Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Liquid’ Category

Remove ban on milk powder exports

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்!

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.

குளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.

பாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.

விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.

“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.

இலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.

தொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.

கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.

அமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Posted in Assets, Assistance, Commerce, Coop, Coops, Cows, dairy, Drink, Economy, Exports, Farming, Fees, Industry, Law, Liquid, Loans, Manufacturer, Manufacturing, Marketing, milk, Order, Powder, Price, quantity, retail, revenue, Skimmed, Surplus, Tariff, Tax | Leave a Comment »

Gliese 581c – A New Planet on the Horizon

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

வானியல் அறிஞர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவியைப் போன்றபுதிய கோள் (இடது). இது சூரிய குடும்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளீஸ்-581 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த விளக்கப் படத்தை ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நியூயார்க், ஏப். 26: உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் இந்தக் கோள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. வேறொரு விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

புவியை போன்ற இந்த கோளில் தற்போது ஏதேனும் உயிரினங்கள் வசித்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

புவியைப் போல 5 மடங்கு நிறைகொண்ட இந்த புதிய கோள், சூரிய குடும்பத்தில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி 20 ஆண்டுகளில் பயணம் செய்யக் கூடிய தொலைவில்) அமைந்துள்ளது. “துலாம்’ என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள “கிளீஸ் 581′ விண்மீனை சுற்றி வருகிறது.

சூரிய குடும்பத்துக்கு அருகாமையில் உள்ள இந்த கிளீஸ் 581 விண்மீன், “சிவப்புக் குள்ளன்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். மங்கலான சிவப்பு நிற விண்மீன் இது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டிபான் உட்ரி குழுவினர் இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். கிளீஸ் விண்மீன் மீது இந்தக் கோள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளை வைத்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.

நெருக்கமான கோள்: கிளீஸ் விண்மீனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது இப் புதிய கோள். அதாவது, இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தில் 14-ல் ஒரு பங்குதான்.

கிளீஸ் “”சிவப்புக் குள்ளன்” வகையைச் சேர்ந்த விண்மீன் என்பதால் சூரியனைவிட குறைவான ஒளியையும், வெப்பத்தையுமே வெளியிடுகிறது. எனவே புதிய கோள் நெருக்கமாக அமைந்திருந்தாலும் கூட வாழத் தகுதியுள்ளதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோளின் வெப்பநிலை: வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த புவிக்கோளின் வெப்ப நிலை 0 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே அங்கு நீர்ம வடிவில் நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், கோளின் வெப்பநிலை பற்றிய இந்தக் கணிப்புகள் துல்லியமானவை அல்ல என்கிறார் உட்ரியின் கூட்டாளியும், வானியல் அறிஞருமான மைக்கேல் மேயர்.

கூடுதல் விவரங்கள் இல்லாமல் நீர் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமுடியாது என புதிய கோளைக் கண்டுபிடித்த டாக்டர் உட்ரி குழுவினரும் கூறியுள்ளனர்.

வியாழன் கோளைவிட அதிக நிறைகொண்ட வளிமண்டலம் அமைந்திருந்தால், கோளின் பரப்பு மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலையில் நீர்ம வடிவில் நீர் இருக்க முடியாது என்கிறார் மசாசூசெட் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த கோள் அறிஞர் சாரா சீகர்.

இரு நூற்றில் ஒன்று: இந்த பேரண்டத்தில் புவியைப் போலவே உயிரினங்கள் வசிக்கும், அல்லது உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர். இப்புதிய கோள் அதுவாகக் கூட இருக்கலாம் என்கிறார் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு-ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் டேவிட் சார்போன்.

புதிய கோள், புவியைப் போலவே நிலத் தரை கொண்ட திண்மக்கோள் எனில் நீர்ம நிலையில் உள்ள நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் கோள் வாயு உருண்டையாக இருந்தால் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இதைப் பற்றி மேற்கொண்டு முடிவுக்கு வர, கோளைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளதா என்பது போன்ற தகவல்கள் தேவை. அதுவரை வேறு எந்த முடிவுக்கும் வருவது கடினமே என்கிறார் டேவிட் சார்போன்.

சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 200 கோள்களில் மிகச்சிறியது இப்புதிய கோள். ஆனால் புவிக்கு நெருக்கமான நிறை (ஙஹள்ள்) கொண்ட கோள் இது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது கண்டுபிடிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீளீஸ் 581-ஐ சுற்றி வரும் 2 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை புவியைப் போல 8 மற்றும் 11 மடங்கு நிறை கொண்டவை. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக, புவிக்கு நெருக்கமான நிறை கொண்ட இப்புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கோளைக் கண்டுபிடித்துள்ள உட்ரி குழுவினர், வானியல் தொடர்பான “ஜர்னல் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ பத்திரிகையில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.

Posted in 581c, Astronomy, Discovery, dwarf, Earth, Gliese, Greenhouse, Human, Life, Liquid, Moon, Planet, Science, Solar, Star, Water | Leave a Comment »

Liquid Bomb Materials – Q&A

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 11, 2006

திரவ வெடி பொருட்கள்

பல வகை வெடிபொருட்கள்
பல வகை வெடிபொருட்கள்

லண்டன் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களை திரவ வெடி பொருட்களைக் கொண்டு தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியை தாம் கண்டு பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது இங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை திரவ வெடிபொருட்கள் குறித்தும் பலர் ஆர்வமாக அறிய முற்பட்டுள்ளனர்.

ஒரு விமானத்தில் வெடிக்கும் உபகரணத்தினை கடத்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திரவ வடிவிலான வெடிகுண்டு ஒரு கவர்ச்சியான மாற்று வழியாகும்.

திரவ வடிவிலான வெடிகுண்டினை சுலபமாக மறைத்து விடலாம். பிளாஸ்டிக் வெடிப்பொருட்களை தேடுவதற்கு பயன்படும் மிக உயர் நுட்பம் கொண்ட இயந்திரத்தினால் கூட இவற்றை கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.

நன்கு தெரிந்த திரவ வடிவிலான எரிபொருள் என்றால், அது நைட்ரோகிளிசரின் ஆகும். இது ஒரு சிறு நகர்விலும் வெடிக்க கூடிய நிறமற்ற திரவம் என்று கூறப்படுகின்றது.

நிறமற்ற தன்மையினால், விமானங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு கவர்ச்சியான அம்சமாக தெரிந்தாலும், வெடிகுச்சிகள் இல்லாமல் இவை வெடிக்காது என அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில், பெரும்பாலான திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க, வெப்பம் அல்லது மின்சார உந்துதல் தேவை. ஆகவே திரவ வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க காமிராக்களில் இருக்கும் ஃபிளாஷ் அல்லது பேட்டரியினால் இயங்கும் உபகரணம் தேவை.

சாதாரண வீட்டில் பயன்படும் பெரும்பாலான பொருட்களில், உதாரணமாக நகப் பூச்சினை எடுக்க பயன்படும் திரவம், கேசத்திற்கு நிறம் கொடுக்கும் திரவங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கொண்டு கூட திரவ வெடிப்பொருளினை உருவாக்கலாம்.

ஆனால் இதில் கடினமான விடயம் என்னவென்றால், இவற்றினை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுத்தாரிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரைஅசிடோன் ட்ரைபெராக்சைட் என்ற வெடிப்பொருளினை பயன்படுத்தியதாக லண்டனில் இருக்கும் காவல்துறையினர் நம்புகின்றனர்.

இந்த வெடிப்பொருளை கூட திரவ வடிவில் தயாரிக்க முடியும். ஆனால் சரியான விகிதத்தில் கலவையினை உருவாக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. இந்த பொருட்களை கொண்டு, வெடிப்பொருட்களை உருவாக்க முயலும் அனுபவம் அற்றவர்கள், பெரும்பாலும் வெடிக்குண்டு தயாரிக்கும் போது பொருட்கள் வெடித்து கொல்லப்படுகின்றனர்.

இது போன்று வெடிப்பொருளாக செயற்பட கூடிய மேலும் பல திரவங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நைட்ரோமீதேன் – இது மாதிரி விமானங்களில் எரிபொருளாக பயன்படுகின்றது. இது தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது.

அதே போன்று நைட்ரோ ஈதேன் மற்றும் மீதேல் நைட்ரேட்டும் இருக்கின்றது.

இந்த இரசாயன பொருட்களை பெறுவதற்கு கடினம் அல்ல, ஆனால் இவற்றை வெடிக்க வைக்க கூடிய சரியான பொருளினை கண்டுபிடிப்பதற்கு, அறிவும், அனுபவமும் தேவை.

முக்கியமாக, திரவப் வெடிப்பொருட்களால் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாராவதில்லை. ஆனால் விமானங்கள் என்று பார்த்தால், சக்தி வாய்ந்த குண்டுகள் தேவை இல்லை. ஏனென்றால் சிறிய வெடித்தாக்குதல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது.

காற்றழுத்தம் செய்யப்பட்ட விமானத்தின் அறைகள், வானில் உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் போன்றவை, ஒரு சிறிய வெடித்தாக்குதலின் பாதிப்பினை கூட பூதாகரமாக்கும், அதன் விளைவாக விமானம் முற்றாக நாசம் அடையும்.

Posted in Aircraft, Airforce, al-Qaeda, Arms, BBC, Blast, Liquid, Tamil | Liquid Bomb Materials – Q&A அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

Aircraft Blast plot foiled

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 11, 2006

பாதுகாப்பு உசார் நிலை தொடருகிறது
பாதுகாப்பு உசார் நிலை தொடருகிறது

பிரிட்டன் விமான நிலையங்களில் தொடர்ந்தும் அதியுயர் உசார்நிலை

அமெரிக்காவிற்கு பறக்கும் பயணிகள் விமானங்களை தகர்ப்பதற்கு திட்டம் தீட்டியதாக இருபத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதினை அடுத்து, பிரிட்டனில் அதிகாரபூர்வமான எச்சரிக்கை அளவானது, ‘தீவிரம்’ என்பதிலே நீடிக்கும் என பிரித்தானிய உள்த்துறை அமைச்சர் ஜான் ரெய்டு தெரிவித்துள்ளார்.

முக்கியமான சந்தேக நபர்கள் அனைவரும் தங்களின் பிடியில் இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கையாக இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த அவர், ஆனால் தன்னால் அதற்கு உறுதி கூற முடியாது என தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணையின் போது ஒத்துழைப்பு கொடுத்த நாடுகள், குறிப்பாக பாகிஸ்தானுக்கு தனது நன்றியினையும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பத்தொன்பது பேரின் நிதிச் சொத்துக்களை முடக்கியுள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்து அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த நபர்களின் வயது பதினேழு முதல் முப்பதைந்து வரையில் இருக்கின்றது. இவர்களில் பெரும்பாலனவர்கள் இருபது வயது பருவத்தினராக இருக்கின்றனர். வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிரித்தானியாவில் பிறந்த முஸ்லிம்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரிட்டன் விமான நிலைய தாமதங்கள் குறைகின்றன

பல விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு
பல விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு

பிரிட்டனின் விமான நிலையங்களில் இயல்பு சேவையினை கொண்டு வருவதில் தாங்கள் முன்னேற்றம் கண்டு வருவதாக பிரித்தானிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பாதுகாப்பு நடவடிக்கையினால், பிரித்தானிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

விமான நிறுவனங்கள் நீண்ட தூரம் செல்ல கூடிய விமான சேவைகளை ஆரம்பித்து வருகின்றன. ஆனால் குறுகிய தூர சேவைகள் இன்னும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

Posted in Aircraft, BBC, Blast, Liquid, London, plot, Tamil, Terrorism, UK, US, USA | Aircraft Blast plot foiled அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது