப்பேரணி அணிவகுப்பில் தென்னார்க்காடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தயாளமூர்த்தி முதல் பரிசை வென்றார். அவருக்குத் தலைவர் கலைஞர் கேடயம் வழங்கி பாராட்டினார். மதுரை தமுக்கம் திடலில் நடைபெற்ற அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
1993
19.01.1993இல் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வடசென்னை மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் தமிழர் திருநாள் விழா மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக நடைபெற்றன. தலைவர் கலைஞர் நிறைவு உரையாற்றினார்.
1994
19.09.1994இல் கழக மதுரை மண்டல மாநாட்டில் முதல் நாள் நடைபெற்ற வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
7.10.1994இல் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லம் வந்த இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
1995
13.03.1995இல் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாநகர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி திரட்டினார். அத்தொகையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை இளைஞர் அணி வளர்ச்சி நிதியில் சேர்த்து, ரூபாய் ஒரு லட்சத்தை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நிதியாக இளைஞர் அணியின் சார்பில் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கினார்.
18.7.1995இல் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாளர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவு செய்து பேருரையாற்றினார்.
18.9.1995இல் கழக முப்பெரும் விழாவையொட்டி சென்னை இராயபுரம் அறிவகம் முதல் அண்ணா அறிவாலயம் வரை சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினரின் மாபெரும் சைக்கிள் பேரணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
1996
28.1.1996இல் தி.மு.கழகத்தின் 8ஆம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணியின் சிறப்பான அணிவகுப்பைத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், முரசொலி மாறன் உள்ளிட்ட கழக முன்னணியினர் வள்ளுவர் கோட்டம் வடிவில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் நின்று கண்டு களித்தனர்.
மாநாட்டில் இளைஞர் அணியின் சார்பில் ஏ.வி.கே. நினைவு திராவிட இயக்க வரலாற்று கண்காட்சி அமைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் துயிலுமிடங்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
10.8.1996இல் தமிழக முதல்வர் கலைஞர் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கினார். இத்திட்டத்தை +2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று +2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
சென்னை மேயர்
1996 அக்டோபரில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். உலகிலேயே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி மேயர் என்னும் சிறப்புத் தகுதி பெறுகிறார்.
28.12.1996இல் தி.மு.க. இளைஞர் அணியால் பல்வேறு கழகச் செய்திகளை உள்ளடக்கிய – நமது இயக்க நாள் குறிப்பு – 1997 வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் வெளியிட, கழகத் தலைவர் கலைஞர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
1997
28.6.1997இல் சேலத்தில் தி.மு.கழக சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
8.10.1997இல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறை ஏலகிரியில் நடைபெற்றது.
16.10.1997இல் இங்கிலாந்து நாட்டின் பேரரசியான இராணி எலிசபெத் சென்னை மாநகருக்கு வருகை புரிந்தார். அவருக்கு சென்னை மாநகரின் முதல் குடிமகனாம் மேயர் ஸ்டாலின் மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
27.10.1997இல் திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிற்சிப் பாசறையில் பேராசிரியர் நன்னன், கோவை மு.இராமநாதன், விடுதலை விரும்பி, திருச்சி செல்வேந்திரன், வெற்றிகொண்டான் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
30.10.1997இல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
22.11.1997இல் அமராவதி புதூர் குருகுலம் வளாகத்தில் சிவங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தா.கிருட்டிணன், சுப.தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1998
30.6.1998இல் மேயர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1999
3.1.1999இல் சென்னைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை விமான நிலையத்தில் மேயர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
4.1.1999இல் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையத்தினை மேயர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
30.8.1999இல் இளைஞர் அணியின் துணைச் செயலாளரும், தளபதி ஸ்டாலின் அவர்களின் உடன்பிறவா சகோதரரும், இளைஞர் அணித் தோழர்களின் உறவுப் பாலமாகவும் விளங்கிய அன்பில் பொய்யாமொழி மாரடைப்பில் காலமானார்.
2000
கடந்த 1991-1996இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த ஊழல்கள் எண்ணற்றவை. தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரைத் திட்டம் வரை பல்வேறு ஊழல்கள் தலைவிரித்தாடின. டான்சி நில ஊழல் வழக்கு முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பல்வேறு வழக்குகள் வழக்கு மன்றங்களில் பதிவாகின. அவற்றுள் ஒன்றான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று வழக்கு மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீச்சு – கட்டாய கடையடைப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டனர்.
அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக தருமபுரியில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சென்ற பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காட்டுமிராண்டிகள் கூட செய்ய அஞ்சும் அக்கொலை பாதகச் செயலாளர் அப்பேருந்தில் பயணம் செய்த ஹேமலதா, காயத்திரி, கோகிலாவாணி என்னும் மூன்று மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். மற்றும் பல மாணவிகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இக்கொடிய சம்பவத்தைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
2001
2001ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஜான்பாண்டியனால் திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா உடனடியாக கழக வெற்றி வேட்பாளர் பரிதி இளம்வழுதியை கைது செய்தார்.
அதன்பின் சட்டமன்றத்தில் கழக ஆட்சியில் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி புழுத்துப் போய்விட்டதாகப் பொய் சொன்னார். அரசுக் கிடங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போனவை அல்ல என்பதை நிரூபித்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, செய்தியாளர்களுடன் சென்று மாதிரிகளை எடுத்து அவை நல்ல அரிசிதான் என்பதை நிரூபித்தார். இதனை அத்துமீறல் என்று கூறி ஜெயலலிதாஅரசு பொன்முடியைக் கைது செய்தது.
ஜெயலலிதாவின் ஏவல் துறையாக செயல்பட்ட காவல் துறையினர் ஜூன் 30ஆம் நாள் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களை அறைக் கதவுகளை உடைத்து, அத்துமீறி அராஜகமான முறையில் கைது செய்தனர். இதனைத் தட்டிக் கேட்ட மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளபதி ஸ்டாலின் அவர்களையும் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர் பெங்களூருக்கு சென்றிருந்ததால் கைது செய்யவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையை சிங்காரச் சென்னையாக்கிட பத்து மேம்பாலங்களைக் கட்டிச் சாதனை படைத்ததை ஊழல் என்று கூறி கைது நடவடிக்கைகள் நடைபெற்றன. தலைவர் கைது செய்யப்பட்டதையும், தான் தேடப்படுவதையும் அறிந்த தளபதி ஸ்டாலின் உடன் சென்னை திரும்பி காவல்துறையிடம் தன் ஒப்படைப்பு செய்தார்.
தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்து நாடே கொந்தளித்தது. பலர் நெஞ்சதிர்ச்சியாலும், நஞ்சருந்தியும், தீக்குளித்தும் மாண்டனர். நாடு முழுவதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சிறையேகினர்.
தலைவர் கலைஞர் அவர்களை அக்கிரமமான முறையில் கைது செய்தததைக் கண்டித்து ஆகஸ்ட் 12ஆம் நாள் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் வரை நடைபெற்றது. அமைதியான முறையில் தன் கண்டனத்தைத் தெரிவித்து நடைபெற்ற அந்தப் பேரணியை, காவல்துறைத் தலைவர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சியால் ஏவப்பட்ட கூலிப் படைகளும், காலிப் படைகளும் அரிவாள், பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஆறு தோழர்கள் மரணமடைந்தனர். எண்ணற்ற கழகத் தோழர்கள் படுகாயமுற்றனர். சிதறியோடிய கழகத் தோழர்கள் மீது காவல் துறையினர் குண்டாந்தடி கொண்டு தாக்கினர். இக்காட்சிகளைப் படம் பிடித்த செய்தியாளர்களும் காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளாகினர். காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். கழகத் தோழர்கள் வந்த வாகனங்கள் பல தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இப்பேரணியில் முழக்கமிட்டபடி தொழிலாளர் பேரணியை நடத்தி வந்த தொழிலாளர் முன்னேற்றக் கழக செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வை.பெருமாள் நெஞ்சதிர்ச்சியால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக, தொண்டர் அணியின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தொண்டர் அணியில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கலைஞர் விருது பொற் பதக்கம் வழங்கப்பட்டது. அப்பதக்கத்தை மிடுக்குடன் வந்து பெற்றுத் திரும்பிய தொண்டர் அணியின் செயலாளர் மாஸ்டர் தமிழ்ப்பித்தன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து நெஞ்சதிர்ச்சியால் மாண்டார்.
தளபதி அவர்களின் தலைமையில் சிறப்பு மிகுந்த வெண்சீருடை அணிவகுப்பினை நடத்திக் காட்ட பயிற்சியளித்தவரும் தளபதி அவர்களின் தனியன்புக்கு உரியவருமாமன மாஸ்டர் தமிழ்ப்பித்தன் இழப்பு கழகத்திற்கு பேரிழப்பாகும்.
25.10.2001 சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றார்.
2002
22.04.2002 எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் மேயர் போன்ற உள்ளாட்சி மன்ற பதவி வகிக்க முடியாதபடி 22.9.2002இல் அ.தி.மு.க அரசு சட்டம் கொண்டு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் அவர்களின் மேயர் பதவியைப் பறித்தது.
சென்னை மாநகர தலைவராக (மேயராக) இருந்த தளபதி ஸ்டாலின் அவர்களின் பதவியைப் பறித்தது செல்லாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு கொடுத்தது. எனினும் இரண்டாவது முறையாக ஒருவரே மேயர் ஆக முடியாது என்று கூறியதால் மேயர் பொறுப்பை விடுத்தார்.
2003
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த கழக தளபதி மு.க.ஸ்டாலின் கழகத்தின் 12ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2.6.2003இல் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருமுயற்சியால் தி.மு.க. இளைஞர் அணி நடத்தி வந்த திராவிட இயக்க வரலாறு கண்காட்சி, நிரந்தரமான கண்காட்சியமாக அண்ணா அறிவாலயத்தில் உருவானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணிக்கு தஞ்சை இரத்தினகிரியும், பொள்ளாச்சி மா.உமாபதியும் துணை நின்றனர். கலைஞர் கருவூலம் என்னும் குளிரூட்டப்பட்ட 10,000 சதுர அடி பரப்பளவு தளத்தில் அமைந்த அக்கண்காட்சி இந்தியாவில் வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமை கொண்டது. கலைஞர் கருவூலத்தை மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
2004
மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என பிரகடனம் செய்தார். தலைவரின் அறிவிப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகியது. இதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தி.மு.கழகம் தலைமையில் இக்கூட்டணி 40 இடங்களிலும் வென்று மகத்தான வரலாறு படைத்தது.
மத்திய அரசில் தமிழகத்தின் சார்பில் ஆறு கேபினட் அமைச்சர்களும், ஆறு இணை அமைச்சர்களுமாக 12 தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி பாராட்டுக் கூட்டம் நடத்தியது.

—————————————————————————————————————————-

தி.மு.க. இளைஞர் அணி

தி.மு.க. இளைஞர் அணி தலைவர் கலைஞர் அவர்களால் 1980, ஜூலை 20ஆம் நாள் மதுரை, ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க. இளைஞர் அணி துவங்கப்பட்டது.

1982, ஆகஸ்ட் 1ஆம் தேதி திருச்சி வாசவி மகாலில் இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் முதன்முதலாக நடைபெற்றது. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் பேசினர்.

கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் 1982, ஆகஸ்ட் 1ஆம் நாள் தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க. ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

17.8.1982இல் ஜெயம் ஜுலியஸ், பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவிற்கு கூடுதலாக அறிவிக்கப்பட்டனர்.

1983, ஏப்ரல் 10-இல் பொதுச் செயலாளர் அவர்களால் தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க. ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜூலியஸ் ஆகியோர் மாநில இளைஞர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

1983, ஆகஸ்ட் 25இல் இளைஞர் அணிக்கு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் என நியமிக்கப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு இளைஞர் அணிக்கு மாவட்டத்திற்கு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் என நியமிக்கப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு ஒன்றிய, நகர, பகுதிக்கு இளைஞர் அணி அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

2002ஆம் ஆண்டு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதிக்கு இளைஞர் அணி அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்களும், பேரூர் கழகத்திற்கு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

தற்போது இளைஞர் அணி, கிராமங்கள் மற்றும் வார்டுகள் தோறும் சார்பு மன்றங்களைப் போல இளைஞர் அணி அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

—————————————————————————————————————————-

 

தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

பெயர் : மு. கருணாநிதி, தலைவர் கலைஞர் என தமிழ் உலகமெங்கும் போற்றப்படுவர்.
தந்தை : தாய் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார்
பிறந்த ஊர்: திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை
பிறந்த நாள்: 1924, சூன் திங்கள் 3ஆம் நாள்
சிறப்பியல்புகள் இணையற்ற மனிதாபிமானி, ஓய்விலா உழைப்பாளர், மக்கள் தலைவர், ஒப்பற்ற சிந்தனையாளர், உலகத் தமிழர்களுக்கு என்றே ஓயாது உழைத்து வருபவர், நிகரற்ற பேச்சாளர், செயல் வீரர், சிறந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர், பத்திரிகை ஆசிரியர், ஓவியர், பதிப்பாளர், வெளியீட்டாளர், மதிநுட்பம் மிக்க அரசியல் அறிஞர்.
1957 – 1996 14 வயது முதலே பொதுவாழ்வில் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். பல்வேறு அரசியல் போராட்டங்களில், குறிப்பாக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி அறப்போர், விலைவாசி உயர்வு மும்முனைப் போராட்டம், ஈழத் தமிழர் அறப்போரில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பல முறை சிறை சென்றவர்.
1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ நேசன் கையெழுத்து ஏட்டின் ஆசிரியர்.
1938 இராஜாஜியின் கட்டாய இந்தியை எதிர்த்து ஊர்வலம்.
1941 தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1949 பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் காணுதல்.
1961 திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர்.
1962 – 1967 சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆனார்.
1967 அண்ணாவின் அரசியல் பொதுப்பணித் துறை அமைச்சர். அரசு அலுவலகம், பேருந்து ஆகியவற்றில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம் பெறச் செய்தது.
1969 தி.மு.க.வின் தலைவர் பொறுப்பு ஏற்றார்.
1969 – 1971 முதன்முறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
1971 – 1976 இரண்டாம் முறை முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
சட்டமன்ற வெற்றிகள்
1956 குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றார்.
1962 தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1967 சைதை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1971 அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1977 அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1980 மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1989 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1991 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் விலகினார்.
1996 சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1957 – 1996 41 ஆண்டுகள் தோல்வியைச் சந்திக்காமல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பணியாற்றினார்.
1977 – 1983 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
1983 ஈழத் தமிழர் நலங்காக்கும் பெரும் போரில் தமது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
1984 – 1986 மேலவை உறுப்பினர் ஆனார்.
1989 – 1961 மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.

நூல்கள்

ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன், சங்கத் தமிழ், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, வெள்ளிக்கிழமை, புதையல், ஒரே ரத்தம், திருக்குறள் உரை என 100க்கும் மேலானவை.

நாடகங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை.

தூக்குமேடை, மணிமகுடம், பழனியப்பன், காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் முதலியன.

திரைப்படங்கள் எழுபதுக்கும் மேற்பட்டவை.

ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, தேவகி, மணமகள், ஆடடெ ஜெனமா, பராசக்தி, பணம், நாம், திரும்பிப் பார், மனோகரா, மனோஹரா (தெலுங்கு), மலைக்கள்ளன், அம்மையப்பன், ராஜாராணி, ரங்கோன் ராதா, பராசக்தி (தெலுங்கு), புதையல், வீரகங்கணம் (தெலுங்கு), புதுமைப்பித்தன், குறவஞ்சி, எல்லோரும் இந்நாட்டுமன்னர், அரசிளங்குமரி, தாயில்லா பிள்ளை, இருவர் உள்ளம், காஞ்சித்தலைவன், பூம்புகார், பூமாலை, அவன் பித்தனா? மறக்க முடியுமா? மணிமகுடம், தங்கதம்பி, வாலிப விருந்து, ஸ்திரீ ஜென்மா (தெலுங்கு), எங்கள் தங்கம், பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, அணையா விளக்கு, வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே, அம்மாயி மொகுடு மாமகு யமுடு, குலக்கொழுந்து, மாடி வீட்டு ஏழை, தூக்குமேடை, இது எங்க நாடு, திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள், குற்றவாளிகள், காகித ஓடம், பாலைவன ரோஜாக்கள், நீதிக்கு தண்டனை, ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால், பாசப்பறவைகள், இது எங்கள் நீதி, பாடாத தேனீக்கள், தென்றல் சுடும், பொறுத்தது போதும், நியாயத்தராசு, பாசமழை, காவலுக்குக் கெட்டிக்காரன், மதுரை மீனாட்சி, புதிய பராசக்தி.
13.5.1996 நான்காம் முறையாக தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
3.6.1998 பவளவிழா ஆண்டு தொடக்கம்

வரவேற்காமல் வரக்கூடிய நோய்,
தடுத்தாலும் கேளாமல் தழுவக்கூடிய சாவு,
இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும்
உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள்தான்
நிலைத்துவாழக் கூடியவை.
– தலைவர் கலைஞர்

கலைஞர் ஒரு சிறைப்பறவை
சிறைப்படுத்தப்பட்ட நாள்கள்
1. கல்லக்குடி – 15-7-53 முதல் 21-11-53 வரை
பெயர் மாற்றப் போராட்டம்

2. பிரதமர் நேருவுக்குக் கருப்புக்கொடி – 3-4-58 முதல் 8-1-58 வரை
விளக்கக்கூட்டம் தடை மீறல்

3. விலைவாசி உயர்வு கண்டனப் – 19-7-62 முதல் 26-10-62 வரை
போராட்டம் (தஞ்சை)

4. மதுரை சட்ட எதிர்ப்புப் போராட்டம்
தலைமை தாங்கியதாகக் குற்றச்சாட்டு – 19-12-63 முதல் 25-12-63 வரை

5. தடுப்புக் காவல் சட்டப்படி குளித்தலை – கோவைப் பயணத்தில்
பசுபதிபாளையத்தில் கைது – 25-4-65 முதல் 2-2-65 வரை

6. இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 16-2-65 முதல் 4-4-65 வரை
பாளையங்கோட்டை சிறைச்சாலை நள்ளிரவு 12 மணியளவில் கைது

7. நெருக்கடி காவல் (பத்திரிகைத் தணிக்கையைக்
கண்டித்து அண்ணாசாலையில் – 2-6-76 – இரவே விடுதலை
போராட்டம்

8. பிரதமர் இந்திராகாந்திக்குக்
கருப்புக் கொடி – 30-10-77 முதல் 8-12-77 வரை
9. இலங்கைத் தூதர் அலுவலகத்தின் முன்
அடையாள மறியல் செய்தவர்களை விடுவிக்கக்கோரி மறியல் – 15-9-81 முதல் 29-9-81 வரை

10. இலங்கைத் தமிழர் ஆதரவுப்
போராட்டம் – காஞ்சிபுரம் – 16-5-85 முதல் 30-5-85 வரை

11. சென்னை அரசினர் தோட்ட
கட்சி அலுவலகம் மூடல் – 30-5-85 – இரவே விடுதலை

12. இந்தித் திணிப்பு அறிக்கை எரிப்பு
(சிறைக் கைதி உடை) – 9-12-86 முதல் 30-1-87 வரை

13. வெள்ளக்கோவில் பொதுக்கூட்டம்
தொடர்பாக குமாரபாளையத்தில் கைது – 19-4-87 – இரவே விடுதலை

14. இடஒதுக்கீட்டுப் போராட்டம் – 20-6-94 – இரவே விடுதலை

——————————————————————————————————————————————————–

கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

 

பெயர் : பேராசிரியர் க.அன்பழகன்
பெற்றோர் : சொர்ணம் – மு. கல்யாணசுந்தரம்
பிறப்பு : டிசம்பர் 19, 1922
சொந்த ஊர் : நாகை மாவட்டம், வைத்தீசுவரன் கோயில் அருகே உள்ள கொண்டந்தூர்
கல்லூரிக் கல்வி : (எம்.ஏ). அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
1941 மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் ஈடுபாட்டால் இராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்.
1943 தலைவர் கலைஞர் நடத்தி வந்த தமிழ்நாடு மாணவர் மன்ற விழாவில் பங்கேற்றார்.
1944 சென்னை, பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் பணியேற்றார்.
1948 புதுவாழ்வு இதழ் – சண்பகம் இதழ்களுக்கு 1949 வரை ஆசிரியர், சிறப்பாசிரியர்
1952 இலங்கைப் பயணம்
1956 நேருவிற்குக் கறுப்புக் கொடி காட்டி கைதாகி 5 நாள் சிறைவாசம் ஏற்றார்.
1957 கல்லூரிப் பேராசிரியர் பணியிலிருந்து விலகி எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1959 தி.மு.க. சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவர். தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளராக 1961 வரை பணியாற்றினார்.
1962 சென்னை – செங்கை ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி மேலவையில் தி.மு.க. குழுவின் தலைவரானார்.
1964 இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதச் சிறைவாசம் ஏற்றார்.
1967 திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியடைந்து, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
1968 ஏதன்ஸ், ரோம், பாரிஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்று வருதல்.
1971 சென்னை புரசைத் தொகுதியில் வெற்றி பெற்று 1976 வரை தலைவர் கலைஞரின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1974 தி.மு.கழகப் பொருளாளராகப் பதவி ஏற்றார்.
1976 இந்திராகாந்திக்குக் கறுப்புக்கொடி காட்டி, கழகம் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1977 புரசை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார்.
1978 இந்திராகாந்திக்குக் கறுப்புக் கொடி காட்டிக் கைதாகிச் சிறைவாசம் ஏற்றார்.
1980 புரசைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1983 ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் நிலையைக் கண்டித்துத் தலைவர் கலைஞருடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
1984 சென்னைப் பூங்காநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1986 அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டமன்ற உறுப்பினர் பதவி இழந்தார்.
1989 சென்னை அண்ணாநகர் தொகுதியில் வென்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1994 மலேசியப் பயணம் மேற்கொண்டார்.
1996 சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வென்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1978, 1983, 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998 பவள விழா – பணிகள் தொடர்கின்றன.


—————————————————————————————————————–
மனோரமா விழாவில் கலந்துகொள்வது என் பாக்கியம்: கருணாநிதி

சென்னை, ஜன. 14 உலகின் மிகச் சிறந்த நடிகையான மனோரமா வின் பொன்விழா பாராட்டு விழா வில் கலந்துகொள்வது என்னு டைய பாக்கியம் என முதல்வர் கரு ணாநிதி தெரிவித்தார்.

1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம், ஹிந்தி உள் ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களில் நடித்துள்ள மனோரமாவுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலை மையேற்று கருணாநிதி பேசியதா வது: “மனோரமாவின் இன்றைய பேச்சு, குறிப்பாக என்னைப் பற்றிப் பேசும்போது ஏற்பட்ட பரபரப்புக் குக் காரணம் எங்களுடைய கலையு லகத் தொடர்பு மட்டுமல்ல; அவர் பிறந்தது திருவாரூருக்கு அருகி லுள்ள காட்டூர் என்பது மட்டு மல்ல, அதையும் தாண்டிய குடும்ப உறவும் உண்டு.
குடும்ப ரகசியம்: இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் மத்தியில், இதுவரை நான் வெளியிடாத ஒரு குடும்ப ரகசியத்தைக் கூற விரும்புகி றேன். 1967-ம் ஆண்டு திமுக ஆட் சிப் பொறுப்பேற்ற ஏழு, எட்டு மாதங்களில் தஞ்சையில் என்னு டைய தலைமையில் “அண்ணா கவி யரங்கு’ நடைபெறவிருந்தது.

அந்த விழாவுக்குச் செல்லும் போது திண்டிவனம் அருகே கார் விபத்துக்குள்ளாகி நான் உள்பட பலரும் படுகாயமடைந்தோம்.

செய்தியைக் கேள்விப்பட்ட அண்ணா உள்பட பலரும் எனக்கு என்ன ஆகிவிட்டதோ என கவலை யுற்று திண்டிவனத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து என்னை சென்னைப் பொதுமருத்துமனையில் அனும தித்தனர். அதுவரை எனக்கு நினைவு திரும்பவில்லை.
அப்போது மனோரமாவும் அவ ரது தாயாரும் நான் அனுமதிக்கப் பட்ட அறைக்கு வந்துள்ளனர். அப் போது அங்கு தலைவிரி கோலமாக வந்த என்னுடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் அழுது புலம்பி யிருக்கிறார். அப்போது அங்கு இருந்த தயாளு அம்மாள் அதைப் பார்த்துவிட்டு “இது யார்?’ என மனோரமாவிடம் கேட்டிருக்கி றார்.

அவ்வளவுதான்… “ஊருக்கெல் லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!’ என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, “ஊருக்குத் தெரிந்த -வீட்டுக்குத் தெரியாத’ விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது. மனோ ரமா என்ன நினைத்து சொன் னாரோ தெரியாது; ஆனாலும் இன்றளவும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலகின் ஒப்பற்ற நடிகை:

“உதயசூரியன்’ என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாகவும் மனோ ரமா கதாநாயகியாகவும் நடித் தோம். அதில் நான் தேசியவாதியா கவும் மனோரமா திராவிடம் என் றால் என்ன என்று விளக்கும் கதா பாத்திரத்திலும் நடித்தோம். ஒரு பெண்ணுக்கு அந்த வேடத்தைக் கொடுத்ததற்குக் காரணம், திராவி டத்தைப் பரப்புவதற்காகத்தான்.
ஏனென்றால் பெண்கள் திருந்தி னால் போதும் நாடே திருந்திவி டும்.

மனோரமா பேசும்போது நான் இந்த விழாவில் கலந்துகொள்வது அவருடைய பாக்கியம், பெருமை என்றெல்லாம் கூறி எல்லாவற்றை யும் எனக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறி னார்.

ஆனால் உண்மையைக் கூற வேண்டுமானால் உலகின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நடிகை மனோ ரமாவின் பொன்விழாவை யொட்டி நடைபெறும் இந்த மாபெரும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நா ளில் பெற்ற பாக்கியம்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கருணாநிதி.

ரஜினிகாந்த்:

நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ராஜாரா மன் தாஸ் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் பாலி வுட்டில் முக்கிய நடிகர்கள், தமி ழில் சிவாஜிகணேசன், ரெங்கா ராவ், எம்.ஆர்.ராதா, பாலையா போன்றோரைப் பற்றிய படக் காட் சிகளைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்.

ஹீரோயின்களில் அவர்கள் தேர்ந்தெடுத்தது சாவித்ரி, மனோ ரமா. அவருடன் “குப்பத்து ராஜா’ படத்தில் முதல்முறையாக நடித் தேன். அப்போது என் தமிழ் உச்ச ரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து “இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு’ என்று கூறியவர்.

ஒருசமயம் “பில்லா’ படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அரு கில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒருவர் “பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே’ என்று குரல் கொடுத்தார். அந்தக் காலகட் டத்தில் என்னைப் பற்றி ஒருவித மாக செய்திகள் வந்துகொண்டிருந் தன.

அப்போது என் அருகில் இருந்த மனோரமா அந்த நபரின் சட்டை யைப் பிடித்து அடித்து, “அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றி னால்தான் நடிப்பேன்’ என்று கூற அவர் வெளியேற்றப்பட்டார்.

அந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் என்றார்.

கமல்ஹாசன்:

சிவாஜிகணே சன், ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா ஆகியோரின் மடியில் தவழ்ந்த நான், இந்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான்.

மனோரமாவின் பணிவு, பண்பு, அன்பு போன்றவை அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரி யும். எனக்குத் தெரிந்து கண்ணுக் கெட்டியவரை மனோரமாவுக்கு நிகரான நடிகை இந்த உலகில் இல்லை. அவருக்கு ஆண்டுதோ றும் விழா நடத்தினாலும் கண்டிப் பாக கலந்துகொள்வோம் என்றார் கமல்ஹாசன்.

மனோரமா:

எனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டனர். தவிர்த்து வந்தேன். கரு ணாநிதி ஆட்சி செய்யும்போது தான் இந்த விழா நடக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப் பம் போலும். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு நான்கு பேர் முக்கியக் காரணம். முதலாவதாக என்னு டைய தாய். இரண்டாவது என் னுடை தாய் ஸ்தானத்தில் இருக்கும் கருணாநிதி. அவருடைய “மணிமகு டம்’ நாடகத்தின் மூலம்தான் கலை யுலகுக்கு அறிமுகமானேன்.

தொடர்ந்து அவருடைய நாடகங்க ளில் நடித்துத்தான் புகழடைந் தேன். மூன்றாவதாக கவிஞர் கண் ணதாசன். கருணாநிதியின் நாட கங்களில் நான் நடிப்பதைப் பார்த் துவிட்டு அவர்தான் என்னை 1958-ல் “மாலையிட்ட மங்கை’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.

நான்காவது நபர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். என்னை செட்டிநாட்டிலிருந்து சென் னைக்கு வரவழைத்தவர். இவர்க ளும் தமிழக ரசிகர்கள் என்மேல் காட்டி வரும் அன்பும்தான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்.

அனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக் கிறேன் என உணர்ச்சிவயப்பட்டு நன்றி தெரிவித்தார் மனோரமா.நடிகை மனோரமாவின் பொன்விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில்
திங்கள்கிழமை நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 50 தங்க
நாணயங்கள் பொறித்த நினைவுப்பரிசை மனோரமாவுக்கு வழங்கினர்.

Posted in Alagiri, Alakiri, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Azakiri, Azhagiri, Azhakiri, Biosketch, DMK Youth Wing, dmkyouthwing, dmkyouthwing.in, Faces, History, Kamal, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, MK Stalin, MLA, MLAs, MLC, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, people, Rajini, Rajni, Stalin, www.dmkyouthwing.in | Leave a Comment »

Women in Politics – DMK, Thamizhachi, Thankam Thennarasu, Mu Ka Azhagiri

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

Host unlimited photos at slide.com for FREE!
அரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா

தி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட
பிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.

  • அலமேலு அப்பாத்துரை,
  • சற்குண பாண்டியன்,
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)

ஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.

“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

தி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.
—————————————————————————————————-

எந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.

“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.

“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.

தமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.

– ப்¡ரியன்
———————————————————————————————–

மு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ?’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.

ராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.

இன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.

தி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.

இவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.

2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.

எதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.

——————————————————————————————————————————————————

தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்

திருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

அது குறித்த விவரம்:

1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,

2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,

3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்

4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு

5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா! குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ.,

6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்

7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்

8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்? நெல்லிக்குப்பம் புகழேந்தி

9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா

10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி

11. புதிய புறநானுõறு படைப்போம்! கரூர் கணேசன்

12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்! தாமரை பாரதி

13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்

14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி

15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்

16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி

17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி

18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா

19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்

20. சாதி பேதம் களைவோம்! வி.பி.ஆர்., இளம்பரிதி

21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்

22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்! சென்னை அரங்கநாதன்

23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்

24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி! புதுக்கோட்டை செல்வம்

25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி

26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி

27.தீண்டாமையை ஒழிக்க சபதமேற்போம்! திருப்பூர் நாகராஜ்

28. மனித உரிமை காக்கும் மான உணர்வு! வரகூர் காமராஜ் >

——————————————————————————————————————————————————

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்

> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.

> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.

> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.

> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted in ADMK, Anna, Arulmoli, Arulmozhi, Arulmozi, College, DMK, Elections, Females, Ilampirai, Instructors, JJ, Kalainjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavinjar, Ladies, Lady, Literature, Manushyaputhiran, MGR, MK, Nellai, Poems, Poets, Polls, Poongothai, Poonkothai, Professors, QMC, Queen Marys, Raani Mary, Rani Mary, Rani Mary College, Ravikkumar, Ravikumar, Reservations, Salma, Sarguna pandian, Sarguna pandiyan, Sargunapandian, Sargunapandiyan, Sarhunapandiyan, Sathiavani Muthu, Sathiavanimuthu, Sathiyavani Muthu, Sathiyavanimuthu, She, Teachers, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangam, Thangam Thennarasu, Thennarasu, Tirunelveli, Votes | Leave a Comment »

Display of power and the arrogance behind the Govt sponsored conferences: DMK at Nellai

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

பலமல்ல, பலவீனம்!

தொடர்பான முழுமையான செய்தித் தொகுப்பு: DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details « Tamil News

நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பதுபோல இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் டிஜிட்டல் பேனர்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் கறுப்பு சிவப்பு கொடிகள். சினிமா விளம்பரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சுவரொட்டிகள். ஆளும் கட்சியின் அதிகார மையம் தனது நேரடி மேற்பார்வையில் நடத்தும் மாநாடு என்றால் சும்மாவா பின்னே?

இந்தக் கோலாகலங்களை எல்லாம் பார்க்கும்போது, மனதிற்குள் சற்று நெருடல். சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இந்தியக் குடியரசு 14 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து விட்டிருக்கிறது. மக்களாட்சி மலர்ந்த ஆரம்ப காலங்களில், அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டவும், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மாநாடு மற்றும் பேரணிகள் தேவைப்பட்டன.

இதுபோன்ற மாநாடுகள் மூலம், தங்களது தொண்டர்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவதும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அப்போது தேவையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், இந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்பதுமட்டுமல்ல, மக்களிடம் தெளிவான அரசியல் சிந்தனை இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். இப்போது நிலைமை அதுவல்ல. அடுப்பங்கரைவரை அரசியல் பேசப்படுகிறது என்பதும், ஒவ்வொரு வாக்காளரும் தெளிவான அரசியல் சிந்தனை உடையவராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

மாநாடு, பேரணி என்கிற பெயரில் பறக்க விடப்படும் கொடிகளுக்குப் பயன்படும் துணிகள் இருந்தால், உடுக்க உடையின்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும். போஸ்டர்களுக்காகச் செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாடப்புத்தகத்துக்குப் பயன்படும். டிஜிட்டல் பேனர்களுக்குச் செலவிடும் பணத்தில் மாவட்டம்தோறும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகோல முடியும்.

இளைஞரணி மாநில மாநாட்டுக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லையை நோக்கித் தொண்டர்களுடன் செல்ல இருக்கின்றன. எத்தனை லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மறுபுறம். எத்தனை இளைஞர்களின் மனித சக்தி, மாநாடு என்கிற பெயரில் வீணடிக்கப்படப் போகிறது என்பதை யோசித்துப் பார்த்தால், இத்தனை மணித்துளிகளை நம்மைத் தவிர உலகில் வேறு யாராவது வீணடிப்பார்களா என்கிற கேள்வி அலட்டுகிறது.

மற்ற கட்சிகள் டிஜிட்டர் பேனர் வைப்பதற்குத் தரப்படும் தடைகளும், கட்டுப்பாடுகளும் ஆளும் கட்சி மாநாடுக்கு மட்டும் ஏன் தரப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால், அவர்கள் மட்டும் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசிக்கும்போது சிரிப்பு வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் அனைவருமே குற்றவாளிகள்தான்.

இப்படி கூட்டத்தைக் கூட்டித்தான் தங்களது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான், இப்படி மாநாடு மற்றும் பேரணிகள் கூட்டப்படுவதன் காரணம் என்பது பாமரனுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஏன் இது தெரியவில்லை?

மக்களின் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்துவதையும், பேரணி நடத்துவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஒரு ஜனநாயகத்தின் சில நியாயமான பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அவை தேவைப்படுகிறது. ஆனால், கட்சி மாநாடு என்கிற பெயரில் இளைஞர்களையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் இம்சிப்பதை அரசியல்வாதிகள், அதுவும் பொறுப்பான பதவியை வகிப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மாநாடுகள் பலத்தைக் காட்டவில்லை; பலவீனத்தைத்தான் வெளிச்சம் போடுகின்றன!

————————————————————————————————————————————————————-
மாநாடு நடந்த மைதானத்தின் கதி என்ன?

திருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மைதானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பாளையங்கோட்டையிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிச. 15, 16-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.

அதில் அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தக்கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநாடு நடைபெறவுள்ளதால் அம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த கடந்த நவ. 23-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது.

குறிப்பாக மாநாடு முடிந்த பிறகு, விளையாட்டு மைதானம் எப்படி இருந்ததோ அதே அப்படியே சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம்: மாநாடு முடிந்த பிறகு, பொதுப்பணித் துறைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மைதானம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

கல்லூரி முதல்வர் டிச. 20-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் மைதானம் தொடர்பாக தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

மாநாடு முடிந்த நிலையில், மைதானம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநாடு பந்தல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் மழை பெய்ததால் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. மாநாட்டு மைதானம் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் அதை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விநாயகம் தெரிவித்தார்.
————————————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Arcot, Arcot N Veerasamy, Arcot Veerasami, Arcot Veerasamy, Bribery, Bribes, Conference, Corruption, Dinamani, DMK, Economy, Elections, Electricity, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Media, MK, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, MK Stalin, MSM, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Op-Ed, Order, Politics, Polls, Poor, Power, Prices, Procession, Rich, Stalin, State, Tirunelveli, voter, Votes, Waste, Youth | 2 Comments »

‘Indo-US accord on Nuclear deal is a must for growth’ – DMK chief Karunanidhi’s daughter Kanimozhi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை!: கனிமொழி

புதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.

கனிமொழி பேசியதாவது:

இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.

இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

சிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.

நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.

அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.

சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

நான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.

உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொருளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.

இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.

Posted in 123, Accord, America, Atom, Atomic, BJP, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), daughter, deal, DMK, Electricity, Growth, Indo-US, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Nuclear, Power, US, USA | 1 Comment »

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Arrangements, Azagiri, Azakiri, Azhagiri, Coalition, Conference, Details, DMK, Election, Issues, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuppasaami, Karuppasaamy, Karuppasami, Karuppasamy, Karuppasamy Pandian, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, MK Alagiri, MK Alakiri, MK Azhakiri, MK Stalin, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Pandian, Politics, Polls, Power, Preparations, Stalin, Students, Thirunelveli, Tirunelveli, V Karuppasamy Pandian, Votes, Youth | 3 Comments »

Kovilpatti 1950 – History of DMK – Kalainjar Mu Karunanidhi’s Speech

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007


கோவில்பட்டியில்
1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை
கருணாநிதி அறிக்கை


சென்னை, நவ.28-

1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நினைவுபடுத்தி கொள்கிறேன்

பழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம்! தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

மட்டிலா மகிழ்ச்சி

“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.

சரண்புக மாட்டோம்

தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.

செப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்! சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஐநூறு கிளைகள்

ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல்! ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.

நம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.

இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.

நாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.

மகத்தான இயக்கம்

ஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.

நம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.

அர்ப்பணிக்க வேண்டும்

நாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.

ஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே! குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.

சமூகநீதி தேவை என்றால்…

1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு!. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு!….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.

இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா? கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை? யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

அடுத்த திட்டம்

நாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ! அநீதி!’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க! அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.

அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா? வாழ்வா? என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.

கோரப்பசி

ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.

பசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.

அகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர்! அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர்! புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! புரட்சிப்பண் பாடிட வாரீர்!

வாரீர் வாரீர்… வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! … என அழைக்கிறேன்.”

இளைய உடன்பிறப்புகளே! அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு! பணி தொடர்ந்திடு!

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in 1950, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anna, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, DMK, Dravidian, dynasty, EVR, Heritage, History, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Ponmudi, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Koilpatti, Kovilpatti, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MK Stalin, Monarchy, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Periyaar, Periyar, Stalin | Leave a Comment »