Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Fertilizers’ Category

Agricultural Loans – Rich vs Poor farmers: Banking

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

கைப்புண்ணுக்குக் கண்ணாடி!

sainath_farmer_suicides_agriculture.jpgவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.

ஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.

2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் deaths_suicides_india_farming_peasants.jpgகடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, more_deaths_dead.jpgஇரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.

எங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

—————————————————————————————————————————————————

விவசாயத்தில் ரசாயனங்கள் ஆதிக்கம்

இரா. மகாதேவன்

இயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

விவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.

நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.

இந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.

விவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.

இயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.

உதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.

ஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.

இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.

இயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

நவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

கடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.

இந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.

சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.

அவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.

வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.

ரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.

—————————————————————————————————————————————————-

தேவை புதியதொரு பார்வை!

எம். ரமேஷ்

ஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.

இந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.

பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.

நேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.

மானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.

இது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

உரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.

60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை?

1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது? 2007-ல் எப்படியிருக்கிறது? 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா? இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன? அது சேராததற்கு என்ன காரணம்? இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே? ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.

மானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.

நிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.

உலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

——————————————————————————————————————
விவசாயக் கடன் யாருக்கு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா? விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா? “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்?

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.

1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.

2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.

ஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது?

விவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.

இந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

ஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.

விவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.

எப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.

பல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.

எனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

——————————————————————————————————————

Posted in Agriculture, Artificial, Assets, Banking, Banks, BT, chemicals, Commerce, dead, Death, Economy, Farmers, Farming, Farmlands, Fertilizers, genes, Heritage, Inorganic, Labor, Land, Loans, Modern, Monsanto, Natural, organic, peasants, Suicide, Tariffs, Tax, Urea, Vidarba, Vidarbha, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Villages, Vitharabha, Vitharba, Vitharbha | Leave a Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »