Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘BC’ Category

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Caste-related violence in Madurai – Dalit Lawyer gets abused by PMK Secretary

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு – மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

Posted in Anbumani, Attorney, backward, BC, Caste, Community, Dalit, Discrimination, DPI, Elections, GK Mani, Harijan, Hindu, Hinduism, Law, Lawyer, Madurai, Mani, MBC, MLC, Mob, OBC, Oppression, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Party, PI, PMK, Police, Polls, Ramadas, Ramadoss, Religion, Reservations, Reserved, Samaianalloor, Samaianallur, Samayanalloor, Samayanallur, SC, scheduled castes, Supremacy, untouchable, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Tamil Nadu Reservations for the Minority – Benefit Analysis by Dinamalar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

.யாருக்கு பாதிப்பு?

தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.

  1. இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
  2. முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
  3. கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.

தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,

  • ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்

பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து

  • ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
  • கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு

அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது

.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.

இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.

அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

Posted in AA, AathiDravidar, ADMK, Affirmative, Affirmative Action, Analysis, Anthropology, BC, Benefit, Brahmins, Calculations, Caste, Castes, Census, Christianity, Christians, Community, Demography, Dinamalar, DMK, Dravidian, Education, Employment, FC, Islam, Jobs, MBC, minority, Muslims, OBC, Observations, OC, Op-Ed, Opportunity, Percentage, Population, Reservation, Reservations, SC, Social, Sociology, ST, Stats, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Gujarat Elections: BJP & Narendra Modi – Caste Politics & Poll Calculations

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

குஜராத்தில் ஜாதி அரசியல் ஆதிக்கம்

ஆமதாபாத், ஆக.4: குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவில் ஜாதி அரசியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பாஜக என்ற கேள்வியும் குஜராத் அரசியலில் இதனால் எழுந்துள்ளது.

முந்தைய தேர்தல்களில் குஜராத்தில் ஜாதிய அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் அதைக் காட்டிலும் மத ரீதியிலான அரசியல் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக போன்ற கட்சிகளால் உருவான ஹிந்துத்துவா அலையே ஆகும்.

ஆனால் தற்போது அந்த அலை குஜராத்தில் குறைந்து விட்டது என்றே சொல்லாம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியலே கோலோச்சும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து படேல் ஜாதி இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் அந்த ஜாதியில் உள்ள லோவா படேல் பிரிவினர் பாஜகவுக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.

இப் பிரிவினர் சர்தார் படேல் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தாலுகா அளவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் 102 தாலுகாவில் இதே போன்ற பிரசாரத்தை தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குஜராத் மக்கள் தொகையில் படேல் ஜாதியினர் 20 சதவீதம் உள்ளனர்.

மோடிக்கு எதிரணியில் இருக்கும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் லேவா படேல் பிரிவைச் சேர்ந்தவர். அண்மையில் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.

படேல் ஜாதியில் மற்றொரு பிரிவு கத்வா படேல். இவர்கள் நரேந்திர மோடியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கோலி ஜாதியினர் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ளனர். இந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை இதுவரை போலீஸôர் கைது செய்யவில்லை. இது அந்த ஜாதியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோலி வகுப்பைச் சேர்ந்தவரான பாஜக எம்.பி. சோம படேல் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளராகி விட்டார். முதல்வருக்கு எதிரான பொதுக்கூட்டங்களுக்கு அவர் பகிரங்கமாகவே ஏற்பாடு செய்துவருகிறார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.பி.யான நளின் பட் பிராமணர்களை பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவர் விரைவில் கூட்டம் ஒன்றை கூட்ட இருப்பதாகவும் சொன்னார்.

இதனிடையே, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

தெற்கு, மத்திய குஜார் பிராந்தியத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த அவர்கள் கடந்த 2002 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பழங்குடியினர் வாக்குகளை மீண்டும் பெற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பேரணிகள், பொதுக்கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு ரூ.13,000 கோடி அளவிலான திட்டங்களை தடாலடியாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இவ்வாறு பழங்குடியினர் வாக்குகளை கைப்பற்றுவதில் காங்கிரஸ்- பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

குஜராத் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் மதச்சார்பற்ற கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸின் வாக்கு வங்கியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். சத்ரிய வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சிக்கு சென்றதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அந்த வகுப்பினரின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜாதி அரசியலின் ஆதிக்கம் குஜராத் அரசியலில் ஆட்சி மாற்றத்தை இந்த முறை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பாஜக தரப்பில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி குஜராத்தில் மீண்டும் மலரும் என்கின்றனர் அக்கட்சியினர்.

Posted in Assembly, BC, BJP, Brahmins, Cabinet, Caste, Community, Conflict, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Divide, Elections, FC, forecasts, Gujarat, Mandal, Modi, Narendra, OBC, Party, Patel, Politics, Polls, Religion, SC, Sect, Sectarian, ST, Tribes, Vote, voters | 1 Comment »

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200

சென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு

‘கட்-ஆஃப் மார்க்’ விவரம்:

  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;
  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;
  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;
  5. பழங்குடி வகுப்பினர் – 179.

மாவட்டங்களுக்கே சிறப்பிடம்:

ராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.

14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-

1,552 எம்.பி.பி.எஸ். இடங்கள்:

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

———————————————————————————————–

2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை

பொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.

பிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.

சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

அப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.

சம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.

இதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.

ஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.

மருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.

வயது வரம்பு கிடையாது:

நுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.

இத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.

எம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

———————————————————————————————–
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.

“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.

———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

ஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.

ரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:

1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;

3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;

4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;

5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;

6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
———————————————————————————————–

Posted in Admission, backward, BC, BDS, candidates, Caste, Chennai, Colleges, Competition, Cut-off, Cutoff, Dental, Dentist, Details, Doctor, Education, eligibility, Evaluation, FC, Health, Healthcare, Info, IRT, Madras, Marks, MBBS, MD, medical, Medicine, Merit, MMC, Moogambigai, Moogambikai, Mookambigai, Mookambikai, OBC, OC, Perunthurai, Porur, PSG, Ramachandra, Random, Rasipuram, Reservation, Results, SC, selection, self-financing, ST, Statistics, Statz, Students, Study, University | Leave a Comment »

Viduthalai Siruthaigal & DMK Convention in Thirunelveli

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.

சுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.

“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.

நெல்லையில் ஏன் மாநாடு?

வட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.

திருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன?.

திமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதல் வெற்றி:

மாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

திருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.

பொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கருதலாம்.

இந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

————————————————————————————–
குமுதம் ரிப்போர்ட்டர்
தேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்
(நெல்லை அதிரடி)

– அ. துரைசாமி

தன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.

மாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.

இப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்?

தென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.

வட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி?’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழாம் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

விழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.

அவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது!’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.

பின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.

மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.

அதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.

‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.

அன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

மாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.

‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

– அ. துரைசாமி

Posted in Alliance, Appeasement, BC, Bridge, Caste, Chellapandiyan, Coalition, Community, Convention, Dalit, deal, Devar, DMK, Equations, Harijans, Leader, MBC, Nellai, OBC, Party, Politics, Puthia Thamilakam, Puthia Thamizhagam, Puthiya Thamilagam, Puthiya Thamilakam, Puthiya Thamizagam, Puthiya Thamizakam, Puthiya Thamizhagam, Puthiya Thamizhakam, SC, Sellapandiyan, ST, Thevar, Thiruma, Thirumavalavan, Thirunelveli, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal, voter, Votes | 3 Comments »

Bringing caste into equation for the Visually Challenged: Government’s Discrimination with Reservations for the Blind

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

அரசின் “பார்வை’ சரியா?

சென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா? உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

உடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.

கடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.

“இட ஒதுக்கீட்டில் பாகுபாடு?’

இதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.

பார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.

“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.

இது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.

இட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா?

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது என்னங்க நியாயம்?

தொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.

அந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.

மீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.

தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.

1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.

“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.

இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ? பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா?

Posted in AA, Action, Affirmative, Applicant, Aryan, Autism, BC, Blind, Braille, Caste, Challenged, Colleges, Community, Denial, Development, Disabled, Discrimination, Disease, Disorder, disturbed, Dravidian, Education, EEO, Employment, Equal, Eyes, FC, Forward, Govt, Handicapped, Health, Ill, Jobs, MBC, Mental, Merit, NGO, OBC, OC, Opportunity, PCO, prejudice, psychological, Qualification, Race, Reservation, SC, Schizophrenia, Schools, service, sightless, Society, ST, Students, Study, Treatment, University, Vision, Volunteer | Leave a Comment »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »