Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Congress Party’ Category

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

What is behind DMK’s war of words with Congress? – Dinamani ‘Ajathasathru’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கருணாநிதி கோபப்படுவது ஏன்?

 அஜாத சத்ரு

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.

“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி?” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன்? அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே! இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார்? இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி?” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்?” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.

காங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை?

காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.

காங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால்? அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்?

கருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா?

Posted in Ajathasathru, Alliance, Andhra, Andhrapradesh, AP, Arunkumar, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Dismiss, DK, DMDK, DMK, Govt, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Modi, Sonia, support, Veeramani, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

NREGA – National Rural Employment Gurantee Act: Job Guarantee Schemes – Corruption

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வீணாகும் வரிப்பணம்

மக்களின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்தி நிறைவேற்றப்படும் நல்ல திட்டங்கள் பல, ஒரு சிலரின் சுயநலத்தைப் பூர்த்தி செய்வதற்கும், அரசுப் பணத்தை இந்தத் திட்டங்களின் பெயரால் கொள்ளையடிப்பதற்கும்தான் பயன்படுகின்றன என்பதை சுதந்திர இந்தியா பலமுறை பார்த்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் திட்டம்தான் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கை, காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னம் என்பதை உறுதிப்படுத்தும் திட்டம் என்றும் புகழப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு வழிவகுத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக இந்தத் திட்டம் எதற்காக, யாருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவர்களைப்போய் சேராமல், தேசிய அளவில் அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில அரசியல்வாதிகள் பயன்பட உதவி இருப்பதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்தியாவின் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. இந்தத் திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் வேலையில்லாத எந்தவொரு குடும்பமும் ஆண்டில் நூறு நாள்கள் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெறும் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் கிராமப்புறத்திலுள்ள அத்தனை வேலையில்லாத குடும்பங்களுக்கும் ஆண்டொன்றுக்கு குறைந்தது 8,000 ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் லட்சியம்.

உன்னதமான லட்சியத்தாலும், கிராமப்புற மக்களுக்குக் “கை’ கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்திருக்கிறது தேசிய தணிக்கை அறிக்கை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் மிக அதிகமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. பிப்ரவரி 2006 முதல் மார்ச் 2007 வரையிலான 14 மாதங்களில், வெறும் 18 நாள்கள்தான் சராசரியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்திற்குத் தரப்பட்ட சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ. 1,500 தான் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

முறையான ரசீது மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல லட்சம் ரூபாய்கள் இந்தத் திட்டத்தின் பெயரால் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஹரியாணாவில் இத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வேலையே நடைபெறாமல் செலவுக் கணக்குகள் மட்டும் எழுதப்பட்ட இடங்கள் ஏராளம்.

மத்தியப் பிரதேசத்தில், பதிவேடுகள் எழுதப்படுவதற்கு முன்பே ஓரிடத்தில் ரூ. 10.68 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், வேலை கோரிய 40,587 குடும்பங்களுக்கு வேலை தரப்படவோ, ஊதியம் தரப்படவோ இல்லை. ஆனால், கணக்கு மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதச் சிக்கலுமே இல்லை. இங்கே வேலையில்லாதவர்களே கிராமப்புறங்களில் இல்லை என்று அரசு தெரிவித்து, யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தணிக்கை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

இதுபோன்ற நல்ல திட்டங்கள் பல மத்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மத்தியிலிருந்து கிடைக்கும் பணம் என்றாலே, கேள்வி கேட்க ஆளில்லாத அனாமத்து நிதியாதாரம் என்றுதான் மாநில ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கருதுகிறார்கள். விளைவு? இந்தத் திட்டங்களின் பயன் பொதுமக்களைச் சென்று சேராமல், இடைத்தரகர்களின் கஜானாக்களை நிரப்புகிறது.

முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், அகில இந்திய ரீதியில் மத்திய அரசின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, கிராமப்புற மக்களின் அவலமும் வறுமையும் சற்று குறைந்திருக்கும். சென்செக்ஸ் உயரவோ குறையவோ செய்யாது எனும்போது, அதைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை?

Posted in abuse, assurance, Bribery, Bribes, Budget, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Employment, Govt, Guarantee, Gurantee, Haryana, households, job, kickbacks, Madhya Pradesh, MP, National, NREGA, Poor, Power, Rural, Schemes, Village, Women, Work | Leave a Comment »

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

Is educational credential required for people’s representatives? – D Purushothaman

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!

டி. புருஷோத்தமன்

எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.

பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.

மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.

கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.

குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!

பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.

துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.

அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Posted in Bengal, Bihar, BJP, BSP, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Citizen, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), credentials, Education, Election, eligibility, Gujarat, Haryana, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kerala, Lalloo, Laloo, Lalu, maharashtra, MLA, MP, people, Polls, Purushothaman, Qualifications, Requirements, RJD, Shiv Sena, Shivsena, Teachers, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Votes, WB, West Bengal, Yadav | Leave a Comment »

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

Row over Priyanka Vadra’s friend getting ‘ultra-special’ profs quarters – Jawaharlal Nehru University

Posted by Snapjudge மேல் திசெம்பர் 20, 2007

தவறான முன்னுதாரணம்!

பெரிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அதனால்தான், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்கிற பழமொழி வழக்கில் இருக்கிறது. மகாத்மா காந்தி உலகுக்கு வாழ்ந்து காட்டிய பாதை அதுதான். அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்களே அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, பொதுவாழ்வு எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முக்கியமான தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நேரு குடும்பத்தைப்போல, மிக அதிகமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரப்படுவது அவசியம்தான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேள்விப்படும்போது, பாதுகாப்பை விலக்கினால்கூடத் தவறில்லையோ என்று தோன்றுகிறது.

புதுதில்லியைப் பொருத்தவரை, ஏ.கே. 47 ஏந்திய காவலர்களுடன் பவனி வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக, வேண்டுமென்றே போலி அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாதுகாப்புப் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, தலைநகர் தில்லியில் மட்டும் பாதுகாப்புத் தரப்படும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 391. இதற்காக சுமார் 7000 சிறப்புக் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சில அரசியல் தலைவர்கள் நடத்தும் விதம், நாகரிக சமுதாயத்துக்கே ஒவ்வாதது என்று தகவல். தகுதி இல்லாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பாதுகாப்புக் கொடுப்பதுதான் அத்தனை கேலிக்கூத்துகளுக்கும் காரணம். ஆட்சிகள் மாறுகிறதே தவிர, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த தெளிவான அணுகுமுறை இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

சமீபத்தில் இன்னொரு சம்பவம். இந்தப் பிரச்னையில் சிக்கி இருப்பது பிரதமரின் அலுவலகம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சராசரி விரிவுரையாளருக்கு, அனுபவமிக்க பேராசிரியருக்குத் தரப்படும் இருப்பிடம் வரம்புகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது.

பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து ஒரு சாதாரண விரிவுரையாளருக்கு சிறப்பு இருப்பிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால்? பிரியங்காவின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் அலுவலகம் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு செய்த ஏற்பாடுதான் இது!

அத்துடன் நின்றதா விஷயம் என்றால், அதுவும் இல்லை. அந்த விரிவுரையாளருக்குத் தரப்பட்டிருக்கும் பங்களா துணைவேந்தரின் பங்களாவுக்கு நிகராக எல்லா விதத்திலும் செப்பனிடப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. எதற்காக? எப்போதாவது தனது தோழியைச் சந்திக்கப் பிரியங்கா வதேரா வருவார் என்பதற்காக!

பெரிய இடத்துத் தொடர்புகள் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது உதாரணமா, இல்லை நமது அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டா, இல்லை பிரதமர் அலுவலகம் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு மாதிரியா என்று தெரியவில்லை.

இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்துக்குப் பிரதமர் அலுவலகமே ஆட்படும்போது, நமது மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும், அதிகார துஷ்பிரயோகத்திற்கான “கின்னஸ்’ சாதனையே படைத்து விடுவார்கள் என்று நம்பலாம். வாழ்க, இந்திய ஜனநாயகம்!

Posted in Arun, Arun Singh, ArunSingh, Bhattacharya, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Education, Gandhi, Gandi, JNU, PMO, Priyanga, Priyanka, Professors, Protection, Security, Sonia, University, Vadhra, Vadra, Vathra, Z | Leave a Comment »

‘Indo-US accord on Nuclear deal is a must for growth’ – DMK chief Karunanidhi’s daughter Kanimozhi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை!: கனிமொழி

புதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.

கனிமொழி பேசியதாவது:

இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.

இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

சிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.

நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.

அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.

சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

நான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.

உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொருளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.

இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.

Posted in 123, Accord, America, Atom, Atomic, BJP, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), daughter, deal, DMK, Electricity, Growth, Indo-US, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Nuclear, Power, US, USA | 1 Comment »

Telugu Actor Chiranjeevi to launch new political party in Andhra Pradesh

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007


நடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவில் பெரும் பரபரப்பு

நகரி, டிச.5-

நடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கம்ïனிஸ்டு தலைவர்கள்

ஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.

எனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மைத்துனர் ஆர்வம்

புதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


முந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”

2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”

3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”

4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Chanthirababu, Chanthirababu Naidu, Chanthrababu, Chanthrababu Naidu, Cinema, CM, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Eenadu, Election, Films, Media, MGR, Movies, MSM, Muslim, Naidu, Nayudu, NTR, Party, Pavan, Pavan kalyan, Pawan, Polls, Reddy, Roja, Sun, Superstar, TDP, Telugu, Telugu Desam, Tollywood, TV, voters, Votes | Leave a Comment »

Taslima Nasreen Security – West Bengal & Calcutta – Islam & Bangladesh: The great Indian dilemma

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007 


புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு

தஸ்லிமா நஸ்ரின்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய
‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.

“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.

தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.


நானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா

கோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

தில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.

பேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும்? யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.

விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.

“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

கோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா? என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.

1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

———————————————————————————————————————————————————————–

தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.

மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:

மத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.

இத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.

———————————————————————————————————————————————————————–

“விரும்பிதான் வெளியேறினார்’

கோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

கோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

———————————————————————————————————————————————————————–
தஸ்லிமாவை கைகழுவியது மார்க்சிஸ்ட்

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.

மேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.

“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.

“இந்தியாவில் தஸ்லிமா தங்கியிருக்கலாமா? வேண்டாமா? அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா? கூடாதா? என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.

மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.

தஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.

“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

நஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா? என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.

தஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.

தஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன? என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.

ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை? என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.

நந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.

———————————————————————————————————————————————————————–

Posted in Asylum, Bangladesh, Bengal, BJP, Books, Calcutta, Citizen, Communalism, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dilemma, expression, Faces, fanaticism, Fathva, Fathwa, Fatva, Fatwa, Females, Freedom, Fundamentalists, Govt, Gujarat, Hussain, Hussein, Immigrants, India, Islam, Kolkata, Lajja, Left, Life, Literature, MF Hussain, minority, Modi, Muslim, Narendra Modi, Nasreen, Nasrin, Outcast, people, Refugee, RSS, Rushdie, Salman, Secular, Security, Sensation, She, Taslima, Thoughts, UPA, Voices, WB, West Bengal, Women | Leave a Comment »

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

Posted in Arms, Assassin, Assassination, Assassinations, Belief, Biosketch, Bloc, Brahmins, Caste, Chandrabose, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Convict, Correctional, Courts, Dalit, dead, Emmanuel, employees, Faces, Faith, FB, FC, Forward Bloc, Forward Block, Freedom, Gandhi, Harijans, Hinduism, Hindutva, History, Immanuel, Independence, Jail, Jameen, Judge, Justice, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthik, Law, Madurai, Muthuramalinga, Muthuramalingam, Nethaji, Oppression, Order, people, Prisons, Rajaji, Religion, Sathiamoorthy, Sathiamurthy, Sathiyamoorthy, Sathiyamurthy, Shubash, Subash, Temple, Thevar, War, Weapons, workers | 142 Comments »

Diplomatic tangle over Dalai Lama: Ministers absent at “Peace Pilgrim Award”, instituted by the Gandhi Foundation USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

தன்னம்பிக்கை இல்லாத அரசு!

ஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.

ஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.

பண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

உலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.

சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

உணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா?

Posted in Affairs, Alliance, America, Asean, Asia, BJP, Burma, China, Coalition, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dalai, Dalai Lama, Dalailama, Economy, Exports, Gandhi, Gandhi Peace Foundation, Govt, Imports, Myanmar, Nehru, PAK, Pakistan, Panchasheel, Peace, PM, Relations, Russia, SAARC, Sri lanka, Srilanka, Thalailama, Tibet, US, USA, World | Leave a Comment »