Archive for the ‘Democracy’ Category
Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008
புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’!
முத்தையா வெள்ளையன்
சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:
ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.
1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.
தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.
தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.
போராட்டம்…
1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:
உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:
அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.
கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.
இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!
Posted in Activist, Activists, AngSan, Arrest, AungSan, Biosketch, Buddhism, Burma, Democracy, Faces, Fight, Freedom, Gandhi, Independence, Liberation, Mahatma, Mandela, Myanmar, names, Oppression, people, SuKyi, SuuKyi, Violence | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008
ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?
என். விட்டல்
இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.
விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?
அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.
உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?
60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.
முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.
இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.
ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.
நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.
இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.
இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.
நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.
ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.
அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.
எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.
Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008
விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.
தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.
தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.
மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.
அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.
பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.
திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.
இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.
கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.
1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.
சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.
விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.
இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.
ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.
மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.
Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008
திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்
எம். மணிகண்டன்
இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.
ரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.
கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.
சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.
கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.
தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.
அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.
கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.
ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.
பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.
இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!
கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி
 |
|
கென்ய அதிபர் கிபாக்கி |
கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.
ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.
இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.
தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?
 |
|
நைரோபியில் தொடர்ந்து பதட்டம் |
தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.
நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.
கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.
சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.
Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007
லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்
டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.
கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.
சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.
இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.
இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.
அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.
ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.
தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.
இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.
பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.
இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.
மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.
எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.
மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?
இரா. சோமசுந்தரம்
திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!
இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.
இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.
அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!
பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!
சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.
தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.
ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.
அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.
விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.
இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.
அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.
பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.
ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?
இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.
எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.
“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.
எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.
எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.
இப்போது சொல்லுங்கள்…
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?
Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007
 |
 |
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம் |
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு
 |
 |
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம் |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.
அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
 |
 |
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் |
வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.
Posted in Airforce, Arms, Asia Tribune, Attack, Blasts, Bombs, Burnt, Colombo, dead, Death, Deface, defence, Defense, Democracy, Dhileepan, Displaced, Editor, Eelam, Eezham, equipment, Extremism, Extremists, Fire, Freedom, Govt, HSZ, IDP, Independence, Irudina, Jaffna, Journal, journalism, journalist, Karuna, Lasantha, Law, Leader, LTTE, Mag, magazine, Magazines, Magz, Media, Military, Morning Leader, News, Newspaper, Office, Opposition, Oppression, Order, owner, paramilitary, Passport, Pillaiaan, Pillaian, Pillaiyaan, Pillaiyan, Police, Press, Propaganda, Rajapaksa, Rajapakse, Rajasingam, Rajasingham, Rajasinkam, Ransack, Rathmalana, Ratmalana, Rebel, Refugees, Reporter, Samarasinghe, Security, Sinhala, Sonali, Statue, Sunday, Sunday Leader, Suppression, Terrorism, terrorist, Terrorists, Thamilselvan, Thileepan, Triconamalee, triconmalee, Vavuniya, wavuniya, Weapons, Wikramatunga | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
நமது கடன்…
ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்
இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.
இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!
இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?
அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.
அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?
மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!
————————————————————————————————————————————————-
மக்கள் பிரதிநிதிகள்…?
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.
சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.
1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.
அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.
சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.
கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.
மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.
கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.
1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.
இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.
தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————–
பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!
பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்
நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.
மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.
சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.
மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.
இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.
இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.
மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.
நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.
ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.
உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.
நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.
நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.
நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.
1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.
இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.
1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.
அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.
ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.
ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.
இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”
Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
மக்கள் விரும்பிய மாநிலம்
உதயை மு. வீரையன்
இன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.
இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
அவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.
இதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.
1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.
இதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.
1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.
இருப்பினும் “சென்னை யாருக்கு?’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.
1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.
மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.
வடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.
படாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.
இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.
எனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.
அத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.
மாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.
இச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.
மொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.
Posted in Andhra, Anna, AP, authority, Chennai, Congress, Dakshin, Democracy, Divide, EVR, Federal, Freedom, Independence, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Language, Madras, MaPoSi, MPs, Nehru, North, Periyar, Power, Presidency, Province, Rajaji, Region, Republic, Rule, Shree ramulu, Shreeramulu, Shri ramulu, South, Sree ramulu, Sreeramulu, Sri ramulu, Sriramulu, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Telugu, TN, Zone | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
பயங்கரவாதிகள் கூட்டு சதி?: லூதியானா குண்டுவெடிப்பு
லூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.
திரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
எனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.
அவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.
இந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
லூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
குண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Posted in Arms, Babbar Khalsa International, Bihar, BKI, Blast, Bombs, Cinema, dead, Democracy, explosion, Freedom, Independence, Investigation, Islam, Jihad, Khalistan, Liberation, Ludhiana, Movie, multiplex, Muslim, Punjab, RDX, Samrala, Separation, Sikhs, Singar, Terrorism, terrorist, Theater, Theatre | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007
மக்களுக்காகவே நிர்வாகம்!
என். விட்டல்
இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.
சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.
தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.
தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.
அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.
ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.
வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.
வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?
மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.
சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.
(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)
Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 14, 2007
தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆரம்பம் என்ன? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
எங்களது இயக்கத்தின் தொடக்கம் எண் பதுகளில் ஆரம்பித்தது. வரதட்சிணை, பெண் அடிமைத்தனம், புரோகிதம் போன்ற மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. திருக்குரானுக்கு எதிரான செயல்கள் இவை என்பதை நாங்கள் எடுத் துரைத்தோம். அதனால், எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட அதுதான் காரணமாக இருந்தது.
ஜாக் என்பது அந்த அமைப்பின் பெயர் ஜமியா அஹவி குர் ரான்-உல்-ஹதீஸ் என்பது அதன் விரிவாக்கம். திருக்குர்ரான் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அர்த்தம். சுமார் பதினைந்து வருடங்கள் எங்களது பிரசாரம் தொடர்ந்தது. மெல்ல, மெல்ல சமுதாயத்தினர் மத்தியில் பெரிய அளவில் எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.
நமக்கு எதிராகத் தொடுக்கப்படும் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்க ளாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்பை நியாயமாகத் தெரிவிக்க முடியாதபோதுதான், வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர் கள் இறங்குகிறார்கள்.
அதற்காக ஏற்பட்ட அமைப்புதானே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்?
ஆமாம். அதன் அமைப்பாளர் நான்தான். குணங்குடி ஹனீஃபா என்பவர் அந்தப் பெயரில், பெயரளவில் ஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத் தலைவராக அறிவித்தோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு விஷயங்களில் தீர் மானமாக இருந்தோம். அவை, எந்தக் காரணம் கொண்டும் தேர்த லில் போட்டியிடுவதில்லை என்பதும், எந்தவித அரசுப் பதவியும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்தான்.
அதற்கு என்ன காரணம்?
பதவியைக் காட்டிதான் எங்களது சமுதாயம் பல வருடங்க ளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1967-ல் “காயிதே மில்லத்’ முகம்மது இஸ்மாயில் அவர்கள் திமுகவுடனான கூட்டணியில் பெற்ற இடங்கள் 15. இப்போது ஓர் இடத்திற்குக் கூட்டணி கட்சிக ளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. 1967-ல் திமுகவுடன் கூட் டணி அமைப்பதற்கு முன்னால் அண்ணா அளித்த வாக்குறுதி தான் எங்கள் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு. அதனால்தான் ஒட் டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணிக்கு வாக்களித்தது.
அண்ணா இறந்துவிட்டதும் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது இடங்களுக்கான ஒதுக்கீட்டு டன் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர, சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் நாங் கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பதவிக்கு ஆசைப்படுவதோ கூடாது என்று தீர்மானம் போட்டோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிளவுபட என்ன காரணம்?
முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்கிற தவறான கண்ணோட்டம் மாறவேண்டும் சமுதாய நல்லிணக்கத்துக்காக நாம் பாடுபட வேண்டும் போன்ற உறுதியான கொள்கைகளுடன் பல்வேறு மாநாடுகளையும், ஆங்காங்கே கூட்டங்களையும் ஏற்பாடு செய் தோம். அப்படி நடத்திக் காட்டியதுதான் தஞ்சையில் நடத்திய பேரணி. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எங்களில் சிலருக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்திவிட்டது. பதவி ஆசை வந்துவிட்ட பிறகு சமுதாய நலன் புறக்கணிக்கப்பட்டு விடும் என்பது எனது கருத்து.
அவர்கள் பாதையில் செல்ல எனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவுதான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.
ஆமாம், தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன அர்த்தம்?
தவ்ஹீத் என்றால் சரியான இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்று அர்த்தம். நமது சீர்திருத்தப் பிரசாரம் கைவிடப்பட்டால் நமது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் நாட்டமுடைய த.மு.மு.க. நிர்வாகிகளில் சிலர் கருதி னார்கள்.
“தவ்ஹீத்’ தங்களது அரசியல் ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிப்பதற் காகத்தான் எங்களது இயக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்று பெயரிட்டோம்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு உங்களு டைய முயற்சிகள் முக்கியமான காரணம் என்று கருதப்படுகி றது. இட ஒதுக்கீட்டை நீங்கள் வலியுறுத்தியதன் காரணம் என்ன?
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, அது சரியா, அதிலென்ன நியாயம் என்று கேட்கிறார்கள். முதலாவதாக, முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட உரிமை திருப் பித் தரப்படுவதுதானே தவிர, புதிய சலுகை அல்ல. இந்தியா சுதந் திரம் அடைந்த நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது எங்க ளுக்கு இருந்த இட ஒதுக்கீடு ஏழு சதவீதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக் கப்பட்டிருந்தாலும் உண்மையில் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீடுதான் தனியாகப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த விஷ யத்தைப் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எங்களை அழைத்துப் பேசினார். அப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்டம் இடமளிக்காது என்று கருத்துத் தெரிவித் தார். இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள்தான் அந்த வழியைக் காட்டினோம்.
நீங்கள் காட்டிய மாற்று வழிதான் என்ன?
ஏற்கனவே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற எங்க ளது இஸ்லாமியப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடில் இடம் பெற்றிருக்கிறார்கள். மொத்த பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் பயன் எங்களுக்கு கிடைப்பதில்லை. புதிதாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போதுதான் பிரச்னை வருமே தவிர, ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமாகப் பிரித்து ஒதுக்குவதில் யாரும் குற்றம்காண முடியாது என்பதைக் கனிமொழியிடம் எடுத்துரைத்தோம். இடஒதுக்கீடு கிடைத்ததற்கு எங்கள் சமுதாயம் நன்றி சொல்லவேண்டியது முதல்வர் கருணாநி திக்கு மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் தான்.
முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவைதானா?
நிச்சயமாகத் தேவைதான். மதரீதியாக மட்டும் அதைப் பார்க் கக்கூடாது. சமுதாய நல்லிணக்க ரீதியாகவும் பார்க்க வேண்டும்.
எங்கள் சமுதாய இளைஞர்கள் பலர் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு வேலையில்லை. இப்படிப் படித்த, வேலையில்லாத இளைஞர்களைத்தான் தீவிரவாத இயக்கங்கள் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்துகின்றன. போதிய படிப் பறிவும், வேலையும், அதனால் ஏற்படும் சமூக அந்தஸ்தும் முஸ் லிம் சமுதாய இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடாமல் தடுக்கும்.
இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை யாக இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?
இது மேலைநாட்டவரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று வேலை. விடுதலைப் போராளிகளை மதத் தின் பெயரால் குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாய மில்லை. ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், இராக்கில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், பாலஸ்தீனத்தில் அந்த நாட்டின் விடுதலைக்கா கப் போராடுபவரும் இஸ்லாமியராக இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யமுடியும்?
அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், பிரான் ஸிலும் அவரவர் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது அமெரிக்க உள்நாட்டுப் போராளி, ரஷியப் புரட்சிக்காரர், பிரெஞ் சுப் புரட்சியாளர்கள் என்று சொன்னார்களே தவிர, கிறிஸ்துவப் புரட்சியாளர்கள் என்றா கூறினார்கள்?
அப்படியானால் இந்தத் தீவிரவாதிகளை எப்படித்தான் அழைப்பது?
அந்தந்தத் தீவிரவாத அமைப்பின் பெயரால் அழையுங்கள்.
அதற்கு ஏன் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று பெயரிட்டு அத் தனை இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சித்திரிக்கிறீர்கள்? இப்படி அழைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு வழி வகுக்கப்படுகிறது. அது தவறு என்கிறோம்.
இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தி னர் மத்தியில் வரவேற்பு இல்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தீவிரவாத இயக் கங்களை ஆதரிப்பதே இல்லை. தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மட் டும் அல்ல; எந்தவொரு சமுதாயமும், சமாதானமாகவும், பிரச் னைகள் இல்லாமலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புமே தவிர, இது போலத் தீவிரவாத அமைப்புகளுடன் ஒத்துழைக்கவே முன் வராது. அது மனித இயல்பு.
இதைக்கூடப் புரிந்துகொள்ளா மல், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது மடமை. விவரமில்லாத பேச்சு.
இந்தியாவில் காணப்படும் தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
நக்சலைட்டுகள், காஷ்மீர தீவிரவாத இயக்கங்கள், அசாமி லுள்ள போடோ தீவிரவாதிகள் என்று பலர் இருந்தாலும், இந்தி யாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவர்கள் என்பதை மறுப்பதற் கில்லை. இந்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை.
முஸ்லிம் சமுதாயத்தினரிடையே நிலவும் மூடநம்பிக்கை களை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். அப்படி என்ன மூடநம்பிக் கைகள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?
வரதட்சிணை என்கிற பழக்கமே திருக்குர்ரானுக்கு எதிரான விஷயம். ஆண்கள்தான் பெண்களுக்கு “மஹர்’ தரவேண்டுமே தவிர, ஆண்களுக்குப் பெண்கள் வரதட்சிணை தரும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் தற்போது இந்தப் பழக்கம் நிலவுகிறது. அதேபோல, தர்கா வழிபாடு திருக்குர்ரானில் மறுக் கப்பட்ட ஒன்று. ஆனால் பெண்கள் பலரும் தர்காவுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அது தவறு என்று கூறுகிறோம்.
புரோகிதம் என்பது இஸ்லாமியர்களுக்குக் கிடையாது. அதேபோல, ஆண்க ளைவிடப் பெண்களுக்கு அதிக உரிமைகளை இஸ்லாம் அளித்தி ருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விவா கரத்து விஷயத்தில் ஆணுக்கு இருப்பதைவிட அதிக உரிமை பெண்களுக்குத்தான். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.
பெண்களின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்று கூறும் நீங்கள், பெண்கள் “பர்தா’ அணிவதைப் பற்றி என்ன கூறுகிறீர் கள்?
“பர்தா’ என்பது உடலை மறைக்கும் ஆடை. அவ்வளவுதான்.
இஸ்லாமில் முகத்தை மறைக்கவேண்டும் என்று எங்கேயும் சொல் லவில்லை. ஆனால் முகத்தையும் கை,கால்களையும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான நியதி. பெண்கள் “பர்தா’தான் அணியவேண்டும் என்பதில்லை. உடலை மறைக் கும் உடைகளை அணியவேண்டும், அவ்வளவே..!
அவரவர் இஷ்டப்படி உடையணியும் உரிமை ஏன் பெண்க ளுக்கு மறுக்கப்படுகிறது?
ஆண்கள் தொப்புளைக் காட்டியபடி உடையணிவதில் எந்தவி தக் கவர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி உடையணிவதில்லையே? பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? ஆண்கள் உடலை மறைத்து உடை அணிவது போலப் பெண்களும் உடையணிவதில் தவறு காண் பவர்கள், வக்கிரபுத்தி உடையவர்கள். பெண்களின் உரிமை என்பது உடையணிவதில் அல்ல. அவர்களது நியாயமான அந் தஸ்தையும், மரியாதையையும் பெறுவதில்தான் இருக்கிறது.
தங்களது உடைப் பழக்கத்தாலும், பேச்சு வழக்காலும் இஸ்லாமியர்கள் மற்ற சமுதாயத்தினரிலிருந்து வேறுபடுகிறார் கள் என்கிற கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை, உடைப் பழக்கம் மாறுபடுகிறது என்பது சரி, ஆனால் பேச்சு வழக்கு மாறுபட்டிருக் கிறது என்பது தவறு. உடைப் பழக்கம் என்றால், ஒவ்வொரு சமு தாயத்துக்கும் அவரவர் உடைப் பழக்கங்கள் இருக்கின்றன.
அதில் நாம் தவறு காண முடியாது. தமிழகத்தில் உள்ள பெருவாரி யான முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள்தான். வெறும் ஐந்து சதவி கித முஸ்லிம்கள்தான் உருது பேசுபவர்கள்.
சினிமாவில் முஸ்லிம் கள் என்றாலே “நம்பள்கி, நிம்பள்கி’ என்று பேசுவது போலக் காட்டி தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற ஒரு தவ றான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எங்கள் சமுதா யத்தினர் மத்தியில் இருக்கும் தமிழார்வம் எத்தகையது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
கிறிஸ்துவர்கள் மாதா கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது, இன்றும் பள்ளிவாசலில் அரபிதான் ஒலிக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “ஜனகணமன’ என்கிற தேசிய கீதத்தை நாம் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்? அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா? கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். பிரார்த்தனைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி செய்து கொள்ளலாம். பல்வேறு இனத்தவரையும், நாடுகளையும் கடந்தது மதமும் இறையும். அதை ஒருங்கிணைக்க, மத ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு மொழியை தொழுகை மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது அரபி, அவ்வளவே. பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதால், நாங்கள் தமிழரல்ல என்று சொல்வது அபத்தமான வாதம்.
அயோத்தி பிரச்னையில் உங்களது அமைப்பின் நிலைப்பாடு என்ன?
இப்படி ஒரு பிரச்னையைத் தீர்வே இல்லாமல் இழுத்துக் கொண்டு போவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், நமது வருங்காலத்துக்கும் நல்லதல்ல. அப்படியொரு சூழ்நிலையை அரசும், அரசியல் கட்சிகளும் உருவாக்கி அதில் ஆதாயம் தேட முயலுகிறார்கள் என்பது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவாகத் தீர்ப்பளிப்பதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அந்தத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.
ராமர் பாலப் பிரச்னை பற்றி…?
இந்தப் பிரச்னைக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். எங்களை ஏன் அநாவசியமாக வம்புக்கு இழுக்கிறீர்கள்?
ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் வரும்போது மட்டும் கலவரங்கள் ஏற்படுகின்றனவே, அது ஏன்?
எங்களைக் கேட்டால் எப்படி? கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா? மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா? காரணம். அவை பக்தர்களால் நடத்தப்படுபவை. ஆனால், விநாயகர் ஊர்வலங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. மதமும் அரசியலும் ஓர் ஆபத்தான கலவை. அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மை சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது- இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?
முஸ்லிம்கள் பலதார மணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்தியப் புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.
இஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சின்ன விஷயத்தைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் என்ன?
எங்களுக்கு இழைக்கப்படும் பல அவமானங்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. தாங்கிக் கொள்கிறோம். மனதிற்குள் புழுங்குகிறோம். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். எங்களை இந்தியர்களாகப் பார்க்காமல், இஸ்லாமியர்களாக, பாகிஸ்தானின் கைக்கூலிகளாக சிலர் சித்திரிக்க முற்படும்போது நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்திய
முஸ்லிமுக்கு இருக்குமளவு சகிப்புத் தன்மை உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நாங்கள் இந்தத் தேசத்தை, இந்த மண்ணை நேசிக்கிறோம். ஏன் தெரியுமா? தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்தியர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். இன்னும் சகிப்போமே தவிர எங்கள் இந்தியத் தனத்தை இழக்க மாட்டோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – இது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு. கும்பகோணத்தில் இந்த அமைப்பு நடத்திய பேரணியும் ஊர்வலமும், சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய முஸ்லிம் பேரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீனை ஒரு மதச்சார்பு இயக்கவாதி என்பதைவிட ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர் என்பது ஒரு
புறம் இருக்க, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதில் முனைப்பாக இருப்பவர் என்பதுதான் இவருடைய தனித்தன்மை.
சொல்லப் போனால் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தவ்ஹீத் ஜமாத்தின் சிறை நிரப்புப் போராட்டத்தின் எதிரொலிதான் என்று கருத இடமுண்டு. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய
சமுதாயம் பற்றியும் என்ன கேள்வியைக் கேட்டாலும் அதற்குக் கோபப்படாமல் பதில் சொல்லும் இவரது லாவகம், பிரமிக்க வைக்கிறது. ஒரு சமுதாயத்தை நேர் வழியில் நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் படைத்தவர் என்று மாற்று
மதத்தினரும் மதிக்கும் தலைவராக இருக்கும் ஜைனுல் ஆபிதீனின் இன்னொரு சிறப்பு – பதவி அரசியலில் இவருக்கு இல்லாத நாட்டம்.
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்புப் பேட்டி~
Posted in Abhidheen, Abhitheen, Abhithin, Abidheen, Abitheen, Abithin, Ayodhya, Ayodya, Ayothya, Blasts, Caste, Child, Christ, Christianity, Christians, Cinema, Community, Democracy, Dhouheed, DMK, Eid, Explanantions, explosion, Extremism, Extremist, Extremists, Films, Ganesh, Ganesha, Id, Interview, Islam, Jainul, Jamadh, Jamat, Jamath, Jesus, Jihad, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, Kuran, Language, Mosque, mosques, Movies, Muslims, NGO, Outbursts, Pillaiyaar, Pillaiyar, Population, Purda, Purdah, Purtha, Purthah, Quran, Ram, Ramadan, Ramar, Ramazan, Ramdan, Ramzan, Religion, Sensitive, Sethu, SIMI, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Teerorism, Terrorism, terrorist, Terrorists, Thouheed, TMMK, TN, TNTJ, Touheed, Touheed Jamat, Urdu, Vinayak, Violence, Wakf | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
ஏனிந்த மௌனமம்மா..?
காந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.
உலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா?
அநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா?
இப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.
பாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.
சர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.
வங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.
வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.
இராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா?
ராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.
நாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.
சர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).
நான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.
1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா? அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான்! இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.
1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா? அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.
சோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.
சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.
அமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.
காலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.
அதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.
மியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
Posted in Affairs, Afghan, Afghanisthan, Arms, Bangladesh, Burma, Bush, Cartel, China, Cocaine, Democracy, Diesel, Drugs, energy, External, Foreign, Gandhi, Gas, George, Govt, Gujarat, GWB, Heroin, Imports, India, International, Iraq, Laden, Libya, Malta, Myanmar, Oppression, Osama, Pakistan, Petrol, Politics, Spokesperson, Violence, Voice, Wars, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007
உறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை!
க. ரகுநாதன்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.
இவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
எல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.
பிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.
அவருக்கும் வந்தது அரசியல் ஆசை!. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.
அடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.
பதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.
நாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.
இதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.
2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.
மொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்!.
நல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.
முன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.
Posted in Abe, Army, Bangladesh, Bhutto, Biz, Business, Cinema, Corruption, Courts, Democracy, Films, Freedom, Govt, Hasina, HC, Independence, International, Japan, Justice, Khaleda Zia, Khaledha, kickbacks, Law, Leaders, Lobbying, Military, Movies, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Nawaz, Order, Peru, Pervez, Phillipines, Politics, Rule, SC, Sharif, Sheriff, World, Zia | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007
பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்
பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.
அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.
யார் இந்த பர்மா ஜெனரல்கள்?
 |
 |
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும் |
பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.
அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.
இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.
 |
 |
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே |
பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.
எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.
 |
 |
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே |
தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.
இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.
1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.
பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை
 |
 |
அதிபர் புஷ் |
பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.
முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
புத்தம் சரணம் கச்சாமி!
மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.
1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.
புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.
யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.
எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!
Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007
மனிதாபிமானம் மடிந்துவிட்டதா?
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்க பொருள்களுடன் படகில் புறப்பட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இதுதான் வழி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இலங்கைவாழ் தமிழர் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு யதார்த்த நிலைமையைப் புரியவைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்பதால், இந்த முயற்சியை நாம் ஓர் அடையாளப் போராட்டமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. பண்டாரநாயகே காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவு நாடாக இருந்ததில்லை. உலகச் சந்தையில் ரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால், இலங்கையின் நட்பு தேவை என்பதற்காக எல்லா விஷயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.
தென் ஆசியாவில் மக்கள்தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்தின்படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும்போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்? இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமல்போனதன் விளைவுதான் இப்போது உதவிப்பொருள்களைப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.
வெளிவிவகாரக் கொள்கையை விட்டுவிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சரித்திரமும், நாளைய சந்ததியும் நம்மை எள்ளி நகையாடுமே என்று சிந்தித்துப் பார்க்கக்கூடவா நம்மால் முடியாமல் போய்விட்டது? 1957-ல் இலங்கையில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, உடனடியாக உதவிப்பொருள்களை அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் 1987-ல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே உணவுப் பொட்டலங்களையும் உதவிகளையும் விமானம் மூலம் அனுப்ப உதவிய அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனையும் இன்று பதவியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
பசி, பட்டினி என்கிற கூக்குரல்கள் யாழ்வாழ் மக்களிடமிருந்து எழுகின்றன. சப்தம் கேட்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அங்கே பிரச்னையே இல்லை என்கிறது சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம். அது என்ன என்று மனிதாபிமான அடிப்படையில் கேட்கக்கூட ஆள் இல்லை. சரி, உணவுப்பொருள்கள், மருந்துகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு சேர்க்க அரசு உதவுகிறதா என்றால் அதுவுமில்லை. அதுதான் ஏன் என்று புரியவும் இல்லை.
தமிழ் உணர்வும், தமிழினத்தின் மீது அக்கறையும் இல்லாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்பட முடியாத நிலையில்தானா மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்? தட்டிக்கேட்க வேண்டியவர்கள் கைகட்டி நிற்கும் நிலைமை வந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே…
Posted in Arms, Democracy, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eezam, Eezham, Fight, Food, Freedom, Health, Help, Independence, Leader, Liberation, LTTE, Medicines, Nation, Nationalism, Nationalist, Nedumaaran, Nedumaran, Netumaran, Republic, Srilanka, Tamil, UN, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Weapons | 2 Comments »