Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘hyd’ Category

Chiranjeevi’s second daughter weds secretly

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்

தெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

செகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.

எங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.

இந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.

தற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

நாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.

என்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.

Posted in Affair, Andhra, AP, Baradhwaj, Baradwaj, Barathvaj, Begumpet, Bharadhwaj, Bharadvaj, Bharadwaj, Bharathvaaj, Bharathvaj, Brahmin, CA, Chiranjeevi, Chiru, Cinema, CLP, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), consent, daughter, Engineering, Films, Gossip, hyd, Hyderabad, Janardhan Reddy, Love, Marriage, Movies, P. Janardhan Reddy, parents, Reception, Reddy, Rumor, Rumour, secret, Shreeja, Shrija, Shrijha, Sireesh, Sirish, Sreeja, Sreejha, Srija, Srijha, Telugu, Tollywood, Wedding | Leave a Comment »

India: Police Suspect Bangladeshi Group In Ajmer Bombing

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2007

அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு: வங்கதேச தீவிரவாத அமைப்பு காரணம்?

அஜ்மீர், அக். 13: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள சூஃபி ஞானி காஜா மொய்னு தீன் சிஷ்டி தர்காவில் வியாழக் கிழமை நடைபெற்ற குண்டுவெ டிப்பு சம்பவத்துக்கு வங்கதேசத் தைச் சேர்ந்த ஹர்கத்- உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) தீவிரவாத அமைப்பின் ஷாஹித் பிலால் என்பவரே காரணம் என்று கூறப்படுகிறது.

இவர் வங்கதேச சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வந்து இத்தகைய சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் பிலால், பாகிஸ் தானின் கராச்சி நகரைச் சேர்ந்த வர் என்று தெரியவந்துள்ளது.

ஹுஜி அமைப்புக்கு பாகிஸ்தா னின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத அமைப்பு உதவியிருக்கும் என்பதையும் மறுப்பதற் கில்லை என்று தகவல்கள் கூறு கின்றன.

ஹுஜி, ஜெய்ஷ் அமைப்புகள் இஸ்லாம் மதத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், சந்தேகத் துக்குரிய பல்வேறு நபர்களிட மும் ராஜஸ்தான் மாநில போலீ ஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரை பிடித்து வைத்து கடுமையாக விசாரித்து வருகின்றனர். எனினும் இது வரை எவரும் கைது செய்யப்ப டவில்லை.

இதற்கிடையே சம்பவ இடத் தில் சிம் கார்டுடன் கூடிய நோக் கியா செல்போன், வெடிக்காத வெடிகுண்டு ஆகியனவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புக்கு இந்த செல்போனையே பயன்படுத்தி யிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.
ஹைதராபாத் மெக்கா-மசூதி யில் நிகழ்த்திய குண்டுவெடிப்பு பாணியில் அஜ்மீரிலும் குண்டு வெடிப்பை அரங்கேற்றியுள்ள தாக தகவல்கள் கூறின. வியா ழக்கிழமை அஜ்மீர் தர்காவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். 28 பேர் காய மடைந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சலீம், மும்பையைச் சேர்ந்த முக மது ஷோயப் ஆகியோர் உயிரி ழந்ததாக அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 17 பேர் ஒரிசா, குஜராத், மகாராஷ் டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் என கண்டறியப்பட்டுள் ளது. சம்பவம் நடந்த பிறகு தர் காவுக்கு வெளியே ஏற்பட்ட அமளியில் 5 பேர் காயமடைந்த னர்.

சம்பவ இடத்தில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகி றது. தேசிய பாதுகாப்பு படை அமைப்பின் குழுவினரும் வந் துள்ளனர்.
முன்னதாக வியாழக்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை ஒட்டி 6.30 மணியளவில் இஃப் தார் விருந்துக்காகக் கூடியிருந்த னர். அப்போது தர்கா அருகே உள்ள மரத்தின் அடியில் பள் ளிக் கூடப் பை ஒன்றில் வைக் கப்பட்டிருந்த குண்டு வெடித் தது.

அஜ்மீரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையினர் தர்கா வுக்குப் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளனர்.
குற்றவாளிகள் விரைவில் பிடிபடு வர்- முதல்வர் வசுந்தரா ராஜே சிந் தியா உறுதி: குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

அப்போது, “”குற்றவாளிகள் விரை வில் பிடிபடுவர். எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்க இயலாது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த தவறு காரணமாக இச்சம்பவம் நடந் ததா என்பது குறித்து விசாரணை நடத்தி கண்டறியப்படும்,” என்றும் அவர் உறுதி கூறினார். சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவம னையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் வசுந்தரா.

—————————————————————————————————————————————

அஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு தாக்குதலின் பின்னணியில் ஹர்கத் உல் இஸ்லாமி

அஜ்மீர் : அஜ்மீர் “காஜா மொய்னுதீன் சிஸ்டி’ தர்காவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஹர்கத்உல்இஸ்லாமிஜிகாதி அமைப்பு தான் காரணம் என தெரிகிறது. மேலும் தர்காவில் நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு வங்க தேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்கத்உல்ஜிகாதிஇஸ்லாமி என்ற இயக்கமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.வெடிகுண்டில் “ட்ரைநைட்ரோடோலீன்’ என்ற வெடிபொருள் கலவையை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்துடன் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பில் ஐதராபாத்தை சேர்ந்த ஷாகித் பிலால் என்ற பயங்கரவாதியின் மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குண்டு வெடிப்பு தொடர்பாக அஜ்மீரை சேர்ந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் மூலம் இவ்வழக்கில் துப்பு துலங்குவதற்கான வாய்ப்பு இல்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.அஜ்மீர் தர்காவின் முக்கிய நுழைவு வாயில் அருகே நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர் என்று மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஏ.கே.ஜெயின் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் கூறுகையில், “தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.

குர்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தையொட்டி பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இதில் எந்த பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை’ என்றார்.

Posted in Ajmer, Bangladesh, Begum-Ki-Dhalan, Bilal, Bombs, dargah, explosion, Harkat-ul-Jehadi, HuJI, hyd, Ifthaar, Ifthar, Investigation, Islam, Jaish-e-Mohammed, JeM, Karachi, Kashmir, Khwaja Mohiuddin Chisti, Law, Mecca, Militants, Mosque, Musilm, Order, PAK, Pakistan, Police, Raj, Ramzan, Shahid, Shahid Bilal, Shrine, Sufi, Suspect, Terrorism, Terrorists, TNT | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Hyderabad Bomb Blasts – Inaction against Terrorism by Indian Govt

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

அரசுக்கு தைரியமில்லை

ஹைதராபாதில் நடந்த குண்டுவெடிப்பில் நாற்பது உயிர்கள் பலியாகி இருக்கின்றன. கடந்த சனிக்கிழமை மாலையில் நடந்த இந்த இரு வேறு குண்டுவெடிப்புகளும், தீவிரவாதத்தின் தென்னிந்திய இலக்காக ஹைதராபாத் மாறி வருகிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆரம்ப காலம் தொட்டு, தக்காணப் பீடபூமி வன்முறையாளர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் உகந்த இடமாக ஒருபோதும் இருந்ததில்லை. வட இந்தியாவில் நடந்த படையெடுப்புகளையும் அங்கே சிந்திய மனித ரத்தத்தையும் பார்க்கும்போது, உண்மையிலேயே தென்னிந்தியா ஓர் அமைதிப் பூங்காவாகக் காட்சி அளித்தது. ஆனால், சமீபகாலமாக, தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சியும், அன்னிய சக்திகளின் ஊடுருவலும் தென்னிந்தியாவின் அமைதியை அடிக்கடி குலைத்தவண்ணம் இருக்கின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்னால், சரித்திரப் பிரசித்தி பெற்ற ஹைதராபாதின் மெக்கா மசூதியில் வெடித்த குண்டு, தொழுகைக்குப் போயிருந்த பனிரெண்டு பேரின் உயிரைக் குடித்தது. இப்போது, மக்கள் அதிகமாகக் கூடும் லும்பினிப் பூங்காவிலும் “கோகுல் சாட் பண்டார்’ என்கிற உணவு விடுதியிலும் நாற்பது உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன.

தீவிரவாதிகளின் செயல்பாடு என்பது எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அப்பாவி உயிர்களைப் பலி வாங்குவதும், அதன் மூலம் மக்களுக்கு அரசின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும் தீவிரவாதிகளின் வாடிக்கை. மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியைப் பயன்படுத்தி அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுவது என்பதுதான் அவர்களது குறிக்கோள். சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பதன் மூலம் தாங்கள் ஏதோ சாதித்துவிட முடியும் என்று கனவு காணும் கொடூர மனம் படைத்தவர்கள்தான் இந்தத் தீவிரவாத இயக்கத்தினர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக, ஆட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற தீவிரவாத இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அப்பாவிகள் பாதிக்கப்படுவார்களோ, நமது வாக்கு வங்கி பாதிக்கப்படுமோ என்கிற தவறான கண்ணோட்டத்துடன் பிரச்னையை அணுகுவதும் தீவிரவாதிகள் தங்களை வளர்த்துக்கொள்ளவே உதவி புரியும். தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்று தவறாக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.

தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பது ஒருபுறம். அப்படியே இருந்தாலும் அவர்களை இஸ்லாமிய சமுதாயம் ஆதரிக்கும் என்று கருதுவது அதைவிட அபத்தம். தீவிரவாதிகளைப் பொருத்தவரை, சிந்துகிற ரத்தம் இந்துவினுடையதா, கிறிஸ்துவனுடையதா, இஸ்லாமியனுடையதா என்கிற பாகுபாடுகளை அவர்கள் பார்ப்பதில்லை. அதேபோல, அரசும் அவர்களுக்கு ஜாதி, மத, மொழி, இன முத்திரைகளைக் குத்த வேண்டிய அவசியம் கிடையாது.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவி வருகிறது. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிப்பது என்பது, உலகத்தில் பைத்தியக்காரர்களே இல்லாமல் செய்வது போன்ற விஷயம். ஆனால், தீவிரவாதிகளைக் கண்காணிப்பது, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது போன்றவை முதுகெலும்புள்ள எந்தவோர் அரசும் செய்ய வேண்டிய இன்றியமையாத விஷயம். அந்த விஷயத்தில் நமது அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

பாகிஸ்தான் மீதும் வங்கதேசத்தின் மீதும் பழிபோடுவது அல்ல தீர்வு. முறையான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுதான் தீவிரவாதத்திற்குத் தீர்வு. கடுமையான தண்டனையின் மூலம் தீவிரவாதிகளை எச்சரிப்பதுதான், தீவிரவாதச் செயல்களுக்கு நம்மால் போட முடிந்த முட்டுக்கட்டை.

நாடாளுமன்றத்தையே தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டிய முகம்மது அப்சலின் தூக்கு தண்டனையைக்கூட நிறைவேற்ற தைரியம் இல்லாதபோது, தீவிரவாதத்தை இந்த அரசு எதிர்கொள்ளும் என்று எப்படி நம்புவது?

Posted in Blasts, hyd, Hyderabad, Terrorism, Terrorists | Leave a Comment »