Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bharatiya Janata Party’ Category

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

Tehelka on Gujarat riots: Neerja Chowdhury – Sting, Expose, Revelations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தெஹல்கா புலனாய்வுக்கு அப்பால்…!

நீரஜா சௌத்ரி

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரங்கள் குறித்து ஏற்கெனவே இருந்துவந்த சந்தேகங்களை தெஹல்காவின் ரகசியப் புலனாய்வு நடவடிக்கை நிரூபித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக நடைபெற்றதே அந்தக் கலவரம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிவந்ததை அது பொய்யாக்கியிருக்கிறது. பஜ்ரங்க தளம், விசுவ ஹிந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதே அப் படுகொலைகள் என்பதை அந்த ரகசியப் புலனாய்வு டேப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அதில் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தக் குற்றச்செயல்களைச் செய்தவர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பும் ஆதரவும் இருந்தது என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுதான். அக் குற்றங்களைச் செய்தவர்களே அவற்றை ஒப்புக்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறை.

தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு சென்ற, அன்னியரான தெஹல்கா நிருபரிடம் இத்தனை பேர் தாம் அக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கூறியிருப்பதிலிருந்தே, அவர்களை யாரும் தொட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமது இயக்கத்தின் எவ்வளவு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், எந்த அரசியல்வாதியும் அரசியல் கட்சி ஊழியர்களும் தமது குற்றங்களைப் பற்றி அவ்வளவு சாதாரணமாக அவரிடம் கூறிவிட மாட்டார்கள். ஆனால், தெஹல்கா நிருபரிடம் தமது செயல்களைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “முஸ்லிம் வெறுப்பு’ என்னும் செயல்திட்டத்தின் மூலமாகத்தான் குஜராத்தில் அரசியல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்று தெஹல்கா நிருபர் கூறியிருப்பதை நிரூபிப்பதாக அது இருக்கிறது.

மோடிக்கு “விசா’ அனுமதி வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்த பிறகும், மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்தான் தனது பாதையை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, “வளர்ச்சி’யில் அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி. ஆனால், கடந்த காலச் செயல்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பாடுதான், கரண் தாப்பருக்கு அளித்துக்கொண்டு இருந்த பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறிய செயல்.

மோடியின் சொந்தக் கட்சியோ அவரைக் கண்டிக்க விரும்பவுமில்லை; கட்சியால் கண்டிக்க முடியவுமில்லை. 2002-ல் குஜராத்தில் நடந்த சம்பவங்களால் வேதனைக்கு உள்ளான அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், “ராஜ தர்ம’த்தைக் கடைப்பிடிக்காததற்காக மோடியை லேசாகக் கடிந்துகொண்டார். ஆனால் கோவாவில் அவர் இருந்தபோது, கட்சியிலிருந்து அவருக்கு வந்த கடுமையான நெருக்குதல்கள் காரணமாக, தனது நிலையை அவசரமாக மாற்றிக்கொண்டுவிட்டார் அவர்.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகுதான் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி என்று கூறி, தெஹல்கா ரகசியப் புலனாய்வை மறுக்கின்றனர் பாஜக தலைவர்கள். அப்படிப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள “கறைபடிந்த’ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கேட்டிருக்கவே கூடாது. எத்தனையோ குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.யான சகாபுதீனைப் போன்ற ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட ஒரே காரணத்தால் புனிதராக ஆகிவிடுவாரா? கடந்த காலக் குற்றமோ, நிகழ்காலக் குற்றமோ எதுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றியானது அதிலிருந்து ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கும் தெஹல்காவுக்கும் இடையே ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக. இவ்வாறு விட்டேத்தியாகக் கூறியிருப்பதிலிருந்தே மோடி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் திட்டமும் அக் கட்சிக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவரது அனுமதி தேவை; தெஹல்கா ரகசியப் புலனாய்வின் அம்பலங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் மோடியின் ஒப்புதல் தேவை.

உண்மை என்னவென்றால், குஜராத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத அடிப்படையில் இருகூறாக அணிதிரளச் செய்துவிடக்கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற கவலையில் தத்தளிக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், அது மீண்டும் மோடிக்குச் சாதகமாகப் போய்விடும்.

மத்தியில் 2004-ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். ஆனால், 2002 கலவரத்தின்போது, அக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஈசான் ஜாப்ரி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகூட உருப்படியான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. “வளர்ச்சி’ என்னும் கோஷத்தை மோடி சுவீகரித்துக்கொள்ள விட்டுவிட்டது காங்கிரஸ். பயங்கரவாத அச்சுறுத்தலால் குஜராத்தி இந்து மத்தியதர மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளில், தமது தீவிர இந்துத்துவா அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், இன்றைய உலகமயமாக்கச் சூழலில் முன்னேற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்னும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில், “வளமை மிக்க குஜராத்’ என்ற கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் மோடி. வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினர்தான் அவருக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையாகும்.

மோடியை எதிர்கொள்ள சரியான திட்டமும் உறுதியும் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியவை ஓரணியில் திரட்டும் ஒரு திட்டத்தை ஏற்கெனவே காங்கிரஸ் வகுத்தது. அதோடு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரையும் அணிதிரட்டியிருந்தால், மோடிக்குச் சிறந்த மாற்று சக்தியாக அது உருவாகி இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் களத்தில் மாயாவதி போன்றோரும் நுழைந்துவிட்டதால், காங்கிரஸ் இன்னும் தாமதித்துக்கொண்டு இருக்க முடியாது.

தெஹல்கா அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள், இந்தியாவின் மற்ற பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திலிருந்து குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் வேறாகவும் இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மிக முக்கியம். இடதுசாரிகளின் ஆதரவை உதறிவிட்டு மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்பது குறித்து குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முடிவுசெய்யக்கூடும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்டதைப்போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழியை மற்ற மாநில முதல்வர்களும் கையாளத் தொடங்கினால், அதை எப்படி தடுப்பது? மொத்த மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க வருகின்றனர். அதில் 35%-லிருந்து 40% வாக்குகள் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஏதாவது ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து, மொத்த வாக்காளர்களில் 20 சதவிகிதத்துக்குக் குறைவானவர்களைக் கவர்ந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நிலை.

விசாரணையில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறவிருக்கும் 200 பேரின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல; இந்திய அரசின் அதிகாரம், அரசியல் சட்டத்தின் புனிதத்தன்மை, கடமைப் பொறுப்பு, குடிமக்களைக் காப்பதில் சட்டத்தின் பங்கு… என, ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு அவசியமான அனைத்துமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தெஹல்கா புலனாய்வு ஒளிப்பதிவுகளைப் பார்த்தவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போர்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால், இது 2002-ல் இந்தியாவில் நடந்திருக்கிறது. எனினும், அச் செயல்களில் ஈடுபட்டோர் அதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு, தண்டனை அனுபவிக்காமல் இன்னும் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தெஹல்கா புலனாய்வு அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள் குறித்து, குறைந்தபட்சம் விரிவான விசாரணையாவது நடத்தப்பட வேண்டும்.

—————————————————————————————————————–

மோடி வெற்றியின் எதிரொலிகள்

நீரஜா சௌத்ரி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், யாராலும் தோற்கடிக்க முடியாதவராக உருவெடுத்துவிட்டார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் மீது அதிருப்தி நிலவியபோதிலும், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், குஜராத்தின் சாதுக்களில் ஒரு பிரிவினர் அவரை எதிர்த்தபோதிலும் அவை அனைத்தையும் சமாளித்து, அதோடு அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எதிராக நிலவக்கூடிய இயல்பான அதிருப்தியையும் முறியடித்து மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

2002-ல் இருந்த ஆதரவை ஏறக்குறைய தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அவர். கட்சியின் செல்வாக்கையும் கடந்து மாபெரும் தலைவராகிவிட்டார் மோடி. கடந்த 12 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்துவந்த 45 சதவீத மக்களின் ஆதரவை மோடி என்ற தலைவருக்கான வாக்குகளாக மாற்றிவிட்டார் அவர்.

1971-ல் காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் பிரிவுத் தலைவர்களைப் புறந்தள்ளி, துர்க்கையாக உருவான இந்திரா காந்தியை நினைவூட்டுகிறது 2007-ம் ஆண்டின் குஜராத். 2000-மாவது ஆண்டு பிகார் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, லாலு பிரசாத் பெற்ற வெற்றியையும் ஒத்திருக்கிறது மோடியின் வெற்றி.

மோடியேகூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டோரோ என்று தோன்றுகிறது. தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது அவரது நடவடிக்கைகள் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை என்று அவரைச் சந்தித்தவர்கள் கூறினர். “”எனது கட்சி எனக்கு எதிராகப் போரிட்டபோதிலும் என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்” என்று, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 3 நாள்களுக்குமுன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் காந்திநகர், வடோதரா, ராஜ்கோட், மேஹ்சானாவையும் கடந்து எதிரொலிக்கும் என்பது தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தத் தேர்தலானது இரு பிரதான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மோடி மற்றும் எல்.கே. அத்வானி ஆகிய தனிப்பட்ட இரு தலைவர்களுக்கும் முக்கியமானதாக அமைந்துவிட்டது.

மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்னும் காங்கிரஸ் கட்சியின் யோசனையைக் கிடப்பில் போடச் செய்துவிட்டது, குஜராத்தில் அக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி.

மனந்தளர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியதாக குஜராத் வெற்றி அமைந்திருக்கும் நேரத்தில், தில்லியில் தனது ஆட்சியைப் பாதியில் முடிவுக்குக் கொண்டுவரும் அறிவீனத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஈடுபடாது. காங்கிரஸýக்கு மற்றொரு அபாய எச்சரிக்கை மாயாவதியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது. குஜராத்தில் அதை காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவிலேயே கர்நாடகத்திலும் தில்லியிலும் தேர்தல் வரவிருக்கிறது. அங்கும் காங்கிரஸýக்குத் தொல்லையாகவே அவர் இருக்கப் போகிறார்.

குஜராத் தேர்தல் முடிவின் எதிரொலி பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்திலும் கொஞ்சம் கேட்கக்கூடும். அங்கு கட்சி அணிகளிடையே கட்டுக்கோப்புக் குலைந்திருந்தபோதிலும், பாஜகவும் சிவசேனையும் ஒன்றுபட்டு உழைக்கும்பட்சத்தில் குஜராத் வெற்றியானது அவற்றுக்குப் பெருமளவில் கைகொடுக்கக்கூடும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் என்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையில் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைச் சந்திக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இதற்குப் பல வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மறுபுறம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் கதியும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 2008-ல் தேர்தல் வரக்கூடும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இடதுசாரிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் அணுசக்தி உடன்பாட்டுக்காக ஆட்சியைத் தியாகம் செய்யும் அளவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, எந்தவிதமான உருப்படியான முடிவுக்கும் வராமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸýம் இடதுசாரிகளும் பேசிக்கொண்டே காலம் கடத்துவர் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்தால், தாங்களும் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஆதரிப்போம் என்று ஜனநாயகக் கட்சியும் அறிவித்திருக்கிறது. எனவே, ஜார்ஜ் புஷ்-மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே அந்த உடன்பாடு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியானது, அண்மைக் காலமாக உரசல் போக்கில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரûஸயும் கைகோத்துக்கொள்ளச் செய்துவிடக்கூடும். பலம் மிக்க காங்கிரûஸவிட பலவீனமான காங்கிரஸýடன் அரசியல் உறவு வைத்துக்கொள்ளவே இடதுசாரிகள் விரும்பக்கூடும். ஆனால், இப்போது பாஜக புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவரும் சூழலில், காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்த இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்படும் 3-வது அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவிலும் குஜராத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஹிந்துத்துவாவின் புதிய வெற்றிச் சின்னமாக நரேந்திர மோடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதானது, மத்தியில் அத்வானியின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக விளங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. உடனடியாகவோ, 2009-ம் ஆண்டிலோ அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, பலமும் ஆதிக்கமும் மிக்க தலைமை ஆகியவற்றைக் குழைத்து மோடி உருவாக்கி இருக்கும் புதிய அரசியல் பாதையை, பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பாஜக வரித்துக்கொள்ளக்கூடும். எனினும் குஜராத்துக்கு வெளியே தனக்கு ஆதரவைத் திரட்டுவது மோடிக்கு சவாலாகவே இருக்கும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் அருண் ஜேட்லியைத் தவிர அவரை ஆதரிப்போர் யாருமில்லை.

குஜராத்தில் அசைக்க முடியாத வெற்றியை மோடி பெற்றிருப்பதால் அவருக்கு எதிராக யாரும் இப்போதைக்குக் குரல் எழுப்ப மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்கு முன்பேகூட, கேசுபாய் படேல், கான்ஷிராம் ராணா போன்ற தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையை நோட்டீஸ் அனுப்ப வைத்தவர் மோடி.

ஹிந்துத்துவாவின் வெற்றிச் சின்னமாக மோடி உருவெடுத்திருப்பதால், ஆர்எஸ்எஸ்ஸýம் விஎச்பியும்கூட அவருடன் சமாதானம் செய்துகொள்ள முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தலைவராக உருவாவதும், பாஜக கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க தலைவராக உருவாவதும்தான் இப்போது நரேந்திர மோடிக்கு முன்னுள்ள சவால்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் தனது 3-வது பதவிக் காலத்தில் பலதரப்பட்டோரையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய, நிதானப் போக்கு கொண்ட, அதாவது “காங்கிரஸ் முகம்’ கொண்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேசிய அரசியலில் குதிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார் மோடி. 2009-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைக்கும்பட்சத்தில் அதை தேசிய அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பாக மோடி பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

எனவே, இப்போதைக்கு தமக்கு குஜராத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அதன் முலம் குஜராத்திலிருந்து தனது ஆதரவாளர்கள் பலர் எம்.பி.க்களாவதை உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடக்கூடும்.

2004 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 92-ல் பாஜகவைவிட கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், 90 தொகுதிகளில்தான் காங்கிரûஸவிட கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், அப்போது நரேந்திர மோடி அரசின் மீது அந்த மாநில ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் மத்தியில் நிலவிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், அத் தேர்தல் முடிவுகளின் அறிகுறிகளை உணர்ந்துகொண்ட மோடியோ, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

அண்மையில் பாஜகவால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்.கே. அத்வானியைப் பொருத்தவரை, குஜராத் வெற்றியானது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பாகும். அத் தேர்தலில் மோடி தோற்றிருந்தால், அத்வானியின் தலைமையை ஆதரிப்போரின் கரங்களைப் பலப்படுத்துவதாக அது இருந்திருக்கும்.

மோடியின் மகத்தான வெற்றியானது, அவரை அத்வானி சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும். நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் விருப்பப்படிதான் கட்சி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனது விருப்பப்படியே தேர்தல் டிக்கெட் வழங்கப்படுவதை அவர் உறுதிசெய்துவிடுவார்.

பாரதிய ஜனதா கட்சிக்கும்கூட மோடியின் வெற்றியானது கசப்பும் இனிப்பும் கலந்த மாத்திரை போன்றுதான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த, சோர்வுற்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது குஜராத் தேர்தல் வெற்றி.

அதே நேரத்தில், தனியொருவரின் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமையை வலியுறுத்திவரும் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நரேந்திர மோடியின் எழுச்சியானது, ஏற்றுக்கொண்டாக வேண்டிய புதிய பரிமாணமாக அமைந்துவிட்டது.

சுருக்கமாக கூறவேண்டுமானால் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மக்கள் தலைவர் குஜராத்தில் இருந்து உருவாகி வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


மோடியின் வெற்றியும்- சோவின் துள்ளலும்!Viduthalai Editorial

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்துவிட்டது. நரேந்திர மோடி தான் வெற்றிக்குக் காரணம். நரேந்திர மோடியின் நேர்மையும், நல்லாட்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
சோனியா தாக்குதல், பிரதமர் பிரச்சாரம், வெளியேறிய பா.ஜ.க.,வினர், டெகல்கா விவகாரம் பத்திரிகைகள் எதிர்ப்பு, டெலிவிஷன்கள் கண்டனம், ஜாதிப் பிளவு – முயற்சி இவற்றை எல்லாம் மீறி மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று அட்டைப் படத்திலிருந்து தலையங்கம் வரை தீட்டி திருவாளர் சோ ராமசாமி துள்ளிக் குதிக்கிறார்.
நீரோ மன்னன் என்று இந்திய உச்சநீதிமன்றம் எந்த அர்த்தத்தில் விமர்சனம் செய்தது என்பதுபற்றி எல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், அவர் ஆட்சியைப் பயன்படுத்தி சிறு பான்மை மக்களை நரவேட்டையாடிய கொடுமை எல்லாம் சரியானதுதான் என்று திருவாளர் சோ. ராமசாமி சொல்ல வருகிறார் போலும்.

இதன்மூலம், சிறுபான்மை மக்களைப் படுகொலை செய்வது சரிதான் என்ற உற்சாகத்தை இந்து வெறியர் களுக்கு அவர் ஊட்ட முனைகிறார் என்று கருதலாமா?

இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி களைப் பிரித்துவிட்டால் என்ன அக்கிரமம், கொடூரமான – காட்டுவிலங்காண்டித்தனமான முறையில் செயல்பட்டாலும், வெற்றி கிடைக்கும் – அந்த வழியை நரேந்திர மோடி பின் பற்றி வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிலை இந்தியா முழு வதும் புயல் வேகத்தில் பரவட்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மதக் கலவரத்தை நடத்தினால்தான் வாக்கு வங்கிகளை இரு கூறுகளாகப் பிரித்து குளிர்காயலாம் என்று திருவாளர் சோ எழுதுவதை நிதானமாகக் கவனிக்கத் தவறக்கூடாது. தொடக்க முதலே நரேந்திர மோடியின் பக்கம் நின்று அவருக்குத் தொடர்ந்து சோ பராக்குக் கூவுவது இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான்.

பா.ஜ.க.,வின் செயற் குழுவில் அவர் பெயர் இல்லை என்ற போது கடுமையாக பா.ஜ.க.,வின் தலைமையைச் சாடி தலையங்கம் தீட்டிய பார்ப்பனர் இவர் என்பதை நினைவுகூர்ந்தால், இவரும் இன்னொரு வகை யிலான நரவேட்டை நரேந்திர மோடியின் மறுபதிப்புதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

டெகல்கா படம் பிடித்து அதிகாரப்பூர்வமாக ஆதாரப்பூர்வ மாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே – அவற்றை மோடியால் மறுக்க முடிந்ததா? மக்கள் வாக்களித்து முடிவு செய்கின்ற தீர்ப்பா இது? சொந்த கட்சி சட்டமன்ற உறுப் பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனரே – அவை எல்லாம் இல்லாமல் போய்விடுமா?

ஆட்சியின் சிறப்பைப்பற்றியெல்லாம் ஆகா ஓகோ என்று எழுதித் தள்ளியிருக்கிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது இந்த மோடி ஆளும் குஜராத்தில்தானே?

அய்ந்து ஆண்டுகாலம் அகதிகள் முகாம்களில் சிறு பான்மையினர் இருக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? பாசிச ஆட்சி என்றுதானே கருதவேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சாலைகளும், விளக்குகளும், வசதி களும் இந்துக்கள் வாழும் தெருக்களில் மட்டும்தான்; சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தொலைக்காட்சிகளே படம் எடுத்துக் காட்டினவே – மறுக்க முடியுமா?

படுகொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப் படுத்த தேர்தல் ஒன்றுதான் சரியான வழி – நீதிமன்ற முறை என்ற ஒன்று கூடாது என்று கூறப் போகிறதா இந்தக் கூட்டம்?

இதற்கு முன் தேர்தல் வெற்றி பெற்றவர்களையும், கட்சி களையும் – நரேந்திர மோடி வெற்றியின் கண்ணோட்டத்தில் சோ விமர்சித்ததுண்டா?

அடிப்படை ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு பார்ப்பனரிட மிருந்து வேறு வகையாக எதிர்பார்க்க முடியாதுதான்!

————————————————————————————————————————-
மகேசன் தீர்ப்பு
Dinamani Editorial

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!

————————————————————————————————————————-
குல்தீப் நய்யாரின் கூற்றைக் கவனியுங்கள்

Viduthalai Editorial

பிரபல அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் எழுதி யுள்ள கட்டுரை ஒன்றில் குஜராத் தேர்தல்பற்றி நுணுக்கமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) வகுப்புவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கையை ஏன் மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை.

(2) நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் வகுப்புவாதம் மட்டுமே கொள்கையாக இருந்தது – இருக்கிறது.

(3) முசுலிம்களுக்கு எதிராக நபருக்கு நபர் எதிர்பிரச்சாரம் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.

(4) இந்துத்துவா கொள்கையை வைத்து மோடியும், பா.ஜ.க.,வும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரண்டாக அல்லது மூன்றாக நாட்டைப் பிரித்துக் கொண்டு இருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான விஸ்வ இந்துபரிசத் கிறித்தவர்களைக் குறி வைக்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி., ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு வி.எச்.பி., செய்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

(5) வகுப்புவாதம் மோசமான நிலையில் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பெருமைகளைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

(6) வகுப்பு வாதத்தை எதிர்ப்பதை காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அது வெற்றி பெற்றால், பாசிசம் உண்டாகும்.

(7) குஜராத் ஒரு மாநிலம் அல்ல; அது இந்துத்துவா என்ற கொள்கையின் அடையாளமாக ஆக்கப்பட்டுவிட்டது. முழுப் பிரச்சாரத்தையும் ஒரே ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டனர். நீங்கள் ஒரு இந்து என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.
அனேகமாக அரசியல் விமர்சகர் குல்தீப் நய்யார் குஜராத் தேர்தலை மட்டுமல்ல; இந்துத்துவாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., அதன் சங் பரிவாரங்களின் நச்சுத் தன்மையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இனிமேல் அரசியல் நடத்த விரும்பும் நியாயவாதிகள், முற்போக்குக் கொள்கையாளர்கள், இடதுசாரிகள் யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் வரப்புகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே.பி., வகையறாக்களுக்கு எப்படி ஒரு பார்வை – இந்து என்ற பார்வையை மட்டும் மய்யப் படுத்தி மக்கள் மத்தியில் தூபம் போட்டு மதத் தன்மையில் ஒன் றிணைக்க விரும்புகிறார்களோ, அதேபோல, ஒரே நோக்கம், ஒரே பார்வை, ஒரே பாய்ச்சல் இந்த மதவாத – வகுப்புவாத சக்திகளை அவற்றின் ஆணி வேர் வரை சென்று நிர்மூலம் செய்வதில்தான் இருக்க வேண்டும்.

முதன்மையாக தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு முக்கியமாக இந்த குறிக்கோள் இருக்கவேண்டும்; அதன் அடிப்படையில் மதச் சார்பற்ற சக்திகளைச் சேதாரம் இல்லாமல், வீண் சச்சரவுகளை உண்டாக்கும் பிரச்சினை களை உற்பத்தி செய்யாமல், அணைத்துச் செல்லும் பக்குவத்தோடு பலத்தைப் பெருக்கி, ஒரே மூச்சில் மதவாதத்தை வீழ்த்தித் தள்ளிட வேண்டும்.

குஜராத்தில் இவ்வளவுப் பச்சையாக மதவாதத் தேர்தல் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் எப்படி அவற்றை அனுமதித்தது என்றே தெரியவில்லை.

பா.ஜ.க., செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அதன் பார்வை திரும்பக்கூடும்; அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அது பகற்கனவு என்று காட்ட வேண்டியது அம்மாநிலங்களின் கடமையாகும். அடுத்து நடக்க உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மதச் சார்பற்ற சக்திகள் ஒரு சோதனைக் களமாகக் கருதவேண்டும்.

2009 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்த லுக்குமுன் இந்த வகையில் தீவிரமாக திட்டமிட்ட வகையில் அறிவியல் கணிப்போடு செயல்பட்டே தீரவேண்டும்.
சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதுண்டு. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது என்பதையும் மனதிற்கொண்டு, சோர்வுக்குச் சிறிதும் இடமின்றி, தன்னம்பிக்கையுடன் இடதுசாரிகளும், மதச் சார்பற்ற அணிகளும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டியது அவசியம்.

————————————————————————————————————————-

Posted in Aajtak, abuse, Advani, America, Arrest, Ayodhya, Ayodya, Ayothya, Bajrang, Bharatiya Janata Party, BJP, CBI, Censure, Chowdhry, Chowdhury, CNN, Condemn, Congress, crimes, Criminal, dead, Elections, Expose, Godhra, Gujarat, Hindu, Hinduism, Hindutva, HT, Investigation, Islam, Judges, Justice, Killed, Law, massacre, Media, MLA, Modi, MP, MSM, Muslim, Nanavati, Narendhra, Narendra, Narendra Modi, Narenthira, Neerja, Operation Kalank, Order, Party, pogrom, Police, Polls, Power, Revelations, riots, RSS, Sting, Tehelka, USA, Vajpai, Vajpayee, Vajpayi, VHP, Vidudhalai, Viduthalai, Violence, Visa, Vituthalai | Leave a Comment »

Dawood Ibrahim: India CBI vs Pakistan ISI in US of America’s CIA

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

———————————————————————————————————————–
தாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு

இஸ்லாமாபாத், ஆக.8-

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.

தாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.

இத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப

இவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.

தாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.

இது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.

இதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.

என் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.

இவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.
———————————————————————————————————————–
13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது

மும்பை, ஆக. 7-

1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.

இதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.

இதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து

வருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா? என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

தாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

என்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.

கடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.

அது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
———————————————————————————————————————–

Posted in 1993, 9/11, AK-47, AK47, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Al-Umma, America, Arabia, Arms, Arrest, Assets, Backgrounder, Baluchistan, Bharatiya Janata Party, Biosketch, BJP, Blast, Bombay, bombings, Bombs, CBI, Chhota, Chhota Rajan, Chhota Shakeel, Chota, CIA, Clifton, Clifton beach, Clifton Kahakasha, Cocaine, Commerce, Company, Criminal, Currency, Custody, D-company, Dawood, Dawood Ibrahim, dead, Dealer, Death, defence, Defense, Detained, Detainee, Don, Drugs, Dubai, Dutt, Estate, Extortion, extradition, Extremism, Extremist, Extremists, Faces, Fake, Finance, Gulf, Haseena, Haseena Parkar, Hasina, Havala, Hawala, Hindutva, Ibrahim, Illegal, India, Intelligence, Inter Services Intelligence, Interpol, Investigation, Iraq, ISI, Islam, Jama’at ud-Dawa, Justice, Karachi, Kovai, Law, Masjid, Memon, Military, Money, Movies, Mumbai, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Muslim, Narcotics, Navy, NDA, Order, Pakistan, Parkar, people, Pervez, Pervez Musharraf, Police, Property, Quetta, Rajan, RSS, Saudi, Security, Shakeel, Smuggle, smuggler, Smuggling, Terrorism, terrorist, Terrorists, Tiger, Treaty, UAE, Underworld, UPA, US, USA, Weapons, WTC, Yakub, Yakub Memon | Leave a Comment »

Coimbatore blasts: Top accused Madani acquitted; Al-Umma founder S A Basha, 72 others convicted

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2007

கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு

கோவை, ஆக. 1-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.

ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு

புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.

பாஜக அதிருப்தி

கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.

“பிரார்த்தனை பலித்துவிட்டது’

கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.

மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–

5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்

கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.

இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.

வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

———————————————————————————————————————–

சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?

கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.

எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர்கள் விவரம்:

சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.

யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.

கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.

———————————————————————————————————————–

பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்

கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.

தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.

———————————————————————————————————————–

69 பேருக்கு கடும் தண்டனை?

கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:

எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.

இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

———————————————————————————————————————–

“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’

கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.

இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.

———————————————————————————————————————–

பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.

குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

———————————————————————————————————————–

கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி

கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:

கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

———————————————————————————————————————–

மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்

கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.

தனிகோர்ட்டு தீர்ப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிம்மதி அளிக்கிறது

எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.

அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–

ஜாமீனா? விடுதலையா?

கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.

பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.

இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.

மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.

ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.

இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.

இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.

மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்

ஒலி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்

Posted in 1997, 1998, Abdul Nasser Madani, acquit, Advani, Al-Umma, AlUmma, Ansari, Arms, Assassination, Baasha, Baatcha, Baatchaa, Basha, Bharatiya Janata Party, BJP, Blast, Blasts, Bombs, Campaign, case, CBI, chairman, Coimbatore, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Congress, consipiracy, constable, Convict, conviction, Courts, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Extremism, Extremists, founder, Guilty, Hindu, Hinduism, Hindutva, Investigation, ISI, Islam, Judge, Justice, Kerala, Kovai, L K Advani, Law, Leader, LK Advani, Madaani, Madani, Madhani, Malayalam, minority, Mogammad, Mohammad, Mohammed, Mohammed Ansari, Muhammad, Murder, Muslim, Order, PDP, People's Democratic Party, policeman, RAW, Religion, retaliation, RSS, SA Basha, Selvaraj, Serial, SIT, Terrorism, Terrorists, THIRUVANANTHAPURAM, Trivandrum, Weapons | Leave a Comment »

Bengal shuts down to protest violence in Nandigram, Singur

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

கறுப்பு நாள்

மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————–
Monday November 26 2007

மதிப்பை இழந்த மார்க்சிஸ்ட்

நீரஜா சௌத்ரி

மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.

இத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.

2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.

நந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.

ஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.

எதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

எந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.

“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

நந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.

ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

எனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.

அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.

நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.

நந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.

கோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.

இடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.

நந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.

அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.

தனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.

Posted in acquisition, Ashim Dasgupta, Ban, Bengal, Bharatiya Janata Party, BJP, Buddhadeb Bhattacharya, Calcutta, Centre for Indian Trade Union, CITU, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), CPI, CPI (M), CPI(M), CPI-ML, dead, Dinajpur, Exports, Finance, Government, Howrah, Kolkata, Land, Law, Left, Mamata, Mamata Banerjee, Mamta, Mamtha, Mamtha bannerjee, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Nandhigram, Nandigram, Natives, Oppression, Order, Panchla, Police, Property, Protest, Sealdah, SEZ, Singur, Socialism, Socialist Unity Centre of India, SUCI, TATA, TMC, tribal, Tribal People, Tribals, Trinamool, Trinamool Congress, Trinamul, Uttar Dinajpur, Violence, WB, West Bengal | 3 Comments »

BJP president names new team of party officials – Thirunavukkarasar in & Modi out

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

சு. திருநாவுக்கரசர் பாஜக செயலர்; ஆட்சிமன்றக் குழுவிலிருந்து மோடி நீக்கம்

புது தில்லி, ஜன. 30: பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டிருக்கிறார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கட்சியின் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இம் முறை இடம் பெறவில்லை. முன்னாள் பிரதமர் வாஜபேயியின் சகோதரி மகளான கருணா சுக்லா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அத்வானியை வெளிப்படையாக விமர்சித்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆபாச சி.டி.யில் இடம் பெற்றதாக பத்திரிகைகளிலும் மொபைல் எஸ்எம்எஸ்களிலும் பிரபலமான சஞ்சய் ஜோஷி கட்சியின் பொதுச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங் நிர்வாகிகள் குழுவில் பெருத்த மாற்றங்களைச் செய்திருக்கிறார். புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:

கட்சியின் தேசிய துணைத் தலைவர்கள்:

  • கல்யாண் சிங்,
  • பாளாசாஹேப் ஆப்தே,
  • சாந்தகுமார்,
  • சாஹிப்சிங் வர்மா,
  • யஷ்வந்த் சின்ஹா,
  • முக்தார் அப்பாஸ் நக்வி,
  • ஜுயல் ஓரம்,
  • கைலாஷ் மேக்வால்,
  • கருணா சுக்லா.

பொதுச் செயலாளர்கள்:

  • அருண் ஜேட்லி,
  • அனந்த குமார்,
  • கோபிநாத் முண்டே,
  • வினய் கட்டியார்,
  • தாவர்சந்த் கெலோட்,
  • ஓம்பிரகாஷ் மாத்துர்,
  • ராம்லால்,
  • ஜகதீஷ் ஷெட்டிகர்,
  • அனில் ஜெயின்,
  • ஹுகும்தேவ் நாராயண் யாதவ்,
  • ராஜீவ் பிரதாப் ரூடி,
  • காந்த நளவாடே.

தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:

  • அடல் பிகாரி வாஜபேயி,
  • லால் கிருஷ்ண அத்வானி,
  • ஜஸ்வந்த் சிங்,
  • முரளி மனோகர் ஜோஷி,
  • வி. வெங்கைய நாயுடு,
  • கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி,
  • பங்காரு லட்சுமணன்,
  • சுஷ்மா ஸ்வராஜ்,
  • விஜய்குமார் மல்ஹோத்ரா,
  • ஜே.பி. மாத்துர்,
  • சி.பி. தாக்குர்,
  • நஜ்மா ஹெப்துல்லா,
  • சுமித்ரா மகாஜன்,
  • பி.சி. கந்தூரி,
  • அருண் செüரி,
  • சத்ருகன் சின்ஹா,
  • மேனகா காந்தி,
  • கல்ராஜ் மிஸ்ரா.

Posted in AB Vajbayee, Atal Bihari Vajpayi, Bharatiya Janata Party, BJP, central parliamentary board, Committee, Elections, general secretary, Gopinath Munde, key functionaries, Lal Krishna Advani, LK Advani, Members, Modi, Narendra Modi, Nominations, Office bearers, Officebearers, organisational affair, organisational affairs, Party, Politburo, Politics, Pramod Mahajan, Rajnath Singh, Ramlal Agarwal, Rashtriya Swayamsevak Sangh, RSS, Sanjay Joshi, spokesman, tenure, Thirunavukkarasar, Thirunavukkarasu, Uttar Pradesh, Vajpayee, vice-president, Yashwant Sinha | Leave a Comment »

Hema Malini rubs north Indians the wrong way

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

மும்பை, ஜன. 26: நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (படம்), வட இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹேமமாலினியிடம்

“மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஹேமமாலினி

“அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’

என பதிலளித்திருந்தார். ஹேமமாலினியின் இந்த பதிலால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் தல்வாய் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

ஹேமமாலினி முதலில் தான் ஒரு பொறுப்புள்ள எம்.பி. என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நடிகை. அவருடைய கணவர் -நடிகரும், எம்.பி.யுமான தர்மேந்திரா வட இந்தியர்தான்; அவருடைய மகள்களும் பாதி வட இந்தியர்கள்தான். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ஹேமமாலினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து குடியேறிய வட இந்தியர்கள்தான் மும்பை மக்கள் தொகையில் ஏராளமானோர் என்பதும், ஹேமமாலினி தமிழில் அறிமுகமாகி இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்கள் பற்றி நான் கூறிய கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளது: ஹேமமாலினி

மும்பை, ஜன. 27: வட இந்தியர்கள் குறித்து தான் கூறியதாக தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அவர்களுக்கு பிரச்சினை என்றால் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’ என்று பதிலளித்தார். ஆனால் இதற்கு பல தரப்பிலும் பலத்த கண்டனம் எழுந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் கூறியுள்ளதாவது:

வட இந்தியர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் தவறாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தபோது, சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னை அணுகி கருத்து கேட்டனர். அப்போது மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு சத்தமாக இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக கேட்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் நான் சிரித்துக்கொண்டேதான் அவர்களுக்கு பதிலளித்தேன்’ என்றார்.

வட இந்தியர்களை அளவுக்கதிகமான மரியாதையுடன் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். மும்பையை விட்டு அவர்களை வெளியேற சொல்லவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனைக் கூறும் அதிகாரமோ எனக்கில்லை.

இதற்குமேலும் அரசியல் கட்சிகள் நான் கூறியதாக தெரிவித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

Posted in Bharatiya Janata Party, BJP, Bombay, Brihanmumbai Municipal Corporation, Civic Polls, Elections, Hema Malini, Hemamalini, India, Local Body Polls, Mumbai, north India, Polls, Quote, racism, Racist, Rajya Sabha | Leave a Comment »