Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Statements’ Category

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Kalainjar Mu Karunanidhi – DMK Rule and achievements: Party Conference in Nellai

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

அவர்கள்: கருணாநிதி காட்டம்

Friday, 23 November , 2007, 12:49

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா?

நேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா?

அது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை?

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.

மேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா?

இது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா?

ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா?

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா?.

1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா?

10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா?.

1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா?

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா? மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை? இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான்! அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

இளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.

அதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம்! எங்கும் சமதர்ம சங்க நாதம்! தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு! ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல்! சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்!.

பட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு! சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தி எதிர்ப்பு! சிறைச்சாலை! தாளமுத்து நடராஜன் களப்பலி! தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு! மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி! ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம்! – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா? 84 வயதில்? இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது! நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான்! பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது!

1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார்! என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு! நல் – எண்ணங்களை எங்கணும் நடு! எனத் தீட்டிடுக! தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.

மாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.

மாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது! மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Achievements, Agriculture, Commodity, Conference, DMK, Elections, Farmers, Farming, Freebie, infrastructure, investments, Justifications, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Laments, Loans, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, Marriages, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Stalin, Nellai, News, Party, peasants, Politics, Polls, Poor, Prices, Reports, rice, Rule, Sops, Statements, Thirunelveli, TIDCO, Tirunelveli, TV, Villages, Votes, Weddings, Welfare | Leave a Comment »

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »

Income Tax Introduction series in Dinamani : NV Balaji

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வருமான வரி

என்.வி. பாலாஜி

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (பகுதி-2)

அடுத்ததாக லாபத்தைக் கணக்கிடுவதற்காக அனுமதிக்கப்படும் கழிவுகளை பற்றி காணலாம்.

1. வணிகம், தொழிலுக்காக பயன்படுத்தப்படும் இடத்திற்கான வாடகை, பராமரிப்புச் செலவுகள், வரிகள் மற்றும் இதர செலவுகள்.

2. தொழில் செய்யும் இடம், அதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள், வணிகப் பொருட்கள், இதர பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகை.

3. தேய்மானம் – கருவியையோ, கட்டடத்தையோ உபயோகிப்பதால் அதன் மதிப்பு குறைகிறது. அதற்காகவே தேய்மானம் அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் தேய்மானத்தின் அளவு, சொத்துக்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாக கணக்கிடப்படுகிறது. இந்த சதவிகிதம் வருமான வரி துறையினரால் கொடுக்கப்படும். ஒரு சொத்தின் உரிமையாளரே தேய்மான செலவை கோர முடியும்.

ஒரு இயந்திரத்தை வருடத்தில் 180 நாட்களுக்கு குறைவாக பயன்படுத்தி இருந்தால், 50 சதவீத தேய்மானம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு வருடத்தில் ஒரு சொத்தை விற்றிருந்தால் அந்த வருடத்திற்கான அந்த சொத்திற்கான தேய்மானத்தை கோர இயலாது.

4. ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஊக்கத் தொகை மற்றும் இதர வேலையாட்களுக்கான செலவுகள்.

5. தொழில் நடத்துவதற்காக வாங்கப்பட்ட கடனுக்குண்டான வட்டித்தொகை. (கவனிக்க:) கடன் வங்கியிலிருந்தோ, இதர நிதி நிறுவனங்களிலிருந்தோ வாங்கப்பட்டிருக்கும் நிலையில், வட்டி ஐப தங்ற்ன்ழ்ய் தாக்கல் செய்யும் முன்னரே கட்டப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

6. வாராக் கடன் (இந்த கழிவு பின் வரும் காலங்களில் வசூலிக்கப்பட அந்த ஆண்டிற்கான வருமானமாகக் கருதப்படும்).

7. முழுமையாக வணிகம், தொழில் நடத்துவதற்காக செலவிடப்படும் இதர தொகைகள், அந்த செலவு மூலதன செலவாகவோ, தொழில் நடத்துபவரின் தனிப்பட்ட செலவாகவோ இருக்கக் கூடாது.

ஒரு கட்டடத்தில் ஒரு பகுதி தொழிலுக்காகவும், மற்றொரு பகுதி சொந்த பயனுக்காவும் உபயோகிக்கப்பட்டிருந்தால், தொழில் நடத்தப்படும் இடத்திற்கான சதவிகிதத்திற்கு மட்டும் கழிவு அனுமதிக்கப்படும்.

வட்டி, ஒப்பந்ததாரருக்கான பணம், தொழிலில் செய்பவருக்காக செலுத்தப்பட வேண்டிய பணம், தரகு ஆகியவற்றிற்கு வரி பிடிப்பிற்கு பிறகே (பஈந) கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த செலவு அனுமதிக்கப்படும் செலவாக கருதப்படாது. அதே போல் பிடிக்கப்படும் வரி, அதற்குரிய காலத்திற்குள் வங்கியில் கட்டப்பட வேண்டும். இல்லை எனில் அந்த செலவு அனுமதிக்கப்படாது.

இத்தகைய அனுமதிக்கப்படாத செலவுகளுக்கு, பின்வரும் காலங்களில் வரி பிடித்துக் கட்டினால், அந்த வருடத்தில் வணிக செலவாக அனுமதிக்கப்படும்.

வரி பிடிக்கவேண்டிய செலவுகள், பிடிப்பு சதவிகிதம், பிடித்த வரியை செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகியவற்றை பின்வரும் நாட்களில் காணலாம்.

வருமான வரி, சொத்து வரி, இதர வரிகள் மற்றும் வரிகளை உரிய நேரத்தில் கட்ட தவறியதற்காக கட்டிய வட்டி ஆகியவை வணிக செலவாக கருதப்படமாட்டாது.

வணிகரின் சொந்தக்காரர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கோ, இதர சேவைகளுக்காகவோ, அளவுக்கு அதிகமாக செலவிட்டிருந்தால் வருமான வரி ஆய்வாளரின் உரிமையைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 20% வரை கழிவு அனுமதிக்கப்படமாட்டாது. இந்த சதவிகிதம் தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 100% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு வணிக, தொழில் செலவிற்காகவும் ரூ.20,000-த்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தப்பட கூடாது. அவை ‘அ/இ டஹஹ்ங்ங்’ காசோலை அல்லது ‘அ/இ டஹஹ்ங்ங்’ வரைவோலை மூலமாகவோ மட்டுமே செலுத்தப்படவேண்டும். அப்படி செய்யத் தவறினால், 20 சதவீதச் செலவு வணிகச் செலவாகக் கருதப்பட மாட்டாது.

அடுத்த ஆண்டில் இருந்து இந்த 20 சதவீதம் மாற்றப்பட்டு, மொத்தச் செலவும் வணிகச் செலவாகக் கருதாமல் இருக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி ஏனைய வருமானங்கள்

“சம்பள வருமானம்’, “வீட்டு வருமானம்’, “வியாபாரம், தொழில் வருமானம்’, “மூலதன லாபம்’ ஆகிய தலைப்புகளில் விடுபட்ட வருமானங்கள் “ஏனைய வருமானங்கள்’ என்கிற தலைப்பில் கணக்கிடப்படும்.

இதில் முக்கியமாக கருதப்படுவதான சில:

1. லாப பங்கு ( Dividend), வங்கியிலிருந்து பெறும் வட்டி.

2. குலுக்கல், குறுக்கெழுத்து, குதிரை பந்தயம் போன்றவற்றால் ஈட்டும் வருமானம்.

3. “வியாபாரம், தொழில் வருமானம்’ என்ற தலைப்பில் வரிக்கு உட்படாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (எ.கா.)

(ண்) பங்கு வட்டி,

(ண்ண்) சொத்துக்களை, குத்தகைக்கு, வாடகைக்கு கொடுப்பதால் பெறும் வருமானம்.

(ண்ண்ண்) ரூ.50,000-க்கு மேல் பணமாக பெறும் அன்பளிப்பு. உறவினர்களிடம் இருந்தோ, கல்யாணத்தின் பொழுது, உயில் மூலமாகவோ பெறும் பணம் வரிக்கு உகந்தவை. உறவினர் – தம்பதி, அண்ணன், தங்கை, தம்பதியின் அண்ணன், தங்கை, பெற்றோரின் அண்ணன், தங்கை மற்றும் சிலர்.

(ண்ஸ்) Keyman Insurance Policy எனும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெறப்படும் இழப்பீடு.

“ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கணக்கிடும் வருமானம், கீழ்க்காணும் செலவுகளை கழித்தபின் வருபவை ஆகும்.

1. லாபப் பங்கு பெறுவதற்குண்டான தரகுச் செலவு.

2. தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக, தொழிலாளர்களின் பங்கு.

3. இயந்திரச் சாதனம், கட்டடம் போன்ற சொத்துக்களை வாடகை, குத்தகையில் விடும்போது, அதன் பழுதுபார்க்கும் செலவு, மதிப்புக் கழிவீடு, தேய்மானம், காப்பீட்டு உபரித் தொகை.

4. குடும்ப ஓய்வூதியம் – ரூ.15,000 (அல்லது) அந்த வருமானத்தில் 1/3 பங்கு (இவ்விரண்டில் குறைந்த செலவு).

5. வருமானம் ஈட்ட வேறெந்த செலவும், பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* வருவாய் ஈட்டுவதற்காகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* மூலதன செலவாக இருத்தல் கூடாது.

* வரி செலுத்துபவரின் சொந்த செலவாக இருத்தல் கூடாது.

* நடப்பாண்டில் செலவிட்டு இருத்தல் வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தில், “ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கீழ்வரும் செலவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

(ண்) வட்டி, சம்பளம் முதலியன இந்திய நாட்டிற்கு வெளியே செலவு செய்யும் போது, வருமான வரியை பிடிக்காமல் செலவு செய்தல்.

(ண்ண்) சொத்து வரி.

(ண்ண்ண்) குலுக்கல், குறுக்கெழுத்து, சூதாட்டம் போன்றவற்றிற்குண்டான செலவுகள்.

(ண்ஸ்) வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பக் கட்டணம், உற்பத்தி உரிமம் ஈட்டுவதற்கு செய்யும் செலவுகள்.

என்.வி. பாலாஜி ( nvbalaji@karra.in)

வருமான வரி நஷ்டம்

இந்திய வருமான வரி சட்டத்தின் கீழ் லாபத்திற்கு வரியுண்டு. நஷ்டம் வந்தால் வரி கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நஷ்டத்தை லாபத்தில் இருந்து கழித்து பெறும் தொகைக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். இவற்றை இன்று காண்போம்.

வருமான வரி சட்டத்தின் 5 பிரிவுகளில் சம்பளத்தை தவிர மற்ற பிரிவுகளில் இருந்து நஷ்டம் பெற அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நஷ்டத்தை அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்ல வாய்ப்புள்ளது.

நஷ்டத்தை கீழ்வருமாறு லாபத்திலிருந்து கழிக்கலாம்.

1. இந்த வருடம் ஒரு பிரிவில் வரும் நஷ்டத்தை இந்த வருடமே கழிக்கலாம்.

2. அப்படி அந்த வருடம் கழிக்க இயலாவிடில் அதை அடுத்த வருடங்களுக்கு எடுத்து சென்று லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

சம்பளம்:

இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதேபோல் எந்த ஒரு நஷ்டத்தையும் இதற்கு எதிராக கழிக்க இயலாது.

வீட்டு வாடகை வருமானம்:

இந்த தலைப்பின் கீழ் வரும் நஷ்டத்தை அதே வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்தும் கழிக்கலாம். இப்படி கழிக்க இயலாவிடில் அதனை அடுத்த 8 வருடங்களுக்கு எடுத்து சென்று அந்த வருடங்களில் வரும் வீட்டு வாடகை லாபத்திலிருந்து கழிக்கலாம்.

தொழில், வணிகம்:

இந்தப் பிரிவின் கீழ் வரும் நஷ்டத்தை சம்பளத்தை தவிர அந்த வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்து கழிக்கலாம். இவ்வாறு கழிக்க இயலவில்லையெனில் அதை அடுத்த 8 வருடங்களுக்குள் இதே பிரிவின் கீழ் வரும் லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த பிரிவின் தேய்மான நஷ்டத்தை எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லாம். இந்த நஷ்டத்தை எந்தப் பிரிவின் லாபத்திலும் கழிக்கலாம்.

குறுகிய கால மூலதன நஷ்டம்:

இதனை குறுகிய, நீண்ட கால மூலதன லாபத்தில் கழித்துக் கொள்ளலாம் (அதே ஆண்டோ, இயலாவிட்டால் 8 ஆண்டுக்குள்ளோ).

குறிப்பு:

மேற்கூறிய நஷ்டங்களை, அடுத்த வருடங்களுக்கு எடுத்துச் சென்று கழிக்க வேண்டுமெனில், நஷ்டம் ஏற்பட்ட வருடத்திற்கான வருமான வரி படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.

என்.வி. பாலாஜி

=====================================================

வருமான வரி – வருமானத்தில் கழிவுகள்

கடந்த சில நாள்களாக எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும் என பார்த்தோம். அத்துடன் பிறர்க்கு கிடைக்கும் வருமானம் எப்போது மற்றவரின் வருமானத்தோடு இணைக்கப்படும் என்பதனையும் பார்த்தோம். மேற்கூறிய அனைத்தையும் கூட்டினால் ஒருவருடைய மொத்த ஆண்டு வருமானம் ( எழ்ர்ள்ள் பர்ற்ஹப் ஐய்ஸ்ரீர்ம்ங்) கிடைக்கும். இந்த மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகளை இன்று பார்ப்போம்.

ஒரு தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பம் ஒரு நிதியாண்டில் செய்யும் கீழ்க்கண்ட முதலீடுகள் கழிவாக கிடைக்கும்.

-ஆயுள் காப்பீட்டு சந்தா

– டழ்ர்ஸ்ண்க்ங்ய்ற் ஊன்ய்க்

-ஓய்வூதியம் பெறுவதற்காக செலுத்தும் தொகை

– எழ்ஹற்ன்ண்ற்ஹ் ஊன்ய்க்

– அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஙன்ற்ன்ஹப் ஊன்ய்க்

-வீட்டுக்கடன் மீது திருப்பி செலுத்திய முதல்

-தன் குழந்தைகள் (அதிகபட்சமாக 2) மற்றும் தன்னை சார்ந்துள்ளவர்களுக்காக செலுத்திய கல்வி கட்டணம்

-குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீடு

-அரசு வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்யும் நிரந்தர வைப்புத்தொகை மற்றும் சில முதலீடுகள்

(காப்பீட்டு நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஓய்வூதிய நிதிக்கு செலுத்தும் ஆண்டு தொகைக்கு, இந்து கூட்டு குடும்பத்திற்கு கழிவு கிடையாது. தனிநபர் ஓய்வூதிய நிதிக்காக செலுத்தும் தொகைக்கு கழிவு உண்டு.)

மேற்கூறிய கழிவுகள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே அளிக்கப்படும்.

-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகை, ரூ.10,000 வரை (அடுத்த நிதியாண்டில் இருந்து ரூ.15,000 வரை) கழிவாக கிடைக்கும்.

முதியோருக்காக செலுத்தும் பட்சத்தில் ரூ.15,000 வரை (அடுத்த நிதியாண்டு முதல் ரூ.20,000 வரை) கழிவாக கிடைக்கும்.

-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர் சில குறிப்பிட்ட உடல் ஊனம் உள்ளவராயின் அவர் மருத்துவ செலவு அல்லது காப்பீட்டு தொகை செலுத்தும் பட்சத்தில் ரூ.50,000 கழிவாக கிடைக்கும்.

-மேலும் 2006 – 07-ம் நிதியாண்டில் தனக்காக வாங்கிய கல்விக்கடன், 2007 – 08-ம் நிதியாண்டு முதல் தனக்காக, தன் துணைவருக்காக, துணைவியருக்காக மற்றும் பிள்ளைகள் கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பணம், கழிவாக ரூ.40,000 வரை கிடைக்கும்.

வரி செலுத்துபவர் (நிறுவனம் உள்பட) கொடுக்கும் நன்கொடைக்கு கீழ்கண்டபடி கழிவு கிடைக்கும்.

-மத்திய, மாநில அரசு நிறுவிய மக்கள் உதவிக்கான நிதி – 100%

-மத்திய, மாநில அரசு நிறுவிய ஏனைய நிதிகள் – 50%

-பிற தொண்டு நிறுவனங்கள் – 50% (நிபந்தனைக்குட்பட்டு)

சம்பளம் பெறாத மற்ற தனிநபர் வரி செலுத்துவோராயின் வீட்டு வாடகை செலுத்துபவரானால் அவ்வாடகை சில நிபந்தனைக்கு உட்பட்டு கழிவுகள் கிடைக்கும்.

தொழில், வணிகத்தில் இருந்து வருமானம் இல்லாதவராயின் அறிவியல் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் முதலியவற்றிற்கு நிதியாண்டில் கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு உண்டு.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு கிடைக்கும்.

ஒரு தனிநபர் ஊனமுற்றவராயிருப்பின் அல்லது மன வளம் குன்றியவராக இருந்தால் சில நிபந்தனைக்குள்பட்டு ரூ.50,000 கழிவு பெறலாம். அதுவே தீவிரமாக இருப்பின் ரூ.75,000 கழிவு பெறலாம். இக்கழிவு பெற அரசு மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் வருமான வரி படிவத்துடன் சமர்பிக்கப்பட வேண்டும்.

என்.வி. பாலாஜி

========================================================

வருமான வரி – அறக்கட்டளையின் வருமானம்

என்.வி. பாலாஜி

அறக்கட்டளை என்பது ஒருவரது நம்பிக்கையால் உருவாவது ஆகும். அதன் நோக்கம் பலருக்கும் நன்மை பயக்குவதாக அமைய வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்து அல்லது நம்பிக்கையை பிரகடனப்படுத்தி, அறக்கட்டளையை துவக்குபவரே “நிறுவனர்’ எனவும்; அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்பவரே “தர்மகர்த்தா’ எனவும்; பயனடைவோர் “மானியம் பெறுவோர்’ எனவும் கருதப்படுவர்.

அறக்கட்டளையின் வருமானம், வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். அவை பின்வருமாறு:

1. வருமானத்தை ஈட்ட உதவும் “உடைமை’ நம்பிக்கையில் அல்லது சட்டத்தின் கட்டாயத்தில் இருக்க வேண்டும்.

2. “உடைமை’ தர்மச் செயல்களுக்காகவோ (அல்லது) மதங்களின் தொண்டுச் செயல்களுக்காகவோ இருத்தல் வேண்டும்.

3. ஒரு அறக்கட்டளை, குறிப்பிட்ட மதத்திற்கோ, இனத்திற்கோ பயனளிக்கும் வகையில் உருவாக்கப்படக் கூடாது.

4. அறக்கட்டளையின் வருமானத்தில், ஒரு பங்கு கூட நிறுவனரையோ (அல்லது) அவரைச் சார்ந்த சிலரையோ சென்றடையக் கூடாது.

5. அறக்கட்டளையை துவக்க வருமானவரி ஆணையரிடம், நிறுவனர் விண்ணப்பிக்க வேண்டும்.

6. வருமானம் ரூ.50,000-க்கு மேல் சென்றால், அறக்கட்டளை கணக்குகள் “ஆய்வுக்கு’ ( அன்க்ண்ற்) உட்படுத்தப்படவேண்டும்.

7. அறக்கட்டளையின் தர்ம ரீதியான அல்லது மத ரீதியாகச் செய்யப்பட்ட செலவுகளுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். ஒரு ஆண்டில் ஈட்டிய வருமானத்தில், குறைந்தது 85% மேற்கூறிய செயல்களுக்குச் செலவிட்டிருக்க வேண்டும்.

8. அப்படி செலவிடாத பட்சத்தில், 85%-க்கு குறைவாக இருக்கும் தொகையினை 5 ஆண்டுக்குள் செலவிட வேண்டும்.

9. அறக்கட்டளையின் நிதிகளை, குறிப்பிட்டச் சில முறைகளில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும்.

வருமான வரி ஆணையரிடம் பதிவு:

படிவம் 10 அ, என்ற படிவத்தில், அறக்கட்டளை, அதன் பெயர், முகவரி, குறிக்கோள் போன்றவற்றை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை அறக்கட்டளை தொடங்கிய ஒரு வருடத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இது செய்யாத பட்சத்தில் வரி விலக்கு நிராகரிக்கப்படும். எனினும், விண்ணப்பத்தின் தாமதத்திற்கு கூறப்படும் காரணங்கள் ஆணையத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருந்தால், ஆணையர் தாமதத்தை மன்னிக்கலாம். தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இதில் சில மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருமான வரி ஆணையரால் தாமதத்தை மன்னிக்க இயலாது. மற்றும் அறக்கட்டளையின் பதிவை விண்ணப்பித்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து வழங்க முடியும். (1.7.2007 முதல் அமலுக்கு வரும்).

ஒரு வருமான வரித்துறை ஆணையர் அறக்கட்டளையின் விண்ணப்பத்தை ரத்து செய்தால் இதுவரை அதனை மேல் முறையீடு செய்ய முடியாது. ஆனால் 1.7.2007 முதல் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும்.

ஆணையர், ஒரு அறக்கட்டளையின் நோக்கம், கோட்பாடு ஆகியவற்றை ஆராய்ந்தபின், அவை சரியாக இருக்கும்பட்சத்தில், “பதிவுச் சான்றிதழ்’ வழங்குவார். விண்ணப்பத்தை நிராகரித்தாரேயானால், அதன் காரணத்தை ஆறு மாதத்திற்குள் கூற வேண்டும். இல்லையேல், பதிவு ஆகிவிட்டதாகக் கொள்ளலாம்.

ஒரு வேளை, அறக்கட்டளையின் பணிகள், அறக்கட்டளை உருவாக்கிய நோக்கங்களுக்கு மாறாக இருக்கிறது என ஆணையர் நம்பினால், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தையோ அல்லது பதிவையோ ரத்து செய்வதற்கு முன், விண்ணப்பதாரர், தான் நினைப்பதை வெளிப்படுத்த, ஆணையர் வாய்ப்பளிக்க வேண்டும்.

======================================

வருமான வரி – வரி பிடித்தம்

எந்த வகை வருமானமாக இருப்பினும் அதில் 1%-ஐ செலுத்துபவர் வரியாக பிடித்த பின்னரே செலுத்த வேண்டும் என்பது சட்டம். இதனால் வருமான வரி ஏய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகின்றது. இந்த சட்டம் எவருக்கெல்லாம் பொருந்தும், ஒவ்வொரு வகை வருமானத்துக்கும் பிடிப்பு சதவிகிதம் என்ன என்பதை காண்போம்.

சம்பளம்:

ஒருவரின் சம்பளம் குறைந்தபட்ச வரிக்கு உட்படாத அளவை தாண்டினால், அவர் செலுத்த வேண்டிய வரியை பணியில் அமர்த்தியவர் சம்பளத்திலிருந்து பிடித்து அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.

வட்டி:

ஒருவருக்கு வங்கிகள், நிறுவனங்களிலுள்ள சேமிப்பிலிருந்து வரும் வட்டி ரூ.5,000-க்கு மேல் இருந்தால் வரிபிடித்தம் செய்யப்படும். இந்த வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி பிடிப்பு விகிதம்:

தனிநபர் – 10%

நிறுவனம் – 20%

ஒப்பந்தம்:

இந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் – 40 லட்சம்) தவிர மற்றவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தினால் வரி பிடிக்கவேண்டும். குறைந்தபட்ச வரம்பு ரூ.20,000.

வரி பிடிப்பு விழுக்காடு:

விளம்பர ஒப்பந்தங்கள் – 1%

மற்றவை – 2%

தரகு:

இந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் எவருக்காவது தரகு செலுத்தினால் (வருடத்திற்கு ரூ.2,500-க்கு மேல்) அதிலிருந்து 5% வரி பிடித்தம் செய்ய வேண்டும்.

வாடகை:

இதனை 2 ஆக பிரிக்கலாம். 1. வீட்டு வாடகை, 2. வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை.

இந்து கூட்டுக் குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் வாடகை செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.1,20,000 மேல்) வரி பிடிக்க வேண்டும்.

வரி பிடிப்பு சதவிகிதம் கீழ்வருமாறு:

1. தனிநபர், இந்து கூட்டு குடும்பம், கூட்டாண்மை முதலியவற்றிற்கு 15% ஆகும்.

2. மற்றவைகளுக்கு 20% ஆகும்.

தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை வரி பிடிப்பு விகிதம் 15% மற்றும் 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Professional Services:

இந்து கூட்டு குடும்பம், தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் இதற்கான பணம் செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.20,000 மேல்) 5% வரியாக பிடிக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் இது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக பிடிக்கப்பட்ட வரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் (மே மாதம் பிடித்ததில் இருந்து ஜூன் 7-க்குள்) வங்கியில் அரசாங்க கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு பிடித்த வரிக்கான படிவத்தை ஒவ்வொரு காலாண்டும் அரசாங்கத்திடம் மின் அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.

உரிய வரி பிடித்தம் செய்யாவிடின் மேற்கூறிய அனைத்திற்கும் வியாபார செலவாக கழிக்க இயலாது.

பிடித்த வரியை செலுத்த தாமதம் ஏற்படின் மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டும். இதை தவிர வருமான வரித்துறை அதிகாரிக்கு வரி பணத்திற்கு மிகாமல் Penalty்ங்ய்ஹப்ற்ஹ் செலுத்தவைக்க அதிகாரம் உண்டு.

என்.வி. பாலாஜி

===========================================================

வருமான வரி – சம்மன் மற்றும் சர்வே

என்.வி. பாலாஜி

வரி செலுத்துபவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவது அல்லது அவர்கள் தொழில் நடத்தும் இடத்திற்கு சென்று சர்வே நடத்துவது போன்றவற்றை வருமான வரித்துறையால் செய்ய இயலும். ஒருவருக்கு சம்மன் கொடுத்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு நேரில் ஆஜராக சொல்லி, அவரிடம் இருந்து தேவையான விவரங்களை வருமான வரித்துறை பெறலாம். அவ்வாறு நேரில் வருபவரிடம் பிரமாணத்தை கொண்டு வாக்குமூலம் பெறலாம்.

இந்த தகவல் பெறும் உரிமையின் மூலம் வருமான வரித்துறை ஒரு கூட்டாண்மை நிறுவனத்திடமிருந்து பங்குதாரர்களின் விவரங்கள், இந்து கூட்டு குடும்பத்திடம் இருந்து அதன் உறுப்பினர்களின் விவரங்கள், ஒரு டிரஸ்டி அல்லது ஏஜெண்ட் என்று வருமான வரித்துறையால் நம்பப்படும் நபரிடமிருந்து அவர் யாருக்கான ஏஜெண்ட் என்ற தகவல், ரூ.1,000 மேல் வாடகை வட்டி, தரகு, ராயல்டி போன்றவற்றை வரி செலுத்துபவரிடமிருந்து பெற்ற விவரம், பங்குதாரர்களிடமிருந்து அவர்களுடைய வாடிக்கையாளர் விவரம் போன்றவற்றை வருமான வரித்துறையால் பெற முடியும். இதே போல் ஒரு வங்கி அல்லது அதன் அதிகாரிகளிடமிருந்தும் எந்த விசாரணைக்கும் தேவையான அல்லது உபயோகமுள்ள தகவலை பெற வருமான வரித்துறைக்கு அதிகாரமுண்டு. தகவல் கோரப்பட்ட நபர் அதை கொடுப்பவருக்கு கடமைப்பட்டவர் ஆவார்.

வருமான வரித்துறையால் தன்னுடைய அதிகாரிக்குட்பட்ட எல்லையில் தொழில் செய்து வரும் நபரின் இடத்திற்குச் சென்றும் விசாரணை நடத்த முடியும். அப்படி துறை அதிகாரிகள் தொழில் செய்வோர் இடத்திற்கு நேரில் வரும் போது, தொழில் அதிபர் அல்லது அவருடைய தொழிலாளி அல்லது அந்நேரத்தில் அத்தொழிலை கவனித்துக் கொண்டிருக்கும் நபர் துறை அதிகாரிகளுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர் ஆவார்.

அதிகாரிகளுக்கு தேவைப்பட்ட கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள் போன்றவற்றை பார்வையிட எடுத்துக் கொடுத்தல், பணம் மற்றும் சரக்கு முதலியவற்றை சரிபார்க்க தேவையானவை அல்லது அதிகாரி கோரும் எந்த ஒரு தகவலையும் மேற்கூறிய நபர்கள் செய்ய வேண்டும். இக்குறிப்பிட்ட தகவல்களை, தொழில் நடத்துபவர் வேறொரு இடத்தில் இருப்பினும் அளித்தல் அவசியம்.

அதிகாரிகள் ஒரு வணிகரின் இடத்திற்கு சாதாரணமாக அவர் வியாபாரம் நடத்தும் நேரத்திற்குள்ளாகவே செல்ல இயலும். வேறொரு இடமாயின் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் பின் செல்ல இயலும். மற்ற நேரங்களில் செல்ல இயலாது. அதிகாரிகள் தான் பார்வையிட்ட புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் சான்றாக ஒப்பமிடுதலையோ அல்லது சிறுகுறிப்பையோ நகலாக எடுத்து செல்ல முடியும். அதிகபட்சமாக 10 நாட்களுக்கு (விடுமுறை நாள்கள் தவிர) தான் பார்வையிட்ட கணக்கு புத்தகங்களை மற்றும் பதிவேடுகளை தன் வசம் வைத்துக் கொள்ளும் அதிகாரம் உண்டு. தான் பார்வையிட்ட சரக்கு மற்றும் ரொக்கம் முதலியவற்றின் விவரங்களை எழுதிக் கொள்ளவும், அங்குள்ள எந்த நபரிடமும் வாக்குமூலம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் சரக்கு மற்றும் விலையுயர்ந்த பொருள்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல அதிகாரம் கிடையாது.

சர்வேயின் போது மேற்கூறிய தகவல்களை ஒரு நபர் அளிக்க தவறினால் அவரை தன்னுடைய அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக கோரி தகவல்களை பெறவும் முடியும்.

இதில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக தவறினால் நபருக்கு ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இதேபோல் திருமணம் மற்றும் விசேஷங்களில், திருமணம், விசேஷம் முடிந்த பிறகு, அந்த விசேஷத்திற்கு செலவு செய்த ஒருவரிடமிருந்தோ, செலவு சம்பந்தமான தகவல் தெரிந்த ஒருவரிடமிருந்தோ தேவைப்பட்ட தகவல்களை பெற அதிகாரியால் பெற முடியும். அந்நபரிடமிருந்து வாக்குமூலத்தையும் பெற முடியும்.

இப்படி பலவகைகளில் பெறப்பட்ட தகவல்களை சான்றுகளாக கொண்டு வரி செலுத்துபவரின் வருமானம் அவரால் சரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை துறை நிர்ணயம் செய்ய இயலும். இப்படி பெறப்பட்ட தகவல்கள் பொதுவாக ரகசியம் காக்கப்பட்ட ஆவணமானாலும் வருமான வரி சட்டத்திற்குள்பட்ட வருமான வரித்துறை வேறு துறைகளிடம் பகிர்ந்து கொள்ள இயலும். இத்தகவல் வரி செலுத்துபவருக்கு எதிராக பயன்படுத்தபடுமாயின், வரி செலுத்துவோருக்கு அதை மறுப்பதற்கான வாய்ப்பும், வரி நிர்ணயிக்கும் முன் அளிக்கப்படும்.

வருமான வரி -இறுதி தேதி

கடந்த சில நாள்களாக வருமான வரி பற்றிய அடிப்படைச் செய்திகள், வருமான வரிச் சட்டம் உருவான விதம், எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும், மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகள், அறக்கட்டளை வருமானம் மற்றும் அதற்குரிய வரி விலக்கு, வருமான வரி பிடித்தம், வருமான வரி சம்மன் மற்றும் சர்வே, தகவல் பெற வருமான வரித்துறை அதிகாரிக்குள்ள உரிமைகள் பற்றி பார்த்தோம். வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி மார்ச் 31-ம் தேதி. அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள், நலத் திட்டங்களாக மீண்டும் மக்களையே வந்தடைகின்றன. மேலும் அரசு எந்திரம் இயங்குவதற்கு வரி வருவாய் முதுகெலும்பு போன்றதாகும். எனவே அனைவரும் தவறாது வரி செலுத்துவது ஒரு வகையில் நாட்டு நலனுக்கு நாம் செய்யும் பங்களிப்பாகும்.

Posted in Amortization, AMT, Analysis, Assets, Backgrounder, Budget, Business, Capital, Defaltion, Deflation, Depreciation, Dividend, Economics, Education, Expenses, Explanation, Finance, Income Tax, Inflation, Inspection, Introduction, IT, Liabilities, Loans, Long term, Loss, markets, Mortgage, Primer, Profits, Recession, Revenues, Shares, Short term gains, Statements, Stocks, Tax | Leave a Comment »

‘ADMK will not accept party-hoppers’ – Jayalalitha

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006

கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஏற்க மாட்டோம்: ஜெயலலிதா

சென்னை, டிச. 1: கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை கூறினார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

மணமக்கள் உருவாக்கி இருக்கும் இந்தக் கூட்டணியின் மூலம் மணமகன் தன்னுடைய குடும்பப் பொறுப்பில் மணமகளுக்கு உரிய பங்கைத் தர வேண்டும். கட்டாயம் அவர் தருவார் என்று நம்புகிறேன். மணமகள், “நான் என்ன சாமியார் மடமா நடத்துகிறேன்?’ என்று கேட்கும் விதமாக மணமகன் நடந்துகொள்ள மாட்டார் என்று எண்ணுகிறேன்.

நம்முடைய இடத்தை நம்மிடம் இருந்து யாரும் பறித்துவிட முடியாது; களவாடி விடவும் முடியாது. ஏனென்றால் பொன்னான எதிர்காலம் நமக்குச் சொந்தமானது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்று கருதலாம். அது வெற்றி அல்ல; பொய்யான தோற்றம். ஜனநாயகத்தின் படுதோல்வியாகும். மக்கள் நம் மீதுதான் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

தேர்தலில் கட்சிக்கு செயற்கையான, தாற்காலிகமான பின்னடைவு ஏற்பட்டதால் சில வேடந்தாங்கல் பறவைகள் வழக்கம் போல் இடம் மாறி வேறு திசை நோக்கிப் பறந்துள்ளன. எப்போதும் போல் அவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். இதே வேடந்தாங்கல் பறவைகள் 1996-ல் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது இதைப் போலவே தப்புக் கணக்குப் போட்டன. “இந்த அம்மாவின் கதை முடிந்தது; அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லை’ என்று தப்புக் கணக்குப் போட்டு, வேறு எங்கேயோ பறந்து சென்றுவிட்டன.

அந்தத் துரோகத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றோம். அப்போது அமைந்த மத்திய அரசில் இடத்தைப் பிடித்தோம்.

அப்போதே நம்மை விட்டுப் பறந்து போயிருந்த வேடந்தாங்கல் பறவைகள் பல திரும்பி வந்தன. தாய்ப் பறவையைப் போல் அவர்களை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டேன்.

பின்னர் 2001-ல் மீண்டும் என் தலைமையில் ஆட்சி அமைந்தது. இன்னும் பல வேடந்தாங்கல் பறவைகள் அப்போது திரும்பி வந்து, தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்தன. மறுபடியும் அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டேன்.

ஆனால், தற்போது 2006-ல் பின்னடைவைச் சந்தித்ததும் மீண்டும் அதே வேடந்தாங்கல் பறவைகள் சில தங்கள் புத்தியைக் காட்டி, கூட்டைவிட்டு வேறு இடம் தேடி பறந்து போயுள்ளன. அவர்கள் திருந்தவில்லை; வழக்கம் போல் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

காலம் மாறும். மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். தேசிய அளவிலும் மத்திய அரசில் கட்சி பெரும் பங்கு வகிக்கும்.

அப்போது இந்த வேடந்தாங்கல் பறவைகள் திரும்பி வந்தால், மறுபடியும் மன்னிக்க மாட்டோம்; மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார் ஜெயலலிதா.

Posted in ADMK, AIADMK, Anita Radhakrishnan, Anitha Radhakrishnan, Comedy, Fun, Jayalalitha, Politics, Statements | Leave a Comment »