Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nallakannu’ Category

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

Thamizhachi Thangapandian’s Vanapechi by Uyirmai – Book Release

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

“வனப்பேச்சி’ நுõல் வெளியீட்டு விழா

சென்னை:உயிர்மை பதிப்பகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய “வனப்பேச்சி’ நுõல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை தாங்கிய இந்திய கம்யூ., தலைவர் ஆர்.நல்லகண்ணு “வனப்பேச்சி’ கவிதை தொகுப்பு நுõலை வெளியிட, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் ராஜா பேசுகையில்,”தமிழர்கள் வாழ்வில் இலக்கணமும், கவிதையும் பிரித்து பார்க்க முடியவில்லை. கவிதை வெளியே இல்லை. ஒவ்வொருவரிடமும் ஆழப் பதிந்திருக்கிறது’ என்றார்.

இந்திய கம்யூ., தலைவர் நல்லகண்ணு பேசுகையில்,”உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதை தன்னுடைய நிலையை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். செறிவான கருத்துக்களும், மண்ணின் மொழியும் உள்ளது. நகரம் மற்றும் கிராமம் ஒரே சீரான வளர்ச்சி காண வேண்டும். எனவே, கவிஞர்கள் மக்கள் படும் துன்பங்களை கவிதைகளாக எழுத வேண்டும். அது அரசியலாகிவிடும் என்று ஒதுங்கிக் கொள்ளக் கூடாது’ என்றார்.

முன்னதாக உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும், ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசுகையில், “தமிழச்சி தங்கபாண்டியனின் இரண்டாவது கவிதை தொகுப்பு வனப்பேச்சி. இளம் கவிஞர்கள் மீது விமர்சனங்கள் வரும். அவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கும், மொழி சார்ந்தவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கும் உதவும். தற்போது அரசியலில் வரும் மாற்றங்களை கவனித்து கொண்டிருக்கிறோம். எனவே, எம்.பி., கனிமொழியும், தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கும் உந்து சக்தியாக திகழும்’ என்றார்.

ஏற்புரையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், “நகரவாசிகள் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்றனர். வணிக பொருளாதாரம், உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கு நடுவில் நகரவாசிகள் வாழ்க்கை நடத்துகின்றனர். கிராமங் களில், வன்முறை வெளிப்படையாக உள்ளது. ஆனால், நகரத்தில் எப்போது என்ன நடக்கும், என்பது தெரியாத புதிராக இருக்கிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள்

  • ஜெயகாந்தன்,
  • பிரபஞ்சன்,
  • தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவி ராமாத்தாள்,
  • எம்.எல்.ஏ., ரவிக்குமார்,
  • போலீஸ் ஏ.டி.ஜி.பி., திலகவதி,
  • கவிஞர் சுகுமாரன்,
  • பேராசிரியர் சுப்பாராவ்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

Posted in Books, DMK, Kanimoli, Kanimozhi, Kanimozi, Literature, Manushiyaputhiran, Manushyaputhiran, MLA, MP, Nallakannu, Poems, Poets, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangapandian, Thangapandiyan, Thankapandian, Thankapandiyan, Uyirmai, Uyirmmai, Vanapechi, Vanappechi | 1 Comment »

Thyagi B Srinivasa Rao – R Nallakannu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

உழவர்களை ஒன்றுதிரட்டியவர்

ஆர். நல்லகண்ணு

உருகும் வேளையிலும் – நல்ல

ஒளி தரும் மெழுகு வர்த்தி

ஒளிதரும் வேளையிலும் – தியாக

உணர்வினைத் தூண்டி விடும்

உழவுத் தொழிலாளர்களின் உரிமைக்குப் போராடிய தியாகி பி. சீனிவாசராவ் (பிஎஸ்ஆர்) வாழ்க்கையை இப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது. கல்லூரிப் படிப்பின்போதே அன்னிய ஆட்சியை எதிர்த்து விடுதலை வேட்கையில் ஈர்ப்பு ஏற்பட்டது. பர்மா, ரங்கூன் நகருக்குச் சென்றவர், 23வது வயதில் சென்னை வந்தார்.

1930களில் அன்னியத் துணிப் புறக்கணிப்பு (பகிஷ்காரம்) பேரியக்கமாகப் பரவியது; சென்னை நகரத்தில் பூக்கடை பஜாரில் லங்காஷயர் மல்துணி விற்கப்பட்ட கடையில் நாள்தோறும் மறியல் செய்வார் பி.எஸ்.ஆர்.

ஒருநாள் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் இறந்து விட்டாரென்று கால்வாயில் போட்டுச் சென்று விட்டனர்; இறந்துவிட்டதாக நாளேடுகளிலும் செய்தி வந்துவிட்டது; அவர் உயிர் பிழைத்து மீண்டும் களத்தில் இறங்கியதே உயிரோவியமான நிகழ்வாகும்.

ஓயாத சிறைவாசம்; சென்னை மத்திய சிறையிலிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கான் ஆகியோரும் கைதிகளாக இருந்தார்கள். அமீர் ஹைதர்கான் கொடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படித்து, விளக்கம் கேட்டுத் தெளிந்தார்; சென்னை சிறையிலிருந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு – விடுதலைப் போராளியாக மட்டுமல்லாமல், புரட்சியாளராகவும் வெளியே வந்தார்.

1940-ல் 2வது உலகப் போர் நடந்த போதும் யுத்த எதிர்ப்பில் பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்; 1946ல் பம்பாய் துறைமுகத்தில் கடற்படையினர் நடத்திய போராட்டமும் அதை ஆதரித்து நடந்த நாடு தழுவிய எழுச்சியும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு சாவு மணியடித்தது; இப் போராட்டத்திலும் பி.எஸ்.ஆர். மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குப் பிடிவாரண்ட் போடப்பட்டது; பி.எஸ்.ஆர். தலைமறைவானார். தலைமறைவு அனுபவம் நூலாக வெளிவந்தது; இது கடித இலக்கியமாகக் கருதப்பட்டது.

சுதந்திர இந்தியாவிலும் பி.எஸ்.ஆருக்கு 1961 வரை போராட்டமே வாழ்க்கையாக இருந்தது. 1943ல் தமிழ்நாடெங்கும் கிராமப்புற உழவர் பெருமக்களை ஒன்று திரட்டும் பொறுப்பை ஏற்றார்.

பரம்பரை ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் சிதறிக் கிடந்த கிராமப்புற மக்களை ஒன்றுதிரட்டுவதில் சீனிவாசராவ் பெரும் பாடுபட்டார்; மக்களோடு இரண்டறக் கலந்து, மக்களின் குறைகளைக் கேட்டுத் தெரிந்து, ஏழை விவசாய மக்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் சங்கமாகத் திரட்டுவதில் முன்னணித் தலைவராக விளங்கினார்.

1947ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாட்களான விவசாயத் தொழிலாளர்களின் விடுதலைக்கான கிளர்ச்சியும் சாகுபடி விவசாயிகளின் உரிமைப் பாதுகாப்புக்கு நடத்த இயக்கங்களும் – பெரும் கலகமாகச் சித்திரிக்கப்பட்டன; இதை மறுத்து சீனிவாசராவ் “தஞ்சையில் நடப்பதென்ன?’ என்ற நூலை எழுதினார்.

சாதியால் சிதறுண்டு கிடந்த ஏழை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் செங்கொடி இயக்கத்தின் கீழ் அணி திரட்டப்பட்டார்கள்; உரிமைக்காகப் போராடினார்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, பாதுகாப்புக்கான சட்டங்கள் இல்லாத காலத்தில், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட சக்தியினால் தஞ்சை மாவட்ட மிராசுதாரர்களைப் பணிய வைக்க முடிந்தது; சவுக்கடி – சாணிப்பால் ஊற்றி அடிக்க மாட்டோம் என்று 1944ல் மிராசுதாரர்களைக் கையெழுத்திடச் செய்ய முடிந்தது.

  • சாகுபடியாளர்கள் நில வெளியேற்றத் தடைச் சட்டம்,
  • 60:40 நியாயவாரச் சட்டம்,
  • குடியிருப்பு மனைச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வரச் செய்ததோடு, அமலாக்குவதற்கும் தொடர்ந்து போராடுவது செங்கொடி இயக்கங்களாகும்.

1961ல் நில உச்சவரம்பு மசோதாவை அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது; ஒருவரோ – குடும்பமோ – 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கொடுத்தது. மிச்ச நிலமே கிடைக்காத அளவு மக்களை ஏமாற்றும் அந்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரியக்கத்தை நடத்தியது; பி.எஸ்.ஆர். தலைமையில் கோவையிலிருந்தும், மணலி கந்தசாமி தலைமையில் மதுரையிலிருந்தும் 30 நாள் நடைப்பயணமாகச் சென்னை நகர் வந்தடைந்தனர்.

செப்டம்பரில் எல்லா மாவட்டங்களிலும், மசோதாவைத் திருத்தக் கோரி அறப்போர் நடந்தது. 16,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; சிறையிலேயே 4 தோழர்கள் இறந்தார்கள். சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர மாநில அரசு இசைந்தது.

முப்பது நாள் போராட்டம் முடிவுக்கு வருவதாக 1961 செப்டம்பர் 29ல் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டார் பி.எஸ்.ஆர்.

ஏற்கெனவே, ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த அலுப்பும், தொடர்ந்த சிறைவாசமும், அடக்குமுறையில் பெற்ற விழுப்புண்களும், ஆஸ்த்மா நோயும் அந்த மாவீரனின் உயிரைப் பறித்து விட்டது, செப்டம்பர் 30ல்.

பி.எஸ்.ஆர். பிறந்தது 1907 ஏப்ரல் 10.

கர்நாடக மாநிலம் படகாரா;

தந்தை பெயர் இராமச்சந்திர ராவ்.

54 ஆண்டுகளே வாழ்ந்த பிஎஸ்ஆரின் நூற்றாண்டு இவ்வாண்டு.

Posted in Ameer Hyderkhan, B Srinivasa Rao, BSR, Civil Disobedience, Communist, Farm Laborers, Farmers, Fighter, Freedom Fight, Independence, Movements, Nallakannu, Reform, Struggles, Subash Chandra Bose, Tamil | Leave a Comment »