Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chandrababu Naidu’ Category

Telugu Actor Chiranjeevi to launch new political party in Andhra Pradesh

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007


நடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவில் பெரும் பரபரப்பு

நகரி, டிச.5-

நடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கம்ïனிஸ்டு தலைவர்கள்

ஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.

எனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மைத்துனர் ஆர்வம்

புதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


முந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”

2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”

3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”

4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Chanthirababu, Chanthirababu Naidu, Chanthrababu, Chanthrababu Naidu, Cinema, CM, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Eenadu, Election, Films, Media, MGR, Movies, MSM, Muslim, Naidu, Nayudu, NTR, Party, Pavan, Pavan kalyan, Pawan, Polls, Reddy, Roja, Sun, Superstar, TDP, Telugu, Telugu Desam, Tollywood, TV, voters, Votes | Leave a Comment »

Is it the treatment meted out to a 84 Year octogenarian – Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் மே 1, 2007

84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

————————————————————————————————

சாதனைகள் :
– ப்ரியன்
* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்
சந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே!

* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்
பேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.

* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.

* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.

* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.

* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.

* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.

* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.

* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.

* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.

* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.

* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது
திட்டங்களே.

* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.

* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு
நினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.

பின்னடைவுகள்:

* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த
பின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.

* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.

* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட

  • வீராணம்,
  • பூச்சி மருந்து,
  • கோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.

* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.

* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை
ஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.

* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்
மாவட்டங்களில் ஜாதிமோதல்கள் நடந்தன.

* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு
அறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.

* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.

* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.

* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்
பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.

* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடியக்கரை வழியாக
தப்பிச் சென்றது.

* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.

* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.

* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.

– ப்ரியன்

Posted in 50, 84, ADMK, Advani, AIADMK, Allegations, Anna, Annadurai, Assembly, Backgrounder, Barnala, Biography, Biosketch, Chandrababu, Chandrababu Naidu, Communist, Congress, DMK, EVR, Faces, Gandhi, History, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Kamaraj, kamarajar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lament, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Naidu, Narasimha Rao, Narasimharao, Nayudu, Party, people, Periyaar, Periyar, PMK, Politics, Rajeev, Rajiv, Speech, Statistics, Vajpayee, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Andhra MLAs to get software for analysing their Constituency

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

தொகுதி நிலவரத்தை அறிய ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சாப்ட்வேர்

ஹைதராபாத், மார்ச் 7: ஒரு இடத்தில் இருந்து கொண்டே தொகுதி நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு ஆந்திர எம்.எல்.ஏ.க்களின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாப்ட்வேரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கலாம். கிராமப்புறத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மக்களின் குறைகள் குறித்தும் கண்காணிக்கவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவும்.

முதல்கட்டமாக இந்த சாப்ட்வேர் 30 எம்.எல்.ஏ.களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Computer, Congress, Constituency, Deployment, Hyderabad, MLA, Naidu, Software, TDP, Telugu, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | 1 Comment »

State of Andhra Pradesh Temples – Financial statement

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

ஆந்திரத்தின் 2 ஆயிரம் கோவில்களில் அன்றாட நைவேத்தியத்துக்கே வழியில்லை!

விசாகப்பட்டினம், மார்ச் 5: ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய 3 கடலோர மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அன்றாட பூஜைக்கும் நைவேத்தியத்துக்கும் வழியில்லாமல் இருக்கிறது.

ஆலயத்துக்கு கிடைக்கும் வருவாய் அடிப்படையில் கோயில்களை மாநிலத்தில் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருப்பவை “ஏ’ பிரிவு. ஆண்டு வருவாய் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருப்பவை “பி’ பிரிவு. ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவானவை “சி’ பிரிவு. இவை தவிர மேலும் 2,800 கோவில்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்தவை.

இப்போது சி பிரிவு கோயில்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,500 அர்ச்சகர்களுக்கு ஊதியமாக தரப்படும். தூப, தீப, நைவேத்திய செலவுக்காக ரூ.1,000 வழங்கப்படும். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிருஷ்ணா மாவட்டத்தில் இத்திட்டத்தை சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறார்.

Posted in Andhra Pradesh, AP, Budget, Chandrababu Naidu, Congress, Constraints, Districts, Finance, Hindu, Hinduism, Krishna, Naidu, NTR, Pilgrim, Pilgrimage, Politics, Politics+Religion, Poor, Religion, Rich, Srigakulam, Srikakulam, Telugu, Telugu Desam, Temple, Tourism, TTD, Vijayanagar, Vijayanagaram, Vishakapatnam, Vishakapattinam, Visit, Vizag, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | Leave a Comment »

Actor Balakrishna meets Naidu, may join politics & Telugu Desam

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேருகிறார்

ஐதராபாத், ஜன.30-

ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய நடிகர் என்.டி.ராமராவ். அந்த மாநில மக்களால் கடவுளாக மதிக்கப்பட்டவர். சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே கடந்த 1982-ம் ஆண்டு திடீரென அரசியலில் நுழைந்தார்.

தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 9 மாதத்திலேயே அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரி ஆனார்.

1995-ம் ஆண்டு என்.டி.ராமராவின் மருமகனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், மந்திரி பதவி வகித்து வந்தவருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் என்.டி.ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அந்த கட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் அடுத்த ஆண்டிலேயே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.

மறுவருடம் 1996-ல் என்.டி.ராமராவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

என்.டி.ராமராவின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் சமீபத்தில் அவர் கட்சியில் சேர்ந்தார்.

2-வது மகன் பாலகிருஷ்ணா. பிரபல முன்னணி நடிகர். பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2004-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் அவர் விடுதலையானார்.

கடந்த 18-ந் தேதி என்.டி.ராமராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா “என் தந்தை 1982-ம் ஆண்டு திடீரென அரசியலுக்கு வந்தது போல நானும் திடீரென அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவிதார்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணா நேற்று திடீரென தனது மைத்துனரும், முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை சந்திரபாபு நாயுடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்தது. ஆகவே பாலகிருஷ்ணாவின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு, “பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் அவரே அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.

ஆனால் பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வந்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமையும். ஏனென்றால் அந்த கட்சி கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இப்போது நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. ஆகவே பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Posted in Actors, Andhra, Andhra Pradesh, AP, Balakrishna, Chandrababu Naidu, Chief Minister, CM, Elections, Films, Harikrishna, Lok Sabha, Naidu, NT Rama Rao, NTR, Party, Politics, TDP, Telugu Cinema, Telugu Desam, Telugu Movies, Tollywood | Leave a Comment »

Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு

ஐதராபாத், ஜன. 29-

LIGHTS, CAMERA, ACTION: Chief Minister Y.S. Rajasekhara Reddy sounds the clapper board to launch the celebrations of the platinum jubilee of the Telugu film industry. Also seen are (L-R) film actor Krishna, his wife Vijayanirmala, Union Minister Dasa ri Narayana Rao, Finance Minister K. Rosaiah, Information Minister Mohd Ali Shabbir, film actor Mohan Babu, producer Seshagiri Rao.— Photo: Mohd. Yousuf

தெலுங்கு பட உலகின் 75-ம் ஆண்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி ராஜ சேகர ரெட்டி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார்.

விழாவில்

  • தாசரி நாராயணராவ்,
  • அஞ்சலிதேவி,
  • சிரஞ்சீவி ஆகியோருக்கு சாதனை யாளர் விருதுகள் வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தாசரி நாராயணராவ் மேடைக்கு சென்று விருதை பெற்றார். சிரஞ்சீவிக்கு விருது கொடுக்கும் முன் நடிகர் மோகன்பாபுவை பேச அழைத்தனர். அவருக்கு பிரபலமானவர் என்ற விருதை அளித்தனர். அவ்விருதை பெற மோகன்பாபு மறுத்து விட்டார்.

விழாவில் மோகன்பாபு ஆவேசமாக பேசியதாவது:-

எனக்கு சாதளையாளர் விருது தராதது துரதிர்ஷ்டவசமானது. நான் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளேன். மேல்- சபை எம்.பி. பதவி வகித்துள்ளேன். சாதி மதத்துக்கு அப்பாற் பட்டு பள்ளிக்கூடம் நடத்துகி றேன். அந்த பள்ளியில் ஏழைகளுக்கு 25 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கிறேன். 510 படங்களில் நடித்து இருக்கி றேன். 49 படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் “சாதனையாளன்” கிடையாதா? எனக்கு ஏன் அந்த விருதை தரவில்லை.

விஜயநிர்மலா பெண் இயக்குனர். அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. கிரிபாபு நடிகராக, இயக்குனராக தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை இவ்விழாவுக்கு அழைக்க வில்லை. தெலுங்கு பட உலகம் இரண்டு, மூன்று பேருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நினைக்கிறார்கள்.

இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் இறங்கிவிட்டார்.

இதையடுத்து சிரஞ்சீவி பேசியதாவது:-

நாமெல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறோம். நம் ஆரம்ப காலத்தையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் மறக்க கூடாது. ஏழைகளாக இருந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கர்வம், அகந்தை இருக்ககூடாது.

சினிமா ஒரு குடும்பம். நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அதை திரைக்கு பின்னால்தான் பேச வேண்டும். எல்லோருக்கும் தெரியுற மாதிரி பேசி அவமானப்படுத்தக்கூடாது. நாம் சண்டை போடுவது வெளியே தெரியக்கூடாது.

கோவா பட விழாவில் என்.டி.ஆர். படம் வைக்கவில்லை. மும்பை, டெல்லி, கோவா வரை நம்மால் போக முடியவில்லை. சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததுதான்.

ஒரு திருமணத்துக்கு போய் இருந்தேன். தாலி கட்டுவதை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டேன். மற்றவர்கள் சந்தோஷம்தான் முக்கியம்.

நான் வயதில் சிறியவன், வெங்கடேஷ், நாகார்ஜுனா என் வயதில் உள்ளவர்கள். அவர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. சாதனையாளர் விருதுக்கு நான் தகுதி இல்லை. 100-வது நாள் பட விழா நடக்கும்போது நான் திரையுலகில் இருப்பேன். அப்போது விருதை வாங்கி கொள்கிறேன்.

இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் சென்று விட்டார்.

Posted in 75, Andhra Pradesh, Andhra Pradesh State Film, Anjali Devi, APSFTTDC, Awards, Celebrations, Chandrababu Naidu, Chiranjeevi, Cong (I), Congress, Dasari Narayana Rao, Dhasari Narayanarao, Fights, Giribabu, Indira Congress, K. Rosaiah, Krishna, Lifetime Achievement, Mallemala, Mogan Babu, Mohan Babu, Mohd Ali Shabbir, Nagarjuna, NT Ramarao, NTR, Padhmashree, Padma Sri, Platinum Jubilee, Raja shekara Reddy, Rajasekara Reddy, Seshagiri Rao, Siranjeevi, Teleugu Film, Television and Theatre Development Corporation, Telugu Cinema, Telugu Desam, Tollywood, Venkatesh, Vijaya Nirmala, Vijayanirmala, YS Rajasekhara Reddy | 1 Comment »

Can Sharad Pawar become Prime Minister of India?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?

நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ

கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.

நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.

அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.

பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.

Posted in Agriculture, Bal Thackeray, BJP, Cabinet, Chandrababu Naidu, Civic Polls, Cong (I), Congress, Dinamani, Foreigner, Indira Congress, Jayalalitha, Lalloo, Lalu prasad Yadav, local body elections, maharashtra, Minister, Mulayam Singh Yadav, Mumbai, Narasimha Rao, NCP, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Nehru, New Delhi, Op-Ed, PM, Politics, Prime Minister, Sharad Pavaar, Sharad Pawar, Shiv Sena, Sonia Gandhi, Supriya Sule, Tamil | 1 Comment »

‘SC Opinion on Creamy Layer is unfortunate’ – CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இட ஒதுக்கீட்டில் “கிரீமி லேயர்’: உச்ச நீதிமன்ற ஆணை பிற்போக்கானது -இந்திய கம்யூனிஸ்ட்

புதுதில்லி, அக். 21: தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்குத்தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு;

நமது சமுதாயத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நீதித்துறை தொடுத்துள்ள தாக்குதல் இது.

இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தையே இது தகர்த்துவிடும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி பிரவேசித்துள்ளது.

இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை, பாரபட்சமற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்ச நீதிமன்றம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சரியான நடவடிக்கை அல்ல; இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

Posted in Affluent, AP, Chandrababu Naidu, Communist, CPI(M), Creamy Layer, Judgement, Marxist, Oppression, Reservations, Rich, SC/ST, scheduled castes, scheduled tribes, Second generation, Supreme Court, Telugu, Telugu Desam | Leave a Comment »