Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Fresh’ Category

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

The Forward Bloc-controlled agriculture marketing board proposes to do what Reliance would have done

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

ரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக்

கோல்கட்டா :

ரிலையன்ஸ் சில்லரை கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி, “ரிலையன்ஸ் கடை’ போல, அமைக்க திட்டமிட்டுள்ளது.

நேரடி கொள்முதல் :

மேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து காய்கறி முதல் கம்ப் யூட்டர் வரை விற்க, சில்லரை கடைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு அரசு அனுமதிக்க தயாராக இருந்தும், ஆளும் கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

“ரிலையன்ஸ் நிறுவனம், அமைப் பது போல நாங்களே கடைகளை அமைக்க தயார். அரசு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. அரசும் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

பார்வர்டு பிளாக் கட்டுப்பாட்டில் உள்ள, “விவசாய மார்க்கெட்டிங் போர்டு’ இதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

போர்டின் தலைவர் நரேன் சாட்டர்ஜி கூறுகையில், “விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உட்பட உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நல்ல விலை தரவும், நியாயமான விலையில் மக்களிடம் விற்கவும் போர்டு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, முதல்வரிடம் 100 கோடி ரூபாய் உதவித்தொகை கேட்டுள்ளோம்’ என்றார்.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வடக்கு மாவட்டம், ஹால்திபாரியில், வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில், முதல் கட்டமாக, பார்வர்டு பிளாக் போர்டு, கடைகளை ஆரம் பிக்கும். ஹால்திபாரியில், தக்காளி, மிளகாய் விளைச்சல் அதிகம். அதனால், அவற்றை வாங்கி, மொத்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினர்.

“ரிலையன்ஸ் கடைகளை ஆரம்பிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொழில் செய்ய எந்த கம்பெனிக்கும் தடை விதிக்க முடியாது. விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். ஆனால், விவசாய கொள்முதல் சட்டத்தை பொறுத்தவரை, விவசாய மார்க்கெட்டிங் போர்டு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. அதனால் தான், விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய சில தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என்றும் சாட்டர்ஜி கூறினார்.

தன்னார்வ அமைப்புகள் மூலம், ரிலையன்ஸ் கடைகள் போல கடைகளை உருவாக்கும் பார்வர்டு பிளாக் திட்டத்துக்கு முதல்வர் புத்ததேவ் பச்சைக்கொடி காட்டினாலும், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Posted in agri-marketing, Agriculture, Bengal, Biz, Business, Center, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Direct, Economy, Farmers, Forward Bloc, Fresh, Govt, Haldibari, infrastructure, job, Jobs, Marketing, Middlemen, Parganas, peasants, Purchases, Purchasing, Reliance, Shop, Shops, Small Biz, State, Vendors, Wal-Mart, Walmart, WB, West Bengal, WestBengal, workers | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்?

இரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

உங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.

1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா?

2. தூக்கம் அதிகமா? குறைவா? படுத்தவுடன் தாமதமாகிறதா? அயர்ந்த தூக்கம் ஏற்படுகிறதா? பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா? தூக்கத்தை எது தடைசெய்கிறது?

3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? விழித்ததும் தெளிவு காண்கிறதா? சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா? பல்வேறு காரணங்களா?

நீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.

மனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது? உடலா? மனமா? எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.

இன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.

நீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.

தூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.

சோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.

Posted in Aches, Active, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bodyaches, Boredom, Brain, Cures, energy, Exhausted, Exhaustion, fatigue, Fresh, Health, Healthcare, Hunger, Hungry, Medicines, Pain, Positive, Strength, Thinking, Tired, weary | Leave a Comment »

Wal-mart entry into Retail business in India – Impact & Globalization

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்

மா.பா. குருசாமி

நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.

வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.

இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.

சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.

இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.

மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.

அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.

நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.

நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.

இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.

வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.

ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.

ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.

இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.

பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.

குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.

நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.

(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).

==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?

ச. குப்பன்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.

அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.

அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.

இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.

குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?

இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.

வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.

விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================

Posted in Agriculture, Analysis, Backgrounder, Bankruptcy, Banks, Bharti, Birla, Biz, Brinjal, Business, Cane, Capitalism, Collars, Commerce, Consumer, Customer, Diesel, EB, Eggplant, Electricity, Engine, Expenses, Farmer, Finance, Food, Fresh, Fruits, Futures, Globalization, harvest, harvesting, Impact, Income, India, Industry, Inflation, Investment, Irrigation, Lake, Loan, Manufacturing, markets, Motor, Operations, Options, Plants, Power, Premium, Prices, Rain, Recession, Reliance, retail, sales, Small Business, Small scale, SSI, Sugar, Sugarcane, Tap, Trading, Vegetables, Venture, Wal-Mart, Walmart, Water | 1 Comment »

Reliance Fresh – Impact, Job growth, Details, Statistics, Benefits & Information

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 25, 2007

தமிழக சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, பிப். 25: தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்களது சில்லறை வர்த்தகத்தின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பலன் பெறும் வகையில் தங்களது சில்லறை வர்த்தகம் நடைபெறும் என அந்நிறுவன வட்டாரங்கள் உறுதி கூறின.

தற்போது சென்னையில் 12 இடங்களில் “ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ என்கிற பெயரில் காய்கறிகள் -பழங்கள் -அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எந்தெந்த இடங்களில்…:

  1. அண்ணா நகரில்
  2. 2 இடங்களிலும்,
  3. முகப்பேர்,
  4. புரசைவாக்கம்,
  5. அசோக் நகர்,
  6. தியாகராய நகர்,
  7. திருவான்மியூர்,
  8. அடையாறு
  9. நந்தனம் சேமியர்ஸ் சாலை,
  10. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை,
  11. வளசரவாக்கம்,
  12. சூளைமேடு ஆகிய பகுதிகளில் தலா ஓர் இடத்திலுமாக இந்த 12 நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையங்களால் சிறு வியாபாரிகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.

விவசாயிகளுக்கு உதவி: விவசாயிகள் வாழும் பகுதிகளிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு செல்ல ஆகும் வண்டிச் செலவு, விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைத்தரகர்களின் மூலம் விற்கும்போது பல இடங்களில் பணம் உடனடியாக விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

விவசாயிகள் எந்தெந்த காலகட்டங்களில் எத்தகைய காய்கறிகளைப் பயிரிடலாம்? எத்தகைய விதைகள், இதர இடுபொருள்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்கும்? மக்கள் அதிகமாக விரும்பும் காய்கறிகள் எவை என்பன போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் ஃரெஷ் அவ்வப்போது தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது.

நுகர்வோருக்கு நியாய விலை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால், அதிக லாபம் வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான விலைக்கு விற்க எங்களால் முடிகிறது என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் உள்ள 12 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் 761 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர, கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் 411 பேர் வேலை செய்கின்றனர். புழலில் உள்ள விநியோக மையத்தில் 447 பேரும், 10 இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் 65 பேரும் பணியாற்றுகின்றனர்.

யாருக்கும் போட்டி இல்லை

சென்னை, பிப். 25: ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 15 நாள்களில் சராசரியாக நாள்தோறும் 13 ஆயிரம் பேர் தான் எங்களின் 12 கடைகளிலும் பொருள்களை வாங்கி உள்ளனர். இதில் இருந்தே எங்கள் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை. எவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும் என்றனர் அவர்கள்.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களைப் போலவே ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே விற்பனையகங்களை நடத்துகின்றன. அந்நிறுவனங்களைப் போலவே, நாங்களும் யாருடைய தொழிலையும் பாதிக்கவில்லை என அவர்கள் கூறினர்.

================================================================
சலுகை விலையில் பொருள்களை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ்-நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ரகசிய உடன்பாடு

சென்னை, மார்ச் 29: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 40 சதவீதம் சலுகை விலையில், குறைவான விலைக்கு பொருள்களை கொள்முதல் செய்கிறது. இதற்காக, சில நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிப்போம்.

ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையில் 14 சில்லறை காய்கறிக் கடைகளைத் திறந்து உள்ளது. மேலும், ஏதாவது கடையைத் திறந்தால் அப்பகுதி வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

மே 5-ல் வணிகர் மாநாடு: மே மாதம் 5-ம் தேதி வணிகர் தின மாநாட்டை சேலத்தில் நடத்துகிறோம்.

ஆன்-லைன் வர்த்தகம், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை விலைவாசி உயர்வுக்குக் காரணம். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டங்களை செப்டம்பர் இறுதியில் மேற்கொள்வோம் என்றார் வெள்ளையன்.

Posted in Backgrounder, Benefits, Biz, Business, Buyer, Chennai, Commerce, Competition, Consumer, Details, Economy, Employment, Finance, Fresh, Fruits, Growth, Healthy, Impact, Information, Jobs, Madras, Market, Opportunity, Reliance, Reliance Fresh, Seller, Statistics, Vegetables, Vendors | Leave a Comment »