Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘2007’ Category

2007 Flashback by Viduthalai: News, Incidents, Law, People

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

2007-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

தமிழகம்

ஜன.16: தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் சட்டம் நீக்கம்.
பிப்.4: காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியீடு. இதன்படி ஆண்டுதோறும் 419 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி ஒதுக்கீடு. கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீர், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டது. எஞ்சியுள்ள தண்ணீர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்த உத்தரவு.
பிப்.16: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் வெற்றி. மொத்தமுள்ள 154 வார்டுகளுக்கான தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (37) பா.ம.க (17),, இந்தியக் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களைப் பிடித்தன.
மார்ச்.5: தமிழகத்தில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
மார்ச்.31: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்.
மே 11: தமிழக முதல்வர் கலைஞர் சட்டப் பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பாராட்டு.
மே 13: மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ராஜிநாமா.
மே 18: திருச்செந்தூர் மக்களவை உறுப்பினர் ராதிகா செல்வி, மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி ஏற்பு.
ஜூன் 3: சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ்.
ஜூன்.8: முதல்வர் கலைஞரின் மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக போட்டி யின்றி தேர்வு.
ஜூன்.29: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் கேஎஸ்கே ராஜேந்திரன் வெற்றி.
ஜூலை.2: பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பல் “நிமிட்ஸ்’, சென்னைத் துறைமுகம் வருகை.
ஜூலை 5: தமிழகத் தில் 6 மாநகராட்சி களில் 11 மாலை நேர நீதிமன்றங் கள் தொடக் கம்.
ஜூலை 15: கல்விக் கண் திறந்த காம ராஜரின் 105வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தமிழ கத்தில் உள்ள அனைத்து பள்ளி களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.
ஜூலை 30: பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட எதிர்ப்புகளால் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தில் டாடா குழுமத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை தொடங்கும் பணிகளை நிறுத்திவைப்பதாக முதல்வர் அறிவிப்பு.
ஆக. 13: சென்னை சேப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் பெயர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எனப் பெயர் மாற்றம்.
ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி மையத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் தொடங்கிவைப்பு.
அக்.1: வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அக்.14: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் கோவில் கோபுரம் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
நவ.1: புதிதாக தொடங்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொடங்கி வைத்தார்.
நவ.19: திருவான்மியூர் வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைப்பு.
டிச.6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அஇஅதிமுகவினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது.

இந்தியா

ஜன.4: வரும் கல்வியாண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு (ஒபிசி) அய்அய்டி மற்றும் அய்அய் எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல்.
ஜன.10: 2005ம் ஆண்டு கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
ஜன.11: அரசமைப்புச் சட்டத்தில் 9வது அட்டவணையில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ப்பதை சட்ட விதிகளின்கீழ் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.
பிப்.5: பெப்சிகோ நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியப் பெண் இந்திரா நூயி தேர்வு.
மார்ச்.16: சொத்துக் குவிப்பு வழக்கில் உத்தரப்பிரதேச முன் னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் எழுதிய கடிதம் காரணமாக அந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறுப்பு.
மார்ச்.29: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
ஏப்.23: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சத ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு அளிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
மே.11: அய்தராபாதில் உள்ள மெக்கா மசூதியில் பிரார்த்தனை நடந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் பலி.
ஜூன்.6: எதிர்க்கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் தலைமையில் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஹைதராபாதில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்சு.
ஜூலை.8: போர்ச்சுகல்லைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தாஜ்மகால் உலக அதிசயங்களில் இடம்பெற்றது.
ஜூலை.21: இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் தேர்வு.
ஆக.10: இந்தியாவின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முகம்மது ஹமீத் அன்சாரி தேர்வு.
ஆக.13: பாகிஸ்தான் சிறையிலிருந்த 140 இந்தியர்களை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு விடுவித்தது.
ஆக.22: 13 ஆண்டுகளுக்கு முன் தனது உதவியாளரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் விடுவிப்பு.
செப்.2: டிடிஎச் சேவைக்கு உதவும் இன்சாட்4சிஆர் செயற்கைக் கோள் சிறீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அக்.14: குஜராத்தில் உள்ள மகாகாளி ஆலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் சாவு.
அக்.29: “தலையில்லாக் கோழிகள்’ என விமர்சித்ததற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோனன் சென், மக்களவை உரிமைக்குழு முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பு.
நவ.7: பெங்களூர் மருத்துவர்கள் கூடுதல் கால், கைகளுடன் பிறந்த குழந்தை லட்சுமிக்கு 27 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெற்றிகரமாக வெட்டியெடுத்தனர்.
நவ.25: மலேசியாவில் வாழும் இந்திய மரபுவழியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து நடத்திய பேரணியில் 20 ஆயிரம்பேர் பங்கேற்பு.
நவ.26: கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல்.
நவ.29: மகாராஷ்டிர அரசு புதிய நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி தனிநபர் 500 சதுர மீட் டருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது.
டிச.11: அமெரிக்கப் பாணியில் தில்லியை அடுத்த குர்காவ்னில் 14 வயது பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரை சுட்டுக் கொன்றனர்.
டிச.16: சத்தீஸ்கர் மாநிலம் தன்டேஸ்வரா பகுதியில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தி தங்களது சகாக்கள் 377 பேரை நக்சலைட்டுகள் மீட்பு.
டிச.25: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு.

உலகம்

ஜன.1: அய்ரோப்பிய யூனியனில் பல்கேரியா, ருமேனியா சேர்ந்தது.
அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலராக தென் கொரியாவின் பான் கி மூன் தேர்வு.
ஜன.11: வங்கதேசத்தில் நெருக்கடி நிலை பிரகடனம். இரவு நேர ஊரடங்கு அமல்.
விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களை அழிக்கவல்ல ஏவுகணை சோதனையில் சீனா வெற்றி.
மார்ச் 26: தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவு ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 4 இலங்கை வீரர்கள் பலி.
மார்ச்.31: புவி வெப்பமடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்சாரத்தை அணைத்தனர்.
ஏப்.2: சாலமன் தீவுகளில் 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி ஏற்பட்டு அரு கிலுள்ள தீவுகளைத் தாக்கியது.
ஏப்.3: தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு புது தில்லியில் தொடங்கியது. இக்கூட்டமைப்பில் 8வது உறுப்பு நாடாக ஆப்கனிஸ்தான் இணைக்கப்பட்டது.
ஏப்.24: யாழ்ப்பாணத்தில் உள்ள விமான தளம் மீது விடுத லைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஏப்.29: இலங்கையின் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
மே 5: கென்ய பயணிகள் விமானம் கேமரூன் அருகே அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கியதில் 15 இந்தியர்கள் உள்பட 114 பேர் பலி.
மே 6: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் நிகோலஸ் சகோஸி வெற்றி.
மே 24: இலங்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்படைத் தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூன் 8: கொழும்பு நகரிலிருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
ஜூன் 22: 195 நாள் விண்வெளி பயணத்துக்குப்பிறகு அமெரிக்க வாழ் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிஸ் விண்கலம் கென்னடி விமான தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
ஜூன் 24: 1980ம் ஆண்டு லட்சத்து 80 ஆயிரம் குர்து இன மக்கள் படுகொலைக்குக் காரணமானவர் எனக்கூறி சதாம் ஹுசை னின் உறவினர் கெமிக்கல் அலி மற்றும் 2 பேருக்கு இராக் நீதி மன்றம் மரண தண்டனை விதித்தது.
ஜூன் 27: இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் ராஜிநாமா. தொழிலாளர் கட்சியின் தலைவர் கார்டன் பிரவுனை பிரதமராக்க பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் ஒப்பு தல்.
ஜூலை 10: பாகிஸ்தானில் உள்ள லால் மஸ்ஜித்தினுள் நுழைந்த பயங்கரவாதிகளுடன் 14 மணி நேரம் போராடி ராணுவம் மீட்டது. இதில் 8 கமாண்டோக்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை 21: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஹாரிபாட்டர் நாவலின் 7வது தொகுதி உலகெங்கும் வெளியானது.
வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு அதிபர் புஷ் சென்ற போது இரண்டரை மணி நேரத்துக்கு அதிபர் பதவியை துணை அதிபர் டிக் செனி வகித்தார்.
ஆக.16: பெருவில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கம் காரணமாக 337 பேர் உயிரிழந்தனர்.
செப்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கியிருந்துவிட்டு நாடு திரும்பினார். ஆனால் விமான நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார்.
செப்.24: கடந்த 20 ஆண்டுகளாக மியான்மரில் நடைபெற் றுவரும் ராணுவ ஆட்சியைக் கண்டித்து புத்த பிக்குகள் உள்றபட லட்சக்கணக்கானோர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.
அக்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, நாடு திரும்பியபோது தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
அக்.22: முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இலங்கை ராணுவம் பெருமளவு ஆயுதங்களை விட்டு தப்பி ஓட் டம்.
அக்.23: அமெரிக்காவின் லூஸியானா மாகாண கவர்னராக அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் தேர்வு செய் யப்பட்டார்.
நவ.2: இலங்கை ராணுவம் நடத்திய விமானப்படைத் தாக் குதலில் விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு ஆலோசகர் சுப.
தமிழ்ச்செல்வன் சாவு.
நவ.3: பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அதிபர் முஷாரப் கொண்டு வந்ததோடு, உச்சநீதிமன்ற நீதிபதியையும் பதவி நீக்கம் செய்தார்.
நவ.15: வங்கதேசத்தில் சிடார் சூறாவளி தாக்கியதில் 3,300 பேர் பலி.
நவ.24: ஆஸ்திரேலிய பிரதமராக கெவின் ருட் வெற்றி.
நவ.28: தற்கொலைப்படைத் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார்.
டிச.3: ரஷிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அபார வெற்றி.
பாகிஸ்தானில் ஜன.8ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு தேர்தல் ஆணையம் தடை.
டிச.10: அமெரிக்கத் துணை அதிபர் அல்கோர் மற்றும் இந்திய விஞ்ஞானி ராஜேந்திர பச்சோரி ஆகியோருக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
டிச.27: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, தீவிரவாதி களால் சுட்டுக் கொலை.

Posted in 2007, Flashback, Incidents, Law, News, people, Recap, Vidudhalai, Viduthalai, Vitudhalai, Vituthalai | Leave a Comment »

Sports in 2007 – Recap, Timeline, Incidents, News, Flashback: Cricket, India, Hockey

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

விளையாட்டு

ஜனவரி

ஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் லாங்கர் ஓய்வு.

* 2700 ஈலோ புள்ளிகளை கடக்கும் இந்தியாவின் 2 வது செஸ் வீரர் என்ற சாதனையை சசிகிரண் படைத்தார்.

ஜன.3: சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 1000 விக்கெட்டுகளை எட்டினார்.

ஜன.5: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 50 என கைப்பற்றியது.

ஜன.6: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 21 என வென்றது.

ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பட்டத்தை பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் கைப்பற்றினார்.

* பிரிமியர் ஹாக்கி லீக் பட்டத்தை பெங்களூரு லயன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. பைனலில் 30 என ஐதராபாத் சுல்தான்சை வென்றது.

ஜன.18: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா 36, 26 என்ற செட்களில் ஜப்பானின் அய்கோவிடம் வீழ்ந்தார்.

ஜன.20: தேசிய பெண்கள் ஜுனியர் கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் மணிப்பூர் 50 என தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஜன.21: 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிரிக்கெட் கோப்பையை 96 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து மகாராஷ்டிரா கைப்பற்றியது.

ஜன.26: ஈரானை 1929 என வீழ்த்தி இரண்டாவது கபடி உலக கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது.

* மூனிச்சில் நடந்த ஆண்கள் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ.,ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜாகிர்கான் தங்கம் வென்றார்.

* யு.ஈ.எப்.ஏ.,தலைவர் தேர்தலில் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினி வெற்றி பெற்றார்.

ஜன.27:ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றார்.

பிப்ரவரி

பிப்.3: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த”டுவென்டி20′ போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

பிப்.8: பாரிஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வென்றார்.

பிப்.9: 33 வது தேசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தியில் துவங்கியது.

பிப்.17: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 21 என வென்றது.

பிப்.18: தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.

* பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் யரோஸ்லோவா சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

பிப்.21: ஐ.சி.சி.,ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தோனி 2 ம் இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச்

மார்ச் 1: வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டு சென்றனர். பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து முதன் முறையாக வீரர்கள் தேசிய பாதுகாப்பு படையுடன் சென்றனர்.

மார்ச் 4: ஸ்குவாஷ் தர வரிசையில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 45 வது இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச் 6: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 182 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 8: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு போட்டிகளை “டிடி’யில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்ற மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டது.

மார்ச் 9: வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ச் 12: உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் துவங்கின.

* செஸ் தரவரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்தை கைப்பற்றினார்.

மார்ச் 13: உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 16: வங்கதேச கிரிக்கெட் வீரர் மஞ்சுரல் இஸ்லாம், பைக் விபத்தில் பலியானார். மிகக் குறைந்த வயதில் (22) பலியான டெஸ்ட் வீரர் இவர்தான்.

* நெதர் லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை.

மார்ச்17: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

* உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வென்றது.

மார்ச் 19: சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்சமாம் அறிவித்தார்.

*பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ரன்கள் எடுத்த இந்திய அணி உலக கோப்பையில் அதிக பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனை நிகழ்த்தியது.

மார்ச் 23: இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

மார்ச் 24: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், உலக கோப்பையில் அதி வேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை.

மார்ச் 29: உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

* அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச் 30: ஒரு நாள் போட்டிகளிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே ஓய்வு.

ஏப்ரல்

ஏப்.4: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை சாப்பல் ராஜினாமா.

ஏப்.14: ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஐந்தாம் இடம் பிடித்தார்.

ஏப்.21: தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிமுக “டுவென்டி20′ தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஏப்.27: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பிளமிங் ராஜினாமா செய்தார்.

ஏப்.28: உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை வென்றது.

* பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான ஜோதி மும்பை வந்தடைந்தது.

மே

மே 2: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தபால் தலை வெளியிடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.

மே 5 : முதல் தரப் போட்டிகளிலிருந்து தமிழக வீரர் சரத் ஓய்வு.

மே 6 : சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் ஓய்வு.

* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த முறையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்போவதாக அறிவிப்பு.

மே 13: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவர்ட் தடை விதித்தார்.

மே 14: இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டாம்மூடி விலகல்.

மே 15: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 20 என கைப்பற்றியது.

* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

மே 21: பிரேசில் கால்பந்து வீரர் ரொமாரியோ டி சவுசா ஆயிரம் கோல் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

மே 23: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 21 என வென்றது.

* போதை மருந்து பயன்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கைது.

மே 26: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக், ஜாபர், டிராவிட், சச்சின் என நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.

மே 27: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

மே 29: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் புளுவட் சர்வதேச போட்டிகளியிலிருந்து ஓய்வு.

ஜூன்

ஜூன் 8: ஐ.சி.சி., தற்காலிக தலைவராக தென் ஆப்ரிக்காவின் ரே மாலி தேர்வு.

ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 10: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று, ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனை.

ஜூன் 11: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க கிரஹாம் போர்டு மறுப்பு.

ஜூன் 12: சேவக், ஹர்பஜன் மற்றும் முனாப், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கம். தோனி துணைக் கேப்டனாக நியமனம்.

ஜூன் 16: இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் தோனி மற்றும் யுவராஜ் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம். சேவக், ஹர்பஜன், லட்சுமண் மற்றும் பதான் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.

ஜூன் 18: ஆசிய தடகள கிராண்ட்பிரிக்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கம் வென்றது.

ஜூன் 19: இங்கிலாந்து தொடரில் பேட்டியளிக்க இந்திய வீரர் களுக்கு தடை.

* 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான “டாப்10′ பட்டியலுக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மான்டி பனேசர் பெற்றார்.

ஜூன் 21: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் பாட்டீல், இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இணைந்தார்.

ஜூன்28: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி.

ஜூலை

ஜூலை1: அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்றது.

* பெல்ஜியத்தில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம்.

ஜூலை 2: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக் கான பாகிஸ்தான் அணியி லிருந்து முன்னணி வீரர்கள் முகமது யூசுப், அப்துல் ரசாக் நீக்கம்.

ஜூலை 3: ஸ்காட்லாந்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து.

ஜூலை7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க போவதில்லை என சச்சின், கங்குலி, டிராவிட் அறிவிப்பு.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன்.

ஜூலை8: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனை.

ஜூலை 9: ஸ்பெயினில் நடந்த லியோன்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் “ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்ற ஒரு நாள் தொடர் கோப்பை காணாமல் போனது.

ஜூலை 16: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் நியமனம்.

ஜூலை 17: டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலிலிருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.

ஜூலை 20: இத்தாலி கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ டோட்டி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

ஜூலை 28: இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில் சச்சின் 11,000 ரன்கள் கடந்தார். இச்சாதனை செய்யும் மூன்றாவது வீரராவார்.

ஜூலை 29: இங்கிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய வம்சவாளி வீரர் மான்டி பனேசர் தேர்வு.

ஆகஸ்ட்

ஆக.5: <உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் டோலா பானர்ஜி “ரிகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றார்.

ஆக. 7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

ஆக.11: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் வானை வீழ்த்தி சர்வதேச அரங்கில் 900 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கும்ளே பெற்றார்.

ஆக.13: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

ஆக.16: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் முன்னேற்றம்.

ஆக.20: ஐம்பதாவது ஏ.டி.பி., பட்டம் வென்று பெடரர் அசத்தல்.

ஆக.23: ரயில்வே மைதானங்களை ஐ.சி.எல்., அமைப்பு பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல்.

ஆக.24: ஐ.சி.எல்., அமைப்புக்குசவாலாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), இந்திய கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியது.

ஆக. 26: ஐ.பி.எல்., அமைப்பில் தமிழக வீரர் பதானி இணைந் தார்.

ஆக. 29: அஞ்சும் சோப்ரா(கிரிக்கெட்), சுனிதா குல்லு (ஹாக்கி), கே.எம்.பீனு (தடகளம்), விஜய குமார்(துப்பாக்கி சுடுதல்), சேட்டன் ஆனந்த (பாட்மின்டன்) உள்ளிட்ட 14 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அர்ஜுனா விருது வழங்கினார்.

செப்டம்பர்

செப். 2: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 20 கோல் அடித்து இத்தொடரில் புதிய சாதனை படைத்தது.

* தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 4: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் உபுல் சந்தனா ஓய்வு.

செப். 7: சகவீரர் ஆசிப் தொடையில் தாக்கிய அக்தர் “டுவென்டி20′ உலக கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கம்.

செப். 8: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 34 என பறி கொடுத்தது.

செப். 9: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

செப். 10: யு.எஸ்., ஒபனில் கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 12வது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

செப். 11: முதல் “டுவென்டி20′ உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், “டுவென்டி20’ல் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* ஐ.சி.சி.,யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி தட்டிச் சென்றார்.

செப். 12: நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 13: “டுவென்டி20′ உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோல்விய டைந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலே வெளியேறியது.

செப். 14: கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் திடீர் ராஜினாமா.

செப். 18: ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு.

செப். 26: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு.

* கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு குவிய, ஆசிய கோப்பை ஹாக்கி வென்ற இந்திய வீரர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு.

செப். 27: பி.சி.சி.ஐ.,யின் புதிய சம்பள ஒப்பந்த அறிவிப்பில் ஜாகிர் கான் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம்.

செப். 28 : ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக ரவி சாஸ்திரி நியமனம்.

அக்டோபர்

அக். 1: இந்தியன் கிரிக்கெட் போர்டு நடத்தும் ஐ.பி.எல்., அமைப்பில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா இணைந்தார்.

அக். 3: பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (396)அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

அக். 4: இலங்கை அதிரடி மன்னன் ஜெயசூர்யா 400வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அக். 5: உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு .

அக். 6: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

அக். 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்தவர் என்ற சாதனை படைத்தார்.

அக். 11: சகவீரர் ஆசிப்பை தொடையில் தாக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்தருக்கு 13 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அக். 12: சர்வதேச போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஓய்வு.

அக். 17: இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 42 என வென்றது.

அக். 21: உலக ராணுவ விளையாட்டு போட்டியில் இந்தியா 19வது இடம்பிடித்தது.

அக். 27: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து டிராவிட் நீக்கம்.

நவம்பர்

நவ.1: இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் விலகினார்.

* ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடிக் கவே, சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து சுவிட் சர்லாந்தின் ஹிங்கிஸ் ஓய்வு.

நவ.2: மக்காவ் நகரில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளின் செஸ் பிரிவில் இந்தியாவின் சசிகிரண் தங்கம் வென்றார்.

நவ.3: ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு வார்ன் முரளிதரன் கோப்பை என பெயரிடப் பட்டது.

நவ.5: இந்தியபாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் கவுகாத்தியில் துவங்கியது.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை அர்ஜென்டினாவின் நள்பாந்தியன் கைப்பற்றினார். பைனலில் ஸ்பெயினின் நாடலை வீழ்த்தினார்.

நவ.6: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின் மறுப்பு.

* இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப் பட்டன.

நவ.8: டெஸ்ட் அணிக்கான இந்திய கேப்டனாக கும்ளே நியமிக்கப்பட்டார்.

நவ.12: மாட்ரிட் ஓபன் தொடரில் பெல்ஜியத்தின் ஹெனின் பட்டம் வென்றார்.

* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கே.சி.இப்ராகிம் மரணமடைந்தார்.

நவ.13: தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உலகின் “நம்பர்1′ டென்னிஸ் வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் தேர்வு செய்யப்பட்டார்.

நவ.17: டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார்.

நவ.20: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 20 என கைப்பற்றியது.

நவ.24: பாகிஸ்தான் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நவ.30: இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் பஞ்சகுலாவில் துவங்கின.

டிசம்பர்

டிச. 5: லால் பகதுõர் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

டிச. 6: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் துவங்கின.

* ஐ.சி.சி.,டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சங்ககரா முதலிடம் பிடித்தார்.

டிச. 7: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

டிச. 10: காமன்வெல்த் வலுதுõக்குதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிச. 12: 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது.

அ. சிறப்பு தகவல்கள்

1. உல்மர் மரணம்

முன்னாள் இங்கிலாந்து வீரரும், பாகிஸ் தான் பயிற்சியாளருமான பாப் உல்மர், மார்ச் 18 ம் தேதி கிங்ஸ்டனில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. முடி சூடா மன்னன்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தொடர்ந்து மூன்றாம் முறையாக “நம்பர்1′ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார். இறுதி போட்டியில் சிலியின் பெர்னாண்டோ கோன்சாலசை வீழ்த்தினார். டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார்.

3. கபில் தலைமையில் ஐ.சி.எல்.,

வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, பி.சி.சி.ஐ.,அமைப்புக்கு சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,)என்ற அமைப்பை “ஜீ’ டிவி உருவாக்கியது. இதன் செயற்குழு தலைவராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டார்.

4. கோப்பை உற்சாகம்

உள்ளூரில் சூரப்புலிகள் என்பதை இந்திய அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 31 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வதோதராவில் நடந்த நான்காவது போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோப்பையுடன் டிராவிட்.

5. சைமண்ட்ஸ் சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான வதோதரா போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கறுப்பு இன வீரரான சைமண்ட்சை “குரங்கு’ என ரசிகர்கள் கேலி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடந்த நாக்பூர் போட்டியிலும் ரசிகர்களின் கேலி தொடர, கிரிக்கெட்டில் மீண்டும் இனவெறி சர்ச்சை வெடித்தது.

6. முதன் முறையாக…

அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் அன்னிய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது. கோப்பையுடன் உற்சாக “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

7. உயரிய விருது

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித் சிங் சாந்து 2006ம் ஆண்டு நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். இவரை கவுரவிக்கும் வகையில் 200607ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் மானவ்ஜித்.

8. கும்ளே சதம்

ஓவல் டெஸ்டில் பிரமாதமாக பேட் செய்த கும்ளே முதல் சதம் கடந்து அசத்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேனை போல் விளையாடிய இவர் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் வரிசையில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

9. விடைபெற்றார் ஜோன்ஸ்

ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் அதற்காக அமெரிக்க மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10. தங்க மங்கை

பெண்கள் செஸ் அரங்கில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மக்காவ் நகரில் 22 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது ஆசிய உள்ளரங்கு செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகின் “நம்பர்2′ வீராங்கனையான ஹம்பி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

11. ஹாக்கியில் கலக்கல்

சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொரியாவை 72 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் கோப்பை வென்ற உற்சாகத்தில் “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

12. சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் ஐ.சி.எல்., அமைப்பு நடத்திய “டுவென்டி20′ தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் லயன்சை வீழ்த்தி கோப்பை வென்றது. மகிழ்ச்சியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர்.

Posted in 20, 20-20, 2007, 2020, America, athletics, Aus, Australia, baseball, Century, championships, Chronology, Commonwealth, Cricket, Cup, Dhoni, Disqualify, Dope, Faces, Flashback, Football, Games, Ganguly, Hockey, ICC, ICL, Incidents, Jones, Kapil, Kumble, Lara, Losers, Matches, Mirza, Monkey, Murali, Muralidharan, Muthiah, News, Notable, ODI, people, Players, Race, racism, Racists, Recap, Records, Sachin, Sania, Soccer, Spectator, Sports, steroids, Symonds, T20, Tendulkar, Tennis, Tests, Timeline, TV, US, USA, Warne, Winners, Zee | Leave a Comment »

Tamil Nadu, India & World in 2007 – News, Incidents, Flashback, People: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

வருட மலர்  2007

ஜனவரி

தமிழகம்

ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.

ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.

ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.

*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.

ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு

நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.

ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.

ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.

*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.

ஜன.23: விஜயகாந்த், ஜேப்பியார் வீடுகளில் வருமான வரி ரெய்டு.

* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேயராக இருக்கும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.

ஜன.24: சென்னையில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் 8 பேர் கைது.

ஜன.27: ஸ்ரீவில்லிபுத்துõர் நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் அண்ணாதுரை வெட்டிக் கொலை.

ஜன.29: முன்னாள் எம்.எல்.ஏ., தேனி பன்னீர்செல்வம் அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

இந்தியா

ஜன.2: அமெரிக்கா உடனான அணுசக்தி உடன்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை.

ஜன.4: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.

* காஷ்மீர் பிரேம் நகர் பகுதியில் சென்ற அரசு பஸ் செனாப் நதியில் விழுந்ததில் 9 பேர் பலி.

ஜன.5: பெங்களூரு விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இம்ரான் என்ற பயங்கரவாதி பெங்களூருரில் கைது.

ஜன.6: அசாமில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலி.

* ஐ.நா., பொதுச் செயலர் பான்கீமூனின் ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் நியமனம்.

ஜன.7: மேற்கு வங்கம் நந்திகிராம் கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்த பேரணியில் 6 பேர் பலி.

ஜன.10: பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற 11 எம்.பி.,க்களின் பதவி நீக்கம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

* நொய்டாவைப் போல் பஞ்சாபிலும் கொன்று புதைக் கப்பட்ட 4 குழந்தைகளின் உடல் கண்டெடுக்கப் பட்டது.

ஜன.11: அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க் கப்படும் சட்ட திருத்தங்களும் ஆய்வுக்கு உட்பட்டவை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

ஜன.12: அப்சல் துõக்குத் தண்டனை மீதான தீர்ப்பாய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.

* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் விதிமுறை மீறி வழங்கப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஜன.18: உ.பி.,யில் முலாயம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ்.

ஜன.19: பெங்களூருவில் சதாம் உசேன் துõக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டம் கலவரம்.

ஜன.29: விமானப் படை புதிய தளபதியாக பாலி.எச்.மேஜர் தேர்வு.

ஜன.31: தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு காந்தி அமைதி விருதை ஜனாதிபதி வழங்கினார்.

உலகம்

ஜன.2: இந்தோனோசியாவில் ஜாவாவிலிந்து மனாடோவுக்குச் சென்ற போயிங் ரக விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளானதில் 90 பேர் பலி.

ஜன.11: ஈராக்கிற்குக் கூடுதலாக 20 ஆயிரம் வீரர்களை அனுப்ப புஷ் உத்தரவு.

ஜன.12: கிரீசின் தலைநகர்

ஏதென்சிலுள்ள அமெரிக்க துõதரகத்தில் குண்டு வெடித்தது.

ஜன.13: தெற்காசிய நாடுகளின் ஆசியான் மாநாடு பிலிப்பைன்சில் தொடங்கியது.

ஜன.15: சதாம் சகோதரர் பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவாத் ஹமீது ஆகியோர் துஜெயில் வழக்கில் துõக்கிலிடப்பட்டனர்.

ஜன.17: நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதல்முறையாக பார்லிமென்ட்டில் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றனர்.

ஜன.19: விடுதலைப் புலிகள் வசமிருந்த வாகரைப் பகுதியைக் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவிப்பு.

ஜன.22: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும்வர்த்தகப் பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 78 பேர் பலி

அ. சிறப்பு தகவல்கள்

1. நீதிக்கு பெருமை

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கே.ஜி. பால கிருஷ்ணன் ஜன., 14ம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டார். ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர் ஒருவர் இந்த பொறுப்புக்கு வருவது இது முதல்முறை.

2. தொடரும் சாதனை

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் ஜன. 10ல் நான்கு செயற்கைகோள்களில் ஒன்றாக அனுப்பப்பட்ட “எஸ்.ஆர்.இ.,1′ விண்கலம், திட்டமிட்ட படி விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு, வங்கக்கடலில் பத்திரமாக இறங்கியது. அதனை கடற்படை அதிகாரிகள் மீட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்றனர்.

3. ம.தி.மு.க.,விலிருந்து நீக்கம்

ம.தி.மு.க.,வில் போர்க்கொடி துõக்கிய எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தாங்கள் தான் உண்மையான ம.தி.மு.க., என அறிவித்துக்கொண்டனர். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியை விட்டு ஜன., 10ல் நீக்கப்பட்டனர். இப்போது இவர்கள் போட்டி ம.தி.மு.க., வாக செயல்பட்டு வருகின்றனர்.

4. தணியாத கோபம்

உ.பி., மாநிலம் நிதாரியில் குழந்தைகளை கொன்று குவித்த குற்றவாளிகள் மொனிந்தர் சிங், சுரேந்திர கோலியை ஜன., 25 காஜியாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கூட்டி வந்தனர். தயாராக காத்திருந்த பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்டனர்.

பிப்ரவரி

தமிழகம்

பிப். 1: மதுரையில் இரண்டு கிராம் நகைக்காக, 4 வயது குழந்தையை ராஜா (12), ஜலால் (13) ஆகிய சிறுவர்கள் சேர்ந்து கொன்றனர்.

* விஜயகாந்த் மீது தி.மு.க., அவதுõறு வழக்கு.

பிப். 2: திருவள்ளூரிலுள்ள சாரதா ராமகிருஷ்ணா அனாதை ஆசிரமத்தில் பெண்கள் மர்மமான முறையில் இறப்பதாகப் புகார்.

பிப். 4: நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்வதாக தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சனம்.

பிப். 5: மயிலாடுதுறையிலிருந்து மதுரை சிறைக்கு அழைத்து வந்த போது, தப்ப முயன்ற ரவுடி மணல் மேடு சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.

பிப். 9: அ.தி.மு.க., ஆட்சியில் கல்லுõரி பேராசிரியர்கள் நடத்திய 25 நாள் வேலை நிறுத்த போராட்டத்தைப் பணிக் காலமாக அறிவித்து முதல்வர் உத்தரவு.

பிப். 13: தனுஷ்கோடி கடல் பகுதியில் புலிகளுக்குப் கடத்திச் சென்ற வெடி மருந்துகளைக் போலீசார் பறிமுதல்.

* தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.

* காவிரி, பெரியாறு அணைப் பிரச்னைகளில் கருணாநிதி முரண்பட்டுப் பேசி வருகிறார் என்று பா.ம.க., ராமதாஸ் குற்றச்சாட்டு.

* நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு.

* கலப்புத் திருமணத்துக்கு உதவித் தொகை வழங்க ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது.

பிப். 14: சேலம் அருகே சாலை விபத்தில் மேட்டூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தராம்பாள் பலி.

பிப். 16: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 98 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என மூன்றாவது நீதிபதி பி.கே.மிஸ்ரா தீர்ப்பு.

பிப். 17: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குக் குறைந்த அளவு தண்ணீர் வழங்கியிருப்பதைக் கண்டித்து வைகோ சென்னையில் உண்ணாவிரதம்.

பிப். 18: சென்னை மாநகராட்சியில் 67 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடந்தது.

பிப். 22: நெல்லையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நன்கொடையால் கட்டப்பட்ட ஊடகக் கூடம் திறப்பு.

பிப். 25: திருவொற்றியூர் நகராட்சி கவுன்சிலரின் மகன், தேர்தல் முன்விரோதத்தால் பாண்டியமணி என்பவரை கொலை செய்தார்.

* கொடைக்கானலில் 4 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு துõக்கு தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு.

* இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ., மலைக்கண்ணன் மரணம்.

இந்தியா

பிப். 1: விளையாட்டுப் போட் டிகளை ஒளிபரப்பும் தனியார் “டிவி’க்கள் பிரசார் பாரதியுடன் பகிர்ந்து கொள்ள சட்டம் பார்லியில் நிறைவேறியது.

பிப். 2: மகாராஷ்டிராவில் 10 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.

பிப். 6: போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலியைச் சேர்ந்த குட்ரோச்சி அர்ஜென்டினா இன்டர்போல் போலீசாரால் கைது.

பிப். 7: மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசார் நுழைவதை எதிர்த்து நடந்த வன்முறையில் எஸ்.ஐ., கொல்லப் பட்டார்.

பிப். 14: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாட காவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் அம்பரீஷ் ராஜினாமா.

* முலாயம் அரசுக்கு ஆதரவு அளித்த 13 பகுஜன் எம்.எல்.ஏ.,க்களைத் தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

பிப். 17: உ.பி., அரசை கலைக்க அம்மாநில கவர்னர் மத்திய அரசுக்குப் பரிந்துரை.

* நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி முகமது இக்பால் மேமன் சென்னையில் கைது.

பிப். 21: ஆந்திரா மார்கதரிசி நிதி நிறுவனத்தில் மாநில சி.ஐ.டி., போலீசார் சோதனை.

பிப். 24: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

* உ.பி.,யில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 78 எம்.எல்.ஏ., பேர் ராஜினாமா.

* மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதலில் 15 வீரர்கள் பலி.

பிப். 26: குட்ரோச்சிக்கு அர்ஜென்டினா கோர்ட் ஜாமீன் வழங்கியது.

* உ.பி., சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் முலாயம் சிங்.

* நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசிய கேரள அமைச்சர் பொலாலி முகமது குட்டி கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டார்.

பிப். 27: பஞ்சாப், உத்தரகண்ட்டில் பா.ஜ., கூட்டணியும், மணிப்பூரில் காங்கிரசும் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றன.

உலகம்

பிப்.3 : புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகரைப் பகுதிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே சென்றார்.

பிப். 5: ஈராக்கின் பாக்தாத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலி.

பிப். 9: “பிளேபாய்’ பத்திரிகையின் பிரபல மாடல் அழகி அன்னா நிகாலே ஸ்மித் மரணம்.

பிப். 13: அரசு புலிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என இலங்கை புத்த பிட்சுகள் கோரிக்கை.

பிப். 17: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் கோர்ட்டில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் நீதிபதி உட்பட 15 பேர் பலி.

பிப். 25: பாக்தாத்தில் கல்லுõரி வளாகத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் பலி.

பிப். 27: ஆப்கனில் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியைக் குறி வைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. சாதனை பட்ஜெட்

தொடர்ந்து நான்காவது முறையாக பயணிகள் நலன் காக்கும் பட் ஜெட்டை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்து விமர்சகர் களின் வாயடைக்கச் செய்தார் லாலு. கட்டண உயர்வு இல்லாமல் ரயில் வேயை லாபகரமாக இயக்க முடியும் என்பதை பிப். 26ல் நிரூபித்தார்.

2. நட்புக்கு சோதனை

டில்லி முதல் பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பிப். 19ல் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். பெரும் பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்திய மண்ணில் பாகிஸ்தான் மக்களை பயங்கரவாதம் பலி கொண்ட முதல் சம்பவம் இது.

3. விபரீத முடிவு

அவதுõறு பேச்சு ஒரு குடும்பத்தை அழிவுக்கே கொண்டு சென்றது. சென்னையில் வேலாயுதம் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் பிப். 8ல் தற்கொலை செய்து கொண்டார். விசா ரணையில் மகளை சிலர் அவதுõறாக பேசியதே இந்த சோகமான சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

4. ஹாலிவுட் கொண்டாட்டம்

பரபரப்பான ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப். 25ல் கலிபோர்னியாவில் நடந்தது. இடி அமீனின் வாழ்க்கையை சித்தரிக்கும் “தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து’ எனும் படத்தில் நடித்த பாரஸ்ட் விட்டாக்கர் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

மார்ச்

தமிழகம்

மார்ச் 1: சென்னை மாநகராட்சி மேயராக சுப்பிரமணியன் தேர்வு.

மார்ச் 5: நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்.

மார்ச் 9: நிலநடுக்கம் பெரியாறு அணை எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு பார்லிமென்டில் அறிவிப்பு.

மார்ச் 11: வாய்த்தகராறில் சக போலீஸ் காரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றார் சிக்கிம் போலீஸ்காரர்.

* ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க மத்திய அரசு ஒப்புதல் தர மறுப்பு.

மார்ச் 13: தி.மு.க., கூட்டணி கட்சி களுக்குள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பா.ம.க., ராமதாஸ் கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி.

மார்ச் 16: காங்., கட்சிக்கு ம.தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்.

மார்ச் 25: அறையில் சாமி கும்பிடுபவர் கருணாநிதி என்று விஜயகாந்த் விமர்சனம்.

மார்ச் 29: கணித நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் அபெல் பரிசு தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாச வரதனுக்கு அறிவிப்பு.

மார்ச் 31: இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் 12 மணி நேர “பந்த்’.

இந்தியா

மார்ச் 1: ஏ.எக்ஸ்.என்., சேனல் மீதான தடை நீக்கம்.

* உ.பி., முதல்வர் முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி எட்டு பேர் பலி.

மார்ச் 2: கோர்ட் அவமதிப்புக் குற்றத் திற்காக மேற்கு வங்கத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு கோல்கட்டா ஐகோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.

* பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல், 17 அமைச்சர்களுடன் பதவியேற்பு.

மார்ச் 5: புனேயில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக பி.பி.ஓ., அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 7: அசாம் காங்., எம்.பி., மோனி குமார் சுபா நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தனியார் “டிவி’ சேனல் வெளிப்படுத்தியது.

மார்ச் 8: எய்ம்ஸ் பதிவாளர் பி.சி.குப்தாவைப் பதவி நீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் வேணுகோபால் உத்தரவு.

மார்ச் 13: முலாயம் சிங் அரசால் தன் உயிருக்கு ஆபத்துள்ளது என உ.பி., கோரக்பூர் பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் லோக்சபாவில் கண்ணீர்.

* இன்சாட்4பி தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவின் கொரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

* சென்னையில் கடல்சார் பல்கலை., அமைக்கும் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்த போது, மத்திய அமைச்சர் பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தாக்க முயற்சி.

மார்ச் 15: நந்திகிராம் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க மேற்கு வங்க ஐகோர்ட் உத்தரவு.

மார்ச் 16: முலாயம் மீதான வழக்கை

விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகக் கண்ணீர்.

* மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசாரால் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த்.

மார்ச் 17: நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படாது என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு.

மார்ச் 21: முன்னாள் பா.ஜ., பொதுச்செயலர் பிரமோத் மகாஜன் கொலை வழக்கு மும்பை கோர்ட்டில் துவங்கியது.

மார்ச் 22: பாபர் மசூதி இடிப்பு வழக்கை லக்னோ மற்றும் ரேபரேலி கோர்ட்டில் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி.

* நிதாரி கொலைகள் வழக்கில் மொனிந்தர் சிங் எந்தக் கொலை

யிலும் ஈடுபடவில்லை. சதி வேலையில் தான் ஈடுபட்டார் என சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை.

மார்ச் 25: விண்ணிலிருந்து விண்ணிலுள்ள மற்றொரு இலக்கை தாக்கும் “அஸ்திரா’ ஏவுகணை சோதனை பாலாசோரேயில் வெற்றிகரமாக நடந்தது.

* காஷ்மீர் பிரச்னையில் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தாத இந்தியாவின் நிலைப்பாடு சரிதான் என ஐரோப்பிய எம்.பி.,க்கள் குழு ஆய்வறிக்கை.

மார்ச் 26: இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் மஞ்சுநாத் கொலை வழக்கில் பவன் குமாருக்கு மரண தண்டனை விதித்து உ.பி., கோர்ட் தீர்ப்பு.

மார்ச் 29: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

மார்ச் 30: பேஷன் “டிவி’க்கு மத்திய அரசு தடை விதித்தது.

உலகம்

மார்ச் 6: இந்தோனேசியா சுமத்ராவின் மேற்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் 70 பேர் பலி.

மார்ச் 8: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியாவின் மகன் தாரிக் ரகுமான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 9: இந்திய டாக்டர்களுக்கு எதிரான குடியேற்ற சட்டத்தை வாபஸ் பெற்றது பிரிட்டன்.

பாக்., சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி அதிபர் முஷாரப் நீக்கினார்.

மார்ச் 22: இலங்கையில் பயங்கரவாத பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முனு பரமேஸ்வரி என்ற தமிழ் பத்திரிகையாளர் விடுதலை.

மார்ச் 24: பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக ராணா பகவன்தாஸ் பதவியேற்பு.

மார்ச் 25: ஈரானுக்குப் பிற நாடுகள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது, நிதி ஆதாரங்கள் அளிப்பதற்கு ஐ.நா., தடை விதித்தது.

அ. சிறப்பு தகவல்கள்

1. மீண்டும் முதல்வர்

மணிப்பூர் முதல்வராக காங்கிரசை சேர்ந்த இபோபி சிங் மார்ச் 2ல் பொறுப் பேற்றுக்கொண்டார். பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைந்த போதும் இந்திய கம்யூ., ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக இபோபி சிங் அம்மாநில முதல்வரானார்.

2. நக்சல் தலைவலி

சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதியின் காவல் நிலையத்தின் மீது மார்ச் 15ல் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 55 போலீசார் பலியானார்கள். கோரத்தாக்குதலில் இறங்கிய நக்சல்கள் காவல் நிலையத்தை கொள்ளையடித்து ஆயுதங்களை எடுத்து சென்றனர்.

3. இந்தோனேஷியா சோகம்

மார்ச் 7ல் இந்தோனேஷியாவின் யாக்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க வந்த “கருடா’ பயணிகள் விமானம், திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த நெல் வயலில் பாய்ந்தது. இதில் விமானம் முழுக்க தீப்பிடித்து எரிந்து, பயணிகள் 49 பேரும் பலியானார்கள்.

4. சுற்றுச்சூழல் மாதா

சர்வதேச நேரு நல்லிணக்க விருதை மார்ச் 22ல் கென்யாவை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் வங்காரி மாதா மாதாய்க்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கினார். இவர் ஆப்ரிக்காவிலிருந்து நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்

தமிழகம்

ஏப். 2: கேன்ஸ் பட விழாவில் திரையிட “வெயில்’ படம் தேர்வு.

ஏப். 3: சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு விற்கப்பட்டது.

ஏப். 5: சென்னை வந்த மலேசிய அமைச்சர் டத்தோ சிவலிங்கம் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து மரணம்.

ஏப். 6: முதல்வர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கரூர் சாயப் பட்டறைகள் “ஸ்டிரைக் வாபஸ்’.

ஏப். 7: திண்டிவனம் அருகே சென்டூரில் கார் குண்டு வெடித்து 16 பேர் பலி.

ஏப். 14: அம்பேத்கர் படத்தை யார் திறப்பது என்ற பிரச்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ரகளை.

ஏப். 15: காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

ஏப். 17: தி.மு.க.,வினருக்கு “பார்’ நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் கடிதம் எழுதியது தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குனரிடம் அ.தி.மு.க., புகார்.

ஏப். 23: ஜெயா “டிவி’க்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து மோப்ப நாயுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை.

* முன்னாள் ராணுவ வீரர் நல்லகாமனை தாக்கிய வழக்கில் மதுரை விரைவு கோர்ட் எஸ்.பி., பிரேம்குமாருக்கு “கைது வாரண்ட்’.

ஏப். 25: மதுரையில் முதன்முறையாக விமானப்படையினர் வான் சாகசம்.

* பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு.

ஏப். 27: சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அ.தி.மு.க., உறுப்பினர்கள் மீதான தடை சட்டசபையில் விலக்கப்பட்டது.

* கூடுதலாக 60 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் காவிரி நடுவர் மன்றத்தில்தமிழகம் கோரிக்கை.

ஏப். 28: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல் லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.

* பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு.

ஏப். 29: விருதுநகரில் நடிகர் சரத்குமார் காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தினார். புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு.

* ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஸ்ரீதர் வாண்டையார் கைது.

இந்தியா

ஏப். 2: சட்டசபையில் உள்ள பொருட் களை சேதப்படுத்திய திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அபராதம் விதித்து மேற்கு வங்க சபாநாயகர் அறிவிப்பு.

ஏப். 4: டில்லியில் சார்க் மாநாடு துவங்கியது.

ஏப். 5: உ.பி.,யில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உ.பி., ஐகோர்ட் அறிவிப்பு.

ஏப். 6: அமால்கமேசன் குழுமத்தலைவர் சிவசைலத்துக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கப்பட்டது.

ஏப். 7: டில்லி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.

ஏப். 9: சர்ச்சைக்குரிய “சிடி’ விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான ராஜ்நாத் சிங்கை போலீசார் கைது செய்ய மறுப்பு.

ஏப். 10: டில்லியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டடங்களில் சீலை உடைத்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஹர்சரண் சிங்க்கு சிறை தண்டனை விதித்தது சுப்ரீம் கோர்ட்

ஏப். 12: முழுவதும் இந்திய தொழில் நுட்பத் தால் உருவான அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

ஏப். 18: மனைவி மற்றும் மகனின் பாஸ்போர்ட் மூலம் வேறு நபர்களை வெளிநாடு அழைத்து செல்ல முயன்ற பா.ஜ., எம்.பி. கடாரா கைது.

ஏப். 22: ஒரிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஆய்வு மையத்தில் “பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

ஏப். 23: இத்தாலியின் “ஏஜைல்’ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.,

ஏப். 26: போலி பாஸ்போர்ட் மூலம் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி., கடாரா லோக்சபாவில் கலந்து கொள்ள தடை.

ஏப். 29: மீண்டும் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.

உலகம்

ஏப். 2: தென் பசிபிக் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தில் சலோமன் தீவை சேர்ந்த 50 பேர் பலி.

ஏப். 6: ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலைபடையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி.

ஏப். 11: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு.

ஏப். 14: தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 35க்கும் அதிகமானோர் பலி.

ஏப். 20: அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த ஒருவர் உடன் பணிபுரிந்தவரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை.

ஏப். 23: பாகிஸ்தானில் உள்ள சிறப்பு முகாம்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக சீனா குற்றச்சாட்டு.

ஏப். 24: இலங்கை ராணுவத்தின் மீது விடுதலை புலிகள் விமான தாக்குதல். 6 பேர் பலி.

* அமெரிக்க உளவாளியாக கருதப்பட்டவரை தலிபான் சிறுவன் கழுத்தை அறுக்கும் காட்சி அடங்கிய “சிடி’ வெளியிடப்பட்டதால் பரபரப்பு.

ஏப். 26: புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் கிடைத்ததால் கொழும்பு விமான நிலையம் மூடல்.

ஏப். 28: ஈராக் கர்பாலா நகரில் கார் குண்டு வெடித்ததில் மூன்று இந்தியர்கள் உட்பட 58 பேர் உடல் சிதறி பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. சஸ்பெண்ட்

சட்டசபையில் எம்.ஜி.ஆர்., குறித்து அவதுõறாக பேசியதாக ரகளை செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேற்றப் பட்டனர். கலைராஜன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஆகிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2. பிச்சைக்காரர்கள் வேட்டை

மதுரை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிச்சைக் காரர்கள் தொந்தரவாக இருந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. ஏப்.9ல் களமிறங்கிய போலீசார் நகரில் திரிந்த பிச்சைக்காரர்களை கைது செய்து ஆதரவற்றோர் இல்லம் மனநல காப்பகங்களில் சேர்த்தனர்.

3. லெவல் கிராசிங் பயங்கரம்

ஏப். 16ல் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர்களின் பேரணி சென்னையில் நடக்கவிருந்தது. இதில் கலந்து கொள்ள வேலுõரில் இருந்து வந்த வேன் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் விபத்தில் சிக்கியது. இதில் 11 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.

4. பல்கலைக்கழகத்தில் பரிதாபம்

ஏப். 16ல் அமெரிக்காவின் வெர்ஜினியா டெக் பல்கலை கழகத்தில் நுழைந்த கொரிய மாணவன் வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினான் . இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதன், மும்பை மாணவி மினால் உட்பட 32 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மே

தமிழகம்

மே 3: சட்டசபையில் சபாநாயகருக்கு அருகில் சென்று புத்தகங்களை கிழித்து வீசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம் சஸ்பெண்ட்.

மே 4: பொதுசொத்துகள் சேத வசூல் சட்டம் வாபஸ். சட்டசபையில் அறிவிப்பு.

* நதிநீர் பிரச்னை குறித்து 1961லேயே தினமலர் நாளிதழ் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர் டி.வி.ராமசுப்பையர் என வைகோ பேச்சு.

மே 5: ஒக்கேனக்கல் அருவியின் மேற் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை கர்நாடகா தொடங்கியது.

மே 8: மதுரையில் போலி மருத்துவ இன்ஸ்டிடியூட் நடத்திய போலி பேராசிரியர் உட்பட 2 பேர் கைது.

* பெரியாறு அணையின் “கேலரி’ பகுதிக்கு செல்ல தடை விதித்து தமிழக பொதுப்பணித்துறை உத்தரவு.

மே 12: பொன்விழா நினைவாக புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படும் என கருணாநிதி அறிவிப்பு.

மே 13: மதுரை சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மத்திய அமைச்சர் தயாநிதி ராஜினாமா.

மே 15: அமைச்சர் தா.கிருட்டினன் கொலைவழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.

மே 18: கடத்தப்பட்ட மீனவர்கள் 11 பேரை விடுவித்தனர் விடுதலைப்புலிகள்.

* மத்திய உள்துறை இணையமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ராதிகா செல்வி பொறுப்பேற்பு.

மே 19: ஜெயா “டிவி’யின் பங்குதாரர் வைகுண்டராஜன் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை.

மே 21: முதல்வர் கருணாநிதி மீதான, மேம்பால ஊழல் வழக்கை தொடர முகாந்திரமில்லை என்ற சி.பி.சி.ஐ.டி., யின் அறிக்கையால் வழக்கு ரத்து.

* பரபரப்பு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற எஸ்.பி., பிரேம்குமார் “டிஸ்மிஸ்’.

மே 22: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

மே 23: திருப்பூர் அருகே மதுபான கடையின் “பார்’ இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி.

மே 25: ஊட்டி அருகே முத்தநாடுமந்து வனப்பகுதியில் 1.5 கி.மீ., துõரத்துக்கு பிளவு ஏற்பட்டு புகை வந்ததால் மரங்கள் கருகின.

மே 27: தமிழக “பார்’களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு.

மே 28: தமிழக எல்லையில் இருக்கும் 51 கிராமங்களில் ஆந்திர அரசு மின்சாரத்தை துண்டித்தது.

மே 30: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் கோயில் பிரச்னையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு.

மே 31: கோத்தகிரியில் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டில் போலீசார் சோதனை. உள்ளே அனுமதிக்க மறுத்த தொழிலாளர்கள் கைது.

இந்தியா

மே 3: டெல்லியில் பிரதமர் வீட்டருகே தற்கொலை செய்து கொல்ல முயன்ற நபர் கைது.

மே 4: மருத்துவ உயர் படிப்பு படிக்கும் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் மூன் றாண்டுகள் பணிபுரிவது அவசியம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.

* “டைம்’ பத்திரிகையின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் சோனியா , இந்திரா நுõயி, லட்சுமி மிட்டலுக்கு இடம்.

மே 5: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் குமார் “சஸ்பெண்ட்’.

மே 7 : இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஒவியம் வரைந்த ஒவியர் எம்.எப். உசேனின் சொத்துக் களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு.

மே 8: ஆள் கடத்தல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. முகமது சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

மே 10: இந்தியாவில் இரண்டு கட்சி நடைமுறையை உருவாக்க வேண்டும் என கலாம் யோசனை.

மே 11: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும் பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.

மே 13: 49 அமைச்சர்களுடன் உ.பி., முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார்.

மே 18: ஐதராபாத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு. 12பேர் பலி 20 பேர் படுகாயம்.

மே 21: அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது முலாயம் அரசு: உ.பி., சட்டசபையில் கவர்னர் ராஜேஷ்வர் கோபம்.

* பெங்களூருவில் பா.ஜ., எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா முத்தம் கொடுக்கும் படங்களை வெளியிட்டு நர்ஸ் ஜெயலட்சுமி பரபரப்பு.

* கேரள மார்க்சிஸ்ட் கட்சி கோஷ்டி பூசலால் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், பினராயி விஜயனும் “பொலிட் பீரோ’விலிருந்து நீக்கம்.

மே 28: அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விசா மறுக்கப் பட்டதால், இந்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சீன பயணத்தை ரத்து.

* பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குஜ்ஜார் இன மக்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் வன்முறை. 14 பேர் பலி.

உலகம்

மே 1: இலங்கை வன்னி பகுதியில் நடந்த சண்டையில் 13 புலிகள் சுட்டுக்கொலை.

மே 3: கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் கடத்த முயற்சி செய்த மூவர் பிடிபட்டனர்.

மே 5: கென்ய விமானம் கேமரூனில் விழுந்து விபத்து. 15 இந்தியர்கள் உட்பட 118பேர் பலி.

மே 7 : வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.

மே 12: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரி கராச்சி சென்ற போது கலவரம்: 15 பேர் பலி.

மே 15: பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் பதவி விலகினார்.

மே 16: நிக்கோலஸ் சர்கோசி பிரான்ஸ் அதிபராக பொறுப்பேற்றார்.

மே 17: கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்.

மே 18: சர்ச்சைக்குரிய உலகவங்கித் தலைவர் உல்போவிட்ஸ் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.

மே 23: பாகிஸ்தானில் பெண் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டதை கண்டித்து, லாகூர் கோர்ட் இருவருக்கும் சிறை தண்டனை விதித்தது.

மே 24: விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 35 பேர் பலி.

மே 28: கேன்ஸ் திரைப்பட விழாவில் “நான்கு மாதங்கள், மூன்று வாரங்கள் மற்றும் இரண்டு நாட்கள்’ என்ற திரைப் படம் சிறந்த படமாக தேர்வு.

அ. சிறப்பு தகவல்கள்

1. பிரிந்த சகோதரர்கள்

சட்டீஸ் கரை சேர்ந்த ஒட்டி பிறந்த சகோதரர்கள் ராம், லட்சுமணன். பத்துமாதங்கள் ஆன நிலையில் மே 29ல் ரெய்ப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

2. அரசியல் சோதனை

கோயம்பேட்டில் பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையால் விஜயகாந்தின் திருமண மண்டபம் கையகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் மே.17ல் இடித்து தள்ளினர். இந்த மண்டபத்தில் விஜயகாந்தின் கட்சி அலுவலகமும் இயங்கி வந்தது.

3. கலவர குரு

சீக்கிய மத குரு கோவிந்த் சிங் போல் உடையணிந்து விளம்பரம் கொடுத்த, தேரா சச்சா சவுதாவின் பாபா குர்தீம் சிங் ராம் ரகீமுக்கு எதிராக பஞ்சாப் முழுவதும் கலவரம் வெடித்தது. மே 22ல் குர்தீம் சிங்கின் செய்கையை கண்டித்து பஞ்சாபில் “பந்த்’ நடத்தப்பட்டது.

4. நிறைவேறும் கனவு

சென்னை மக்களின் தாகம் தணிப்பதற்காக தொடங்கப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தின் கால்வாய்கள் சீர்குலைந்த நிலையில் இருந்தன. இந்த திட்டத்துக்கு சாய்பாபா, 200 கோடி ரூபாய் செலவிட்டு கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை சீரமைத்து கொடுத்தார்.

ஜூன்

தமிழகம்

ஜூன் 1: கூட்டுறவு சங்க தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.

ஜூன் 2: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப் பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீஸ்.

ஜூன் 3: அ.தி.மு.க., தலைமைச் செயலகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியதாக தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.

ஜூன் 5: கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி.

ஜூன் 6: கோவையில் இறந்து போன தம்பியின் உடலை ஜெபம் செய்து உயிர்ப்பிக்க முயன்ற சார்லஸ் என்ற மத போதகர் கைது.

ஜூன் 9: தனியார் பள்ளிகள் நடத்தும் பிளஸ் 1 நுழைவுத்தேர்வுக்கு சென்னை ஐகோர்ட் தடை.

ஜூன் 10: 2,500 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக தமிழகத்தில் 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

ஜூன் 12: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்வழி கற்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

ஜூன் 13: நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.

ஜூன் 17: மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் புகார்.

* தமிழக மீனவர் படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை மீனவர்கள் அதிலிருந்த மீனவர்களையும் கடத்திச் சென்றனர்.

ஜூன் 20: மணப்பாறையில் பத்தாம் வகுப்பு மாணவன் சிசேரியன் ஆபரேசன் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜூன் 22: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தாக்கப்பட்டார்.

ஜூன் 24: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக ராதிகா தேர்வு.

ஜூன் 25: மூன்று பேரை கொலை செய்த இலங்கையை சேர்ந்த ராஜனுக்கு துõக்கு தண்டனை விதித்தது திருவண்ணாமலை கோர்ட்.

ஜூன் 26: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.34 சதவீதம் ஓட்டுப்பதிவு.

ஜூன் 29: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் வெற்றி.

இந்தியா

ஜூன் 1: சஞ்சய் தத்துக்கு துப்பாக்கி வாங்கித்தந்த பாலிவுட் தயாரிப்பாளர் சமீர் ஹிங்கோராவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

ஜூன் 2: கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 66 சதவீதம் ஓட்டுப்பதிவு.

ஜூன் 5: டில்லி “பந்த்’க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.

ஜூன் 6: சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட எட்டு மாநில கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்தனர்.

ஜூன் 7: உ.பி., விவசாய நில ஒதுக்கீடு விவகாரத்தில், நடிகர் அமிதாப் போலி முகவரி கொடுத்ததாக அலகாபாத் ஐகோர்ட்டில் தகவல்.

ஜூன் 8: கோவா முதல்வராக திகாம்பர் காமத் பதவியேற்றார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மந்திரிசபை அமைப்பு.

* ஐ.நா.,வில் பணியாற்றிய இந்திய அதிகாரி சஞ்சய் பாலுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறை தண்டனை.

ஜூன் 9: குட்ரோச்சியை நாடு கடத்த கோரும் சி.பி.ஐ., மனுவை அர்ஜென்டினா கோர்ட் நிராகரிப்பு.

ஜூன் 10: ஓடும் ரயிலில் “சினிமா’ சண்டைக் காட்சிகளை படம் பிடிக்க ரயில்வே துறை அனுமதி மறுப்பு.

ஜூன் 11: குட்ரோச் சியின் வழக்கு செலவுகளை சி.பி.ஐ., வழங்க வேண்டும் என அர்ஜென் டினா நீதிமன்றம் உத்தரவு.

ஜூன் 14: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் ராஜஸ்தான் கவர்னர் பிரதிபா பாட்டீல் அறிவிப்பு.

ஜூன் 15: மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவையை பீகார் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் முரட்டுத்தனமாக கீழே தள்ளியதால் சர்ச்சை.

ஜூன் 21: பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

ஜூன் 22: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற மூன்றாவது அணியின் கோரிக்கையை நிராகரித்தார் கலாம்.

ஜூன் 25: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக ஷெகாவத் மனு தாக்கல்.

ஜூன் 28: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை: மகாராஷ்டிரா கோர்ட் தீர்ப்பு.

உலகம்

ஜூன் 6: ஓமனை தாக்கிய “கோனு’ சூறாவளியில் 2 இந்தியர்கள் உட்பட 32க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

ஜூன் 7: கொழும்பில் தங்கியிருந்த நுõற்றுக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றம். வவுனியாவுக்கு மாற்றப்பட்டதாக இலங்கை அரசு தகவல்.

ஜூன் 14: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு.

ஜூன் 16: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு “சர்’ பட்டம்.

ஜூன் 19: சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து சுனிதா வில்லியம்சுடன் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண்கலம்.

ஜூன் 24: சதாம் உசேனின் உறவினர் கெமிக்கல் அலி, முன்னாள் ராணுவ தலைவர் உசேன் ரஷீத் ஆகியோருக்கு துõக்கு தண்டனை விதித்து ஈராக் கோர்ட் தீர்ப்பு.

ஜூன் 27: பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் பதவி விலகல்.

ஜூன் 30: இந்தியாவை சேர்ந்த சுருதி வதேரா, பிரிட்டன் அரசில் சர்வதேச மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக நியமனம்.

* கிளாஸ்கோ விமான நிலையத்தில் குண்டுடன் சென்ற கார் வெடித்தது.

* சர்ச்சைக்குரிய உலகவங்கி தலைவர் பால் உல்போவிச் ராஜினாமா.

அ. சிறப்பு தகவல்கள்

1. சர்ச்சை வழக்கு

வரதட்சணை வழக்கு போட்ட தனது மனைவிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது என அதிர்ச்சி பேட்டியளித்தார் நடிகர் பிரசாந்த். வேணுபிரசாத் ஒத்துக்கொண்ட போதும், பிரசாந்த் மனைவி கிரகலட்சுமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

2. குஜ்ஜார்களின் கோபம்

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் தங்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டில்லியில் “பந்த்’ நடத்தினர். பேச்சு வார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.

3. தமிழகத்தில் நக்சலைட்?

தேனி மாவட்டம் முருகமலையில் பயிற்சிக்கு வந்த 10 தீவிரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நக்சல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் தலைமையில் இதற்காக புதிய போலீஸ் படை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த அச்சம் ஏற்பட்டது.

4. அதிர்ச்சி கொலை

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கார் குண்டு வெடிப்பால் கொல்லப்பட்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க., வில் நிலவிவரும் கோஷ்டி மோதலே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை

தமிழகம்

ஜூலை 1: திருநின்றவூர் பேரூராட்சியின் நான்காவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன் கொலை.

*சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்.

ஜூலை 2: கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

ஜூலை 4: சிசேரியன் சிறுவன் திலீபன் ராஜ் திருச்சி சிறுவர் நீதி குழுமத்தில் சரண். ஜாமீனில் விடுவிப்பு.

* ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை, கடலுõர் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு.

ஜூலை 5: கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுவை ஏற்க மறுத்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பாலபாரதி எம்.எல்.ஏ., கைது.

ஜூலை 7: பரவலான முறைகேடு களுடன் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் தொடங்கின.

ஜூலை 9: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயலலிதா மீது சிதம்பரம், புதுக்கோட்டை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்.

ஜூலை 10: தமிழகத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 நக்சல்கள் கைது.

* ஓமலுõர் கூட்டுறவு தேர்தல் மோதல் தொடர்பாக பா.ம.க., எம்.எல்.ஏ., தமிழரசுவை கைது செய்யும்படி தி.மு.க., ஆர்ப்பாட்டம்.

ஜூலை 11: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு.

ஜூலை 15: இந்து திருமணங்களை பதிவு செய்யாவிட்டால் தண்டனை விதிக்க வகை செய்யும் வரைவு சட்டம் வெளியிடப்பட்டது.

* காமராஜர் பிறந்தநாளையொட்டி சத்துணவுடன் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம் அமல்.

ஜூலை 21: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்க தமிழக அரசு உறுதி.

ஜூலை 22: பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் ரயில்வே கோட்டம் சுப்ரீம் கோர்ட்டில் கேரளா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஜூலை 23: சென்னை அருகே பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு 50 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு முடிவு.

ஜூலை 27: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.

ஜூலை 30: துõத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒப்பந்தம் செய்திருந்த டைட்டானியம் தொழிற்சாலை பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

*சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழாவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

இந்தியா

ஜூலை 9: பி.எஸ்.என்.எல்., டெண்டரில் முறைகேடு நடந்ததாக தகவல். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு.

ஜூலை 14: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க மூன்றாவது அணி முடிவு.

ஜூலை 16: மூன்றாவது அணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., மனு.

ஜூலை 18: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஸ் ஷேக் மற்றும் முஷ்டாக் தரானி ஆகிய மூவருக்கும் துõக்கு.

ஜூலை 19: ஜனாதிபதி தேர்தல் நடந்தது.

* மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அஷ்கர் முகாடம், ஷானவாஸ் குரேஷி, முகமது சோயப் கான்சருக்கு துõக்கு தண்டனை விதித்தது தடா கோர்ட்.

ஜூலை 20: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள முகமது இக்பாலுக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

*ஆந்திர சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாயார் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டதால் அமளி.

ஜூலை 24: ஜனாதிபதி பதவியிலிருந்து அப்துல் கலாம் விடைபெற்றார். 2020க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என உறுதி.

*மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜாகீர் உசேன் ஷாயிக், அப்துல் அக்தர் கான், பெரோஸ் மாலிக் ஆகிய மூவருக்கும் துõக்கு.

ஜூலை 25: போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நடிகை மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை.

ஜூலை 27: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு துõக்கு.

ஜூலை 28: ஆந்திராவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் பலி.

ஜூலை 30: மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், அவரது மனைவி, மகன், பேரன் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு.

ஜூலை 31: சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு.

உலகம்

ஜூலை 6: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்த விமானம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது.

ஜூலை 14: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக ஆஸ்திரேலிய போலீசார் முகமது அனீப் மீது வழக்கு.

ஜூலை 16: ஜப்பான் பூகம்பத்தில் 5 பேர் பலி. 350க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்.

ஜூலை 19: பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலி.

ஜூலை 20: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என பாக்., நீதிபதி கவுன்சில் தீர்ப்பு.

அ. சிறப்பு தகவல்கள்

1. அரசியல் மொழி

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசாபா எம்.பி.,யாக ஜூலை 26ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை கவிஞராகவே அறியப்பட்ட கனிமொழி, இனி பொறுப்புகள் வழங்கப்பட்டால் ஓடி, ஒளியப்போவதில்லை என அறிவித்தார்.

2. ஆபரேஷன் சைலன்ஸ்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீது மேற்கொள்ளப் பட்ட கொலைமுயற்சியால் அதிர்ச்சியடைந்தது அந்நாட்டு ராணுவம். பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த லால் மசூதிக்குள் ஆபரேஷன் சைலன்ஸ் என்ற பெயரில் நுழைந்து தாக்கியது. இதில் நுõற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

3. சஞ்சு பாபாவுக்கு சிறை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார் சஞ்சய்தத். இவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஜூலை 31ல் தீர்ப்பளித்தது மும்பை தடா கோர்ட். இதனால் இவர் நடிப்பில் தயாராகிவந்த படங்கள் முடங்கின.

4. அரசியல் கைது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஆட்சியாளர்களால் ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது.

ஆகஸ்ட்

தமிழகம்

ஆக. 1: ஓசூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி வெள்ளை ரவி போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் சுட்டுக்கொலை.

ஆக. 3: டாடா ஆலை விவகாரத்தின் ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்ட ராஜன் தம்பி ஜெகதீசன் கைது.

ஆக. 6: சீரியல் கில்லர் பில்லுõர் ரமேஷூக்கு இரட்டை துõக்கு தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

ஆக.7: சீரியல் கில்லர் ரமேஷுக்கு மற்றொரு வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

ஆக.9: மேட்டூரிலிருந்து நீர் திறக்கப் பட்டதால் ஈரோடு காவிரி மறுகரையில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

ஆக.12: மானாமதுரைராமேஸ்வரம் புதிய அகல ரயில் பாதை திறப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

ஆக.13: தமிழகத்தில் கேபிள் “டிவி’ சேவையை நடத்த “அரசு கேபிள் “டிவி’ கார்ப்பரேஷன் எனும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆக.14: தென்காசியில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் 6 பேர் வெட்டிக்கொலை.

ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

ஆக.19: ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்டராஜன் மணல் ஆலையில் போலீசார் சோதனை.

ஆக.20: ராஜிவ் பிறந்தநாளை ஒட்டி பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்பட்டது.

ஆக.24: போயஸ் கார்டனில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிர சாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் எழுந்தது.

ஆக.26: சென்னை மாணவன் பாபுராஜ், வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் வாள் பாய்ந்து பலி. மற்றொரு மாணவன் நாகராஜ் கைது.

*பழநி மலையில் ரோப்கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.

ஆக.27: தி.மு.க., அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை கோர்ட்டிலிருந்து ஆந்திர மாநிலம் சித்துõருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஆக.28: இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் தி.மு.க., கூட்டணி வைத்துக்கொள்ளாது என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு.

*அ.தி.மு.க.,வில் பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கம்.

ஆக.29: முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

இந்தியா

ஆக.5: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பு.

ஆக.8: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

ஆக.10: சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

ஆக.11:காஷ்மீரில் காண்ட்ரூ ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்.

ஆக.13: இந்தியஅமெரிக்க அணு <<ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.

ஆக.13: பயிற்சியாளர் தன்னை துன்புறுத்துவதாக மாரத்தான் சிறுவன் புதியா கூறிய குற்றச்சாட்டை அடுத்து பயிற்சியாளர் பிரான்சிஸ் தாஸ் கைது.

ஆக.17: பிரதமர் மீதான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தால் இருசபைகளிளும் அமளி.

ஆக.21: அமெரிக்காவுக்கான இந்திய துõதர் இந்திய எம்.பி.,க்களை “தலையில்லாத கோழி’ என விமர்சித்ததால் பார்லிமென்டில் அமளி.

ஆக.22: கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனை டில்லி ஐகோர்ட் விடுதலை செய்தது.

* இந்திய பார்லிமென்ட் கூட்டுகூட்டத்தில் உரையாற்றினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

ஆக.23: ஜாமீன் பெற்ற நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறையிலிருந்து விடுவிப்பு.

ஆக.24: மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனையை எதிர்த்து, நடிகர் சல் மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஆக.25: ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலி.

* அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சரணடைந்த நடிகர் சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.

ஆக.28: பீகாரில் திருட முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை செய்த காட்சிகள் “டிவி’யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு.

ஆக.29: ஆக்ராவில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

உலகம்

ஆக.3: கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதிய இந்திய வாலிபர் கலீல் அகமது லண்டன் மருத்துவமனையில் மரணம்.

ஆக.4: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பீனிக்ஸ் விண்களத்தை அனுப்பியது நாசா.

ஆக.6: காஷ்மீர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியாவையும் தாக்குவோம் என அல்குவைதா பயங்கரவாதிகள் எச்சரிக்கை.

ஆக.8: தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவன் பாகிஸ் தானிலும் இல்லை என அந்நாடு மறுப்பு.

ஆக.9: அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கென்னடி ஆய்வு மையத்திலிருந்து எண்டவர் விண்களம் விண்ணில் பாய்ந்தது.

ஆக.11: அமெரிக்காவின் லாரெல் ஹாலோ என்ற தீவு கிராமத்தின் மேயராக ஹர்விந்தர் ஆனந்த் என்ற இந்தியர் போட்டியின்றி தேர்வு.

ஆக.15: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி அர்ஜென்டினாவால் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

ஆக.16: பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி.

ஆக.18: துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் செய்த முயற்சி தோல்வி.

ஆக. 21: அனீப் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பு.

* ஜெர்மனியில் 6 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்.

அ. சிறப்பு தகவல்கள்

1. திறமைக்கு கவுரவம்

பிரபல இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு 2005ம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருது ஆக. 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கும் பெனகல் சிறந்த இந்தி திரைப்படத்துக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றவர்.

2. மோசடி மன்னன்

டில்லியை சேர்ந்த கேன்டீன் கான்டிரக்டர் அசோக் மல்கோத்ரா பலகோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் ஆக. 6ல் கைதானார். டில்லி குடிசை மாற்று வாரியத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகளை முறைகேடாக விற்றதன் மூலம் 100 கோடிக்கும் அதிமான அளவில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.

3. தீவுகளான மாவட்டங்கள்

பீகார் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல மாவட்டங்கள் தனித்தீவாகின. பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மக்கள் நிவாரண உதவி தேடி தற்காலிக குடில்களில் தஞ்ச மடைந்தனர்.

4. மதானிக்கு நிம்மதி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆக., 1ல் குற்றவாளிகளை அறிவித்தது தனிகோர்ட். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி.

செப்டம்பர்

தமிழகம்

செப்.1: சென்னை அனந்தராமன் கொலை வழக்கில் மனைவி வித்யாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா விரைவு நீதிமன்றம் உத்தரவு.

செப்.2: 7வது உலக கவிஞர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.

செப்.3: மருத்துவப்படிப்புக்கான கால வரம்பு நீடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லுõரி மாணவர்கள் போராட்டம்.

செப்.4: தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய ஆட்டோ கட்டணத்தை எதிர்த்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மரணம்.

செப்.5: பிரபல தடகள வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி.

செப்.6: 200506ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு.

* நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சரத்குமார்.

செப்.7: நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதலி வந்தனாவை மணந்தார்.

செப்.8: மாமல்லபுரம் அருகே கார் அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டுமே எரிந்து சாம்பலானது. காரில் பயணம் செய்த 6 பேர் பலி.

செப்.9: புட்டபர்த்தியில் சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத் துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

செப்.11: மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை ஒட்டிய 79 கி.மீ., பாலக் காட்டில் சேர்க்கப்பட்டு சேலம் கோட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

செப்.12: ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத் போராட்டம்.

செப்.13: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லா மியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

செப்.14: புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மூன்றாமாண்டு துவக்கவிழா கூட்டம் நடந்தது.

செப்.15: ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் அறிவிப்பு.

செப்.18: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்சுக்கு தீவைக்கப் பட்டதில் இரண்டு பேர் பலி.

செப்.19: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட் டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வைகோ கைது.

செப்.27: தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பா.ஜ., மனு.

* சுப தங்கவேலனிடமிருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப் பட்டு வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

செப்.28: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதற்கட்ட தீர்ப்பில் 41 பேருக்கு சிறை தண்டனை விதித்து தனி கோர்ட் உத்தரவு.

இந்தியா

செப் 2: இன்சாட் ரக செயற்கைகோளை, ஸ்ரீஹரி கோட்டா விலிருந்து இந்திய ராக்கெட்டே முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.

செப்.4: அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்.

செப்.7: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மீது நக்சல்கள் நடத்திய கொலை முயற்சியில் காங்கிரசார் 3 பேர் பலி.

* ராஜஸ்தான் மாநிலம் பாபா ராம்தேவ் கோயிலுக்கு பக்தர் களை ஏற்றி கொண்டு வந்த லாரி கவிழ்ந்ததில் 85 பேர் பலி.

செப்.12: ராமாயண பாத்திரங்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மனு தாக்கல்.

செப்.13: சிதம்பரம், சரத்பவார், மணிசங்கர் ஐயர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சிறந்த பார்லிமென்டேரியன் விருது.

* பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் தெல்புவரா மாவட்டத்தில் திருட வந்தவர்கள் 10 பேரை கிராம மக்களே அடித்து கொன்றனர்.

செப்.16: மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் உதவிகேட்டு நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.

செப்.21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் உள்ள தனது மூதாதயர் கிராமமான ஜூலாசானுக்கு சென்றார்.

செப்.22: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமர் போஸ், கவிதராக் ஸ்ரீராம், பரத் தேசாய், வினோத் கோஸ்லா என நான்கு இந்தியர்கள் இடம்பிடித்தனர்.

செப்.24: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ராகுல் நியமனம்.

செப்.25: பா.ஜ., மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

உலகம்

செப்.7: காங்கோவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.

செப்.11: உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட 6வது நினைவு தினத்தன்று ஒசாமா பின் லேடனின் மற்றொரு வீடியோ வெளியானது.

செப்.12: இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதி அருகே கடுமையான நிலநடுக்கம். 23 பேர் பலி.

செப்.12: தடையை மீறி கராச்சிக்கு வந்த இம்ரான்கான் இஸ்லாமபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

* அணுகுண்டுக்கு இணையான ராட்சத குண்டுவெடித்து ரஷ்யா சோதனை.

செப்.16: தாய்லாந்தில் தரையிறங்க முயற்சி செய்த போது பயணிகள் விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 87 பேர் பலி.

செப்.17: அமெரிக்க கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்சன் கொள்ளை குற்றச்சாட்டில் கைது.

செப்.20: பாலஸ்தீன காசா பகுதியை எதிரிபகுதியாக இஸ்ரேல் அறிவித்தது.

செப்.26: வியட்னாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 60 பேர் பலி.

செப்.29: இலங்கையில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களை கடத்தி வந்த ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.

* முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரம்.

அ. சிறப்பு தகவல்கள்

1. கல்யாண மன்னன் ஜாக்கிரதை

ஐ.ஏ.எஸ்., சப்ட் வேர் இன்ஜினியர் என பலபெயர்களில் வெப்சைட்டில் பதிவு செய்து பெண் களை ஏமாற்றிய லியாகத் அலி செப். 17ம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த மோசடியில் பல கோடி இவன் பல லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. ராமர் சர்ச்சை

ராமர் பால சர்ச்சையில் ராமர் குறித்த கருணா நிதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டில் கல்லெறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். செப்.18ம் தேதி நடந்த இந்த சம்ப வத்தால் இரு மாநில எல்லையில் பரபரப்பு நிலவியது.

3. பதிலுக்கு பதில்

முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிக்க வேண்டுமென கூறிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து செப்.23ம் தேதி பா.ஜ., அலுவலகம் முன்பு திரண்ட தி.மு.க.,வினர், அந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்து சகட்டு மேனிக்கு தாக்கதல் நடத்தினர்.

4. “குளு குளு’ பஸ்

சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் செப்.19 இயக்கப்பட்டன. கேமரா, தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள் என பல்வேறு விதமான வசதிகள் இந்த பஸ்சில் செய்து தரப்பட்டுள்ளன.

அக்டோபர்

தமிழகம்

அக். 4: முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் நேரு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு.

அக். 5: மதுரை மத்திய சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை நபர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொலை.

* தேர்தல் தில்லுமுல்லுவை தடுக்க “ஓட்டுச்சாவடி அதிகாரிகள்’ என்ற புதிய பதவியில் 25 ஆயிரம் பேர் நியமனம்.

அக். 6: முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப் பட்ட வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

அக். 8: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டாவது கட்டமாக 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

அக். 9: கிட்னி மோசடி வழக்கில் சென்னை டாக்டர் ரவிச்சந்திரன் மும்பையில் கைது.

அக். 11: விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய விடுதலை சிறுத்கைகள் பிரமுகர் வன்னியரசு கைது.

அக். 16: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு.

* தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை.

* தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் கமல், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அக். 19: சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.கே. போசிடமிருந்து

தற்காலிகமாக பறிப்பு.

அக். 23: அமைச்சர் சாத்துõர் ராமச்சந்திரனிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் பன்னீர்செல்வத்துக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப் பட்டது.

அக். 25: வத்தலகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதுõறாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது.

* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள்.

அக். 26: மதுரை மத்திய சிறையிலிருக்கும் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.

* கோவை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 3 பேருக்கு ஆயுள். மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அக். 30: நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை.

அக். 31: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தர மறுத்த மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதால்பரபரப்பு.

இந்தியா

அக். 3: கலெக்டர் அடித்துக் கொல்லப் பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், ஆனந்த் மோகன் உட்பட மூன்று பேருக்கு துõக்கு.

* உ.பி.,யில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் உயிரிழந்தனர்.

அக். 6: கர்நாடகாவில் குமாரசாமிஅரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.,

அக். 7: டில்லியில், “புளூலைன்’ பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் எட்டுப்பேர் பலி. பொதுமக்கள் சாலை மறியல்.

அக். 8: காங்கிரஸ், பா.ஜ., ஆதரவளிக்க மறுத்ததை தொடர்ந்து முதல்வர்பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.

அக். 11: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்ததில் இருவர் பலி.

அக். 13: பஞ்சாப்மாநிலம் லுõதியானாவில் தியேட்டரில் குண்டுவெடித்ததில் 6 பேர் பலி. 15 பேர் பலி.

* குஜராத்தில் மகாகாளி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.

அக். 15: இந்திய விஞ்ஞானிகளால் இந்திய பெருங்கடலில் நிறுவப் பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அக். 17: மும்பை பங்குச்சந்தையின் குறியீடு ஆயிரத்து 700 புள்ளிகள் வீழ்ந்தது.

அக். 24: பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் உ.பி., எம்.எல்.ஏ., அமர்மணி திரிபாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் கோர்ட் உத்தரவு.

* டில்லியில் நடந்த என்கவுன்டரில் அப்பாவிகள் இருவரை சுட்டு கொன்ற வழக்கில் துணை கமிஷனர் எஸ்.எஸ். ரதி உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை.

அக். 25: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இணைந்து செயல்பட முடிவு.

* தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதினால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டா மென அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பற்றி டில்லி ஐகோர்ட் கண்டனம்.

அக். 26: கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதவு அளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவிப்பு.

* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 18 பேர் கொலை.

அக். 28: பிரபல அரசியல் கார்டூனிஸ்ட் தாணு மரணம்.

அக். 29: கர்நாடகா கவர்னர் முன்பாக 126 எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்.

அக். 30: கிருஷ்ணசாமி தாக்கப் பட்டதால் முதுகுளத்துõரில் கலவரம்.

உலகம்

அக். 1: பாகிஸ்தானின் பன்னு நகரில் பர்தா அணிந்த மனித வெடிகுண்டு போலீஸ் வேன் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட 15 பேர் பலி.

அக். 2: மகாத்மா காந்தி பிறந்த தினம் முதல்முறையாக சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.

அக். 6: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி.

அக். 8: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலி.

அக். 12: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோருக்கும், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அறிவிப்பு.

அக். 20: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் பலி.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பரவிய காட்டுத்தீயில் ஆயிரத்து 500 வீடுகள் சேதம்.

அக். 22: விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் பலி.

அக். 24: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்களில் புலிகள் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.

அக். 25: இந்தோனேஷியாவில் நிலநடுக்கும். ரிக்டர் ஸ்கேலில் 7.1ஆக பதிவு.

அ. சிறப்பு தகவல்கள்

1. புதிய முகம்

உலகிலேயே இரண்டாவது பெரிய தரைப்படைராணு வத்தின் புதிய தளபதியாக ஜெனரல் தீபக் கபூர் அக். 1ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தரைப்படை ராணுவத்தின் 23வது தளபதியான இவர் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடரும் என உறுதியளித்தார்.

2. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

எம்.பி.,க்களை “தலையில்லாத கோழிகள்’ என அமெரிக்காவுக்கான இந்திய துõதர் ரோனன் சென் விமர்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்.30ம் தேதி லோக்சபா உரிமைக்குழு முன் ஆஜரானர். அப்போது தனது விமர்சனத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

3. “பந்த்’ குழப்பம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழகத்தில் அக்.1ம் தேதி தி.மு.க., கூட்டணி “பந்த்’ அறிவித்தது. இது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. எனினும் அன்றைய தினம் அறிவிக்கப்படாத “பந்த்’ நடந்ததால் தமிழகம் முடங்கியது.

4. வன்முறை மர்மம்

அக்.29ல் முதுகுளத்துõரில் ஒரு விழாவில் காங்., தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வேல்கம்பால் குத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்த மர்மம் நீடிக்கிறது.

நவம்பர்

தமிழகம்

நவ. 1: இன்ஜினியரிங் படிக்கும் பெண்கள், ஏழை மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு.

நவ. 5: தமிழகத்தில் புதிய தொழில்கொள்கை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. 2011க்குள் 20 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க திட்டம்.

* திருக்கோவிலுõரை அடுத்த கொல்லுõர் கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டு கட்டி விடப்பட்டதால் பரபரப்பு.

நவ. 6: போலீஸ் தடையை மீறி ராமநாதபுரம் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது.

நவ. 11: சென்னை சத்தியமூர்த்திபவனில் ரவுடிகள் நுழைந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலரை கத்தியால் வெட்டினர்.

நவ. 12: போலீஸ் தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க பேரணி நடத்திய வைகோ கைது.

நவ. 13: கும்மிடிபூண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயகுமார் வீட்டில் கொள்ளை.

நவ. 15: சென்னையில் திடீர் கடல் சீற்றத்தால் 12 வீடுகள் கடலுக்குள் மூழ்கின.

நவ. 17: திருப்பூர், ஈரோடு நகராட்சி களுக்கு மாநகராட்சி அந்தஸ்து அளித்து தமிழக அரசு அவசரச்சட்டம்.

*திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைச்செல்வன் பட்டப்பகலில் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.

* செங்கல்பட்டு அ.தி.மு.க., நகராட்சி துணைத்தலைவர் குமார் உட்பட இருவர் வெட்டிக்கொலை.

நவ. 20: வாள் சண்டை மையம் அமைக்க விரும்பும் பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் காவல்துறை முன்அனுமதி பெற தமிழக அரசு உத்தரவு.

* கிராமப்புற மருத்துவசேவையை கட்டாயமாக்குவதை எதிர்த்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

நவ. 23: உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அரியலுõர் மாவட்டத்தை துவக்கிவைத்தார்.

நவ. 25: மரக்காணத்தில் பணத்துக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மணிகண்டன், கழுத்தை நெறித்து கொலை.

நவ. 28: இந்து தெய்வங்களை அவ மதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு.

இந்தியா

நவ. 6: பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்த விவகாரத்தில் சிக்கிய உ.பி., அமைச்சர் ஆனந்த் சென் யாதவ் ராஜினாமா.

நவ. 7: நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்த பீகாரை சேர்ந்த சிறுமி லட்சுமிக்கு பெங்களூருவில் ஆபரேஷன்.

நவ. 10: நந்திகிராமில் மீண்டும் நடந்த வன்முறையில் ஒருவர் பலி. நந்திகிராம் வன்முறைகளை கண்டித்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மம்தா.

நவ. 15: இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரித்த “கிரயோஜெனிக்’ இன்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது.

* நந்திகிராம் வன் முறையை கண்டித்து மேற்கு வங்கத்தில் 24 மணிநேர பந்த்.

நவ. 16: காங்., பொதுச்செயலர் ராகுலை கடத்த சதி செய்த மூன்று பயங்கரவாதிகள் உ.பி.,யில் கைது.

நவ. 20: கவர்னரின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டார் பிரதிபா பாட்டீல்.

* டில்லி தியேட்டரில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் அதன் உரிமையாளர்கள் 2 பேர் குற்றவாளிகள் என டில்லி கோர்ட் தீர்ப்பு.

நவ. 23: உ.பி., யிலுள்ள லக்னோ, வாரணாசி, பைசாபாத் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் வக்கீல்கள் உட்பட 14 பேர் பலி.

* கோல்கட்டாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமா நஸ்ரீன், அங்கும் எதிர்ப்பு எழுந்ததால் டில்லியில் தஞ்சம்.

நவ. 25: அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் உள்ளூர்வாசிகளால் ஆதிவாசி பெண் நிர்வாணப்படுத்தப் பட்டதால் பரபரப்பு.

நவ.27: பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அசாமில் “பந்த்’. மூன்று பேர் பலி.

நவ. 28: சுப்ரீம் கோர்ட்டின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு.

உலகம்

நவ. 2: விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக லண்டனில் கைது.

நவ. 7: பின்லாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவன் கைத்துப்பாக்கியால் எட்டுப்பேரை சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை.

நவ. 8: துபாயில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்ததில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் பலி.

நவ. 9: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிலமணி நேரத்தில் விடுதலை.

நவ. 11: பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கண்டுபிடிப்பு.

நவ. 13: பாகிஸ்தான் அதிபர் பெனசிர் புட்டோவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்.

நவ. 14: பாகிஸ்தானில் இம்ரான்கான் கைது.

நவ. 23: பாகிஸ்தானின் எமர்ஜென் சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காமன்வெல்த்திலிருந்து பாகிஸ்தான் நீக்கம்.

நவ. 25: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவுதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பினார்.

* மலேசியாவில் உரிமை கேட்டு பேரணி செல்ல முயன்ற இந்துக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தண்ணீரை பீச்சி அடித்தனர்.

நவ. 27: கிளிநொச்சியில் விடுதலை புலிகள் ரேடியோ நிலையம் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தகர்ப்பு.

நவ. 30: பயணிகள் விமானம்துருக்கியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 56 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. “புலி’ பலி

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் அந்நாட்டு விமானப்படை நவ. 2ல் தாக்குதல் நடத்தியது. இதில் விடுதலைபுலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறுபேர் பலியானார்கள். இவரின் திடீர் மறைவு புலிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.

2. பற்றி எரியும் மாநிலம்

நந்திகிராம் பிரச்னையை கண்டித்தும், வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை வெளியேற்ற கோரியும் கோல்கட்டாவில் சிறுபான்மை அமைப்பினர் நவ. 21ல் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக முடிந்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கோல்கட்டாவிலிருந்து தஸ்லிமா வெளியேறினார்.

3. சிதார் துயரம்

வங்கதேசத்தை செப். 16ல் சிதார் புயல் தாக்கியது. சுமார் 240 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் சந்தித்த மிக மோசமான புயலாக இது கருதப்படுகிறது.

4. பதவி படுத்தும் பாடு

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பல்வேறு நிபந்தனைகளிடையே நவ. 12ம் தேதி முதல்வர் பதவியேற்றார் எடியூரப்பா. இருப்பினும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து ஓட்டளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவெடுத்ததை அடுத்து நவ.19ல் பதவியை ராஜினாமா செய்தார்.

டிசம்பர்

தமிழகம்

டிச. 3: விவசாயத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரி விவசாய கல்லுõரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்.

டிச. 4: சென்னையில் சி.பி.சி.எல்., தொழிற்சாலையில் இருந்து மர்மவாயு கசிந்ததால் பொதுமக்கள் பீதி.

டிச. 6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் துõக்குதண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்.

டிச. 7: தமிழகத்தில் வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட தடை.

டிச. 8: சென்னையில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழாவில் வன்முறை. தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.

டிச. 9: இலங்கைக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற இருவர் சென்னையில் கைது.

டிச. 12: நெல்லை கல்லுõரிகளின் அதிபர் எஸ்.ஏ. ராஜா மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்.

டிச. 16: சென்னை மெரீனாவில் இந்திய கடற்படையினர் சாகச நிகழ்ச்சி.

டிச. 17: சென்னை அருகே கெரும்பாக்கத்தில் ஒரே வீட்டில் 80 லட்ச ரூபாய் பணமும், 250 சவரன் நகையும் கொள்ளை.

* மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட தொடங்கியது.

டிச. 19: வருஷநாடு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். 2 பேர் சரண்.

டிச. 20: விவசாய கல்லுõரி மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை ஜன. 10ல் துõக்கிலிடும்படி சேலம் கோர்ட் உத்தரவு.

* தமிழகத்தில் பெய்த தொடர் மழையில் 37 பேர் பலி.

டிச. 23: இளம்பெண்ணை மயக்கிய சென்னையை சேர்ந்த போலிச்சாமியார் பழனிச்சாமி கைது.

டிச. 24: ராமநாதபுரம் உச்சிபுளி அருகே புதைத்து வைக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

* மதுரையில் எம்.ஜி.ஆர்., சிலையில் கொடி கட்டும் பிரச்னையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.

டிச. 26: அதிக கட்டணம் வசூல் செய்ததாக தமிழகத்தில் உள்ள 33 இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு நோட்டீஸ்.

இந்தியா

டிச. 3: டாக்டரை தாக்கிய எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்யக் கோரி ஆந்திராவில் டாக்டர்கள் <<உதவி டாக்டர்கள் போராட்டம்.

டிச. 6: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் சொராபுதீன் கொல்லப் பட்டதை மோடி நியாயப்படுத்தி பேசியதால் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

டிச. 9: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை “சாவு வியாபாரி’ என விமர்சித் ததற்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சோனியாவுக்கு நோட்டீஸ்.

டிச. 10: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என கட்சியின் உயர்மட்ட குழு அறிவிப்பு.

* “நீதித்துறை வரம்பு மீறி செயல்படக்கூடாது’ என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு.

டிச. 11: குர்கானில் உள்ள யூரோ பள்ளியில் மாணவன் அபிஷேக் தியாகியை சக மாணவன் ஆகாஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

* குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. முன்னாள் முதல்வர் கேசுபாய் ஓட்டுப்போடாமல் புறக்கணித்தார்.

டிச. 12: ஒரு கொலைவழக்கில் பீகார் முன்னாள் அமைச்சர் ஆதித்யா சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நவடா விரைவு கோர்ட் தீர்ப்பு.

* சொராபுதீன் என்கவுன்டரை ஆதரித்தற்காக மோடிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.

டிச. 13: அசாம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் குண்டுவெடித்ததில் ஐந்து பேர் பலி.

டிச. 14: பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி மனு தாக்கல்.

* பழங்குடி இனத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து ஜாதி சான்றிதழை ஒப்படைக்கும் படி அஜீத் ஜோகிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* பஞ்சாபில் ரயில்வே லெவல் கிராசிங்கில் நுழைந்து செல்ல முயன்ற மினிபஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 18 பேர் பலி.

டிச. 16: சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 110 நக்சலைட் உட்பட 299 பேர் தப்பி ஓட்டம்.

டிச. 18: பிரமோத் மகாஜன் சுடப்பட்ட வழக்கில், அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு.

* டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஜகதீஷ் டைட்லரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு.

டிச. 21: பெங்களூரு டாக்டர் முகமது அனீப்பின் விசாவை புதுப்பிக்க ஆஸ்திரேலிய கோர்ட் அனுமதி.

டிச. 23: குஜராத் தேர்தலில் பா.ஜ., 117 சீட்களை கைப்பற்றி மீண்டும் வெற்றி.

டிச. 25: குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.

* கிரன் பேடியின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை அரசு ஏற்றது.

டிச. 26: நந்திகிராம் சென்ற மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

உலகம்

டிச. 3: பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட நவாஸ்ஷெரீப் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி.

* ரஷ்ய தேர்தலில் புடினின் “யுனைட்டெட் ரஷ்யா’ கட்சி வெற்றி.

டிச. 9: மலேசியாவில் நடந்த மனித உரிமை பேரணி தடை செய்யப்பட்டது. நான்கு பேர் கைது.

டிச. 13: அல்ஜீரியாவின் அல்ஜயர்ஸ் நகரில் அகதிகளுக்கான ஐ.நா., அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்ததில் 52 பேர் பலி.

டிச. 13: மலேசியாவில் ஆள்துõக்கி சட்டம் அமல்.

டிச. 14: அமெரிக்காவில் லுõசியானா பல்கலைகழகத்தில் படித்த இரண்டு இந்திய மாணவர்கள் சுட்டுக்கொலை.

டிச. 15: பாகிஸ்தானில் எமர்ஜென்சி வாபஸ்.

டிச. 19: பாகிஸ்தானில் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து. 54 பேர் பலி.

டிச. 21: பாகிஸ்தானின் சார்சத்தா பகுதியில் மசூதி வளாகத்தில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 54 பேர் பலி.

டிச. 25: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திலிருந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

டிச. 26: மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 61 பேர் பலி.

அ. சிறப்பு தகவல்கள்

1. உரிமை போர்

மலேசியாவில் சமஉரிமை கேட்டு போராடி வரும் தலைவர்களை ஒடுக்க ஆள்துõக்கி சட்டத்தை அமல்செய்தது அந்நாட்டு அரசு. இதன் மூலம் இந்த்ராப் தலைவர் உதயகுமார் உட்பட ஐந்து பேர் டிச. 15ல் கைது செய்யப்பட்டனர்.

2. பிரமாண்ட மாநாடு

தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் டிச. 15, 16 தேதிகளில் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இளைஞர்களின் பார்வையை தி.மு.க., பக்கமாக திருப்ப இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது. கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க கோரி தீர்மானம்

3. போராடிய டாக்டர்கள்

டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி ஐதராபாத்தில் டிச.3ல் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் உயிரிழந்த எட்டுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

4. கடற்படை வாண வேடிக்கை

கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கடற்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 16ல் நடந்த இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கனோர் கடற்கரையில் குவிந்தனர்.

Posted in 2007, Chronology, Dinamalar, DMK, Flashback, Incidents, India, Media, News, people, Refer, Reference, Tamil Nadu, TamilNadu, Timeline, Updates, World, zeitgeist | Leave a Comment »

Tamil Cinema 2007 – Incidents, Gossips, Kisu Kisu, People, Movies, Flashback, Stars: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

2007ம் ஆண்டில் தமிழ் சினிமா உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சாதனைகளின் தொகுப்பு வருமாறு :

ஜனவரி

112007 : தமிழக தியேட்டர்களில் அரசின் டிக்கெட் கட்டணம் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

312007 : நடிகர் பிரசாந்திடம் மாதம் ரூ.1 லட்சம் ஜீவானாம்சம் கேட்டு அவருடை<ய மனைவி கிரகலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

812007 : கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்தது.

* நடிகர் பிரசாந்த் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரசாந்த்தும், கிரகலட்சுமியும் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை.

912007 : பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை குஷ்பு முன் ஜாமீன் வழங்க சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாம். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

1012007 : நடிகர் பிரசாந்தின் மனைவி கிரஹலட்சுமி தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

* கோ<யம்பேட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்காக எங்கள் திருமண மண்டபத்தை இடிக்கக்கூடாது என்று தே.மு.தி.க தலைவர் விஜ<யகாந்த் மனைவி பிரேமலதா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

* ரூ.1 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பாண்டி<யன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2012007 : கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் கதை தொடர்பான வழக்கில் அப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. (தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் உரிமை கொண்டாடினார்).

2412007 : நடிகர் விஜயகாந்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.

* கிராபிக்ஸ் மூலம் எனது முகத்துடன் வேறு பெண்ணின் உடலை இணைத்து புளூ பிலிம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸ் கமிஷனரிடம் கவர்ச்சி நடிகை பாபிலோனா புகார் கொடுத்தார்.

2612007 : சென்னைக்கு வந்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தோடு நேரில் சென்று ஆசி பெற்றார்.

* கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று மத்தி<ய அரசு அறிவித்துள்ளது.

* சூப்பர் ஸ்டார் ரஜினியில் சிவாஜி பட சூட்டிங் திருநள்ளாறில் நடந்தது. நடிகை ஸ்ரேயா எண்ணெய் தேய்த்து நளதீர்த்த குளத்தில் குளித்தார். சூட்டிங்கிற்கு ரஜினி வந்திருப்பதாக தகவல் பரவியதால் ரசிகர்கள் திரண்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பிப்ரவரி

122007 : தனது வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்த காரணம் முதல்வர் கருணாநிதிதான் என்று பேட்டியளித்த விஜயகாந்த் மீது தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

222007 : பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி, அந்த விருதுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

322007 : தமிழ் திரைப்பட விருது தேர்வுக்குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது.

522007 : கிரீடம் பட சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது. சண்டைக்காட்சியில் நடித்த நடிகர் அஜித்தின் முதுகில் பலமான அடிபட்டது. இதை<யடுத்து அவர் படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது

* காரில் சென்றபோது நடிகை கிரண் விபத்தில் சிக்கினார். அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. 20 தை<யல்கள் போடப்பட்டன.

1522007 : ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அமெரிக்காவில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி சென்னை திரும்பினார்.

2122007 : டைரக்டர் அமீர் இ<யக்கி<ய பருத்திவீரன் படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார். அவர் புதுமுக நடிகர் கார்த்தியை பாராட்டினார்.

2222007 : மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார்காந்தி எழுதி<ய லெட்ஸ் கில் காந்தி என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

மார்ச்

0232007 : பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை தேவிபிரியா மற்றும் அவரது காதலன் ஐசக்குடன் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

0732007 : முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.

1632007 : கணவர் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்த நடிகை சரிதா குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.

2532006 : தசாவதாரம் படப்பிடிப்பில் ரஜினிகமல் இருவரும் சந்தித்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

2632007 : சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் முகேஷ்சரிதா இருவரும் ஆஜரானார்கள். ஏப்ரல் 23ந் தேதி அவர்கள் இருவரும் மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

2832007 : ஒன்றரை மாதங்களாக காணாமல் போயிருந்த நடிகை ப்ரீத்திவர்மா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதால் வீட்டை விட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

* தசாவதாரம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் பதில் மனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல்

01042007 : இயக்குனர் சங்கர் தயாரித்த வெயில் திரைப்படம் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது.

09042007 : :நடிகை மும்தாஜ் நடித்த மோனிஷா என் மோனலிசா படத்துக்காக வழங்கப்பட்ட உத்தரவாதப்படி ரூ.31 லட்சத்தை தர தயாரிப்பாளர் விஜய ராஜேந்தருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

10042007 : :நடிகர் கமலஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

19042007 : டப்பிங் பேச நடிகர் தனுஷ் மறுத்ததால் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

2042007 : முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் மும்பையில் திருமணம் நடந்தது.

* பரட்டை என்கிற அழகுசுந்தரம் பட நிறுவனம் தரவேண்டிய சம்பள பாக்கித் தொகையை கேட்டு சென்னை சிவில் கோர்ட்டில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.

21042007 : சம்பள பாக்கித் தொகை கேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நடிகர் தனுஷ் வாபஸ் பெற்றார்.

2442007 : நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

27042007 : அருணாசலம் படத்துக்கு பிறகு ரசிகர்களை நேரில் சந்திக்காமல் இருந்த ரஜினி, திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்தார். ரஜினியுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மே

02122007 : பொது மேடையில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கியர் முத்தமிட்டு சர்ச்சை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

0652007 : தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கவிஞர் பா.விஜய் எழுதி<ய பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.

09052007 : விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் பிரசாந்த், கிரகலட்சுமி இருவரும் வரும் 30ம் தேதி ஆஜராக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.

10052007 : நடிகர்கள் சிம்பு, ஜெயம் ரவி, நடிகைகள் த்ரிஷா, நவ்யா நாயர், கவிஞர் பா.விஜய் உட்பட 60 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.

14052007 : முத்தம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

17052007 : போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை மோனிகா பேடிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

18052007 : வீட்டின் முன் சிலர் டீக்கடை நடத்தி இடையூறு செய்வதாக நடிகை ஷோபனா சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார்.

21052007 : சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் கவர்ச்சி நடன காட்சியையும் விவேக்கின் இரட்டை அர்த்த வசன காட்சியையும் சென்சார் போர்டு அதிகாரிகள் கட் செய்தனர்.

22052007 : நடிகை ராதிகா தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது தந்தை எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்போது முதல்வருக்கு ராதிகா அழைப்பு விடுத்தார்.

28052007 : ரஜினி நடித்த சிவாஜி படத்தின் டி.வி. உரிமை மூன்று வருடங்களுக்கு பிறகு ஒளிபரப்ப வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கலைஞர் டிவி’க்கு விற்கப்பட்டிருப்பதாக ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார்.

ஜுன்

0562007 : வருமான வரித்துறை சார்பில் நடிகை வெண்ணிறாடை நிர்மலா மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்<யப்பட்டார். ஆனால் அவருக்கு அபராதமாக 4 லட்சத்து 65 ஆயிரம் விதிக்கப்பட்டது.

* சிவாஜி படத்துக்கு முழு வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

10062007 : நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி பட டிக்கெட் முன்பதிவு துவங்கியது. முதல் நாளிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாயின.

* தமிழக முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தினருடன் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்தார். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள திரை<யரங்கத்தில் இந்த படம் திரையிடப்பட்டது.

13062007 : அழகிய தமிழ் மகன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

14062007 : ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் ரஜினி விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது சொன்னா அதிருதுல்ல என்று சிவாஜி பட வசனத்தை பேசி காட்டி அசத்தினார்.

15062007 : இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் உலகம் முழுவதும் ரீலிஸ் ஆனது. படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரஜினி கட்அவுட்டுக்கு பீர், பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். ஆந்திராவில் 350 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. மதுரையில் மட்டும் தியேட்டர் பிரச்னையால் சிவாஜியை திரையிட கோர்ட் தடை விதித்தது.

* நானும் வந்தனாவும் பதிவு திருமணம் செய்து கொண்டாலும், கணவன்மனைவியாக வாழ்ந்தது கிடையாது. இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன் என நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

* எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர், என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்தார்,

19062007 : :மதுரையில் சிவாஜி சினிமாவை கூடுதல் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது எனக் கோரி முதன்மை சப் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

* செக்ஸ் விழிப்புணர்வு குறித்து அரசின் கருத்துகளையே நான் தெரிவித்தேன். அரசியல் கட்சிகள் மூலம் எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகை குஷ்பூ பேசினார்.

* நீதித் துறையை விமர்சித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நடிகை குஷ்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2062007 : நடிகர் ஸ்ரீகாந்த்வந்தனா திருமண பிரச்சனையில் ஸ்ரீகாந்த், வந்தனா ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஸ்ரீகாந்த்தின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

23062007 : திருமணம் செய்ய நினைப்பவர்கள் முன்கூட்டியே நன்றாக விசாரித்து அதன்பிறகு திருமணம் செய்யுங்கள். இல்லாவிடில் எனக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று சென்னையில் நடந்த நிழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த் அறிவுரை கூறினார்.

24062007 : தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

25062007 : சந்திரமுகி திரைப்படத்தின் 804வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினி மிகப்பெரிய வெற்றி பெற்று, புகழுடன் விளங்குவதற்கு காரணம் அவருடைய அடக்கம்தான் என்று பாராட்டினார்.

* வாழ்க்கையில் சில நேரங்களில் செவிடர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் வாழ்க்கை வீணாகி விடும், என்று சந்திரமுகி விழாவில் நடிகர் ரஜினி பேசினார்.

ஜீலை

13072007 : பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு கலை மற்றும் கலாச்சார விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது அளிக்கப்பட்டது.

26072007 : சினிமாதுறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலி<யல் கொடுமைகளை தடுக்க பாதுகாப்பு குழு அமைக்க இருப்பதாக அனைத்திந்தி<ய ஜனநா<யக மாதர் சங்கம் அறிவித்தது.

30072007 : டில்லியில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது பருத்திவீரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கும் கிடைத்தது.

ஆகஸ்ட்

02082007 : ஆந்திர தொழிலதிபரை மயக்கி வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய நடிகை பத்மா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

03122007 : கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக நடிகர் கமலும், தயாரிப்பாளரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

08082007 : பெரியார் திரைப்பட 100வது நாள் விழா கலைவானர் அரங்கில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைப்பெற்றது.

* நடிகர் ரஜினி நடித்து வெளியாகிய சிவாஜி படத்தை டப்பிங் செய்யவும், பிற மொழிகளில் எடுக்கவும் தடை விதிக்கக் கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

10082007 : நடிகை ஜோதிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

13082007 : நடிகர் ஸ்ரீகாந்த்  வந்தனா இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்தனர்.

18082007 : செங்கல்பட்டு அருகேயுள்ள பாலூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியை நடிகர் சூர்யா தத்தெடுத்தார்.

22082007 : தமிழில் பெ<யர் கொண்ட கோரிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது. தமிழ்திரைப்பட பெ<யர்களை ஆரா<ய தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது.

* நடிகர் சரத்குமார் அகில இந்தி<ய சமத்துவ மக்கள் கட்சியை துவங்கினார்.

24082007 : தேசிய கீதத்தை அவமதித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

* சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை மனோரமா, கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் உட்பட 9 பேருக்கு ராஜிவ்காந்தி, மூப்பனார் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.

28082007 : பைனான்சியர் மாதேஷ் வழக்கு தொடர்ந்ததையடுத்து டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா நடிக்கும் பீமா படத்தை திரையிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

செப்டம்பர்

04092007 : நடிகை லட்சுமியின் தாயார் நடிகை ருக்மணி தனது 84வது வயதில் காலமானார்.

06092007 : சொந்த கட்சி துவங்கி<யதைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியை சரத்குமார் ராஜினாமா செய்தார்.

07092007 : பருத்திவீரன் பட வழக்கிலிருந்து நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

* நடிகர் ஸ்ரீகாந்த்  வந்தனா திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.

10092007 : சிவாஜி திரைப்பட வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

15092007 : தமிழக முதல்வர் கருணாநிதியின் கலைஞர் டிவி ஒளிபரப்பை துவங்கி<யது.

17092007 : மோசர் ப<யர் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2000 கோடி செலவில் டிவிடி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவிருப்பதாக அறிவித்தது.

21092007 : தமிழ் எம்.ஏ திரைப்பட பாடல் உரிமையை எடுத்த நிறுவனம் வணிகப் படுத்தாததை கண்டித்து சென்னையில் போராட்டம் நடந்தது.

அக்டோபர்

02102007 : பெரியார் திரைப்படத்தை தொடர்ந்து திருப்பூர் குமரன் திரைப்படத்திற்கும் அரசு சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

06102007 : :நடிகர் ஆர்யா நடித்த, ஓரம்போ படத்தை வெளியிட சென்னை சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

16102007 : தமிழக அரசின் திரைப்பட விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது.

17102007 : கதாநாயகி பத்மப்பிரியாவின் கன்னத்தில் டைரக்டர் சாமி அறைந்தால் நிறுத்தப்பட்ட மிருகம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.

21102007 : நடிகை பூமிகா தன் காதலன் யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்தார்.

* கலைஞர் வெள்ளித்திரை நிறுவனம் தயாரிக்கும் தாய்காவி<யம் திரைப்பட விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். திரைப்பட பாடலாசிரி<யர் பா.விஜய் இத்திரைப்படத்தில் கதாநா<யகனாக நடிக்கிறார்.

23102007 : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் தன் எதிர்வீட்டில் நாயை சுட்டுக்கொன்றதாக சென்னை மதுரவாயல் காவல் நிலை<யத்தில் புகார் செய்<யப்பட்டது.

27102007 : எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு தடையை நீக்கி சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் படம் ரிலீஸானது.

நவம்பர்

01112007 : தனியார் பல்கலைக்கழகங்கள் நடிகர் , நடிகைகளுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பல்கலைக்கழக கல்வியின் கவுரவத்தை குறைத்துவிட்டார் என தமிழக உ<யர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

* நடிகை ஐஸ்வர்யாராய் தன் பிறந்த தினத்தை ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலில் கொண்டாடினார்.

02112007 : நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மனைவி கமலாம்மாள் சென்னையில் காலமானார்.

03112007 : பாலிவுட் நடிகை மோனிகாபேடி மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

* சிவாஜிகணேசன் மனைவி கமலாம்மாள் உடல் தகனம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

07122007 : தசாவதாரம் கதை குறித்த உதவி இயக்குனரின் புகாரை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.

09112007 : திரைப்படத்துறையை வளர்க்க தங்கர்பச்சனின் 9 ரூபாய் நோட்டு திரைப்படம் தமிழகம் முழுவதும் காலை 11 மணி காட்சி இலவசமாக திரையிடப்பட்டது.

12112007 : நடிகர் பிரபுதேவாவின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பிரசாத்துக்கும், மைசூரை சேர்ந்த ஹேமலதாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

14122007 : சென்னை வளசரவாக்கம் ஒயிட் அவுசில் நடந்த அரசாங்கர் பட சூட்டிங்கின்போது தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

15112007 : காமெடி நடிகர் பாண்டு மகன் பிரபுவுக்கும் பிரி<யதர்ஷினிக்கும் கோவையில் திருமணம் நடந்தது.

17112007 : நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் திருப்பதியில் சாமி கும்பிட்டார்.

19112007 : ஆஸ்திரேலி<ய பட விழாவில் தமிழக படத்துக்கு முதல் பரிசு.

21112007 : நடிகர் ஜீவா சுப்ரியா திருமணம் டில்லியில் நடந்தது.

* நடிகை ஆர்த்தி அகர்வால், அவரது உறவினர் உஜ்வல் குமார் திருமணம் ஐதராபாத்தில் நடந்தது.

23112007 : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடிகர் அர்ஜூன், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மனைவியுடன் மாலை மாற்றி தோஷ நிவர்த்தி செய்தார்.

* நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, நடிகர் மாதவனுடன் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

28112007 : வல்லமை தாராயே பட பூஜையின்போது இந்து தெய்வங்களை அவமதித்த நடிகை குஷ்பு மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

டிசம்பர்

01122007 : நடிகர் ஜீவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி நேரில் சென்று வாழ்த்தினார்.

05122007 : ஆபாசமாக படத்தை வெளியிட்டதாக மேக்ஸிம் பத்திரிகைக்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

06122007 : விவாகரத்து தொடர்பாக நடிகை காவேரியும், கேமராமேன் வைத்தியும் இரண்டாவது கட்டப் பேச்சு வார்த்தை நடத்த சென்னையில் உள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.

* கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததற்கான 18 ஆவணங்களை நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

12122007 : ரஜினியின் 58வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

14122007 : ரஜினிகாந்த் நடித்து, 1980களில் சக்கை போடு போட்ட பில்லா படத்தின் ரீமேக் அஜித் நடிப்பில் வெளியானது. ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா முதன் முறையாக நீச்சல் உடையில் நடித்து அசத்தினார்.

ஐந்தாவது சென்னை உலகத் திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன.

17122007 : நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது முதல் கணவர் நாராயணன் வேணுபிரசாத் தாக்கல் செய்த மனு விசாரணை, பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

20122007 : நேரம் கிடைத்து, கால்ஷீட் ஒத்து வந்தால் தமிழ் படங்களில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று சென்னை வந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.

21122007 : கோலாலம்பூரில் தமிழ் சினிமா 75 என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது.

23122007 : சிங்கப்பூரில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Posted in 2007, Cinema, Dinamalar, Films, Flashback, Gossips, Incidents, Kisukisu, Movies, people, Stars | Leave a Comment »

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

01_01_2008_006_001.jpg

Posted in 2007, Actors, Actresses, Cinema, Dinamalar, Films, Flashback, Flicks, Images, Movies, News, Stars, Tamil, Trivia | 1 Comment »

DMK in Tamil Nadu – Government achievements in 2007 by Kalainjar Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

dmk_kalainjar_karunanidhi.jpg

Posted in 2007, 2008, Achievements, DMK, Government, Govt, Kalainjar, Karunanidhi, MK, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

2008 – International year of sanitation, languages, planet Earth and the potato

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008

இதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.

  • சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,
  • சர்வதேச மொழிகள் ஆண்டு,
  • சர்வதேச புவி ஆண்டு மற்றும்
  • சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.

இந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.
சர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.

  1. அரபு,
  2. சீனம்,
  3. ஆங்கிலம்,
  4. பிரெஞ்சு,
  5. ரஷ்யன் மற்றும்
  6. ஸ்பானிஷ்

ஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.

இயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.

ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.

நகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

பருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.

நிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.


சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!

க. ரகுநாதன்


கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.

பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.

ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.

உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.

உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.

வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.

எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.

உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.

பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.

இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!

Posted in 2007, 2008, 2009, 3899810, Arabic, Carbon, China, Chinese, Culture, Earth, emissions, Environment, France, French, Heritage, Hindi, International, Languages, Latin, Mandarin, Nature, Pollution, Portugese, portuguese, Potato, Russia, Russian, sanitation, Spanish, Tamil, UN, UNICEF, Year | Leave a Comment »

Tamil Cinema 2007 – Top Films, Notable Movies, Flashback, Star Actors: Dinamani Manoj Krishna

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சண்டே சினிமா

ஃப்ளாஷ் பேக் 2007

மனோஜ்கிருஷ்ணா


தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 2007-ம் வருடம், ஒரு கொண்டாட்ட வருடம். ஒரு மினி ஃப்ளாஷ்பேக்…     

2007-ம் ஆண்டில் 10 மொழி மாற்றுப் படங்கள் உள்பட சுமார் 107 தமிழ்ப் படங்கள் வெளியாகின. அவற்றில் 100 நாள்களைத் தாண்டிய 11 படங்களில் சில, ரசிகர்களாலும் சில, சம்பந்தப்பட்ட நடிகர்களாலும் திரையரங்குகளாலும் ஓட்டப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட படங்கள் 50 நாள்களைக் கடந்து தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மினிமம் கியாரண்டி தந்தன.

உச்ச நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரஜினிகாந்தின் “சிவாஜி’. காஸ்ட்யூம், ஸ்டைல் என பல அம்சங்களில் ரஜினிகாந்த் மிக அழகாகத் தோற்றமளித்தப் படங்களில் இதுவும் ஒன்று. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை தமிழ் சினிமாவில் மிக அதிக விலைக்கு விற்பனையான திரைப்படம் என்ற புகழைப் பெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படமும் இதுதான். “சிவாஜி’க்கு வெற்றியா அல்லது வீரமரணமா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

உலக நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு படம் கமல்ஹாசனின் “தசாவதாரம்’. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமும் இதுவே (சுமார் 70 கோடி). ஆனால் உலகத் தரத்திலான “பெர்ஃபெக்ஷன்’ இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகள் நீடித்து படம் வெளியாகவில்லை. ஒரு தமிழ் நடிகர் முதல்முறையாக 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கிறது. 14 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சிறப்பு நட்சத்திரம்!

“அடாவடி’, “பெரியார்’, “கண்ணாமூச்சி ஏனடா’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ என நான்கு படங்களிலும் வித்தியாசமாக நடித்து 2007-ம் ஆண்டில் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெயரைப் பெறுகிறார் சத்யராஜ். குறிப்பாக, “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ படங்களுக்காக விருது பெற்றால் அது செய்தியல்ல; பெறாவிட்டால்தான் அது செய்தி.

சிரிப்பு நட்சத்திரம்!

கடந்த சில ஆண்டுகள் போலவே 2007-ம் ஆண்டும் அதிகப் படங்களில் நடித்த நகைச்சுவை நாயகன் வடிவேலு. எப்படிப்பட்டக் கதையாக இருந்தாலும் இவருடைய காமெடி தங்களது படத்தில் இடம்பெற்றால் போதும் படம் தப்பித்து விடும் என்று பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவருடைய கால்ஷீட் கிடைக்காததால் பல படங்களின் படப்பிடிப்பையே தள்ளி வைக்கும் அளவுக்கு 2007-ல் பிஸியாக இருந்தவர்.

நம்பிக்கை நட்சத்திரம்!

கணேசனுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ஓர் அறிமுக நடிகர் இவராகத்தான் இருக்கும். இவர் கார்த்தி. அமீரின் இயக்கத்தில் இவர் அறிமுகமான “பருத்தி வீரன்’ படத்தின் விஸ்வரூப வெற்றி இவருடைய அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 375 நாள்களை நோக்கி (சென்னையில்) ஓடிக்கொண்டிருக்கும் “பருத்தி வீரன்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் உரிய கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருப்பது தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

தொடர் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டு “ஆழ்வார்;, “கிரீடம்’, “பில்லா’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். முதலாவது தோல்வியையும் இரண்டாவது மினிமம் கியாரண்டியையும் மூன்றாவது அவருக்குரிய மார்க்கெட்டையும் ஓபனிங்கையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமளவுக்கான வெற்றியையும் அடைந்துள்ளது.

சுடர் நட்சத்திரம்!

“போக்கிரி’, “அழகிய தமிழ்மகன்’ என 2007-ல் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய். முதலாவது வெற்றியையும் இரண்டாவது ஓரளவே வரவேற்பையும் பெற்றுள்ளன. தயாரிப்பாளர்கள் விரும்பும் கமர்ஷியல் ஹீரோவாகத் திரையுலகில் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது அவருடைய பலம்.

துருவ நட்சத்திரம்!

“கற்றது தமிழ்’, “ராமேஸ்வரம்’ படங்களில் வித்தியாசமாக நடித்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ள ஜீவா, புதிய முயற்சிகளுக்கு அளிக்கும் ஆதரவைப் பாராட்டலாம். கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான இளம் நடிகராகத் திகழ்கிறார்.

ஒளிர் நட்சத்திரம்!’

வில்லன், குணச்சிர நாயகன் என 2007-ல் ஏழு படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தான் தயாரிக்கும் படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியவராக இருக்கிறார். பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பங்களிப்பும் ஒரு காரணம். சினிமாவை நேசிக்கும் இவர், கமல்ஹாசன் போலவே தான் சம்பாதிக்கும் பணத்தைத் திரைப்படத் துறையில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்க சிறப்பான விஷயம்.

பெண் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகை என்று ஜோதிகாவைக் குறிப்பிடலாம். “மொழி’ படத்தில் வாய் பேச இயலாத காது கேட்கும் திறன் அற்ற பெண்ணாக வந்து தன்னுடைய கண்களாலும் முகபாவனைகளாலும் அபாரமான நடிப்புத் திறனை வெளிக்காட்டியவர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காதது அவருடைய சொந்த விருப்பம் என்றாலும் அவரை என்றும் ஆதரிக்க ரசிகர்கள் தயாராக இருக்கும் அளவுக்கு தன்னுடைய கடைசிப் படத்தில் கலைக்கு மரியாதை செய்திருக்கிறார்.

வெள்ளி நட்சத்திரங்கள்!

விஷால் “தாமிரபரணி’, “மலைக்கோட்டை’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு, இன்னொருவரைப் போல காப்பியடிக்கும் காட்சிகள் போன்றவற்றைத் தவிர்க்காவிட்டால் திரைத்துறையில் தனித்துவம் காட்ட முடியாது.

சரத்குமார் “பச்சைக்கிளி முத்துச்சரம்’, “நம் நாடு’ அர்ஜுன் “மணிகண்டா’, “மருதமலை’, தனுஷ் “பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, “பொல்லாதவன்’, பரத் “கூடல் நகர்’, “சென்னைக் காதல்’ என தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா “வேல்’ படத்திலும் ஜெயம்ரவி “தீபாவளி’ படத்திலும் நடித்துள்ளனர்.

விக்ரம், சிம்பு ஆகியோர் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

கடந்த ஆண்டு “தீபாவளி’, “கூடல்நகர்’, “ஆர்யா’, “ராமேஸ்வரம்’ என நான்கு படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெயரைப் பெறுகிறார் பாவனா. அனைத்துப் படங்களிலும் வழக்கமான நடிப்புதான்.

“போக்கிரி’, “ஆழ்வார்’, “வேல்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஸின். “வேல்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

“சிவாஜி’க்குப் பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிகமாகி, அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைப்பதற்கு முன்னணி நடிகர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் விரட்டிக்கொண்டிருக்கின்றன. அவர் பாலிவுட், ஹாலிவுட் அதிக சம்பளம் தந்தால் கோலிவுட் என்ற கொள்கையில் இருக்கிறார்.

நமீதா வழக்கம் போல அழகு காட்டி தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கிறார். “பருத்தி வீரன்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியாமணிக்கு விருதுகள் காத்திருக்கின்றன. நல்ல கதையை விட்டுவிட்டு நளினமான காஸ்ட்யூம் பக்கம் இவருடைய பார்வை திரும்பியிருக்கிறது. இயக்குநரைப் பொருத்து நடிப்பாற்றலை உயர்த்திக்கொள்ளலாம். “பில்லா’வில் ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ஹாலே பெர்ரி ஆகியோரைப் போல காஸ்ட்யூமில் முதல்முறையாக அளவுக்கு அதிகமாக க்ளாமர் காட்டியிருக்கிறார் நயன்தாரா. ஒரு சாரார் ரசித்ததை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இன்னொரு சாரார் முகம் சுளித்தைதயும் கருத்தில் கொள்ளலாம்.

இசை நட்சத்திரங்கள்!

2007-ம் ஆண்டில் 11 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. அனைத்துப் படங்களிலும் ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் மண்வாசனையுடன் கூடிய “பருத்தி வீரன்’ முதலிடத்தைப் பிடிக்கிறது. இவரையடுத்து ஸ்ரீகாந்த் தேவா 9 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேவா 8 படங்களிலும் பரத்வாஜ், இமான், சபேஷ்முரளி ஆகியோர் தலா நான்கு படங்களிலும் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பார்வையற்ற இசைக் கலைஞர் கோமகன் “முதல்முதலாய்’ என்ற படத்துக்கு முதல்முறையாக இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் “சிருங்காரம்’ படத்துக்கு முதல்முறையாக இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரத் திருமணங்கள்

பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் -வந்தனா ஆகியோரின் திருமணம் மட்டுமல்லாமல், திரையுலகை மகிழ்வித்த இன்னும் சில நட்சத்திரத் திருமணங்கள்…

நடிகர் ஜீவா-சுப்ரியா, நடிகை மாளவிகா-சுமேஷ், நடிகை பூமிகா-பரத் தாகூர், பாடகர் விஜய் யேசுதாஸ்-தட்சணா, நடிகர், நடன இயக்குநர் நாகேந்திரபிரசாத்-ஹேமலதா, நடிகர் நரேன்-மஞ்சு ஹரிதாஸ்

உதிர்ந்த நட்சத்திரங்கள்!

2007 உண்மையிலேயே திரையுலகில் மிகப் பெரிய இழப்புகளையும் சந்தித்தது. நடிகர் விஜயன், நடிகை ஸ்ரீவித்யா,நடிகை ஜோதி, நடிகர் குட்டி, இயக்குநர் ஜீவா, நடிகர் ஏ.கே.சுந்தர், இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம், வீன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் கோவிந்தராஜன், விஜயம் கம்பைன்ஸ் பழனிச்சாமி, தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், நடிகை லட்சுமியின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான ருக்மணி, நடன இயக்குநர் வாமன் என்று பல வருடங்கள் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் கோலோச்சிய பலர் உதிர்ந்தனர். திரையுலகம் வருந்தியது.

வால் நட்சத்திரம்…

ஒரு சினிமாவைப் பற்றிய முறையான மதிப்பீட்டைக் காட்டிலும் சினிமாவே மிக முக்கியமானது. சினிமாவின் தலைவிதி, மக்கள் ரசனையைப் பொருத்தே அமைகிறது. அதற்குப் பொறுப்பானவர்கள் நாம்தான்.

மக்களின் ரசனையைக் கலை வளர்க்கிறது. வளர்ந்துவிட்ட அந்த மக்கள் ரசனை, கலையின் வளர்ச்சியைக் கோருகிறது. மற்ற எந்தக் கலையைக் காட்டிலும் சினிமாவுக்கு இந்த விஷயம் பல மடங்கு பொருந்தும்.

சினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் தங்களுடைய காலகட்டத்தில் நிலவும் ரசனை மற்றும் முக்கிய விஷயங்களைத் தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்தல் அவசியம். இல்லாவிட்டால் அந்தக் கலைஞனும் கலைப் படைப்பும் அழிந்துவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

“மக்கள் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய’ என்று சப்பைக் காரணம் கட்டி மலிவான படங்களைத் தராமல் மக்களின் ரசனையை உயர்த்தும் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும்.

அதேபோல திரைத்துறையில் கடும் முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கப் பெறும் புதியவர்கள், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமைதான் தங்களுக்கு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தங்களது படைப்பில் கவனம் செலுத்தினால் “உலகத் தரம், உலகத் தரம்’ என்ற பதம் மறைந்து “தமிழ்த் தரம்’ என்ற வரம் வாய்க்கப் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா

Posted in 2007, Actors, Ajith, Cinema, Dinamani, EVR, Films, Flashback, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, ManojKrishna, Movies, Periyaar, Periyar, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajnikanth, Shivaji, Sivaji, Stars, Vadivel, Vadivelu, Vijai, Vijay | Leave a Comment »

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

No water supply shortage in Chennai till October 2007

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

சென்னையில் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது

சென்னை, ஜூன் 3: சென்னையில் வரும் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (பணிகள் மற்றும் பராமரிப்பு) வி. சிவகுமரன் தெரிவித்தார்.

போதுமான நீர் கையிருப்பு உள்ளதால், தினமும் 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியது:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகளில் 332 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கோடி கன அடியும், வீராணம் ஏரியில் 42 கோடி கன அடியும் நீர் உள்ளது.

இவற்றைத் தவிர, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 8 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து வழங்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த ஏப்ரல் முதல் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவைப்பட்டால் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் அளவாக உயர்த்தப்படும் என்றார்.

Posted in 2007, Aquafina, Boring pump, Bottled water, Chembarampakkam, Chennai, Cholavaram, Chozhavaram, Consumer, Customer, Dam, Dasani, Drink, Drinking, Expenses, Krishna, Lake, Land water, Liter, Litres, Lorry Water, Madras, October, Poondi, Pump Water, Pumping Station, Puzhal, River, Shortage, Spring water, Supply, Tap Water, Teleugu Ganga, TMC, TN, Water | Leave a Comment »

Cash-rich BCCI has not paid cricketers for last 7 months

Posted by Snapjudge மேல் மே 4, 2007

7 மாதமாக சம்பளம் வாங்காத கிரிக்கெட் வீரர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரப்படவில்லையாம். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக தோற்றுத் திரும்பியதால், சம்பளப் பாக்கியைக் கேட்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகிறார்களாம்.

உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சம்பளம் பெறுகிறவர்கள். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு சம்பளத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் கூட இந்தியர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் சரி, வீரர்களும் சரி நடந்து கொள்வதில்லை (நடந்து கொள்ளப் போவதும் இல்லை).

இந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரவில்லையாம். கடந்த அக்டோபரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிப் போட்டியிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படாமல் உள்ளதாம்.

இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்று திரும்பியது. இந்தியாவில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர்களில் ஆடியுள்ளது.

சம்பளப் பாக்கி குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், சம்பளத்தை நிறுத்தியெல்லாம் வைக்கவில்லை. வீரர்களின் காண்டிராக்ட் கையெழுத்தானதும் நிலுவையில் உள்ள சம்பளம் கொடுக்கப்பட்டு விடும்.

ஒப்பந்தம் இன்னும் தயாராகாததால்தான் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஒரு பிரச்சினையே அல்ல என்றார்.
சம்பளப் பாக்கி குறித்து வீரர்களிடையே அதிருப்தி நிலவினாலும் கூட உலகக் கோப்பைப் போட்டியில் கேவலமாக ஆடி விட்டுத் திரும்பியுள்ளால் சத்தம் போட்டு கேட்க தயங்கிக் கொண்டிருக்கின்றனராம்.

இதற்கிடையே, வங்கதேச டூருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்பு வரை வீரர்களை தர வாரியாகப் பிரித்து ஆளுக்கு ஒரு சம்பளத்தைக் கொடுத்து வந்தது வாரியம்.

அதன்படி சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஷேவாக் போன்றோருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக தரப்பட்டது. மற்ற வீரர்களுக்கு ரூ. 35, ரூ. 29 லட்சம் என சம்பளம் தரப்பட்டது.

இப்போது அதை அப்படியே மாற்றி விட்டு புதிதாக ஒரு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இன்னும் இந்திய வீரர்கள் கையெழுத்திடவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்துக்குப் பின்னரே இது கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

எனவே வங்கதேச டூரில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர போனஸ், போட்டிக்கான கட்டணம் தனியாம். போட்டியில் வெற்றி பெற்றால் போனஸ் தரப்படும். தொடரை வென்றால் இன்னொரு போனஸ் உண்டாம்.

Posted in 2007, Bangladesh, BCCI, Cash, Champions, Cricket, cricketer, cricketers, Dravid, Ganguly, months, Sachin, South Africa, Sri lanka, Srilanka, Tendulkar, Trophy, WC, West Indies | Leave a Comment »

Indian Budget 2007-08 : Details, Information, Analysis, Perspectives

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.

விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு
விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

செல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.


BBC Specialஎழுச்சியுறும் இந்தியா

 

எழுச்சியுறும் இந்தியா
எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.

குடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்


இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2


இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.


குறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.

இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.

பாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.

சிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.

ஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.

சூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


வருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன? முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்டத்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.


பயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.

சோம. நடராஜன், கரூர்.


ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.


அரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்
புதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 சதவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.

உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.

2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

அது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.

தனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.

2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.

பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும்? விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.

நிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும்? அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.

நாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள்? ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.


மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.


பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.

* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.

* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.

* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.

* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.

* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.

* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.

* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.

* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.

* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.

* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.

* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.

* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.

====================================================
விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்

கோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.

விவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.

நாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.

அதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.

====================================================

வரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்

புது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

நிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.

ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.

எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.

வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்?

நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.

பஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.

பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

====================================================
பணவீக்கத்துக்கு மருந்து

இராம. சீனுவாசன்

“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.

ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.

“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.

“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.

பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.

பணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.

இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.

எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).


தனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.

தபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.

இன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.

கூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

வானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.

இத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.

இத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.

காலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.


வருமான வரி

என்.வி. பாலாஜி (nvbalaji@karra.in)

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)

இந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.

ஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

வரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.

இன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:

கீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.

2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.

3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.

4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.

5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.

6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.

7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.

9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

இந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.

வருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.

1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.

– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.

– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.

இவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.


Posted in 2007, 2007-08, Accounting, Agriculture, Allocation, Analysis, Assets, Budget, Chidambaram, Commerce, Communist, Congress, CPI, CPI(M), Deflation, Department, Details, Economy, Education, Expenditure, Finance, Government, Gurumoorthy, Gurumurthy, Healthcare, India, Inflation, Information, infrastructure, Mail, markets, Marxist, Minister, P Chidambaram, P Chidhambaram, Pa Chidambaram, Perspectives, Postal, Private, Projects, Public, Radio, Recession, revenue, S Gurumoorthy, S Gurumurthy, Sector, Shares, Statement, Stocks, Tax, TV | 1 Comment »

Indian Budget 2007-08 : Preview analysis – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பட்ஜெட் பற்றிய குறிப்புகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகலில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையை நிதிநிலை அறிக்கைக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். அதில்தான் மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து அறியப்படும்.

நிதிநிலை அறிக்கையைப் பற்றி சில குறிப்புகள்: நமது அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்ஜெட்’ என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்கு சென்றார். அத்தோல் பைக்கு “பட்ஜெட்’ என்று பெயர். அந்தப் பைக்கு உரிய பெயர், நாளடைவில் அதன் உள்ளே இருந்த ஆவணங்களுக்கு ஆகுபெயராகியது. இந்திய அரசியலமைப்பில் இதற்கு “ஆண்டு நிதிநிலை அறிக்கை’ என்னும் பெயரே வழங்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அடுத்துவரும் ஆண்டில் கிடைக்கக்கூடிய வரவுகளையும், செலவுகளையும் துல்லியமாக மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகால செலவினங்களையும் வருங்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய செலவு மதிப்பீடுகளையும் கருத்தில்கொண்டு இம் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

நிதிநிலை அறிக்கையில், அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – செலவினங்கள் என்பதில் கூறப்பட்டுள்ள மொத்தச் செலவை, அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – வரவினங்கள் என்று கூறப்பட்டுள்ள வருவாயிலிருந்து கழித்தால் வருவாய் உபரி கிடைக்கிறது. இதனைக் கொண்டு அந்த ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் செய்யப்படுகின்றன. எனினும், சமீப காலங்களில் வழக்கமாக, வருவாயைவிட செலவு அதிகமாக இருந்து வருகிறது. இது வருவாய்ப் பற்றாக்குறை என்ற அடிப்படையில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிலைநிதிக்குழு – அமைச்சரவை ஒப்புதல்: இந்தப் பகுதி – ஐஐ செயற்குறிப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளால் தயாரிக்கப்பட்டு, திட்டக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. திட்டக்குழு, திட்டமிடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, உயர் முன்னுரிமை வாய்ந்த திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்கிறது.

இக்குழு, ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது. துறைகளின் ஒவ்வொரு திட்டத்தையும், துறைகளுக்கு இடையேயான ஒவ்வொரு திட்டத்தையும் முன்னுரிமைகளையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில்கொள்கிறது.

இறுதியாக புதிய திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. பகுதி – ஐ, பகுதி – ஐஐ மதிப்பீடுகளைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டு முடிவாக உருப்பெரும் இறுதி வடிவம், பொதுவாக, மத்திய திட்டக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட அளவுக்கேற்பவும், அக்குழுவின் பரிந்துரைகளின்படியும் அமைகிறது.

நிதி ஒதுக்கீடு: இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏற்பளித்தவுடன் அதில் விவரிக்கப்பட்டுள்ள செலவுகளைச் செய்ய அரசு அனுமதியளிக்கிறது. இதுவே “நிதி ஒதுக்கீடு’ என்று அழைக்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்ட முன் மதிப்பீடுகள்: வரப்போகும் ஆண்டில் பல்வகை ஆதாரங்களிலிருந்தும் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரவுகளை மதிப்பிடுதல்.

இந்தப் பணத்தையும் முந்தைய ஆண்டின் கையிருப்பையும் ஒருங்கு சேர்த்தால் எதிர்பார்க்கப்படும் எல்லாச் செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து மதிப்பிடுதல்.

வரவையும் செலவையும் ஈடுகட்ட வரி விதிப்பை எந்த அளவுக்குக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பதை முடிவு செய்தல் ஆகியவையாகும்.

“தொகு நிதி’ – Consolidated Fund என்பது வரவு – செலவுத் திட்ட அறிக்கை – ஐ -) வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் காட்டப்பட்டுள்ளபடி, ஓர் ஆண்டில் கிடைக்கும் அரசின் இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது.

“சாட்டிய செலவுகள்’ (Charged Expenditure) என்பவை தொகு நிதியில் முதல் பொறுப்பாக உள்ள செலவுகள் ஆகும். இவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை.

“எதிர்பாராத செலவு நிதி’ (Contingency Fund) என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்னர் நிர்வாகத்தினரின் அவசரச் செலவுகளுக்கு வகை செய்வதாகும்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பற்றிய பல சுவையான விவரங்கள்:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதாவது நாலைந்து மாதங்களுக்கு முன்பே மத்திய நிதியமைச்சகம் இப்பணியைத் தொடங்கி விடுகிறது. நிதியமைச்சகத்தின் செயலாளர் பொருளாதார நிபுணர்களுடனும், நிதி ஆலோசகர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் இதர பல தரப்பினருடனும் இதுகுறித்து ஆலோசிக்கிறார். பின் நிதித்துறை ஒவ்வோர் அமைச்சகத்தின் செலவு குறித்து அறிக்கையைப் பெறும். இறுதியாகக் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு நகல் அறிக்கை “தேசிய தகவல் மையத்திற்கு’ அனுப்பப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு மிகவும் ரகசியமாக நடக்கிறது. அதைத் தயாரிக்கும் நிதித்துறை அலுவலகத்துக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அங்கு நூறு பேர் பணியில் இருப்பார்கள். துணைச் செயலாளர்கள், அச்சடிப்போர், பிழை திருத்துவோர், பைண்டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பர். இவர்கள் தங்கும் இடத்தில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து தரப்படும். அங்கு பூட்டிய தொலைபேசி மட்டும் இருக்கும். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும்தான் அதைப் பயன்படுத்த முடியும். இவர்களுக்குத் தேவையான உணவு நிதி அமைச்சக உணவு விடுதியிலிருந்து தயார் செய்து பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படும். இப்பணியில் ஏழு நாள்கள் ஈடுபட்டு இருப்போருக்கு பரிசுகளும், மூன்று மடங்கு ஊதியம் உயர்த்தியும் தரப்படும்.

பட்ஜெட் பிரதிகள் மொத்தம் 12,500 அச்சடிக்கப்படும். அந்த அச்சகத்திற்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி நிதிநிலை அறிக்கையின் விவரங்களோ நிதிநிலை அறிக்கையோ வெளியே தெரிந்தால் அரசு வெளியேற வேண்டும் என்ற மரபும் நடைமுறையில் உள்ளது. தேர்வெழுதும் மாணவரின் கேள்வித்தாள் போன்று பட்ஜெட் ரகசியம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய “சிதம்பர’ ரகசியமே.

தற்போது வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் நாட்டின் 61-வது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை வழங்கியது ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான். மத்திய நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் 5-வது தமிழர் ப.சிதம்பரம். இதற்கு முன் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி .டி . கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.

எட்டு முறை பட்ஜெட்டுகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தயாரித்து வழங்கிய மொரார்ஜி தேசாயின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

எனினும், 1951 – 52ஆம் ஆண்டிலிருந்து 1956 – 57 வரை மொத்தம் ஏழு பட்ஜெட்டுகளை (ஆறு முழுமையானவை, ஒரு இடைக்கால பட்ஜெட்) தொடர்ந்து வழங்கி சாதனை புரிந்துள்ளார் சி.டி . தேஷ்முக்.

நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயரும். அதுபோல் மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்ற அடிப்படைக்கு ஆதாரம் ஜனநாயகத்தில் ஆட்சியாளரின் வரவு – செலவுத் திட்டங்கள் ஆகும்.

இந்த வரவு – செலவுத் திட்டங்கள் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் சிந்தித்து தங்களுடைய கடமைகளை ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், தலைமைக் கழக செயலாளர்}மறுமலர்ச்சி திமுக).

Posted in 2007, 2007-08, Analysis, Backgrounder, Budget, Cabinet, Chidambaram, Chidhambaram, Commerce, Consolidated Fund, Details, Economy, Finance, India, Indian, P Chithambaram, Predictions, Preview, revenue, Tax | Leave a Comment »

Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

ரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான

  • ரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்
  • தமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.
  • இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.
  • அதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

இதில்,

  • புதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,
  • அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,
  • இரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,
  • போக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,
  • சாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,
  • ரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,
  • இருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,
  • புதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,
  • சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,
  • பயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,
  • மின்மயமாக்குதல் ரூ.5 கோடி,
  • சிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.

அகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.

தமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மொரப்பூர் -தருமபுரி,
  • மதுரை -காரைக்குடி,
  • நீடாமங்கலம் -புதுக்கோட்டை,
  • திண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.

இத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
மின்மயமாக்கல் திட்டத்தில்,

  • ஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),
  • தாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),
  • விழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்
  • பொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • விழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,
  • திருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.
  • திருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,
  • மதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.

தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • மதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,
  • யஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,
  • சென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,
  • எழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),
  • புவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.

இதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.

கோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

  • கரூர் -சேலம் (ரூ.20 கோடி),
  • பெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),
  • திண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),
  • திண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.

ரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு

சென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.

பாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).

கட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு?: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.

இந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):

தில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).

மும்பை: 405, 2660, 1534, 1084.

கோல்கத்தா: 469, 3120, 1794, 1264.

ஐதராபாத்: 301, 1915, 1113, 792.

புனே: 377, 2459, 1421, 1005.

பெங்களூர்: 195, 1176, 684, 493.

சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.

நாகர்கோவில்: 304, 1933, 1123, 893, 899.

தூத்துக்குடி: 286, 1805, 1051, 000, 749.

நெல்லை: 286, 000, 1051, 835, 749.

திருவனந்தபுரம்: 342, 2209, 1279, 000, 907.

மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.

சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.

திருச்சி: 166, 1069, 617, 491, 437.

கோவை: 235, 1460, 844, 000, 604.

சேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.

புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

Dinamani Editorial
லாலுவின் சாதனை

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.

லாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.

உயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.

ரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.

புதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

அமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.

கடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.

கடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.

தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.

மன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு

சென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.

“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.

திருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.

ரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை

புதுடெல்லி, பிப். 26-

2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.

பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.

ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.

இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.

தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.

தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.

டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.

பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.

ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.

குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.

ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.

அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.

உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-

நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.

ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்

ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.

கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.

ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.

ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-

1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)

2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)

3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)

4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)

5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)

6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)

7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)

8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)

ரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

மத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.

* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.

*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.

* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.

*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.

* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.

* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.

* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.

* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.

* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.

*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.

*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.

*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.

* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.

* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.

*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.

*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.

*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.

*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.

*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.

* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.

* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.

* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.

2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.

=====================================================================
பாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு

வேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.

நடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.

வேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.

திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.
===================================================================================================================
கலாசார மையமாகிறது வேலூர் கோட்டை!: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்

சென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

சிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.

நடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.

—————————————————————————————-

ரயில் சேவைகள் போதாது!

ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.

ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.

இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.

முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.

முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.

கழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.

நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!

Posted in 2007, 2007-08, AC, Accidents, Ambika Soni, Analysis, Bridges, broadgauge, Budget, Capex, Capital Expenses, Cashflow, Commerce, Dinamani, Employment, Ettukkudi, Ettukudi, Expenditure, Expenses, Express, Features, Finance, First Class, Flyovers, Freight, Guides, Income, Information, Initiatives, Insights, Jobs, Karunanidhi, Keypoints, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Mannargudi, Meter gauge, Needamangalam, Notes, Opinion, passenger, Pattukkottai, Pattukottai, Planning, Profits, Railway, Railways, Rates, Revenues, Safety, Satyagraha, Schemes, Second AC, Sleeper, Statement, Takeaways, Tamil Nadu, Thirukkuvalai, Thirukuvalai, Thiruthuraipoondi, Thiruthuraippoondi, Three Tier, Tourism, Tourist, TR Balu, Train, Trains, Velaankanni, Velanganni, Velankanni, Vellore, Velu, Visit, Visitor | 7 Comments »

World Cup Cricket 2007 – England, New Zealand & Pakistan teams

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளும் தேர்வு : பாக். அணியில் அக்தர், ஆசிப், உமர்

கராச்சி, பிப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆஷிப், உமர் குல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிவந்த டேனிஷ் கனேரியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பை பெற்றார்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, சபீர் அகமது, ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முழங்கால் வலி, தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த சோயிப் அக்தர், முகமது ஆஷிப் ஆகியோர் முழுமையாக குணமாகாத நிலையிலும் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இம்மாத இறுதியில் உடற்தகுதிச் சோதனை நடைபெற உள்ளது. அதில் தேறாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் முகமது அல்தார் தெரிவித்தார்.

தனது, முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது பாகிஸ்தான்.

வீரர்கள் விவரம்:

  1. இன்சமாம் உல் ஹக் (கேப்டன்),
  2. யூனிஸ் கான் (துணைக் கேப்டன்),
  3. முகமது ஹபீஸ்,
  4. இம்ரான் நசீர்,
  5. முகமது யூசுப்,
  6. சோயிப் மாலிக்,
  7. அப்துல் ரசாக்,
  8. ஷாஹித் அஃப்ரிதி,
  9. கம்ரான் அக்மல்,
  10. சோயிப் அக்தர்,
  11. முகமது ஆஷிப்,
  12. உமர் குல்,
  13. டேனிஷ் கனேரியா,
  14. ரானா நவேத் உல் ஹசன்,
  15. ராவ் இஃப்திகார் அஞ்சும்.

நியூஸிலாந்து அணி: நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேரல் டஃபி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் ஆல்ரவுண்டர் கிறிஸ் மார்ட்டின், ஆண்ட்ரூ ஆடம்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டியில் “சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகள் இப் பிரிவில் உள்ளன.

வீரர்கள் விவரம்:

  1. ஸ்டீபன் பிளெம்மிங் (கேப்டன்),
  2. வின்சென்ட்,
  3. பீட்டர் புளுட்டன்,
  4. ரோஸ் டெய்லர்,
  5. ஸ்காட் ஸ்டைரிஸ்,
  6. ஜேக்கப் ஓரம்,
  7. மெக்மிலன்,
  8. பிரண்டன் மெக்மிலன்,
  9. டேனியல் வெட்டோரி,
  10. ஜேம்ஸ் பிராங்க்ளின்,
  11. ஜித்தன் படேல்,
  12. ஷேன் பாண்ட்,
  13. மார்க் கில்லெஸ்பி,
  14. மைக்கேல் மாஷன்,
  15. டேரல் டஃபி.

இங்கிலாந்து அணி: உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ரவி போப்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மால் லோய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.

வீரர்கள் விவரம்:

  1. மைக்கேல் வாகன் (கேப்டன்),
  2. ஜேம்ஸ் ஆன்டர்சன்,
  3. இயான் பெல்,
  4. ரவி போப்ரா,
  5. பால் காலிங்வுட்,
  6. ஜேமி டேரம்பில்,
  7. ஆண்ட்ரூ பிளிண்டாஃப்,
  8. எட் ஜோய்ஸ்,
  9. ஜான் லீவிஸ்,
  10. சஜீத் முகமது,
  11. பால் நிக்சன்,
  12. மான்டி பனேசர்,
  13. கெவின் பீட்டர்சன்,
  14. லியாம் பிளங்கெட்,
  15. ஆன்ட்ரூ ஸ்டிராஸ்.

Posted in 2007, Batsmen, Bowlers, Cricket, England, New Zealand, Pakistan, Players, teams, WC, WC2007, West Indies, wicketkeeper, WK, World Cup | Leave a Comment »