Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM
Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007
தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு
ஐதராபாத், ஜன. 29-
LIGHTS, CAMERA, ACTION: Chief Minister Y.S. Rajasekhara Reddy sounds the clapper board to launch the celebrations of the platinum jubilee of the Telugu film industry. Also seen are (L-R) film actor Krishna, his wife Vijayanirmala, Union Minister Dasa ri Narayana Rao, Finance Minister K. Rosaiah, Information Minister Mohd Ali Shabbir, film actor Mohan Babu, producer Seshagiri Rao.— Photo: Mohd. Yousuf
தெலுங்கு பட உலகின் 75-ம் ஆண்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி ராஜ சேகர ரெட்டி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார்.
விழாவில்
- தாசரி நாராயணராவ்,
- அஞ்சலிதேவி,
- சிரஞ்சீவி ஆகியோருக்கு சாதனை யாளர் விருதுகள் வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தாசரி நாராயணராவ் மேடைக்கு சென்று விருதை பெற்றார். சிரஞ்சீவிக்கு விருது கொடுக்கும் முன் நடிகர் மோகன்பாபுவை பேச அழைத்தனர். அவருக்கு பிரபலமானவர் என்ற விருதை அளித்தனர். அவ்விருதை பெற மோகன்பாபு மறுத்து விட்டார்.
விழாவில் மோகன்பாபு ஆவேசமாக பேசியதாவது:-
எனக்கு சாதளையாளர் விருது தராதது துரதிர்ஷ்டவசமானது. நான் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளேன். மேல்- சபை எம்.பி. பதவி வகித்துள்ளேன். சாதி மதத்துக்கு அப்பாற் பட்டு பள்ளிக்கூடம் நடத்துகி றேன். அந்த பள்ளியில் ஏழைகளுக்கு 25 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கிறேன். 510 படங்களில் நடித்து இருக்கி றேன். 49 படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் “சாதனையாளன்” கிடையாதா? எனக்கு ஏன் அந்த விருதை தரவில்லை.
விஜயநிர்மலா பெண் இயக்குனர். அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. கிரிபாபு நடிகராக, இயக்குனராக தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை இவ்விழாவுக்கு அழைக்க வில்லை. தெலுங்கு பட உலகம் இரண்டு, மூன்று பேருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நினைக்கிறார்கள்.
இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் இறங்கிவிட்டார்.
இதையடுத்து சிரஞ்சீவி பேசியதாவது:-
நாமெல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறோம். நம் ஆரம்ப காலத்தையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் மறக்க கூடாது. ஏழைகளாக இருந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கர்வம், அகந்தை இருக்ககூடாது.
சினிமா ஒரு குடும்பம். நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அதை திரைக்கு பின்னால்தான் பேச வேண்டும். எல்லோருக்கும் தெரியுற மாதிரி பேசி அவமானப்படுத்தக்கூடாது. நாம் சண்டை போடுவது வெளியே தெரியக்கூடாது.
கோவா பட விழாவில் என்.டி.ஆர். படம் வைக்கவில்லை. மும்பை, டெல்லி, கோவா வரை நம்மால் போக முடியவில்லை. சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததுதான்.
ஒரு திருமணத்துக்கு போய் இருந்தேன். தாலி கட்டுவதை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டேன். மற்றவர்கள் சந்தோஷம்தான் முக்கியம்.
நான் வயதில் சிறியவன், வெங்கடேஷ், நாகார்ஜுனா என் வயதில் உள்ளவர்கள். அவர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. சாதனையாளர் விருதுக்கு நான் தகுதி இல்லை. 100-வது நாள் பட விழா நடக்கும்போது நான் திரையுலகில் இருப்பேன். அப்போது விருதை வாங்கி கொள்கிறேன்.
இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் சென்று விட்டார்.
Telugu Actor Chiranjeevi to launch new political party in Andhra Pradesh « Tamil News said
[…] முந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress …: “தெலுங்கு பட விழாவில் நடிகர் […]