Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

‘Thisai Ettum’ awards Translators & Nalli Kuppusamy Birthday

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பத்து மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருது

சென்னை: நல்லி, “திசை எட்டும்’ எனும் காலாண்டு இதழ் இணைந்து நுõல் மொழி பெயர்ப்பாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. சென்னையில் நேற்று நடந்த இவ்விழாவில் துõர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார்.

“திசை எட்டும்’ இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் விருது பெறுபவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என் பது பற்றி பேசினார். விருதுகளை வழங்கி நல்லி குப்புசாமி பேசுகையில், “”பொது மக்கள் நுõல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளனர். மொழி பெயர்ப்பு நுõல்களை வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை நாம் செய்ய வேண்டும்,” என்றார்.

வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “” ரவீந்திர நாத் தாகூருக்குப் பிறகு நிறைய ஜாம்பவான்கள் வாழ்கின்றனர். அவர்களது இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். மொழி சிறந்த தொடர்பு சாதனம். நேரடி மொழி மாற்றம், இணையான மொழி மாற்றம், இருந்ததை புதிதாக சொல்லும் மொழி மாற்றம் என மூன்று வகைகளில் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மொழி பெயர்ப் பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நுõல் என்ற எண்ணம் படிக்கும் வாசகருக்கு வரக்கூடாது,” என்றார்.

சிறப்பு விருந்தினரான டி.ஜி.பி., ராஜேந் திரன் பேசுகையில், “”மொழி பெயர்ப்பாளருக்கு நல்லதொரு சிறப்பை செய்துள் ளீர்கள். இது மாதிரியான சேவைகளால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.

தமிழிலில் இருந்து பிறமொழி மற்றும் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்த தலா ஐந்து பேர் என பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.

  • ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பி.ராஜ்ஜா,
  • மலையாள மொழி பெயர்ப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும்
  • சரவணன்,
  • நிர்மால்யா,
  • இறையடியான்,
  • சாந்தா தத்,
  • புவனா நடராஜன்,
  • மந்திரி பிரகடசேஷாபாய்,
  • நவநீத் மத்ராசி,
  • பத்மாவதி

ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

விழா முடிவில் நல்லி குப்புசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். முன்னதாக சுதா ரகுநாதன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

2 பதில்கள் to “‘Thisai Ettum’ awards Translators & Nalli Kuppusamy Birthday”

  1. Ramasubbu said

    The great philanthropist Nalli celebrated his birthday among receipients of awards and the invitees. The function was grand but it could have been a little more organized. No one seems to have bothered to check whether the invitees have arrived. the souted over the audio system and called the publisher or the representatives to come to the stage. Instead someone could have checked for their presence.
    Even the chief guest walked in and sat quietly.
    More often nalli functions appear to be Annadhanam for the elite crowd of Chennai.

  2. bsubra said

    Thinnai: “திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா :: எஸ்ஸார்சி”

பின்னூட்டமொன்றை இடுக