Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Iron’ Category

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to purify your Blood

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கருங்காலி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்குத் தலையில் சிகப்பாக மருபோல் ஆங்காங்கே வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டே வருகிறது. சீப்பைத் தலையில் வைக்க முடியவில்லை. முனைப்பகுதி கூராக உள்ளது. வலியுடன் கெட்டியாக உள்ளது. மூக்கின் நுனியில் கருப்பாக முட்கள்போல் உள்ளன. இவை ஏன் வருகின்றன? மருந்து கூறவும்.

தலை மற்றும் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தோல் பகுதியில் தங்களுக்கு ரத்தம் கெட்டுப் போய் மாமிசப் பகுதியில் உறைந்த நிலையில் இருப்பதையே இந்தக் குறிகள் தெரிவிக்கின்றன. தோலில் சஞ்சரிக்கும் ரத்தம் கெடுவதற்கு வெளிக் காரணங்களும் உட்புறக் காரணங்களும் பலவகையில் உள்ளன. பிறர் உபயோகிக்கும் சீப்பு, டவல், சோப், தலை கிளிப், தலையணை, தொப்பி, கைக்குட்டை, பவுடர் போடப் பயன்படுத்தும் பஃப், ரசாயனக் கலவை கொண்ட முகப்பூச்சுகள் போன்றவை சில வெளிப்புறக் காரணங்கள். ரத்தத்தைக் கெடவைக்கும் அதிக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடல் சூட்டைக் கிளப்பும் காரம், புளி, உப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல், எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆட்டிறைச்சி, தயிர், திரிந்த மோர், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது உட்புறக் காரணங்கள். பகல் தூக்கம், நெருப்பின் அருகில் வேலை செய்தல், வெயிலில் அலைதல், வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் உடனே குளித்தல், குடித்தல் போன்ற செய்கைகளாலும் உடலில் பித்தமும் ரத்தமும் கேடடைந்து தோலில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.

வந்துள்ள இந்த உபாதை நீங்குவதற்கு நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்துகளைச் சாப்பிட முழுப் பலனை எதிர் பார்க்க இயலும். தோல் பகுதியின் அடியில் சீற்றமடைந்துள்ள கெட்ட ரத்தத்தை கொத்தி எடுப்பதன் மூலமாக உடனடி நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு. மருந்துகளைச் சாப்பிடுவதால் அவை குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாகத் தலைப்பகுதியிலுள்ள தோல் பகுதிக்கு வந்து கெட்டுள்ள ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்குக் காலதாமதமாகலாம்.

நீங்கள் பெண் என்பதாலும் இது விஷயத்தில் சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும் இரண்டாவது வகையான மருந்து சாப்பிடுவதையே சரியென தீர்மானிக்கலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. “சோணிதம்’ என்றால் ரத்தம், அதற்கு அமிருதம் போன்றதால் இந்தக் கஷாயத்தை சோணிதாமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மஹாதிக்தகம் எனும் கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாய அளவில் சாப்பிட ரத்தசுத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தலைக்கும் மூக்கினருகிலுள்ள கருப்பு முட்கள் போன்ற பகுதிகளில் நால்பாமராதி தைலத்தை ஊறவைத்து பச்சைப்பயிறு, வேப்பிலை, ஆரஞ்சுப்பழத்தோல் பொடியினால் கழுவ பயன்படுத்தவும். இந்தத் தைலத்தைக் காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் கருங்காலி வைரத்திற்கு (கட்டை) நிகராக எதையும் குறிப்பிட இயலாது என்பதால் பத்து கிராம் கருங்காலியை அரை லிட்டர் தண்ணீரில் சீவிப்போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சாதாரண தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கப் பயன்படுத்தவும். மனதில் பதட்டம், படபடப்பு போன்றவை ஏற்படாத வண்ணம் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும். “தைவவியபாச்ரயம்’ எனும் தைவ வழிபாடும் மிகவும் உயர்ந்த முறையாகவே ஆயுர்வேதம் குறிப்பிடுவதால் “சண்முககவசம்’ எனும் முருகனுக்கு உகந்த பாடலை மனமுருகப் பாடி கோயிலுக்குச் சென்று கல் உப்பு கொட்டி வரவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, cure, Doc, Doctor, haemoglobin, Health, Healthcare, Hindu, Hinduism, Iron, medical, Medicine, Nutrition, Plasma, Platelets, Rbh, Religion, Swaminathan, Tablet | Leave a Comment »

India’s Tata Steel wins Corus with $12 bln offer

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

கோரஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் டாடா வெற்றி

இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா

ஐரோப்பாவின் மிகப் பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் என்கிற நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான டாடா எஃகு நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

பிரிட்டிஷ் எஃகு நிறுவனம் மற்றும் ஹீகுவென்ஸ் என்ற பிரிட்டிஷ்-டச்சு நிறுவனங்கள் இணைந்ததினால் உருவாக்கப்பட்ட கோரஸ் நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனத்திற்கும், பிரேசில் நாடின் சி எஸ் என் நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது.

கோரஸ் நிறுவனத்தை 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வாங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. உலக அளவில் ஒப்பிடுகையில், டாடா எஃகு நிறுவனம் ஒரு சிறிய எஃகு தயாரிக்கும் நிறுவனம்தான். இருந்த போதும் இதற்கு பெரிய டாடா வர்த்தக நிறுவனக் கூட்டமைப்பின் பின்புலம் இருக்கிறது.

இந்தியாவின் நான்கு மிகப் பெரிய நிறுவனங்களில் டாடாவும் ஒன்று, தவிர இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு வர்த்தகப் பெயரும் கூட.

எங்கும் டாடா என்பதே பேச்சு

உலக அளவிலான எஃகு வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாக ஆங்கிலோ டச்சு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் இந்தியத் தொழில்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது டாடா நிறுவனம்.

வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிய நிகழ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஜெர்மனி மருந்து நிறுவனம் பீட்டாபார்ம், பெல்ஜிய நிறுவனம் ஈவ்ஹோல்டிங் ஆகியவை இந்தியத் தொழிலதிபர்களால் முன்பு வாங்கப்பட்டன என்றாலும் அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 50 கோடி அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், கோரஸ் நிறுவனப் பங்குகளை மொத்தம் 1130 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்திய நிறுவனம் ஒன்று வாங்குவது இதுவே முதல்முறை. இதனால் டாடா நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலக எஃகு வர்த்தகத்தில் 56-வது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் (இதன் ஆண்டு உற்பத்தி 53 லட்சம் டன்), கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 5வது இடத்துக்கு வந்துள்ளது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய எஃகு நிறுவனமாக உருவெடுப்பதுடன், கோரஸ் நிறுவனத்தின் அதிநுட்ப உருக்கு தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்பனையை அதிகரிப்பதுடன், மூலப்பொருள் வாங்குதல், சந்தைப்படுத்துதல் ஆகிய நடைமுறைச் செலவுகள் டாடா நிறுவனத்துக்குப் பெருமளவு குறைந்துவிடுகின்றன.

உலக எஃகு வர்த்தகத்தில் சென்ற ஆண்டு 9-வது இடத்தில் இருந்த கோரஸ் நிறுவனம் (ஆண்டு உற்பத்தி 182 லட்சம் டன்) தன்னை டாடா நிறுவனத்துக்கு விற்றுக்கொள்வதன் மூலம் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியச் சந்தையில் வெகு எளிதாக நுழைய முடியும்.

இந்த நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் டாடா நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டாலும், சில தவிர்க்க முடியாத சுமைகளும் உண்டு. கோரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 47,300 தொழிலாளர்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கோரஸ் ஓய்வூதிய நிதியம் மூலம் 1.65 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த ஓய்வூதிய நிதி நல்ல நிலையில் இருப்பதால் இப்போதைக்கு டாடாவுக்கு பிரச்சினை கிடையாது.

கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி, உள்நாட்டுச் சந்தையில் டாடா நிறுவனத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியச் சந்தையில் டாடா குழுமத்தின் 96 நிறுவனங்கள் அனைத்து வகையான நுகர்பொருள்களையும் விற்பனை செய்து வருகின்றன. இனி இந்தப் பொருள்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும். விற்பனை அதிகரிக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த விலை கார் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் பிரச்சினையில் டாடா நிறுவனத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. டாடா நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்கும்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் எதையெல்லாம் புறக்கணிப்பது? டாடா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களின் பட்டியல் விரிவானது. தேயிலை, கைக்கடிகாரம், அணிகலன்கள், கார், பேருந்து, கணிப்பொறித் தொழில்நுட்பம், செல்போன், மருந்து உற்பத்தி என நீண்டுகொண்டிருந்த பட்டியலில் புறக்கணிக்கக் கூடிய பொருள்கள்-தங்களுக்குத் தேவை இல்லாதவை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.

டாடா நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் மதிப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம்.

டாடா நிறுவன புகழ் கிரீடத்தில் வேறு சில முத்துகளும் உண்டு. தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது, தொழிலாளர் சேம நலநிதி ஆகியன சட்ட வடிவம் பெறுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே அவற்றை 1920ல் நடைமுறைப்படுத்திய நிறுவனம் டாடா.

Posted in ABN AMRO, acquisition, Arcelor, Benjamin Steinbruch, Brazil, Companhia Siderurgica Nacional, Corus, Credit Suisse Group, CSN, Deutsche Bank, Esmark, Goldman Sachs, Hoogovens, India, Industry, Iron, J.P. Morgan, Lazard, M&A, Mamtha bannerjee, Minerals, Mittal Steel, MNC, Muthuraman, Rothschild, Singur, Standard & Poor's, Steel, steel maker, TATA, Tata Steel, TISCO, TMC, Trinamool Congress | Leave a Comment »

Indian police arrest dozens in anti-POSCO protest – Agriculture vs Industrialization

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2006

ஒரிஸாவில் இரும்பு ஆலை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இரும்பு ஆலை
இரும்பு ஆலை

இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள தென்கொரிய இரும்பு ஆலை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்காக தங்களுடைய விவசாய நிலங்களை இந்திய அரசாங்கம் எடுத்து கொள்வது தொடர்பாக மாநில முதலமைச்சருடன் பேச வேண்டும் என கோரி தலைநகர் புவனேஷ்வரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் குழுமியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு சில பெண்கள், பாதுகாப்பு வளையத்தினை தாண்டி அமைச்சரின் வீட்டிற்குள் புகுந்ததினை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரும்பு ஆலை திட்டம், இந்தியாவின் மிகப் பெரிய நேரடி அன்னிய முதலீடாகும்.

Posted in Agriculture, BHUBANESWAR, Bhuvaneshwar, India, Industry, Iron, Naveen Patnaik, Orissa, POSCO, Protest, South Korea, Steel | Leave a Comment »