Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Superstar’ Category

Telugu Actor Chiranjeevi to launch new political party in Andhra Pradesh

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007


நடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவில் பெரும் பரபரப்பு

நகரி, டிச.5-

நடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கம்ïனிஸ்டு தலைவர்கள்

ஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.

எனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மைத்துனர் ஆர்வம்

புதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


முந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”

2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”

3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”

4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Chanthirababu, Chanthirababu Naidu, Chanthrababu, Chanthrababu Naidu, Cinema, CM, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Eenadu, Election, Films, Media, MGR, Movies, MSM, Muslim, Naidu, Nayudu, NTR, Party, Pavan, Pavan kalyan, Pawan, Polls, Reddy, Roja, Sun, Superstar, TDP, Telugu, Telugu Desam, Tollywood, TV, voters, Votes | Leave a Comment »

Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு

பள்ளிப்பட்டு, ஜுன். 27-

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். இவரும் தெலுங்கில் முன் னணி நடிகராக உள் ளார். இவரது மனைவி லலிதா தேவி என்ற நந்தினி. இவர் விசாகப்பட்டினம் கோர்ட்டில் பவன்கல்யாண் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். அவர் கோர்ட்டில் அளித்த புகா ரில் பவன்கல்யாணுக்கும் எனக்கும் 1991ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந் தோம்.

அவருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடிகை ரேணுகாதேசாயுடன் தொடர்பு ஏற்பட்டது. பின் னர் ரேணுகாவை 2-வது திரு மணம் செய்து கொண்டார். இதன்பிறகு அவரது போக் கில் மாற்றம் ஏற்பட்டது. என் னிடம் அதிக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கு அவரது சகோதரர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, தம்பிநாகேந்திர பாபு, அவரது மனைவி பத்மஜா, சகோதரிகள் விஜயதுர்கா, மாதவி உள்ளிட்ட 16பேர் உடந் தையாக இருந்தனர்.

எனது கணவருடன் சேர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட அனைவரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே இவர்கள் மீது 494சட்டப்பிரிவு படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார்.

இதே போல நந்தினி விசா கப்பட்டினம் குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு தொடர்ந் துள்ளார். அதில் கணவர் பவன்கல்யாண் எனக்கு மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Posted in abuse, Actor, Actress, Affairs, Alimony, Andhra, Andhra Pradesh, AP, Bigamy, Chakradhar, Chiranchivi, Chiranjeevi, Chiranjivi, Cinema, Congress, Custody, Divorce, Dowry, Extramarital, family, Films, Gossip, Hyderabad, Kalyan, Kisu Kisu, Kisukisu, Lakshmi devi, Lakshmidevi, Lakshmy devi, Law, Laxmi devi, Laxmidevi, Madavi, Madhavi, Marital, Marriage, Mathavi, Movies, Nagendhirababu, Nagendhrababu, Nagendirababu, Nagendra Babu, Nagendrababu, Nagenthirababu, Nagenthrababu, Naidu, Nandhini, Nandhiny, Nayudu, Order, Padhmaja, Padmaja, Pathmaja, Pavan, Pavan kalyan, Pavankalyan, Pawan, Pawan kalyan, Pawankalyan, Rajini, Relations, Renu Desai, RenuDesai, Renugadesai, Renuka, Renuka desai, Renukadesai, Rich, Rumor, Rumour, Sirancheevi, Siranjeevi, Siranjivi, Superstar, Sureka, Surekha, Tollywood, Trash, Vambu, Vampu, Vijaiadurga, Vijayadurga, Vijayathurga, Vishagapatnam, Vishakapatnam, Vishakapattinam, Vizag, Wedding | Leave a Comment »

Rajini – ‘I thought Vivek was Brahmin!’

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

அறிவுக்கும் ஜாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “சொல்லி அடிப்பேன்‘ பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) இசையமைப்பாளர் தேவா, இயக்குநர்கள் ஷங்கர், கே.பாலசந்தர், ரஜினிகாந்த், நடிகர் விவேக், பட இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணன், நடிகை சாயாசிங், தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்

சென்னை, டிச. 3: ஒரு மனிதனுடைய அறிவுத் திறனுக்கும் அவருடைய ஜாதிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் “சொல்லி அடிப்பேன்’. இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையேற்ற இவ்விழாவில் படப் பாடலின் முதல் கேசட்டை இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதேபோல் முதல் ஆடியோ சி.டி.யை ரஜினிகாந்த் வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

நான் “சிவாஜி’ படம் ரிலீஸôன பிறகுதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் விவேக் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இவ்விழாவில் கலந்துகொண்டேன்.

ஜாதியும், அறிவுத்திறனும்:

விவேக் பெரிய அறிவாளி. அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. அனைத்துத் துறைகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். எனக்கு ஜாதி மீது என்றைக்கும் நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தால்தான் சொந்த ஜாதியினர்கூட மதிப்பார்கள். அதேபோல இந்த இந்த ஜாதிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. அது தவறு.

விவேக்கின் அறிவுத்திறன், செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் அவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அதனால் ஒருவருடைய அறிவுத் திறனுக்கும் அவர் சார்ந்திருக்கும் ஜாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

புகழ் ஒரு சுமை:

புகழ் என்பது நம்முடைய தலையில் வைக்கப்பட்டிருக்கும் 1000 கிலோ எடையுள்ள பாறை போன்றது. அதைச் சரியாக பேலன்ஸ் செய்தால்தான் நீடிக்கும். இல்லாவிட்டால் கீழே சரிந்து நமக்கு பாதிப்பை உண்டாக்கி விடும். அதை விவேக் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் காமெடியனாகவும் நடித்தால்தான் எங்கள் வண்டியும் ஓடும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், ஷங்கர், தரணி, ராம்கி ராமகிருஷ்ணன், நடிகர் தனுஷ், நடிகை சாயாசிங், இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் கிருஷ்ணகாந்த், கேயார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

From Maalaimalar.com:

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.

இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.

`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.

எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.

இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.

விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.

புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசியதாவது:-

விவேக்கை வைத்து காமெடி படம் எடுக்க நீண்ட நான் முயன்றேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சிவாஜியில் முழு நீள காமெடியனாக வருகிறார். காமெடியில் அவர் கலக்கி உள்ளார். அவரோடு இன் னொருத்தரும் காமெடியில் கலக்கி உள்ளார்.

அவர்தான் ரஜினி. சினிமாவுக்கு காமெடி முக்கியம். அது இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.

டைரக்டர் பாலசந்தர் பேசியதாவது:-

விவேக்கை முக்கிய கேரக்டராக வைத்து படமெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் `சொல்லி அடிப்பேன்’ படத்தில் கதாநாயகனாகி விட்டார். ஹீரோ ஆனதால் காலரை தூக்கி விட்டுக் கொண்டு போகக்கூடாது. எல்லாவற்றையும் சமமாக பாவிக்க வேண்டும். விவேக் சிறந்த அறிவாளி.

இவ்வாறு அவர் பேசினார்.

Posted in Assumption, Balachander, Caste, Chaaya Singh, KB, Quote, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shivaji, Sivaji, Sivaji the Boss, Solli Adippen, Speech, Superstar, Talk, Veera, Vivek | 12 Comments »

Sivaji (The Boss) opening song details – Superstar gifts 3 Lakhs for Folklore

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

`சிவாஜி’ படத்தில் `மெகா’ கரகாட்டம்: 64 கிராமிய கலைஞர்களுக்கு ரஜினி ரூ.3 லட்சம் பரிசு

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. ரஜினியின் “சிவாஜி” படத்துக்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு காட்சிக்கு காட்சி இரட்டிப்பு மடங்கு பிரமாண்டத்தை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக ரஜினி ஆடும் பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின், பிரமிப்பின் உச்சியைத் தொடும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிலும் ஒரு கிராமிய மணம் கமழும் பாடல் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பரபரப்பாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியில் வாய் எனும் மலை பிரதேசத்திலும், பஞ்ச தனி அணைக் கட்டிலும் இந்த பாடல் காட்சி 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் பங் கேற்றனர்.

இந்த பிரமாண்டத்துக்காக சங்கர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தமிழகத்தில் இருந்து முதலில் அவர் எதிர்பார்த்தது போல நாட்டுப்புறக் கலைஞர்கள் கிடைக்கவில்லை. கடைசியில் புஷ்பவனம் குப்புசாமி மூலம் முகப்பேரில் கலைக்கோட்டம் நடத்தி வரும் எம். அன்பரசனை அணுகினார். அன்பரசன் 2 நாள்அவகாசத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்று 64 நாட்டுப்புறக்கலைஞர்களை தேர்வு செய்து ஒருங் கிணைத் தார்.

அதன் பயனாக 64 கலை ஞர்களும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஆடும் அரிய வாய்ப்பை பெற்றனர். ரஜினியுடன் இவர்கள் மயி லாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று விதம் விதமாக கிராமிய நடனங்களை ஆடி தூள்கிளப்பி இருக்கிறார்கள். ரஜினியும் இந்த பாட்டில் பட்டையை கிளப்பி உள்ளாராம்.

இந்த பாடல் “சூட்டிங்” நடந்த 8 நாட்களும் 64 கலைஞர்களும் ரஜினியின் பாசத்தையும் துளி கூட பந்தா இல்லாத பண்பையும் கண்டு, அனுபவித்து நெகிழ்ந்து போய் விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி இவ்வளவு இறங்கி வந்து அன்பாக பழகுபவரா என்று 64 கலைஞர்களும் மெய்சிலிர்த்து விட்டனர். 64 பேரிடமும் தனித்தனியாக குடும்ப சூழ்நிலையை விசாரித்து அவர் தன் உணர்வையும் பகிர்ந்து கொண்டதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல பாடல் காட்சி படமாக்கி முடித்ததும் தமிழ் நாட்டுக்கு புறப்பட்ட 64 கலைஞர்கள் கையிலும் ரஜினி ஒரு கவரை திணித்தார். ஒவ்வொரு கலைஞனுக்கும் அதில் ரஜினி தன் சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் ரஜினியின் இரக்க குணத்தை நினைத்து 64 கலைஞர்களும் நெகிழ்ந்து விட்டனர். அவர்களுக்கு ரஜினி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் இரட்டிப்பாக உயர்ந்தது.

உணர்ச்சிப் பெருக்கில் இருந்த அவர்களை ரஜினி அத்துடன் விடவில்லை. 64 கலைஞர்களுடனும் தனித் தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் 64 பேருக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அதனால் தானோ என்னவோ இந்த 64 கலை ஞர்களும் ரஜினியுடன் பழகிய 8 நாள் அனுபவத்தை 8 ஜென்மத்துக்கு சமமானது போல கருதுகிறார்கள்.

இந்த 64 கலைஞர்களையும் ரஜினியுடன் ஆட வைத்த கலைக்கோட்டம் நிறுவனர் அன்பரசனும் ரஜினியின் பாசமழையில் நனைந்து விட்டு வந்துள்ளார். கலைமாமணி பட்டம் பெற்ற இவர் குடி யரசு தினவிழாவில் 300 கலைஞர்களை புதுமையான முறையில் ஆட வைத்து பாராட்டு பெற்றவர். இவர் கைவண்ணத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் முத்திரை பதித்துள்ளன. ஆனாலும் ரஜினியுடன் பழகிய 8 நாட்களும் மறக்க முடியாதவை என்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ரஜினி மனித நேயம் மிக்க நடிகர். ஒவ்வொருவருடனும் அவர் எளிமையாக நெருங்கி பழகினார். சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லவே இல்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப் பார். நான் அடையார் இசைக்கல்லூரியில் பேரா சிரியராக பணிபுரிகிறேன் என்றதும் சரிக்கு சமமாக உட்கார வைத்தே பேசினார். மற்றவர்கள் மனதுக்கு நன்கு மரியாதை கொடுக்கிறார். நான் அழைத்துச் சென்ற 64 பேருக்கும் 3 லட்சம் ரூபாயை அவர் கொடுத்து விட்டு, கலைஞர்கள் முகத் தில் மகிழ்ச்சியை கண்டதும், அவரும் சிரித்தார். அப் பப்பா… இவ்வளவு ஈகை குணம் உள்ளவரா என்று சிலிர்த்து போனேன். அவர் காட்டிய அன்பு கள்ளங் கபடலம் இல்லாதது. நினைத்து, நினைத்துப் பார்த்து மகிழக்கூடியது” என்றார்.

இயக்குனர் சங்கரை, “மக்கள் ரசனையை நன்கு புரிந்தவர்” என்றார். புறப்படும் போது “சஸ்பென்ஸ்” வைத்தப்படி அன்பரசன் மேலும் ஒரு தகவல் சொன்னார். “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ரஜினி கிராமிய கலைஞர்களுடன் ஆடிய பாடல் 2007-ல் சூப்பர் ஹிட் பாட்டாக இருக்கும். பட்டி தொட்டி எல்லாம் இது தான் ஒலிக்கும். அது ஒரு மனம் கவரும் பாடல்” என்றார்.

அவர் சொல்ல, சொல்ல ரஜினியின் கிராமிய இசை, நடன பாட்டை எப்போது கேட்போம் என்ற ஆவல் அதிகமாகி விட்டது… கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் “சிவாஜி” பாடல் கேசட் வரப்போகிறது.

Posted in Folklore, Kalaikottam, M Anbarasan, music, Preview, Pushpavanam Kuppusamy, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, Songs, Superstar, Tamil Cinema, Tamil Movies | 2 Comments »

Rajni’s animated movie Hara – 18 Languages : AR Rahman Music

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

ரூ. 75 கோடியில் தயாராகும் ரஜினி `அனிமேஷன்’ படம் `ஹரா’: மகள் சவுந்தர்யா இயக்குகிறார்

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா வெளிநாட்டியில் `அனிமேஷன்’ படித்துள்ளார். `சந்திரமுகி‘, `நியூ‘ உள்ளிட்ட சில படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை இவர் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரஜினியின் முழுநீள `அனிமேஷன்’ படம் ஒன்றை உருவாக்க சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்பகட்டப்பணிகளை ஓசையில்லாமல் செய்து வருகிறார்.

இந்த `அனிமேஷன்’ படத்துக்கு ரூ. 75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீடு செய்ய பிரபல கம்பெனிகள் முன்வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, போஜ்புரி 18 மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது.

ரஜினியின் நடைஉடை பாவனைகள் 40 நாட்கள் படம் பிடிக்கப்பட்டு அவர் தோற்றத்தில் `அனி மேஷன்’ ஹீரோவை உருவாக்குகிறார்கள். அவர் குரலும் இதில் சேர்க்கப்படுகிறது. சிவாஜி படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தை எடுக்க ரஜினி நேரம் ஒதுக்குகிறார்.

ஆஸ்திரேலியா, ஸ்பெயின், லண்டனில் இருந்து 240 `அனிமேஷன்’ நிபுணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சென்னையில் தங்க வசதி செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக ஜெமினி மேம்பாலம் அருகில் பிரத்யேக அலுவலகம் திறக்கப்படுகிறது. படத்துக்கு கதை வசனம் ரெடியாகிவிட்டது. 18 மொழிகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ரஜினி அனிமேஷன் படத்துக்கு `ஹரா‘ என்ற பெயர் சூட்ட சவுந்தர்யா முடிவு செய்துள்ளாராம். ஹரிஹரன் என்ற கடவுள் பெயரை ஹரா என்று சுருக்கி சூட்டுகிறார்.

Posted in 3D, Animation, AR Rehman, Hara, Movies, music, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Sivaji, Sivaji the Boss, Soundarya, Superstar, Tamil Cinema | 1 Comment »

Andhra Pradesh bans dubbed films – Sivaji (The Boss) may be Tamil Exclusive

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு

ஹைதராபாத், நவ. 13: தமிழ் மற்றும் பிற மொழி டப்பிங் திரைப்படங்களின் வெற்றியால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது தெலுங்கு திரை உலகம்.

இதையடுத்து, ஆந்திரத்திலும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களை வெளியிட தடைவிதிக்க முடிவு செய்துள்ளது அந்தமாநிலத் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

சிறிய பட்ஜட்டில் படம் தயாரிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. டப்பிங் திரைப்படங்களின் வரவும், வெற்றியும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பிற மொழிப் படங்களின் டப்பிங் உரிமையை வாங்கக் கூடாது என்று தனது உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முடிவு அந்த மாநிலத்தில் திரைப்படத் துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த 2 வருடங்களாக டப்பிங் திரைப்படங்கள், குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. மாநிலத்தில் இந்த ஆண்டு 200 திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டவை.

  • சந்திரமுகி,
  • அந்நியன்,
  • கஜினி,
  • மன்மதன்,
  • காதல்

ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, ஹிட் திரைப்படங்களாக ஓடின.  தமிழ் திடைப்படங்களைத் தவிர, ஆங்கில டப்பிங் படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

டப்பிங் திரைப்படங்கள் வசூலைக் குவித்து வரும் அதே நேரத்தில், ஆந்திரத்தில் தயாரான தெலுங்கு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. “மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி உள்பட பல முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளிவந்த வேகத்தில், பெட்டிக்குள் சுருங்கிவிட்டன.

கடந்த ஆண்டு 131 தெலுங்கு படங்கள் வெளியாகின. அவற்றில் மூன்றே மூன்று திரைப்படங்கள்தான் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. ஏழெட்டு படங்களால் மட்டும்தான், செலவிட்ட பணத்தை மீட்க முடந்தது. மற்ற தெலுங்கு திரைப்படங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.

இது குறித்து தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் டி.சுரேஷ் பாபு, “பெரும் பணச்செலவில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்கள் கூட சரிவை சந்திக்க டப்பிங் படங்களின் வெற்றியே காரணம்’ என்றார்.

ஆனால் பிறமொழி டப்பிங் படங்களை தடை செய்யும் முடிவுக்கு டப்பிங் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், வசன எழுத்தாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரும்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது தெலுங்கு திரைப்படங்கள் மிக அதிக செலவில் தயாரிக்கப்படுகின்றன. சிறு தயாரிப்பாளர்களால் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு திரைப்படம் தயாரிக்க இயலவில்லை. எனவேதான் நாங்கள் குறைந்த செலவில், படங்களை டப் செய்து வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார் சிறு தயாரிப்பாளர் ஒருவர்.

Posted in Andhra Pradesh, Ban, Dubbing, Rajni, Remake, Sivaji, Superstar, Tamil Films, Tamil Movie, Tamil Pictures, Telugu, Tollywood | Leave a Comment »

Telugu actor Chiranjevi to get Honorary Doctorate from Andhra University

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

நடிகர் சிரஞ்சீவிக்கு டாக்டர் பட்டம்: ஆந்திர பல்கலைகழகம் வழங்குகிறது

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. 25 வருடங்களுக்கு மேலாக திலையுலகில் இருக்கும் இவர் தெலுங்கு பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் ராணுவவீரன், மாப்பிள்ளை உள்ளிட்ட சில தமிழ்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சிரஞ்சீவியின் கலை உலக சேவையைப் பாராட்டி ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள அப்பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் டாக்டர் பட்டத்தை சிரஞ்சீவி பெற்றுக் கொள்வார்.

இதே பட்டமளிப்பு விழாவில் ஆந்திர மாநில முன்னாள் கவர்னர் ரங்க ராஜனுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை ஆந்திர பல்கலைக்கழகம்ë வழங்கு கிறது.

மேற்கண்ட தகவலை அப்பல் கலைகழகத்தின் துணை வேந்தர் வேணுகோபாலரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

Posted in Actor, Andhra University, Chiranjeevi, Doctorate, Film, Governor, Honorary, Movies, Raanuva Veeran, Rengarajan, Siranjivi, Superstar, Tamil, Telugu, Tollywood, Venugopala Reddy, Vice-chancellor | Leave a Comment »

Rajini & PMK’s Interests in Kelambakkam – Dropping of Satellite City

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

சேர்த்து வைத்த துணைநகரம்  :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! 

– எஸ்.சரவணகுமார்    
பத்து நாட்களாகப் பரபரப்பைக் கிளப்பிய ‘துணைநகர’த் திட்டம் எதிர்பாராத வகையில் வாபஸ் ஆகிவிட்டது. அதுபோலவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த இரண்டு பெரும் சக்திகளையும் இந்தப் பிரச்னை எதிர்பாராத வகையில் நேசப் பார்வை பார்க்க வைத்திருக்கிறது.

அந்த இரு சக்திகளில் ஒன்று பா.ம.க., மற்றொன்று ரஜினி!

‘பாபா’ படம் ரிலீஸ் ஆனபோது சூப்பர் ஸ்டாருக்கும், பா.ம.க&வுக்கும் முதன்முதலாக முட்டல்மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இரு தரப்பினருமே நேரடியாகவே மோதிக் கொண்டார்கள். இப்படி கீரியும் பாம்பும் போல இவர்களுக்குள் இருந்த பகை, இப்போது கேளம்பாக்கம் துணைநகர விவகாரத்தால் இளகத் தொடங்கிவிட்டதாக, ரஜினிக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினிக்கும், பா.ம.க&வுக்கும் பாலமாக செயல்பட நினைத்துத் தோற்றுப்போன சில சினிமா வி.ஐ.பி&க்கள் இதுபற்றி நம்மிடம் பேசியபோது,

‘‘வண்டலூர், கேளம்பாக்கம் சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள நிலங்களைத் துணைநகரம் அமைக்க அரசு தேர்வு செய்தது. இதில் ரஜினிக்குச் சொந்தமாக இருக்கும் கேளம்பாக்கம் பண்ணையும் ஆபத்துக்குள்ளானது. இந்தப் பண்ணையின் மொத்த பரப்பளவு, சுமார் நாற்பது ஏக்கர். சென்னையில் கட்டிய வீட்டுக்குப் பிறகு அவர் வாங்கிய முதல் சொத்து இந்தப் பண்ணைதான். ஆன்மிக மையம் ஒன்றை நிறுவத்தான் இந்தத் தோட்டத்தை வாங்கிப்போட்டார். அதற்குப் பிறகு விவசாயத்தில் நாட்டம் பிறக்க, தென்னந்தோப்பு அமைத்தார். பிறகு சிறிய வீடொன்றைக் கட்டியதுடன் அந்தத் தோப்பின் ஓர் ஓரத்தில் அழகான தியான மண்டபத்தைக் கட்டினார். ஓர் உடற்பயிற்சிக் கூடத்தையும் அமைத்தார்.

1996&ம் ஆண்டு அந்த நிலத்தில் ஒரு ஏக்கரை தலா ஒரு கிரவுண்ட் வீதம் பிரித்துத் தன்னிடம் பலகாலமாக வேலைபார்த்து வரும் சுமார் முப்பது பேருக்கு எழுதிக் கொடுத்தார் ரஜினி. துணைநகரத் திட்டம் அறிவிக்கப்பட்டதும், தான் பண்ணையாட்களுக்குக் கொடுத்த நிலங்களுக்கு ஆபத்து வருமே என அவர் கவலைப்பட்டார்.

இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்போரூர் கோயில் முன்பும், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்கு அருகிலும் நடந்தது. இந்த சமயத்தில் தனது பண்ணை ஊழியர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது அவரிடம், ‘நிலத்தை அரசு எடுக்கக் கூடாதுன்னு பா.ம.க. போராடிக்கிட்டிருக்கு. அநேகமா அவங்க துணைநகரத்தை வர விடமாட்டாங்க போலிருக்கு. அதுவே எங்களுக்கு ஆறுதலா இருக்கு சார்’ என்று சொன்ன ஊழியர்கள் தொடர்ந்து, ‘ஊரப்பாக்கத்துல ஒரு கல்யாண மண்ட பத்துல டாக்டர் ராமதாஸ் இந்தப்பகுதி மக்களைசந்திச்சு துணை நகரம் அமைப் பதில் என்னவெல்லாம் சிக்கல் இருக்குன்னும், விவசாயம் எப்படியெல்லாம் பாதிக்கும்னும் கேட்டுத் தெரிஞ்சுக்கப் போறாராம். அந்தக் கூட்டத்துக்குப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘தாராளமா கலந்துக்கங்க. இந்தத் தடவை அவங்க நல்ல விஷயத்துக்காகப் போராடறாங்க. நீங்க கண்டிப்பா அந்தக் கூட்டத்துக்குப் போங்க’ என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் ரஜினி. இதனையடுத்து அந்த ஊழியர்கள், பா.ம.க. ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். ஆனால், ரஜினி தங்கள் போராட்டத்துக்குத் துணையாக இருக்கப்போகிறார் என்ற விவரம் எதுவும் பா.ம.க&வுக்குத் தெரியாது. ஒருசிலர் செங்கல்பட்டு எம்.பி&யான மூர்த்தியிடம் ‘நாம் போராடறதுல ரஜினியோட நிலமும் சேர்ந்திருக்கு. நம்மால அவரு நிலம் தப்பிச்சிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘நல்ல விஷயத்துக்காகப் போராடறோம். இதுல எல்லோரும் பலனடைஞ்சா நல்லதுதானே’ என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

அந்தக் கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதையும், துணைநகரம் விஷயத்தில் பொதுமக்கள் பா.ம.க. மீது கொண் டிருக்கும் நம்பிக்கை யையும், ரஜினியின் ஊழியர்கள் அப்படியே ரஜினியிடம் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு ரஜினிக்குப் பா.ம.க. மீது இன்னும் கூடுதலான மரியாதை ஏற்பட்டு விட்டது’’ என விஷயத்தை முடித்தார்கள், அந்த வி.ஐ.பி&க்கள்.

பா.ம.க. மீதான ரஜினி யின் இந்தக் கனிவு பற்றி அக்கட்சியின் செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.மூர்த்தியிடம் பேசினோம். ‘‘நீங்க சொல்றது எனக்குப் புதுசா இருக்கு. துணைநகரம் அமைக்க ரகசியமான சில திட்டங்களை அரசாங்கம் தீட்டுதுனு முதல்ல எனக்குச் சொன்னது, அந்தப் பகுதி பொதுமக்கள்தான். ஒருநாள் ராத்திரி ஒரு மணியிருக்கும்… என் செல்போன் அடிச்சுது. எடுத்துப் பேசினேன். ‘என்னண்ணே, தூங்கறீங்களா?’னு தொகுதிவாசி ஒருத்தர் கேட்டார். ‘ஆமாம்பா, இந்த நேரத்துல எல்லோருமே தூங்கு வாங்க’னு நானும் சாதாரணமா சிரிச்சேன். அதுக்கு, ‘சரிண்ணே, உங்களுக்கு ஓட்டுப் போட்டோம். நீங்களும் ஜெயிச்சீங்க. நீங்க தூங்கலாம். ஆனா, நாங்க தூங்க முடியாதுண்ணே. ஒரேயடியா இப்போ குடும்பத்தோட தூங்கிடப் போறோம். காலையில நீங்க வந்து மாலை போட்டுட்டுப் போயிடுங்கண்ணே’னு மறுமுனையில் பதில் வந்ததும் ஒன்றும் புரியாமல், ‘என்ன விஷயம்!’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர், அரசு துணைநகரம் அமைக்கப்போகும் விஷயத்தையும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்பையும் சொல்லிவிட்டு போனை வெச்சுட்டார். அப்புறம்தான் பதறிப்போய் நானும், எங்க ஐயாவும் இந்த விஷயத்துல தீவிரம் காட்டுனோம். எங்க போராட்டத்துல ரஜினியோட ஆளுங்களும் பயன்பெற்றிருந்தா சந்தோஷம்தான். நாங்க யாரையும் பிரிச்சுப் பார்க்கறது கிடையாது’’ என்றார். அஜீத் நிலமும் தப்பியது!

துணைநகரம் கைவிடப்பட்டதில் ரஜினியைப் போல நடிகர் அஜீத்குமாரும், நடிகர் விஜயகுமாரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ‘சிட்டிசன்’ படம் நடித்துக் கொண்டிருந்தபோது இந்த ஏரியாவுக்கு வந்த அஜீத்குமார், விவசாயம் செய்யும் திட்டத்துடன் சில ஏக்கர்களை இங்கே வாங்கிப் போட்டிருக்கிறார். அதேபோல் விஜயகுமாருக்கும் இங்கு நிலம் உள்ளதாம். இவர்கள் தவிர பரபரப்புப் பிரமுகரான சிவசங்கர்பாபா பல ஏக்கர் பரப்பளவில் பள்ளி, அநாத ஆஸ்ரமம், ஆன்மிக மையம், முதியோர் விடுதி என தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். ரஜினியின் பண்ணைக்கு அடுத்திருக்கும் சிவசங்கர் பாபாவின் ஆஸ்ரமத்துக்கு அவ்வப்போது ரஜினி போவாராம். ‘நீங்கள் நினைத்தால் முதல்வரிடம் பேசி ஒரு தீர்வை ஏற்படுத்தலாம்’ என்று பாபாவும் ரஜினியிடம் போனில் பேசியதாகச் சொல்கிறார்கள்.

& எஸ்.சரவணகுமார்   

Posted in Ajithkumar, Kelambakkam, PMK, Rajini, Rajniganth, Ramadoss, Satellite City, Sivaji the Boss, Superstar, Tamil, Tamil Nadu, Vandaloor, Vijaykumar | Leave a Comment »