Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Prizes’ Category

Padma Vibhushan for Pranab, Ratan Tata, Sachin; no Bharat Ratna for seventh year

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

பிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது

சென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”

  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,
  • கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
  • தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
  • லட்சுமி மித்தல்,
  • இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி

உள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • பத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பத்மவிபூஷண் விருது பெறுவோர்:

  • மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
  • தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
  • லட்சுமி மித்தல்,
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
  • ஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,
  • சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,
  • தில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,
  • உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,
  • பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,
  • கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
  • டெண்டுல்கர்,
  • இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.

  • நாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,
  • பிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,
  • சிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,
  • ஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.

பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்

  • டி.வி. நிருபர்கள் பர்கா தத்,
  • ராஜ்தீப் சர்தேசாய்,
  • வினோத் துவா,
  • ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,
  • பின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.

திரைப்படத் துறையில்

  • நடிகை மாதுரி தீட்சித்,
  • இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,
  • நடிகர் டாம் ஆல்டர்,
  • கால்பந்து வீரர் பாய்சுங் புடியா,
  • நீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,

ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.

  • தமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,
  • “தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,
  • பிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.

Posted in Anand, Arts, Asha, Asha Bhosale, astronaut, Awards, Baichung Bhutia, Bharat Ratna, Bhooshan, Bhosale, Bhushan, Bollywood, Booshan, Business, Chess, Citi, Dailythanthi, Dixit, Edmund, Edmund Hillary, Football, Hillary, Hotels, ICICI, Infosys, IT, Madhuri, Mittal, Mukherjee, Narayana Murthy, Narayanamurthy, Oberoi, Padhma, Padma, Padma Bhushan, Padma Vibhushan, Pathma, Performers, Pranab, Pranab Mukherjee, Prizes, Ratan, Ratan Tata, Sachin, Shyamalan, Singer, Soccer, Sports, Sunita Williams, Susheela, Sushila, Susila, TamilNadu, TATA, Tendulkar, Thanthi, Thanthy, Thinathanthi, Vibhooshan, Vibhushan, Vibooshan, Vibushan, Vikram Pandit, Viswanathan, Viswanathan Anand | 1 Comment »

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

Sahitya Akademi Award for Neela Padmanabhan: Indian Writing & Literature

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

நீல பத்மநாபனுக்கு சாகித்ய அகாதெமி விருது

தமிழின் தலைசிறந்த நாவலாசிரி யர்களில் ஒருவரான நீல பத்மநாபன் இந்த ஆண் டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

“இலையுதிர் காலம்’ என்ற நாவலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இது முதியோர் பிரச்னை பற் றிய நாவல்.

“தலைமுறைகள்’, “பள்ளிகொண்டபுரம்’ என்ற அவருடைய நாவல்களும் ரசிகர்களால் மிகவும் விரும்பிப்படிக்கப்படுபவை.

50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செப்புப்பட்டயம் ஆகியவை விருதுடன் வழங்கப்படும். விருது வழங் கும் நிகழ்ச்சி தில்லியில் பிப்ரவரி 2-ம் தேதி நடை பெறும்.

இந்த ஆண்டு 23 படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் நல்ல தேர்ச்சி உள்ள 3 பேர் கொண்ட நடுவர் குழு வால் பரிசுக்குரிய நூல்கள் தேர்வு செய்யப்பட் டன. அவ்விதம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் பேரா சிரியர் கோபிசந்த் நரங் தலைமையிலான நிர்வா கக் குழு தில்லியில் புதன்கிழமை ஒப்புதல் அளித் தது.

நாவல்கள்: விருதுபெறும் நாவலாசிரியர்கள்-

  • புரபி பர்முதோல் (அசாமி),
  • அமர்காந்த் (ஹிந்தி),
  • குமாரி வீரபத்ரப்பா (கன்னடம்),
  • தேவிதாஸ் கடம் (கொங்கணி),
  • ஏ. சேதுமாதவன் (மலையாளம்),
  • பி.எம். மைஸ்னாம்பா (மணிப்புரி),
  • நீல பத்மநாபன் (தமிழ்).

கவிதைகள்:

  • சமரேந் திர சென்குப்தா (வங் காளி),
  • கியான்சந்த் பகோச் (டோக்ரி),
  • ராஜேந்திர சுக்லா (குஜராத்தி),
  • தீபக் மிஸ்ரா (ஒரியா),
  • ஜஸ்வந்த் தீத் (பஞ்சாபி),
  • ஹரிதத் சர்மா (சம்ஸ்கிருதம்).

சிறுகதைகள்:

  • ஜனில் குமார் பிரம்மா (போடோ),
  • ரத்தன்லால் சாந்த் (காஷ்மீரி),
  • பிரதீப் பிகாரி (மைதிலி).

நாடகங்கள்:

  • லட்சு மண் ஸ்ரீமால் (நேபாளி),
  • கேர்வால் சரண் (சந்தாலி),
  • வாசுதேவ் நிர்மல் (சிந்தி).

விமர் சன நூல்களுக்காக

  • குந்தன் மல் (ராஜஸ் தானி),
  • வஹாப் அஷ்ரஃபி (உருது) ஆகியோர் சாகித்ய அகாதெமி விருது பெறுகின்றனர்.

சரிதை நூலுக்காக ஜி.எம். பவார் (மராட்டி) விருது பெறுகிறார்.
சுயசரிதை நூலுக்காக கடியாரம் ராமகிருஷ்ண சர்மா (தெலுங்கு) விருது பெறுகிறார்.


தாமதமான அங்கீகாரம்

திருப்பூர் கிருஷ்ணன்


தமிழில் முதல் வரிசைப் படைப்பாளிகள் என்று பட்டியலிடப்படும் சுமார் 10 பேரில், இவ்வாண்டு சாகித்ய அகாதெமி பரிசுபெறும் நீல பத்மநாபனும் ஒருவர். இந்தப் பரிசு மிகக் காலதாமதமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் கால தாமதமாகவேனும் வழங்கப்பட்டதில் ஆழ்ந்த இலக்கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

சாகித்ய அகாதெமி பரிசு எப்போதுமே சர்ச்சைகளைத் தோற்றுவிக்கக் கூடியதுதான். ஒருமுறை ஓர் எழுத்தாளருக்கு இப்பரிசு வழங்கப்பட்டபோது, “இந்த முறை சாகித்ய அகாதெமி, எழுத்தாளர் அல்லாத ஒருவருக்குப் பரிசு கொடுத்துவிட்டது’ என்று சக எழுத்தாளர் ஒருவர் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் அபிப்ராயம் தெரிவித்திருந்தார்!

ஆழ்ந்த இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம், பொதுவுடைமை இலக்கியம் என்றெல்லாம் தற்கால இலக்கியம் பலப்பல பிரிவுகளாக இயங்குகிறது. ஜனரஞ்சக இலக்கியப் போக்கைச் சார்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கிட்டும்போது ஆழ்ந்த இலக்கியவாதிகளால் அதை ஏற்க முடிவதில்லை. சிலரால், தங்கள் திரைத்துறைப் புகழ், அரசியல் செல்வாக்கு போன்ற பிற உபாயங்களை மேற்கொண்டு இதுபோன்ற உயரிய விருதுகளை வாங்கிவிட முடிகிற சூழலும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் தகுதியை மட்டுமே தங்கள் பரிந்துரையாய்க் கொண்டு, வேறு எந்தச் செல்வாக்கும் இல்லாமல் அமைதியாக எழுத்துப் பணி புரியும் சிலரும் தமிழில் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரம் கிட்டுவது அபூர்வம். இந்த முறை அத்தகைய அபூர்வம் நிகழ்ந்துள்ளது.

குழு சாராத நடுநிலைவாதிகள் நீல பத்மநாபனுக்கு அகாதெமி பரிசு தரப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். அதோடு எல்லாக் குழுவைச் சார்ந்தவர்களும் மனமார மதிக்கும் எழுத்தாக நீல பத்மநாபனின் எழுத்து இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் தகுதியை வளர்த்துக் கொள்வதைவிடவும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தந்திர உபாயங்களைக் கற்றுத் தேர்வதிலேயே காலமெல்லாம் செலவழிக்கிறார்கள்.

மாபெரும் முன்னோடிச் சாதனையாளர்களை அவர்கள் எதுவுமே சாதிக்கவில்லை என்று விமர்சனம் செய்து அதன்மூலம் பலரது பார்வை தங்கள் மேல் விழச்செய்வது, சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் மட்டம் தட்டி தான் ஒருவனே எழுதத் தெரிந்தவன் என்று தானே சொல்லிக்கொள்வது, அல்லது தன்னைச் சார்ந்தவர்களை விட்டுச் சொல்லச் செய்வது, தனக்கென ஒரு சிற்றிதழ் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தானே தனது கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்படுவது, தன்னைச் சார்ந்தவர் அல்லாதவர்களுக்கு அந்த வட்டத்தில் இடம் கொடாமல் எச்சரிக்கையாக இருந்து தன் நலம் மற்றும் தன் குழுநலம் பேணுவது என எழுத்துலக அரசியல் இன்னும் எத்தனையோ.

இவை எதிலும் சிக்காமல், இவை அனைத்தையும் மீறி அமைதியாக இயங்கும் சிலரில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நீல பத்மநாபன் ஒருவர்.

தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள், தேரோடும் வீதியிலே, கூண்டினுள் பட்சிகள் என்றெல்லாம் தெளிந்த நீரோடை போல நல்லிலக்கியம் படைத்தவர். இன்றும் படைத்துக் கொண்டிருப்பவர். நாவல்துறைச் சாதனையாளராகவே அறியப்பட்டாலும் பல மணிமணியான சிறுகதைகளையும் எழுதியவர். பல நல்ல கவிதைகளையும் எழுதியிருப்பவர். மொழிபெயர்ப்பாளரும்கூட. தற்கால மலையாள இலக்கியம் என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

“நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன’ என்று தன்னைப் பற்றி கம்பீரமாக அறிவித்துக் கொண்டவர். தமிழில் சாதனை படைத்து அண்மையில் மறைந்த எழுத்தாளர் நகுலனின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர்.

பொதுவாகவே முதியவர்களைச் சித்திரப்படுத்துவதில் கைதேர்ந்தவர். தம் இளம் வயதிலேயே கூனாங்கண்ணிப் பாட்டா, உண்ணாமலை ஆச்சி போன்ற வயோதிகப் பாத்திரங்களை மிக அழகாக வார்த்தவர்.

இப்போது தமக்கே முதிய வயது ஏற்பட்டிருக்கும் சூழலில் முதியோர் பிரச்னைகளை இன்னும் அதிகப் பரிவோடும் நேர்த்தியோடும் எழுதுகிறார். தற்போது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றுள்ள இலையுதிர்காலம் நாவலும் கூட முதியோர் வாழ்வு பற்றி யதார்த்தத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் உள்ளது உள்ளபடிப் பேசுவது தான். சிறிதும் பெரிதுமான அவரது 19 நாவல்களுக்குப் பிறகு அவரது இருபதாம் நாவல் இது.

அவரது பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தைக் களனாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. அந்த நாவலை ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார் பைச்சினா என்ற ரஷியப் பெண்மணி. அந்தத் தாக்கத்தால் நீல பத்மநாபனையும் திருவனந்தபுரத்தையும் பத்மநாபசுவாமி கோயிலையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு அவர் ஒருமுறை திருவனந்தபுரம் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நீல பத்மநாபனது எழுத்தின் பாதிப்பு அத்தகையது.

தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்கள் மிகக் குறைவே. இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், மா. அரங்கநாதன், லா.ச.ரா, நகுலன் போன்ற ஒருசிலரைப் பற்றி மட்டுமே குறும்படங்கள் வந்துள்ளன. அத்தகைய படங்களில் குறிப்பிடத்தக்கது வ. கௌதமன் இயக்கி வெளிவந்துள்ள நீல பத்மநாபனைப் பற்றிய படம்.

பத்து சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று நீல பத்மநாபனின் தலைமுறைகள் என்பது விமர்சகர் க.நா.சு.வின் கருத்து. பதினொன்றாவது சிறந்த இந்திய நாவலாக இப்போது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கும் நீல பத்மநாபனின் இலையுதிர் காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Posted in Academi, Academy, Akademi, Akademy, Authors, Awards, Literature, Padhmanabhan, Padmanaban, Padmanabhan, Pathmanaban, Pathmanabhan, Prizes, Sahithya, Sahitya, Writers, Writing | 1 Comment »

Tamil Kavinjar Devadevan wins Vilakku award for 2008 – Thamil Literature faces

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2007

கவிஞர் தேவதேவனுக்கு “விளக்கு’ விருது!

தொடர்புள்ள பதிவு: தேவதேவன் – நகுலன் « Snap Judgment

சென்னை, டிச. 8: நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய கவிஞர் தேவதேவன் (59) இவ்வாண்டுக்கான “விளக்கு’ விருதைப் பெறுகிறார்.

அமெரிக்கத் தமிழர்களின் கலாசார அமைப்பாகிய “விளக்கு’ கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.

ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணமும், பாராட்டுப் பத்திரமும் இவ்விருதில் அடங்கும்.

இம்மாதம் 23 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

விருது பெற்ற கவிஞர் தேவதேவன் பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். தேவதேவன் கதைகள் என்ற ஒரு சிறுகதை நூலும், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரை நூலும், அலிபாபாவும் மோர்ஜியானாவும் என்ற நாடக நூலும் எழுதியுள்ளார். தமிழ் சிறுபத்திரிகைகளில் நீண்ட காலமாக எழுதிவரும் கவிஞர் தேவதேவனின் சொந்த ஊர் தூத்துக்குடி.

விளக்கு விருதுக்காக கவிஞர் தேவதேவனைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் எழுத்தாளர்கள் திலீப்குமார், லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

விளக்கு விருது இதற்கு முன்

  • எழுத்தாளர் சி.சு.செல்லப்பா,
  • கவிஞர் பிரமிள்,
  • கோவை ஞானி,
  • கவிஞர் ஞானக்கூத்தன்,
  • நகுலன்,
  • ஹெப்சிபா ஜேசுதாசன்,
  • பூமணி,
  • சி.மணி,
  • பேராசிரியர் ராமானுஜம்,
  • அம்பை

முதலானோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திண்ணையில் தேவதேவன் – Thinnai


மரத்தடி.காம்(maraththadi.com) – கவிஞர் தேவதேவன்:கவிஞர் பற்றி:கவிஞர் தேவதேவன் அவர்கள் 05/05/1948 இல் பிறந்தார். இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம், ஆசிரியர் பணி. எழுபதுகளின் துவக்கத்தில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 13 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

1) குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)
2) மின்னற்பொழுதே தூரம் (1981)
3) மாற்றப்படாத வீடு (1984)
4) பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5) நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
6) சின்னஞ்சிறிய சோகம் (1992)
7) நட்சத்திர மீன் (1994)
8) அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)
9) நார்சிஸஸ் வனம் (1996)
10) புல்வெளியில் ஒரு கல் (1998)
11) விண்ணளவு பூமி (2000)
12) விரும்பியதெல்லாம் (2002)
13) விடிந்தும் விடியாப் பொழுது (2003)

தேவதேவன் கவிதைகள் குறித்து ந.முருகேச பண்டியன் அவர்கள் எழுதிய “நவீனத்திற்குப் பின் கவிதை/ தேவதேவனை முன்வைத்து” என்ற கட்டுரை காலச்சுவடு இதழில் (டிசம்பர் -1999) வெளியானது. அதே கட்டுரை ந.முருகேச பாண்டியன் பிரதிகளின் ஊடே பயணம் என்ற விமரசனக் கட்டுரைத் தொகுப்பு நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்ந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகள் …


தேவ தேவன் வெறுமனே ‘புல்,மரம்,வீடு என பராக்குப் பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் செறிவைக் கவிதையாக்குவது அவரது வழமையாகும். கவிஞனுக்கும் தத்துவத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை என முழங்குதலே தத்துவமாகிப் போன சூழலில் கவிதை அப்பழுக்கற்றது; தூய பளிங்கு போன்றது; கள்ளங்கபடமற்ற அப்பாவித்தனமானது; குழந்தைமையானது; கருத்தியலையோ தத்துவத்தையோ சுமப்பதற்கு லாயக்கற்றது என்ற கருத்து தேவதேவனுக்கு உண்டு. சுருங்கக் கூறின் பிரக்ஞையில் ததும்பி வழியும் சொற்கள், மின்னற் பொழுதில் பதிவாகும் காட்சியின் உக்கிரம் கவிஞருக்குக் கவிதையாகிறது.


1. Thinnai – கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் – தேவதேவன் கவிதைகள்2. Andhimazhai – News Details: தேவதேவன் – கவிதைத் திருவிழா: “தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்டுத் தன்மையும் காரணமாகும் ” என்று காலப்ரதீப் சுப்ரமணியன் தேவதேவன் கவிதைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.(‘பூமியை உதறி எழுந்தமேகங்கள் ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரை)

தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றும் தேவதேவன் 05/05/1948 அன்று பிறந்தவர். (இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம்)

3. P.K. Sivakumar : பூனை – தேவதேவன்:

பூனை
– தேவதேவன்

முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு

இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்

‘நான்! நான்!”என புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்
விளையாடும் புத்திதான் எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்
இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே
சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?

நன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு


கூழாங்கற்கள்இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்

” ஐயோ இதைப் போய் ” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்

சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும் ?
என எண்ணினேன்

இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது

இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது

இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது

மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி

நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.


குமட்டிக்கொண்டு வருகிறது
வீதியை அசுத்தப்படுத்திவிட்டு
அந்தக் குற்றவுணர்வே இல்லாமல்
ஜம்மென்று வீற்றிருக்கும் இவ்வீடுகளின்
சுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்யாருமறியா இவ்வைகறை இருளில்
முதல் ஒளியாய்
இவ்வீதியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்

ஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலை பற்றி :
அவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்
அவன் சொல்லை நாம் நம்பித்தான் ஆக வேண்டுமாம்
ஏனெனில் அவன் கவிஞனாம்

வெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கும் அவன் உடல்
ஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிரிக்கிறது,
தன் ஆதர்ச மனிதனை எண்ணி
ஆயிரமாண்டுகளாய் மணமாகாது
காத்திருந்த கன்னியொருத்தி
பாய்ந்து போய் அவனைத் தழுவிக்
கொத்திக்கொண்டது போல்


1]மாற்றப்படாத வீடுநெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று
எந்ன செய்ய
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே
சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி
நகர எல்லையிலிருக்கும் என் ஸ்கூலுக்கு
அதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்
குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்
ரிக்ஷா செலவே சம்பளத்தில்பாதியாகிவிடும்
என பயமுறுத்துகிறாள் என் மனைவி
உண்மையும்தான் இதற்காகவேதான்
கல்யாணமான உடனே நச்சரித்தேன் சைக்கிள் ஓட்டப்படி என்று.

அவளுக்கு அவள் ஸ்கூள் பக்கம் ஊருக்குள்ளேயே
அப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்
[வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை ]
அம்மாவுக்கு கோயில்பக்கம் மேலும் உறவினர்கள்
[வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா ?]
தம்பிதங்கைகளுக்கு அவரவர் ஸ்கூல்கள் பக்கம்
எனவேதான்
இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன் .

2]உதயம்

முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக

3]தீ

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த சேலைபற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி

4]வேலிப்பூக்கள்

வேலிப்படலை
திறந்துபோட்டுவந்து
உட்கார்ந்திருப்பேன்
சுதந்திரமாய்
கன்றுவந்து
பன்னீர்பூமேய்கிற
அழகினைபார்த்துக் கொண்டு

நீ வருவாய்

காலியிளம் வெயிலில்
கன்றாக மேய
குளித்து முடித்த
உன் ஈரச்சேலையை
என் வேலிமீதே காயப்போட

காதல்
வேலிமீறும்
பூவாய் தன்னைத்தான்
சிம்மாசனமேறிக் கொலுவிருக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
குறுக்கே வந்து
மார்புவரை மறைக்கும்
சவக்கல்வேலிக்குமேலே
பூக்கும் ரோஜாத்தொட்டி
கைகள் கண்டால்
முட்களுடன்

5]ஆண் பெண்

ஒரே படுக்கையில்
உடன் படுக்கை கொண்டு
நாம் ஒருவரை ஒருவர்
இழுத்து அணைத்துக் கொள்வதன்
பொருள் என்ன ?

ஆண் பெண் என பிரிந்த
இரட்டைத்தன்மையை மறந்து
இணைய வேட்கும் ஆவேசம்

குழந்தைபசி விழித்து அழ
முலையுடன்
பெண் என நாமம் ஏற்று
என்னை பிரிந்து செல்லும்
ஒருமுனை புரிகிறது
மற்றொரு முனையில்
தனித்து விடப்பட்ட
என் பிரிவின் நோக்கமென்ன ?

சிசு பேணும் முலையவளே
மீண்டும் மீண்டும் வந்து
என்னை ஆலிங்கனிக்கும்
உன்னை விலக்கி
என்னை
தனித்துத் தியானிக்கவைக்கும்
உயிரிீன் நோக்கம்
தனித்து தியானித்திருந்தது

6]மணமாயிற்று

தாழ்பாளிட்ட கதவு திறந்து
திரைச்சீலை
மணிபர்ஸில் வந்து உட்கார்ந்துகொண்டது
மனைவியின் புகைப்படம்
படிப்பறை படுக்கையறையாயிற்று
இவனை சங்கிலியின் ஒருகண்ணியாக்கிவிட
சதி நடக்கும் இடமாயிற்று அது
விடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்
படுக்கையை காவல்காக்கும்
ஊமைகளாகி விட்டன
இடைமறிக்கப்பட்டோ
இடை தளர்ந்தோ
இடை புகுந்ததுதைந்திரிய வீழ்ச்சி
வீழ்ச்சியின் கருவில்
உதித்தது
இன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உரு
வீழ்ச்சியிலும் முயற்சித்தொடரிலுமே
ஜீவித்துவரும் மனிதகுலம்
ஆழ்ந்து உறங்குகிறது இவனருகே
அவளாக

7]சீட்டாட்டம்

இடையறாத இயக்கத்தின் மடியில்
[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம் ]
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்

அகாலத்திலிருந்து காலத்துக்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டை
கவனித்துக் கொண்டிருந்தது
காபி போட்டுதந்தது
சோறு சாப்பிட அநை¢த்தது
ஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது
வெறுமையின் மீது

காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்
எங்கள் சொற்களாயின
எனினும் வெல்ல வெல்ல என துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை கழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்று கலையவே துடித்தன.
ஒவ்வொருவரிடமிருந்தும்
அவை கழன்று விழுந்தவுடன்

அப்போது இப்போது என்று
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒரு விதை
திடேரென்று வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டியது
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்.

8]சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி

9 ] குடும்பம்

சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்

எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்

இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை

என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை

ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்

யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்

தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்

‘ ‘ கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் ‘
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.

10 ] தொடுதல்

ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்
தெறித்து அறுகிறது தொப்புள் கொடி

தேவதைகளின்கண்களின் மின்னுகின்றன
உடலெனப்படுவதன் கன்னிமையும்
உளமெனப்படுவதன் குழந்தைமையும்
உயிரெனப்படுவதன் ஆனந்தமும்

அனாதியிலிருந்து
ஓடிவரும் குருதி துறுதுறுக்கும்
விரல் தொட்டு
‘அணைகிறது ஒளி ‘
எனப் பதறாதே
விரல் தொடுகையில்
கரியும் சிறகுகளின் வெப்பத்தில்
பெறுகின்றன
கன்னிமை தாய்மையை
குழந்தைமை அறிவை
ஆனந்தம் துக்கத்தை

பதறாதே பொறு விரலை எடுக்காதே
அந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து
உன்னுள் இயற்றப்படும் வரை பொறு
அப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை

பாதம் பதிக்காமல் உலவுதற்கும்
கைகள் விரியாமல் அணைப்பதற்கும்
விரல்களில்லாமல் தொடுவதற்கும்
இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான கலை .


ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
‘உள்ளொன்றும் புறமொன்றுமி’னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

***** ***** *****

காவல் நிலையம்

விலங்கோடு விலங்காய்க்
குடிகொண்டிருக்கும் வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்.

கையிலகப்பட்ட கைதிமீது
காவலன் ஒருவனிடன்
கண்மண் தெரியாமல் வெளிப்படும்
வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்:
பல்லாண்டுகளாய்
இப் புவியெங்கும்
அன்பு வழுவி
அறம்பிழைத்த காவல்தெய்வத்தின்
மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.
பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்து
பீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.

***** ***** *****

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?

***** ***** *****

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.

***** ***** *****

தீராப் பெருந் துயர்களின்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் ,சாந்தா,

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?


“என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்”
-கவிஞர் தேவதேவன்
சந்திப்பு: வே.சாவித்திரி

நன்றி: அம்பலம்
மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது.

நார்சிசஸ்வனம் எனும் கவிதை நூலுக்கு இவ்வருட ‘சிற்பி இலக்கிய விருது பெற்றவர் கவிஞர் தேவதேவன். தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியர். பத்துக் கவிதை நூல்களுக்கு சொந்தக்காரர். இந்த நூற்றாண்டின் இணையற்ற சிறுகதைகள் வரிசையில் தொகுக்கப்பட்ட கதைத் தொகுப்பு நூலில் இவருடைய சிறுகதையும் உண்டு. இயற்கை அழகு சார்ந்த விஷயங்களை தத்துவார்த்த ரீதியில் நுட்பமாய் மொழி இழைகளைப் பின்னிப்பின்னி கவிமாலை தொடுத்து தமிழ் அன்னைக்கு சார்த்தும் அவருடன் ஒரு நேர்காணல்.

தங்களின் இளமைக் காலம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்?

ரொம்பவும் வறுமையும் அறியாமையும் உள்ள குடும்பத்தில் பிறந்தேன். இயல்பிலேயே துக்கமுள்ள மனுசனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். இசை, நடனம், ஓவியம் ஆகியவற்றில் இளம் வயதிலிருந்தே நிறைய ஆர்வம். அதில் ஒன்றில் சிறந்தவனாக விளங்க பிறந்த சூழலும், வறுமையும் உதவவில்லை. ரொம்ப சின்னவயதில் படிக்கத் தெரியாத காலத்திலேயே அப்பா மூலமாக-நிறைய புத்தகங்கள் படிக்கப்பட்டு காது வழியே கிரஹித்து முடித்திருந்தேன். மனம் அப்போதிருந்தே ஏதோ உயர்ந்த ஒன்றை நாடி நாடி வர சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது. பனிரெண்டு வயதிலேயே நிறைய கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். தனிமையும் துக்கமும் இருக்கிற காலத்தில் அதைச் சொல்ல ஒரு மீடியாவாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தேன். காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கானவையாக ஆயின.

‘துக்கம், துக்கம் என்கிறீர்களே அது எப்படிப்பட்டது? அது உங்களுக்கானதா? இச்சமுதாயத்திற்கானதா?

அது இனம்புரியாமல் ‘மிஸ்டிக்’ ஆகவே இருந்து வருகிறது. என் கவிதைகள் எல்லாம் அவற்றை சொல்வதற்கான முயற்சிகள். எந்த வகையில் அதைச் சொன்னாலும் அத்துக்கம் அதற்குள் அடங்காத விஷயமாகத்தான் உள்ளது. அதனால் இதுதான் இதற்குக் காரணம் என்று என்னாலேயே கற்பிதம் செய்ய முடிவதில்லை. என் கவிதைகள் எல்லாம் படித்து-வெவ்வேறு தளங்களில் என் துக்கத்தைக் கிரஹிக்கும் வாசகனால் அதைக் கண்டுபிடித்து விட முடியும்.

இசை, ஓவியம், நடனத்தில் ஆர்வம் வந்தது எப்படி?

தூத்துக்குடியில் ரொம்ப காலம் முன்பிருந்தே ‘ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப், ஃபோர்ட் ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் பெரிய அளவில் இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தும். அப்போது பார்வையாளனாக அமர்ந்து இசை, நடனம் கற்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் முழுமையாக ஈடுபட முயற்சி செய்தேன். முடியவில்லை. பிறகு பெயிண்டிங்ஸில் ரொம்ப ஈடுபாடு வர அதற்கும் சரியான சூழல் இடம் கொடுக்கவில்லை. பெயிண்டிங்கில் பெரிய பயிற்சி பெற்று வரைந்தாலும் வரைவதற்கு கேன்வாஸ் செய்வது, பணச்செலவு செய்து அதற்கான பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் எனக்கு இயலாத காரியம். அதனாலேயே என்னுள் உள்ளூர ஊறும் விஷயத்தை கவிதையாக்கப் புறப்பட்டேன். ஒரு ‘ஒன் சைடு’ தாளில் கூட கவிதை எழுதி விட முடிந்தது பிடித்துப் போனது. ஆரம்ப காலத்தில் நான் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் ‘பெயிண்டிங்’ செய்ய நினைத்த படங்களே!

உங்கள் கவிதைகளில் கலையோட்டமும், கதையோட்டமும், கூடவே அபரிமித பன்மொழிச் செறிவும் தெரிகிறது. அதற்குள் ஏதோ இனம் புரியா சமூகத் தன்மைகளை பொதித்து வைத்துள்ளதாகவும் ஒரு மாயத் தோற்றம். உங்கள் கவி வரிகளில் அப்படியென்ன உள்நோக்கு வைத்துள்ளீர்கள்?

என் வாழ்க்கை அனுபவமே கவிதைக்கு நிகரானது. என் நிமிஷங்கள் எல்லாம் கவித்துவமாக இருக்கிறது. லௌகீக அளவில் இது மிக ஆபத்தானது எனும் எண்ணம்தான் உடன் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஏற்படுகிறது. அதில் ரொம்பவும் உயிர்த்துடிப்போடு வாழ்கிற வாழ்க்கையும் இருக்கிறது. அதுதான் உண்மையான சந்தோஷம். அதை என் கவித்துவ வாசகர்கள் புரிந்தும் கொள்கிறார்கள். எந்தவிதமான உள்நோக்கமும் என் கவிதைகளுக்குள் இல்லையென்பதே என்னளவில் உண்மை. அதற்கு நிகராக அந்தக் கவிதைகளுக்கு நிகராக இன்னொரு பீடம் இல்லை என்பதே என் அபிப்ராயம். இங்கே நீங்கள் நீங்களாக இருப்பதை விட வேறென்ன பதவியை சுகமாய் அனுபவித்து விட முடியும்? அதைச் சொல்லுவதே என் கவிதைகள் எனலாம்.

‘நார்சிசஸ்வனம்’ உத்தியும் உருவாக்கமும் அமைந்தது எப்படி? அதைப்பற்றியதான விளக்கத்தைக் கொஞ்சம் எங்கள் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்?

உங்களுக்கே தெரியும் நார்சிசஸ் என்பது தன்னைத்தானே அழகு பார்த்து தான்தான் பெரிய அழகன் என்பதை நினைக்கும் அழகிய சொல் என்று. அது ஒரு மோசமான செயலாகத்தான் பல்வகை நிலைகளிலும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. கவிஞன் என்பவன் வாழ்க்கையை உணர்ந்தவன்தானா என ஒரு குரோதம் அங்கங்கே ஏற்பட்டும் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்குத் தகுதியான ஒரு ‘மெட்டாஃபர்’ வாழ்க்கையிலோ, கதையிலோ, இதே கவிதையிலோ கிடைக்கிறபோது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

நான் என் கவிதைகளில் தனிமனிதனுடைய அழகு-ஒரு மனிதன் தான் மனிதனாக இருப்பதுதான் ‘greatest beauty’-அதுதான் தனிமனிதத்துவம் என்கிறேன். அதைத் தாக்குவதற்கான கருவியாகத்தான் ‘இவர்களெல்லாம் நார்சிஸ்ட்’ என்கிற கருத்தைப் பிரயோகிக்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இந்தக் கருத்துத் தவறானது. ஏனென்றால் தனிமனிதன் என்ற அளவில் நான் உயர்ந்திருக்கிறேன். ‘நார்சிசஸ்’ எனும் பிரயோகம் இங்கே தவறாகப் பயன்படுவதாக குறைபாடாகத் தெரிந்தது. இதனால் தனிமனிதன் என்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்கிற ‘concept’ உருவாகியிருக்கும். இதுவும் தவறானது. தனக்குத் தானே அன்பும், பண்பும், மதிப்பும், மரியாதையும் உள்ளவன்தான் சமூகத்தில் சிறந்த மனிதனாகவும் இருப்பான்; மற்றவரையும் மதித்து நடப்பான். ‘man’ என்பது ஒரு உயர்ந்த ‘ஃபினாமினா.’ எல்லாவற்றுக்கும் அதில்தான் மருந்தும், மருத்துவமும் உள்ளது என்பது என் கருத்து.

அப்போதுதான் ‘நார்சிசஸ்வனம்’ க்ரீக் மித்தாலஜியில் ஒரு புத்தகம் படித்து வந்தபோது அதில் வந்த ‘நார்சிசஸ்’ பற்றின கதை எனக்குள் ஒரு தாக்கத்தை மூட்டியது. நான் நினைத்து சொல்ல வேண்டிய விஷயமெல்லாம் அக்கதை மூலமாகச் சொல்லலாம் எனத் தோன்றியது. அக்கதை இக்கவிதைக்கு ஒரு ‘இன்ட்ரபிரடேஷன்.’ அது வேறு; என் கவிதை வேறு!

அப்படியென்றால் கவிஞன் என்பவன் தன்னைத்தான் அழகு பார்த்துக் கொள்பவன் என்கிற கருத்தையே நீங்களும் வலியுறுத்தினது போல்தானே உள்ளது?

அப்படி இல்லை என்பதுதான் என் நார்சிசஸ். தான் என்பது மனிதன். மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது. அப்போது உங்களுக்குள் இருப்பதும் நான்தான் என்றாகிறது. ‘நார்சிசஸ்’ என்பது புற அழகு சார்ந்த விஷயமாக ‘மித்’தில் இருக்கிறது. என் கவிதையில் அவனை அக அழகு சார்ந்த உயர்ந்த மனிதனாக முடிவான மனிதன் தன்னைத் தானே உணருகிற ஆளாக ஆக்கியுள்ளேன்.

சூழல் குறித்த நிறைந்த அக்கறையுடன் மரம், காற்று, நீர்நிலைகள், பறவைகள் என இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே தங்கள் கவித்துவம் முக்கியத்துவம் தருகிறதே. என்ன காரணம்?

நான் பிறந்ததிலிருந்தே இயற்கை எனக்கொரு புகலிடம் தந்து வந்துள்ளது. அது சார்ந்து மனவெறுமையையும், மனவளத்தையும் குறிக்கிறார்போல்தான் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். மனவெறுமை, மனவறுமை சொல்லக் கூடிய விஷயமாக இருப்பதனால் மனிதனுக்குள் மனவளத்தை இயற்கை சொல்கிற மாதிரியும், இயற்கை கெடுவதனால் மனவளமும் கெடுப்பது போலவும் சொல்வது என் இயல்பாக ஆகியுள்ளது. நான் எழுதினதில் ‘அகலி’ என்றொரு காவியம். அது ‘சுற்றுச் சூழல்’ பற்றின பிரமாதமான புத்தகம் என்கிறார்கள். நான் ஏதோ சூழல் குறித்து எழுத வேண்டும் என முடிவு செய்துகொண்டு எழுதினதாகவும் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அதில் உள்ள விஷயம் எனக்குள் ‘எழுபதுகளிலேயே’ இருந்தவை. மனதில் குறிப்பாக எழுதினதையே பின்னாளில் விரிவாக எழுதினேன். எழுபதில் ‘ஓசோன்’ பிரச்னையே வரவில்லை. இயல்பிலேயே எனக்கு இது அமைந்துவிட்டது. எனக்கு இதில் பெருமையில்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. ‘ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை’ என நான் எழுதுகிறேன் என்றால் ‘நிற்க நிழல் இல்லையே’ என்கிற என் ஏக்கத்தின் வெளிப்பாடு அது. அதனை வைத்தே நான் சூழலில் ஆர்வம் காட்டும் கவிஞன் என முத்திரை குத்த விளைவது பொருத்தமானதும் சரியானதும் அல்ல.

எல்லாம் சரி. எந்தக் கவிஞர்களின் கவிதைகள் உங்களை இப்படியொரு கவிஞராக உருவாக்கம் கொள்ளச் செய்தன? நீங்கள் வடிக்கும் கவி வரிகள் அடிக்கடி தாகூரையே நினைவுபடுத்துகின்றனவே?

உலகம் மெச்சுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்தாக வேண்டும் என்கிற தாகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அப்படி என்னை ஈர்த்த கவிஞர்களில் முதலாவதாய் வருபவர் தாகூர். கூடவே ஜேம்ஸ் இல்லியட். ஆங்கிலத்தில் அகடாமிக்கல் அளவில் பிரபலமாகவுள்ள ‘எல்லோரும் படித்தே ஆக வேண்டும்’ எனச் சொல்லப்படுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்த பிறகுதான் நானும் ஒரு கவிஞன்தான் என்கிற உறுதி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்களே என் கவிதைகளுக்கு ஆதர்ஷ புருஷர்களல்ல. தாகூர், அல்லது மேலை நாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு கூட என் கவிதைகளில் இல்லை. என் மொழி தனித்துவம் மிக்கது. தாகூரோ, பெரிய விட்மேனனோ, எலியட்டோ அவர்களுக்கு வேறோர் உலகம் உண்டு. அவர்களின் சொந்த உலகத்தின் மூலமாக அவர்கள் சொல்லுகிற சாராம்சம் என்னுடன் ஒத்துப்போகும். அதனாலேயே அவர்களைப் போன்ற ‘கவிஞன்’ நானும் என உணர்கிறேன். ஆரம்பத்திலும் சரி, இப்போதும் சரி என் கவிதைகள் மரங்களின் மூலமாகப் பேசுகின்றன. யாருமே இப்படிப் பார்த்தது கிடையாது. வாழ்க்கையை வாழ்ந்து என் மொழியையும், ஆழ்ந்த அனுபவத்தையும் பதிவு செய்கிறேன். அவர்களின் பாதிப்பு எனக்கிருந்தால் அவர்களின் மொழியைத்தானே கையாண்டிருக்க முடியும்? அப்படி ஒரு பாதிப்பினால் எழுதுபவர்கள் ‘டயர்டு’ ஆகி காணாமல் போய் விடுவர். இங்கே தாகூர் சொல்லாத பல விஷயங்களை நான் செய்திருக்கிறேன். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ‘பெரும் தமிழ்க் கவிஞர்’ கொடுத்த பரிசைப் பெற்றுக் கொள்ளாத நீங்கள், இப்போது சிற்பி விருது மட்டும் மனமுவந்து பெறக் காரணம்?

சிற்பி அறக்கட்டளைக்கு ஒரு ‘சின்சியாரிட்டியும்’ ‘கோட்பாடும்’ உள்ளது. இதனை ஆரம்பம் முதலே உணர்ந்து வந்துள்ளேன். அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தார்கள். பிறகு பழமலய்க்குக் கொடுத்தார்கள். அவர்களின் கவிதைகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட அளவில் விமர்சனம் உண்டேயொழிய விருது கொடுத்தவர்களின் தேர்வுக் கூர்மையை நான் மதிக்கிறேன். இத்துடன் நான் முன்பே மறுதலித்த கவிப்பரிசை தயவுசெய்து இணைத்துப் பேசாதீர்கள். அதைப்பற்றிப் பேசவும் எனக்கு விருப்பமில்லை.

உங்களுக்கு கவிதைகளின் மூலம் எது நிறைவடைந்துள்ளது? நிறைவாகாதும் உள்ளது?

கவிதை என்பது உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் வெளிப்பாடு. அதில் நிறைவு, நிறைவில்லை என்பது பிரச்னையில்லை. இப்படித்தான் வாழமுடியும் என எடுத்துக்கொண்டால் அது நிறைவுதான். இப்படியில்லாமல் இருக்கவே இயலாது எனக் குறைப்பட்டு ஏக்கம் கொண்டால் வாழ்க்கையில் அது குறைதான்.

நன்றி: அம்பலம்


1. jeyamohan.in » Blog Archive » தேவதேவனின் வீடு:ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ‘ என்ற நூலில் இருந்து.

2. The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan « Tamil News: “தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு”

3. என்றால் என்ன: பிடித்த கவிதைகள்:�


சிற்பி இலக்கிய விருது விழா…

நன்றி: அம்பலம்

“சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன!”

அவுட்டோர் ஷ§ட்டிங் ஸ்பாட்’ பொள்ளாச்சி, கடந்த வாரம் சனிக்கிழமை மாலை இலக்கிய நகரமாய் மாறியது. மகாத்மா காந்தி மண்டபம் நிறைய பரிச்சயமான-பரிச்சயமற்ற கலை இலக்கியத் தலைகள். கவிஞர் பழமலய்க்கும், கவிஞர் சி.மணிக்கும் கடந்த வருடங்களில் கொடுக்கப்பட்ட ‘சிற்பி’ இலக்கிய விருது இந்த ஆண்டு தேவதேவனின் ‘நார்சிசஸ்வனம்’ என்கிற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. ‘2000-ம் ஆண்டில் உலகு பொங்கும் கலைப்படைப்பு ஒன்று தமிழில் உருவாகும்’ என எடுத்த எடுப்பில் பேசிய சிற்பி, மேடையில் வீற்றிருந்த கவிஞர் பாலாவையும், மு.மேத்தாவையும், பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனையும் கவிச் சொற்பொழிவில் அடக்கி நகர்ந்தார். விருது பெறும் கவிஞர் தேவதேவனைப் பற்றி அவர் கூறியது:

”எனக்கு தேவதேவனின் கவிதைகளைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் நான் நித்தமும் தொழுகின்ற ராமானுஜரின் நினைவுதான் வருகின்றது. ‘ஆலயப் பிரவேசத்திற்காக’ மேல் கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லியபோது துடித்துப் போயினராம் அப்பகுதி மக்கள். அதற்காக அவர் நினைவாக அங்கே ஒரு விக்ரகம் செய்து வைத்து விட்டு வந்தார். அதே போல் தாம் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விக்ரகம். ஸ்ரீரங்கத்தில் ஒரு விக்ரகம். அவை ஒவ்வொன்றும் ‘தமர் உகந்த திருமேனி, தாம் உகந்த திருமேனி, தான் ஆன திருமேனி’ என்று பாடப் பெற்றன. தேவ தேவனுடைய கவிதைகள் ‘தான் ஆன திருமேனியனாகவே’ வளர்ந்து கிளை பரப்பி எனக்குக் காட்சி கொள்கின்றன. இயற்கையொடு அவருக்கிருக்கிற நேசமும் பிணைப்பும் அதனூடேயே ‘தானாக’ மாற்றி விடுகிறது. இயற்கையைப் பாழடிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாற்சந்தியில் விட்டு நசுக்காமல் அவர் நகர்வதேயில்லை. ‘சிறகு முளைக்கும் முன் கொல்லப்பட்ட பட்டுப் பூச்சிகள் – மாதர் தம் பட்டாடைகள்’ என்று சிறு பூச்சிக்கும் கனிந்துருகும் தானே ஆகிற படைப்புக்களைப் படைக்கிற அவருக்கு விருது கொடுப்பது இந்த விருதுக்கே அரிய பெருமை”.

தலைமையுரையாற்ற வந்த மணிவாசகர் பதிப்பகம் ச.மெய்யப்பனோ தானே விருது பெற்றதுபோல் உணர்ச்சிப் பிழம்பானார். குழந்தை மழலை உதிர்ப்பதுபோல் அவரிடமிருந்து யதார்த்த கானம். ”தேவதேவன் மனைவி அவருடன் வந்திருக்கிறார். அது அவருக்கு அசாத்யப் பாராட்டு. எனக்கு மனைவி வரவில்லை. அதுதான் சொல்றது எதற்கும் ஒரு கொடுப்பினை வேணுமய்யா! ஐயா, கவிஞர் தேவதேவனே உப்பு விளையற பூமியிலிருந்து எழுந்து ஜீவசக்தி கொடுத்திருக்கிறீர்கள். புரிந்தும் புரியாமலும் உழலும் இருண்மை உலகில் பளிச்சென்று அடிக்கும் மின்னலய்யா உங்கள் கவிதைகள். ‘இருள்… இருள்…’ என்று கத்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை என்றாரே ஒரு பெரியவர். அதைச் செய்தவர் நீர்தானய்யா!” விருதுக் கவிஞரை அறிமுகப்படுத்த வந்த கவிஞர் பாலா நம் தமிழ்ப் பண்பாடு, இந்தியக் கலாசாரம் முழுமையையும் தம் சொற்பொழிவில் ஏற்றிக் கொண்டார்.

”கல்லும் கல்லும் இருந்தால் அங்கே வெறும் கல்தான் இருக்கும். கூடவே மனம் இருந்தால்தான் நாதம் பிறக்கும். மரம், மரத்துடன் இருந்தால் மரங்கள்தானே இருக்கும்? நாதம் அதிலிருந்து கிடைக்கக் கூடவே மனம் வேண்டும். அப்படித்தான் கவிதை என்பதும். நல்ல கவிதைகள் நல்ல மனம் இருந்தாலே நாதமாக மாறும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் தேவதேவனின் கவிதைகள். மேற்கு நாட்டு கலை-ஓவியம் பார்தோமென்றால் அதில் ‘பிகாஸோ’ எனும் கையெழுத்து இருக்கும். அதே போல் அங்கெல்லாம் கட்டப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்திற்கும், கலைச்சிற்பங்களுக்கெல்லாம் கீழே அதனை படைத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது மேற்கத்தியக் கலை. ஆனால் இங்கே மாமல்லபுரத்துக்கும், தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் கீழே எந்தப் படைப்பாளியின் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது? எதுவுமே இல்லை. இதுதான் தமிழ் மரபு. இந்தியக் கலை. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமும் ஆகும். இது யார் செய்தது? யார் படைத்தது? என்று கேள்வி எழும் போதெல்லாம் ‘தமிழ் செய்தது’ ‘தமிழன் படைத்தது’ என இறுமாப்புக் கொள்வோம். இதுதான் மேற்கத்தியக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்குமான வித்தியாசம். இது ‘நான்’ என்பதற்கும் ‘நாம்’ என்பதற்குமான யுத்தம். தமிழ்க் கவிதைகளை அடையாளம் பாட்டின ‘வானம்பாடி’ இப்போது தமிழ்க் கவிஞர்களையும் அழைத்து அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்துவதில் கவிஞர் படையே பெருமிதம் கொள்ள வேண்டும். இங்கே மனிதர்களெல்லாம் மிருகங்களாகி வருவதைக் காண்கிறோம். ஆனால் மனிதர்களெல்லாம் தேவ தேவர்களாக மாறுவதற்கு யோசித்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நம் விருதுக் கவிஞர்’. பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் விருதும் கொடுக்கப்பட்டு எத்தனை புகழ்மாலை சூட்டினாலும், தன் யதார்த்த நிலையிலிருந்து துளியும் பிசகிச் சாயாது ஏற்புரை ஆற்றினார் கவிஞர் தேவதேவன்.

”இங்கே கவிஞர்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. நவீன தமிழ் இலக்கிய விழாக்களில் எங்களூர்ப் பக்கம் ஐம்பது பேர் வந்தாலே அதிகம். அதில் என் வாசகர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக என் கவிதை நூல்கள் பத்திருபதை விற்பனைக்கு எடுத்துப் போவேன். அதில் ஒன்றிரண்டு விற்றாலே பெரிய ஆச்சர்யம். பிரபஞ்சம் எப்படி ஓர் ஒழுங்கியலில் இயங்குகிறதோ இச்சமூகம் அப்படி மிக ஒழுங்காக வேண்டும் என்பதே என் கவிதை லயம். அது சார்ந்த அழகியலே என் கவிதை. தவறான அழகியலை உடைப்பதும், சரியான அழகியலை உருவாக்குவதும் ஒரு கவிஞனின் வேலை. அதைச் செய்து கொண்டும் இருக்கிறேன்”. எண்ணி ஒரு மணி நேரத்தில் சகல கவிஞர்களும் தம் பேச்சை முடித்துக் கொள்ள கவிஞர் மு.மேத்தா மட்டும் கிடுக்கிப் பிடி போட்டு ஒரு ஒண்ணரை மணி நேரத்திற்கு தம் வாதத்தை அரங்கிற்குள் வைத்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டார். அப்படியென்ன வாதம் என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. சிறந்த நாவலுக்கு அடுத்த ஆண்டு முதல் ‘சிற்பி விருது’ வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பை சிற்பி வெளியிட்டு விட்டார். மனிதருக்கு நாவல் மீது கோபமோ; நாவலாசிரியர் மீது கோபமோ (?!) எதுவுமேயில்லையாம். பிறகு?

”நானே ஒரு நாவலாசிரியன்தான். நாவலாசிரியர்கள் நிறையப் பேர் எனக்கு நண்பர்களும் கூட. ஆனால் சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன! போதாக் குறைக்கு சாகித்ய அகாதமி போன்ற பெரும் விருதுகள் கூட மிகப் பெரும்பாலும் கவிஞனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்திப் போகும் நிலையில் சிற்பி நாவலுக்குப் பரிசு தரலாமா? முறையா? அடுக்குமா? அப்படிப் பரிசு கொடுப்பதென்றால் இன்னொரு கவிதைத் தொகுப்புக்குக் கொடுங்கள். அல்லது இதே தேவனுக்குப் பரிசைக் கூட்டிக் கொடுத்து அவன் கம்பீரத்தை உயர்த்துங்கள். இல்லாவிட்டால் சிற்பி அவர்களே உறுதியாகச் சொல்லுகிறேன். நிச்சயமாகச் சொல்லுகிறேன். உங்கள் வீட்டின் முன் பெட்டி படுக்கையோடு வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.”

மனிதர் கடைசி வரை ‘மைக்’கைப் பிடித்த பிடி விடவில்லை. சிற்பி எழுந்து வந்து ‘நாவலுக்கு பரிசளிப்பு அறிவிப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மனிதர் அதுபற்றியே எக்கச் சக்கமாய்ப் பொரிந்து தள்ள இலக்கியக் கூட்டமே சலசலத்துப் போனது.

”மேத்தா சொல்வது நியாயம்தான். அதற்காக இப்படியா உடும்புப் பிடி பிடித்து மனிதர்களை சோதிப்பது?”

”மேடையிலேயே ஒரு பரிசை அறிவித்துவிட்டு, ஒரு தனி மனிதர் உரத்துக் கூச்சலிட்டார் என்பதற்காக அந்த அறிவிப்பையே வாபஸ் பெறுவது என்ன மரபு? என்ன கலாசாரம்? சிற்பி இப்படிச் செய்யலாமா?” – அப்போதே இப்படிப் பல குரல்கள் அங்கங்கே!
-சாவித்திரி.
நன்றி: அம்பலம்


ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை
– தேவதேவன்-

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.
பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாதது.

எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எபபோதும் தன் தம்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்தது.

அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்கவியலாத படபடப்புமேயாம்.

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.

நல்லடக்கம் செய்யும் சுற்றமோ,
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ,
சமூகமோ, தேசமோ இன்றி
அது அனாதையாய் மா¢த்திருந்தது.

நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம் ?

இன்று அது நிறைவேறியதையோ,
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ,
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ,
ஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றியும் கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
செத்துக்கிடந்தது அது.

நன்றி : கனவு காலாண்டிதழ் (எண் 39/40) திருப்பூர்.


மௌனமாய் ஒரு சம்பவம்.

— தேவதேவன்.

கால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.
கலவர முற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகாரம்.

விரைத்து போய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்.

என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங் கனவோ?

என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர் பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?

இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கை புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.

முடிவுறாத காலச் சங்கிலி
தன் கணத்த பெருமூச்சுடன்
கண்ணுக்கு புலனாகாமல் நிற்கிறதோ,
இப்பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?

எதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்து கொண்டிருக்கிறது.


” கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு”

– தேவதேவன்


கடப்பாரைப்பாம்பு
==============

சடாரென்று பதுங்க
செம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோல
பார்வையை அறைந்தது
கடப்பாரையா பாம்பா

தன் அருகிலே கிடந்ததை எடுத்து
பாம்பை அடித்தவன்
அந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியே
தன் வாணாளாஇ கழிப்பானோ

கடப்பாரைதான் பாம்பாய் மாறி
புதருக்குள் ஒளிந்துகொள்ள விழைகிறதோ
புதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்
கடப்பாரையாய் மாறி தப்பிக்கிறதா
கள்ளச்சிரிப்புடன் ?

வீதி
==

விடிந்தும் விடியா பொழுதொன்றில்
தெரியாமல் ஓர் அக்ரஹார தெருவழியாய்
நுழைந்துவிட்டேன்

வெறுப்பும் பதற்றமும் பகைக்கோபமுமாய்
துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்
கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்
என் தவறுக்கு நொந்து உந்தி எடுத்தேன்

ஆனால் அதில் பயனில்லை
இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி
மேலும் எல்லா வீதிகளிலும்
அதற்கிணையானதும் அது தொடர்பானதுமான
கொந்தளிப்பை உணர்ந்தேன்

தோணித்துடுப்போ
பெருமழையோ
கம்பீர நெடுங்கழி பெருக்குமாறோ
குனிந்து குனிந்து கறைகள் துடைக்கும்
துடைப்பானோ
தூரிகையோ
வாளோ
என்றெல்லாம்
சித்தரிக்க சித்தரிக்க
தீராத உன்னை
காதல்மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்

தொனி
=====

இன்றாவது அந்த மனிதனைப்பற்றி
சிந்திக்க தொடங்கினோமே
அதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்

நலம் விசாரிக்கையில்
இருக்கம்-யா என்றொலித்த
அவன் குரலை வாசிக்க மதியற்ற நாம்
கவிதைகளின் தொனி குறித்து
விரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்

நாற்காலியில் அமர்ந்தபடியோ
வாகனத்தை ஒருநிமிடம் நிறுத்தி
ஒரு கால் ஊன்றி நின்றபடியோ
அல்லது அவன் குழந்தையோ
நாளையைப்பற்றி
கேட்கப்படும்போதெல்லாம்
பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம் என்றான் அவன்

அய்யா என்ற இறைஞ்சல் பாதாளத்தில் இருந்து
தோழர் என்ற பாதாளக்கரண்டியை பற்றியபடி
ஹலோ என்றவாறு அவனை சமீபிக்கையில்
மலர்முகமும் நீட்டிய கையும்
அற அத்ர்ச்சிக்குள்ளாகி பொசுங்கும்படி
அசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்
குரூரமாக அவனை கவிடுகையில்
அவன் என்ன ஆனான் ?
அவன் உயிராசைவேகமன்றோ
பக்கச்சுவரில் உடல் சிராய்க்க
தொற்றிக் கொண்டு தவிக்கிறது இன்று

சாதியம் நாறும் ஒரு த்தத்தின் மூலமா
‘எல்லாரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை ‘
இந்தியா உலகுக்கு அளிக்க போகிறது ?

எந்த தத்துவத்தில் இருந்து பெற்றது
இன்றைய அவனது வலிமையும்
இதய விரிவும் போராட்டமும் அறிவும்
அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பான
அந்த மேலாளுக்கும் சேர்த்தே
விடுதலை வேண்டி நிற்கும் அந்தபேராளுமை ?

கருணையற்ற மனித உலகுக்கு
கருணையின் பாதையைக் காட்டும் பேரருள் ?

[2004 தமிழினி வெளியீடாக வந்துள்ள தேவதேவனின் ‘விடிந்தும் விடியா பொழுது ‘ என்ற நூலில் இருந்து ]

1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர்
=======================

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்

மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது

அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .

2.மேகம் தவழும் வான்விழியே
=====================

மேகம் தவழும் வான்விழியே
உன் தனிப்பெரும் வியக்தியை
துக்கம் தீண்டியதெங்கனம் ?

எதற்காக இந்தப் பார்வை
வேறு எதற்காக இந்தச் சலனம் ?

அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?
ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?
மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?

கவனி
உனக்கு கீழே
அவை
ஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .

3. ஒளியின் முகம்
==========

நான் என் கைவிளக்கை
ஏற்றிக் கொண்டதன் காரணம்
என்னை சுற்றியுள்ளவற்றை
நான் கண்டுகொள்வதற்காகவே
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல

அல்ல
நீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்
என்கிறது ஒளி

4. வரைபடங்கள்
==========
வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு ?
வானமோ
இரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது

5. அழைப்பு
======

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னை சூழ
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது

6. தூரிகை
======

வரைந்து முடித்தாயிற்றா ?

சரி
இனிதூரிகையை
நன்றாக கழுவிவிடு

அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவிவிடு

கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையை கெடுத்துவிடும்

சுத்தமாய் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப்போட்டுவை
ஒரு குவளையில்

7. அக்கரை இருள்
============

நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடை விரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின்மேலிருந்த
என் அறையின் விளக்கொளி

இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி

என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல

நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்
நட்சத்திரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்

அதுசமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது .

8. சூரியமறைவு பிரதேசம்
=================

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்
உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு ந்ண்பனின் முகம்
ஒரு டம்ளர் தண்ணீர்
இன்னும்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக் கொண்டே போகலாம்

ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்
ஒரு டம்ளர்தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லை என்றால்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்
காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை
காணப்படாவிட்டால்
உணர்ந்துகொள்
‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘

9] தன்னதனி நிலா
==============
தன்னந்தனி நிலா
எல்லாவற்றிலும் எதிரொளிக்கிறது
அதன் அழகு

தன்னதனி நிலா
தன் அழகை தானே ரசிக்கிறது
நீர் நிலைகளில்

தன்னந்தனி நிலா
தன் தனிமை மறக்கிறது
நீர் நிறை கண்களில்

10. மலை
====

மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?

அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?

1] பக்த கோடிகள்
———————

பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்

பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்

கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே

இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்

2]கடவுளே
————-

ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது

ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்

கோபமா
சுய மறுப்பா ?
காட்டும் புதிய தரிசனமா ?

வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று
வந்தது நான்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்

3] ஒரு பரிசோதனையும் கவலையும்
———————————————-

கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்
குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்
தேவதைகள்

பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்
ஒரு மழையை பெய்துவிட்டு
பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்

தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்
நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்
சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்
இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்
அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்
மனிதக்குழந்தைகள்

கடவுளும் தேவதைகளின் தலைவனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ஆழ்ந்தகவலையுடன்

3] உருமாற்றம்
————-

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி -1

சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை

வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்

காட்சி 2

நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி

அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது

4] இந்தத் தொழில்
————————–

கபடமற்றதோர் அன்புடனும்
அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்
கடவுளும் சாத்தானும்
கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.
கடவுள் முதல்போட
சாத்தான் தொழில் செய்ய
கடவுள் கல்லாவில் இருக்க
சாத்தான் வினியோகத்திலிருக்க
அற்புதம் ஒன்றுகண்டேன்
கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்

அங்கே
என் சிந்தனை ஒன்றைக் கொடுத்து
படிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?
அல்லது
படிமம் ஒன்றைக் கொடுத்து
சிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?

சேச்சே என்ன கேள்விகள் இவை ?
கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை
கண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்
அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.

5 ] மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை
—————————————————————

கடவுளையும் அனுமதிககதபடி
அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்
ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்
கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்

ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை
அவருக்கு அது புரியவில்லை முழித்தார்
என்றாலும் மேதமை மிக்கவரானதனால்
அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்

அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்
அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு
ஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது
ஓயாத ஒரு புதிர்
அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு
தத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்
ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்
துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது
கடவுளின் படைப்பு

சந்தோஷமும் வெட்கமும் கிள்ள
முகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி
அளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி
தன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்
அங்கே அவரில்லாமலே
தானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்

அன்றுமுதல் கடவுளைக் காணோம்

இதுவே
புதிரான முறையில்
இப்பூமியை விட்டே காணாமல் போன
கடவுளைப் பற்றிய கதை

6 ] விதிகள்
——————-

மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி
பைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை
பழையபடி அப்புகைப்படத்தை
ஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.

உற்றத்திலும் சுற்றத்திலும்
ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்
அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்
உயிர்பெருகி சாவான்

வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான
வாழ்க்கையை
வெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு
எதிர்கொள்ளும் கலைஞன்
உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை

எளியவன் நான் நன்றாகவே அறிவேன்
வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்
முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை
நான் நனறாகவே அறிவேன்
அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!
எவ்வாறெனில்
பூமி ஒரு கோளம் அதில்
ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்

இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்
தூசியாய் படியும் பரம்பொருள் அது !
அதுமட்டுமென்ன
விதிகளுக்குள் அடங்காது
எல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .

7 ] வெற்றுக்குவளை
—————————

வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறுவதற்குள்
என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.
துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை
காணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்தது
என் குவளையில் பரிமாறப்படாத பொருள்.
என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு
காலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு
ததும்பியது அது.
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறியது அது
இப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .
பருகி முடித்ததும்
மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்
என் முகத்தில் தன் மரணத்தை
கண்டதன் கலக்கம்

***

8 ] பலி
—-

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?
அன்றைய காலை சூரியனின்
முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை

9]இறையியல்
—————–

‘ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ‘
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்

தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்

கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்

துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை

மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.

வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்…. அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை

10] பட்டறை
————-

என்னை அழைத்துவந்து
என் பெயரை ஏன் கேட்கிறாய் ?
என்னை நீ அழைப்பதற்கு
என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?
எனக்கு நீ இட்ட பணி
எதுவென நான் அறிவேன்
எனக்குள் வலிக்கிறது
எதனாலென நான் அறியேன்
நெருப்பில் பழுத்த
இரும்புத்துண்டம்போல
என் நெஞ்சே எனக்குத்
துயர் தரும் சேதிகேட்டு
தோள்குலுக்கி ஊர் சிரிக்க
ஒப்புகிறதா உன் உள்ளம் ?
எந்த ஒரு பூவும் மலரவில்லை
இப்போதெல்லாம் என் வதனத்திலிருந்து
மந்திரக்கனி எதுவும் தோன்றவில்லை
ஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .
உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது
உன் சம்மட்டி அடி என் தலைமீது.
அம்ருதக்கடலில் இருந்து
அலை ஓசை கேட்கிறது .
அக்கினிக்கடலில் இருந்து
அலறும் குரல்களும் கேட்கின்றன.
உன் கம்பீரப்பதில் குரலாய்
என் தலைமீது ஒலிக்கிறது
உன் சம்மட்டி அறை ஓசை.
காலிக்குடமாகவா
தங்கத்தோணியாகவா
ஓர் கூர்வாளாகவா
என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ ?
ஒன்றும் புரியவில்லை.
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஓர் வேதனையை மட்டுமே.

1 ] பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்

பறவைகளின் சிறகுகள்

பச்சைப்பனைகளின் நடுவே

ஒரு மொட்டைப் பனை

மொட்டைப்பனை உச்சியிலே

ஓர் பச்சைக்கிளி

அடங்கிவிட்டது

‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்

மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது

இனி இங்கே நான்

செய்யவேண்டியதுதான் என்ன ?

‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து

வழிவிடுவதை தவிர ?

பனைகளின் தலைகளெங்கும்

படபடக்கும் சிறகுகள்

பாவம் அவை பூமியில்

மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்

வெட்டவெளியில் நீ நின்றால்

என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது

மேலும்

மரத்தடியில் நிற்கையில்தான்

நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல

உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்

மரங்களின் தாய்மை

முலை முலையாய் கனிகள் கொடுக்கும்

கிளைகளின் காற்று

வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை

உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்

போவேன்

3] பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி

மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்

சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?

தோல்வி தந்த சோர்வுடன்

ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்

இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்

அன்று பறவைகளாய் காய்த்து

இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப் போல

சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை

வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ

மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்

4] தனிமரம்

ஒரு யாத்ரீக வீரன்

சற்றே இளைப்பறும் இடம்

அவனது தர்சனம்

அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது

ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்

கால் பொசுக்கும் மணல்

தன் இனத்தைவிட்டு

தூரவிலகி நிற்கிறது அது

தன்னியல்பின்

தடையற்ற வளர்ச்சிக்காக

காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்

புழுபூச்சிகளும் உள்ளவரை

தனிமை அதற்கில்லை

அது ஏழையல்ல

அது தனக்குள் வைத்திருக்கிறது

ஒரு சோலைவனக்காட்டை

அதுவே தருகிறது

வற்றாத நீர்பெருக்கை

அது நிற்குமிடம்

இல்லை அது இளைப்பறும் இடம்

தனதே தனதான நிழல்

அதன் தர்சனம்

5] பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ

எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?

அனைத்தையும் ஊருருவிய பின்னே

ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்

அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?

ஒற்றைகாலில் நின்றபடி

உன் தவத்தின் வைரத்தை

என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?

அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்

வீற்றிருந்தது அது

பின்பு

இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து

வெளியேறியது அது

கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்

எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து

நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்

நின்றிருந்தது அது .

6] நச்சுமரக்காடு

ஒரு மரம்

அதன் ஆணிவேர் நான்

அதன் பக்கவேர்கள்

என் மதம் என் ஜாதி என் இனம்

என் நாடு என் கொள்கை என் மரபு

இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை

நான் சொல்ல வேண்டுமா ?

அச்சம்தரும் வலிமையுடன்

அடிமரம்.

ஆயிரமாயிரமாண்டு எனினும்

மனித குலம் அளவுக்கு இளமை

அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான

உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்

அதன் கிளைகள்

எந்த புகைப்படத்திலும்

எந்த வரைபடத்திலும்

அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்

எங்கும் காய்த்து குலுங்குகின்றன

தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்

7] பூக்கும் மரங்களின் ரகசியம்

நீரை நாடும் தேடலே

வேர்கள்

சூழலை எதிர்கொள்ளும் மெளனமே

அடிமரம்

ஒளியை நாடும் விழைவே

கிளைகள்

உதிரும் இலைகளின் பிரிவே

மரணம்

பிறப்பின் புதுமை பசுமையே

தளிர்கள்

அறிந்தேன்: பூக்கும் மரங்களின்

ரகசியம்.

8] புயலில்

புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
‘ ‘இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் ‘
எல்லாம் வெகு சுலபம்
புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .
மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.
அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .
முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்

9] இலையசைவு

விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை
‘அப்பாடா ‘ என மேலெழுந்தது இலை
அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக
ஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்
இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது .


1. வீடும் வீடும்

========

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன்

என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒருகாலத்தில்
என்னை ஓய்வு கொள்ள விடாது
வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்தநூல்சேலையிலும்
உருக் கொண்டது

எப்போதும் நம் லட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்

மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல
நாம் ஒருக்காலும்
இருந்ததில்லை என்பதையும் .

******

2. வீடுகள்
=======

வீதிவலைக் கண்ணிகளோ
இந்த வீடுகள் ?

கல்முகங்கள் சில வீடுகளுக்கு
சினேகத்தை பின் ஒதுக்கி
நாய்க்குரலில் வரவேற்கின்றன அவை
வீதியில் நடந்து செல்லும் மனிதனை
சந்தேகத்தோடும் அச்சத்தோடும்
நோக்குபவை

வீதியில் நடந்து செல்லும்
ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்
எளிய வீடுகளும் உண்டு

யாத்ரீகனோ தன் வீட்டை
எப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்

மலயுச்சி மீதிருக்கையிலோ
பறவைப்பார்வையில் பிடிக்கப்பட்ட
புகைப்படமொன்றிலோ
இந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்
தோன்றுகின்றன

சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்
தம் குறிக்கோளை அடைந்ததுமான
சாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்
படகுகள் போலவும் தோன்றுகின்றன

******

3. இரண்டுவீடுகள்
===========

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது

ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.

மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.

*****

4. அந்த இசை
==========

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை

புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை

வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்
விடியும்வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்

*****

5. மொட்டைமாடிக்களம்
===================

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை

*****

6.குருவிக்கூடு
===========

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி

*****

7. மரத்தின் வடிவம்
==============

சிவந்த பூக்களுடன்
ஜன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்

கூரைமீதுகுனிந்து
உச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்

வாயிலை நோக்கி தாழ்ந்த
கிளை அசைவு உன் அழைப்பு

இமையாத விழிப்புடன்
இடம் பெயராஅத இருப்புநிலையில்
காணுகிறது உன் நித்தியத்துவம்

உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே
அக்கூரைமீது
ஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பி
முன்னேறினேன்
வெட்டப்பட்டு
இரத்தம் கொட்டும்
உன் மொட்டைவிரல்
மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி

திடுக்கிட்டு
இனி நான் என்ன செய்வது
என துடித்துக் மொண்டிருக்கையில்
அம்மொட்டை விரலை சுற்றிலும்
வீரிட்டு முளைத்திருந்தன
புதுத்தளிர்கள் .

******

8. உனது வீடு
========-==

நீ இளைப்பாற தேர்ந்தெடுத்த
மரத்தடியா,
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ்மண்டபமா,
எது உன்வீடு ?
இவை எல்லாமுமேவா ?

உனது வீட்டில்
உனது பிணத்தை நாடியே
உன்னோடு குடியேறியதுதான்
அந்தபிசாசு என நீ அறிவாயா ?

உனது வீட்டின் இருளை துடைப்பது
சூரியன் இல்லையா ?
சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?
உன் வீட்டை கடந்துசெல்லும்
மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?

நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?
சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?
பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?

புறப்பட்டுவிட்டாயா
உனது மக்களை விட்டுவிட்டா ?
அவர்கள் விழிக்கும் முன்
ஒருபுதிய பொக்கிஷத்துடன்
வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனா
அல்லது இந்த துறவேதானா
அந்த அரிய பொக்கிஷம் ?

போய்க் கொண்டிருக்கிறாயா ?
சரி
ஆனால்
எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்

வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும் பூமி

******

9. ஒரு சிறு குருவி
==============

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

***

முன்னுரை
====

தேவதேவன்

இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையை பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும்போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும்போதோ
நீ ஒரு பொய்யன் ,துரோகி ,கோழை!
ஏனெனில்
உண்மை உன் விருப்பத்துக்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடப்படுவதற்கு
பணிந்துவிடும் பசுமாடு அல்ல.
அது
நித்யத்துவத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்ததில் நனைந்த
போர்வாட்கள்

[நன்றி . நட்சத்திரமீன் 1994 ]
====


1. Tamil | Literature | Unnatham | Devadevam | Play Cards: நமது மூளையின் செயல்பாடுகள்தாம் என்னே..- தேவதேவன்

2. Tamil | Unnatham | Devadevan | Short Story: “அபூர்வமாய் நிகழ்ந்த சம்பவங்கள் அவை – தேவதேவன்”

3. Tamil | Literature | DevaDevan | Short Story: “தோணி – தேவதேவன்”

4. Tamil | Literature | Unnatham | Short Story | Devadevan: “முதற் கணம் – தேவதேவன்”


Tamil | Puthiya Kaatru | Devadevan | Poem

ஆக்கங்கெட்ட கூகைகளும்
கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் கோயில்களும்
தேவதேவன்

தன்னைப் பற்றிய மெய்மை
தன் உணர்வுக்குக் கிட்டிய போதெல்லாம் –
மூடமே,
தாங்கொணாத வெவ்விதியே,
குமுறுகின்ற இதயத்தின்
இறுக்கும் கைகளுக்குள்
குலுங்கும் என் நெஞ்சமே,
அதை உன்னை வழிபடச் சொன்னது யார்?

காலத்துக்குத் தக இடம் நகர்ந்து கொள்ளும்
அக்ரஹார உயர்வுகளின் பின்கட்டில்
விடாப்பிடியாய் வளர்ந்து கொண்டிருக்கும்
இரத்த வெறி கொண்ட
அந்த மிருகத்தைக் கண்டதில்லையா?

அதிகார சுகம்
தன்னைக் காத்துக் கொள்வதற்காக
மறைமுகமாகவும் கொள்ளும்
உலகின் அதிபயங்கர கொடூரங்களினின்றும்
மனிதன் எழுந்திருக்கவே முடியாத
கதை இதுவோ?

அதிகாரங்களின்
வல்லுறவு வன்கொலைகளால் மாண்ட
நம் கன்னிப் பெண்களுக்கு
கோயில் கட்டியதால்
எல்லாம் சரியாயிற்றா?

கூகைக்குக் கோயில் கட்டியது,
கூகைத் தனத்தை நகர்த்தி விட்டது,
இல்லையா?

நம் கொந்தளிப்பானது
காளிக்குக் கோயில் கட்டிக்
கும்பிடக் கும்பிட
ஒடுங்கி அடங்கிக் கொண்டது,
இல்லையா?
இன்று என்ன கோயில்களையடா
நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்
நம்மிடமுள்ள எவற்றையெல்லாம்
நம்மிடமிருந்து நகர்த்தி, நம்மைக்
கல்லறை சடலங்களாக்கிவிடுவதற்கு?


Posted in 2008, Authors, Award, Awards, Biosketch, Devadevan, Faces, Kavinjar, Literature, people, Poems, Poets, Prizes, Tamil, Vilakku, Writers | Leave a Comment »

Norman Mailer Pulitzer-Winning Author, Dies at 84

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்

நார்மன் மெய்லர்
நார்மன் மெய்லர்

கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான ‘தி நேகட் அண்டு தி டெட்’ மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார்.

நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.

அவருக்கு, ‘தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்’ மற்றும் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’ ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.

இதில் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது.

அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

Posted in America, Author, Bush, dead, Fiction, GWB, Literature, Mailer, Norman, Novels, Prizes, Pulitzer, Story, US, USA, Vietnam, Wars, Writer | 1 Comment »

‘Thisai Ettum’ awards Translators & Nalli Kuppusamy Birthday

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பத்து மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருது

சென்னை: நல்லி, “திசை எட்டும்’ எனும் காலாண்டு இதழ் இணைந்து நுõல் மொழி பெயர்ப்பாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. சென்னையில் நேற்று நடந்த இவ்விழாவில் துõர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார்.

“திசை எட்டும்’ இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் விருது பெறுபவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என் பது பற்றி பேசினார். விருதுகளை வழங்கி நல்லி குப்புசாமி பேசுகையில், “”பொது மக்கள் நுõல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளனர். மொழி பெயர்ப்பு நுõல்களை வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை நாம் செய்ய வேண்டும்,” என்றார்.

வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “” ரவீந்திர நாத் தாகூருக்குப் பிறகு நிறைய ஜாம்பவான்கள் வாழ்கின்றனர். அவர்களது இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். மொழி சிறந்த தொடர்பு சாதனம். நேரடி மொழி மாற்றம், இணையான மொழி மாற்றம், இருந்ததை புதிதாக சொல்லும் மொழி மாற்றம் என மூன்று வகைகளில் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மொழி பெயர்ப் பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நுõல் என்ற எண்ணம் படிக்கும் வாசகருக்கு வரக்கூடாது,” என்றார்.

சிறப்பு விருந்தினரான டி.ஜி.பி., ராஜேந் திரன் பேசுகையில், “”மொழி பெயர்ப்பாளருக்கு நல்லதொரு சிறப்பை செய்துள் ளீர்கள். இது மாதிரியான சேவைகளால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.

தமிழிலில் இருந்து பிறமொழி மற்றும் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்த தலா ஐந்து பேர் என பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.

  • ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பி.ராஜ்ஜா,
  • மலையாள மொழி பெயர்ப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும்
  • சரவணன்,
  • நிர்மால்யா,
  • இறையடியான்,
  • சாந்தா தத்,
  • புவனா நடராஜன்,
  • மந்திரி பிரகடசேஷாபாய்,
  • நவநீத் மத்ராசி,
  • பத்மாவதி

ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

விழா முடிவில் நல்லி குப்புசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். முன்னதாக சுதா ரகுநாதன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

Posted in Authors, Awards, Birthday, Cake, Events, Function, Journals, Kuppusami, Kuppusamy, Kurinjivelan, Kurinjvelan, Literature, Mag, Magazines, Mags, Magz, Nalli, Prizes, Sivasankari, Thisai Ettum, ThisaiEttum, Translation, Translators, Works, Writers | 2 Comments »

La Sa Ra: Lalgudi Saptharishi Ramamirtham: Anjali, Memoirs, Reviews

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

——————————————————————————————————————————————

எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

சென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

அவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.

ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.

மனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • லா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
  • உலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),
  • தமிழக அரசின் கலைமாமணி விருது,
  • காஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,
  • இலக்கியச் சிந்தனை விருது (1995),
  • அக்னி அட்சர விருது (1992),
  • 1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.

17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.

லா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.

மத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.

அவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.
——————————————————————————————————————————————

சிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்

சென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.

அதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.

தமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.

லா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.

லா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
——————————————————————————————————————————————

தூக்கமே! நீ அதிருஷ்டசாலி! – லா.ச.ராமாமிருதம் :: appusami.com

தூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது? மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ?

உன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.

நான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய்? இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ? வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா?

உன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா?

நான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.

நினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.

ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.

மரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.

உயிருக்கு காவல். மரணத்தின் தாதி.

என் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி? உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.

உனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.

நினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.

– நன்றி கணையாழி
——————————————————————————————————————————————

லா.ச.ராமாமிர்தம்

– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002

தமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.

”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.

‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.

சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.

லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை
ஒருவனுக்கு அவன் பக்தி
ஒருவனுக்கு அவன் ஞானம்
ஒருவனுக்கு அவன் குரு
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.

லாசராவின் சில படைப்புகள்:

சிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா

நாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா

நினைவுகள்: சிந்தாநதி, பாற்கடல்

கட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்

மதுசூதனன்
———————————————————————————————————————————-

தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ

அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.

தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!

சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.

நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!

நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.

பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?

தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.

பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.

அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.

‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.

தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.

வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.

கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.

மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.

அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.

கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?

‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

விகடன் ——————————————————————————————————————————————

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138, July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

——————————————————————————————————————————–

Thinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”
———————————————————————————————————————————
Thinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”

(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>

எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>

லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
————————————————————————————————————————

By Era Murugan in RKK:
ஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்

இந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.

லா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.

இ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.

அவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

புத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.

அன்புடன்
இரா.மு

Thinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”

Thinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”

Thinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”

————————————————————————————————————————————————–

முகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்!

ந.ஜீவா

“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.

அவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

அவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.

லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.

அவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா?

நான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.

ஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.

லா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா? உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்?

எனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.

உலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா? யார் அவர்? என்ன பண்றார்?’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.

லா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன?

அதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.

தான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது?

“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.

லா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு?

பணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.

அவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.

மேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா?

நான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.

எப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.

கோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.

கவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.

ந.ஜீவா

Posted in 2437706, Academy, Anjali, Author, Awards, Biography, Biosketch, Blogs, Books, Critic, Critique, dead, Dhinamani, Dinamani, Faces, Fiction, Kadhir, Kathir, La Sa Ra, Lalgudi, Lalkudi, LaSaRa, Life, Literature, Manikkodi, Manikodi, Memoirs, Novels, people, Poems, Poet, Prizes, Puthra, Putra, Raamamirtham, Ramamirtham, Reviews, Sahithya, Sahithya Academy, Sahitya, Sahitya Academy, Saptharishi, Sindhanathi, Sindhanathy, Sinthanathi, Tamil, Tamil Blogs, Thinamani, Writer | 8 Comments »

Tamil Nadu Govt Cinema Awards Ceremony details – Karunanidhi, Rajni & Kamal speech

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

சேது திட்டத்துக்கு உரிய தீர்வு காண வேண்டும்: ரஜினி

Kalainjar karunanidhi DMK Govt Awards Functionசென்னை, அக்.17: சேதுசமுத்திர திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி உரிய தீர்வு காணவேண்டும் என ரஜினி காந்த் தெரிவித்தார்.
2005 மற்றும் 2006-ம் ஆண்டுக் கான தமிழக அரசின் திரைப் பட விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இவ்விழா வில் ரஜினிகாந்த் பேசியதாவது: நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அந்தப் படம் வெற்றி பெற்று ஓடினால் தான் மக்கள் மனதில் இடம்பி டிக்க முடியும். அப்படிப்பட்ட படங்களை எடுத்தவர்களையும் அவற்றில் நடித்த கலைஞர்க ளையும் கெüரவப்படுத்த அரசு எடுக்கும் விழாதான் இது.

இதில் எனக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்திருக் கிறேன். “சந்திரமுகி’ படத்தில் நடித்ததற்காக எனக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Priyamani Paruthi Veeran Prize Ceremony Mu Karunanidhi 84இந்தப் படத்தில் ரஜினி என்ன பெரிதாக நடித்துவிட் டார்; ஜோதிகா, வடிவேலு தானே சிறப்பாக நடித்தார்கள் என நினைக்கலாம். “வேட்டை யன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்குத்தான் எனக்கு இந்த விருது. கிட்டத்தட்ட 26 வரு டங்களுக்குப் பிறகு இந்தக் கேரக்டரில் எப்படி நடிப்பது எனத் தீவிரமாக யோசித்து நடித்த படம் “சந்திரமுகி’ தான்.

விருது வாங்கும் அனைவருக் கும் பாராட்டுகள். குறிப்பாக “பருத்தி வீரன்’ படத்தில் நடித்த கார்த்தி, ப்ரியாமணி, ஆகியோ ரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் கார்த்தி 100, 200 படங்களில் நடித்தால் வரும் அனுபவத்தோடு நடித்திருக்கி றார். இந்தப் படத்தைச் சிறப்பாக இயக்கிய அமீருக்கும் பாராட்டு கள். பலர் வாய்ப்புகளுக்காக தவம் கிடக்கிறார்கள். நல்ல வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும்போது அவற்றைப் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து “பெரியார்’ படத்தைப் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். “பெரியார்’ படத்தைப் பார்த்த பிறகு எனக்கு அதுவரை புரியாத பல விஷயங்கள் புரிந் தன. அந்தப் படத்தைப் பாராட்டி கடிதமும் எழுதினேன். ஆனால் அது பல்வேறு தரப்பிலும் சில விமர்சனங்களை எழுப்பியது.

“பெரியார்’ என்பவர் ஒரு “விருந்து’ போன்றவர். விருந்தில் 10 வகை யான காய்கறிகள் இருக்கும். சாப் பிடுபவர்கள் தங்களுக்குப் பிடித் ததை எடுத்துக்கொண்டு மற்ற வற்றை விட்டுவிடலாம். பெரி யார் வெறும் கடவுள் எதிர்ப்பு என்ற விஷயத்தை மட்டும் சொல் லவில்லை. தீண்டாமை, ஜாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என எத் தனையோ நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார். கடவுள் மறுப்பு என்ற விஷயம் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை அப்படியே ஒதுக்கிவிட முடி யுமா? அதை விட்டுவிட்டு அவர் சொன்ன பல நல்ல விஷயங்களை நான் எடுத்துக்கொண்டேன்.

அவர் ஒரு சீர்திருத்தவாதி.

இந்த மேடையில் இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசவேண் டும் என நினைக்கிறேன். இங்கு பேசலாமா எனத் தெரிய வில்லை. இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்லிவிடுகிறேன்.

யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமீபகால மாக சேதுசமுத்திரத் திட்டத் தைப் பற்றி பல செய்திகள் வரு கின்றன. அதில் லாபம் இருக்கி றது; நஷ்டம் இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு சரியான உண்மை தெரியவில்லை. அது பற்றிய சில சென்சிட்டிவான விஷயங்கள் வெளிவருகின்றன. தமிழகத்தில் அது பெரிய அளவில் தெரிய வில்லை. ஆனால் வட மாநிலங்க ளில் அது வேறு வகையாகப் பார்க்கப்படுகிறது. அந்த விஷ யத்தைப் புகையாக்கி நெருப்பாக் கப் பல முயற்சிகள் நடக்கின்றன.

நமக்குக் காரியம்தான் முக்கி யம். இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி வட மாநிலத் தலை வர்களுடன் கலந்துபேசி சேது சமுத்திரத் திட்டத்துக்கு விரை வில் உரிய தீர்வு காண வேண் டும் என்றார் ரஜினிகாந்த்.

விழாவில் கமல்ஹாசன் பேசிய தாவது:

முதல்வர் கருணா நிதி திரையுலகுக்கும் மக்களுக் கும் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். இந்த விழா வில் மாலை, சால்வை போன்ற வற்றுக்குப் பதிலாக புத்தகங்க ளைத் தந்திருக்கிறார்கள். அரசு விழாக்களில் இனி இது தொட ரும் என்றும் சொல்லியிருக்கி றார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நினைத்த விஷயம் இது. முதல் வர் இதை நிறைவேற்றியதற்கா கத் தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். திரையுல குக்கு இன்னும் பல விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

அதற்காகத் தற்போது பட்டியல் தரப்போவதில்லை. எங்களுக் குத் தேவையானவற்றைத் தங்க ளிடம் கேட்டுப் பெற்றுக்கொள் வோம். அந்த தைரியத்தைத் தந்த தும் தாங்கள்தான் என்ற உரிமை யில் இதைச் சொல்கிறேன் என் றார்.

விழாவில் விஜய், அஜித், விக் ரம், பிரபு, சூர்யா (ஜோதிகாவுக் காக), கார்த்தி, வடிவேலு, விவேக், ப்ரியாமணி, சந்தியா, பசுபதி, நாசர், இயக்குநர்கள் ஷங்கர், திருமுருகன், சீமான், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெய ராஜ், பாடலாசிரியர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலருக்கு முதல்வர் கருணாநிதி விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனு ஹாசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகம் வளர்ந்தால் வட மாநிலங்களுக்கு ஆபத்தா? ராமரை முன்னிறுத்தி சதி வேலை என்கிறார் கருணாநிதி

சென்னை : “தமிழகம் வளர்ந்தால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களுக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் என தவறாக கருதி, ராமரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்’ என முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழக அரசின் 2005, 2006ம் ஆண்டிற்கான கலைத் துறை வித்தகர் விருதுகள், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில் 2005, 2006 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, நடிகைகள் சந்தியா, இயக்குனர் சங்கர் மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

அரசியல் கருத்துக்களை, நாட்டு மக்களுக்கு, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை கலை உலகில் பலர் புகுத்தியிருக்கிறார்கள். எங்களுக்கு முன்பே எங்களுக்கு வழிகாட்டியவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் நாட்டுப்பற்றை படங்கள் மூலமாக வளர்த்தார்கள் என்ற உண்மையை மறுத்துவிட முடியாது.

இதிகாசங்கள், வரலாறு இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டும். இதிகாசம் நாமாக செய்து கொள்ளும் கற்பனை. ராஜாஜி, சக்ரவர்த்தி திருமகன் என்ற புத்தக முன்னுரையில், “ராமாயணம் ஒரு இதிகாசம். சரித்திரம் அல்ல. நான் இதிலே அடையாளம் காட்டுகிற ராமன் கடவுள் அவதாரம் அல்ல.

ராமனும் மனிதன் தான். ஒரு ராஜகுமாரன் தான். நல்லவர். நல்ல காரியங்களை செய்தவர். அவரிடம் தெய்வீக அம்சம் உண்டு என்று சொல்லப்பட்டாலும், ராமன் செய்தவைகளை கடவுளின் வேலையாக நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.பெரியாரின் கருத்துக்கள் முதலில் சந்தேகத்திற்கு உரியவையாக இருந்து, இன்று ரஜினியால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிமாறப்பட்ட பத்து பண்டங்களில் எனக்கு பிடித்த பண்டங்களை நான் சுவைக்கிறேன் என்று குறிப்பிட்டாரோ, அதைபோல, ராஜாஜி படைத்த பண்டங்களில் எங்களுக்கு பிடித்த பண்டம் “ராமன் ஒரு ராஜகுமாரன் தான். அவதார புருஷன் அல்ல’ என்பது தான்.

சேது சமுத்திர திட்டத்திற்காக இந்தியாவில் உள்ள தலைவர்களுடன் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வாருங்கள் என ரஜினி கூறினார். உள்ளபடியே சந்தேகம் இருந்தால் போக்கலாம். 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் காலத்தில் திட்டத்திற்காக எட்டு முதல் 10 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேறும் என கணக்கிடப்பட்டு, இடையில் சில தடங்கல்கள் ஏற்பட்டு திட்டம் நின்று போனது. 1963ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது பிரதமர் நேருவை சந்தித்து திட்டம் குறித்து சொல்லி திட்டம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.

பிறகு திட்டம் நின்று போனது. 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த போது சேது சமுத்திர திட்டம் தமிழகத்திற்கு தேவை என்பதை வலியுறுத்தி எழுச்சி நாளாக கொண்டாடினார்.அதன் பிறகு தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நின்ற போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இப்படி கேட்ட போது தெய்வீக முலாம் யாரும் பூசவில்லை.

பாம்பன் கால்வாய், தேம்ஸ் நதி போல இது ஒரு திட்டம். ஒரு வழி பாதை. வழியை பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும், தமிழகம் வளம் பெறவும், வியாபார ரீதியாக பல தொடர்புகளை உலகத்தோடு கொள்ளவும், கடல்வழி குறுகிய காலத்தில் போய்ச் சேரும் வழியாக இத்திட்டத்தை யோசித்தோம். அண்ணா முயற்சிக்கு பிறகு, நான் முதல்வராக இருந்த போது கடிதம் மூலமாக வலியுறுத்தியிருக்கிறேன்.

வாஜ்பாய் பிரதமரான போது, சென்னை கடற்கரையில் அண்ணா பிறந்தநாள் விழாவில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என சொன்னார். திருநாவுக்கரசு உட்பட பா.ஜ., அமைச்சர்கள் அந்த திட்டத்தை ஏற்று கையெழுத்திட்டு, சேது சமுத்திர திட்டத்திற்கான வழிமுறைகள் செய்யப்பட்டன.

மன்மோகன்சிங் ஆட்சி வந்த பிறகு நாம் தொடர்ந்து கேட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் திட்டமாக இத்திட்டத்தை அறிவித்து முக்கால்வாசி பணி முடிந்துள்ளது.இந்நேரத்தில், ராமர் பிரச்னையை யார் முதல்முதலில் எழுப்பினார்கள் என்றால், நாம் அல்ல. ராமர் கட்டிய பாலத்தை இடிக்கிறார்கள் என்று சொல்லி இத்திட்டத்தை கெடுப்பதற்காக, சிலபேர் தமிழகத்திற்கு இத்திட்டம் வரக்கூடாது,

தமிழகம் வளர்ந்து விடும். எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ந்து விடும். தமிழகம் வளர்ந்தால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களுக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் என தவறாக கருதி, ராமரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். ராமரிடம் எங்களுக்கு எந்தவித விரோதமும் கிடையாது. ராமரை நாங்கள் வெறுப்பவர்கள் அல்ல. எந்த அவதார புருஷர்களும் நன்மைகளை செய்திருந்தால், பாராட்டக் கூடியவர்கள் தான் நாங்கள்.

கிருஷ்ணா என்பதற்காக கிருஷ்ணா நதி நீர் வேண்டாம் என்று சொல்லி விட்டோமா? கிருஷ்ணா நதி நீர் வேண்டும் என்பதற்காக துரைமுருகனும், ஸ்டாலினும், ஆந்திராவில் உள்ள சாய்பாபாவிடம் துõது சென்று வந்தனர்.கிருஷ்ணா என பெயர் வைக்கக் கூடாது என்று கூறினோமா? ராமகிருஷ்ணா என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாலம் என்ற பெயர் இருந்திருக்குமானால், அத்திட்டத்தை அந்தப் பெயரால் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருப்பேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இமயமலை சாமியார்களிடம் துõது :

ரஜினிக்கு கருணாநிதி யோசனை :

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ரஜினி எனக்கு ஒரு யோசனை கூறினார். என்னை விட வடநாட்டில் அதிகமாக சுற்றுப்பயணம் செய்யக்கூடிய வாய்ப்பும் வசதியும் படைத்தவர் ரஜினி. அவர் நினைத்தால் இமயமலை வரை சென்று சாமியார்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு உண்டு.

நீங்கள் செல்லும் போது, அவர்களிடம், “கருணாநிதி நாத்திகர் தான். கருணாநிதி ராமர் என்ற பெயரை வெறுப்பவர் அல்ல. அவரது தலைவருக்கு ராமசாமி என்று தான் பெயர்’ என்ற உண்மையை அங்குள்ள சாமியார்கள் சொல்ல வேண்டும். அந்த சாமியார்கள் திருந்தினால், நாடு திருந்தும்.

சேது சமுத்திர திட்டத்தில் மதம், ஜாதி, கடவுள் தன்மை, இதிகாசம் குறிக்கிடக் கூடாது. இதில் குறுக்கிட வேண்டியவை நல்வாழ்வு, எதிர்காலம், வரும்காலம் தான் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பொறுப்பை ரஜினி ஏற்றுக் கொள்ள வேண்டும். ரஜினிக்கு விருது வழங்கவில்லை, இந்த வேண்டுகோளை வழங்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

————————————————————————————————-
ரஜினி நழுவவிட்ட “முதல்வர்’ வாய்ப்பு

விறுவிறுப்பான ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா.

விழாவில் செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசும்போது, முதல்வருக்கும் திரையுலகுக்கும் சுமார் 60 ஆண்டு காலத் தொடர்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர் அரசியலிலும் ஈடுபட்டுக்கொண்டு, 73 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இது மிகப் பெரிய சாதனை. இன்னொரு விஷயம் அவருடைய வசனத்தில் நடித்த மூன்று பேர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். ஒருவர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஜானகி எம்.ஜி.ஆர்., இன்னொருவர் யாரென்று உங்களுக்கே தெரியும்; கலைஞரின் வசனத்துக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என சூசகமாகப் பேசி உரையை முடித்தார்.

ரஜினி பேசும்போது தன்னால் கருணாநிதி வசனத்தில் நடிக்க முடியாமல் போனதே என்று ஆதங்கப்பட்டார். இதுபற்றி ரஜினி கூறும்போது… “”ஒரு சமயம் எனக்கு எஸ்.பி. முத்துராமன் மூலமாக கலைஞர் கைப்பட எழுதிய “மந்திரி குமாரி’ படத்தின் ஸ்கிரிப்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வசனத்தோடு ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும்; நடிகர், நடிகைகளின் உடை, செட் எல்லாவற்றையும் குறிப்பிட்டு “இது என்னுடைய கருத்து; பிடித்த விஷயங்களை இயக்குநர் எடுத்துக்கொள்ளலாம்’ என்றும் எழுதியிருந்தார். அப்படி ஒரு ஸ்கிரிப்ட் கிடைத்தால் நானே டைரக்டர் ஆகி விடுவேன்.

15, 20 வருடங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர், தான் தயாரித்து இயக்கிய “இலங்கேஸ்வரன்’ என்ற படத்தில் என்னை ராவணனாக நடிக்கச் சொன்னார். படத்துக்கு கலைஞரிடம்தான் வசனம் எழுதித் தருமாறு கேட்கப்போகிறேன் என்றார். நான் ஏதோ “இது எப்படி இருக்கு? அது எப்படி இருக்கு? அதிருதுல்ல, உதிருதுல்ல…’ போல டயலாக் பேசி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். என்னால் எப்படி கலைஞரின் வசனத்தைப் பேச முடியும் என்று நினைத்து அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதை ஒரு சமயம் கலைஞரிடமும் சொன்னேன்.

அதற்கு அவர் “மலைக்கள்ளன்’ பார்த்தீர்களா? அதில் வசனம் எப்படி இருந்தது? என்று கேட்டார். நானும் படம் பார்த்திருக்கிறேன். வசனம் சாதாரணமாக இருந்தது என்றேன்.

அதற்கு அவர் அதே படத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்தால் வசனம் வேறு மாதிரி இருக்கும் என்றார். அப்போதுதான் அவருடைய வசனத்தில் நடிக்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என நினைத்தேன் என்றார்.

ஒருவேளை கருணாநிதியின் வசனத்தில் நடித்திருந்தால்… ரஜினியும் அரசியலில் ஈடுபட்டிருந்தால்… கருணாநிதி வசனத்தில் நடித்து முதல்வரான நாலாமவராக ஆகியிருக்கலாமோ என்பது விழாவுக்கு வந்திருந்த ரஜினி ரசிகர்களின் முணுமுணுப்பு.

Posted in Awards, Ceremony, Cinema, EVR, Films, God, Hindu, Hinduism, Hindutva, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karuna, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Movies, Paper, Periyar, Prizes, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Ram, Ramar, Religion, Sedhu, Sethu, Speech, Talk | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »

Tamil Literature Felicitations & Awards – Silmboli Chellappan, Narasaiya & Va Se Kuzhandhaisami

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சிலம்பொலி செல்லப்பனுக்கு சிறந்த தமிழறிஞர் விருது

மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச.மெய்யப்பனின் பவள விழாவை முன்னிட்டு மெய்யப்பன் அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா சிதம்பரம் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரு.இலக்குமணன் தலைமை வகித்து விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்குகிறார். விழா நிறைவில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. விழாவில் சிலம்பொலி செல்லப்பனாருக்கு சிறந்த தமிழறிஞர் விருது ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

2006-ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களான பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி எழுதிய “தமிழ் வளர்ச்சி -மேம்பாடு + பயன்பாடு = வளர்ச்சி’ என்ற நூலும், நரசய்யா எழுதிய “மதராசபட்டணம்-ஒரு நகரத்தின் கதை’ என்ற நூலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது.

சிறந்த நூல்களைப் பதிப்பித்த பாரதி பதிப்பகம், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மெய்யப்பன் பதிப்பக உரிமையாளர் ச.மெ.மீனாட்சிசோமசுந்தரம் செய்துள்ளார்.

Posted in Announcements, Awards, Best, Bharathi Books, Bharathy Books, Books, Celebration, Chellappan, Felicitation, Function, Kulandhaisami, Kuzandhaisami, Kuzhandaisami, Kuzhandhaisaami, Kuzhandhaisami, Kuzhandhaisamy, Kuzhanthaisami, Literature, Meyyappan, Narasaiah, Narasaiya, Palaniappa, Pazaniappa, Pazhaniappa, Prizes, Silmboli, Silmpoli, Solomon | Leave a Comment »

President presents Kabir Puraskar, Communal Harmony awards

Posted by Snapjudge மேல் மே 23, 2007

உ.பி. இளைஞருக்கு கபீர் விருது; அசாம் காந்தியவாதிக்கு ஒருமைப்பாட்டு விருது: கலாம் வழங்கினார்

புது தில்லி, மே 24: தேச ஒருமைப்பாடு, வகுப்பு ஒற்றுமைக்காக உழைத்த உத்தரப்பிரதேச சமூக சேவகர் ராம்பாபு சிங் செüஹானுக்கு (34) கபீர் விருதும், அசாமைச் சேர்ந்த ரவீந்திரநாத் உபாத்யாயவுக்கு தேச வகுப்பு ஒற்றுமை விருதும், தில்லியிலிருந்து செயல்படும் சமத்துவ கல்விக்கான தன்னார்வ அமைப்புக்கு தேசிய வகுப்பு ஒற்றுமை விருதும் வழங்கப்பட்டன.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ்விருதுகளை வழங்கிப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் பங்கேற்றனர்.

ராம்பாபு சிங் செüஹான்: உத்தரப்பிரதேசத்தின் தம்னாகடி கிராமத்தைச் சேர்ந்த செüஹான், கபீர்தாசரால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஹத்ராஸ் என்ற இடத்திலிருந்து ஆக்ராவுக்கு பாத யாத்திரை சென்றார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி நியாயம் கிடைக்க உதவி செய்தார். அவருக்கு பாராட்டு பத்திரமும் ரூ.50,000 ரொக்கமும் விருதாக தரப்பட்டன.

ரவீந்திரநாத் உபாத்யாய்: அசாமைச் சேர்ந்த காந்தியவாதியான ரவீந்திரநாத் உபாத்யாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இப்போது வட-கிழக்கு மாநிலங்களில் வகுப்பு மோதல்களால் பதற்றம் அடைந்துள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். 2000-வது ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2003-ல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டமைக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். 2004-ல் வட-கிழக்கு மாநிலங்களின் நண்பர் என்ற விருதைப் பெற்றார்.

ரவீந்திரநாத் உபாத்யாயாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.

சமத்துவ கல்விக்கான நிறுவனம்: தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமத்துவ கல்விக்கான நிறுவனம் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசி பூஷண் இந்த அமைப்பை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கும் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை தரப்பட்டன.

Posted in activism, Activists, Assam, Awards, Charity, Chauhan, citation, communal, Education, Faces, Gandhi, Gandhian, Harmony, Hindi, Hindu, Hinduism, Individual, Integration, Jury, Kabir, Kalam, Leaders, Muslim, Nation, National, NGO, Northeast, organisation, people, Politics, President, Prizes, Puraskar, Rabindra Nath Upadhyay, Rambabu Singh Chauhan, Recognition, secularism, Shashi Bhushan, Socialist, Society, UP, Uttar Pradesh, Volunteer | Leave a Comment »

MGR Film University to spend Rs. 2.2 cr on Infrastructure Improvements

Posted by Snapjudge மேல் மே 4, 2007

எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள்

சென்னை, மே 4: சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று செய்தித் துறை செயலர் து. ராசேந்திரன் தெரிவித்தார்.

இந் நிறுவனத்தின் 47-வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் டி.டி.எஸ். மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கூடம் ரூ. 72 லட்சத்தில் அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்.

இதே போல ரூ. 36 லட்சத்தில் ரி-ரெக்கார்டிங் தியேட்டர் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர நடப்பு ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதிநவீன கேமிராக்கள்: ஒளிப்பதிவுத் துறை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கேமிராக்களில் அதிநவீன சினிமாஸ்கோப் லென்ஸ்கள் விரைவில் பொருத்தப்படும்.

இதுதவிர 6 ஸ்டில் கேமிராக்கள் மற்றும் ஒரு விடியோ கேமிரா வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.

முன்னதாக விழா சிறப்பு மலரை வெளியிட்டு, சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வழங்கினார்.

  • செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. கோசலராமன்,
  • தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன்,
  • கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அமிர்தம்,
  • கல்லூரி முதல்வர் ந. ரமேஷ்,
  • மாணவர் பேரவைத் தலைவர் பா. நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Posted in 70MM, AC, Advanced, Amirtham, Awards, Camera, Cinema, Cinemascope, College, Courses, Digital, Dolby, DTS, Editing, Editor, Education, Gadgets, infrastructure, Instruments, iRaama Narayanan, MGR, Movies, Photography, Plans, Prizes, Raama Narayanan, Re-recording, Study, Technology, Television, Tharamani, TV, University, Varsity, video | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »

The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு

கோவை, பிப். 22: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கவிச்சிறகு விருது: மூத்த கவிஞரைப் பாராட்டும் வகையில் இவ் விருது வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்று வழங்கப்படும்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவன் இவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • குளித்துக் கரையேறாத கோபியர்கள்,
  • மின்னற்பொழுதே தூரம்,
  • மாற்றப்படாத வீடு உள்பட இவரது 15 கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன.

மேலும் “தேவதேவன் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்பு, “அலிபாபாவும் மோர்ஜியானாவும்’ என்ற நாடகநூல், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரைநூல் ஆகியனவும் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் பாடமாகவும் உள்ளன. இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

கவித்தூவி விருது: இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 2 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

திருநெல்வேலி பத்தினிப்பாறையைச் சேர்ந்த கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா (நூல்-வலியோடு முறியும் மின்னல்), சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவிஞர் தென்றல் (நூல்-நீல இறகு) ஆகியோர் கவித்தூவி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மார்ச் 10-ம் தேதி கோவை ஆருத்ரா அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

கவிஞர் தேவமகள் அறக்கட்டளை அமைப்பாளர் ஆர்.நித்திலன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Posted in Awards, Devadevan, Devamagal, J Francis Kruba, J Francis Krupa, Kavithoovi Award, Literary, Literature, Prizes, R Nithilan, Tamil, Thendral, Thenral | 1 Comment »