Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kalki’ Category

Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)

கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.

பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’

பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.

அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.

சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…

டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…

புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.

(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)

Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »

Tamil Movies: Screenplay adaptations from Novels & Books

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

பார்வை: ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!

தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.

இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.

தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. “”1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “மேனகா’, “திகம்பர சாமியா’ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

அகிலனின் “குலமகள் ராதை’, “பாவை விளக்கு’, “கயல்விழி’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

கல்கியின் “தியாக பூமி’, “கள்வனின் காதலி’, “பார்த்திபன் கனவு’ போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.

கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’, நாமக்கல் கவிஞரின் “மலைக்கள்ளன்’ ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை” என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.

“”மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க “அன்னா கரீனி’னாவையும் “மோகமுள்’ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது” என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.

சுஜாதாவின் “காயத்ரி’, “கரையெல்லாம் செண்பகப் பூ’, “இது எப்படி இருக்கு’ நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் “புவனா ஒரு கேள்விக்குறி’, “பத்ரகாளி’ படங்களுக்குக் கிடைத்தது.

வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.

மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

  • உமா சந்திரனின் “முள்ளும் மலரும்’,
  • புதுமைப்பித்தனின் “சிற்றன்னை’யைத் தழுவி எடுத்த “உதிரிப் பூக்கள்’,
  • பொன்னீலனின் “பூட்டாத பூட்டுகள்’,
  • சிவசங்கரியின் “நண்டு’ போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.

“”இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது” என்கிறார் பழனிவேல்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

Posted in Agilan, Akilan, Anna, Annadurai, Authors, Books, Cinema, dialogues, Directors, Fiction, Films, Kalki, Kothamangalam, Kothamangalam Subbu, Kothamankalam, Kothamankalam Subbu, Literature, Magarishi, Magendhiran, Magendhran, Magenthiran, Maharishi, Mahendhiran, Mahendran, Mahenthiran, Mahenthran, Movies, Novels, Ponneelan, Pudhumai Pithan, Pudhumaipithan, Puthumai Pithan, Puthumaipithan, Screenplay, Sivasankari, Sivashankari, Story, Subbu, Sujatha, Uma Chandhran, Uma Chandran, Uma Chanthiran, Uma Chanthran, Writers | Leave a Comment »

Women in Politics – DMK, Thamizhachi, Thankam Thennarasu, Mu Ka Azhagiri

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

Host unlimited photos at slide.com for FREE!
அரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா

தி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட
பிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.

  • அலமேலு அப்பாத்துரை,
  • சற்குண பாண்டியன்,
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)

ஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.

“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

தி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.
—————————————————————————————————-

எந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.

“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.

“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.

தமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.

– ப்¡ரியன்
———————————————————————————————–

மு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ?’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.

ராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.

இன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.

தி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.

இவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.

2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.

எதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.

——————————————————————————————————————————————————

தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்

திருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

அது குறித்த விவரம்:

1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,

2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,

3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்

4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு

5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா! குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ.,

6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்

7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்

8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்? நெல்லிக்குப்பம் புகழேந்தி

9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா

10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி

11. புதிய புறநானுõறு படைப்போம்! கரூர் கணேசன்

12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்! தாமரை பாரதி

13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்

14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி

15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்

16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி

17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி

18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா

19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்

20. சாதி பேதம் களைவோம்! வி.பி.ஆர்., இளம்பரிதி

21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்

22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்! சென்னை அரங்கநாதன்

23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்

24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி! புதுக்கோட்டை செல்வம்

25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி

26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி

27.தீண்டாமையை ஒழிக்க சபதமேற்போம்! திருப்பூர் நாகராஜ்

28. மனித உரிமை காக்கும் மான உணர்வு! வரகூர் காமராஜ் >

——————————————————————————————————————————————————

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்

> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.

> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.

> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.

> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted in ADMK, Anna, Arulmoli, Arulmozhi, Arulmozi, College, DMK, Elections, Females, Ilampirai, Instructors, JJ, Kalainjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavinjar, Ladies, Lady, Literature, Manushyaputhiran, MGR, MK, Nellai, Poems, Poets, Polls, Poongothai, Poonkothai, Professors, QMC, Queen Marys, Raani Mary, Rani Mary, Rani Mary College, Ravikkumar, Ravikumar, Reservations, Salma, Sarguna pandian, Sarguna pandiyan, Sargunapandian, Sargunapandiyan, Sarhunapandiyan, Sathiavani Muthu, Sathiavanimuthu, Sathiyavani Muthu, Sathiyavanimuthu, She, Teachers, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangam, Thangam Thennarasu, Thennarasu, Tirunelveli, Votes | Leave a Comment »

Kalki Rajendran on Kalki’s Ponniyin Selvan

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

கல்கியின் சிரசாசனம்
சேந்தன் அமுதனுக்கு சிம்மாசனம்
– கல்கி இராஜேந்திரன்

கல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.

“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.

சொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.

கல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.

சிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன? என்ன?’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.

“ஏண்டா! சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன?’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’

அடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.

என்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

ஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.

1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு? நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.

கல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா! பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு!’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்!

Posted in Anandhi, Anandi, Authors, Bageeradhan, Bageerathan, Bagiradhan, Bagirathan, discussion, Faces, Fiction, Kalki, Krishnamoorthy, Krishnamurthy, Literature, Memoirs, Narration, Novels, people, Ponniyin Selvan, Rajendhiran, Rajendiran, Rajendran, Rajenthiran, Story, Vikadan, Vikatan, Writers | Leave a Comment »

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Chithra Lakshmanan series in Cinema Express – K Subramaniyam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – BBC Tamil

 

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை, பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழோசையில் ஒலிபரப்பாகும்.

இத் தொடரை பி பி சியின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 1

முதல் பகுதியில் தியாகபூமி, சேவாசதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரான கே சுப்பிரமணியன் அவர்களின் திரையுலக சாதனைகள் குறித்து அவரின் மகன் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்களை கேட்கலாம்.

————————————————————————————–

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

இயக்குனர்களின் முன்னோடி!

“பவளக் கொடி’யின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முருகன் டாக்கீஸ் என்ற நிறுவனத்திற்காக கே. சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய படம் “நவீன சாரங்கதாரா’. அப்போதெல்லாம் ஒரே கதையைப் பல தயாரிப்பாளர்கள் படமாக எடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அதே போன்று “”சாரங்கதாரா’ கதையையும் லோட்டஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தினர் படமாக்கிக் கொண்டிருந்ததால் தனது படத்திற்கு “நவீன சாரங்கதாரா’ என்று பெயரிட்டார் கே. சுப்ரமணியம். “பவளக் கொடி’யில் ஜோடிகளாக இணைந்த தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்புலட்சுமியும் இந்த படத்திலும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான ஊதியத்தை முன்னதாகவே பெற்றுக்கொண்டு, அந்த பணத்தை மூலதனமாகக் கொண்டு “மதராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை கே. சுப்ரமணியம் அவர்களும், எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்களும் கூட்டாகத் தொடங்கினர். அந்த பட நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கதைகள் கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர்.

“பவளக் கொடி’ படத்தில் பணியாற்றியபோதே ஒரு இயக்குனர் என்ற நிலையில் மட்டுமின்றி நற்குணங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரராக சுப்ரமணியம் அவர்கள் விளங்கியது சுப்புலட்சுமி அவர்களின் மனதைக் கவர்ந்தது. சுப்ரமணியம் அவர்களுடைய கலைத் திறனும், பெண்களை அவர் மதிக்கின்ற பாங்கும் அவர் மீது சுப்புலட்சுமி கொண்டிருந்த உயர்ந்த அபிப்ராயத்தை உறுதி செய்தன.

ஆகவே தன்னை அறிமுகப்படுத்திய அந்த கலை மேதையையே மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்தார் அவர். இருவரும் ஏற்கனவே கூட்டாக ஒரு பட நிறுவனத்தை நடத்தி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கத்தால் சுப்ரமணியம் அவர்களும் சுப்புலட்சுமி அவர்களின் விருப்பத்திற்கு தடையேதும் கூறாமல் அவரை மணந்து கொண்டார்.

“நவீன சாரங்கதாரா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் சுப்ரமணியம் – சுப்புலட்சுமி தம்பதியர் தாங்கள் துவங்கியிருந்த நிறுவனத்தின் மூலம் “சதாரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தனர். இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை.

அதே நேரத்தில் லோட்டஸ் நிறுவனத்தினர் தயாரித்த “சாரங்கதாரா’ படமும் படு தோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியை பற்றி கவலைப்படாமல் “நவீன சாரங்கதாரா’வின் கதை முடிவில் சில மாற்றங்களைச் செய்து படமாக்கினார் கே. சுப்ரமணியம். படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து “உஷா கல்யாணம்’, “கிழட்டு மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு கதைகளை ஒரே திரைப்படமாக எடுத்து வெளியிட்ட கே. சுப்ரமணியம் அதைத் தொடர்ந்து தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் “பக்த குசேலா’ படத்தை எடுத்தார். இப்படத்தில் கிருஷ்ண பகவானாகவும், குசேலரின் மனைவியாகவும் இரு வேடங்களில் நடித்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

ஆண், பெண் ஆகிய இரு வேடங்களில் படம் முழுவதிலும் நடித்த ஒரே பெண்மணி இன்றுவரை எஸ்.டி. சுப்புலட்சுமி ஒருவர் மட்டுமே. குசேலர் பாத்திரத்திற்கு அன்று நடித்துக் கொண்டிருந்த எந்த நடிகரும் பொருந்த மாட்டார்கள் என்று சுப்ரமணியம் அவர்கள் கருதியதால் தான் ஏற்கனவே பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருந்த பாபநாசம் சிவன் அவர்களையே அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் ஒல்லிய தோற்றம், இடுங்கிய கண்கள், ஒட்டிய வயிறு ஆகியவைகள் குசேலராகவே அவரை சுப்ரமணியம் அவர்களின் கேமரா கண்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. “”நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்ற நடிகர்களோ, நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களோதான் சினிமாவில் நடிக்க தகுதியானவர்கள் என்றில்லை. கலை ஆர்வம் உள்ள எவராலும் நடிக்க முடியும்” என்ற கருத்தினைக் கொண்ட கே. சுப்ரமணியம் அவர்கள் திரை உலகின் எல்லா பிரிவுகளிலும் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

பின்னாளில் தொடர்ந்து பல புது முகங்களை கே. சுப்ரமணியம் அவர்களைப் போலவே பல துறைகளிலும் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு முன்னோடி என்றே அவரை குறிப்பிட வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களின் பட்டியலை பின்னால் பார்ப்போம்.

“பக்த குசேலா’வைத் தொடர்ந்து அவர் தயாரித்த “பாலயோகினி’ திரைப்படம் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அந்தத் திரைப்படத்தில் பிராமண விதவைப் பாத்திரம் ஒன்றில் நிஜ வாழ்க்கையில் விதவையாக இருந்த ஒரு பிராமண பெண்மணியையே நடிக்கச் செய்தார் அவர்.

அதனால் பழைமையில் ஊறிய சிலர் கூடி அவரை பிராமண ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர். அதனாலெல்லாம் அவர் மனம் தளரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு மேலும் வேகமாகவும், அழுத்தமாகவும் சமுதாய சீர்திருத்தப் படங்களை எடுக்கத் தொடங்கினார். அவரை ஒரு “பிராமணப் பெரியார்’ என்றே சொல்லலாம் என்று “தமிழ்ப்பட உலகின் தந்தை’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வலம்புரி சோமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உருவாகி வெளியான “பாலயோகினி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

திறமையான தொழில் நுணுக்கக் கலைஞர்கள், தரமான லாபரெட்டரி, படமெடுக்க எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டூடியோ இப்படி எல்லா சூழ்நிலையும் சாதகமாக அமைந்திருந்ததால் தனது முதல் படத்திற்குப் பிறகு ஆறு படங்களை கல்கத்தாவிலேயே தயாரித்த சுப்ரமணியம் அவர்களுக்கு சென்னையில் எல்லா வசதிகளும் அமையப் பெற்ற ஒரு ஸ்டூடியோவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள சுப்ரமணியம் சில தயாரிப்பாளர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டு இப்போது ஜெமினி பார்சன் அப்பார்ட்மென்ட், பார்க் ஹோட்டல், பார்சன் காம்ப்ளெக்ஸ் ஆகியவை உள்ள இடத்தில் “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

அவர் ஸ்டூடியோவை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடம் “ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் பெரும் காடாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் இந்த ஸ்பிரிங் கார்டன்ஸ் என்ற இடத்தில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இந்தியாவில் அடிகோலிய ராபர்ட் கிளைவ் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. ஸ்டூடியோவை நிறுவியதும் கல்கத்தாவிலிருந்து சைலன்போஸ், கமால்கோஷ் ஆகிய ஒளிப்பதிவாளர்கள், திரன்தாஸ் குப்தா என்ற லாபரெட்டரி நிபுணர், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளர், ஹரிபாபு என்ற ஒப்பனைக் கலைஞர் என்று பல திறமைசாலிகளை சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர்களில் பலர் அதற்குப் பிறகு சென்னை வாசிகளாகவே மாறி பல திரை படங்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். தனது சொந்த ஸ்டூடியோவில் தனது அடுத்த படமான “சேவா சதனம்’ திரைப் படத்தைத் தயாரித்தார் சுப்ரமணியம் அவர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த “சேவா சதனம்’ கதையின் மூலக்கதை ஒரு ஹிந்தி நாவல்.

அந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டு “சேவா சதனம்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இதை எந்த இடத்தில் கே. சுப்ரமணியம் அவர்கள் தயாரித்தாரோ அந்த “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பெனி’ என்ற ஸ்டூடியோவை பின்னாளில் வாங்கியவர் “ஆனந்தவிகடன்’ அதிபரான எஸ்.எஸ். வாசன் அவர்களே.

ஆகவே பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோ ஸ்தாபிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதலில் படமாக்கப்பட்ட கதையும் எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஆனந்த விகடனில் வெளியான கதைதான் என்பதை எண்ணிப் பார்க்கும்போது காலம் போகும் சில விசித்திர முடிச்சுகள் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“சேவா சதனம்’ படத்தில் இந்தியாவின் இணையற்ற இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானதைப் பற்றி அவரது வாழ்க்கைக் குறிப்பில் விரிவாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் அதைத் தவிர்த்துவிட்டு பெரும் புரட்சியைத் தமிழ்ப் பட உலகில் உண்டு பண்ணிய “தியாக பூமி’யைப் பற்றி அடுத்து பார்ப்போம்.

அந்தப் படம் உருவான விதம் குறித்து கீழ்க்கண்டபடி தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் அந்த நூலின் ஆசிரியரான அறந்தை நாராயணன். “”டைரக்டர் கே. சுப்ரமணியமும், அப்போது “ஆனந்த விகடன்’ ஆசிரியராயிருந்த “கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள்.

தமிழிப் பத்திரிகை உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உருவாக்க இந்த நண்பர்கள் திட்டமிட்டார்கள். பாக்யராஜின் “மெüன கீதங்கள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே படத்தின் ஃபோட்டோக்களுடன் “குமுதம்’ வார ஏட்டில் அதே கதை தொடர் கதையாக வெளி வந்ததே! நினைவிருக்கிறதா?

இந்தப் புதுமையைத் தமிழில் முதன் முறையாக செய்தவர்கள் டைரக்டர் கே. சுப்ரமண்யமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும்தான். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வரத் தொடங்கியபோதே அந்தக் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வந்தது. திரைப்படத்தின் ஸ்டில் ஃபோட்டோக்களே தொடர் கதைக்கான படங்களாகப் பிரசுரிக்கப்பட்டன. சினிமாவுக்கென்றே அதுவும் எஸ்.டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா, பாபநாசம் சிவன் ஆகிய நடிகர்களை மனதில் வைத்தே கல்கி இந்தக் கதையை எழுதினாராம்.

அந்தத் தொடர் கதைதான் திரைப்படமாக வெளிவந்த “தியாக பூமி’.
மே மாதம் 20-ஆம் தேதியன்று வெளியான “தியாக பூமி’ படம் நல்ல வெற்றி பெற்றது. தியாகபூமி புடவை, தியாகபூமி வளையல் என்றெல்லாம் பார்டர்களும், புடவைகளும், வளையல்களும் தோன்றின. அது மட்டுமல்ல, படத்தின் நாயகியான உமாராணி பேரிலும் பொருள்கள் விற்பனைக்கு வந்தன. “உமாராணி பார்டர், உமாராணி ஹேர் ஸ்டைல்’ ஆகியவையும் தோன்றின. பட்டிக்காட்டு சாவித்திரியாகவும், உமாராணியாகவும் இரு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

“தியாக பூமி’ படத்தின் இறுதிக் காட்சிகளில் தேசியக் கொடியைக் கரங்களில் தாங்கியவாறு பெண்கள் ஊர்வலமாகப் போகிறார்கள்.

“”பந்தம் அகன்று நம் திருநாடு உயர்ந்திட வேண்டாமா?” என்று பாடியபடி அவர்கள் போகிறார்கள்.

சாவித்திரியின் இதயத்தில் இந்த ஊர்வலமும் இந்தப் பாடலும், புதிய உணர்ச்சியை, உத்வேகத்தை ஊட்டுகிறது.

தேசத்துக்காகப் பாடுபட புறப்படுகிறாள் சாவித்திரி.

“ஜெய ஜெய பாரதம்’ என்ற தேச பக்தர்கள் முழக்கத்துடன் போலீஸ்வேன் காராக்கிரகம் நோக்கிப் போகிறது.

“தியாக பூமி’ படத்தின் கதை இவ்வாறு முடிகிறது இந்தப் படம் ஓடலாமா? புகழ் பெறலாமா?

எனவே “தியாக பூமி’ படத்துக்கு தடையுத்தரவு தேடிவந்தது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

பிரச்சினைகளை எதிர்கொண்டே பழக்கப்பட்ட கே. சுப்ரமணியம் வெள்ளையர் ஆட்சி தடை விதித்தால் அடங்கி விடுவாரா? “தியாக பூமி’ படம் மக்களைச் சென்றடைய வேகமாக திட்டங்கள் வகுத்தார்.

cinemaexpress.com

Posted in Bhagyaraj, Bhakyaraj, Chithra, Chitra, Cinema, Director, Express, Films, History, Incidents, Kalki, Lakshmanan, Lashmanan, Laxman, Life, MKT, Movies, Papanasam Sivan, Pavalakkodi, Sarangadhara, Sarangathara, SD Subbulakshmi, Seva sadhanam, Sevasadhanam, Sevasathanam, Subramaniam, Subramaniyam, Subramanyam, Thyaga Bhoomi, Thyaga Boomi | Leave a Comment »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Kalki Editorial: Hyderabad Bomb Blasts – Religious sectarianism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

இஸ்லாமியர்களே! இணைந்து குரல் கொடுங்கள்!

ஹைதராபாத்தில் நடந்த அதிகோர குண்டு வெடிப்பைத் தவிர்த்திருக்க முடியும் – மத்திய உளவுத்துறை அளித்த ரகசிய எச்சா¢க்கை அறிக்கை மீது ஆந்திர அரசு உ¡¢ய நடவடிக்கை எடுத்திருந்தால்!

எச்சா¢க்கை செய்யப்பட்டும் கடமையில் தவறிய ஆந்திர அரசின் தயக்கமும் அலட்சியமும் கடுமையான கண்டனத்துக்கு உ¡¢யவை.

இஸ்லாமியர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினால் அதன் மூலம் மதவாதப் பிரச்னையைக் கிளப்ப நேருமே என்று ஆந்திர அரசு தயங்கியதாகச் செய்திகள் வருகின்றன!

தங்க ஊசி என்பதற்காக அதைக்கொண்டு கண்ணைக் குத்திக் கொண்ட கதைதான் இது!

இந்தியாவில் இஸ்லாமியர்களைச் சிறுபான்மை இனத்தினர் என்று பாகுபடுத்தி ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறோம். ஆனால்,
இந்த தேசத்துக்குச் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகக் கொடூரமான சேதங்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் விளைந்தவையே! ‘ஜிஹாதி’ என்ற பெயா¢ல், திட்டமிட்ட கொலை வெறியாட்டம்
நிகழ்த்தி வருகின்றன இவ்வமைப்புகள்! கடந்த ஆறு மாதங்களாக
பாகிஸ்தான் ஜிஹாதி பத்தி¡¢கைகளில், ‘ஹிந்துக்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும்’ என்று பகிரங்க பிரசாரம் நடந்து வந்திருக்கிறது.
இந்தியாவை முஸ்லிம் தேசமாக்க வேண்டும் என்றும்
எழுதப்பட்டிருக்கிறது! இச் செய்திகளை ஆதார பூர்வமாக இந்தியப் பத்தி¡¢கைகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், இந்த எழுத்துக்கள் பற்றி
அறியாதிருக்கக்கூடும். ஆனால், இங்கு நடக்கும் குண்டு வெடிப்பு கோரங்களைக்கூட இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்யவில்லை; தங்கள் மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இந்தப் பாதகத்தை நிறுத்த வேண்டும் என்று தார்மிகக் கோ¡¢க்கை விடுக்கவும் முன்வரவில்லை.

நமது அரசியல்வாதிகளும் (பா.ஜ.க. நீங்கலாக) இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலை வெறியை நேரடியாகக் கண்டனம் செய்யத் தயங்கி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது பழி சுமத்துவதுடன்
நிறுத்திக்கொள்கிறார்கள்! இந்தப் பிரச்னையை இவ்வாறு கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதம் மேலும் வளரும். இன்னொரு பக்கத்தில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு
எதிரான உணர்வுகள் கொழுந்துவிட்டு எ¡¢ய ஆரம்பிக்கும். அவ்வாறு உணர்வுகள் பெருக்கெடுக்கிற கட்டத்தில் ஹிந்துத்வா சித்தாந்தத் துக்கே ஆதரவு பெருகும் (ஏற்கெனவே இந்தப் போக்கு
ஆரம்பித்துவிட்டது); காங்கிரஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது துர்லபம் ஆகும்.

இந்தியா இன்று மதச்சார்பற்ற நாடாகத் திகழ்கிறது; நாளை பா.ஜ.க. மற்றும் அதன் ஆதிக்க அமைப்புகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால்
ஹிந்துத்வா கோட்பாடுகள் வலுப் பெறும். எத்தனை ஜிஹாதி அக்கிரமங்கள் நடந்தாலும் இந்தியா முஸ்லிம் நாடாக மாறவே முடியாது. ஆனால், முஸ்லிம் பயங்கரவாதிகளுடைய நடவடிக்கைகளின்
எதிர்விளைவாக அது ஹிந்து நாடாக மாறுவது வெகு எளிது. அப்போது இங்கே இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்புக்கும் இப்போது அவர்கள் அனுபவிக்கும் உ¡¢மைகளுக்கும் கடுமையான சவால்கள் ஏற்படும்.

தார்மிக உணர்வுத் தூண்டலால் இல்லாவிட்டாலும் இந்தத் தொலைநோக்கின் அடிப் படையிலாவது இந்திய முஸ்லிம் சகோதரர்கள் விழிப்புகொள்ள வேண்டும். தங்கள் மதத்தின் பெயரால்
இங்கே இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்தும்படி அழுத்தம்
திருத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். “எங்கள் தேசத்தைச்
சிதைத்து, எங்கள் வாழ்க்கையைக் கேள்விக் குறி ஆக்காதீர்கள்!” என்று இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அவர்கள் விடுக்கும்
எச்சா¢க்கை மட்டுமே பயன்தர வல்லது.

Posted in Andhra, AP, BJP, Blasts, Bomb, Center, Congress, Editorial, Govt, Hindu, Hyderabad, Islam, Jihad, Kalki, Muslim, Naidu, Op-Ed, Religion, TDP, YSR | Leave a Comment »

Sujatha – Vaaram oru Paasuram (Kalki) : 39

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வாரம் ஒரு பாசுரம் – 39

சுஜாதா

கல்கி ஜூலை 15, 2007 

வழக்கொழிந்து போன பல அழகான சொற்களை மறுபடி நோக்கி ஒரு இலேசான பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் உள்ளன.

‘திறம்புதல்’ என்ற சொல்லைக் கொஞ்சம் கவனிக்கலாம். இதற்குத் தப்புதல் என்பது பொருள். இதன் எதிர்ப்பதம் திறம்பாமை. திறம்பாத கடல் என்றால் அலையடித்துச் சலிக்காத கடல். திறம்பாத உலகம் – சலியாதிருக்கிற உலகம், திறம்பாது – நான் சொல்வதை என்றால் தப்பாமல், தவறாமல்… இப்படித் தீர்மானிக்கப்பட்ட நெறியிலிருந்து தவறாமையைக் குறிக்கும் வார்த்தை இது. நம்மாழ்வார்
திருவாய்மொழியில் இதனை அத்தனை வேறுபட்ட பொருள்களிலும் ஒரே பாசுரத்தில் பயன்படுத்தியுள்ளார்.

“திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்;
திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்;
திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்;
திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல், கடல் கடைந்தேனே என்னும்;
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ
திறம்பாத உலகத் தீர்க்கு என் சொல்லுகேன் –
திறம்பாது என்திரு மகள் எய்தினவே?”

ஒரு தாய் தன் மகள் மேல் கண்ணன் வந்து என்ன என்னவோ
பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாகப் பத்துப் பாடல்களின்
வடிவில் ஆழ்வார், பகவத்கீதையின் 18ஆவது அத்தியாயக் கருத்துகள் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிடுகிறார்.

இந்தப் பெண் நான்தான் பூமியைத் தவறாமல் காக்கிறேன் என்கிறாள். நான்தான் மலையைத் தூக்கினேன் என்கிறாள். அசுரனைக் கொன்றேன் என்கிறாள். என் திறமையைக் காட்டி அன்று பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்கிறாள். பாற்கடலைக் கடைந்ததும் நான்தான் என்கிறாள். அலை ஓயாத (திறம்பாத) கடல் வண்ணனான திருமால் வந்து புகுந்ததால் இது நிகழ்ந்ததா! தவறு செய்யாத (திறம்பாத) உலகத்தவர்களுக்கு என்ன சொல்வேன். என் மகளுக்குத் தப்பாது (திறம்பாது) இது வந்துவிட்டதே. ஏழுமுறை இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ஆழ்வார் – ஏழு முறையும்
திறம்பாமல்.

Posted in 4000, Aalvar, Aalwar, Aazhvar, Aazhwar, Azhwar, Dictionary, Kalki, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Paasuram, Pasuram, Sujatha, Thiruvaaimozhi, Thiruvaimozhi, Vocabulary, Words | Leave a Comment »

Gauri Narayan chat – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

மேடை: எல்லோருக்குள்ளும் காட்டுத் தீ!

பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், இயக்குனர், மொழிபெயர்ப்பாளர் என கெüரி ராம்நாராயணுக்குப் பல முகங்கள். விஜய் டென்டுல்கர் மராட்டிய மொழியில் எழுதிய கன்யாதான், மித்ராட்சிகோஷ்ட் ஆகிய நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். கல்கியின் பன்னிரண்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதுதவிர சிறுவர்களுக்கான எண்ணற்ற சிறுகதைகள் எழுதியிருக்கிறார். “ஜஸ்ட் அஸ்’ ( JustUs) என்னும் பெயரில் நமது கலை, பண்பாட்டு வடிவங்களை மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில நாடகமாக அரங்கேற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவான கருப்பு குதிரை என்னும் ஆங்கில நாடகம், இந்தாண்டுக்கான தில்லி, மகேந்திரா தியேட்டர் எக்ஸசலன்சி அவார்டைப் பெற்றிருக்கிறது. இம்மாதம் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய மூன்று நாட்களும் சென்னை, மியூசியம் தியேட்டரில் அரங்கேற இருக்கிறது. (தன்னைப் பற்றி இவர் சொள்லிக் கொள்ளாத 3 சுவாரஸ்யமான தகவல்கள்.

1. இவர் கல்கியின் பேத்தி,

2. இசை மேதை எம்.எஸ்.ஸின் சிஷ்யை,

3. முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் தாரகை ராமநாராயணனின் மனைவி.)

இவரின் மூன்றாவது நாடகமான “காட்டுத் தீ’ (). இதற்கு முந்தைய நாடகங்களைப் பற்றியும், தற்போதைய காட்டுத் தீ குறித்தும் கெüரி ராம்நாராயன் நம்மிடம் பேசியதிலிருந்து…

“”ஜஸ்ட் அஸ் நாடகக் கம்பெனியை 2005-ல் ஆரம்பித்தோம். எங்களுடையது மிகச் சிறிய குழுதான். மனித நேயத்தை, நமது பாரம்பரியமான கலை வடிவங்களை நாடகத்தின் மூலம் வெகுஜன மக்களுக்குக் கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம். என்னைப் பொறுத்தவரை தமிழர், மராட்டியர், வங்காளியர் என்ற பேதமெல்லாம் கிடையாது. எங்களின் முதல் நாடகமே புகழ்பெற்ற மராட்டியக் கவிஞரான அருண் கோலெட்கர் பற்றியதுதான். அவருக்கு விளம்பர வெளிச்சமே பிடிக்காது. அதை அவர் வாழ்நாளில் விரும்பியதே இல்லை. அவரை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த சுவாரஸ்யமான கற்பனையின் நாடக வடிவம்தான் எங்கள் “கருப்புக் குதிரை’. நிறையப் பேர் என்னிடம், “ஏன் மகாகவி பாரதியை நீங்கள் கோலெட்கருக்குப் பதிலாக நினைத்துப் பார்க்கவில்லை என்று கேட்டார்கள்?’

“”பாரதியும் நமக்குச் சொந்தம்தான். கோலெட்கரும் நமக்குச் சொந்தம்தான்.” என்று என்னிடம் கேட்டவர்களுக்கு நான் விளக்கமளித்தேன். கருப்புக் குதிரை சிறந்த இசையமைப்புக்கான விருதையும், சிறந்த நாடகத்துக்கான விருதையும் சமீபத்தில் வென்றிருக்கிறது.

கல்கியின் “கணையாழியின் கனவு’ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு “ரூரல் ஃபேன்டசி’ என்னும் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றினோம். சுதந்திரப் போர் நாடெங்கும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் வாழ்ந்தவர்களும் அந்தக் காலத்தில் இருந்திருப்பார்கள். தஞ்சாவூரிலிருக்கும் ஒரு கிராமத்தில் அப்படிப்பட்ட மக்களுக்கு, சாந்திநிகேதனிலிருந்து வரும் ஒரு பெண் சுதந்திர உணர்வை ஊட்டுவதுதான் கதை. சுதந்திர உணர்வை ஊட்டும் பாரதியார் பாடல்களையும், கல்கியின் பாடல்களையும் டி.எம். கிருஷ்ணாவும், சங்கீதாவும் பாடினர்.

நாங்கள் தற்போது மூன்றாவதாக அரங்கேற்றப் போகும் நாடகம்தான் “காட்டுத் தீ’. கல்கியின் “சிவகாமியின் சபதம்’ நாவலின் தாக்கம்தான் இந்த நாடகத்திற்கான கரு.

தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பூமியை கலைக்கோயிலாக்க வேண்டும் என்று நினைத்த மகேந்திரபல்லவன், அதன் விளைவாகவே மாமல்லபுரத்தை நிர்மாணிக்கிறான். சிறந்த நாடக ஆசிரியரான மகேந்திரவர்மன் தன்னுடைய சமஸ்கிருத நாடகமான மத்தவிலாஸத்தில், “”மதச் சண்டை போடுபவர்களை விட பைத்தியக்காரன் உயர்ந்தவன்” என்று கமென்ட் அடித்திருப்பார். இன்றைக்கும் “சிவகாமியின் சபதம்’ நாவலைப் படிப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கும்.

வாழ்நாள் முழுவதும் கலைத் தொடர்பான விஷயங்களுக்காகவே நேரம் செலவழித்த மகேந்திரவர்மன் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தளபதியான பரஞ்சோதியிடம் வாதாபியை தீக்கிரையாக்கும்படி சத்தியம் வாங்கிக் கொள்கிறார். சாத்வீகமான அவரின் மனதில் பொங்கிய அந்தக் காட்டுத் தீக்கான பொறி எங்கிருந்து வந்தது. யார் வைத்தது?

மாமல்லனுக்கு தோள் கொடுத்து வாதாபியை தீக்கிரையாக்கி மன்னனுக்கு தான் செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிய பரஞ்சோதி, அதோடு தன் போர்த் தொழிலுக்கே விடை கொடுத்து, ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கி விடுகிறான். பரஞ்சோதியின் மனத்தில் அதுவரை கொழுந்து விட்டு எரிந்த பகைத் தீயை சட்டென்று அணைத்தது எது?

ஒரு வேகத்தில் சபதம் செய்துவிட்ட சிவகாமி நாளடைவில் இறைப் பணிக்காக தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். சிவகாமியின் இந்த மாற்றத்துக்கு எது காரணம்?

நம்மிடையே பிரிவினை என்ற காட்டுத் தீயை மூட்டித்தான் ஆங்கிலேயர்கள் நமது நாட்டையே பிடித்தனர். ஒற்றுமையாக நாம் வளர்த்த வேள்வித் தீயினால் அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இப்போதும் நம்மிடையே காட்டுத் தீயாய் பல பிரிவினைகள். இவை எப்போது அணையும்?

-இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த நாடகத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். “நிறையப் பேர் என்னிடம் நாடகத்தை ஏன் நீங்கள் தமிழில் அரங்கேற்றுவதில்லை’ என்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்: நல்ல தமிழில் பேசி நடிக்கும் நடிகர்களை எனக்குத் தெரியவில்லை. அப்படியொரு பத்து பேர் ரிகர்சலுக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்றால் நான் தமிழிலும் நாடகம் எழுதுவதற்குத் தயார்.

இன்னொரு விஷயம், நான் ஆங்கிலத்தில் நாடகம் போட்டாலும் தென்னிந்தியாவின் கலை வடிவங்களை, அது பாடலாக இருக்கட்டும், இசை, நடனமாகட்டும் அதை அப்படியேதான் பயன்படுத்துகிறேன். உடையில்கூட நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. இந்த நாடகத்தில் கூட சிறந்த நடனமணிகளான மைதிலி பிரகாஷ், பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர்தான் இளவயது, நடுவயது சிவகாமியாக நடிக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான பொது மொழியாக இன்றைக்கு ஆங்கிலம் தானே இருக்கின்றது. ஆங்கிலத்தில் நாடகத்தைப் போட்டால், அது மராட்டிய கவியைப் பற்றியதாக இருந்தாலும் சென்னை ரசிகனால் அதில் ஈடுபட முடியும். மகேந்திரவர்ம பல்லவனைப் பற்றியதாக இருந்தாலும் மராட்டிய ரசிகரால் அதில் ஈடுபட முடியும். கருத்துதானே முக்கியம்!

ரவிக்குமார்

Posted in Author, Children, Faces, Flame of the forest, Hindu, Kalki, Kids, Literature, MS, people, profile, Tamil, Translator, Women, Works, Writer | Leave a Comment »

Madurai CM Mu Ka Alagiri & Mathurai West By-polls – Kalki Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மதுரையில் ஒரு சி.எம். :: இடைத்தேர்தல் ட்ரெயிலர் (கல்கி)
Kalki 24.06.2007

– ப்ரியன்

வேண்டுமென்பதை மாநில அரசு கட்டாயமாக்கியது. சென்னையிலும், திருச்சியிலும் போலீஸ் மிகவும் தீவிரமாக இதை அமல்படுத்துவதைப் பார்த்த நிருபர், மதுரையில் ஜங்ஷனுக்கு எதிரே, ஹெல்மெட் இல்லாமல் சென்ற ஒருவரிடம் “இங்க ஹெல்மெட் கட்டாயம் இல்லையா?” என்று அப்பாவித்தனமாக கேட்க, வாகனத்தில் இருந்தவர் சொன்னார்: “எங்க சி.எம். இதைப் பற்றி ஒண்ணும் சொல்லல.”

நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. “சி.எம்மா” என்று இழுக்க, “அட
புரியலையா? அழகிரி அண்ணன்தான் எங்க சி.எம்.” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்திருக்கிறார் அந்த நண்பர்.

மதுரையில் மட்டுமல்ல, மதுரையை ஒட்டிய சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தேனி மாவட்டங்களின் ஆளுங்கட்சி வட்டாரங்களிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும், உச்சநிலை அதிகார மையமாகத் தெரிபவர் மு.க.அழகிரிதான். டிரான்ஸ்· பர், போஸ்டிங், காண்ட்ராக்ட் என்று எதையெடுத்தாலும், ‘அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்’ என்று நம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகள் கேட்பது சகஜம். இதுபோன்ற பேச்சுக்கள் கீழ்மட்ட அளவில் பரவ, பாமரர்கள் மத்தியிலும் ஒரு சி.எம்.முக்குரிய இமேஜுடன் வலம் வருகிறார்
அழகிரி.

அழகிரியின் இருபது வருட மதுரை வாசம், அவரை பல விதங்களில் மாற்றியிருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார மையமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்படும் சசிகலாவுக்கும்,
அழகிரிக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. இருவரும் வீடியோ கேஸட் கடை வைத்திருந்தவர்கள்தான்.

“1985 – 86 காலகட்டத்தில் முரசொலி மதுரை பதிப்பை பார்த்துக்கொள்வதற்காக வந்தவர். ஒரு ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டிருப்பார். பின்னர் முரசொலி நின்று போனது. அப்போதுதான் வீடியோ கடை துவங்கினார்” என்று சொல்கிறார் அவருடன் அந்த நாளில் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர்.

கிட்டத்தட்ட 1992 வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் அழகிரி. வைகோ பிரிந்தபோது பொன். முத்து ராமலிங்கம் உடன் சென்று விட, மதுரையில் கட்சி கலகலத்தது. களத்தில் குதித்த அழகிரி, வீடு வீடாகச் சென்று கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்து
கட்சியைப் பெரும் சரிவிலிருந்து மீட்டார். 1996-ல் கலைஞர் அரசு வந்தது அவருக்குச் சரியான ஏற்றத்தைக் கொடுத்தது. அதன்பின் மதுரை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் அழகிரிக்கு என்று கட்சி ¡£தியாக ஒரு பின்பலம் உருவாயிற்று.

கலைஞர் ஆட்சி நடந்த 1996 – 2001-ல் தாம் யாரும் தட்டிக் கேட்க முடியாத ஓர் அதிகார மையமாக இருப்பதை உணர்த்தியவர் அழகிரி.

2000-ம் ஆண்டு நெருக்கத்தில் தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காவிரி மணியத்தை, தான் சிபாரிசு செய்ததாகவும், ஆனால், தி.மு.க. தலைமை கேட்கவில்லை என்றும் சொன்னார்
அழகிரி. இதன் விளைவாக மதுரையில் கலவரச் சூழல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன. “அழகிரி கட்சி உறுப்பினரே இல்லை” என்று அறிக்கை விட்டார் பொதுச்செயலாளர் அன்பழகன். இந்தக் காலகட்டத்தில் மறைந்த பழனிவேல் ராஜனுக்கும்
அழகிரிக்கும் உரசல்கள் ஏற்பட, கசப்புணர்வு வளர்ந்தது. கடுப்பில் இருந்த அழகிரி, பழனிவேல்ராஜன் உட்பட மூன்று தி.மு.க. வினர் 2001 தேர்தலில் தோற்கக் காரணமாக இருந்தார்” என்கிறார் ஒரு மூத்த உடன் பிறப்பு.

ஜெயலலிதா 2001-ல் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம், கட்சி மட்டத்தில் அழகிரியின் இமேஜை உயர்த்திவிட்டது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேரடி மேயர் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க, துணை மேயரைத் தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி இல்லை. ஆனால் அழகிரி, எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் வளைத்துப் போட்டு, துணை மேயர் தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார். அதே போல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பாக முழு மூச்சாக அச்சப்படாமல் பணியாற்றினார் அழகிரி.

இதற்கிடையே, அழகிரிக்கும் சிவகங்கை தா.கிருஷ்ணனுக்கும் இடையே மோதல் துவங்கியது. அழகிரி சிவகங்கை சிவராமனை உயர்த்தப் பார்த்தார். தா.கி.க்கு ஸ்டாலின் ஆதரவு இருந்தது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், டெண்டர், வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள்… அதிகாலை வாக்கிங்கில் தா.கி. கொலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அழகிரி ஒரு மாதம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

2004-ல் தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் அழகிரியின் செல்வாக்கு உயர்ந்தது. 2006 தேர்தலில் தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும். அடித் தளத்தை நன்கு உருவாக்கியிருந்த அழகிரி வசம் சட்ட அங்கீகாரமில்லாத, அதிகார மையம் முழுமையாக வந்து சேர்ந்தது. மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் என்று போஸ்டிங்கில் வர வேண்டுமென்றால், வந்து நீடிக்க வேண்டுமென்றால் அவரது தயவு தேவையாக இருந்தது.

திருச்சிக்கு அந்தப் பக்கம் உள்ள விவகாரம் என்றால் ‘அழகிரியை ஒரு வார்த்தை கேட்கவும்’ என்கிற எழுதப்படாத விதி உருவாயிற்று.

அழகிரி – ஸ்டாலின் மோதல் வரும் என்ற கிசுகிசுக்கள் உலவி வந்த சமயத்தில், தினகரன் விவகாரம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திவிட்டது. கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு ‘முழுப் பாதுகாப்புடன்’ அவர் வந்து சென்ற விதம், ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், கட்சியின் அரவணைப்பையும் உணர்த்தியிருக்கிறது.

தினகரன் விவகாரம் இல்லையென்றால் தி.மு.க.வே இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும். இப்போது காங்கிரஸ் நின்றாலும்
அழகிரிக்கு இது கௌரவப் பிரச்னை. பிரசாரத்தில் கதர் சட்டைகளைவிட தி.மு.க. படையே முக்கிய இடம் வகிக்கிறது.
அதிகார பலம், பணபலம், ப்ளஸ் ‘தொண்டர்’ பலம் ஆகியவற்றோடு இடைத்தேர்தல் களத்தில் சுற்றி வருகிறார் அழகிரி. காங்கிரசுக்கு
விழும் வோட்டுக்கள் உண்மையில் அழகிரிக்கு விழும் வோட்டுகளே!

– ப்ரியன்

இலவசங்கள் வேண்டாம்… விலைவாசியை குறைத்தால் போதும்!
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
இடைத்தேர்தலால் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகம் மறைவால் நடக்கும் இத்தேர்தலில், தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க.வும், இது அழகிரியின் மானப் பிரச்னை என காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க.வும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில்
குதித்திருக்கின்றன. யார் கை ஓங்கும்? மதுரையை ஒரு ரவுண்ட் வந்தோம்.

மதுரையில் நிஜமான போட்டி என்பது மூன்று வேட்பாளர்களுக்கு இடையே. தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன், மு.க.அழகிரிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே. ராஜு மற்றும் தே.மு. தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன். இவர்கள் மூவருமே தொகுதிக்காரர்கள்.
தொகுதிக்குள் பெரும்பான்மையாக வசித்து வரும் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள்.

“மதுரை மேற்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இத்தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் மாநகராட்சி தேர்தலில் 24,000 வாக்குகள் பெற்றோம். அது போல இருமடங்குகளுக்கு மேலான வாக்குகளை இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பெற்றுவிட்டால், தே.மு.தி.க. வெற்றி பெற்றுவிடும். அதற்கு கேப்டனின் பத்து நாள் மதுரை கேம்ப், வாக்காளர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டு பண்ணிவிடும்!” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன்.

தற்போது இடைத்தேர்தல் நடக்கும் 20 வார்டுகளில், கடந்த மாநகராட்சித் தேர்தலில் தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வெற்றி பெற்றது. சமீபத்தில் ஒரு கவுன்சிலர் தி.மு.க. பக்கம் போய்விட்டார். தற்போது நான்கு வார்டுகள் தே.மு.தி.க. வசம். “நாங்கள் வசிப்பது
22-வது வார்டில். தே.மு.தி.க. வெற்றி பெற்ற வார்டு இது. தி.மு.க.-அ.தி.மு.க. ரெண்டையும் மாத்தி மாத்திப் பார்த்துட்டோம். புதுசா ஒருத்தர் வந்து வித்தியாசமா நல்லபடியா ஆட்சி பண்ணட்டும்னு தான் விஜயகாந்த் கட்சிக்கு வோட்டு போட்டு வர்றோம் என்று ஆர்வமுடன் பேசுகிறார் பொன்னகரம் பிராட்வே பகுதியில் வசித்து வரும் லாரி மெக்கானிக் காமாட்சி.

“அம்மாவாகப் பார்த்து எனக்கு அளித்திருக்கும் நல்வாய்ப்பு இது. பொது மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு என்று செல்வாக்குள்ள தொகுதி. ஆளுங்கட்சி செயல்பாடுகள் மீதான அதிருப்தி, விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக வெற்றி உறுதி!” என்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு.

சுயராஜ்யாபுரம் பகுதியில் நெசவாளக் குடும்பங்களில் பலரையும்
சந்தித்தோம். “நெசவாளிகளுக்கென்று நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருக்கறதாச் சொல்றாங்க. அறுவது வயசுக்கு மேற்பட்ட நெசவாளிகளுக்கு மாத பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்துட்டா இன்னும் நல்லா இருக்கும். எங்க ஓட்டு தி.மு.க.வுக்கு தான் என்று இணைந்து குரல் தருகின்றனர் ஜானகி (58), ஞானசுந்தர் (32).

ஆனால், செல்லூர் நெசவுக் கூடமொன்றில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளி ஒருவர், பட்டிமன்ற ரேஞ்சுக்குப் பொரிந்து
தள்ளிவிட்டார். “ரேஷன் அரிசி தவிர மத்த எல்லா சாமானும் விலை ஏறிப் போச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு கிலோ மிளகாய் முப்பது ரூபா. இப்போ ஒரு கிலோ ஐம்பத்தைஞ்சு ரூபாய் விக்குது. இலவசங்களை நிறுத்தி வைச்சுட்டு, எல்லாப் பொருள்களின்
விலையேற்றத்தையும் குறைச்சாலே போதும்” என்று ‘லெக்சர்’
அடிக்கிறார் சாதாரண கூலித் தொழிலாளியான அங்காள ஈஸ்வரி.

தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட சம்பவத்தை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த அ.தி.மு.க. முனையலாம். அதனை முறியடிக்க துருப்புச் சீட்டு ஒன்றினைத் தன் கைவசம் வைத்துள்ளது தி.மு.க. மூன்றரை வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. வட்டச் செயலாளர் பால்பாண்டி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்து வந்த செல்லூர் ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டது. தினகரன் சம்பவத்தை அ.தி.மு.க. பிரசாரத்துக்குப் பயன்படுத்தினால், அ.தி.மு.க. வட்டச் செயலாளர் கொலைக் குற்றச்சாட்டை தேர்தல் பிரசாரத்தில் ஊதி விடலாம் என அழகிரி தரப்பு வியூகம் அமைத்திருக்கிறது!

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

Posted in abuse, ADMK, Alagiri, Alakiri, Analysis, Azhagiri, Azhakiri, By-polls, CM, Congress, DMK, dynasty, Elections, Hegemony, Heritage, hierarchy, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Kalki, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Madurai, Mathurai, Mu Ka Alagiri, MuKa Alagiri, Murasoli, Polls, Power, Stalin, support | 1 Comment »

Koodankuam is waiting for a disaster – Nuclear Energy or Uranium Enrichments?

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

அணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)
Kalki 24.06.2007
– ஜி.எஸ்.எஸ்.

“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.

கூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்?” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.

இது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து
வேறுபடுகிறார்.

“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.

“அணுமின் நிலையம் தேவையா? என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வி.

“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.

“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.

“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்
ஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

கல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த
ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.

ஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்!

“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.

இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்
அனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.

‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்?’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.

– ஜி.எஸ்.எஸ்.

—————————————————————————————-

நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்
ஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.

நாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.

முன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.

————————————————————————————————————–

அணுமின் நிலையங்களால் ஆபத்தா?

வீர. ஜீவா பிரபாகரன்

அணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.

ஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

தற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.

2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.

ஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்றனர் ஒருசாரார்.

அதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.

ஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.

கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.

ஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.

ஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Posted in Agni, Arms, Atom, Banduhurang, Bhatin, bhopal, Bombs, Capacity, Chernobyl, Compensation, dead, Development, Disaster, DMK, Economy, Electricity, emissions, Employment, energy, Enrichments, Environment, Growth, GSS, Industry, infrastructure, Jadugora, Jamshedpur, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Kalki, Kharswan, Koodangulam, Koodankulam, Koodankulam Nuclear Power Project, Kremlin, Manufacturing, Mineral, mining, mishap, Missiles, Mohuldih, Narwapahar, Nature, Nuclear, Op-Ed, Payload, Pollution, Precautions, Prithvi, Project, Research, Russia, Safety, Saraikela, Saraikela-Kharswan, Science, Sciences, Singhbhum, Technology, Tragedy, Turamdih, Uranium, USA, Warhead, Weapons | 1 Comment »

Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu’s Law Enforcement – Kalki Editorial

Posted by Snapjudge மேல் மே 9, 2007

குஜராத்: சாம்பலான மனித நேயம்

தமிழகக் காவல்துறை மண்டல ஐ.எ. ஒருவர், ஒரு யுக்தியைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு காவல் நிலையங்களுக்கு, அப்பகுதியைச் சாராத காவல் துறை ஊழியர்களை மாறுவேடத்தில் அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியர்கள் சில புகார்களை (புனைந்துதான்) அந் நிலையங்களில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்கள். மூன்று நாட்களில் திரும்பி வந்த அவர்கள், தங்கள் கண்ணீர்க் கதையைத்தான் விவரிக்க வேண்டியிருந்தது! புகார் தர முயன்ற சிலருக்கு வசவு, வேறு பலருக்கு அடி உதை! கடைசியில், பரிசோதனைக்கு உட்பட்ட அத்தனை போலீஸ்காரர்களும் ஆடிப் போய், தாங்கள் இனி ஒருபோதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

– இந்த விவரத்தை தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, தேசிய மனித உரிமைக் கழகம் நடத்திய ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

காக்கி உடுப்பணிந்து, கையில் லத்திக்கட்டையைத் தூக்கிவிட்டாலே ஆணவமும் முரட்டுத்தனமும் வந்துவிடுகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இந் நிலையில், காவல் துறையினருடைய தோரணையில் மாற்றங்களைப் புகுத்தத் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் நாம் மனமார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு நேர்மாறான போக்கு குஜராத்தில் காணப்படுகிறது!

ஷொராபுத்தீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கௌசர் கொல்லப்பட்டதுடன், அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் வயல்வெளிகளில் தூவப்பட்டிருக்கிறது! இத்தகைய அசுரத்தனமான செயல்களைச் செய்ததோடல்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் என்கவுன்டரில் இறந்து போயினர் என்றும் கதை கட்டியிருக்கிறது போலீஸ்! அதனால் கிடைத்த மீடியா கவனத்தாலும் விளம்பரத்தாலும் மக்கள் மத்தியில் “ஹீரோ’க்களாக இந்தப் போலீஸார் சித்தரிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந் நிலையில்தான், மாண்டுபோன ஷொராபுத்தீன் ஷேக்குடைய சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்திருக்கின்றன!

குஜராத் சம்பவம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் அல்ல; அது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. சிறுபான்மை இனத்தவர் பேரில் அம் மாநிலக் காவல்துறை காட்டிவரும் ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடாக நடந்த இச் சம்பவம் குறித்து இப்போது சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இத்தகைய துவேஷமும், சக உயிர்களைத் துச்சமாக எண்ணும் குரூரமும், ஆட்சியாளர்களின் மௌன அங்கீகாரமின்றி வளர்வதும் வெளிப்படுவதும் சாத்தியமில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத துவேஷம் காரணமாக நிகழ்ந்த பல கொடூரக் குற்றங்களைக் கண்டு நாடே நடுங்கியது.

இன்று அதே வகையான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் விமரிசையாக நடக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் பொருளாதார ரீதியில் பாய்ந்து முன்னேறியிருக்கலாம்; ஆனால், மனித நேய அடிப்படையில் பார்த்தால் சுடுகாடாகத்தான் இருக்கிறது. மோடி அரசு, சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வாதாடுவது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால், பாரதிய ஜனதா கட்சி தனது தீவிர ஹிந்து அடிப்படைவாதத்தைக் கைவிட வேண்டும். பிற மத துவேஷத்தை வளர்க்கிற பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளிடமிருந்து விடுபட்டு, சுதந்திர அரசியல் இயக்கமாகி, சமதர்ம சமுதாயம் என்ற உயர் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில், அக் கட்சி மெள்ள அழிவதுடன் “”வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் இந்தியாவின் ஜீவ கொள்கையின் மீது ரணகாயங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச் செல்லும்.

———————————————————————————————

மனித உரிமைக் கல்வியின் அவசியம்…?

என். சுரேஷ்குமார்

இந்தியாவில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவினர் தற்போது மனித உரிமை கல்விக்கான கல்லூரி, பள்ளிகளுக்கான மாதிரி பாடத் திட்டம், அந்த பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவற்றை வெளியிட்டு, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தீர்மானித்திருக்கிறது.

வளர்ந்து வரும் எந்தச் சமுதாயத்திலும் மனித உரிமை மீறல் என்பது எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னை. மனித உரிமை மதிக்கப்படும்போதுதான் எந்தவொரு சமுதாயமும் முழுமையான நாகரிகத்தை எட்டியிருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த வகையில் மனித இனம் இன்னும் கடக்க வேண்டிய தடைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏராளம், ஏராளம். மனித உரிமை மீறலைத் தடுப்பது அதன் முக்கியமான முதல் கட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்த கிராமத்தில் பய்யாலால் போட்மாங்கே என்ற விவசாயியின் குடும்பத்தின் மீது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் பய்யாலாலின் மனைவி சுரேகா, மகள் பிரியங்காவை ஊருக்கு நடுவில் பய்யாலாலின் மகன்கள் ரோஷன் மற்றும் சுதிரைக் கொண்டு மானபங்கம் செய்ய வலியுறுத்தியதும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருவரையும் படுகொலை செய்ததோடு சுரேகாவையும், பிரியங்காவையும் கிராமத்து ஆண்களால் மானபங்கம் செய்ததோடு கொன்றும் வீசினர்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது என்று கேட்டால் – ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஒன்று – மனித உரிமை மீறல் குறித்த கல்வியறிவு இல்லாதது. இரண்டாவது – இம்மாதிரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காததும், சுட்டிக்காட்டத் தவறியதுமே.

மனித உரிமை குறித்த கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக இன்றியமையாதது. இதன்மூலம் மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம் காக்கப்படும்.

மனித உரிமைக் கல்வியை ஊக்குவிக்க யுனெஸ்கோ 1974-ம் ஆண்டு உலகநாடுகள் அனைத்துக்கும் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பயிற்றுவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு வியன்னாவில் 1979-ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி குறித்தும் அதைப் பயிற்றுவிப்பது குறித்தும், மனித உரிமைக் கல்வி குறித்து தனி நபர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1987-ம் ஆண்டு மால்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி மற்றும் கற்பித்தலை பொது நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் விரிவான பங்கேற்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது மாநாடு 1993 மார்ச் மாதம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜனநாயகத்திற்கான கல்வி என்பது, மனித உரிமைகள் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்தது. மேலும், மனித உரிமைக் கல்வி, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மெய்யாக்க ஓர் அடிப்படை தேவை என்பதையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கல்வியின் அவசியம் 1993-ம் ஆண்டு 171 நாடுகள் பங்கேற்ற மனித உரிமைகளுக்கான உலக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாடு மனித உரிமைகள் மீதான மரியாதையையும் அது ஒரு மெய்யான ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் ஆதரித்தது. இதைத்தொடர்ந்து ஐநா சபை மனித உரிமைகள் கல்விக்கான தீர்மானத்தை 1994-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்ட அமல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறுப்பை ஐநா மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனிடம் ஒப்படைத்தது.

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான முழுமையான கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது யுனெஸ்கோவின் நீண்டநாள் நோக்கமாகும். முறையான கல்வித் திட்டத்துடன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை கட்டமைக்க கல்வியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாலேயே முடியும்.

மனித உரிமைகள் கல்விக்கான திட்டத்தை 1995-ம் ஆண்டுவரை 125 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, BJP, deaths, Editorial, Enforcement, Govt, Gujarat, Hindu, Hinduism, HR, Human Rights, Influence, Kalki, Law, Lockup, Modi, Murder, Order, Police, Police Station, Power, RSS, Tamil Nadu, TN | Leave a Comment »

To all young short story writers & aspirants – A letter from Editor Kalki

Posted by Snapjudge மேல் மே 1, 2007

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை – கல்கி

சிறுகதை எழுதும் துறையில் இளம் எழுத்தாளர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய எழுத்தாளரின் தொகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது மகிழ்ச்சிக்குரியது.

புதிய எழுத்தாளர்கள் தாங்கள் மிகப் பிரயத்தனப்பட்டு எழுதிய சிறுகதைகளை மாதப் பத்திரிகைகளுக்கும் வாரப் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிறார்கள். அவற்றில் சில பிரசுரிக்கப்படுகின்றன. சில கதைகள் ஆசிரியரின் வந்தனத்துடன் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கதைகளைத் திரும்பப் பெற்றவர்கள் மனத்தில் அதிருப்தி ஏற்படுகிறது. அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களிடம் குறைபடுகிறார்கள். பத்திரிகை ஆசிரியர்கள் இளம் எழுத்தாளர்களை ஆதரிப்பதில்லை என்றும், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதில்லை என்றும், மீண்டும் மீண்டும் ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளையே வெளியிடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு சில ஆரம்ப எழுத்தாளர்கள் வேறு பத்திரிகைகளில் வெளியான கதைகளை, கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றிப் புதிதாகத் தாங்கள் எழுதியதுபோல் அனுப்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் முன்னம் வெளியான கதைகளில் சிற்சில நிகழ்ச்சிகளை மட்டும் மாற்றி எழுதி அனுப்பிவிடுகிறார்கள். அத்தகைய கதையைத் திருத்தம் செய்து வெளியிட்டால், கதை அந்த எழுத்தாளர் ஏற்கெனவே பார்த்து எழுதிய மூலக் கதையின் உருவத்தைப் பெற்று விடுகிறது.

பல பத்திரிகைகளைப் படிக்கும் வாசக நேயர்கள் ‘இந்தக் கதை இன்ன தேதியில், இன்ன பெயரில், இந்தப் பத்திரிகையில் வெளியானது’ என்று கடிதம் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பத்திரிகைகளில் கதைகள் வெளியிடுவதற்கு உதவி ஆசிரியர்கள் கதைகளைப் பொறுக்கி எடுக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான கதை என்பது வாசக நேயர்களுக்குத் தெரியும்போது, உதவி ஆசிரியர்களுக்குத் தெரியாமலா போய்விடும் என்ற கேள்வி எழுகிறது.

ஆம்; உதவி ஆசிரியர்களுக்குச் சில சமயம் தெரியாமல்தான் போய் விடுகிறது. அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. சற்றுப் பிரபலம் அடைந்த பத்திரிகைகளுக்கு நூற்றுக்கணக்கான சிறுகதைகள் புதிய இளம் எழுத்தாளர்களிடமிருந்தும் வழக்கமாக எழுதும் பழைய எழுத்தாளர்களிடமிருந்தும் வாரந்தோறும் வருகின்றன. இவ்வளவையும் உதவி ஆசிரியர்கள் படித்து, வெளியிடத் தகுதியானவற்றைப் பொறுக்கி எடுக்க வேண்டி வருகிறது.

வருஷக்கணக்கில் பார்க்கும்போது இவ்வாறு உதவி ஆசிரியர்கள் படிக்கும் கதைகள் ஆயிரக்கணக்கில் போய் விடுகின்றன.

இவற்றுடன் வேறு பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளையும் உதவி ஆசிரியர்கள் படிக்க வேண்டியிருக்கிறது.

ஆகவே, எந்தக் கதையைப் படித்தாலும், ‘‘முன்னே எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதே!’’ என்று தோன்றுகிறது. சமூகக் கதைகள், குடும்பக் கதைகள், கிராம வாழ்க்கைக் கதைகள் எல்லாவற்றிலும் சில நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில சமயம் கதைப் போக்கும் ஒன்று போல இருக்கும். எழுதும் முறையிலேதான் வித்தியாசம் இருக்கும்.

வாசக நேயர்களுக்குக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கும் கடமை இல்லை. பத்திரிகைகளிலே அச்சிட்டு வெளியாகும் கதைகளை மட்டும் படிக்கிறார்கள். ஆகையால், அவர்களில் சிலருக்கு இந்தக் கதை, இந்தப் பத்திரிகையில் முன்னமே வந்தது என்பதைத் திட்டமாக உடனே கண்டுபிடிக்க முடிகிறது. உதவி ஆசிரியர்களுக்கு இந்தச் சௌகரியம் கிடையாது.

ஆகையால், கதை எழுதி அனுப்புகிறவர்கள் எல்லாம் சொந்தக் கற்பனையினால் எழுதுகிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படை பேரில்தான் அவர்கள் கதைகளைப் பரிசீலனை செய்து பொறுக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமையில், இரண்டொரு எழுத்தாளர்கள் பழைய கதைகளைப் பெயர்த்து எழுதி அனுப்பி, அவை பிரசுரிக்கப்பட்டுவிட்டால் பத்திரிகையின் நல்ல பெயர் பாதிக்கப்படுகிறது.

இம்மாதிரி நேரிடாமல் தடுக்க ஒரு வழி உண்டு. நன்றாகப் பழக்கமான பழைய எழுத்தாளர்களின் கதைகளையே பிரசுரிப்பது என்று வைத்துக்கொண்டால், வேறு பத்திரிகைகளில் வெளியான பழைய கதைகளையே மீண்டும் பிரசுரிக்கும்படியான நிலைமை ஏற்படாது. ஆகையினாலேதான் சில பத்திரிகைளில் வழக்கமாக எழுதும் எழுத்தாளர்களின் கதைகளே வெளியாகின்றன. இவ்வாறு இரண்டொருவர் செய்யும் முறையற்ற வேலைகள், புதிதாகக் கதை எழுதத் தொடங் கும் இளம் எழுத்தாளர்கள் அனைவரையும் பாதிப்பதாக இருக்கின்றன.

– ஜனவரி 31, 1954 கல்கி இதழிலிருந்து

Posted in blog, Contest, Editor, Fiction, Growing, Kalki, magazine, Notes, Publish, Publisher, Reader, Story, Tips, Tricks, Write, Writers, Youth | Leave a Comment »

Interview with Narthaki Nataraj – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

நர்த்தகி நடராஜ் உடனான சென்ற வார சந்திப்பின் தொடர்ச்சி…

‘‘லண்டன் பி.பி.ஸி.யில், ஒரு பரதக் கலைஞர் என்கிற முறையில், என்னைப் பேட்டி காண அழைத்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் சமாளித்துப் பதில் சொன்னேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் அந்த நிருபர் : ‘நீங்கள் பரத நாட்டியக் கலைஞராகியிராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?’

பேட்டி காணப்படும் பலரிடம் கேட்கப்படக் கூடிய சராசரிக் கேள்விதான் இது. ஆனால் என் பதில் மட்டும் சராசரியானதல்ல…

‘பரதக் கலைஞராக உயர்ந்திராவிட்டால் மும்பை அல்லது கொல்கத்தாவில் விலைமாதாக இருந்திருப்பேன்’ என்று சொன்னேன். உண்மையும் அதுதான்!’’

பால் திரிபுக்குள்ளாகும் அனேகம் குழந்தைகளைப் போல் நர்த்தகியும் பெற்ற தாயால் வீட்டை விட்டு விரப்பட்டு வெளியேறியவர்தான். சிறிய வயதிலேயே சக்தி துணையாக வாய்த்ததால் இருவரும் சேர்ந்தே குடும்பம் ஏற்படுத்திய காயங்களையும் பள்ளிச் சூழல் இழைத்த அநீதிகளையும் தாங்கி வளர்ந்திருக்கிறார்கள். தங்களுக்குள் நிகழ்வது என்ன என்று புரிவதற்குள் இரக்கமற்ற, உயிர் உறிஞ்சும் வெளி உலகில் வந்து விழுந்து, திருநங்கைக் கூட்டத்தில் இணைந்து, அந்த வாழ்க்கை முறை தவறு என்ற விவேகம் இயல்பிலேயே இருந்ததால் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கலை ஆர்வம் இவர்களை தஞ்சையில் கிட்டப்பா பிள்ளையிடம் அழைத்துச் சென்றிருக்கிறது. கடுமையான சோதனைக்குப் பிறகே அவரும் இவர்களை சிஷ்யைகளாக ஏற்றிருக் கிறார். வெளியே தங்குவது நித்திய சோதனையாக இருக்கவே, வீட்டிலேயே அடைக்கலம் கேட்டு இந்த மாணவிகள் இறைஞ்ச, அவரும் ஏற்றுப் பாதுகாப்புத் தர, அதுவே அவர்களுடைய குருகுலவாச மாக இன்று அறியப்படுகிறது.

கிட்டப்பா பிள்ளை வஞ்சனையில்லாமல் வழங்கிய கலைக் கொடையும் நர்த்தகி, சக்தியிடம் இயல்பாகவே அமைந்திருந்த பக்தியும் அவர்களைச் சமூகத்தின் களைகளாக மாறாமல் காப்பாற்றியதுடன் மிக உயர்ந்த கலைஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நர்த்தகி மட்டுமே நடனக் கலைஞராக அங்கீகாரம் பெற்றாலும் சக்தி அவரது ஒப்பனை, அலங்காரம் வழிகாட்டல், விமர்சனம் அனைத்திலும் கலந்து நிற்கும் துணையாக விளங்குகிறார். மீடியா இன்று நர்த்தகியைக் கலைஞர் என்ற முறையிலேயே வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால்…

‘’இன்னமும் எங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு தர யாருமே யோசிக்கிறார்கள். கற்பகாம்பாள் அருகே, கலை மையங்கள் சூழ மயிலாப்பூரில் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நன்கு தெரிந்தவர்கள்கூட வீடு தர நாசூக்காக மறுக்கிறார்கள்- பொய்க் காரணங்கள் சொல்கிறார்கள். சமுதாய அங்கீகாரமும் மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரமும் பெற்ற எங்களுக்கே இந்த கதி என்றால் திருநங்கைக் கூட்டத்தின் இதர சகோதரிகளுடைய கதி என்ன…?

பசியின் கொடுமைதான் அவர்களை அலங்கோலத்தில் தள்ளுகிறது என்பதை சமுதாயம் மறந்துவிடுகிறது. சிறு வயதில் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாப்புக் கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படிப்பட்டக் கூட்டத்தில் போய் விழப்போகிறார்கள்? புறக்கணிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டவர்கள் ஒன்று திரண்டால் நிகழக்கூடிய விபரீதம்தான் திருநங்கைக் கூட்டத்தினருக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நடத்தையை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. ஆனால் இனியேனும் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.

தீராநோயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மட்டும் திருநங்கைகள் மீது அரசும் என்.ஜி.ஓ.க் களும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தக் கவனம், வளர்ந்து விபசார வலைக்குள் சிக்கிவிட்டவர்கள் மீது மட்டுமே விழும்.

விவரம் புரியாத வயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தையும், புரிந்துகொள்ள முடியாமல், பெற்ற தாய் உள்பட அனைவரின் புறக்கணிப்பையும் சமாளிக்க முடியாமல் உடைந்து சிதறும் இளம் திருநங்கைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்..?

முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். இந்தக் குழந்தைகளும் இறைவனின், இயற்கையின் சிருஷ்டி என்கிற உணர்வு பலத்தைக் கொடுங்கள். பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெரும்பாலும் அவர்கள்தான் முதலில் அடையாளம் காண்பார்கள். பெற்ற தாய் கூட ஆண் பிள்ளை என்பதாகவே கொண்டு, பெண்குழந்தைக்குத் தரக்கூடிய கவனத்தைத் தரமாட்டாள். ஆனால், அந்தப் பருவத்தில் திருநங்கைகளுக்குப் பெண்மையின் அரவணைப்பும் பாதுகாப்புமே ரொம்ப தேவைப்படுகின்றன. ஆண் உலகம் அவர்களை அச்சுறுத்தி சீண்டுகிறது.

இதெல்லாம் எப்போது, எப்படி மாறும் என்று யோசித்து மலைத்துப் போய் விடக்கூடாது. அரசு ஜி.ஓ.க்களும் விதிகளும் வெறும் புள்ளிகள்தான். அவற்றைப் பயன்படுத்தித் தப்பில்லாமல் கோலம் போட வேண்டியது சமுதாயம்தான். பொதுவாக எந்த மாற்றமும் அடிமட்ட மனிதர்களிடையே நிகழவேண்டும் என்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் மனமாற்றம் மேல்தட்டு மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். செல்வச் சீமான்கள் வீட்டுத் திருநங்கைகளுக்குக்கூட இன்று ஏழைகளின் குடிசைகளில்தான் இடமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அந்த அங்கீகாரம் ஆரோக்கியமானதாக எப்போதும் இருப்பதில்லை என்பதுதான் கொடுமை. ஆனால் அருவருப்போடு அடித்துவிரட்டாத இடத்தில் தானே திருநங்கைகள் அடைக்கலம் தேட முடியும்… இதை மாற்றுவதும் திருநங்கைகளை உயர்த்துவதும் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது.’’

திருத்தமாகப் பேசி முடிகிறார் நர்த்தகி. அவர் நாட்டியத்தின் அசைவுகளிலும் கை முத்திரைகளிலும் காணக்கூடிய திருத்தம் அவர் சிந்தனையில் பளிச்சிடுகிறது. நடனத்தின்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் சத்திய ஒளி அவர் சொற்களிலும் வீசுகிறது.

– சீதா ரவி, சுகந்தி ஜி.பாரதி
படங்கள் : ஸ்ரீஹரி

– சஞ்சயன்

————————————————————————————–

From Thozhi.com


திருநங்கையர் நர்த்தகி நடராஜன், சக்தி பாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்வு திருநங்கையரின் உலகை அறிமுகப்படுத்தியது

– ந. கவிதா

கோவையில் மாதந்தோறும் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திவந்த ‘அற்றைத்திங்கள்’ நிகழ்ச்சி இந்த மாதத்திலிருந்து சென்னையில் நடைபெறுகிறது. 29.04.07 அன்று இந்நிகழ்வின் முதல் கூட்டம் புக்பாயிண்டில் தொடங்கியது. இதில் திருநங்கையர் நர்த்தகி நடராஜும் சக்தி பாஸ்கரும் கலந்துகொண்டு உரையாடினர்.

தமக்குள் உணர்ந்த பெண்மையை உன்னதமெனக் கொண்டாடி, அந்தப் பெண்மையை வெளிப்படுத்தும் வடிகாலாக நடனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட திருநங்கையர் இவர்கள்.

பால்திரிபு நிலை, சமூகத்தின் ஏளனத்தையும் குடும்பத்தின் புறக்கணிப்பையும் தந்த நிலையிலும் துயரங்களைக் கடந்து லட்சியப் பயணத்தை மேற்கொண்ட இத்திருநங்கையரின் உரையாடல் அவர்களது வேதனைகளைவிட அவர்கள் அடைந்துவிட்ட இலக்கின் மனநிறைவை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஆளற்ற மைதானமும் மரங்கள் சூழ்ந்த கண்மாய்க் கரையும், பழைய கோயில் மண்டபங்களும் இவர்களின் நடனத்தையும் அற்புதமான கனவுலகத்தையும் கண்டுகொள்ளும் அரங்குகளாக இருந்தன. கீற்றுக் கொட்டகையில் கடைசி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டுத் திண்ணையில் உறங்கிப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர்களின் ஆதர்ச நாட்டியக்காரர்களாக பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் இருந்தனர்.

விளையாட்டிலும் வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நர்த்தகிக்கு, அவரைப் போலவே புறக்கணிப்பிற்குள்ளான சக்தி தோழியாகக் கிடைத்தார். இவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் தனி உலகில், பாகுபாடு காட்டாத மனிதர்களும் பசித்தவர்களு்கு எப்போதும் உணவு கொடுத்துக்கொண்டே இருந்த இவர்களது வளமிக்க வீடும் இருந்தன.

முகபாவத்திலும் ஒப்பனை செய்யும் ஆர்வத்திலும் நடனத்திலும் இவர்களுக்கு இருந்த அளவில்லாக் காதல், குடும்பத்தினரின் வெறுப்பிற்கு இவர்களை ஆளாக்கியது. இது நர்த்தகியை வீட்டைவிட்டு வெளியேறச் செய்தபோது, வசதியான வீட்டில் வாழ்ந்த சக்தியும் அவருக்காக ஊரைவிட்டு வெளியேறினார். பல விதமான துயரங்களுக்குப் பிறகு, வைஜெயந்தி மாலாவிற்கு நடனம் கற்றுக்கொடுத்த கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.

பால்திரிபையும் வறுமையையும் பொருட்படுத்தாமல், வைரங்களைக் கொட்டித் தரும் மாணவிகளைப் போலவே இவர்களையும் பயிற்றுவித்த தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை, தஞ்சை நால்வரின் மார்க்கங்களைக் கற்றுத் தந்தார். நர்த்தகி ஒரே ஆண்டில் ஆறு வருடங்களில் முடிக்க வேண்டிய நடன மார்க்கங்களைக் கற்று, சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

‘எல்லா வேதனைகளின்போதும் ஏமாற்றங்களின்போதும் தாயாக, தோழியாக என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி பாஸ்கர்தான் காதலிலும் காமத்திலும் நான் சிக்கிவிடாதபடி வழிகாட்டி இன்றைய என் சாதனையை எட்டச் செய்தவள்’ என்றார் நர்த்தகி. சக்திதான் தனக்கு எல்லா சக்தியும் என்று தன் தோழியைப் பற்றிப் பெருமிதப்படுகிறார் அவர்.

நர்த்தகி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நடனத் துறையில் நான்கு ஆண்டுகள் விரிவுரையாளர், மத்திய அரசின் மானியத்தை இருமுறை பெற்றவர். தற்போது இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாட்டியம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

சக்தி பாஸ்கர் இந்த உரையாடலில் மிகக் குறைவாகவே பேசினார். இருந்தாலும் சில வார்த்தைகளில் அரவாணிகளின் வாழ்வியல் துயரைப் புரியவைத்தார். அரவாணிகளைப் பொறுத்தவரை காதல் ஏமாற்றம் தரும் விஷயம் என்றார் அவர். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் பெரும்பான்மையினரின் வாழ்க்கையாக இருக்கும் சூழலில், லட்சியங்களை அடைய, அளவற்ற சுதந்திரமுள்ள அரவாணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலுக்கு முன்பாக, பீஷ்மரைக் கொல்ல சிகண்டியாக உருவெடுத்த அம்பையின் கதையை நடன வடிவமைத்திருந்த நர்த்தகியின் அந்த நடனக் காட்சிகள் திரையிடப்பட்டன. அவரது நடனத்தில் எழுச்சியும் உணர்வுகளும் மிக்க முகபாவங்கள் அழகுற அமைந்திருந்தன.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடும் நடன வகைகளுள் ‘வீழ்ந்தாடல்’ எனும் வகை ‘பேடியாட’லைக் குறிப்பதுதான் என்று சொன்ன நர்த்தகியின் பேச்சு மிகுந்த புலமையோடு வெளிப்பட்டது. இறப்பதற்குள் ஒரு அரவாணியைத் தனக்குப் பின் உருவாக்குவதே தன் ஆசை என்றார் நர்த்தகி. நிகழ்விற்கு நூறு பேர்தான் வந்திருப்பார்கள் என்றாலும் அரங்கம் அவரது உரையில் கட்டுண்டிருந்தது என்று சொல்லலாம்.

பிறகு நர்த்தகி, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தார். இறுதியாக எழுத்தாளர் தேவிபாரதி நன்றி கூறினார்.

Posted in Ali, Aravaani, Aravani, Artist, Arts, Biosketch, Classic, Classical, dancer, Faces, Interview, Kaalachuvadu, Kalachuvadu, Kalki, Narthaki, Nataraj, people, profile, Sakthi Baskar, Sakthi Bhaskar, Shakthi Baskar, Shakthi Bhaskar, Sigandi, Sikandi, Transgender | 1 Comment »