Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Benefits’ Category

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Labour Unions – Industry workers association need to get rejuvenated

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

துயிலெழ வேண்டும் தொழிலாளர் துறை

எஸ். சம்பத்

தொழிலாளர்களுக்கும், தொழிலக நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாக, சமரச அலுவலராக, நீதித்துறை இணை அதிகாரத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளை விரைவாக தீர்த்துவைக்க வேண்டியது தொழிலாளர் நலத்துறை.

அந்த அமைப்பு இப்போது “”அதிகாரமற்ற அமைப்பு போல” தூக்கத்தில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிவிட்டது.

தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே முக்கியமானது 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம்தான்.

தொழிலாளர்கள் தரப்பில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பலன்களைப் பெற முடிகிறதா என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கும். இது கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் நிலைமை.

தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவது, தொழிலகத்தில் அமலில் உள்ள நடைமுறைகளை முன் அறிவிப்பின்றி மாற்றுவது, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்துவது, நிர்வாகத்துக்கும் தொழிலாளிக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதாக இருந்தால் (தொழிலாளர் நலத்துறையிடம்) முன் அனுமதி பெறுவது, நியாயமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் நிலுவையைக் கோருவது போன்றவை தொடர்பாகத்தான் அடிக்கடி தகராறுகள் எழுகின்றன.

சமீப கணக்கெடுப்புகளின்படி சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 7,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் வருகின்றன.

தொழில் தகராறு சட்டங்கள் பொருந்தி வருகிற நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நேரடியாக உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.

மாறாக, சமரச அலுவலர் முன்பு இப் பிரச்சினையை எழுப்பி அதில் சமரச முறிவு ஏற்பட்ட பின்னர், இதை நீதிமன்றத் தீர்ப்புக்கு விடலாமா, கூடாதா என்று அரசின் தொழிலாளர் துறை முடிவு செய்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும். அப்படியே தொடுத்தாலும் அந்த வழக்கில் தீர்ப்பு வர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அப்படியே தொழிலாளர் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ ஒரு தீர்ப்பை தொழிலாளருக்குச் சாதகமாக வழங்கிவிட்டாலும், உடனடியாக நிர்வாகத்தின் தரப்பில் அதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நியாயம் கிடைப்பது மேலும் தாமதப்படுத்தப்படும்.

நடுநிலையான தொழிலாளர்துறை ஆணையர்கள் பணியில் இருந்தபோது தொழிலாளி மீதும் நிர்வாகத்தின் மீதும் தமது அதிகாரத்தை சரியாகப் பிரயோகப்படுத்தும் நிலைமை முன்னர் இருந்தது. அவற்றை நிர்வாகங்களும் ஏற்கும் நிலைமையும் இருந்தது.

இப்போது தொழிலாளி தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், எதிர் மனுதாரராகிய நிர்வாகத்திடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொண்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது.

இதையெல்லாம் மீறி ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பல வருடங்கள் வாதிட்ட பிறகு, “”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பு வருவது தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது. சமீப காலத்தில் இப்படிச் சில தீர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் பொது நிலையாணைகள் உருவாக்கி சான்றிடப்பட்டது. அதில் சில அம்சங்களை எதிர்த்து நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தன.

கடந்த 11 வருடங்களாக தொழிலாளர் துறையால் அவை விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராததால், போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 34 ஆண்டுகள் ஆனபிறகும் பொது நிலையாணை ஏற்படாத அவல நிலை தொடர்கிறது.

2001-ல் போனஸ் தொடர்பான வழக்கு நிலுவையிலிருக்கும்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அனைத்திலும் சுமார் 600 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அது தொடர்பாக, தொழில் தகராறு சட்டப்பிரிவு 33 (1) (ஏ)-ன்படி வேலை நீக்கத்துக்கு ஒப்புதல் கேட்ட மனுக்கள் மீது இன்னமும் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த உதாரணம் அரசுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தது. தனியார் துறை தொடர்பாக எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

தொழிலாளர் நலத்துறையை தட்டி எழுப்பி, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைத்தால் மட்டுமே, “”தொழில் தாவா சட்டம்” இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

(கட்டுரையாளர்: தொழிற்சங்க நிர்வாகி).

Posted in Benefits, Biz, Commerce, Communism, Communist, employee, Employer, Employment, Factory, Finance, Fire, HR, Human Resources, Industry, Insurance, Jobs, Judge, Justice, Labor, Labour, Law, Layoff, Management, Minister, Ministry, Order, Permanent, Strike, Temporary, Union, Wages, workers | Leave a Comment »

Reliance Fresh – Impact, Job growth, Details, Statistics, Benefits & Information

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 25, 2007

தமிழக சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, பிப். 25: தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்களது சில்லறை வர்த்தகத்தின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பலன் பெறும் வகையில் தங்களது சில்லறை வர்த்தகம் நடைபெறும் என அந்நிறுவன வட்டாரங்கள் உறுதி கூறின.

தற்போது சென்னையில் 12 இடங்களில் “ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ என்கிற பெயரில் காய்கறிகள் -பழங்கள் -அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எந்தெந்த இடங்களில்…:

  1. அண்ணா நகரில்
  2. 2 இடங்களிலும்,
  3. முகப்பேர்,
  4. புரசைவாக்கம்,
  5. அசோக் நகர்,
  6. தியாகராய நகர்,
  7. திருவான்மியூர்,
  8. அடையாறு
  9. நந்தனம் சேமியர்ஸ் சாலை,
  10. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை,
  11. வளசரவாக்கம்,
  12. சூளைமேடு ஆகிய பகுதிகளில் தலா ஓர் இடத்திலுமாக இந்த 12 நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையங்களால் சிறு வியாபாரிகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.

விவசாயிகளுக்கு உதவி: விவசாயிகள் வாழும் பகுதிகளிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு செல்ல ஆகும் வண்டிச் செலவு, விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைத்தரகர்களின் மூலம் விற்கும்போது பல இடங்களில் பணம் உடனடியாக விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

விவசாயிகள் எந்தெந்த காலகட்டங்களில் எத்தகைய காய்கறிகளைப் பயிரிடலாம்? எத்தகைய விதைகள், இதர இடுபொருள்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்கும்? மக்கள் அதிகமாக விரும்பும் காய்கறிகள் எவை என்பன போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் ஃரெஷ் அவ்வப்போது தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது.

நுகர்வோருக்கு நியாய விலை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால், அதிக லாபம் வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான விலைக்கு விற்க எங்களால் முடிகிறது என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் உள்ள 12 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் 761 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர, கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் 411 பேர் வேலை செய்கின்றனர். புழலில் உள்ள விநியோக மையத்தில் 447 பேரும், 10 இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் 65 பேரும் பணியாற்றுகின்றனர்.

யாருக்கும் போட்டி இல்லை

சென்னை, பிப். 25: ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 15 நாள்களில் சராசரியாக நாள்தோறும் 13 ஆயிரம் பேர் தான் எங்களின் 12 கடைகளிலும் பொருள்களை வாங்கி உள்ளனர். இதில் இருந்தே எங்கள் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை. எவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும் என்றனர் அவர்கள்.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களைப் போலவே ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே விற்பனையகங்களை நடத்துகின்றன. அந்நிறுவனங்களைப் போலவே, நாங்களும் யாருடைய தொழிலையும் பாதிக்கவில்லை என அவர்கள் கூறினர்.

================================================================
சலுகை விலையில் பொருள்களை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ்-நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ரகசிய உடன்பாடு

சென்னை, மார்ச் 29: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 40 சதவீதம் சலுகை விலையில், குறைவான விலைக்கு பொருள்களை கொள்முதல் செய்கிறது. இதற்காக, சில நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிப்போம்.

ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையில் 14 சில்லறை காய்கறிக் கடைகளைத் திறந்து உள்ளது. மேலும், ஏதாவது கடையைத் திறந்தால் அப்பகுதி வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

மே 5-ல் வணிகர் மாநாடு: மே மாதம் 5-ம் தேதி வணிகர் தின மாநாட்டை சேலத்தில் நடத்துகிறோம்.

ஆன்-லைன் வர்த்தகம், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை விலைவாசி உயர்வுக்குக் காரணம். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டங்களை செப்டம்பர் இறுதியில் மேற்கொள்வோம் என்றார் வெள்ளையன்.

Posted in Backgrounder, Benefits, Biz, Business, Buyer, Chennai, Commerce, Competition, Consumer, Details, Economy, Employment, Finance, Fresh, Fruits, Growth, Healthy, Impact, Information, Jobs, Madras, Market, Opportunity, Reliance, Reliance Fresh, Seller, Statistics, Vegetables, Vendors | Leave a Comment »

Third of world’s young are jobless or get less than £1 a day

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

உலக அளவில் 10 ஆண்டுகளில் வேலையின்மைப் பிரச்சினை 15% அதிகரிப்பு

புது தில்லி, அக். 31: கடந்த 10 ஆண்டுகளில், உலக அளவில், 15-லிருந்து 24 வயது வரையான இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு ஆசியப் பகுதியில் இது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவிலும் பிராந்திய அளவிலும் நிலவும் வேலையின்மைப் பிரச்சினை குறித்த அறிக்கையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

1995-லிருந்து 2005-வது ஆண்டுக்குள், வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சத்திலிருந்து 8 கோடியே 50 லட்சமாக அதிகரித்துவிட்டது. உலகம் முழுவதும் 30 கோடி இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 2 டாலர்கள்கூட (ரூ.90) ஊதியம் கிடைக்காத வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றனர். இது வறுமைக்கோடு என்ற வரம்புக்குக் கீழான நிலையாகும். உலகம் முழுவதும் உள்ள மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில் இது 25 சதவீதமாகும். இன்றைய இளைஞர்களின் உற்பத்தித் திறன் முழுவதையும் பயன்படுத்த வேண்டுமானால், புதிதாக 40 கோடி கெüரவமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வளர்ந்த பணக்கார நாடுகளைவிட ஏழை நாடுகளின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அங்கு இளைஞர்களிடையிலான வேலையின்மைப் பிரச்சினையும் தீவிரமாக உள்ளது.

இளம் வயதிலேயே தொழில்நுட்பத் திறனற்ற வேலையில் சேரும் இளைஞர்களுக்கு எதிர்காலத்திலும் சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன. எனவே, இளம் வயதிலேயே தொழில் திறமையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக அளவில் 1995-லிருந்து 2005 வரை, இளைஞர்களின் தொகை 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 3.8 சதவீதம்தான் அதிகரித்துள்ளன. இளைஞர்கள், வயதானவர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள வேலையில்லாதோர் தொகையில், வேலையில்லா இளைஞர்களின் விகிதம் 44% ஆகும்.

Posted in Benefits, India, International Labour Organisation, Jobless, social security, South Asia, Unemployed, unemployment, United nations, Youth | Leave a Comment »

Population control tactics & carrots in China: $75 for 60+

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தினை கட்டுப்படுத்த புதிய முயற்சிகள்

சீன நாட்டவர்கள்
சீன நாட்டவர்கள்

சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக, கிராமப் புறங்களில் உள்ள மக்கள் குறைந்த அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளன.

மக்கள் தொகை ஏறுமுகமாக உள்ள நிலையில், ஒரே ஒரு ஆண் குழந்தையோ அல்லது இரண்டு பெண் குழந்தைகளோ கொண்ட கிராமப் புறங்களில் உள்ள பெற்றோர்களுக்கு, அவர்கள் 60 வயதை எட்டும் போது மாதம் ஒன்றுக்கு 75 டாலர்கள் வழங்கப்படவுள்ளது.

இந்தத் தொகை, சராசரியாக ஒரு விவசாயி ஆண்டு ஒன்றுக்கு சம்பாதிப்பதில் ஐந்துக்கும் ஒரு பங்கு அளவை விட குறைவானதே.

இந்த உதவித் தொகை அங்கு பாரம்பரியமாக நிலவி வரும் ஆண் வாரிசுக்கான ஆதரவைச் சமன் செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சீனாவில் பாரம்பரியமாக ஆண் வாரிசுகள் குடும்பப் பெயரைத் தாங்கியும், வயதான பெற்றோர்களை பராமரிப்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கும் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட “ஒரு குழந்தை” கொள்கையின் அடிப்படையில், சில அரிதான விதிவிலக்குடன் பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

Posted in 60+, Benefits, Child, Children, China, Dollar, Female, Growth, Kids, male, Population, ratio, South Asia, tactics | Leave a Comment »

Unemployment Benefits to Youth – Issues

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு: இளைஞர்கள் அதிருப்தி

சென்னை, செப். 11: அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது உதவித் தொகைபெற விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படித்து வேலையில்லாத இளைஞர்கள் தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

படித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தகுதியுள்ள இளைஞர்களுக்கு இத்தகைய உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். வங்கிகள் மூலமாகத்தான் இந்த நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் கூறினார்.

ரூ. 500 தேவை: அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உதவித் தொகை பெறுவதற்கு தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் பலரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரில் வாழ்வதற்கு நாளொன்றுக்கு ரூ. 75 அவசியம் தேவை. பிற நகரங்களில் கட்டாயம் ரூ. 50 தேவை. இந்நிலையில், விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக அரசு அளிக்கும் உதவித் தொகை பெரும்பாலான இளைஞர்களுக்கு பயன் தருவது சந்தேகம் என்றே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது என்ற விதிமுறையும் கடுமையானது என்று பல இளைஞர்கள் கருதுகின்றனர்.

Posted in Assistance, Benefits, Cash, Employment, Grants, Jobless, Subsidy, Tamil, Unemployed, Youth | Leave a Comment »