Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Veeramani’ Category

DK vs PMK – DMK, Kalainjar Karunanidhi x Pattali Makkal Katchi Ramadoss

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு!

கலி. பூங்குன்றன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

வீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).

இதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா? இவருக்குத் தகுதி உண்டா? என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.

என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நாங்கள் யார் தெரியுமா? என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.

தோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்!

தனிப்பட்ட பிரச்சினையா?
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும்? காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே!

பிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு? அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா? விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா?

ஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே! திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன்? திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்? அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா? தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.

உண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா? உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.

அதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு? இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.

எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா? என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.
நாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.

பெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே!

எந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.

யாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம்?. ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

திராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா?
திராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.

திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என்ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.

தந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.
நீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா? வெகுதூரம் போவானேன்? பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா? அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ!

பல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.

சமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா? அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா? திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா?

தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம்! ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.

பார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்?
பெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே? பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா?

கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா?

எல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.
(துக்ளக், 15.4.1988)

இப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கைக்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!
பார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம்! பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது!

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)

பேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா? பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா?

வி.பி. சிங் அழுகிய பழமாம்!
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.

ஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா?

இதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.

அதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே! அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே!

மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.

ஆள்காட்டி வேலை
ஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க!).

பிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி! (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? புலிகளின் சரணாகதி என்பதுதான்.

அதைவிட ஒரு துரோகம்! (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா!) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்!

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).

இது துரோகமா? அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா?

10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா?
இத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே! ஆனால், இவருடைய நிலை என்ன? இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது!

இதோ ஒரு எம்டன் குண்டு!
1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா? சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.

போயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா? என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.

சரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா? அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்…! என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா? நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

இதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.

1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.

அண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆசிரியர் வீரமணிபற்றி எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.

வருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே! திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா?

31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா? நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ! அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா? (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).

பா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்!).
69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.

விடுதலை ஆக தூதுவிட்டது யார்?
எப்படியிருக்கிறது கதை? எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்!

யார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.

கலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாட்டையடி – நினைவிருக்கிறதா?
அரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு! என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.

அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே! அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே!

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்!

நானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்! என்று பறைசாற்றியவரும் இவரே!

அடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ!

எவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.

விபூதி வீரமுத்துசாமி பாணியா?
கருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம்! அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்!

Posted in Anbumani, Anna, Contradictions, DK, Dravidar Kazhagam, EVR, family, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MGR, MK, Party, Pattali Makkal Katchi, Periyar, PMK, Politics, Ramadoss, TamilNadu, Veeramani, Viduthalai | 2 Comments »

What is behind DMK’s war of words with Congress? – Dinamani ‘Ajathasathru’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கருணாநிதி கோபப்படுவது ஏன்?

 அஜாத சத்ரு

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.

“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி?” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன்? அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே! இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார்? இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி?” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்?” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.

காங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை?

காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.

காங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால்? அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்?

கருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா?

Posted in Ajathasathru, Alliance, Andhra, Andhrapradesh, AP, Arunkumar, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Dismiss, DK, DMDK, DMK, Govt, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Modi, Sonia, support, Veeramani, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Interview with Dravidar Kazhagam Ki Veeramani: EVR Periyar’s Legacy

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

“வீரமணி அவர்களே, இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்கள்?”
கோடை பண்பலை வானொலி நிலையத்தார் கேள்வி

தமிழர் தலைவர் அளித்த பதில் என்ன?

வீரமணியார் அவர்கள் இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறார் என்று கோடை பண்பலை வானொலி நிலையத்தார் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்தார்.

21-1-2008 அன்று கோடை பண்பலை வானொலிக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அய்யாவால் பார்க்கமுடியவில்லையே

அய்யா அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிறைவேற்றத்தை அய்யா அவர்கள் பார்க்காமலே கண் மூடினார்.

அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு எங்களை மாதிரி இருக்கின்ற எளியோர்கள் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

அய்ந்தாம் முறை முதல்வராக கலைஞர்

அய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் திட்டமாக கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையைக் கூட்டி முதல் திட்டமாக அதை அவர் நிறைவேற்றியிருப்பது பாருங்கள். அது மிகப்பெரிய சாதனை வெற்றி. இது ஏதோ நான்கு பேருக்கு அர்ச்சகர் வேலை என்பது அல்ல. அதில்தான் சமுத்துவ சமுதாயம் அமைந்திருக்கின்றது.

மீதி இடங்களில் எல்லாம் ஜாதியினுடைய சின்னங்கள் இருக்கும். இன்னும் ஜாதித் திருமணங்கள் அதன் அடை யாளங்கள் குறியீடுகள் எல்லாம் இருக்கும். ஆனால் அதன் ஆதிக்கம் பச்சையாக சட்டப்பூர்வமாக இருக்கிறது. இன்னமும் சமுதாய அனுபவப்பூர்வமாக இருக்கிறது.

ஜாதியை ஒழிக்க

இரட்டைக் குவளை முறைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடக் கூடிய நிலைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரப் பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட, அரசியல் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட முறை அங்குதான் இருந்தது.

அதனால்தான் பெரியார் அவர்கள் முழு வெற்றி அடைய வேண்டும் என்றால் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு வைத்த கோரிக்கையில், நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.

பெரியார் அவர்களால் முதல் சட்டத் திருத்தம்

பெரியார் காலத்தில் பல போராட்டங்களில் அவர் வெற்றி அடைந்தார். மத்திய அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் இல்லை. அது அவ்வளவு சீக்கிரமாக வருமா? என்று பலபேர் நினைத்தார்கள். அரசியல் சட்ட முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது – 1951-ஆம் ஆண்டு. கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னவுடனே தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்குப் பிறகு அவருடைய 76-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

69 சதவிகித இட ஒதுக்கீடு

69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வந்தது. தந்தை பெரியார் அவர்கள் 50 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அவர் அரசியலை விட்டே வெளியேறி ஒரு சமுதாய இயக்கத்தை நிலை நிறுத்தி அவர் போராடியதே 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகத்தான். இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் பார்க்கலாம்.

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இன்னும் 50 சதவிகிதம் வரவில்லை. பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் பெரிய அளவிற்கு உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார்கள்.

எங்களுடைய காலத்தில் மத்திய அரசு மண்டல் குழு பரிந்துரையை எங்களது தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அமல்படுத்தியது. மத்திய அரசில் இட ஒதுக்கீடு பெற எங்களுடைய காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம்.

76-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வெற்றி

அதேபோல அரசியல் சட்ட திருத்தத்தில் 76-ஆவது திருத்தத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். அதேபோல பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இன்றைக்கு வந்திருக் கிறது. தந்தை பெரியாருடைய கொள்கைத் திட்டங்கள் எல்லாம் ஒரு தொடர் வெற்றிகளாக இன்றைக்கு வந்து கொண்டி ருக்கின்றன.
பெரியாருடைய காலத்திலும் வெற்றிகள் வந்திருக்கின்றன. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலும் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் – மணியம்மையார் காலத்தில் வெற்றி

கேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களுடைய காலத்தில் தொடர்ந்து வெற்றிகள் வந்திருக் கின்றன. இதற்கு அடுத்து தலைவராக அய்யா நீங்கள் வந்திருக்கின் றீர்கள்.
வீரமணியார் அவர்களுடைய பணி இனி எப்படி?

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களைத் தாண்டி வீரமணியார் அவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுடைய பெயரும், புகழுக்கும் இன்னொரு மகுடம் சூட்டுவது போல் அல்லது மகுடத்தில் ஒளி முத்துக்களை, வைரங்களை வைப்பதுபோல வீரமணியார் அவர்கள் தனித்து நின்று இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார்?

தமிழர் தலைவர்: வீரமணி தனித்துச் சாதித்தார் என்ற சரித்திரம் வரவேண்டும் என்பது வீரமணிக்கு முக்கியமல்ல. பெரியாருடைய பணி முற்றுப்பெறவில்லை. அந்தப் பணி பெரியாரோடு முடிந்துவிட வில்லை. பெரியார் என்பது ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் வருகிற தலைமுறைக்கு நினைவூட்டி, அவ்வப்பொழுது தேவைப்படுகிற செய்திகளை, செயல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பணியை நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம். அவர்களுடைய கொள்கைகள் பரவுவதற்கு என் னென்ன திட்டங்களைச் செய்யவேண்டுமோ? அதைச் செய்கி றோம்.

தனி மனிதர் சாதித்தார் என்று சொல்லமாட்டேன்

அதில் ஒன்றுதான் நான் சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னதுபோல் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரையிலே, கல்விக் கூடங்களாகவும், கருத்து அறிவிப்புக்குரிய நிகழ்வுகளாகவும், ஏடுகளாகவும் பிரச்சாரம், செயல்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.

பெரியாருக்குப் பின் இத்தகைய செயல்பாடுகளை தனி மனிதர் ஒருவர் சாதித்தார் என்று நான் சொல்லமாட்டேன். பெரியாருடைய அந்தத் தாக்கம், பெரியாருடைய கொள்கைகள், அதனுடைய விளைவுகள்தான் இப்பொழுது வந்திருக்கின்றன.

இப்பொழுது மார்க்சியம் என்று சொன்னால் மார்க்சிய சிந்தனைக் கருத்துகள் பல ரூபங்களில் பல நாடுகளில் பல பேரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

`பெரியாரியம் மனித நேயம்

`பெரியாரியம் என்ற கொள்கை இருக்கிறது பாருங்கள், அது மானிடப்பற்று, மனித நேயம், மூடநம்பிக்கைக்கு எதிரானது, பேதத்திற்கு எதிரான.து, பெண்ணடிமைக்கு எதிரானது. இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கெங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கங்கு சேர்க்கப்படக்கூடிய தூதுவர்களாக தொழிலாளர்களாக நாங்கள் எங்களை ஆக்கிக் கொள்வோம்.

அதுதான் எங்களுடைய குறிக்கோள்.
கோடை பண்பலை நேயர்கள் சார்பில்
வானொலி: உங்களுடைய மனித தூதுப்பணி சிறக்க கோடை பண்பலை நேயர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்..

தமிழர் தலைவர்: ரொம்ப மகிழ்ச்சி. நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டீர்கள். சிறப்பான அளவுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு உங்களுடைய பணிகளுக்கு நன்றி, எங்களுடைய நல் வாழ்த்துகள்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Posted in Brahminism, Castes, DK, Dravidar, Dravidian, EVR, Legacy, Periyaar, Periyar, Veeramani, Viramani | Leave a Comment »

Nadigavel MR Radha, Pralayan street theater performances & EVR Periyar – Ki Veeramani on Chennai Sangamam

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

எம்.ஆர். ராதா ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே அழைத்துச் சென்றவர்
மற்ற நடிகர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றவர்கள்

எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

பிரளயன் அவர்கள் மிக அழகாக எதையுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.

அதற்கு முன்னாலே ஜாதியைப்பற்றி அவர்கள் நடத்திய நாடகம் மிக ஆழமான கருத்துகளைத் தொட்ட ஒன்றாகும். அவரைப்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்து எங்களுடைய ஏடுகளிலே கூட எழுதியிருக்கின்றேன்.

அரைமணி நேரத்தில் நல்ல நாடகம்

அதைக்கூட பெரியார் திடலிலே அழைத்து செய்யவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையிலே பார்க்கும்பொழுது ஒரு 30 மணித்துளி களிலே குடும்பச் சூழல்கள் என்ன என்பதை அவர்கள் நாடக வாயிலாகக் காட்டினார்கள்.

அந்த நாடகத்தில் நடித்தத் தோழியரிடம் நான் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்ற பொழுது ஒரு எண்ணம்தான் என்னு டைய மனதிலே ஓடிற்று.

பெரியாருடைய சிந்தனைகளுக்கு அப்படியே உருவம் கொடுத்ததைப் போல இருந்தது – உங்களுடைய சம உரிமை மாற்றம் என்பது.

இருவருக்கும் சம உரிமை

சமஉரிமை என்று சொல்லுகின்ற நேரத்திலே கூட இப்பொழுது எப்படித் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நீங்கள் இரண்டு காட்சிகளாகக் காட்டினீர்கள்.

உரிமை என்பது அடிமையாக இருக்கக் கூடாது என்பது இரு பாலாருக்கும் உரியது. அந்த அடிமைத் தனம் ஒரு சாராருக்குத்தான் உரியது என்று நினைப்பதோ அல்லது உரிமை என்ற பெயராலே எல்லையற்ற நிலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்வது அதன்மூலமாக மற்றவர்கள் வெறுப்பது என்பது போன்ற ஒரு நிலையோ இல்லை.

பெரியாரின் பெண்ணுரிமை கருத்து

இருவரும் ஒத்துப் போதல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் சிந்திந்து கருத்துக்களை சொன்னார்கள். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் பல நேரங்களிலே நாடகத்தின் மூலமாகச் சொன்ன கருத்துகள் புரட்சிகரமான சிந்தனைகளாக இருந்தாலும் அந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு ஒரு மூலம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, கரு எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லும்பொழுது அது ஆழமான – தந்தை பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமை தத்துவ கருத்துகள்.

படிக்காதவர்தான் கலைவாணர்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நகைச்சுவைகள் எல்லாம் அறிவார்ந்த நகைச் சுவைகள் – சமுதாய மாற்றத்தை மய்யப்படுத்துகின்ற நகைச்சுவையாக இருந்தது.

அதிகம் படிக்காத கலைவாணர் அவர்கள் எப்படி ஆழமான சமூக விஞ்ஞானி போல இருந்து நகைச்சுவைச் கருத்துகளை அவருடைய குழுவின் மூலமாகப் பரப்பினார், திரைப்படங்கள் மூலமாகவும் பரப்பினார். உங்களுக்கு ஆசிரியர் யார்? என்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடத்திலே கேட்டபொழுது, அவர் ஒரு ஆசிரியரைக் காண்பித்தார்.

பச்சை அட்டைக் குடிஅரசு என் ஆசிரியர்

யார் அந்த ஆசிரியர் என்று சொல்லும்பொழுது ஒரு பச்சை அட்டை குடிஅரசை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அந்தப் புரட்சிக்கரமான ஏட்டைக் காட்டி இவர்தான் எனக்கு ஆசிரியர். இதை நாங்கள் வாராவாரம் படித்துவிட்டுத்தான், இதிலே இருக்கின்ற கருத்துகளை எங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். மற்றவர்களைத் திருத்துவதற்காக, சமுதாய மாற்றத்திற்காக செய்து கொண்டு வருகின்றோம் என்று சொன்னார்கள்.

சுயசிந்தனையாளர் எம்.ஆர். ராதா

அதுபோல ராதா அவர்களைப் பொறுத்தவரையிலே, கற்றலினும் கேட்டலே நன்று என்று சொல்லக்கூடிய அளவிலே ஆழமாக ஒரு கருத்தைக் கேட்பார். உடனே அதை எப்படி உருவகப்படுத்தி செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு, ரொம்ப சுய சிந்தனையாளராக தன்னை ஆக்கிக் கொள்வார்.

தந்தை பெரியார் அவர்கள் – எப்படி ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளரோ, அந்த ஒப்பற்ற சிந்தனையாளருக்கு, ஒரு நல்ல சுயமாக சிந்திக்கக் கூடிய ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த கலைஞராக நடிகவேள் ராதா அவர்கள் கிடைத்தார்கள்.
ராதா அவர்களப்பற்றி எனக்கு முன்னாலே பேசிய கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் மிக அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

நடிகவேள் ராதா அவர்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஆழமான சிந்தனையுள்ளவர்.

சினிமா துறையை கடுமையாகச் சாடக்கூடியவர்

சினிமாத்துறையை மிகக் கடுமையாகச் சாடக்கூடிய தந்தை பெரியார், பெரியார் திடலில் நடிகவேள் ராதா அவர்களுடைய பெயராலே ஒரு மன்றத்தையே அமைத்தார். அந்த மன்றத்தை தந்தை பெரியார் அவர்களே திறந்தார்கள்.
அவர் எப்படி அங்கீகரித்தார் என்பதை அந்த மன்ற அடிக்கல் நாட்டு விழாவின் பொழுதும் சரி, ராதா மன்றத்தைத் திறந்த போதும் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

ராதா வர மறுத்தார்

ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தை பெரியார் அமைத்தார். நடிகவேள் ராதா மறுத்தார். . எனது பெயரால் மன்றம் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். ராதா மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குக் கூட வர மறுத்தார். பெரியார் திடலில் ராதா மன்றத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

ராதா ஏன் வரவில்லை என்று அய்யா அவர்கள் கேட்டு, பிறகு கடுமையாகச் சொல்லி, ஏன் ராதா இங்கு வர கூச்சப்படுகிறார்? அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய வீடு அப்பொழுது தேனாம்பேட்டையில் இருந்தது.

`நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும்!`

என்னுடைய வண்டியை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மேடையில் உட்கார வைத்தோம்.

அவரும் தனக்கு இதற்குத் தகுதி உண்டா? என்று கேட்டு தன்னடக்கத்தோடு, கூச்சப்பட்டு மேடையில் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்திலே தந்தை பெரியார் சொன்னார் – நடிகவேள் ராதா அவர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை. நான் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டி விடுபவன் அல்ல.

நான் ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தைத் திறக்கிறேன் என்று சொன்னால், இது நடிகவேள் ராதா அவர்களுக்காக அமைக்கவில்லை. நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலமாக – ஒரு கொள்கையோடு இருந்தால், அவர்களைப் பாராட்டுவதற்கு நாட்டிலே ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்.

மற்ற நடிகர்கள் மக்களுக்கு ஏற்றாற்போல

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஏன் பாராட்டுகிறேன்? நடிகவேள் ராதா அவர்களை ஏன் பாராட்டுகிறேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் ரசிகர்கள், பார்வையாளர்கள். பார்ப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டு அவர்கள் பின்னாலே போகக் கூடியவர்களாகத்தான் நாடகக் கலைஞராக இருந்தவர்கள், நடிகர்கள் எல்லாம்.

ராதா மட்டும்தான் மக்களை தன் பின்னாலே அழைத்தவர்

ஆனால், ராதா ஒருவர்தான் மக்கள் பின்னாலே போகாமல்,. மக்களைத் தன் பின்னாலே அழைத்துக் கொண்டு வந்து ஒரு புரட்சிக்கரமான சிந்தனை உள்ள நடிகர் என்ற அந்தச் சிறப்புக்காகத்தான், ராதா பெயர், காலத்தை வென்று என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே அவருக்கு மன்றம் வைக்கிறோம் என்று சொன்னார்கள்.

சிலபேர் சலசலப்பு காட்டிய நேரத்திலேகூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமலே, சிறப்பாக அய்யா அவர்கள் அதை செய்தார்கள்.

பெரியார் அங்கீகாரம்

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்? தந்தை பெரியார் அவர்களே அவரை அங்கீகரித்தார். எம்.ஆர். ராதா அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நினைவையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு அந்த மன்றம் புதுப்பிக் கப்பட்டு, என்றைக்கும் அந்தப் பெயர், காலம் காலமாக நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு ஒரு அருமையான மன்றமாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினுடைய அங்கீகாரம்.

விருதுகளுக்கு மேலானது

அதுவும் பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, மேலானது. அதற்கு என்ன காரணம்? ராதா அவர்கள் ஆங்கில வார்த்தையை சரளமாகப் பேசுவார். ரொம்பப்பேருக்குத் தெரியாது, அவர் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் என்று. அவர் எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதே சிறைச்சாலைக்குப் போன பிற்பாடு, எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார்.

சிறைச்சாலையிலே புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லி ஆங்கிலத்தைப் படித்தார். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை எப்படிப் படிப்பார்களோ அது மாதிரி எல்லாம் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தை அவர்கள் படித்தார்கள்.

பொது அறிவு அதிகமுள்ளவர்

ஆனால், பொது அறிவு அதிகமுள்ளவர். நம்முடைய நாட்டிலே படிப்பிற்கும், பொது அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்ட யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால், எப்படித் தலைவர்களிலே தந்தை பெரியார் அவர்களைக் காட்டுகின்றார்களோ, அதுபோல நடிகர்களில் நடிகவேள்ராதா அவர்களைத்தான் காட்டவேண்டும்.
அந்த அளவிற்கு அவர்கள் தெளிவானவர். அவர் ஒரு நல்ல சுயமரியாதைக்காரர். நல்ல துணிச்சல்காரர். அவருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது மட்டும் முக்கியமல்ல. நல்ல பொது அறிவோடு இருக்கிறார்கள். நல்ல சுயமரியாதைக்காரராக அவர்கள் இருந்தார்கள். சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தார்கள்.

கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்

கலையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினார்கள். கலை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டுமே தவிர கலை ஒரு வியைட்டாகப் பயன்படக் கூடாது என்று கருதியவர். ஒரு திரைப்படத்தை ஒருவர் 3 மணிநேரம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

இங்கு பிரளயன் அவர்கள் நடத்திய அரைமணி நேர வீதி நாடகத்தைப் பார்த்தோம். உடனே அதிலிருந்து பாடத்தோடு வெளியே போகிறோம். அற்புதமான செய்தியை மனதிற்குள் வாங்கிக் கொள்கிறோம்.

கலைத்துறையில் எதிர்நீச்சல்

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நாடகத்தைப் பார்த்து மாறாவதர்களே கிடையாது. அஸ்திவாரத்தை ஆட்டி விடுவார். எதிர் நீச்சல் அடித்து கலைத்துறையிலே வாழ்ந்தவர்.

எப்படித் தந்தை பெரியார் அவர்கள் எதிர்நீச்சல் அடித்த வரோ, அதேபோல பெரியாருடைய கொள்கைகளை நாடகத் தில் நடித்து எதிர்நீச்சல் அடித்தவர். அதுமட்டுமல்ல, எல்லா வற்றிலும் அவர் வரலாறு படைத்தவர்.

நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நாடகம்

அவருக்கு எதிர் துறையிலே யார் நாடகம் நடத்திக் கொண் டிருந்தார்கள் என்று சொன்னால் நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம். அவருடைய பெருமை எல்லாம் என்னவென்றால் ஏகப்பட்ட காட்சி ஜோடனைகள், சீன்கள் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். உடனே மக்கள் அதைப் பார்த்து பிரமிக்க வேண்டும். அசர வேண்டும் என்று கருதி அவர் புராண நாடகங்களைத்தான் போடுவார். அவர் மறந்தும் சமூக நாடகங்கள் போட மாட்டேன் என்று புராண நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்தவர். நடிகவேள் ராதா அவர்கள் நேர் மாறான கொள்கை உடையவர்.

சமூக நாடகம்தான் போடுவார்

நான் எதுவும் புராண நாடகம் போடமாட்டேன். சமூக நாடகம்தான் போடுவேன் என்று செயல்படுபவர் நடிகவேள் ராதா. இதுவரையில் நாடகத்தில் புரட்சி, நாடகத்தில் புரட்சி என்று சொல்லுகிறார்கள். வசனத்தில் மட்டும் அல்ல, நாடக அமைப்பிலும் புரட்சி செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள்.

இங்கே எப்படி, ஒரே ஒரு திரையைக் கட்டி ஒரு அரை மணிநேர நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்ட முடியும் என்ற ஒரு நிலையை இன்றைக்கு வீதி நாடகத்தில் பார்க் கின்றோம்.

எதிர்ப்புகள் – மறக்கமுடியாத ஒன்று

ராதா நாடகத்தில் இரண்டே இரண்டு திரை இருக்கும் அவ்வளவுதான். முதலில் ஒரு பச்சைக் கலர் படுதாவை எடுத்து விடுவார். அந்த ஸ்கிரினிலேயே காடு, அரண்மனை எல்லாம் இருக்கும். தனித்தனி சீன்கள் எல்லாம் அவருக்குத் தேவையில்லை.

விழுப்புரத்தில் பெரிய கலவரம்

ராதா அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்த விதம் இருக்கிறதே அது மறக்கமுடியாத ஒன்றாகும். எழுத்தாளர் பாமரன் அவர்கள் பேசும்பொழுது சொன்ன மாதிரி அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான் அதுவும் விழுப்புரத்திலே பெரிய கலவரம் எல்லாம் நடந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் தடை வாங்குவார்கள். அந்தத் தடை நீக்குவதற்கு அவர் உயர்நீதி மன்றம் போவார். அங்கே அவர் வழக்கறிஞரை வைத்திருப்பார். உடனே அந்தத் தடையை நீக்கி உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து ராதா அவர்கள் நாடகம் நடத்துவார்.

எம்.கே. நம்பியார்தான் வழக்கறிஞர்

காவல்துறை நடிகவேள் ராதா நாடகத்திற்குத் தடை போடும். இந்த ஊரில் தூக்குமேடை நாடகம் நடத்தத் தடை – அனுமதியில்லை என்று தடை போடுவார்கள்.

இன்றைக்கு டில்லி உச்சநீதிமன்றத்திலே பிரபலமாக இருக்கக் கூடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் எம்.கே. நம்பியார் என்பவர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேயுள்ள சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அவர்தான் அந்த காலத்திலேயே பிரபலமான வழக்கறிஞர். ராதா அவர்கள் நம்பியாரிடத்திலே சொல்லுவார். அவர் இவருக்கு நிரந்தர வழக்கறிஞர் மாதிரியானவர். உடனே நாடகத்திற்குப் போடப்பட்ட தடையை நீக்கி ஒரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.

தூக்கு மேடைக்குத் தடையா? மலாயா கணபதி

அதுவரைக்கும் நாடகம் நடத்தாமல் இருக்கமாட்டார். தூக்குமேடை நாடகத்திற்கு இன்றைக்கு அனுமதி இல்லை என்று சொன்னவுடனே அன்று மாலையே மலாயா கணபதி என்ற நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார்.

அந்த நாடகத்தைப் பார்த்தால் தூக்குமேடை நாடகம் என்னவோ அதேதான் இருக்கும் ஆரம்பத்தில். சரி மலாயா கணபதி நாடகத்திற்குத் தடை என்று சொன்னால் இன்னொரு பெயரைச் சொல்லுவார்.

தந்தை பெரியார் தலைமையில் நாடகம்

ஒரு ஊரில் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நாடகத்தைப் போட்டிருக்கிறார் ராதா அவர்கள். ராதா அவர்களுடைய சமயோசித சிந்தனை என்பது பட்டென்று வரும்.

அய்யா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். உங்களுக்குத் தெரியும். ஒரு நான்கைந்து சீன்கள் முடிந்தவுடனே பாராட்டிப் பேசுவார்கள். அல்லது நாடக இடைவேளையின் பொழுது பாராட்டிப் பேசுவார்கள்.

ஏ ராதா!

பாதி நாடகம் முடிந்தவுடனே இடைவேளை நேரத்தில், இப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பேசுவார் என்று ராதா அவர்கள் அறிவித்தார். நாடகம் பார்க்க வந்த காங்கிரஸ்காரர்கள் இரண்டுபேர்கள் திடீரென்று எழுந்திருந்து ஏ ராதா! ரொம்ப ஒருமையிலே – உன் நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே யாருடைய பேச்சையும் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை. நாடகத்தை தொடர்ந்து நடத்து என்று சொன்னார்கள்.

ஒரே பரபரப்பு

உடனே ஒரே பரபரப்பு. ராதா வருகிறார். ஒலிபெருக்கியை வாங்குகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். நேருக்கு நேர் பேசுவார் – துணிச்சலாக என்ன சொல்றீங்க என்று கேட்டார். இல்லை. உங்களுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே இவருடைய பேச்சை கேட்பதற்காக நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.

நாடகம் முடிந்து போய்விட்டது

அப்படியா? நாடகம் முடிந்துபோய்விட்டது (சிரிப்பு – கைதட்டல்). போகிறவர்கள் போகலாம். இருக்கிறவர்கள் என்றால் அவருடைய பேச்சுக்களை கேட்கலாம். அவ்வளவுதான் என்று எம்.ஆர். ராதா அவர்கள் சொன்னார். டிக்கெட் வாங்கி னீர்கள் அல்லவா? நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள்? எல்லோரும் உட்கார்ந்தார்கள். அய்யா அவர்கள் பேசிய பின்பு அதற்கு பிறகு நாடகம் தொடர்ந்து நடந்தது.

சமயோசித புத்தி

இது மாதிரி சமயோசிதமான அவருடைய துணிச்சல் இருக்கிறது பாருங்கள். அது பாராட்டுக்குரியது. அவருடைய நாடகங்களில் சில நேரங்களில் கடுமையான வசனத்தைக் கூட சொல்லுவார். ஒருமுறை நடிகவேள் ராதா அவர்களுடைய நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் அய்.சி.எஸ். உயர் நீதிமன்ற நீதிபதி. ராதா அவர்களுடைய நாடகங்களை நேரடியாக வந்து பல நேரங்களில் பாராட்டியவர்.

ராதா நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை

ஏ.எஸ்.பி. அய்யர் நாடகத்திற்கு தலைமை தாங்கியிருக்கின் றார். இரத்தக் கண்ணீர் நாடகத்தில் ராதா அவர்கள் நிறைய நேரம் உட்கார்ந்து வசனம் பேசக்கூடிய வாய்ப்பு வரும். அப்படி பேசக் கூடிய நேரத்திலே கேள்வி கேட்டு பதில் சொல்லக்கூடிய நிலை வரும். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அன்றாட நிகழ்ச்சி கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். தன்னுடைய கருத்துகளை சொல்லுவதற்கு வசதியாக வைத்துவிடுவார்.

ஒருவர் கேள்வி கேட்பார். ராதா பதில் சொல்லுவார். திரைப் படத்தைபற்றி ராதா சொல்லுவார். யாருடா? இவர்கள் என்று வேலைக்காரரைப் பார்த்து ராதா கேட்பார். புது டைரக்டர்கள் எல்லாம் இப்பொழுது படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று வேலைக்காரர் சொல்லுவார். உடனே ராதா சொல்லுவார் நானும் ஒரு காலத்தில் படம் எடுத்தவன்தான்டா, நானும் ரொம்ப சிறப்பாக இருந்தவன்தான் என்று சொல்லுவார். நானும் நடிக்கிறவன்தான்டா, இப்பொழுதும் நடிக்கிறவன்தான்டா, நானும் படம் எடுப்பேன் என்று ராதா சொல்லுவார். அந்த வேலைக்காரர் சொல்லுவார். நீங்கள் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கேட்பார். அதற்கு ராதா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.

பார்ப்பான் – பார்ப்பான்

எவன் பார்ப்பான்? என்று வேலைக்காரர் கேட்பார். பார்ப்பான் பார்ப்பான் என்று நடிகவேள் ராதா பதில் சொன்னார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு) . பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னார். ஏ.எஸ்.பி. அய்யர் அந்த மேடையில் இருக்கின்றார். இது மாதிரி சமயோசிதமாக பதில் சொல்லக்கூடியவர் நடிகவேள் ராதா. (சிரிப்பு கைதட்டல்) ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. கலைக்கப் படுகிறது. எங்களையெல்லாம் கமிசனர் அலுவலகத்தில் கைது செய்து ஒவ்வொருவராகக் கொண்டு வருகின்றார்கள்.

நடிகவேள் ராதா அவர்களையும் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணியளவில் கைது பண்ணிக் கொண்டு வந்தார்கள். இங்கே பேசிய பாமரன் அவர்கள்கூட அதை எடுத்துச் சொன்னார்.

யார் இந்த அய்.ஜி.?

எல்லோரையும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல அழைத்து வந்தார்கள் கமிசனர் அலுவலகத்திற்கு. போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருக்கின்ற படங்களை எல்லாம் பார்த் துக் கொண்டு வந்தார். இது யார்? என்று கேட்டுக் கொண்டே வந்தார். இவர் அந்த அய்.ஜி., இந்த அய்.ஜி. என்று சொன்னார்.

ஆமாம் தாடி வைத்திருக்கிறாரே இவர் எப்பொழுது அய்.ஜி ஆனார் என்று கேட்டார். திருவள்ளுவர் படம் மாட்டப்பட் டிருக்கின்றது. அதைத்தான் ராதா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிறகு எங்களையெல்லாம் சிறைச்சாலைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு அவரிடம் பேசிக் கொண்டி ருப்போம். பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்.

மிசா கைதிகளுக்கு
எங்களைப் பார்க்க நேர்காணல் என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். சிறையில் இருந்த சில பேரிடம் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்வது பற்றி யோசிப்போம் மிசாவில் கைதியாக வந்த நீங்கள் திரும்பவும் எப்பொழுது வெளியே போவீர்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உங்களை வைத்திருக்கலாம். இப்படியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து போனாலும் முடிந்து போய்விடும். ஆயுள் கைதிகள் கூட எப்பொழுது வெளியே போகப் போகிறார் என்ற ஒரு கால

நிர்ணயம் உண்டு.

மிசாவில் அப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கே வெளியே விட்டாலும் விடுவார்கள். அல்லது எத்தனையோ ஆண்டுகள் கழித்து 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் போகக் கூடிய நிலை இருந் தாலும் இருக்கும். இதில் காலவரையறை எல்லாம் கிடையாது. சட்டப்படி அதற்கு இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ராதாவை அவருடைய துணைவியார் சந்தித்தார்

ஒன்றிரண்டு பேர் இப்படி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத் துப் போனவர்களும் உண்டு. ஏனென்றால் சிறைக்குள் பலகீன மாகக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அப்படியிருக்கும்பொழுது நேர்காணல் வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினர் வந்து சந்திப்பார்கள். ராதா அவர்களை அவருடைய துணைவியார் வந்து சந்தித்தார்.

ராதா அவர்களுக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அவருடைய வீட்டாரை உட்கார வைத்திருந்தார்கள். இவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜெயில் அதிகாரி இருப்பார். இவர்கள் பேசுவதை குறிப்பெடுப்பதற்கு அங்கே சுருக்கெழுத்தாளர் ஒருவர் இருப்பார். அங்கே ஒன்றும் ரகசியமாக பேச முடியாது.

இவர்கள் இல்லாமல் மூன்றாவது ஒருவர் திரைக்கு பின்னாலே வந்து உட்கார்ந்திருப்பார். இதுதான் மிசாவில் நேர்காணலில் இருந்த முறை. அப்படி இருந்துகொண்டிருக்கின்ற பொழுது ராதா அவர்களுக்கு நேர்காணலின் அழைப்பு வந்தது. ராதா அவர்களும் வந்து உட்கார்ந்தார். ராதா அவர்களுடைய துணைவியார் தனலெட்சுமி அவர்கள் வந்தார்கள். அவர்கள் அருகில் அதிகாரிகள் இருந்தார்கள்.

வெகுளியாக கேள்விகேட்டார்

அவர்கள் அப்பாவி – வெகுளியாக இருக்கக் கூடியவர்கள். ஏங்க எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார். நான் என்ன பண்றது? விட்டால் வரப்போகிறேன். நானாகவா வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறேன் என்றார். எப்பொழுது விடுகிறானோ அப்பொழுது வருவேன் என்று சொன்னார். உடனே ராதா அவர்களின் துணைவியார் சொன்னார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தபொழுது சொன்னார் கள். வெள்ளை பேப்பர் கொடுக்கிறார்களாம். அதை வாங்கி நீங்கள் அவர்கள் சொல்லுகிறபடி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடலாமே என்று கேட்டாராம். எங்களுக்கு அந்தப் பக்கம் இண்டர்வியூ. ராதா கேட்டார் என்னான்னு எழுதி கொடுக்கச் சொல்லுகிறாய் என்று.

அதிகாரிக்குச் சிரிப்பு தாங்கமுடியவில்லை

அதிகாரிகள் இவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இனிமேல் அந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அந்த அம்மையார் வெகுளித்தனமாக சொன்னார்.
இதோபார் நான் என்ன பண்ணினேன் – இங்கு என்னை அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பு – தூங்கி கொண்டிருந் தேன் (சிரிப்பு – கைதட்டல்). இனிமேல் நான் தூங்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வரச் சொல்லுகிறாயா என்று கேட்டவுடன் எழுதிக் கொண்டிருந்த சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவை கீழே வைத்து விட்டு அவரும் சிரிக்கிறார். சிறை அதிகாரிகளும் சிரிக்கின்றார்கள்.

கூச்ச, நாச்சம்

அதாவது இயல்பாக கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் யோசனையே இல்லாமல் இயல்பாக பேசினார் ராதா. எதற்கு சிறைக்கு வந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எதற்கு அழைத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. கூட்டிவரச் சொன்னார்கள். இவர்கள் கூட்டி வந்து விட்டார்கள் என்று அவ்வளவு நகைச்சுவையாக ராதா அவர்கள் பதில் சொன்னார்.

இந்தியாவிலேயே ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது நடிகவேள் ராதாவுக்காகவே!

சென்னை சங்கமம் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, ஜன. 26- இந்தியாவிலே நடிகருக்காகவே ஒரு சட்டத்தை இயற்றியது. ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது ராதாவுக்காகத்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை சங்கமம் சார்பில் 14-1-2008 அன்று சென்னை – அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இவ்வளவு நிலைகளிலும் எதிர் நீச்சல் அடித்து கலைத் துறையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராதா அவர்களிடம் சிறந்த மனிதநேயம் இருந்தது.

நடிகவேள் ராதா மனித நேயக்காரர்

நடிகவேள் ராதா அவர்களிடத்திலே இருந்த மனிதநேயம் வேறு யாருக்கும் வராது. அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவ ராகவும், எதிர் நீச்சல் அடிப்பவராகவும், ரொம்பப் பிடிவாதக் கொள்கைக்காரராகவும் இருந்ததெல்லாம் ஒரு அம்சம்.

ஆனால் அவர் யார் யாருக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை விளம்பரமே படுத்திக் கொள்ளாத ஒரு மாமேதையாக, ஒரு வள்ளலாக ராதா அவர்கள் திகழ்ந்தார்கள் (கைதட்டல்). ராதா அவர்களிடம் உதவியைப் பெற்றவர்கள் பல துறையிலே இருக்கிறார்கள்.

கலைஞர்களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, நடிகர் களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, மற்ற பொதுமக்கள் பொது ஸ்தாபனத்திலே இருந்து எல்லோருமே அவரிடம் உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.

எனது கல்விக்கு உதவி செய்திருக்கின்றார்

என்னுடைய வாழ்க்கையிலே கூட, அவருடைய உதவி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு என்றைக்கும் நன்றியோடு நான் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்பதற் காக என்னுடைய நண்பர்கள் முயற்சி செய்த பொழுது, கடலூ ருக்கே வந்து நாடகம் போட்டு அதன்மூலமாக எனக்கு உதவியை செய்தார்கள் (கைதட்டல்). எல்லோருக்கும் அத்தகைய உதவியை செய்வார்.

என்னுடைய மணவிழாவை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினார்கள்.

அய்யா அவர்கள், அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது சொன்னார். கவிஞர் நந்தலாலா அவர்கள் சொன்னமாதிரி, ராதா அவர்களுக்கு ஒரு தனித்த சிந்தனை இருக்கும்.

பொது அறிவிலே தனி முத்திரை

பொது அறிவு, பட்டறிவு அவருடைய முத்திரை அதிலே இருக்கும். என்னுடைய மணவிழாவிலே பேசும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள்: வீரமணிக்கும் அவருடைய வாழ் விணையர் மோகனா அவர்களுக்கும் திருமணத்தை எல்லாம் நடத்தியிருக்கின்றோம். இங்கே தோழர்கள் ஏராளமாக வந்தி ருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு மாதிரி நடைபெறுகிறது.
அய்யா பேசிய குறிப்புகள் இன்னமும் இருக்கின்றன. ஒலி நாடாவில் இருக்கிறது. நான் எப்பொழுதுமே சிக்கனக் காரன். ரொம்ப சுருக்கமாக, சிக்கனமாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்றவன்.

50 ஆண்டுகளுக்கு முன் என் மணவிழா

ஆனால், இங்கு ஏராளமான தோழர்கள் வந்துவிட்டார்கள். நிறையபேர் வந்துவிட்டர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லுகின்றார். நிறையபேர் வந்துவிட்டார்கள். அதனால் நான் ரொம்பத் தாராளமாகவே நடத்திவிட்டேன். நான் நினைத்ததற்கு மேலே இது பெரிதாக நடந்துவிட்டது என்று சொன்னார். வாழ்த்துரையில் ஒவ்வொருவராகப் பேசும்பொழுது நடிகவேள் ராதா அடுத்து பேசினார். இதுமாதிரி அய்யா அவர்கள் சொன்னார். இந்தத் திருமணத்தை ரொம்பத் தாராளமாக நடத்திவிட்டேன் என்று சொன்னார்.

நான்கூட யோசனை பண்ணினேன். என்ன இவ்வளவு தாராள மாக அய்யா அவர்கள் நடத்திவிட்டாரா? அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா? அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா? என்று பார்த்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை.

அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது

ஆனால், அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது என்ன? என்று நினைத்துப் பார்த்தேன். அவர் தாராளம் என்று சொன்னதை ஏதோ ரூபாயைப் பற்றி அல்ல. இதற்கு முன்னாலே சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால். அந்தத் திரு மணத்திற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றால் பெண்ணைக் கொண்டுபோய் ஒளித்து வைத்து விடுவார்கள்.

அதே மாதிரி மாப்பிள்ளை இன்னொரு பக்கம் காணாமல் போவார். கடைசி நேரத்தில்தான் இரண்டு பேரையும் கொண்டு வந்து மேடையிலே நிறுத்தி திருமணம் நடத்தி வைப்பார்கள். இல்லையென்றால் பெண் காணாமல் போய்விடும். ஆள்கள் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

திருமணத்திலே கலவரம் வரும். அது எல்லாம் இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு பேரை அழைத்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருப்பது இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள். அதைத்தான் அவர் தாராளம் என்று சொல்லியி ருக்கின்றார்.

பெண், மாப்பிள்ளையை ரொம்பபேர் வந்து பாராட்டியி ருக்கிறீர்கள். மாநாடு போல பாராட்டியிருக்கிறீர்கள். அதைத் தான் அய்யா அவர்கள் தாராளம் என்று சொல்லியிருக்கின்றார் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள்.

தனித்த சிந்தனைவாதி

இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அவருடைய சிந்தனை என்பது தனித்த சிந்தனை. அதோடு ஆழமான சிந்தனை உள்ளவர். மனித நேயத்தோடு கூடிய சிந்தனை. எல்லோருக்கும் உதவி செய்வார். அதைப் பெரிதாக விளம் பரப்படுத்தமாட்டார்.

சிங்கப்பூரில் ராதா சொன்னார்

ராதா அவர்கள் மலேசியாவில் பேசியிருக்கின்றார். சிங்கப் பூரில் பேசியிருக்கின்றார். சிங்கப்பூரில் ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்.

நீங்கள் நிறையபேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல நடிகர்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். கைதட்டுங்கள். பாராட்டுங்கள். அதோடு எழுந்திருந்து போங்கள். அதற்கு மேலே எங்களிடம் ஏதோ தனித்தன்மையான தன்மை இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

நாங்களும் சாதாரண மனிதர்கள்

நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். நடிர்களும் சாதா ரணமான மனிதர்கள்தான் என்ற சிந்தனையோடு சென்றால் சரி. அதற்கு மாறாக நினைக்கும் பொழுது தான், கோளாறு வருகிறது. இவ்வளவு பச்சையாக நடிகர்களைப் பற்றி அல்லது நடிகர் களுடைய துறையைப்பற்றி சொன்னார்.
ஒரு எதார்த்தவாதியாக இருந்தார். அவர்கள் உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருந்தார்.

நாடகத்தில் அவர் கண்ட எதிர்ப்பு

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் இன்றைக்கு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
திரைப்படங்களிலே அவருடைய உரையாடல் அனைவ ருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் நாடகத் துறையில் கொள் கையைப் பரப்பிய துணிச்சல் அவர் எதிர்ப்புகளை சமாளித்த விதம் சாதாரணமானதல்ல.

யாராவது அவரை அவருடைய நாடகத்தை எதிர்த்து கூச்சல் போட்டால், அவர் எந்த வேசம் போட்டாலும் நேரடியாகப் பதில் சொல்லுவார்.

யாருடா அவன் – திரவுபதிக்கு பிறந்தவன்?

யாருடா அவன், திரவுபதிக்குப் பிறந்த பயல்? என்று கேள்வி கேட்பார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு). ராதா அகராதி என்கிற ஒரு தனி அகராதி போடலாம். இதுவரையிலே தமிழ் நாட்டிலே ஒரு நடிகருக்காக ஒரு தனிச் சட்டம் வந்ததே நடிகவேள் ராதா அவர்களுக்காகத்தான் வந்தது – நாடகத் தடை சட்டம் (கைதட்டல்). ராதா அவர்கள் ராமாயணம் நாடகம் போட்டார்.

இராமாயணத்தில் உள்ளபடி

அந்த நாடகம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த நாடகம் வால்மீகி ராமாயணத்தில் இன்னின்ன ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நிகழ்வுகள் ஆகும். எனவே இந்த நிகழ்வுகளைத்தான் இப்படிச் செய்கிறோம். ராமனை இப்படிக் காட்டுகிறோம் என்று சொன்னால், இது எங்களுடைய கற்பனை இல்லை என்றெல் லாம், தெளிவான அறிவிப்பைக் கொடுத்து, யாராவது மனம் புண்படுகிறது என்று நினைத்தால், என் நாடகத்தைப் பார்க்க வராதே. ஆகவே இது ஆதாரப்பூர்வமான செய்திகளே தவிர இது கற்பனை அல்ல. ஆதாரங்களை உள்ளபடியே காட்டுகின்றோம் என்று சொன்னார்.

நடிகருக்காகவே ஒரு சட்டம்

அப்பொழுதுதான் தமிழக சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே ஒரு நடிகருக்காக ஒரு சட்டம் கொண்டு வந்ததே- நடிகவேளைக் கண்டு ஒரு அரசு பயந்ததே நடிகவேள் ராதா அவர்களைக் கண்டுதான் (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியார் அவர்களைக் கண்டு மற்றவர்கள் எப்படி அஞ்சினார்களோ அதுபோல பயந்தார்கள். எனவே நடிகவேள் நடிப்பால் உயர்ந்தவர். பண்பால் உயர்ந்தவர். மனித நேயத்தால் சிறந்தவர்.

பெரியாருக்கு அடங்கியவர்

எதிர்ப்பு என்று சொன்னால் அதற்கு இன்னும் ஒரு படி அதிகமாகச் செல்லக் கூடியவர். இவ்வளவு சிறப்பானவர். யாருக்குமே அடங்காதவர். அவர் தந்தை பெரியார் அவர் களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே மிகவும் அடங்கியவர்கள். அய்யா அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அதற்கு உடனே கட்டுப்படுவார்.

திராவிடர் கழக உறுப்பினராக அவர் இல்லை

ஒருவர் ராதா அவர்களிடம் கேள்வி கேட்டார். நீங்கள் இவ்வளவு பெரிய பெரியார் பக்தனாக இருக்கின்றீர்களே நீங்கள் ஏன் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவில்லை? என்று கேட்டார். நீங்கள் கருப்புச் சட்டை போடுகிறீர்கள். ஊர்வலத்தில் குதிரைமீது அமர்ந்து வருகின்றீர்கள். பெரியார் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.

ஆனால், திராவிடர் கழகத்தில் ஏன் உறுப்பினராக ஆக வில்லை? என்று கேள்வி கேட்டவுடனே, அதற்கு ராதா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்.

கட்டுப்பாடுள்ள இயக்கம்

அவர் ரொம்ப நாணயமாகப் பதில் சொன்னார். நான் பெரியார் பக்தன். பெரியார் தொண்டன். பெரியார் கொள்கையை விரும்புகிறவன். பிரச்சாரம் செய்கின்றவன். திராவிடர் கழகத்தில் நானெல்லாம் உறுப்பினராக இருக்க முடியாது.. திராவிடர் கழகத்தில் சில கட்டுப்பாடுகள், சில நியதிகள் எல்லாம் உண்டு. சில கடும் பத்தியங்கள் எல்லாம் உண்டு. அவைகளை கடைப் பிடித்தால்தான் உறுப்பினராக இருக்கமுடியும்.

நான் அந்த மாதிரி இயக்கத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் பெரியார் பற்றாளனாக இருக்கின்றேன் என்று உண்மையை அப்பட்டமாகச் சொன்ன மிகப் பெரிய ஒரு இலட்சியவாதி.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார்

எனவே இலட்சியங்கள் அவருடைய சொத்துக்கள். அவருடைய ஆற்றல் என்பது வரலாற்றை உருவாக்கக் கூடியது. வரலாற்றில் இடம் பெறுவதல்ல. வரலாற்றையே உருவாக்கக் கூடியது.
அந்த வகையிலே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார். காலத்தை வென்ற புரட்சியாளர் என்ற பெருமையோடு வாழ்ந்தார் என்று சொல்லி அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்த சென்னை சங்கமத்தையும் தமிழ் மய்யத்தையும், தமிழ் இயல் இசை நாடக மன்றத் துறையையும் அனைவரையும் பாராட்டி அமைகிறேன்.

Posted in 100, Chennai, Dramas, EVR, MR Radha, MRR, Nadigavel, Nadikavel, Performances, Periyar, Pralayan, Radha, Sangamam, Stage, Street, Theater, Veeramani, Viduthalai, Vituthalai | Leave a Comment »

‘Viduthalai’ & ‘Unmai’ Editor Ki Veeramani – Sivakasi Maniyam

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

உலகில் சிந்தனையாளர்கள், பெரிதும் பேசப்பட்ட வர்கள் பலரும் பத்திரிகைகள் தொடங்கி தங்கள் கொள்கைகளை, எண்ணங்களை அவற்றில் எழுதியதுண்டு. ஆனால், அவர்களால் தொடங்கப்பட்ட இதழ்கள் அவர்களின் மறைவுக்குப் பின் நிலைத்து நிற்காமல் காணாமற்போன கதையைத் தான் வரலாறுகள் உணர்த்துகின்றன.
யார் யார் என்னென்ன இதழ்களைத் தொடங்கி அவர்களுக்குப் பின் அவ்விதழ்கள் தொடராமல் போனது என்ற விவரம் சிலவற்றைப் பார்ப்போம்:

  • கார்ல் மார்க்ஸ் – ரைன்லேண்ட் கெஜட்
  • லெனின் – பிரோலி டேரியட் (பாட்டாளி)
  • மாஜினி – யங் இத்தாலி
  • இட்லர் – வால்கிஷர்
  • முசோலினி – இல்-பாப்லோ- டீ- இடாவியா
  • காந்தி – யங் இந்தியா, அரிஜன்
  • நேதாஜி – பங்களா கதாகோட்சே இந்துராஷ்டிரா
  • பாரதி – இந்தியா
  • பண்டித மணி – அயோத்திதாசர் – (ஒரு பைசா) தமிழன்
  • திரு.வி.க., – நவசக்தி
  • ம.பொ.சி. – செங்கோல்
  • ராஜாஜி – சுய ராஜ்யா
  • வடுவூர் – துரைச்சாமி (அய்யங்கார்) – மனோரஞ்சனி
  • வை.மு. கோதை நாயகி – ஜகன்மோகனி
  • அறிஞர் அண்ணா – திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி
  • எம்.ஜி.ஆர். – அண்ணா

சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் இன்னும் நீளும். தந்தை பெரியார் குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் காலத்திலேயே அவை நின்று போயின. அடுத்து அவர் தொடங்கிய விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய மூன்றும் இன்றுவரை, இடைவிடாது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த வெற்றிக்கு ஆசிரியர் அவர்களின் உழைப்பும், விடா முயற்சியும் அல்லாமல் வேறென்ன? பெரியாருக்குப்பின் ஆசிரியர் அவர்களாலேயே தொடங்கப்பட்ட பெரியார் பிஞ்சு இதழும், இளைய தலைமுறையைத் தயாரிக்கும் இனிய இதழாக திங்கள்தோறும் மலர்ந்து வருகிறது.
விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு இவை அத்தனைக்கும் ஆசிரியர் நம் ஆசிரியரே என்பது சிறப்பினும் சிறப்பு. ஆசிரியர் பெருமைக்குக் கட்டியம் கூற இப்பணி ஒன்று போதாதா?

-சிவகாசி மணியம்

Posted in Editor, Editors, Unmai, Veeramani, Vidudhalai, Viduthalai, Viramani, Vituthalai | Leave a Comment »

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

Book Review Ki Veeramani: Sarvam Stalin Mayam by Kizhakku Publications

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

தொண்டறத்தின் முன்னே கடமையா? காதலா?

புத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”

சென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.
இதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது?
கடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.
அதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.
திரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை!
அந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.
செய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.
எனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது!
ஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்!
ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்!
தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
அவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்!
அதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது!
குடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.

ஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:

அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
எப்படி முடியும்? தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும்? அவர் வீட்டுக்கு வந்தால்தானே! போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.
எங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.
சமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.
ஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.
அலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.
அப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.
அப்படியா? சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.
நான் அங்கு கிளம்பி வரவா?
சரி, வாயேன்.

ஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.

அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?
பல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.
என்ன படிக்கப் போகிறாய்?
கவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்!
வேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.
அப்படியானால் நான் என்னதான் படிப்பது?

ஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.

வரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்!

தனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.

விஷயம் இதுதான்.

1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.

பைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.

உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில்! வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.

இதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.
சரி, சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின்.
தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.
நான் செய்தது தவறு இல்லைதானே?
இல்லை அப்பா.
**********
தன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.
தேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.
**********
தன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!
தன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது!
பல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு!
தன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் என்ன? அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு? சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா? மாட்டாரா? அதுதானே முக்கியம்.

– இப்படி முடிகிறது அந்நூல்!

Posted in abuse, Affection, Autocracy, Badri, Blind, Books, CCP, Churchill, Citizens, Culture, Dictators, Dictatorship, Dress, Dresscode, Faith, Germany, Kilakku, Kings, Kizakku, Kizhakku, Love, massacre, people, Power, publications, Religion, Reviews, Rulers, Russia, Stalin, USSR, Veeramani, Wars, WWII | Leave a Comment »

ADMK & Jeyalalitha – Politics of Contradications & Alliances of Convenience :: Viduthalai Dravidar Kazhakam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

JJ ADMK Jeyalalitha Viduthalai Contradications Politics Alliances

Posted in Adams, ADMK, AIADMK, Alliance, Baalu, BJP, Bridge, CM, Construction, Contradications, Dam, Dhravidar, DK, DMK, Dravidar, Election, Fort, Govt, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Manifesto, MDMK, Minister, parliament, Politics, Poll, Project, Ramar, Sethu, Ships, Srilanka, Thravidar, TR Baalu, VaiGo, Veeramani, Vidudhalai, Viduthalai | Leave a Comment »

Notorious criminal Vellai Ravi & associate killed in encounter

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi « Tamil News – வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?:

07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.


தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.

2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.
————————————————————————————————

அடுத்த குறி யார்?

சென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார்? என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.

ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் பட்டியல்:

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்

  • மாலைக்கண் செல்வம்,
  • காதுகுத்து ரவி,
  • கேட் ராஜேந்திரன்,
  • நாகேந்திரன்,
  • சேரா,
  • காட்டான் சுப்பிரமணியன்,
  • ஜெர்மன் ரவி,
  • கருப்பு பாலு,
  • ஸ்டாலின்,
  • திண்டுக்கல் பாண்டியன்

என போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————–
வெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா?

ஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:

புதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.

அப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.

என்னை ஏன் கடத்தப் போகிறார்கள்? என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.

என்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.

——————————————————————————————-
வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி

ஓசூர், ஆக. 3 –

ஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.

உறவினர்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

அடையாளம் காட்டினர்

வெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

4-வது மகன்

முன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

குணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-

காய்கறி வியாபாரம்

நானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

எனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.

தமிழில் பேசுவோம்

வெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.

எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.

இவ்வாறு தமிழ்அரசி கூறினார்.

——————————————————————————————-

லாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.

வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-

என் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.

எப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.

அவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.

கடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
——————————————————————————————-

வெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு

சென்னை, ஆக. 2-

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.

பின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.

இதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்

ஓசூர், ஆக. 2-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.

நேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.

இந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.

வெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.

வெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-

வெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு

பெரம்பூர், ஆக. 3-

சென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.

இதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.

அவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.

பக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.

செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.

பின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

என் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.

எப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.

இதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.

அப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.

அதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.

ஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.

அதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.

இவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.

———————————————————————————————————————

வெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்

சென்னை, ஆக. 4-

Vellai ravi photoசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.

அதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.

இதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.

வெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.

போலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.

இந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.

சானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.

சமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.

அவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.
அப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.

இதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.

—————————————————————–
காசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:

வட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.

அதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.

திருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.

———————————————————————————————————————
ரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்!

சென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

ரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.

எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன? முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.

ரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.

நான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.

“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.

3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

———————————————————————————————–

என்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது

சென்னை, ஆக. 8-

சென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்
மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.

போலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

என்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு

செய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.

மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.

நல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.

மாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.

சமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-

எனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.

நான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்னmaalaikkan selvam arcot veerasamy DMK Politics Party affiliations rowdy dada arrest செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.

சென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.

அதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.

இதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.

உடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

பின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.

———————————————————————————————–
அக்கா மகனை கொன்றதால்
பழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
புழல் சிறையில் அடைப்பு

செங்குன்றம், ஆக.10-

அக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட்டு பிடிக்க உத்தரவு

சென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.

இதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

செல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பழிக்கு பழி

கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

———————————————————————————————–

Posted in ACP, Akhthar, Akthar, Alcohol, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Arkadu, Arms, Arrack, Assassin, Assassination, Assembly, Bagalur, Bangalore, BJP, Bombs, Cabinet, Chennai, Cinema, Commissioner, CoP, Crime, Criminal, CSI, Dada, DCP, dead, Election, Electricity, Encounter, Extortion, Faces, gang, Guna, Hide, Hideout, Hijack, Hosoor, Hosur, HR, ICF, Illicit, Karnataka, Kidnap, kidnappping, Kumaran, Law, Leaders, Liquor, Maalaikan, Maalaikkan, Madras, Minister, MLA, Money, Movies, Murder, Murugan, Murukan, N Veerasamy, Nanjil, Nanjil Kumaran, National Highway, Neta, Netha, nexus, NH, Order, Osur, people, Peramboor, Perambur, Police, Poll, Raichoor, Raichur, Rajaram, ransom, Ravi, Rich, rights, Rowdy, Santhapuram, Selvam, Selvaraghavan, Shakeel, Story, TASMAC, Toddy, Veerachami, Veerachamy, Veeramani, Veerasami, Veerasamy, Vellai, Vellai Ravi, Venkatasaami, Venkatasaamy, Venkatasami, Venkatasamy, Venkatesa Pannaiyaar, Venkatesa Pannaiyar, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayakumar, Vijaykumar, Weapons | Leave a Comment »

Saami Chidhambaranar – State of the Ancestral House & Brief Biosketch

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

அரசுடைமை ஆகுமா சாமி சிதம்பரனார் இல்லம்?

அ. மாரீஸ்வரன்
sami Chidhambaranar illam dinamani dilapidated house

சென்னை, ஜூலை 8: கம்பீரமான அந்த வீடு இன்று சிதிலம் அடைந்து, கேட்பாரற்று புதர்கள் மண்டி கிடக்கிறது.

அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்குக் கூட அந்த வீட்டைப் பற்றியோ, அதில் வாழ்ந்தவர்களைப் பற்றியோ தெரியவில்லை.

தமிழுக்கும், தமிழருக்காகவும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய தமிழறிஞர் சாமி சிதம்பரனாரின் இல்லம் அது.

சென்னை சூளைமேட்டில் செüராஷ்டிரா நகர் ஏழாவது தெருவில் இருக்கிறது அந்த வீடு. நிறைய அறைகளுடன் திட்டமிட்டு, கட்டப்பட்டுள்ள அந்த அழகான வீடு இடிந்து, ஜன்னல், கதவுகள் பெயர்ந்து கிடக்கின்றன.

“காலம் என்னை அழித்தாலும், என் பெயர் அழியாது’ என்று அறிவிப்பது போல், வீட்டு வாசல் சுற்றுச் சுவரில் தூசு படிந்து மங்கிய நிலையில் “சாமி சிதம்பரனார்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புதல் உள்ளிட்ட பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். பிற்காலத்தில் பொது உடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

எழுத்தாளர்:

1920 முதல் 1961 வரையுள்ள காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 30-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் 15-க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் சமுதாய, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதியுள்ளார் அவர்.

பகுத்தறிவு, புரட்சி, குடி அரசு, திராவிடன், வெற்றி முரசு, லோகோபகாரி, விடுதலை உள்ளிட்ட பத்திரிகைகளில் சிலவற்றில் ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். பத்திரிகைத் துறையில் கொண்ட நாட்டம் காரணமாக “அறிவுக்கொடி’ என்ற பத்திரிகையை 1936-ல் கும்பகோணத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் நடத்தியுள்ளார்.

தமிழை முறையாகப் பயின்ற இவர் 1923-ல் பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றியுள்ளார். தஞ்சை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

சீர்திருத்தத் திருமணம்:

சீர்திருத்தத் திருமணமாகவும், கலப்புத் திருமணமாகவும் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் இவரது திருமணம். தந்தை பெரியார் முன்னிலையில் நாகம்மையாரின் தலைமையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏ. குப்புசாமியின் மகள் சிவகாமி என்பவரை ஈரோட்டில் நடந்த மாநாட்டில் திருமணம் செய்தார்.

இலக்கியம், சமுதாயம், அரசியல் என 62 நூல்கள் எழுதியுள்ளார். 1948-க்குப் பிறகு இலக்கிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் இன்னும் பல படைப்புகள் வெளிவராமல் உள்ளன என்று கூறப்படுகிறது.

இலக்கிய, வரலாற்று ஆசிரியர்கள் பாராட்டுகிற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் “தமிழர் தலைவர்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

அரசுடைமை ஆகுமா ?

இத்தகைய பல்வேறு சிறப்புகளுக்குரிய தமிழறிஞரான சாமி சிதம்பரனாரின் இல்லம், வாரிசு இல்லாததால் பராமரிப்பின்றி, அவலமான நிலையில் இருப்பது வேதனைக்குரியது. தமிழறிஞரான, ஆய்வாளரான சாமி சிதம்பரனாரின் இல்லத்தைப் பராமரித்து, அரசுடைமையாக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் விருப்பம் என்று சூளைமேடு செüராஷ்டிரா நகரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் இர. அன்பரசன் தெரிவித்தார்.

வாரிசு இல்லாத இந்த வீட்டை அரசு தத்தெடுத்து இதனை நூலகமாகவோ, சமுதாயக் கூடமாகவோ மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.

Posted in ADMK, Attitude, Author, Biosketch, Careless, Caste, Chidambaranar, Chidhambaranaar, Chidhambaranar, Community, DK, DMK, Draividian, EVR, Faces, Freedom, History, House, Justice Party, Leader, Literature, Neglect, people, Periyaar, Politics, Rational, Recognition, Religion, Saami Chidhambaranar, Sami Chidhambaranar, Sidhambaranaar, Sidhambaranar, TamilNadu, Veeramani, Visionary, Writer | Leave a Comment »