Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Predictions’ Category

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

Madurai Bye-elections – June 26 Polls: Congress, DMK, ADMK, Vijaikanth, Azhagiri

Posted by Snapjudge மேல் மே 26, 2007

மதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்!

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.

அதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.

தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.

எனவே, வறுமையில் வாடும் மதுரை நெசவாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.

திமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.

அதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

தினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.

அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.

காங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.

தேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை

  • கம்யூனிஸ்ட் 2 முறையும்,
  • அதிமுக 4 முறையும்,
  • திமுக,
  • காங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.

———————————————————————————————————————————

ஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்

புதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.

வாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.

இடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

——————————————————————————————————————-

மதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு?

பா. ஜெகதீசன்

சென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.

எனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.

தி.மு.க. பின் வாங்கியது ஏன்?

அதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.

காங். நிலை:

இந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.

அ.தி.மு.க.வின் பிரச்னை:

இந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.

தேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.

கடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.

இந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.

2006 தேர்தலில்…:

2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.

சண்முகம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த தேர்தல்களில்…:

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):

1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.

1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.

1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.

1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.

1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.

1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.

1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.

1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.

2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.

அ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

—————————————————————————————————

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்

மதுரை, மே. 30-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனாலும்

  • மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன்,
  • மாவட்ட செயலாளர் ராஜாங்கம்,
  • தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன்,
  • அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,
  • ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,
  • கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை

  • காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,
  • மாணவரணி செயலாளர் உதய குமார்,
  • முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,
  • முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம்,
  • முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,
  • எம்.எஸ்.பாண்டியன்,
  • தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்

  • கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,
  • விஜயகாந்த் மனைவி பிரேமலதா,
  • மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.

எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.

————————————————————————————-

இடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா?

மதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.

சென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

இதில் மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

விலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

————————————————————————————-

மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜ×ன். 4-

மதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.

முதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

செல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.

செல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

—————————————————————————————————–

மதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்

மதுரை, ஜுன். 9-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.

இதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.

1. கோரிப்பாளையம்,
2. தல்லா குளம்,
3. கரும்பாலை,
4. தத்தனேரி,
5. பந்தல்குடி,

6. சின்னகீழத்தோப்பு,
7. மீனாம்பாள்புரம்,
8. ஜம்புரோ புரம்,
9. நரிமேடு,
10. செல்லூர்,

11. 50 அடிச்சாலை,
12. 60 அடி சாலை,
13. பி.டி.புரம்,
14. அருள்தாஸ்புரம்,
15. பெத்தானியாபுரம்,

16. அழகரடி,
17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.

இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.

பதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounder, Bye-elections, CB-CID, CBI, Chellur Raju, Chengottaian, Chengottaiyan, CID, Colour TV, Congress, DDMK, Desiya Murpokku Dravida Kalagam, Desiya Murpokku Dravida Kazhagam, Dhinakaran, Dhinamani, Dinamalar, Dinamani, Dist Secy, District, DMDK, DMK, Economy, Elections, Free, History, Inflation, Jagadeesan, Jagadhisan, Jegadeesan, Jegadessan, Jegadhisan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Loser, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madhusoodhanan, Madhusudhanan, Madhusuthanan, Madurai, Madurai West, Manifesto, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, O Paneerselvam, Op-Ed, Opinion, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Polls, Predictions, PTR, Rajan Chellappa, Recession, Research, Secretary, Sellur Raju, Sengottaian, Sengottaiyan, Survey, VaiGo, Vaikai, VaiKo, Viduthalai Chiruthaigal, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Winner | 13 Comments »

Polls for six Tamil Nadu Rajya Saba seats on June 15

Posted by Snapjudge மேல் மே 15, 2007

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதிமுகவைச் சேர்ந்த ஆர். காமராஜ்,
  • எஸ். கோகுல இந்திரா,
  • எஸ்.எஸ். சந்திரன்,
  • பி.ஜி. நாராயணன்,
  • திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன்,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன்

ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

  • அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்கள்,
  • காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர்,
  • திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள்

தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8.

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பதவிகளுக்கு வேட்பாளர்கள் யார்?: தமிழக கட்சிகளில் பரபரப்பு

மாநிலங்களவையில் மொத்தம் 229 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளனர்.

கட்சிகளின் பலம்:
தற்போது பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களில் கட்சி வாரியாக பலம்:

  • தி.மு.க. – 95;
  • அ.தி.மு.க. – 61;
  • காங்கிரஸ் – 34;
  • பா.ம.க. – 18;
  • மார்க்சிஸ்ட் – 9;
  • இந்திய கம்யூனிஸ்ட் – 6;
  • ம.தி.மு.க. – 6;
  • விடுதலைச் சிறுத்தைகள் – 2;
  • தே.மு.தி.க. -1;
  • சுயேச்சை 1;
  • நியமன உறுப்பினர் 1;
  • பேரவைத் தலைவர் -1.

(மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் காலமானதால், அத்தொகுதி காலியாக உள்ளது.)

காங்கிரஸில் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தில் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட

  • பி.எஸ். ஞானதேசிகனே நிறுத்தப்படலாம்.
  • அல்லது ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார்,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,
  • ஜெயந்தி நடராஜன்,
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, அவருக்கோ,
  • தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிக்கோ

கூட இந்த இடத்தை காங்கிரஸ் மேலிடம் அளிக்கலாம்.

தி.மு.க.வைப் பொருத்தவரை, தனக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அல்லது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுத் தர எண்ணி உள்ளது.

எஞ்சிய 2 இடங்களில்

  • அழகிரி அல்லது அவர் சுட்டிக் காட்டும் நபர்,
  • கனிமொழி,
  • டி.கே.எஸ். இளங்கோவன்,
  • திருச்சி சிவா,
  • டாக்டர் கே.பி. ராமலிங்கம்,
  • தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,
  • முன்னாள் அமைச்சர்கள் அ. ரகுமான்கான்,
  • எஸ்.பி. சற்குணபாண்டியன்,
  • இந்திரகுமாரி,
  • கோவை மு. ராமநாதன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சரவணன்,
  • புகழேந்தி,
  • ஜெ. அன்பழகன்,
  • தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிபவர்களில் ஒருவரான கே.பி.கே. குமரன்

போன்றவர்களில் யாராவது இருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம்.

அ.தி.மு.க.வைப் பொருத்தவரை

  • சசிகலா அல்லது அவர் சுட்டிக் காட்டும் ஒருவர்,
  • கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன்,
  • முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி,
  • எஸ். முத்துசாமி,
  • நயினார் நாகேந்திரன்,
  • தளவாய் சுந்தரம்,
  • கட்சி நிர்வாகி ஆதிராஜாராம்

உள்ளிட்டோரில் யாராவது இருவர் நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

====================================================
காங்கிரஸில் மீண்டும் கோஷ்டிப் பூசல்

பா. ஜெகதீசன்

சென்னை, மே 17: கடலில் அலைகள் ஓயாது; அதைப் போல, தமிழ்நாடு காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் தீரவே தீராது.

இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், தற்போதைய மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு காங்கிரஸில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தேர்தலில் காங்கிரஸýக்குக் கிடைக்கக் கூடிய ஒரே ஓர் இடத்தில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் அக்கட்சியினர் இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றனர்.

பழைய த.மா.கா. அணியினரில் யார் நிறுத்தப்பட்டாலும், அவர்களை எதிர்ப்போம் என்று “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணி’யைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தங்களது எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டால், தாங்கள் எதிர்க்கப் போவதாக பழைய த.மா.கா. அணியினர் பதிலுக்குக் கூறி உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க ஜூன் 15-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து இந்த 6 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது பேரவையில் காங்கிரஸýக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் நிச்சயம் ஒரு பதவி அக்கட்சிக்கு கிடைக்கும்.

வாய்ப்பு கேட்பவர்கள்: அந்த இடத்தில் மீண்டும் போட்டியிட தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடியும் நிலையில் உள்ள பி.எஸ். ஞானதேசிகனுக்கே வாய்ப்பு தர வேண்டும் என்று பழைய த.மா.கா.வினர் கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளனர்.

ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார், சட்டப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனை இத்தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கட்சியின் ஒரு பிரிவினர் மேலிடத்திடம் கேட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு இப்பதவி தரப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.

இரு அணிகளின் மோதல்: ஏற்கெனவே, சட்டப் பேரவையில் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி. சுதர்சனத்தின் தலைமையில் பழைய த.மா.கா.வினரும், மூத்த நிர்வாகி போளூர் வரதனின் தலைமையில் “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வருபவர்களும்’ இரு அணிகளாகப் பிரிந்து நின்று, ஒருவருக்கு ஒருவர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பேரவையின் பட்ஜெட் தொடர் கூட்டம் நிறைவடைந்த திங்கள்கிழமை கூட இரு அணியினரும் மோதிக் கொண்டனர். பேரவைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக சுதர்சனம் எடுத்த நிலையை வரதன் எதிர்த்தார். வரதனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சில விளக்கங்களை சுதர்சனம் அளித்தார்.

இறுதியில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் கடிதத்தை சுதர்சனத்திடம் வரதன் அளித்தார். அக்கடிதத்தில் 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எக்காரணம் கொண்டும் பழைய த.மா.கா.வினரை நிறுத்தக் கூடாது என்பதைக் கட்சியின் அகில இந்திய மேலிடத்திடம் வலியுறுத்துவோம். அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டோம். விரைவில் மேலிடத்தைச் சந்திப்போம் என்று “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணி’யினர் தெரிவித்தனர்.
==========================================================
மாநிலங்களவை இந்திய கம்யூ. வேட்பாளர் து.ராஜா?

கோவை, மே 17: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் ஓர் இடத்தில் அக்கட்சியின் தேசியச் செயலர் து.ராஜா (50) நிறுத்தப்பட உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலின்போது நாகப்பட்டினம் தொகுதியை இவருக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. திமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதால், திமுக தக்கவைத்துக் கொண்டது. இதனால், போட்டியிடும் வாய்ப்பு ராஜாவுக்குக் கடந்த முறை கிடைக்கவில்லை.

சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விடக் கூடுதல் தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட மன வருத்தத்தைப் போக்க, மாநிலங்களவையில் காலியாகும் இடத்தில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க திமுக முன்வந்தது. இந்நிலையில், அக் கட்சியின் தேசியச் செயலர் ராஜா வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. ராஜாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

கட்சியில் அகில இந்தியப் பொதுச்செயலர் ஏ.பி.பரதனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் ராஜா. காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர்.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜா தேசிய அரசியலில் இருப்பதால், அவரை கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது அவசியம் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கருத்து நிலவுகிறது.

கட்சியினர் விரும்பிக் கேட்டுக் கொண்டபோதும் வயது, உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஆர்.நல்லகண்ணு ஒப்புக் கொள்ளவில்லை. இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என அவர் தெரிவித்ததால், கே.சுப்பராயன் கோவை மக்களவைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.

தமிழக வரலாற்றில் கல்யாணசுந்தரத்துக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in ADMK, Assembly, Communist, Congress, CPI, DMK, Elections, Polls, Predictions, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Results, TN | 1 Comment »

Indian Budget 2007-08 : Preview analysis – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பட்ஜெட் பற்றிய குறிப்புகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகலில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையை நிதிநிலை அறிக்கைக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். அதில்தான் மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து அறியப்படும்.

நிதிநிலை அறிக்கையைப் பற்றி சில குறிப்புகள்: நமது அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்ஜெட்’ என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்கு சென்றார். அத்தோல் பைக்கு “பட்ஜெட்’ என்று பெயர். அந்தப் பைக்கு உரிய பெயர், நாளடைவில் அதன் உள்ளே இருந்த ஆவணங்களுக்கு ஆகுபெயராகியது. இந்திய அரசியலமைப்பில் இதற்கு “ஆண்டு நிதிநிலை அறிக்கை’ என்னும் பெயரே வழங்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அடுத்துவரும் ஆண்டில் கிடைக்கக்கூடிய வரவுகளையும், செலவுகளையும் துல்லியமாக மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகால செலவினங்களையும் வருங்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய செலவு மதிப்பீடுகளையும் கருத்தில்கொண்டு இம் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

நிதிநிலை அறிக்கையில், அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – செலவினங்கள் என்பதில் கூறப்பட்டுள்ள மொத்தச் செலவை, அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – வரவினங்கள் என்று கூறப்பட்டுள்ள வருவாயிலிருந்து கழித்தால் வருவாய் உபரி கிடைக்கிறது. இதனைக் கொண்டு அந்த ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் செய்யப்படுகின்றன. எனினும், சமீப காலங்களில் வழக்கமாக, வருவாயைவிட செலவு அதிகமாக இருந்து வருகிறது. இது வருவாய்ப் பற்றாக்குறை என்ற அடிப்படையில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிலைநிதிக்குழு – அமைச்சரவை ஒப்புதல்: இந்தப் பகுதி – ஐஐ செயற்குறிப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளால் தயாரிக்கப்பட்டு, திட்டக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. திட்டக்குழு, திட்டமிடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, உயர் முன்னுரிமை வாய்ந்த திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்கிறது.

இக்குழு, ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது. துறைகளின் ஒவ்வொரு திட்டத்தையும், துறைகளுக்கு இடையேயான ஒவ்வொரு திட்டத்தையும் முன்னுரிமைகளையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில்கொள்கிறது.

இறுதியாக புதிய திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. பகுதி – ஐ, பகுதி – ஐஐ மதிப்பீடுகளைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டு முடிவாக உருப்பெரும் இறுதி வடிவம், பொதுவாக, மத்திய திட்டக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட அளவுக்கேற்பவும், அக்குழுவின் பரிந்துரைகளின்படியும் அமைகிறது.

நிதி ஒதுக்கீடு: இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏற்பளித்தவுடன் அதில் விவரிக்கப்பட்டுள்ள செலவுகளைச் செய்ய அரசு அனுமதியளிக்கிறது. இதுவே “நிதி ஒதுக்கீடு’ என்று அழைக்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்ட முன் மதிப்பீடுகள்: வரப்போகும் ஆண்டில் பல்வகை ஆதாரங்களிலிருந்தும் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரவுகளை மதிப்பிடுதல்.

இந்தப் பணத்தையும் முந்தைய ஆண்டின் கையிருப்பையும் ஒருங்கு சேர்த்தால் எதிர்பார்க்கப்படும் எல்லாச் செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து மதிப்பிடுதல்.

வரவையும் செலவையும் ஈடுகட்ட வரி விதிப்பை எந்த அளவுக்குக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பதை முடிவு செய்தல் ஆகியவையாகும்.

“தொகு நிதி’ – Consolidated Fund என்பது வரவு – செலவுத் திட்ட அறிக்கை – ஐ -) வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் காட்டப்பட்டுள்ளபடி, ஓர் ஆண்டில் கிடைக்கும் அரசின் இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது.

“சாட்டிய செலவுகள்’ (Charged Expenditure) என்பவை தொகு நிதியில் முதல் பொறுப்பாக உள்ள செலவுகள் ஆகும். இவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை.

“எதிர்பாராத செலவு நிதி’ (Contingency Fund) என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்னர் நிர்வாகத்தினரின் அவசரச் செலவுகளுக்கு வகை செய்வதாகும்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பற்றிய பல சுவையான விவரங்கள்:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதாவது நாலைந்து மாதங்களுக்கு முன்பே மத்திய நிதியமைச்சகம் இப்பணியைத் தொடங்கி விடுகிறது. நிதியமைச்சகத்தின் செயலாளர் பொருளாதார நிபுணர்களுடனும், நிதி ஆலோசகர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் இதர பல தரப்பினருடனும் இதுகுறித்து ஆலோசிக்கிறார். பின் நிதித்துறை ஒவ்வோர் அமைச்சகத்தின் செலவு குறித்து அறிக்கையைப் பெறும். இறுதியாகக் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு நகல் அறிக்கை “தேசிய தகவல் மையத்திற்கு’ அனுப்பப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு மிகவும் ரகசியமாக நடக்கிறது. அதைத் தயாரிக்கும் நிதித்துறை அலுவலகத்துக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அங்கு நூறு பேர் பணியில் இருப்பார்கள். துணைச் செயலாளர்கள், அச்சடிப்போர், பிழை திருத்துவோர், பைண்டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பர். இவர்கள் தங்கும் இடத்தில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து தரப்படும். அங்கு பூட்டிய தொலைபேசி மட்டும் இருக்கும். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும்தான் அதைப் பயன்படுத்த முடியும். இவர்களுக்குத் தேவையான உணவு நிதி அமைச்சக உணவு விடுதியிலிருந்து தயார் செய்து பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படும். இப்பணியில் ஏழு நாள்கள் ஈடுபட்டு இருப்போருக்கு பரிசுகளும், மூன்று மடங்கு ஊதியம் உயர்த்தியும் தரப்படும்.

பட்ஜெட் பிரதிகள் மொத்தம் 12,500 அச்சடிக்கப்படும். அந்த அச்சகத்திற்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி நிதிநிலை அறிக்கையின் விவரங்களோ நிதிநிலை அறிக்கையோ வெளியே தெரிந்தால் அரசு வெளியேற வேண்டும் என்ற மரபும் நடைமுறையில் உள்ளது. தேர்வெழுதும் மாணவரின் கேள்வித்தாள் போன்று பட்ஜெட் ரகசியம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய “சிதம்பர’ ரகசியமே.

தற்போது வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் நாட்டின் 61-வது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை வழங்கியது ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான். மத்திய நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் 5-வது தமிழர் ப.சிதம்பரம். இதற்கு முன் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி .டி . கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.

எட்டு முறை பட்ஜெட்டுகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தயாரித்து வழங்கிய மொரார்ஜி தேசாயின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

எனினும், 1951 – 52ஆம் ஆண்டிலிருந்து 1956 – 57 வரை மொத்தம் ஏழு பட்ஜெட்டுகளை (ஆறு முழுமையானவை, ஒரு இடைக்கால பட்ஜெட்) தொடர்ந்து வழங்கி சாதனை புரிந்துள்ளார் சி.டி . தேஷ்முக்.

நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயரும். அதுபோல் மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்ற அடிப்படைக்கு ஆதாரம் ஜனநாயகத்தில் ஆட்சியாளரின் வரவு – செலவுத் திட்டங்கள் ஆகும்.

இந்த வரவு – செலவுத் திட்டங்கள் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் சிந்தித்து தங்களுடைய கடமைகளை ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், தலைமைக் கழக செயலாளர்}மறுமலர்ச்சி திமுக).

Posted in 2007, 2007-08, Analysis, Backgrounder, Budget, Cabinet, Chidambaram, Chidhambaram, Commerce, Consolidated Fund, Details, Economy, Finance, India, Indian, P Chithambaram, Predictions, Preview, revenue, Tax | Leave a Comment »

Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு

புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.

சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.

அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.

உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.

இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.

சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.

தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.

90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.

உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.

================================================

முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்

புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.

ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.

ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

Posted in 2007, Analysis, Bombay, Bonus, Buddhism, Budget, Calcutta, Carriage, Chennai, City, Coach, Crap, Delhi, Double decker, Economy, Engines, Environment, Express, Finance, Freight, Goods, Guide Operator, human waste, Hygiene, ICF, Incentives, Interlink, Japan, Kapurthala, Kolkata, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loans, Madras, Manufacturing, Ministry, Mumbai, New Delhi, Own Your Coach, passenger, Perambur, Piss, Pollution, Predictions, Preview, Public-Private-Partnership, Railways, Reservation, Restrooms, Safety, Schemes, Security, Shit, Smell, Superfast, Toilets, Tour, Trains, Transportation, Travel, Urin, Urine, Velu, Waste | 1 Comment »