Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Naxal’ Category

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

Jharkhand govt & Maoists – Naxals, Power, Center: Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007

ஜார்க்கண்டில் ஒரு கேலிக்கூத்து

நீரஜா சௌத்ரி

நாட்டில் நக்சலைட்டுகளின் வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று. அங்கு நக்சல்கள் நடத்தும் தாக்குதல்களும் படுகொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 18 பேரை கடந்த வாரம் நக்சல்கள் படுகொலை செய்தனர். நக்சல்களின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார் மராண்டி. அதில் முக்கியமானவர் அவரது சகோதரர்.

எனவே, அவரும் மராண்டியின் குடும்பத்தினரும்தான் நக்சல்கள் தாக்குதலின் உண்மையான இலக்காக இருந்தனர். 8000 பேர் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊடுருவிய நக்சல்கள் திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினர்.

அண்மையில் மாவட்ட ஆட்சியர் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, நக்சல்கள் படுகொலைகளை நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு மாநிலத்தின் மீது யாரும் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை நக்சல்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசு நிர்வாகம் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

மத்திய அரசுக்கோ, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது எப்போதாவதுதான் கவனம் செல்கிறது. மக்களவைத் தேர்தலில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுதோ, மாநிலத்தில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்படும் பொழுதோதான் மத்திய அரசின் கவனம் ஜார்க்கண்ட் மீது திரும்புகிறது.

ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம். எனவே, துரதிருஷ்டவசமாக ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களின் தலைவிதி அப்படி அமைந்துவிடுகிறது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், பத்திரிகைகள்கூட ஜார்க்கண்டைப் புறக்கணிக்கத்தான் செய்கின்றன.

கனிமவளம் ஏராளமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நடப்பவை குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருந்தோமானால், அதன் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், தில்லிக்கு இன்னும் இது உறைத்ததாகத் தெரியவில்லை. ராஞ்சியில் இருக்கும் அரசுக்கோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திறமையும் இல்லை; அதற்கான உறுதியும் இல்லை.

ஜார்க்கண்டின் துயரங்கள் எல்லோரும் அறிந்தவைதான். அங்கு ஒரு பணியிட மாறுதல் அல்லது பணி நியமனத்துக்கு பதவியைப் பொருத்து ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை பகிரங்கமாகப் பேரம் பேசப்படுகிறது. மறுபுறம் மக்களின் வாழ்க்கைத்தரமோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சராசரியாக மாநில மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். ஒரு சில மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீத நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. வாய்க்கால்களோ, பெரிய மின்னுற்பத்தி நிலையங்களோ ஏதுமில்லை. டீசல் நிலையங்கள் வேலைசெய்வதே கிடையாது. பல மாவட்டங்கள் முழுமையுமே மின் வசதி இன்றிக் கிடக்கின்றன. பிரதமரின் சாலை வசதித் திட்டத்தின்கீழ் ஜார்க்கண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் கிடக்கிறது. பிகாரில் இருந்து பிரிந்து உருவான இச் சிறு மாநிலம் பெரும் வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காலச் சக்கரம் நின்றுவிட்டதைப்போல உறைந்து கிடக்கிறது ஜார்க்கண்ட்.

நக்சல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களின் வருவாயில் 10 சதவீதத்தைக் கமிஷனாக வாங்கிக்கொள்கின்றனர் நக்சல்கள். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியிலிருந்து 30 சதவீதத்தை நக்சல்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர் என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜார்க்கண்டில் எந்த காண்டிராக்டரும் நக்சல்களால் தாக்கப்படுவதில்லை. ஏனென்றால் கமிஷன் தொகையை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்துவிடுகின்றனர். அதேபோல்தான் வனத் துறை அதிகாரிகளும்.

சட்டம் ~ ஒழுங்கும், அரசு நிர்வாகமும் இவ்வளவு சீரழிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம், ஜார்க்கண்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வினோத ஆட்சி. 8 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களின் தலைமையில் நடைபெற்றுவரும் வினோதமான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவருகின்றன முக்கிய கட்சிகளான காங்கிரஸýம் ராஷ்ட்ரீய ஜனதா தளமும். அரசை நிர்பந்தித்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவும் செய்யலாம்; அரசு செய்யும் தவறுகளுக்கான அவப்பெயரில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸின் எண்ணம்.

ஆனால், இந்த ஏற்பாட்டால் கடந்த ஓராண்டில் அக் கட்சியின் ஆதரவுத் தளம் கரைந்துகொண்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய அரசு நீண்ட நாள் நீடிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு ஓர் ஆண்டை ஓட்டிவிட்டது அந்த அரசு.

இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் விரும்புவதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் மீதான வழக்குகளில் சில, ஜார்க்கண்ட் நீதிமன்றங்களில்தான் விசாரணையில் இருக்கின்றன. எப்பொழுதும் ஏதாவது ஒரு மாநிலத்தையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவரது எண்ணம். அதுவும் பிகார் கைநழுவிப் போய்விட்ட நிலையில் இது மிக அவசியம் என அவர் நினைக்கிறார்.

எந்தக் கட்சியிலும் இல்லாமல் மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு தொலைநோக்கும் கிடையாது; லட்சியமும் கிடையாது.

கட்சியில் இருந்தாலாவது ஒரு கட்டுப்பாடு, கடமைப் பொறுப்பு என்று ஏதாவது இருக்கும். அதுவும் அவர்களுக்குக் கிடையாது. அதிகபட்சம்போனால், தமது தொகுதியில் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்; அடுத்த தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

ஓர் அரசியல் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாதாரணமாக நடப்பது. ஆனால், கையளவு சுயேச்சைகளையே மாநிலத்தின் அரசை நடத்தும்படி விட்டுவிடுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதாகும்.

வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் அமைக்கப்படும் அரசுகள் செயல்படுவது கிடையாது என்பதற்கும், அந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு உள்ளன.

1991-ல், 54 எம்.பி.க்களைக் கொண்டிருந்த சந்திரசேகர், தமது கட்சியைவிட 4 மடங்கு கூடுதலாக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ், வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள் பலரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலை சந்திரசேகரால் சாமாளிக்க முடியாமல் போனதால், மூன்றே மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதில், நாயையே வால் ஆட்டுவதைப் போன்றது அது.

ராஞ்சியில் இப்போது அரசு என்று சொல்லத்தக்க நிர்வாக ஏற்பாடு ஏதும் இல்லை. அத்தகைய நிலையை ஜார்க்கண்ட் மக்கள் மீது திணிக்க காங்கிரஸýக்கோ, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது. ஒன்று, அரசில் சேர்ந்து அதற்கு ஸ்திரத்தன்மையையும் தமது அனுபவத்தையும் அளிப்பதோடு, அதற்கான கடமைப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது புதிதாகத் தேர்தலை அவர்கள் சந்திக்க வேண்டும்.

ஜார்க்கண்டில் இப்போதிருக்கும் ஏற்பாடு, ஜனநாயக சமுதாயத்தின் அரசு என்ற ஆட்சிமுறையைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை.

Posted in Admin, Administration, Bribes, Citizen, Corruption, Government, Govt, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, kickbacks, Law, Maoists, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Neeraja, Order, Police, Power, Protect, Protection, Ranchi | Leave a Comment »

Maoists kill 18 in Jharkhand village: Giridih Massacre

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தவறான பாதை; தவறான பார்வை

பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.

மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.

9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.

இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.

அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.

Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »

Massacres, Encounters, Jail Deaths, TADA, POTA, Torture killings – TSR Subramanian

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மோதல்களா, படுகொலைகளா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

குஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.

குஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்?

“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.

1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.

நக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.

நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.

அதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.

ஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.

வட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

முதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

போலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.

பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.

இத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.

சட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.

1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.

சோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.

இச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.

சமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Agitation, Army, Bengal, Blast, Bomb, Bundelkand, Bundelkhand, Cell, Chaaru Majumdar, COFEEPOSA, COFEPOSA, Convict, conviction, Correctional, deaths, defence, Defense, Democracy, Encounter, escape, Federal, Force, Freedom, Govt, Gujarat, Independence, India, Innocent, J&K, Jail, Jammu, Judge, Justice, Kashmir, Khalistan, Khalisthan, killings, KPS Gill, Law, Leninist, Liberation, Majumdar, Majumdhar, massacre, Mazumdar, Mazumdhar, Military, Misa, ML, Modi, Naxal, Naxalbari, Order, Police, POTA, Power, Protest, Punjab, regulations, Shorabudhin, Sidhartha Sankar Roy, Sorabudheen, Sorabudhin, Srinagar, SS Roy, State, Subramanian, Suppression, TADA, terrorist, Thief, Torture, UP, Uttar Pradesh, Victim, WB, West Bengal | 2 Comments »

Neeraja Choudhry: Manmohan Singh’s Three Year Anniversary – Achievements

Posted by Snapjudge மேல் மே 21, 2007

மன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்!

நீரஜா சௌத்ரி

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.

பிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை!

ராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல!

மத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.

குடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை!

மே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.

சாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.

இந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.

பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.

பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.

சீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.

பணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.

முஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.

===================================================

மன்மோகன் அரசின் சாதனைகள்-2

நீரஜா சௌத்ரி

உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

திறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.

“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.

திறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.

ரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.

வேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

சோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.

இரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.

அரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.

கட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.

2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.

தமிழில்: சாரி
———————————————————————————————–

எல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.

புது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.

கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.

அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.

நாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.

பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.
———————————————————————————————–

07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்

சோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்

சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.

அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.

மன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.

என்ன காரணம்? இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.

ஐயோ! விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.

விலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.

உணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.

செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன? இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.

வளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.

ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.

மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.

குறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்?’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்?

கடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.

இதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.

உலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.

ஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.

அமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.

தங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.

பொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.

ஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.

எண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.

அநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.

விழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள்? என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.

பொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.

அந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.

இங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.

—————————————————————————-

துக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்

வியந்து பாராட்டுகிறோம்! இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன?’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா? பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள்? தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே?

‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள்? ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு?’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே! அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.

மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே!’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார்? ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள்  லாலு பிரஸாத் யாதவ் உட்பட  அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.

தலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு  என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.

தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன? என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ  என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்!.

நன்றி : துக்ளக்
—————————————————————————-

Posted in Achievements, Agriculture, Analysis, Anniversary, Baba, Backgrounder, Banks, BJP, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Deflation, dera, Deve Gowda, DMK, Economy, Education, Elections, Evaluation, Execution, Finance, Goals, Govt, IMF, Inflation, Islam, IT, Madani, Madhani, Manmohan, Manmohan Singh, Maran, Millionaire, Muslim, Naxal, NDA, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Opposition, Party, Planning, Politics, Polls, POTA, Principles, Process, Radhika Selvi, RadhikaSelvi, Recession, Report, Rich, Sachar, Sonia, TADA, Terrorism, UDA, WB | 1 Comment »

Conspiracy behind killing of JMM MP: DGP; ‘retaliatory action’: Govt.

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2007

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.

சுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

சோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.

எம்.பி. படுகொலை

மக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.

கடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.

அரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.

ஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பிரச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.

நக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.

எம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு

ஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

லாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.

ஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).

லஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.

பஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.

தகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.

லஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.

Posted in Andhra, Andhra Pradesh, Assassination, backward, Bakuria, Bihar, dead, FC, Forest, Hempram, Jamshedpur, Jharkand, Jharkhand, JMM, Lakshman, Landlords, Lashman, Lok Sabha, Madhya Pradesh, Mountains, MP, Naksal, Naxal, Naxalbari, Naxalite, Plateau, Ratan Diu, Separatists, Son, Sugadev, Sukhdev, Sunil Mahato, Terrorism, Violence, WB, West Bengal | Leave a Comment »

Is LTTE planning for a second suicide attack in India? – Dinamani

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

இந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா?

சென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.

இந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

பிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.

படகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.


 பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்
பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்

தமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத்தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.

இவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.

இந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.


தேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு படகில் இருந்த வெடிபொருள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை? “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’

சென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழகத்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.


தமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.

முதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.

சென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.

இந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.

கண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.

விடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.

எந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.

வெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.

கைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.

அகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.

கிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.


வெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா? சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

படகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.

சாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்தில் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.

பொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.

இவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.

பிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.

கோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.

இந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.

அந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது விடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுதிக்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.

ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.

7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.

விடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்டு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

கோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.

ஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

பின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

ஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.

இதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார்? என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.

போலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.

இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.

இதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.

பின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.

ஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

எனவே முத்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.

மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுதக்குவியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


கடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்?

சென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள் கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயகப் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

காவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.


Dinamani Editorial – Feb 23 2007தன்னைத்தான் காக்க

ஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.

இவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.

இந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.

புவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.

இந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களில் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

அதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.

மேலும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.


அரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை
சென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.

இவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.

அத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.

நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.


தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.

ஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.


Posted in Arms, Attack, Belts, Cyanide, Defense, Dinamani, Double Jeopardy, Eelam, Eezham, fishermen, Karuna, Karuna Faction, Karuna Group, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kodiakarai, kodiyakkarai, Law, Left, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Maoist, Naval LTTE, Navy, Navy Tigers, Naxal, Naxalbari, Order, Police, Pushpavanam, Radar, Rajeev Gandhi, Rajiv Gandhi, Rajiv Gandi, Ramadevi, Sea tigers, Spy, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, Trafficking, Vedaranyam, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons, WMD | Leave a Comment »