Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Noida’ Category

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Noida Child Molesters: Details & Mohinder’s Confession

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிறுமிகளை கற்பழித்து கொன்றது எப்படி? காமவெறியன் பரபரப்பு வாக்குமூலம்

புதுடெல்லி, ஜன. 1-

28 வருடங்களுக்கு முன் தமிழிலில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் சினிமாவில் கதாநாயகன் கமலஹாசன் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து அவர்களை கற்பழித்து கொலை செய்வதுடன் தனது பங்களா விலேயே புதைத்துவிடுவார்.

இது போன்ற நிஜ சம்பவம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் தொழில்அதிபர் மொகிந்தர்சிங். இவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்திரா.

இவர்கள் இருவரும் நொய்டா நிதாரி பகுதியில் உள்ள பங்களாவில் ஏராளமான சிறுமிகளை கற்பழித்து கொன்று புதைத் துள்ளான். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்களது காமவெறிக்கு 38 சிறுவர்-சிறுமிகள்வரை பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே அந்தப்பகுதியில் சிறுவர்- சிறுமிகள் அடிக்கடி மாயமானார்கள்.

தற்போது சுரேந்திரா கைதான தகவல் கிடைத்ததும் சிறுவர்-சிறுமிகளை பறி கொடுத்த பெற்றோர் ஒவ்வொரு வராக வந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். இதுவரை 38 சிறுவர்-சிறுமிகளை காணவில்லை என்று புகார் வந்துள்ளது.

கடைசியாக பாயல் என்ற 20 வயது இளம்பெண் சுரேந்திராவின் காமப்பசிக்கு பலியானார். அவளது செல் போன் சுரேந்திராவிடம் இருந்தது. செல்போனை போலீசார் தேடியபோது சுரேந்திரா சிக்கினான்.

இதையடுத்து மொகிந்தர் சிங்கின் பங்களாவைச் சுற்றிலும் கொன்று புதைக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமிகளின் பிணங்களை போலீசார் புல்டோசர் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து வருகிறார் கள். தோண்டத்தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

தொய்டா பகுதி முழுவதும் ஒரே பீதியும் பரபரப்பாகவும் காணப்படுகிறது. பிணங்கள் தோண்டப்படும் மர்ம மாளிகை முன் ஏராளமான பெற்றோர் பரிதவித்தபடி கூடினர். கடுமையான கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினார்கள். பலத்த பாதுகாப்புக்கு இடையே பிணம் தோண்டி எடுக்கப் படுகிறது.

கடத்திவரப்படும் சிறுமி களை முதலில் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் கற்பழிப்பார். அதன்பிறகு வேலைக்காரன் சுரேந்திரா அனுபவித்து கொன்று புதைத்துவிடுவான். இந்த தொடர் கொலையில் மொகிந்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரிடமும் போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார் கள்.

சிறுமிகளை கற்பழித்து கொன்றது பற்றி சுரேந்திரா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறான். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். மொகிந்தர்சிங் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வந்தார். தனிமையில் இருந்த அவர் அழகிகளை அழைத்து வந்து அனுபவிப்பார். அவருக்கு சிறுமிகள் என்றால் பிடிக்கும்.

அவரது எண்ணத்தை புரிந்து கொன்ட நான் முதன்முதலாக ஜோதி என்ற 10 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தேன். அவரது தந்தை ஜாபுலால். சலவைத்தொழிலாளியான இவரது மகள் வீடு வீடாக சென்று துணிகளை சேகரித்து அதை சலவை செய்து கொடுப்பாள்.

எங்கள் பகுதி வழியாக சிறுமி துடுக்காக நடந்து செல்வாள் ஒருநான் அவளை வீட்டுக்குள் துணிகளை எடுத்துச்செல்ல வருமாறு அழைத்துச்சென்றேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அவளை ஒரு அறையில் தள்ளினேன். எஜமான் மொகிந்தர்சிங் முதலில் சிறுமியை கற்பழித்தார். அவர் அனுபவித்து சென்ற பின் நானும் சிறுமியை பலாத்காரம் செய்தேன். அவளை வெளியில் விட்டால் விபரீதமாகிவிடும் என்பதால் அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன். பிணத்தை வீட்டுகால்வாயில் குழிதோண்டி புதைத்து விட்டேன்.

இதுதான் நான் செய்த முதல் கொலை அதன்பிறகு நிறைய சிறுமிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் அழைத்து வந்து `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொன்றோம். எத்தனை பேர் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

முதலாளி மொகிந்தர்சிங் அடிக்கடி விபசார அழகிகளை வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருப்பார். பாயல் என்ற இளம்பெண் அடிக்கடி வந்து மொகிந்தர்சிங்குடன் உல்லாசமாக இருப்பாள்.

அவளுக்கு நாங்கள் சிறுமிகளிடம் `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொலை செய்த விவரம் தெரிந்து விட்டது. அவள் மொகிந்தர்சிங்கை `பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்க திட்டமிட்டாள். இதனால் அவளது கதையை முடித்துவிடு என்று எனக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 7-ந்தேதி வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பாயலை கொன்று பிணத்தை புதைத்துவிட்டேன்.

ஆனால் அவளது செல்போன் எங்கள் வீட்டில் இருந்ததால் அதை வைத்து போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு சுரேந்தரா கூறினார்.

காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்களை போலீசார் அவனிடம் காட்டியபோது அவர்களை கற்பழித்து கொன்று விட்டதாக கூறி அடையாளம் காட்டினான்.

சுரேந்திராவின் காமவெறிக்கு பலியான சிறுமி ஜோதியின் தந்தை சலவைத்தொழிலாளி ஜாபுலால் கூறுகையில், “நான் எனது மகளை காணவில்லை என்று 18 முறை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எனது புகாரை கவனிக்கவேயில்லை. அப்போது இதன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் படுகொலைகள் நீடித்து இருக்காது” என்றார்.

கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மொகிந்தர் சிங் ஹரித்வார், பாகப்பட், டேராடூன், நொய்டா ஆகிய இடங்களில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு மாதவருமானம் மட்டும் ரூ. 23 லட்சம் முதல் 30 லட்சம் வரை கிடைக்கும். மொகிந்தர்சிங்கின் மனைவி தவிந்தர்கவுர். இவர் கணவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் 2 வருடங்களுக்கும் முன்பே பிரிந்து சென்று விட்டார். அவர் மொகிந்தரின் தம்பி இக்பாலுடன் வசித்து வருகிறார்.

இது போல் மொகிந்தர்சிங்குடன் அவரது சகோதரர்களுக்கு சொத்து பிரச்சினை இருந்தது இதனால் சகோதரர்களும் மொகிந்தரை விலக்கி வைத்தனர்.

அவரது தம்பி இக்பால் சிங் கூறுகையில் “மொகிந்தர்சிங் எப்போதும் பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கடந்த 6 வருடமாக அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை அவன் என்ன செய்து வந்தான் என்று தெரியாது” என்றார்.

மொகிந்தரின் பள்ளி தோழர்கள் கூறுகையில் “அவன் மோசமானவன்” என்றனர். மேலும் சிலர் கூறுகையில் “அவன் ஜாலியானவன். ஆனால் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

மொகிந்தரின் மைத்துனர் இக்பால்சிங், பஞ்சாப் காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் கேட்டபோது, “தனது தங்கையுடன் சரியாக வாழாததால் 2 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதாக” தெரிவித்தார்.

Posted in Child Molestation, Confession, crimes, Delhi, Molest, Moninder Singh Pandher, Noida, Police, Rape, UP, Uttar Pradesh | 1 Comment »

Noida Serial Killers: 22 Bodies, 30 Children – UP sacks 6 cops, suspends 3 officers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

நொய்டா சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை

இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு அருகே நொய்டா என்னும் இடத்தில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டது குறித்து இந்திய அரசு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று ஆராயும்.

சாக்கடை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் குழந்தைகளின் பிரேத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே அவர்கள் காணமல் போயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் வர்த்தகர் ஒருவரும், அவரது வேலைக்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச பொலிஸாரினால் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள், போதுமானவை அல்ல என்று, பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் புகார் செய்துள்ளன.

Posted in Child Molester, Children, children missing, Law, Lucknow, Minors, Molest, Moninder Singh Pandher, Naveen Chandra Bajpei, Noida, Piyush Mordia, Police, Rape, Serial Killers, Sewak Ram Yadav, Soumitra Yadav, UP, Uttar Pradesh, Women | 1 Comment »