Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Asean’ Category

Diplomatic tangle over Dalai Lama: Ministers absent at “Peace Pilgrim Award”, instituted by the Gandhi Foundation USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

தன்னம்பிக்கை இல்லாத அரசு!

ஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.

ஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.

பண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

உலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.

சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

உணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா?

Posted in Affairs, Alliance, America, Asean, Asia, BJP, Burma, China, Coalition, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dalai, Dalai Lama, Dalailama, Economy, Exports, Gandhi, Gandhi Peace Foundation, Govt, Imports, Myanmar, Nehru, PAK, Pakistan, Panchasheel, Peace, PM, Relations, Russia, SAARC, Sri lanka, Srilanka, Thalailama, Tibet, US, USA, World | Leave a Comment »

Quadripartite dialogue not against China: PM

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்

புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.

நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.

பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.

கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.

“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

Posted in America, Army, Asean, Australia, Beijing, Brazil, Canberra, Cooperation, Coordination, defence, Defense, Disaster, Earthquake, EU, External, Flood, Foreign, G8, Germany, International, Japan, Manmohan, Military, NATO, Navy, Nuclear, Peking, PM, Relations, SA, SAARC, South Africa, Southafrica, Tokyo, Tsunami, US, USA, Washington | Leave a Comment »

WTO, G8, EU, NATO, US Interests vs Developing Countries Financial Development – Focus on Agriculture

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

வளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா?

உ.ரா வரதராசன்

உலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.

டபிள்யூடிஓவின் அமைச்சரவை மட்ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.

இவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.

ஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே! “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது! எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே! தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத் தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு வரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.

வளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.

இந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.

Posted in Agriculture, America, Asean, Banking, Biz, Business, Commerce, Companies, Conference, Country, Cultivation, Development, Doha, Duty, Economy, EU, Exchanges, Exports, Farmers, Finance, Fine, G8, Imports, Industry, International, Law, markets, NATO, Poor, Protection, Rich, SAARC, Shares, Stocks, Talks, Tariff, Tax, Trade, Treaty, USA, World, WTO | Leave a Comment »

State of SAARC – South Asian Association for Regional Cooperation

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன்


“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.

“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.

கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.

இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.

தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.

ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.

இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.

தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.

மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.

சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.

ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.

ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.

வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.

இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.

வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.

மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.

அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

Posted in Actions, Asean, Asia, Bangaldesh, Bhutan, Burma, Chat, China, Colombo, Cooperation, Economy, Eelam, Eezham, EU, Exim, Exports, External, External Affairs, extradition, FERA, Finance, Foreign, Govt, IMF, Imports, LTTE, Maldives, Myanmar, NATO, Neighbor, Neighbours, Nepal, Op-Ed, Pakistan, Power, Process, Relations, SAARC, Sri lanka, Srilanka, Talks, Tariffs, Tax, Tibet, UN, WB, WTO | Leave a Comment »

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »

70 Hindu Temples to be destroyed in Malaysia – National Heritage Act

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மலேசியாவில் 70 இந்து கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு

கோலாலம்பூர், டிச. 19-

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலே சியா 1957-ம் ஆண்டு ஆங்கி லேயரிடம் இருந்து விடு தலை பெற்றது. 1965-ம் ஆண்டு சில பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மலேசியா உருவானது. 3 லட்சத்து 30 ஆயிரத்து 434 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 2 கோடியே 75 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இதில் 8 சதவீதம் பேர் இந்தியர் களாகும். குறிப்பாக தென் இந்தியாவை சேர்ந்த வர்கள் அதிகமாக வசிக்கி றார்கள். இவர்கள் அங்குள்ள தங்கள் வசிக்கும் பகுதிகளில் இந்து கோவில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான கோவில் கள் சாலை ஓரங்களில் உள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்களை இணைத்தும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அனுமதி பெறா மல் கட்டப்பட்டவை ஆகும்.

தற்போது சாலை மேம்பாடு பணி நடந்து வருவதால், விதி முறையை மீறி கட்டப்பட்ட இந்து கோவில்களை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக 70 இந்து கோவில் கள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

கோவில்களை இடிக்க கூடாது என்று மலேசியா வாழ்இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்தது. இதற்கிடையே உதய குமார் என்பவர் இந்து கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே இந்து கோவில்கள் இடிக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.

Posted in Asean, Construction, Hindu, Hinduism, Illegal, Immigrants, India, Malaysia, South east Asia, Tamil, Temples, Worship | 4 Comments »

Thailand’s King supports Coup as long as he is not affected

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2006

ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியவர்களுக்கு தாய்லாந்து மன்னர் ஆதரவு

தாய்லாந்தில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர்கள்
மன்னரின் படத்திற்கு தாய்லாந்தின் புதிய தலைவர் மரியாதை

தாய்லாந்தின் விவகாரங்களில் அதீத செல்வாக்கு உடைய மன்னர் பூமிபோல் அடுல்யடெஜ் இந்த வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவத் தலைவர்களுக்கு முறைப்படியான தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார்.

தாய்லாந்து மன்னரின் முறைப்படியான அங்கீகாரம் வாசிக்கப்பட்ட வேளை மன்னரின் உருவப் படத்திற்கு முன் தாய்லாந்தின் புதிய தலைவர் ஜெனரல் சோந்தி பூன்யாரட்கிளின் மரியாதை செலுத்தும் விதமாக குனிந்து வணங்கினார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதமர் தக் ஷின் ஷினாவத்ராவின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இராணுவக் கவுன்சில் ஒரு ஆணையத்தினை அமைத்துள்ளது.

தலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பல சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Posted in Asean, Asia, Bangkok, Bhumibol Adulyadej, Commission, Corruption, Coup, Inquiry, King, Military, Sondhi Boonyaratkalin, South East, Tamil, Thailand, Thaksin Shinawatra | Leave a Comment »

Thaksin Shinawatra, the ousted prime minister of Thailand to stay put in London

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

லண்டனில் தக்ஷின்
லண்டனில் தக்ஷின்

லண்டனில் தக்ஷின் சின்வத்ரா

தாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தனது மனைவியுடன் தக்ஷின்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Posted in Asean, Bangkok, Coup, Democracy, General, London, Military, parliament, Pasuk Phongpaichit, Prime Minister, Sondhi Boonyaratkalin, Tamil, Thailand, Thaksin Shinawatra, World | Leave a Comment »