Archive for the ‘Orissa’ Category
Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008
பேட்டி: பெண் பெயரில் ஆண் எழுதினால் குழப்பம்!
பெயல்
கவிதை, கதையில் அதிக ஆளுமை செலுத்தி வரும் வெண்ணிலா இப்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.
ஒன்று:
சார்க் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரிசாவில் சமீபத்தில் கவிதை விழா நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் இருவர் கலந்து கொண்டனர். ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். மற்றொருவர் வெண்ணிலா. இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு அளவில்லா சந்தோஷம்.
இரண்டு:
“மீதமிருக்கும் சொற்கள்’ என்ற தலைப்பில் வை.மு.கோதை நாயகியம்மாள் முதற்கொண்டு 46 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகள் பல வெளிவந்திருந்தாலும் இதுபோன்று முழுமையான பெரும் தொகுப்பு வந்ததில்லை. இப் பணிக்காக வெண்ணிலா பெரிதும் இலக்கிய வட்டாரத்தில் பாராட்டு பெறுகிறார்.
இரட்டிப்பு சந்தோஷத்திலிருக்கும் அவரிடம் பேசினோம்.
மீதம் அவரது சொற்களில்:
ஒரிசாவில் நடந்த கவிதை திருவிழாவின் சிறப்பு?
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்த சார்க் கூட்டமைப்பில் இலக்கிய பிரிவு ஒன்றும் உண்டு. இந்த இலக்கியப் பிரிவு சார்பில் மூன்று நாள் கவிதை திருவிழா ஒரிசாவில் நடைபெற்றது. எட்டு நாடுகளில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கவிதைப் படித்தனர்.
தமிழகத்தின் சார்பில் நா.முத்துக்குமாரும், நானும் கலந்துகொண்டு கவிதைப் படித்தோம். “பின் இருக்கை’ என்ற தலைப்பில் கவிதையொன்றை தமிழில் படித்து, அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் படித்தேன். என்னுடைய கவிதைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழியினரின், பல்வேறு நாட்டினரின் கவிதைகளைப் பரிமாறிக்கொள்கிற வகையில் இப்படி ஒரு விழா நடத்துவதே சிறப்பான ஒன்று என்று நினைக்கிறேன்.
கவிதைத் திருவிழாவின் மூலம் நீங்கள் கற்றது?
இங்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. இவ்விழாவில் வெறும் கவிதை படிக்கப்பட்டதுடன் ஒரிசா மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. கவிதை பற்றிய கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இது என்னளவில் பெரிய மனக்குறையாக இருந்தது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால்தான் மற்ற மொழியினரின் கவிதைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். படிக்கப்பட்ட கவிதைகளை வைத்துப் பார்க்கிறபோது நவீன தமிழ் கவிதைகளுக்கு நிகரான கவிதை மற்றமொழி கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். சந்தம் வடிவிலான கவிதைகளையே இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடுபொருள்கள் எல்லாம் நாம் எப்போதோ பாடியதாக இருக்கிறது. தொலைபேசியைப் பற்றியெல்லாம் நாம் எப்போதோ பாடிவிட்டோம். அவர்கள் இப்போதுதான் பாடுகிறார்கள். சிறப்பு என்று கருதி ஒன்று சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தான் கவிஞர்களைச் சொல்லலாம். அவர்கள் “கஜல்’ வடிவிலான கவிதைகளாகப் படித்தார்கள். யுத்தத்தைப் பற்றிய கருப்பொருளாக இல்லாமல் மண் சார்ந்த கவிதைகளாக இருந்தது சிறப்பு.
“மீதமிருக்கும் சொற்கள்’ தொகுப்பை எத்தனை ஆண்டுகளாகத் தொகுத்தீர்கள்?
“கனவுப்பட்டறை’ சார்பாகத்தான் பெண்ணிய சிறுகதைகளைத் தொகுக்கிற பணியைத் தொடங்கினேன். கடைசியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான் இப்புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்தத் தொகுப்பிற்காகச் செலவிட்டிருக்கிறேன். அசோமித்திரன், கந்தசாமி போன்ற பலர் பெண்ணியச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். அந்தத் தொகுப்புகள் எல்லாம் அவரவர் விருப்பங்களுக்கு உட்பட்ட கதைகளாகவே இருந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் அப்படியில்லை. வரலாற்று ஆவணமாகத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டுத் தேடித் தொகுத்திருக்கிறேன். அதைப்போலவே வந்திருக்கிறது. மொத்தம் எழுபது பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்தோம். இதில் 45 பெண் எழுத்தாளர்களின் கதைகள் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. மற்ற எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அந்த எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதுதான். உதாரணமாக எஸ்.ரங்கநாயகி என்கிற பெண் எழுத்தாளர். அவர் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். “கலைமகள்’ அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளர் அநுத்தமாவைச் சந்தித்துக்கூட கேட்டுப் பார்த்தேன். அவருக்கு விவரம் தெரியவில்லை. இப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
இத்தொகுப்பைத் தொகுத்ததன் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள்?
புத்தகமே எழுதுகிறளவிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 1930 முதல் 2004 வரையில் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் 60 வரை எழுதிய எழுத்தாளர்களைப் பார்த்தோமானால், எழுதிய எழுத்தாளர்கள் எல்லோருமே மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களாகவே இருக்கின்றனர். 60-க்குப் பிறகே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கிருத்திகா போன்றோர் வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அதிகளவில் பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டாலும், பெண் விடுதலை பற்றிய எழுத்துகள் அவர்களுடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கணவன்-மனைவி சண்டை போன்ற விஷயங்களைப் பற்றியே கதை எழுதியிருக்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய எழுத்துகள் சிலர் சொல்வதுபோல இலக்கியமாகாவிட்டாலும், போற்றிக் கொண்டாட வேண்டிய எழுத்துகள், பெண் விடுதலைக்காக அவர் எழுதத் தொடங்கியதைத் தொடர்ந்தே பலர் எழுதத் தொடங்கினர்.
வை.மு.கோதைநாயகியம்மாள் 115 நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்தை அவர் ஒரு தவமாகக் கொண்டிருந்திருக்கிறார். சுதந்திரப்போராட்டத்துக்காக அவர் சிறையிலிருந்தபோது அவருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பலகார காகிதங்களில்கூட கதை எழுதி அனுப்பியிருக்கிறார். இதைப்போல குகப்பிரியை, குமுதினி போன்றோர் எழுத்தை நேசித்ததைப் கேட்கிறபோது நமக்கு பிரமிப்பைத் தருகிறது.
இதைப்போல மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல் எம்.எஸ்.கமலாவைப் பற்றியது. இவர் ஒரு சோவியத் மாணவி என்றும், முற்போக்கான கட்டுரைகள் எழுதக்கூடியவர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்படி கமலா எழுதிய கதைகளைத் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாமே குடும்பப் பாங்கான கதைகளாகவே இருந்தன. பிறகுதான் எம்.எஸ்.கமலா என்ற பெயரில் இருவர் இருந்தது தெரிய வந்தது.
பெயர் குழப்பத்தில் நான் சந்தித்த இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம், பெண்களின் பெயரில் பல ஆண்கள் எழுதியிருக்கிறார்கள். அது தெரியாமல் நாங்கள் ஆண்கள் எழுதிய கதைகளையும் தேர்வு செய்துவிட்டோம். எழுத்தாளர் வல்லிக்கண்ணன்தான் எங்களுக்கு இதில் உதவினார். ஆண் எழுத்தாளர்களின் கதைகளை நீக்கிக் கொடுத்தார். பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுகிறபோது வரலாற்றுக் குழப்பங்கள் எதிர்காலத்திலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இப்போது பெண்கள் அதிகமாக கவிதை எழுத விரும்புவதுபோலத் தெரிகிறதே?
உண்மைதான். இப்போது கவிதை எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கதை எழுதுகிறபோது அதற்கு ஓர் ஆய்வு தேவை. சிக்கலான மொழி நடையைக் கையாள வேண்டியிருக்கும். கவிதையில் அப்படியில்லை. போகிற வழியிலேயே கரு கிடைக்கும். எளிய யுக்தியில் எழுதிவிட முடியும். இதன் காரணமாக கதை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கலாம். இப்போது எழுதுகிற உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றவர்கள் கதையில் நல்ல ஆளுமை செலுத்துகிறார்கள்.
– முடிவுறாத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன!
Posted in Authors, Books, Collections, Fiction, Interview, Kavidhai, Kavidhaigal, Kavidhaikal, Kavinjar, Kavithai, Kavithaigal, Kavithaikal, Literature, Orissa, Poems, Poet, SAARC, Story, Vennila, Vennilaa, Writers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008
சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!
அ. அருள்தாசன்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’ பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.
மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.
நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,
- கர்நாடகம்,
- ஹிமாச்சலப்பிரதேசம்,
- மணிப்பூர்,
- ஒரிசா,
- மேற்கு வங்கம்,
- அசாம்,
- இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.
நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:
இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.
தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:
புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):
“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.
நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):
“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”
லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):
“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.
ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):
“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).
அசோதோஸ் மாலிக் (ஒரிசா):
“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.
தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.
தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.
Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008
ஒரிசாவில் பரிதவிக்கும் ஆதிவாசிகள்
டி.புருஷோத்தமன்
நமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.
ஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.
நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.
இப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.
ஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.
ஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.
கோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
கோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.
பானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.
கோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.
அதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.
கோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.
எனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.
Posted in Aadhivaasi, Aadhivasi, Aathivaasi, Aathivasi, Adhivasi, Adivasi, Agriculture, Assets, Athivasi, Balangir, Bamunigan, Biju, BJP, Business, Caste, Census, Christian, Christianity, Church, Community, Culture, Dalit Christians, Dalits, Economy, Education, Elections, Fake, Farmers, Farming, Farms, Gadapur, Gods, Government, Govt, Help, Heritage, Hills, Hindu, Hinduism, Hindutva, Judges, Justice, Kandhamal, Land, Law, Minerals, Missionary, Native, Naveen, Navin, Naxalites, Naxals, Needy, NGO, non-tribals, Order, Orissa, Police, Polls, Poor, Population, Poverty, Property, Religion, Reservations, Rich, RSS, SC, scheduled tribes, Schools, ST, Students, Teachers, Temples, Tradition, Tribals, Tribe, Violence, voters, Wealthy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007
ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’
Dinamalar.Com
மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.
மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:
மேற்கு வங்கம்:
எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.
ஆந்திரா:
இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.
சட்டீஸ்கர்:
திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.
ஜார்க்கண்ட்:
கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.
மத்தியப்பிரதேசம்:
பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.
ஒரிசா:
கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.
உத்தரப்பிரதேசம்:
மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007
உணவு தன்னிறைவு… நிஜமா?
கே.பி. பிரபாகரன்
நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
நாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.
எந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.
1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.
விளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.
வேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.
உணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.
பெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.
இதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள்ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.
இவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.
இந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.
உணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.
ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன?
கிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே!
——————————————————————————————————————-
வேளாண்மை மேம்பட..!
சி. வேழவேந்தன்
நமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.
கிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.
நஷ்டமானாலும் பரவாயில்லை, தமது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.
இன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.
விவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.
கட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.
இந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
விவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.
நிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
குடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.
இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.
சில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.
விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.
Posted in Agriculture, Apples, Arid, Australia, Bengal, China, Commerce, Dhal, Drought, Eat, Economy, Farmer, Farming, Flood, Food, Foodgrain, Foodgrains, GDP, Grains, Grams, Growth, GWB, Loans, Orissa, Policy, Poor, Rains, rice, Rich, Storage, Sudeshi, Sudesi, Sudheshi, Sudhesi, Suicides, Swaminathan, Tamil, Tariffs, Tax, Vidharba, Vidharbha, Vietnam, Vitharba, Vitharbha, War, WB, Wheat | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007
அனைவருக்கும் கல்வி
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.
மத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.
கல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.
அப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.
இந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.
மத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல!
——————————————————————————————————————
ஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.
இன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.
“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.
தமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.
அரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.
நாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
நாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்!
Posted in Abhiyan, Allocations, Bihar, Budget, Center, Centre, Constitutional, Education, elementary, Females, Finance, Funds, Government, Govt, Gujarat, Haryana, HSC, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Kerala, legal, Madhya Pradesh, MadhyaPradesh, MP, Op-Ed, Orissa, Quality, Rajasthan, Sarva Shiksha Abhiyan, Schools, She, SSA, State, Students, Study, Teacher, Utharakand, Utharakhand, Utharkhand, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Uttrakand, WB, Welfare, West Bengal, WestBengal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 15, 2007
“சுற்றுச்சூழல்-நகரம்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு
புதுதில்லி, மே 16: மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:
- கோட்டயம் (கேரளம்),
- புரி (ஒரிசா),
- திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),
- உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),
- பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்
- தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
S.
No
|
Town
|
Amount
released in Lakh of Rupees
|
1
|
Kottayam
|
40.84
|
2
|
Puri
|
55.53
|
3
|
Tirupati
|
49.34
|
4
|
Ujjain
|
67.41
|
5
|
Vrindavan
|
43
|
6
|
Thanjavur
|
Nil
|
Posted in Andhra, AP, Brindavan, Brindhavan, eco-city, Environment, Forests, Kerala, Kottaiam, Kottayam, Madhya Pradesh, MP, Namo Narain Meena, Orissa, Pollution, Puri, Tanjore, Thanjavoor, Thanjavur, Thirupathi, Thirupathy, Tirupathi, Tirupathy, Ujjain, Ujjaini, UP, Uttar Pradesh, UttarPradesh, Vrindavan, Vrindhavan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007
புதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்!
நீரஜா செüத்ரி
அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.
காபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
- “”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,
- “”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்க வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.
- “”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா?” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.
- ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.
இந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.
வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன? அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது? அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.
காங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.
காலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த
- சச்சின் பைலட்,
- சுப்ரியா சுலே,
- ஷாநவாஸ் உசைன்,
- ஜெய பாண்டா,
- பிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர் கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.
“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
சதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.
கலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?
ஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.
ஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழில்: சாரி.
Posted in Anganvadi, Appearance, Assembly, Biju Janata Dal, BJD, BJP, Children, Congress, Delhi, Female, Field, Food, Gwalior, Hygiene, Janata Dal, Jaya Panda, Kariappa, Kid, Lok Saba, Madhya Pradesh, maharashtra, Malnutrition, MP, NCP, Neeraja, Neeraja Chowdhury, New Delhi, NGO, Non-profit, Nutrition, Orissa, Panda, parliament, pilot, Politics, Pramod, Pramod Mahajan, Prema Kariyappa, Promotion, Sachin Pilot, Shanavaz, Shanawaz Hussein, Shatabdi, Shupriya Sule, Tour, Trip, Women | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007
மக்கள் அறியச் செய்யுங்கள்
இரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்
- பிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து
- உத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.
- மத்தியப் பிரதேசம்-24,
- ஜார்க்கண்ட்-21,
- ஒரிசா-19,
- ஆந்திரம்-13 மாவட்டங்கள்.
- தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:
- கடலூர்,
- திண்டுக்கல்,
- நாகப்பட்டினம்,
- சிவகங்கை,
- திருவண்ணாமலை,
- விழுப்புரம்.
தேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.
ஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
களஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.
ஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.
பயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.
Posted in Andhra, Andhra Pradesh, AP, Assam, backward, Backward Region Grant Fund, Bihar, BRGF, Collector, Collectorate, Cudaloore, Dindugul, Dindukal, Dindukkal, District Collector, fund scheme, Government, Jarkand, Jharkand, Jharkhand, Kadaloor, Madhya Pradesh, Manmohan Singh, MP, Nagapattinam, Orissa, Sivaganga, Sivagangai, Thiruvannamalai, UP, Uttar Pradesh, Viluppuram, Vizhuppuram | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007
சத்தீஸ்கரிலிருந்து நிலக்கரி தரவேண்டும்: பிரதமரிடம் ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்
புது தில்லி, பிப். 13: “”ராஜஸ்தானின் அனல் மின் நிலையங்களுக்கு தொலைதூரத்தில் உள்ள ஒரிசா, ஜார்க்கண்டிலிருந்து நிலக்கரி வேண்டாம்; அருகில் உள்ள சத்தீஸ்கரிலிருந்து ஒதுக்கச் சொல்லுங்கள், இதனால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரயில் சரக்குக் கட்டணம் எங்களுக்கு மிச்சமாகும்” என்ற முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றார்.
இத் தகவலை வசுந்தராவே தில்லியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் வற்புறுத்தி வந்த நிலையிலும் தொடர்ந்து தொலைதூர மாநில நிலக்கரி சுரங்கங்களிலிருந்தே நிலக்கரி வாங்கி வருகிறோம் என்றார் அவர்.
“2011-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் உபரி என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்; அதற்குத் தேவைப்படும் நிலக்கரி போதிய அளவில் கிடைத்தால் மட்டும் போதாது, உற்பத்திச் செலவும் கட்டுப்படியாகும் வகையில் அருகிலிருந்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இம் முறை நிலக்கரித்துறை பிரதமர் வசமே இருப்பதால் அவர் இக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்’ என்றார் வசுந்தரா.
13 மெகா மின்னுற்பத்தி திட்டங்கள்: ராஜஸ்தானில் விவசாயம், தொழில்துறை ஆகியவற்றுக்கு போதிய அளவில் மின்சாரம் கிடைக்க 13 பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறோம். பழுப்பு நிலக்கரி, இயற்கை நிலவாயு, நிலக்கரி ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தவிருக்கிறோம்.
100 கோடி போதாது: பார்மர், ஜெய்சால்மர் உள்பட 16 மாவட்டங்களில், வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய பாதிப்பு நேரிட்டது. இதற்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெறும் 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இத்தொகை போதவே போதாது. வெள்ளப் பகுதிகளை சோனியா காந்தியே நேரில் பார்த்திருக்கிறார். சேதமுற்ற பகுதிகளில் நிவாரணப்பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மொத்தம் ரூ.3,200 கோடி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டிருக்கிறேன்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம்: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்த நாடு முழுவதும் 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ராஜஸ்தானில் 6 மாவட்டங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் 32 மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளனர். நிலப்பரப்பு அளவில் ராஜஸ்தான் மிகப்பெரியது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் அதிகம் உள்ள மாநிலமும் ராஜஸ்தான்தான். எனவே இந்த திட்டத்தின் கீழ் வரும் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறேன்.
நிதிச் சீர்திருத்தம்: நிதிச் சீர்திருத்த அமலில் ராஜஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதற்காகவே சிறப்பு ஒதுக்கீடாக ரூ.400 கோடியை தருமாறு கோரியிருக்கிறேன் என்றார் வசுந்தரா.
Posted in BJP, Charges, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, CM, Coal, Commissions, Cost, Development plans, Electricity, Factory, Fees, Freight, Industry, Jaisalmer, Jharkand, Jharkhand, Lignite, Megawatt, Orissa, Power, Price, Rajasthan, State, Thermal, Vasundhara Raje | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007
சதாம்உசேனின் மணல் சிற்பம்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம்உசேன் தூக்கிலிடப்பட்டார். இதை நினைவு கூறும் வகையில் ஒரிசா பூரி கடற்கரையில் அவரது மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
Posted in Beach, Capital punishment, Death, Fate of Saddam, Hanging, Memorial, Orissa, Puri, Saddam Hussein, sand sculpture | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006
பொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்
புது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.
குறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.
அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
நாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.
கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு
திருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ரூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
எம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.
பொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.
பொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
சென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.
ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
மாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.
Posted in Activists, AITUC, Arrest, Banks, Chennai, CITU, Communism, Communist parties, Communists, CPI, CPI(M), Disruption, Economy, Factory, Finance, Imapct, India, Insurance, Kerala, Kolkata, Labor, Labour, Law, Left, Madras, Mraxist Communist, Order, Orissa, Police, PSU, SBI, Strike, Tamil, Tiruppur, trade unions, Tripura, unemployment, UPA, WB, West Bengal, Worker | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006
ஒரிசா மாநிலத்தில் தடையை மீறி கோவிலில் நுழைய தலித்துகள் முடிவு
புவனேஸ்வரம், நவ. 2-
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே உள் ளது. கரீடகார் கிராமம் இங்குள்ள ஜெகனாதர் கோவிலில் பல ஆண்டுகளாக தலித்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள உயர் அதிகாரிகள் தலித்துகள் கோவிலில் நுழைந்தால் புனிதத்தன்மை கெட்டு விடும் என்று சொல்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக் கோவிலுக்கு தலித் இன சிறுவன் ஒருவன் சாமி கும்பிட சென்றான். அப்போது அங்கிருந்த அர்ச்சகர்கள் அந்த தலித் சிறுவனை அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவனை கோவிலுக்கு வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றனர்.
அர்ச்சகர்களால் கடுமை யாகத்தாக்கப்பட்ட அவனுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவிலுக்குள் சாமிகும்பிட சென்ற தலித் சிறுவன் தாக் கப்பட்ட சம்பவம் சுற்று வட்டார கிராமங்களில் காட் டுத்தீயாய் பரவியது. உயர்சாதி அர்ச்சகர்களின் காட்டு மிராண்டித் தாக்கு தலை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தினார்கள்.
இந் நிலையில் அப்பகுதியில் உள்ள அம்பேத்கார் லோகியா விகார் மஞ்ச்முடுளி இயக்கத்தை சேர்ந்தவர்கள் 19-ந்தேதி ஜெகனாதர் கோவிலில் தடையை மீறி உள்ளே நுழைய முடிவு செய்துள்ளனர். இதற் காக ஏராளமான தலித் இளைஞர்களை திரட்டி வரு கிறார்கள்.
இப் போராட்டத்திற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடையை மீறி கோவிலில் நுழையும் தலித்துகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, பல ஆண்டு காலமாக தலித்துகள் ஜெகனாதர் கோவிலுக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளே நுழைந்தால் கோவிலின் புனிததன்மை கெட்டுப்போவதுடன் நாங்கள் இதுநாள்வரை காத்து வந்த கோவிலின் பாரம்பரியமும் பெருமையும் அழிந்து விடும் என்றார்.
தலித்துகள் உயர்சாதி அர்ச்சகர்கள் இடையே மோதல் உருவாகி இருப்பதால் அக் கோவிலைச்சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Posted in Ambedkar Lohia Vichar Manch, Ban, Caste, Chaitanya P Majhi, Dalit, Entry, EVR, Hinduism, Jagannath temple, Kendrapara, Orissa, Periyar, Puri, Tamil, Temple | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2006
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகன் பிறந்தநாள் விழாவுக்கு ரூ.50 லட்சம் செலவழித்த மந்திரி
ராஞ்சி, அக். 31-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் இனோஸ்இக்கா. இவரது மகன் சந்தேஷ். இவன் கோரகானில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள். இதையொட்டி மந்திரி இனோஸ் ஜார்க்கண்ட் மாநிலம் கண்டிராத வகையில் கோலாகல பிறந்த நாள் விழா நடத்தினார்.
மந்திரி இனோசின் சொந்த மாவட்டமான சிம்தேகாவில் இந்த விழா நடந்தது. இதற்காக அந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 50 ஆடுகள் வெட்டப்பட்டு விசேஷ விருந்து கொடுக்கப்பட்டது.
அசைவத்தை விரும்பாத வர்களுக்கு என தனியே சைவ உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் விதம்விதமாக வழங்கப்பட்டன. இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவை பார்த்து சிம் தேகா மாவட்ட ஏழை மக்கள் ஆச்சரியத்தில் பிரமதித்துப்போனார்கள்.
மகன் பிறந்த நாளுக்காக மந்திரி இனோஸ் ரூ.50 லட்சத்துக்கு மேல் செல வழித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை எதிர்க் கட்சிக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிம்தேகா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியால் கூறுகையில், “இந்த விழாவால் பெருமைப்பட என்ன இருக்கிறது. இப்படி பணத்தை வீணடித்ததற்காக மந்திரி வெட்கப்பட வேண்டும். மகன் பிறந்தநாளுக்கு செலவழித்த பணத்தை வைத்து சிம்தேகா மாவட்ட மக்களுக்கு ஒரு ஆயில் மில் தொடங்கி கொடுத்து இருக்கலாம்” என்றார்.
ஆனால் மந்திரி இனோஸ் இதை கண்டு கொள்ளவில்லை. “என் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுபவர்கள் இப்படி சொல்கிறார்கள்” என்றார். மந்திரி இனோசின் தந்தை இன்னமும் வறுமையில்தான் வாழ்ந்து வருகிறார். அரசு கட்டி கொடுத்த சாதாரண வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.
Posted in Anosh Ekka, Birthday, Chhattisgarh, Children, Extravaganza, Guest Control Act, Jaipal Singh, Jharkhand, Jharkhand Party, Kamdara, Kartik Oraon, Kolebira, Lalu Prasad, Orissa, Party, Ram Dayal Munda, RJD, Simdega, Son, tribal leaders | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2006
ஒரிஸாவில் இரும்பு ஆலை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
 |
 |
இரும்பு ஆலை |
இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள தென்கொரிய இரும்பு ஆலை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக தங்களுடைய விவசாய நிலங்களை இந்திய அரசாங்கம் எடுத்து கொள்வது தொடர்பாக மாநில முதலமைச்சருடன் பேச வேண்டும் என கோரி தலைநகர் புவனேஷ்வரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் குழுமியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு சில பெண்கள், பாதுகாப்பு வளையத்தினை தாண்டி அமைச்சரின் வீட்டிற்குள் புகுந்ததினை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரும்பு ஆலை திட்டம், இந்தியாவின் மிகப் பெரிய நேரடி அன்னிய முதலீடாகும்.
Posted in Agriculture, BHUBANESWAR, Bhuvaneshwar, India, Industry, Iron, Naveen Patnaik, Orissa, POSCO, Protest, South Korea, Steel | Leave a Comment »