Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ahmedabad’ Category

Convict to MLAs – State of BJP and Gujarat Police & Politics nexus

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

தினமலர்

காக்கி சட்டையிலிருந்து கதருக்கு மாறும் குஜராத் மாஜி போலீசார்

ஆமதாபாத் :குஜராத்தில், காக்கி சீருடையில் இருந்து அரசியலுக்கு தாவுவது சாதாரணமாக நடந்து வருகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் போலீசார், அரசியலில் வெகு கைத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில், லிம்டி தொகுதியின் காங்., எம்.எல்.ஏ., பவன் பர்வாத், ஆரம்பத்தில் ஆமதாபாத் நகரில் ஏட்டாக பணியாற்றியவர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இந்த போலீஸ் வேலை யே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்தவர், எம்.எல். ஏ.,வாகிவிட்டார்.

இவர் மட்டுமின்றி, இவர் போல ஏராளமானோர், போலீஸ் துறையில் இருந்து அரசியலுக்கு தாவி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், ஆமதாபாத் நகர் சோலா சாலையில் பா.ஜ., தொண்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார் பர்வாத்.

இதற்கு நேரடி சாட்சி பா.ஜ.,வின் இன்னொரு இளம் தொண்டர் அமித் ஷா. ஆனால், கோர்ட்டில் சாட்சியத்தை மாற்றி கூறியதால், பர்வாத் இன்னொரு தண்டனையில் இருந்து தப்பினார்.

இப்போது அமித் ஷாவின் நிலை என்ன தெரியுமா?

அவர் தான் மாநிலத்தின் உள் துறை இணை அமைச்சர்.ஆமதாபாத்தை சேர்ந்த இன்னொரு கான்ஸ்டபிள், ஜெதா பர்வாத்தும், சிறை உடைப்பு குற்றத்துக்காக, கைதியை தப்ப விட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இப்போது தோடா மாவட்டம், ஷெகிரா தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., இவர். இப்போது, இந்த பட்டியலில் இன்னும் பலர் சேர்ந்துள்ளனர்.

சூரத் மாவட்டம் கொரியாசி தொகுதியில் பா.ஜ., டிக்கெட் கேட்டிருப்பவர் சி.ஆர்.பட்டேல். சூரத் நகரில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தவர் இவர். இவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்ததால், 1991ம் ஆண்டில் அரசியலுக்கு தாவிவிட்டார். நாளிதழ் நடத்தி பிரபலமடைந்தார். வைரவிழா கூட்டுறவு வங்கியில் ரூ. 58 கோடி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாததால், ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அனுபவித்த சி.ஆர்.பட்டேல், இப்போது பா.ஜ.,வில் ஒரு முக்கியப் பிரமுகர்.

இவர் முதல்வர் நரேந்திரமோடி தீவிர ஆதரவாளர். அவரை இன்னொரு சத்திரபதி சிவாஜியாக வர்ணிப்பவர். மோடிக்காக பல இயக்கங்களை நடத்தியவர். சமீபத்தில் கூட ஜென்மாஷ்டமியின் போது, மோடியை கடவுள் கிருஷ்ணர் போல சித்தரித்து இளைஞர்களுக்கு 12 ஆயிரம் டி ஷர்ட்கள் வழங்கியவர். இதனால், தனக்கு உறுதியாக, “சீட்’ கிடைக்கும் என்று சி.ஆர்.பட்டேல் நம்புகிறார்.

குட்ச் தொகுதிக்கு பா.ஜ.,வில் சீட் கேட்டு இருப்பவர் ஜயேஷ் காத்வி. இவரும் முன்னாள் கான்ஸ்டபிள் தான். சூரத்தில் வேலை பார்த்துவிட்டு, சாராய வழக்கு காரணமாக, குட்ச்சுக்கு தண்டனை இடம் மாற்றம் பெற்றவர். அரசியலுக்கு தாவிவிட்டதால், இனி போலீஸ் வேலையில் நீடிக்க அவர் விரும்பவில்லை.

ஆமதாபாத் கிரைம் பிராஞ்சில் வேலை பார்த்த பி.கே.ஜடேஜாவும் குட்ச் தொகுதி, “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவர் தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற அடிப்படையிலும், குஜராத் பூகம்பத்தின் போது, புதையுண்ட பகுதிகளில் பொருட்களை திருட முயன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தவர் இவர்.

இதேபோல, எந்த தண்டனையும் பெறாத, சூரத் நகர உதவி போலீஸ் கமிஷனர் எம்.கே.பும்படியாவும், சபர்காந்தா மாவட்டத்தில் பா.ஜ.,வில், “சீட்’ கேட்டிருக்கிறார். தனக்கு எப்படியும், “சீட்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது போலீஸ் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

மறைந்த சிமன்பாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எம்.ஷா, தனது சொந்த தொகுதியான தான்துகாவில் காங்., “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegations, Arrest, Belief, BJP, Bribe, Bribery, Campaign, Congress, Convict, Correctional Forces, Corrupt, Corruption, crimes, Elections, Employment, escape, Exploit, Finance, God, Gujarat, Hinduism, Hindutva, inmates, Jail, job, Justice, kickbacks, Kutch, Law, Loans, MLA, Modi, MP, Narendhra Modi, Narendra Modi, Narenthira Modi, Narenthra Modi, nexus, Order, Police, Politics, Polls, Power, Prison, Prisoners, Religion, resign, resignation, Retired, Scams, State, Surat, Suspend, Suspension, Vote, voters | Leave a Comment »

Photoshopped Sonia Gandhi? Surat Cyber crime Investigations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007

புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

ஆமதாபாத், பிப். 4: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தில் தில்லுமுல்லு செய்து, அதை சூரத் நகரின் முன்னணி நாளிதழுக்கு யாரோ அனுப்பிவைத்துள்ளனர்.

இது குறித்துப் போலீஸôரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பெரிய அரசியல் விவகாரமாக உருவெடுத்து வருகிறது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள மாலைப் பத்திரிகை ஒன்று அச்சாகும் அச்சகத்தில் இருந்து அப் படம் அனுப்பப்பட்டிருக்கிறது. உண்மையில் அப்படத்தில் சோனியா காந்தியே இல்லை. அவரைப் போல இருப்பவரைக் கொண்டு, அந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை அனுப்பிய அச்சகத்துடன் பாபுபாய் ரைகியா என்ற சூரத் காங்கிரஸ் தலைவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே போலீஸôர் அவரையும் விசாரித்தனர். இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என் பெயரைக் கெடுக்க நினைக்கும் அரசியல் போட்டியாளர்களின் விஷமச் செயலே இது’ என்று அவர் போலீஸôரிடம் தெரிவித்துள்ளார்.

இது “”சைஃபர் கிரைம்” எனப்படும் கணினி-இணையதளம் சார்ந்த குற்றமாகும்; தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டோம் என்று குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா எச்சரித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegation, Congress, Congress (I), Cyber Crime, Indira Congress, Investigations, Photoshop, Sonia Gandhi, Sonia Gandi, Surat | Leave a Comment »