Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Campaign’ Category

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

Benazir Bhutto (1953-2007) – Former Pakistan Prime Minister Assassinated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

பேனசீர் புட்டோ படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

இது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

 


பாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்

அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை
அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

 


தமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்
பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

கிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.


பன்னாட்டுத் தலைவர்கள் கண்டனம்

பேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

பேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

இந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.

அருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்கோசி
பிரெஞ்சு அதிபர் சர்கோசி

இந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.

 


பேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது

அதிபர் முஷாரஃப்
அதிபர் முஷாரஃப்

படுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.

நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது
பலபகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது

பாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.


some of the key events in her career:April 4 1979: Bhutto’s father, Zulfikar Ali Bhutto, is executed for the murder of a political opponent, two years after he was ousted as prime minister in a military coup.April 10 1986: Bhutto returns from exile in London to lead the Pakistan People’s party that her father founded.December 1 1988: Bhutto, aged 35, becomes the first female prime minister of a Muslim nation after winning parliamentary elections.August 6 1990: President Ghulam Ishaq Khan dismisses Bhutto’s government, citing corruption and a failure to control ethnic violence.October 19 1993: Bhutto takes the oath for a second term as prime minister.November 5 1996: President Farooq Leghari dismisses Bhutto’s second administration amid accusations of nepotism and undermining the justice system.April 14 1999: A court finds Bhutto guilty of corruption while she is out of the country. The conviction is later quashed, but Bhutto remains in exile.October 5 2007: President General Pervez Musharraf signs a corruption amnesty covering other cases against Bhutto, opening the way for her return and a possible power-sharing agreement.October 18 2007: Bhutto flies in to Karachi, where tens of thousands of supporters give her a rousing welcome amid tight security. Two bombs go off near her vehicle. More than 140 people are killed in the assassination attempt.

December 27 2007: Bhutto dies after a suicide bomb attack in Rawalpindi.


பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….

 

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.

இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.

 

அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

 

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.

இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.

 

ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

 

தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.

அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

 


சிதைந்த கனவுகள்! துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலை!தந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.

சமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்?

அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.

முஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது!

அடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா? அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.

சிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை!


துணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவு!இஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.

மக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

அவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.

புட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :

பெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.

புட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.

மூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கொலைக்கார பகுதி :

பெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.


பேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.

ராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.

அவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

அந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.

இரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

பேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.

கூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

லண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.

அவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.

கடைசி 46 நிமிடங்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.

அவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.

இதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.


பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.

இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.

தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்.பி.ஐ:

இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இன்று உடல் அடக்கம்:

இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.


பேநசிரின் உடலடக்கம்

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

பூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.

மற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.


பேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை

கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன
கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன

பேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.

கடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.


பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

 

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.

இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.

தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பாகிஸ்தான் எதிர்காலம்? – நிபுணர் கருத்து

 

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.

பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.

பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .

தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.

அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.

ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

————————————————————————————————————————————————————-
பேநசீருக்குப் பின் யார்?

இஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.

வியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.

அவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

பேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.

மக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.

ஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.

எனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது

அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

பேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

இதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————————————————————————-
“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’

லண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.

1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
————————————————————————————————————————————————————-

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

பெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.

 


பெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு

படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ
படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ

பெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.

பூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.

பூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 


துபைக்குச் சென்றார் பேநசீர் மகன்

கராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

பேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.

துபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.

பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.

தலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.

தம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.

பேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
—————————————————————————————————————————————————————-

பேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி

இஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

ஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.

பேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————————-
பேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.

இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.

இதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

இதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

உள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.

படுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.

நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.

ஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.

பேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.

பேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.

பேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.

விசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.

துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.

பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————————-

—————————————————————————————————————————————————————-

Posted in Assassinations, Benazir, Bhutto, Bombs, Campaign, dead, Elections, Killed, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, PAK, Pakistan, PM, Polls, PPP, Rawalpindi, Sharif, Suicide, Violence, Zulfikar, Zulfikar Ali Bhutto | 4 Comments »

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

Convict to MLAs – State of BJP and Gujarat Police & Politics nexus

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

தினமலர்

காக்கி சட்டையிலிருந்து கதருக்கு மாறும் குஜராத் மாஜி போலீசார்

ஆமதாபாத் :குஜராத்தில், காக்கி சீருடையில் இருந்து அரசியலுக்கு தாவுவது சாதாரணமாக நடந்து வருகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் போலீசார், அரசியலில் வெகு கைத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில், லிம்டி தொகுதியின் காங்., எம்.எல்.ஏ., பவன் பர்வாத், ஆரம்பத்தில் ஆமதாபாத் நகரில் ஏட்டாக பணியாற்றியவர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இந்த போலீஸ் வேலை யே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்தவர், எம்.எல். ஏ.,வாகிவிட்டார்.

இவர் மட்டுமின்றி, இவர் போல ஏராளமானோர், போலீஸ் துறையில் இருந்து அரசியலுக்கு தாவி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், ஆமதாபாத் நகர் சோலா சாலையில் பா.ஜ., தொண்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார் பர்வாத்.

இதற்கு நேரடி சாட்சி பா.ஜ.,வின் இன்னொரு இளம் தொண்டர் அமித் ஷா. ஆனால், கோர்ட்டில் சாட்சியத்தை மாற்றி கூறியதால், பர்வாத் இன்னொரு தண்டனையில் இருந்து தப்பினார்.

இப்போது அமித் ஷாவின் நிலை என்ன தெரியுமா?

அவர் தான் மாநிலத்தின் உள் துறை இணை அமைச்சர்.ஆமதாபாத்தை சேர்ந்த இன்னொரு கான்ஸ்டபிள், ஜெதா பர்வாத்தும், சிறை உடைப்பு குற்றத்துக்காக, கைதியை தப்ப விட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இப்போது தோடா மாவட்டம், ஷெகிரா தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., இவர். இப்போது, இந்த பட்டியலில் இன்னும் பலர் சேர்ந்துள்ளனர்.

சூரத் மாவட்டம் கொரியாசி தொகுதியில் பா.ஜ., டிக்கெட் கேட்டிருப்பவர் சி.ஆர்.பட்டேல். சூரத் நகரில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தவர் இவர். இவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்ததால், 1991ம் ஆண்டில் அரசியலுக்கு தாவிவிட்டார். நாளிதழ் நடத்தி பிரபலமடைந்தார். வைரவிழா கூட்டுறவு வங்கியில் ரூ. 58 கோடி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாததால், ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அனுபவித்த சி.ஆர்.பட்டேல், இப்போது பா.ஜ.,வில் ஒரு முக்கியப் பிரமுகர்.

இவர் முதல்வர் நரேந்திரமோடி தீவிர ஆதரவாளர். அவரை இன்னொரு சத்திரபதி சிவாஜியாக வர்ணிப்பவர். மோடிக்காக பல இயக்கங்களை நடத்தியவர். சமீபத்தில் கூட ஜென்மாஷ்டமியின் போது, மோடியை கடவுள் கிருஷ்ணர் போல சித்தரித்து இளைஞர்களுக்கு 12 ஆயிரம் டி ஷர்ட்கள் வழங்கியவர். இதனால், தனக்கு உறுதியாக, “சீட்’ கிடைக்கும் என்று சி.ஆர்.பட்டேல் நம்புகிறார்.

குட்ச் தொகுதிக்கு பா.ஜ.,வில் சீட் கேட்டு இருப்பவர் ஜயேஷ் காத்வி. இவரும் முன்னாள் கான்ஸ்டபிள் தான். சூரத்தில் வேலை பார்த்துவிட்டு, சாராய வழக்கு காரணமாக, குட்ச்சுக்கு தண்டனை இடம் மாற்றம் பெற்றவர். அரசியலுக்கு தாவிவிட்டதால், இனி போலீஸ் வேலையில் நீடிக்க அவர் விரும்பவில்லை.

ஆமதாபாத் கிரைம் பிராஞ்சில் வேலை பார்த்த பி.கே.ஜடேஜாவும் குட்ச் தொகுதி, “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவர் தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற அடிப்படையிலும், குஜராத் பூகம்பத்தின் போது, புதையுண்ட பகுதிகளில் பொருட்களை திருட முயன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தவர் இவர்.

இதேபோல, எந்த தண்டனையும் பெறாத, சூரத் நகர உதவி போலீஸ் கமிஷனர் எம்.கே.பும்படியாவும், சபர்காந்தா மாவட்டத்தில் பா.ஜ.,வில், “சீட்’ கேட்டிருக்கிறார். தனக்கு எப்படியும், “சீட்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது போலீஸ் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

மறைந்த சிமன்பாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எம்.ஷா, தனது சொந்த தொகுதியான தான்துகாவில் காங்., “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegations, Arrest, Belief, BJP, Bribe, Bribery, Campaign, Congress, Convict, Correctional Forces, Corrupt, Corruption, crimes, Elections, Employment, escape, Exploit, Finance, God, Gujarat, Hinduism, Hindutva, inmates, Jail, job, Justice, kickbacks, Kutch, Law, Loans, MLA, Modi, MP, Narendhra Modi, Narendra Modi, Narenthira Modi, Narenthra Modi, nexus, Order, Police, Politics, Polls, Power, Prison, Prisoners, Religion, resign, resignation, Retired, Scams, State, Surat, Suspend, Suspension, Vote, voters | Leave a Comment »

Coimbatore blasts: Top accused Madani acquitted; Al-Umma founder S A Basha, 72 others convicted

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2007

கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு

கோவை, ஆக. 1-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.

ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு

புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.

பாஜக அதிருப்தி

கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.

“பிரார்த்தனை பலித்துவிட்டது’

கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.

மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–

5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்

கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.

இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.

வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

———————————————————————————————————————–

சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?

கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.

எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர்கள் விவரம்:

சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.

யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.

கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.

———————————————————————————————————————–

பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்

கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.

தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.

———————————————————————————————————————–

69 பேருக்கு கடும் தண்டனை?

கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:

எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.

இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

———————————————————————————————————————–

“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’

கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.

இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.

———————————————————————————————————————–

பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.

குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

———————————————————————————————————————–

கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி

கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:

கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

———————————————————————————————————————–

மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்

கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.

தனிகோர்ட்டு தீர்ப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிம்மதி அளிக்கிறது

எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.

அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–

ஜாமீனா? விடுதலையா?

கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.

பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.

இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.

மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.

ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.

இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.

இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.

மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்

ஒலி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்

Posted in 1997, 1998, Abdul Nasser Madani, acquit, Advani, Al-Umma, AlUmma, Ansari, Arms, Assassination, Baasha, Baatcha, Baatchaa, Basha, Bharatiya Janata Party, BJP, Blast, Blasts, Bombs, Campaign, case, CBI, chairman, Coimbatore, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Congress, consipiracy, constable, Convict, conviction, Courts, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Extremism, Extremists, founder, Guilty, Hindu, Hinduism, Hindutva, Investigation, ISI, Islam, Judge, Justice, Kerala, Kovai, L K Advani, Law, Leader, LK Advani, Madaani, Madani, Madhani, Malayalam, minority, Mogammad, Mohammad, Mohammed, Mohammed Ansari, Muhammad, Murder, Muslim, Order, PDP, People's Democratic Party, policeman, RAW, Religion, retaliation, RSS, SA Basha, Selvaraj, Serial, SIT, Terrorism, Terrorists, THIRUVANANTHAPURAM, Trivandrum, Weapons | Leave a Comment »

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »

Election Festivals – The Price of Democracy

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

தேர்தல் திருவிழாக்கள்

இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாபோல. எப்படி திருவிழாவுக்குப் பணம் கணக்குவழக்கில்லாமல் செலவழிக்கப்படுமோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஒருசிலர் பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பார்களோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஊரெல்லாம் அலங்கரிக்கப்படுமோ அப்படித்தான் தேர்தலும்.

திருவிழாவில் கடவுள் பெயரால் எல்லா ஆர்ப்பாட்டங்களும் நடக்கும். திருவிழா முடிந்தால் கடவுளை மறந்து விடுவார்கள் லாபம் சம்பாதித்த வியாபாரிகள். அதேபோலத்தான் தேர்தலின்போது, வாக்காளர்களை முன்னிறுத்தி செய்யப்படும் பிரசாரங்கள் ஒருசிலருக்கு வருமானத்தையும் யாராவது ஒருவருக்குப் பதவியையும் கொடுப்பதுடன் முடிந்துவிடும். அதன் பிறகு வாக்காளருக்கும் வேட்பாளருக்கும் உள்ள உறவு அடுத்த தேர்தலின்போதுதான்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. விழாக்கோலம் பூண்டிருக்கிறது மதுரை மாநகர் என்று பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. தொகுதியில் பணமழை பெய்கிறது என்று கேள்வி. வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வதாகத் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் குற்றம்சாட்டுகிறார்கள். இருவருக்குமே இந்த விஷயத்தில் சமபங்கு இருக்கும் போலிருக்கிறது.

1952-ல் நடந்த முதல் தேர்தலுக்கான செலவு வெறும் பத்தரைக் கோடி ரூபாய்தான்.

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

1,300 கோடி ரூபாய்.

அதுவும், கடந்த இருபது ஆண்டுகளில் தேர்தலுக்கான செலவு பத்து மடங்கு அதிகரித்திருப்பதாகத் தேர்தல் கமிஷனின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 1,300 கோடி ரூபாய் என்பது அரசின் நிர்வாகச் செலவு. இது அல்லாமல், வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் கட்சி அனுதாபிகள் செலவழிக்கும் தொகையைக் கூட்டிப் பார்த்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும். அரசியல்வாதிகள் சேர்த்து வைத்திருக்கும் கறுப்புப் பணம் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்கிற வகையில் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; சிக்கனமாகத் தேர்தலை நடத்த வேண்டும்; பணமில்லாத, பொதுநல சேவையில் அக்கறையுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் – இதுபோன்ற கோரிக்கைகளைக் குறிவைத்து பத்திரிகைத் தலையங்கங்களும் கருத்தரங்குகளும் குரலெழுப்பியதன் விளைவாக, நல்ல பல மாற்றங்களைத் தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் கமிஷனுக்குக் கிடைத்த வஜ்ராயுதம். அதை முனைமழுங்கச் செய்யும் முயற்சிகள் பயனற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் 25 லட்சம் ரூபாயும், சட்டமன்றத் தேர்தல் என்றால் 10 லட்சம் ரூபாயும்தான் ஒரு தனிப்பட்ட வேட்பாளர் செலவு செய்யலாம் என்கிற வரன்முறையையும் தேர்தல் கமிஷன் விதித்திருக்கிறது.

பத்து லட்சம்தான் செலவு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி நடந்தால் எந்தவொரு வேட்பாளரும் பஞ்சாயத்துத் தேர்தலில்கூட போட்டிபோட முடியாது என்பதுதான் யதார்த்த நிலைமை. எந்தவித சமூகசேவையும் செய்யாத, தொகுதிக்கே அறிமுகமில்லாத நபர்களை எல்லாம் தலைமைக்கு விசுவாசிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தும்போது, அவர்களை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த 10 லட்ச ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்?

வெளிப்படையான செலவுகள் செய்தால்தானே தேர்தல் கமிஷனின் வரன்முறையை மீறியதாக அமையும். நேராக வாக்காளர்களிடம் பேரம் பேசிவிட்டால்? கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில்விட வாய்ப்புக் கிடைக்கிறது என்பது “போனஸ்’ நன்மை. இதன் வெளிப்பாடுதான் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காணப்படுவதாகச் சொல்லும் “பணமழை’. பணபலமற்றவர்கள் தேர்தலில் நிற்க வழியே இல்லையா? இல்லை. அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க நமது அரசியல்வாதிகளுக்கு மனமில்லையா?

1,300 கோடி ரூபாய் செலவழித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம். சந்தோஷம்! முறையான ஜனநாயகமாகச் செயல்படுகிறோமா? சந்தேகம்!!

Posted in Analysis, By-election, By-polls, Bye-elections, Campaign, Contributions, Democracy, Donations, Economy, Election, Expenses, Fairs, Festivals, Finance, Freedom, Havala, Hawala, MLA, Money laundering, Moneylaundering, MP, Negative, Op-Ed, Republic, Sivaji, Stats, Tax | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

Tamil nadu Government’s Kalaimamani Award Recipients – Announcement (2007-08)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  1. கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
  2. சீமான்-திரைப்பட இயக்குநர்
  3. சிம்பு-திரைப்பட நடிகர்
  4. “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
  5. ஜீவா-திரைப்பட நடிகர்
  6. விஷால்-திரைப்பட நடிகர்
  7. த்ரிஷா-திரைப்பட நடிகை
  8. நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
  9. கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
  10. ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
  11. வினித்-குணசித்திர நடிகர்
  12. பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
  13. வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
  14. கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
  15. சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
  16. மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
  17. கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
  18. சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
  19. ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
  20. சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
  21. டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
  22. இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
  23. இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
  24. மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
  25. கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
  26. திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  27. சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  28. திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
  29. ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
  30. கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
  31. பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
  32. தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
  33. வி.மூர்த்தி-நாடக நடிகர்
  34. தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
  35. வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
  36. சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
  37. பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
  38. நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
  39. கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
  40. இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
  41. வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
  42. மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
  43. திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
  44. பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
  45. எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
  46. விட்டல்-திரைப்பட எடிட்டர்
  47. நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
  48. அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
  49. கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  50. ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  51. டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
  52. டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
  53. சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
  54. விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
  55. வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
  56. போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
  57. மௌனிகா-சின்னத்திரை நடிகை
  58. தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
  59. டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
  60. அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »

BJP seals triumph in MCD polls, shuts out Congress : Op-Ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

தில்லி மாநகராட்சித் தேர்தல்

தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.

புதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.

தில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.

தில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.

புதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.

புதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.

==============================================================
மீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா!

நீரஜா செüத்ரி

மீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.

கேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.

தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்?

இந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.

இப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.

தேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.

தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.

முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.

வெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.

தமிழில்: சாரி.
==============================================================

Posted in Advani, Anti-incumbent, Bajpai, Bajrang Dal, BJP, BSP, Campaign, Cassette, Civic, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corporation, Delhi, Elections, Hindu, Hinduism, Incumbency, Islam, Local Body, MCD, Mid-term, minority, Municipal, Municipality, Muslim, New Delhi, Polls, Punjab, Rajnath, Rajnath Singh, RSS, Slander, Terrorism, UP, Utharanchal, Uttar Pradesh, Uttaranchal, Vajpayee, VHS, video | Leave a Comment »

Refrain TN govt from Free Color TV scheme: PIL

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

இலவச கலர் டி.வி. திட்டத்துக்கு அவசர கால நிதியைப் பயன்படுத்த தடை கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரை, பிப். 14: இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்கு அவசர கால நிதியை பயன்படுத்தத் தடை கோரி தாக்கலான மற்றொரு மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகர் ம.சரவணன் தாக்கல் செய்த மனு விவரம்:

திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவசமாக கலர் டி.வி. வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 53 லட்சம் பேருக்கு கலர் டி.வி. வழங்க ரூ.1060 கோடி செலவாகும் என முதல்வர் அறிவித்தார்.

கலர் டி.வி. வழங்கும் திட்டத்தால் ஒரு குடும்பத்தினரே பயன் அடைவர். இதில் பொதுநலம் ஏதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும் குற்றம்சாட்டினார். மக்களின் பணத்தை அரசு வீணாக்கும் திட்டத்தில் செலவிடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.

இதுபோன்ற இலவசத் திட்டத்தை அறிவிப்பதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குத் தகுந்த ஆலோசனை கூறலாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இந்த அறிவிப்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

இலவச டி.வி. திட்டத்தைச் செயல்படுத்தும் குழுவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. மேலும் இக் குழுவில் கூட்டணிக் கட்சியினரே இடம் பெற்றுள்ளனர்.

மத்திய திட்டப் பணிகளுக்கே போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே, இதுபோன்ற திட்டங்கள் குறித்து இந்திய கணக்குத் தணிக்கைக் குழு மூலம் உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்க வேண்டும்.

இதற்கான நிதியை அவசர கால நிதிக் கணக்கிலிருந்து எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் எலிப் தர்மாராவ், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா ஆகியோர் முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Posted in Budget, cable, Campaign, Colour TV, Courts, Dharmarao Elipe, Economy, Finance, Free TV, High Court, Janarthana Raja, Justice, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, M Saravanan, Madurai Bench, Manifesto, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Order, PIL, Promise, public interest litigation, Tamil Nadu, TN | Leave a Comment »

Tamil Nadu supplementary Budget for Rs. 1,158 Crores – Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

சட்டசபையில் தாக்கல்: ரூ. 1,158 கோடிக்கு துணை பட்ஜெட்

சென்னை, டிச. 6- தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ. 1157.95 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க இதில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், மற்றும் அடுப்பு கள் வழங்குவதற்காக ரூ. 60 கோடி அனுமதித்துள்ளது.

* மீன்பிடி தொழில் அதிகம் இல்லாத மாதங்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 993 மீனவ மகளிருக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 12 கோடியே 36 லட்சம் அனுமதித்து உள்ளது.

* தமிழில் பெயர் சூட்டப் படும் தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 30 கோடி ஒதுக் கீடு செய்யப்படுகிறது.

* விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற் காக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு கடனாக ரூ. 200 கோடி வழங்க அரசு அனுமதித்துள்ளது.

* தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதன உதவி வழங்குவதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கரும்புக்கான உயர்த்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 89 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

* மாணவர்களுக்கான பயண அனுமதிக்குரிய பஸ் கட்டணத்தை மாநில போக்குவரத்து நிறுவனங் களுக்கு அளிக்க ரூ. 100 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமண உதவி நிதிக்காக ரூ. 10 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக கலெக்டர் களுக்கு தன் விருப்ப மானிய மாக அரசு ரூ. 56 கோடியே 51 லட்சம் அனுமதி அளித் துள்ளது.

* சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கான ஒதுக்கீடு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 1 கோடியே 20 லட்சம் என அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ. 103 கோடியே 51 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Anbazhagan, Assistance, Budget, Busniess, Campaign, Collectors, Crore, Details, DMK, Economy, Electricity, Entertainment Tax, Finance, Fishery, Fishing, Free, Gas, Government, Grain, Karunanidhi, Loan, MPLAD, Paddy, promises, Propaganda, Schemes, Stove, Students, Subsidy, Sugarcane, supplementary, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TNEB, Women | 1 Comment »

US Elections to the Congress & Senate – Saddam Hussein Death Sentence in Iraq

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

அமெரிக்கத் தேர்தலில் இராக் நிகழ்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் புஷ்
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் புஷ்

அமெரிக்கக் காங்கிரஸிற்கு நாளை செவ்வாய்க்கிழமையன்று நடைபெற இருக்கும் தேர்தலில் இராக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெற்று வருகின்றன.

தேர்தல் நடைபெற இருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனிற்கு தண்டனை வழங்கப்பட்ட நேரத்திற்கும், அமெரிக்கத் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்புணர்த்தப்படுவதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் சார்பில் பேசவல்ல ஒருவர் மறுத்திருக்கிறார். இருந்த போதும், இராக்கிய நிகழ்வுகளை, தன்னுடைய குடியரசுக் கட்சிக்கு ஆதரவைக் கூட்டுவதிலும், ஆதரவாளர்களை ஒன்று திரட்டுவதிலும் அதிபர் புஷ் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்று ஃப்ளோரிடா, அர்கன்ஸாஸ் மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களில் இறுதி கட்ட தேர்தல் கூட்டங்களில் புஷ் பங்கேற்க இருக்கிறார். இராக்கில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கப் படையினர் ஆட்சேதத்திற்கு உள்ளாகி வருவது, இராக் ஆக்கிரமிப்பை ஒரு தேர்தல் விவகாரமாக பல தொகுதிகளில் ஆக்கியுள்ளதாக வாஷிங்டனில் உள்ள பி பி சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று இரு அவைகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நம்பும் ஜனநாயகக் கட்சியினர் பல இடங்களில் முன்னணியில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் குறிப்புணர்த்துகின்றன.

ஆனால், குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருவதாகவும் இந்தக் கணிப்புக்கள் காட்டுகின்றன.

Posted in Bush, Campaign, Capital punishment, Congress, Death Sentence, Elections, GW Bush, GWB, House of Representatives, Iraq, Polls, Saddam Hussein, Senate, US, USA | 3 Comments »