Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Young’ Category

Ilavazhagi, the struggling world champion from Chennai

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2008

கவர் ஸ்டோரி

வெற்றி என்னை ‘ஃபாலோ’ செய்யும்

யுகன்

“சுகாதாரமா அப்படின்னா?’ என்று கேட்குமளவுக்கு இறைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள். முடை நாற்றம் எடுக்கும் சென்னை, வியாசர்பாடியின் சாமந்திப்பூ(?!) காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்!

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த உலகளாவிய கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் இளவழகி. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் இந்த உலக சாம்பியனை, நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட் கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கும் அவரின் “ஹவுஸிங் போர்ட்’ வீட்டில் சந்தித்தோம்.

“”என்னுடைய அப்பா இருதயராஜ்தான் என் கேரம் போர்ட் குரு. அவர் ரிக்ஷா ஓட்டுகிறார். அம்மா- செல்வி குடும்பத் தலைவி. தங்கை, இலக்கியா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். படிக்கிறார். இன்னொரு தங்கை, செவ்வந்தி ஒன்பதாவது படிக்கிறார். என்னுடைய அப்பா, போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள் வாங்கவில்லையே தவிர, எனக்கு கேரம் விளையாட்டில் நிறைய ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அப்பாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் எங்களின் வீட்டுக்கருகில் போர்ட்-ரூம் வைத்திருந்தார். அங்கு போய் விளையாடியும், பிறர் விளையாடுவதைப் பார்த்தும்தான் நான் என்னுடைய விளையாட்டை வளர்த்துக் கொண்டேன். நான் விளையாடும் முறையைப் பார்த்து என்னை டோர்னமென்ட்களில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய அப்பாதான்.

நான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பதற்கு காரணமாக இருந்தவர், இப்போது நான் பிரான்ஸ் செல்வதற்கும் காரணமாக இருந்தவர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். தான். அவர் அளித்த ஊக்கம்தான் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகியிருப்பதற்கு அடிப்படை. என்னுடைய வெற்றியை அவருக்குத்தான் நான் சமர்ப்பிப்பேன்.

உலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கேரம் போர்ட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாதான் சாம்பியன். அதிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 20 நாடுகள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. ஆனால் இறுதியாகப் பங்கெடுத்தது 12 நாடுகள்தான். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானடா, மாலத்தீவுகள், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்களில் 8 வீரர்களும், பெண்களில் 8 வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே 6 பேர்!

முதலில் அனைத்து நாட்டு வீரர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும், இன்னொரு பிரிவினரோடு மோதுவார்கள். இது “லீக்’. இப்படி நடந்த “லீக்’ ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வீராங்கனையான குமாரியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.

செமி-ஃபைனல் முழுவதும் நாக்-அவுட் முறையில் நடந்தது. செமிஃபைனலில் நான் (25, 11) (25, 14) ஆகிய பாயின்ட்களில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்தேன். இன்னொரு செமிஃபைனலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிர்மலா, முன்னாள் உலக சாம்பியனான ரேவதியைத் தோற்கடித்தார்.

ஆக, நான் ஃபைனலில் சக இந்திய வீரரான நிர்மலாவுடன்தான் ஆடினேன். என்னுடைய ஆட்டமுறை, “டிஃபென்ஸ்’ பற்றியெல்லாம் யோசிக்காமல், காய்களைப் பாக்கெட் செய்வதில் குறியாக இருப்பதுதான். மிக..மிக.. நெருக்கடியான போட்டியாக இது அமைந்தது. (25, 11) (25,11) ஆகிய பாயின்ட்களில் நான் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் பங்கெடுத்த பெண்களிலேயே நான்தான் மிகவும் வயது (23) குறைவானவள். இரட்டையர் போட்டியிலும் நான் “ரன்னர்-அப்’பாக வந்தேன்.

ஸ்ரீலங்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த கேரம் விளையாட்டுகள் பலவற்றில் நான் ஜெயித்திருக்கிறேன். தில்லியில் 2006-ல் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியிலும் நான் சாம்பியன் பட்டத்தை வென்றேன். ஏறக்குறைய 12 வருடங்களாக கேரம் போர்டில் தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் இப்போதுதான் மிக அதிகமாகப் பட்டிருக்கிறது.

வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை.

“”ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா? பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள்… (கண்கள் கசிய… பேச்சு தடைபடுகிறது.. சமாளித்துக் கொண்டு பேசுகிறார்) எத்தனையோ பேர். அப்பா வாங்கிக் கொடுத்த “பில்லியர்ட்ஸ் பால்’ ஸ்டிரைக்கரில் தான் இப்போதும் ஆடுறேன். எட்டு வருஷத்திற்கு முன்பே இதன் விலை 300 ரூபாய்!

நான் ஒவ்வொரு முறையும் “ரெட்’ காய்னப் பாக்கெட் செய்துவிட்டு, “ஃபாலோ’வுக்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தை “ஃபாலோ’ செய்து கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும்… என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை “ஃபாலோ’ செய்கிறது. இனிமேலும் செய்யும். வெளிநாட்டிற்காக விளையாட எனக்கு ஐந்து வருடங்களாகவே வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. என் திறமைக்கு என் நாட்டிலேயே மரியாதை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்…” என்றார் சென்டர்-கட் செய்து, ஃபாலோவை போட்டபடி இளவழகி!

Posted in Achievements, Carom, carrom, carroms, Champion, Chennai, Females, Finals, Games, global, Ilavalagi, Ilavazagi, Ilavazhagi, International, Lady, Medals, She, Sports, Women, World, Young, Youth | Leave a Comment »

40 years on, remembering Che Guevara: A symbol of revolution

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

சே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்

கியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது.

சே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார்.

இந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள்.

சே-குவராவின் குடும்பத்தினர்
சே-குவராவின் குடும்பத்தினர்

அர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது.

சே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.


பொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த சே குவாராவின் 40}வது ஆண்டு நினைவு தினம்

பொலி விய ராணு வத்தை ஆட் டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நி û ன வு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

ஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக் டோபர் 8-ம் தேதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல் லப்பட்டார்.

சமூக சிந்தனையாளரான சே குவாரா, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடி வந்தார். இந்நிலையில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட அவர், 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யிலும் அந்நாட்டு மக்களில் சிலர் அவரை புனிதத் தலைவராகவே கருதிவருகின்றனர்.

ஆனால் ராணுவத்தினர் அவர் மீது கொண்டிருந்த ஆத்திரமும் வெறுப்பும் இன்னும் தணிந்தபா டில்லை. அவரைப் பிடிப்பதற் காக போராடிய ராணுவ வீரர்க ளில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளனர்.

“சே குவாராவின் நினைவு தினத்தில் பொலிவிய அதிபர் ஈவோ மொராலேஸ் அவருக்கு அஞ்சலி செலுத்துவது நாட்டின் கெüவரத்துக்கும், ராணுவ வீரர் களுக்கும் இழைக்கப்படும் துரோ கமாகும்’ என்று சே குவாரை பிடித்த கமாண்டர் காரி பிராடோ (68) தெரிவித்தார்.

நாட்டை பிடிக்க வந்தவரை கெüரவிப்பதைவிட எங்கள் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை கெüரவப்ப டுத்தலாம் என்றும் அவர் தெரி வித்தார்.

லத்தீன் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேறுபட்டு கிடந்த அடித்தட்டு மக்களுக்கு ஆயுத புரட்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சே குவாரா திட்ட மிட்டார். அதன்படி பொலிவி யாவில் புரட்சிகர படையை ஏற்ப டுத்தி 11 மாதங்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி வந்தார்.

அதற்காக சே குவாராவின் தலைமையில் செயல்பட்ட போராளிகள், காடுகளில் மறைந்து வாழ்ந்து பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர் களுக்கு உள்ளூர் மக்கள் போதிய ஆதரவும் உதவியும் அளிக்காததால் அந்த வீரர்களில் சிலர் சண்டையிலும், சிலர் பட் டினியாலும், நோய்வாய்ப்பட் டும் இறந்தனர்.

——————————————————————————————————————–

Posted in 40, Argentina, Arms, Army, Batista, Biography, Biosketch, Castro, Che, Che Guevara, CheGuevara, Communism, Communist, Communist parties, Communists, Communities, Cuba, defence, Defense, Ernesto, Faces, Fidel, gerilla, Gorilla, Guerilla, Guevara, Hispanic, Icon, Ideals, Images, Kerilla, Latin, Legacy, Liberation, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Military, names, people, Poverty, Protest, Revolution, Revolutionary, Se, Soldiers, Symbol, War, Weapons, Young, Youth | 2 Comments »

Kalki Editorial: PMK Agitations, Role of opposition Party in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.!

பா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.

தற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.

தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.

ராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.

“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்சியுறும்.

இத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.

ஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

Posted in ADMK, Agitations, Agriculture, Alliance, Anbumani, Assets, BC, Caste, Coalition, Commerce, Community, Compensation, Cows, Dept, DMK, Economy, Editorial, Employment, Export, Farmer, Farming, Govt, Growth, harvest, harvesting, Industry, Kalki, KK, Leather, Loans, Manifesto, MBC, milk, Narain, Needy, OBC, Opposition, Party, PMK, Politics, Poor, Rain, Ramadas, Ramadoss, Rich, Role, Rural, Salary, SEZ, Soil, support, Tamil Nadu, TamilNadu, TN, Vanniyan, Vanniyar, Village, Water, Wealthy, Welfare, Young, Youth, Zone | 1 Comment »

Pavannnan – The divide between wealthy & needy

Posted by Snapjudge மேல் மே 23, 2007

இருவேறு உலகங்கள்

பாவண்ணன்

அதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.

வாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.

பணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.

இன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.

கோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

காலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.

ஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.

செக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.

உப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.

இன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.

“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா?” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.

இன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.

அகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.

எல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.

இந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.

ஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

மலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.

நாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

மூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.

அதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.

ஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.

விலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.

சூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.

மாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.

சாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.

தனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

இன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.

Posted in Analysis, Backgrounder, Bangalored, Call Center, City, Commodity, Communism, Compensation, Consumer, Customer, Deflation, Divide, Economy, Education, Finance, GDP, Globalization, Healthcare, Hospitals, Inflation, InfoTech, Insights, IT, Jobs, Labor, Labour, Marxism, Media, Metro, MNC, Needy, Offshoring, Op-Ed, Outsourcing, Pavannnan, Poor, Prices, Private, Recession, Reliance, Reliance Fresh, Rich, Rural, Salary, Socialism, Spinach, Stagflation, Suburban, Union, Urban, Village, Wal-Mart, Walmart, Wealth, Wealthy, Work, Young, Youth | Leave a Comment »

Priorities for Youth – IQ vs EQ: Impact of Entertainment & Politics

Posted by Snapjudge மேல் மே 22, 2007

முக்கியத்துவங்கள் மாற வேண்டும்

க.ப. அறவாணன்

தமிழில் வெளிவரும் பத்திரிகைகளையும் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களையும் ஆங்காங்கே கல்லூரி இளைஞர்களிடையே எடுக்கப்பெற்ற கருத்துக் கணிப்புகளையும் வைத்துப் பார்க்கும்போது நம் இளைஞர்களின் முன்னுரிமைகள் பின்வருமாறு உள்ளன.

1. திரைப்படம் (பெரியதிரை, சின்னத்திரை)

2. விளையாட்டு

3. அரசியல்.

இந்நிலை மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கத்தக்கது. இம் மூன்றும் அறிவுபூர்வமானவை என்பதைவிட, உணர்வுபூர்வமானவை என்பது தெளிவு.

உணர்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பெறும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். மோகத்திலும் ஆத்திரத்திலும் செய்யப்படும் முடிவுகள், முடிவு செய்பவரை வீழ்த்தும்.

நம் நாட்டின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் இளைஞர்களின் கனவிலும் நினைவிலும்

  • திரைப்படமும்
  • விளையாட்டும்
  • அரசியலும் முன்னுரிமை பெற்று அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன.

முன்னுரிமை பெற வேண்டிய

  • கல்வி,
  • குடும்பம்,
  • சேவை மனப்பான்மை ஆகியன பின்னுக்குப் போயிருப்பது மிகக் கவலை தரத்தக்க நிலவரம். இந்நிலை இளைஞர்களிடையே உருவாவதற்கு அவர்கள் மட்டும் காரணர் அல்லர். அவர்களை வழிநடத்தத் தவறிய அனைத்துத் தரப்பினரும் பெரும் காரணர்.

குறிப்பாகக் கடந்த அறுபது ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் உணர்வை மையப்படுத்தி நடைபெற்றுவரும் அரசியல் சூதாட்டங்களும் கல்வி நிறுவனங்களை வியாபார நிறுவனங்களாக நடத்தி வருவோரின் சேவை நோக்கமின்மையும் இளைஞர்களைச் சரியான குடிமக்களாக உருவாக்கத் தவறிய ஆசிரியர்களும் சுட்டிக்காட்டத் தக்கவர்கள் ஆவார்கள்.

தொண்டாகச் செய்யப்பட வேண்டியவை தொழிலாகக் கருதப்பட்டமையால், கவனமின்மையும் சேவை மனப்பான்மைக் குறைவும் இளைய தலைமுறையைத் திசைமாறச் செய்துவிட்டன. இதயத்தைவிட, வயிறு பெரிது என்றும் வயிற்றை விட, வசதி பெரிது என்றும் பிழையான மனப்போக்கில் நம் இளைஞர்கள் முக்கியத்துவங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். இது தவறு என்பது வெளிப்படை.

திரை, விளையாட்டு, அரசியல் என்ற மூன்று துறைகளிலும் தொழில் நடத்துவோரின் நோக்கம் பொதுநலம் அன்று, சமுதாய நோக்கம் அன்று, நாட்டு நலமும் அன்று. தம் வருவாய், வசதி, வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கங்கள்.

எனவேதான் நம் முன்னோரின் முன்னுரிமைகளும் முக்கியத்துவங்களும் வேறு வரிசையில் இருந்தன.

அக்பருக்கு அருகில் இருந்த பீர்பால் மிகச் சிறந்த பண்பும் அறிவும் உடைய அமைச்சராவார். மௌரிய அரசரை வெற்றிகொள்ள வைத்த சாணக்கியர், மிகச்சிறந்த ஞானதந்திரி ஆவார்.

நம் பழைய காலத் தமிழ் மன்னர்களின் வரலாற்றைப் பாருங்கள். பாரி மன்னனுக்கு அருகிலிருந்தவர் கபிலர் என்ற தன்னலம் மறுத்த புலவர்! அதியமானுக்கு அருகில் இருந்தவர் அவ்வை என்ற தலைசிறந்த கவிஞர்! பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அருகிலிருந்தவர் மாங்குடி மருதன் என்ற பெரும்புலவர்! சேரன் செங்குட்டுவனுக்கு அருகிலிருந்தவர் சீத்தலைச் சாத்தனார் என்ற சான்றோர்! அரசர்களுடன் அறிவு நலம் வாய்ந்த பண்பாளரும் புலமை வாய்ந்தவரும் நெருங்கியிருந்தனர்.

அரசர்கள் தவறு செய்ய நேரும்போது தட்டிக்கேட்பதும் இடித்துரைப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தன.

அரசு ஆட்சி முடிவுக்கு வந்து, குடியரசு ஆட்சி அறிமுகம் ஆனவுடன் நல்லவர்கள் ஒதுங்கத் தொடங்கினார்கள்.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபொழுது, ஆளும்பொறுப்பு எதுவும் வேண்டா என்று ஒதுங்கியிருந்த மகாத்மா காந்தி, இங்கே சுட்டத்தக்கவர். அவரைப்போலவே, ஆரவார அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி, பூதானத் தொண்டாற்றிய வினோபா பாவே நினைத்துப் பார்க்க வேண்டியவர். சோஷலிச வாதியாக இருந்த ஜயப்பிரகாச நாராயணன் தகுதி பல இருந்தும் பொறுப்புகள் எதுவும் வேண்டா என்று விலகியிருந்தார்.

இவ்வாறு பதவிகளைவிட்டு விலகி, பொதுச்சேவையையே முன்னிறுத்தி வாழ்ந்த இவர்களால் இந்தியாவில் அழிக்க முடியாத சாதனைகள் நிகழ்ந்தன.

காலப்போக்கில் நல்லோர் ஒதுங்குவதைப் பயன்கொண்டு, வாக்கு வேட்டையை மையப்படுத்திக் குறிப்பாகத் தமிழ்நாட்டில்

  • திரைத்துறையும் அதன்பின்பு
  • சாதிய வாதமும் முன்னிறுத்தப்பட்டன.

இன்று, இந்த இரண்டுமே தமிழ்நாட்டு அரசியலையும் நிகழ்காலத்தையும் தீர்மானிக்கும் சக்திகள் ஆகிவிட்டன.

எந்த உணர்ச்சி மோகத்திலிருந்தும் சாதி வெறியிலிருந்தும் விடுபடவும் விலகவும் விரும்பினோமோ அதே சிறைகளில் நாம் சிக்கிக் கொண்டோம்.

இதிலிருந்து மீளுவதுபற்றி மிகக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். இவற்றால் வசதியும் வாழ்வும் பெற்றவர்கள், இளைஞர்கள் விழித்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதனால்தான் உணர்ச்சிப் போதையை ஊட்டி, அதிலேயே மயக்குறுத்தும் சின்னத்திரை, பெரியதிரை ஆசையையும் விளையாட்டு மோகத்தையும் அரசியல் காழ்ப்பையும் திட்டமிட்டு விதைக்கின்றனர்; வளர்க்கின்றனர்.

இத்தகு நிகழ்வுகள் சுயநலவாதிகளால் வளர்க்கப்படும்போது எச்சரிக்கையாக இளைஞர்கள் இருந்தமையையும் விழிப்புள்ள பத்திரிகையாளர்களும் சான்றோர்களும் கவனமாகக் கருத்துடன் இருந்தமையையும் வெளிநாட்டு வரலாறுகள் நமக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அப் பாடங்களை நாமும் நம் இளைஞர்களும் படித்துக் கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும்.

நாம் கொடுத்துவரும் முக்கியத்துவங்களின் வரிசை மாற வேண்டும். அவ்வரிசை, பின்வருமாறு அமையலாம். முதலாவது பொதுச்சேவை, இரண்டாவதுதான், தன் குடும்பம் முதலான இன்னபிற என மையப்படுத்தி நம்மை உணர்ச்சிப்போதையில் அழுத்திவரும் பொழுதுபோக்குச் சாதனங்களைப் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும்.

ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானியப் பயணங்களின்பொழுது நான் அந்நாட்டு மக்களின் சிறந்த பண்பாட்டைக் கவனித்திருக்கிறேன்.

விளையாடும்பொழுது முழு ஈடுபாட்டுடன் விளையாடு, வேலைசெய்யும்போது முழு ஈடுபாட்டுடன் வேலை செய் என்பதே அவர்களிடையே எழுதப்படாத சட்டமாக முழு மனதுடன் பின்பற்றப்படுகிறது. அவர்களது அபார வளர்ச்சிக்கு இந்த மனப்போக்கே காரணம்.

அவர்கள் இல்லங்களுக்குச் செல்லும்போது நான் கவனித்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகள் மெல்லிய ஒலியுடன் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், அவர்கள் தங்கள் கடமைகளைத் தவறாமல் செய்துகொண்டே இயங்குவார்கள்.

விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், இலக்கை நோக்கி அவர்கள் உறுதியாகத் தம் பயணத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மேல் அதிகாரிகளின் அதட்டல், மேற்பார்வை எதுவுமே இல்லாமல் தாமாகவே உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பார்கள்.

வெள்ளி மாலை ஆனவுடன் கார்களில் மனைவி, குழந்தைகளுடன் அருகில் உள்ள ஊருக்குச் சென்று விடுதிகளில் தங்கி மகிழ்வார்கள். திங்கள்கிழமை அவர்களின் கடமை தொடங்கிவிடும்.

முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அவர்களிடையே தெளிவு இருக்கிறது. தீர்மானம் இருக்கிறது. பல வகைகளில் அயல்நாட்டாரைப் பின்பற்றும் நாம் அவர்களது கடமை உணர்வையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in Analysis, Attitude, Backgrounder, Benefit, Cinema, Cricket, Education, Emotion, Emotional, Entertainment, EQ, family, Impact, Importance, Important, Insights, Intelligence, IQ, Movies, Politics, service, Society, solutions, Sports, TV, Values, Young, Youth | Leave a Comment »

65 Year old Youth imbibes invigorating new spirit among Village Youth

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).

இதில் என்ன இருக்கிறது? என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.

ஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுகளுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.

சண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.

“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.

இத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.

Posted in Action, Bicycle, Bike, Books, Bookseller, City, Doer, Gandhi, Good, Great, Icon, Inspiration, Jobs, Leader, Mahathama Gandi, Mahatma, MK Gandhi, Motivation, Old, Shanmugavel, Suburban, True, unemployment, Village, Words, Young | Leave a Comment »

Kasthuriraja’s ‘Ithu Kaathal Varum Paruvam’ should be banned from public screening due to Sexy Scenes

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

“இது காதல் வரும் பருவம்’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 10: “இது காதல் வரும் பருவம்’ என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். படத்தின் சுவரொட்டிகள் எரிக்கப்பட்டன.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான “இது காதல் வரும் பருவம்’ படத்தில் நடிகை கிரண் மற்றும் புதுமுக நடிகர், நடிகையர் நடித்துள்ளனர். இப் படத்தில் வரும் காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும், மாணவ, மாணவியரிடையே தவறான போக்கை உருவாக்கும் எனக்கூறியும் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், அப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாநகரத் தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்கச் செயலர் ஞானசெüந்தரி, சிஐடியூ மாவட்ட துணைச் செயலர் ராஜ், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் அசோகன், இளைஞர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாரதிகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Posted in Ban, Extramarital, Flesh, Glamor, Intercourse, Ithu Kathal varum Paruvam, Kasthoori raja, Kasthuri Raja, Pictures, Relationships, Salem, Sex, Tamil Cinema, Tamil Movie, Young, Youth | Leave a Comment »

MySpace Generation – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இளையவர்களின் இணைய சாதனை!

ஆர்.வெங்கடேஷ்

கனவுகள் கோலம் போடும் காலம் ஒன்று உண்டென்றால், அது டீன்ஏஜ் பருவம்தான். நமக்குத் தெரிந்த அத்தனை சாகசங்களையும் செய்து காட்டி, மிரட்டிவிட வேண்டும் என்ற உற்சாகம் கொப்பளிப்பதும் அப்போதுதான்.

எதற்கு இப்படி ஓர் இளமைப் பிரசங்கம் என்று கேட்கிறீர்களா? விஷயத்துக்கு வருகிறேன்…

இன்றைக்கு இணைய உலகத்தையே கலக்கிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? இளைஞர்கள்தான்! ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ போன்ற பெரிய பிஸ்தா வலைதளங்களையே பின்னால் தள்ளிவிடும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருப்பது, இளைஞர்களின் வலைதளங்கள் தான். இதுநாள்வரை இருந்த பார்வையையே புரட்டிப் போட்டுவிடும் வளர்ச்சி இது.

‘மைஸ்பேஸ் டாட் காம்’… (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.விஹ்ஷிஜீணீநீமீ.நீஷீனீ) இதுதான் இன்றைய இளைஞர்களின் சரணாலயம். கொஞ்சம் இந்த விவரங்களைப் பாருங்கள்… இதுவரை இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொண்டவர்கள் ஒன்பதரை கோடி பேர். ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சம் புது பயனர்கள் இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொள்கிறார்கள். அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆங்கில மொழி வலைதளங்களில், ‘மைஸ்பேஸ்’ வலைதளத்துக்கு நான்காவது இடம். அதுவும் எத்தனை ஆண்டுகளில்… மூன்றே ஆண்டுகளில்! 2003&ல்தான் இந்த வலைதளமே உருவாக்கப்பட்டது. பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கொட்டை போட்ட சர்வீஸ்காரர்களான ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ வலைதளங்களுக்கே இன்னும் கொஞ்சம் மாதங்களில் பெப்பே காட்டிவிட்டு ‘மைஸ்பேஸ்’ முதலிடத்தைப் பிடித்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதையெல்லாம் விட ஆச்சர்யம், சென்ற வாரம் ‘யாஹ¨’ நிறுவனம் 2006&ல் தனது காலாண்டு வருமானத்தை வெளியிட்டது. அதன் வருமானத்தில் சரிவு. நிபுணர்கள் சொல்லும் ஒரு காரணம் என்ன தெரியுமா? ‘மைஸ்பேஸி’ன் அபாரமான வளர்ச்சி திக்குமுக்காட வைக்கிறது என்பதுதான்.

‘மைஸ்பேஸி’ல் அப்படி என்ன இருக்கிறது? மிகவும் எளிமையான ஒரு கருத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட வலைதளம் அது. நட்பு மற்றும் தொடர்புகளைப் பேணுதல், வளர்த்தல், மேம்படுத்துதல் என்பவைதான் அதன் நோக்கம். இதுபோன்ற தொடர்புகளைப் பேணும், வளர்க்கும் வலைதளங்களுக்கு ‘சமூக வலைப்பின்னல் வலைதளங்கள்’ (ஷிஷீநீவீணீறீ ழிமீtஷ்ஷீக்ஷீளீவீஸீரீ ஷிவீtமீs) என்று பெயர்.

‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பது ஒன்றும் புதிய கருத்து இல்லை. சொல்லப்போனால் ‘ஜியோசிட்டீஸ் டாட் காம்’, ‘ஏஞ்சல்பையர் டாட் காம்’ போன்ற வலைதளங்கள் இந்த வேலையைத்தான் செய்தன. ஒவ்வொருவரும் தமக்கான ஒரு வலைப்பக்கத்தை இலவசமாக வடிவமைத்துக் கொள்ளவும், நண்பர்களிடையே அதைப் பரிமாறிக்கொள்ளவுமே அந்த வலைதளங்கள் உருவாயின. இன்று ‘மைஸ்பேஸ§’ம் அதையேதான் செய்கிறது. ஆனால், இன்னும் மேம்பட்டதாக, உபரி வசதிகளுடன்.

இணையத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு போக்கு இருந்து வருகிறது. அதாவது ஒரு பதிப்பாளர் இருப்பார். அவர்தான் எல்லாவற்றையும் சொல்வார். செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் என்று எல்லாமே ஒரே திசையில் இருந்து வாசகர்களான உங்களை நோக்கியே வரும். வாசகர்கள் வெறுமனே பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

இணையம் என்பது இருவழித் தொடர்புக்கான மீடியா. அதில், ‘நான் மட்டுமே பேசிக்கொண்டே இருப்பேன். நீ கேட்க வேண்டும்’ என்ற சங்கதியே உதவாது. சொல்லப்போனால், அது ஒரு அராஜகம் என்று வெகுண்டெழுந்தவர்கள் பலர். அவர்கள்தான் இணையத்தின் சாத்தியத்தை மேம்படுத்தியவர்கள். இன்று நாம் சொல்லும் வலைப்பதிவுகள், விவாத அரங்கம், உடனடி தூதுவன் (மிஸீstணீஸீt விமீssமீஸீரீமீக்ஷீ) எல்லாமே இதுபோன்ற ஜனநாயகவாதிகளின் கைவண்ணம். இளைஞர்களுக்கும் இந்த ஜனநாயகம்தானே வேண்டும்! இந்த பரிமாற்றம்தானே வேண்டும்!

‘மைஸ்பேஸ்’ செய்த முதல் வேலை, இணையத்தில் சாத்தியமாக உள்ள அத்தனை இன்டர்ஆக்டிவிட்டியையும் ஒரே இடத்தில் குவித்தது. நீங்கள் ஒருமுறை ‘மைஸ்பேஸி’ல் பதிவுசெய்து கொண்டால் போதும். உடனே உங்களுக்கு ஒரு இ&மெயில் ஐடி கிடைக்கும். கூடவே, நீங்கள் வலைப்பதிவுகள் தொடங்கி உங்கள் எண்ணங்களை எழுதலாம், பாட்டுக்களைப் பதிவு செய்து ஒலிபரப்பலாம், வீடியோ காட்சிகளை இணைக்கலாம். அதோடு, உங்களுக்கு விருப்பமான நண்பர்களை உங்கள் வலைஇல்லத்துக்கு அழைத்து வந்து காட்டலாம். அவர்களுடைய கருத்துக் களை அங்கேயே எழுதச் சொல்லலாம். பின்னர் அவர்களோடு தூதுவன் மூலம் பேசி உரையாடலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த நண்பர்களின் ‘மைஸ்பேஸ் வலைஇல்லங்களை உங்களுடைய இல்லத்தோடு இணைக்கலாம். நண்பர்களோடு குழுத் தொடங்கி, உரையாடலாம்.

ஓர் இளைஞனுக்கு வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்! அப்படியே ஆணி அடித்தாற்போல், ‘மைஸ்பேஸோ’டு கட்டுண்டு கிடக்கிறான் ஆன்லைன் இளைஞன். தனக்கு விருப்பமான குழுவோடு இணைந்துகொண்டு, தனக்குப் பிடித்த நண்பர்களோடு அளவளாவிக் கொண்டு, தனக்குப் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு, தான் பார்த்து ரசித்த வீடியோ காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, வெளியுலகில் அவன் செய்த அனைத்தையும் ஆன்லைனிலும் செய்ய… சைட் சூப்பர்ஹிட்!

இதன் இன்னொரு வளர்ச்சிதான் இன்னும் சூப்பர். என் வலை இல்லத்தின் முகப்பு எனக்குப் பிடித்த மாதிரி இல்லையே? மாற்றிக்கொள்ளலாமா? தாராளமாக. இது உங்கள் வீடு எனும்போது, அது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டியது அவசியம் அல்லவா…. அப்புறமென்ன? இணையத்தில் இன்றைக்கு எண்ணற்ற மாடல் டெம்பிளேட்டுகள் கிடைக்கின்றன. அதை அப்படியே சுட்டுவந்து, தன் வலைஇல்ல முகப்பையே மாற்றி அமைத்துக்கொள்கிறான்.

இதெல்லாம் செய்தபின், உங்கள் விருப்பமான நண்பர்களிடம் காட்ட வேண்டுமல்லவா? அவர்களை அழைத்து வருவதையும் நீங்களே செய்யுங்கள். தெருமுனையில் உருவான நட்புவட்டம், இப்போது அப்படியே ஆன்லைனுக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

இன்றைக்கு ‘மைஸ்பேஸ்’ மூலம் பல இசைக்குழுக்கள் புகழ்பெற்றுவிட்டன. பல அழகிகள் உருவாகிவிட்டார்கள். பல்துறைப் பிரபலங்கள் உருவாகிவிட்டார்கள். தங்களை ‘மைஸ்பேஸ்’ புகழ் பிரபலங்கள் என்று பறைசாற்றிக்கொள்வதில் அவர்களுக்கு எல்லாம் அளவில்லா மகிழ்ச்சி.

வளர்ச்சி என்றால், உங்கள் வீட்டு, எங்கள் வீட்டு வளர்ச்சி இல்லை. அசுரத்தனமான வளர்ச்சி. விளைவு, Ôஸ்டார் டி.வி.Õ அதிபர் ரூபர்ட் முர்டாக்குக்கு மூக்கு வியர்த்துவிட்டது. சர்வதேச மீடியா சக்ரவர்த்தியான முர்டாக், நல்லதொரு முகூர்த்த நாளில், வெற்றிலை பாக்கோடு, 580 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ‘மைஸ்பேஸ்’ வலைதளத்தை வாங்கிவிட்டார். சட்டென அப்போதுதான் சர்வதேச சந்தை தலையை உதறிக்கொண்டு விழித்துக்கொண்டது.

அதுவரை இணையம் என்றால் போணியாகாது, இனி கடையைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒரு வினாடி நின்று நிதானமாகப் பார்த்தார்கள். தங்கள் மூக்குக் கீழேயே ஒரு அபாரமான வாய்ப்பு, திமுதிமுவென வளர்ந்து நிற்பதைப் பார்த்தார்கள். ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பதன் உண்மையான வீச்சை அப்போதுதான் உணர்ந்துகொண்டார்கள்.

இன்றைக்கு ‘மைஸ் பேஸி’ன் வளர்ச்சி புதிய பரிமாணங்களைப் பெற்றி ருக்கிறது. வேலைக்கு ஆள் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் போய்த் தேடு. புதிய எழுத் தாளன் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் தேடு. புதிய இசையமைப்பாளன் வேண் டுமா? ‘மைஸ்பேஸி’ல் எட்டிப் பார். கண்ணுக்கு அழகான நடிகை வேண்டுமா? ‘மைஸ் பேஸ§’க்கு ஒரு விசிட் அடி. இளைஞர்களின் கூட்டம் அங்கேதான் மொய்க் கிறது. எந்தத் திறமை வேண்டு மானாலும் அங்கேதான் கொட்டிக் கிடக்கிறது.

நல்லது இருந்தால், கூடவே கொஞ்சம் கெட்டதும் இருக்கத்தானே வேண்டும்! ‘மைஸ்பேஸ்’ பற்றிய விமர்சனங்களில் முக்கியமானது, டீன்ஏஜ் பார்ட்டிகள் கெட்டுப் போகிறார்கள். சகவாசம் கெட்டுப் போகிறது என்று குமுறும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இன்னொரு குற்றச்சாட்டு, நட்பு என்று உருவாகி பின்னர் பாலியல் பலாத்காரம் வரை போய்விடுவதாகச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி ‘மைஸ்பேஸி’ல் திமுதிமுவென இளைஞர் கூட்டம் சேர்ந்துகொண்டே இருக்கிறது!

Posted in Blogdom, Blogworld, Bookmarks, myspace, Networking, R Venkatesh, Social, Tamil, Vikadan, Young, Youth | Leave a Comment »