Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vidudhalai’ Category

‘Viduthalai’ & ‘Unmai’ Editor Ki Veeramani – Sivakasi Maniyam

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

உலகில் சிந்தனையாளர்கள், பெரிதும் பேசப்பட்ட வர்கள் பலரும் பத்திரிகைகள் தொடங்கி தங்கள் கொள்கைகளை, எண்ணங்களை அவற்றில் எழுதியதுண்டு. ஆனால், அவர்களால் தொடங்கப்பட்ட இதழ்கள் அவர்களின் மறைவுக்குப் பின் நிலைத்து நிற்காமல் காணாமற்போன கதையைத் தான் வரலாறுகள் உணர்த்துகின்றன.
யார் யார் என்னென்ன இதழ்களைத் தொடங்கி அவர்களுக்குப் பின் அவ்விதழ்கள் தொடராமல் போனது என்ற விவரம் சிலவற்றைப் பார்ப்போம்:

  • கார்ல் மார்க்ஸ் – ரைன்லேண்ட் கெஜட்
  • லெனின் – பிரோலி டேரியட் (பாட்டாளி)
  • மாஜினி – யங் இத்தாலி
  • இட்லர் – வால்கிஷர்
  • முசோலினி – இல்-பாப்லோ- டீ- இடாவியா
  • காந்தி – யங் இந்தியா, அரிஜன்
  • நேதாஜி – பங்களா கதாகோட்சே இந்துராஷ்டிரா
  • பாரதி – இந்தியா
  • பண்டித மணி – அயோத்திதாசர் – (ஒரு பைசா) தமிழன்
  • திரு.வி.க., – நவசக்தி
  • ம.பொ.சி. – செங்கோல்
  • ராஜாஜி – சுய ராஜ்யா
  • வடுவூர் – துரைச்சாமி (அய்யங்கார்) – மனோரஞ்சனி
  • வை.மு. கோதை நாயகி – ஜகன்மோகனி
  • அறிஞர் அண்ணா – திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி
  • எம்.ஜி.ஆர். – அண்ணா

சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் இன்னும் நீளும். தந்தை பெரியார் குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் காலத்திலேயே அவை நின்று போயின. அடுத்து அவர் தொடங்கிய விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய மூன்றும் இன்றுவரை, இடைவிடாது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த வெற்றிக்கு ஆசிரியர் அவர்களின் உழைப்பும், விடா முயற்சியும் அல்லாமல் வேறென்ன? பெரியாருக்குப்பின் ஆசிரியர் அவர்களாலேயே தொடங்கப்பட்ட பெரியார் பிஞ்சு இதழும், இளைய தலைமுறையைத் தயாரிக்கும் இனிய இதழாக திங்கள்தோறும் மலர்ந்து வருகிறது.
விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு இவை அத்தனைக்கும் ஆசிரியர் நம் ஆசிரியரே என்பது சிறப்பினும் சிறப்பு. ஆசிரியர் பெருமைக்குக் கட்டியம் கூற இப்பணி ஒன்று போதாதா?

-சிவகாசி மணியம்

Posted in Editor, Editors, Unmai, Veeramani, Vidudhalai, Viduthalai, Viramani, Vituthalai | Leave a Comment »

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

2007 Flashback by Viduthalai: News, Incidents, Law, People

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

2007-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

தமிழகம்

ஜன.16: தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் சட்டம் நீக்கம்.
பிப்.4: காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியீடு. இதன்படி ஆண்டுதோறும் 419 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி ஒதுக்கீடு. கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீர், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டது. எஞ்சியுள்ள தண்ணீர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்த உத்தரவு.
பிப்.16: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் வெற்றி. மொத்தமுள்ள 154 வார்டுகளுக்கான தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (37) பா.ம.க (17),, இந்தியக் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களைப் பிடித்தன.
மார்ச்.5: தமிழகத்தில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
மார்ச்.31: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்.
மே 11: தமிழக முதல்வர் கலைஞர் சட்டப் பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பாராட்டு.
மே 13: மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ராஜிநாமா.
மே 18: திருச்செந்தூர் மக்களவை உறுப்பினர் ராதிகா செல்வி, மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி ஏற்பு.
ஜூன் 3: சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ்.
ஜூன்.8: முதல்வர் கலைஞரின் மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக போட்டி யின்றி தேர்வு.
ஜூன்.29: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் கேஎஸ்கே ராஜேந்திரன் வெற்றி.
ஜூலை.2: பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பல் “நிமிட்ஸ்’, சென்னைத் துறைமுகம் வருகை.
ஜூலை 5: தமிழகத் தில் 6 மாநகராட்சி களில் 11 மாலை நேர நீதிமன்றங் கள் தொடக் கம்.
ஜூலை 15: கல்விக் கண் திறந்த காம ராஜரின் 105வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தமிழ கத்தில் உள்ள அனைத்து பள்ளி களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.
ஜூலை 30: பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட எதிர்ப்புகளால் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தில் டாடா குழுமத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை தொடங்கும் பணிகளை நிறுத்திவைப்பதாக முதல்வர் அறிவிப்பு.
ஆக. 13: சென்னை சேப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் பெயர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எனப் பெயர் மாற்றம்.
ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி மையத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் தொடங்கிவைப்பு.
அக்.1: வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அக்.14: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் கோவில் கோபுரம் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
நவ.1: புதிதாக தொடங்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொடங்கி வைத்தார்.
நவ.19: திருவான்மியூர் வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைப்பு.
டிச.6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அஇஅதிமுகவினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது.

இந்தியா

ஜன.4: வரும் கல்வியாண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு (ஒபிசி) அய்அய்டி மற்றும் அய்அய் எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல்.
ஜன.10: 2005ம் ஆண்டு கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
ஜன.11: அரசமைப்புச் சட்டத்தில் 9வது அட்டவணையில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ப்பதை சட்ட விதிகளின்கீழ் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.
பிப்.5: பெப்சிகோ நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியப் பெண் இந்திரா நூயி தேர்வு.
மார்ச்.16: சொத்துக் குவிப்பு வழக்கில் உத்தரப்பிரதேச முன் னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் எழுதிய கடிதம் காரணமாக அந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறுப்பு.
மார்ச்.29: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
ஏப்.23: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சத ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு அளிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
மே.11: அய்தராபாதில் உள்ள மெக்கா மசூதியில் பிரார்த்தனை நடந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் பலி.
ஜூன்.6: எதிர்க்கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் தலைமையில் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஹைதராபாதில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்சு.
ஜூலை.8: போர்ச்சுகல்லைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தாஜ்மகால் உலக அதிசயங்களில் இடம்பெற்றது.
ஜூலை.21: இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் தேர்வு.
ஆக.10: இந்தியாவின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முகம்மது ஹமீத் அன்சாரி தேர்வு.
ஆக.13: பாகிஸ்தான் சிறையிலிருந்த 140 இந்தியர்களை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு விடுவித்தது.
ஆக.22: 13 ஆண்டுகளுக்கு முன் தனது உதவியாளரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் விடுவிப்பு.
செப்.2: டிடிஎச் சேவைக்கு உதவும் இன்சாட்4சிஆர் செயற்கைக் கோள் சிறீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அக்.14: குஜராத்தில் உள்ள மகாகாளி ஆலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் சாவு.
அக்.29: “தலையில்லாக் கோழிகள்’ என விமர்சித்ததற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோனன் சென், மக்களவை உரிமைக்குழு முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பு.
நவ.7: பெங்களூர் மருத்துவர்கள் கூடுதல் கால், கைகளுடன் பிறந்த குழந்தை லட்சுமிக்கு 27 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெற்றிகரமாக வெட்டியெடுத்தனர்.
நவ.25: மலேசியாவில் வாழும் இந்திய மரபுவழியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து நடத்திய பேரணியில் 20 ஆயிரம்பேர் பங்கேற்பு.
நவ.26: கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல்.
நவ.29: மகாராஷ்டிர அரசு புதிய நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி தனிநபர் 500 சதுர மீட் டருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது.
டிச.11: அமெரிக்கப் பாணியில் தில்லியை அடுத்த குர்காவ்னில் 14 வயது பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரை சுட்டுக் கொன்றனர்.
டிச.16: சத்தீஸ்கர் மாநிலம் தன்டேஸ்வரா பகுதியில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தி தங்களது சகாக்கள் 377 பேரை நக்சலைட்டுகள் மீட்பு.
டிச.25: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு.

உலகம்

ஜன.1: அய்ரோப்பிய யூனியனில் பல்கேரியா, ருமேனியா சேர்ந்தது.
அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலராக தென் கொரியாவின் பான் கி மூன் தேர்வு.
ஜன.11: வங்கதேசத்தில் நெருக்கடி நிலை பிரகடனம். இரவு நேர ஊரடங்கு அமல்.
விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களை அழிக்கவல்ல ஏவுகணை சோதனையில் சீனா வெற்றி.
மார்ச் 26: தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவு ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 4 இலங்கை வீரர்கள் பலி.
மார்ச்.31: புவி வெப்பமடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்சாரத்தை அணைத்தனர்.
ஏப்.2: சாலமன் தீவுகளில் 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி ஏற்பட்டு அரு கிலுள்ள தீவுகளைத் தாக்கியது.
ஏப்.3: தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு புது தில்லியில் தொடங்கியது. இக்கூட்டமைப்பில் 8வது உறுப்பு நாடாக ஆப்கனிஸ்தான் இணைக்கப்பட்டது.
ஏப்.24: யாழ்ப்பாணத்தில் உள்ள விமான தளம் மீது விடுத லைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஏப்.29: இலங்கையின் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
மே 5: கென்ய பயணிகள் விமானம் கேமரூன் அருகே அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கியதில் 15 இந்தியர்கள் உள்பட 114 பேர் பலி.
மே 6: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் நிகோலஸ் சகோஸி வெற்றி.
மே 24: இலங்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்படைத் தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூன் 8: கொழும்பு நகரிலிருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
ஜூன் 22: 195 நாள் விண்வெளி பயணத்துக்குப்பிறகு அமெரிக்க வாழ் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிஸ் விண்கலம் கென்னடி விமான தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
ஜூன் 24: 1980ம் ஆண்டு லட்சத்து 80 ஆயிரம் குர்து இன மக்கள் படுகொலைக்குக் காரணமானவர் எனக்கூறி சதாம் ஹுசை னின் உறவினர் கெமிக்கல் அலி மற்றும் 2 பேருக்கு இராக் நீதி மன்றம் மரண தண்டனை விதித்தது.
ஜூன் 27: இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் ராஜிநாமா. தொழிலாளர் கட்சியின் தலைவர் கார்டன் பிரவுனை பிரதமராக்க பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் ஒப்பு தல்.
ஜூலை 10: பாகிஸ்தானில் உள்ள லால் மஸ்ஜித்தினுள் நுழைந்த பயங்கரவாதிகளுடன் 14 மணி நேரம் போராடி ராணுவம் மீட்டது. இதில் 8 கமாண்டோக்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை 21: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஹாரிபாட்டர் நாவலின் 7வது தொகுதி உலகெங்கும் வெளியானது.
வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு அதிபர் புஷ் சென்ற போது இரண்டரை மணி நேரத்துக்கு அதிபர் பதவியை துணை அதிபர் டிக் செனி வகித்தார்.
ஆக.16: பெருவில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கம் காரணமாக 337 பேர் உயிரிழந்தனர்.
செப்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கியிருந்துவிட்டு நாடு திரும்பினார். ஆனால் விமான நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார்.
செப்.24: கடந்த 20 ஆண்டுகளாக மியான்மரில் நடைபெற் றுவரும் ராணுவ ஆட்சியைக் கண்டித்து புத்த பிக்குகள் உள்றபட லட்சக்கணக்கானோர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.
அக்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, நாடு திரும்பியபோது தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
அக்.22: முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இலங்கை ராணுவம் பெருமளவு ஆயுதங்களை விட்டு தப்பி ஓட் டம்.
அக்.23: அமெரிக்காவின் லூஸியானா மாகாண கவர்னராக அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் தேர்வு செய் யப்பட்டார்.
நவ.2: இலங்கை ராணுவம் நடத்திய விமானப்படைத் தாக் குதலில் விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு ஆலோசகர் சுப.
தமிழ்ச்செல்வன் சாவு.
நவ.3: பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அதிபர் முஷாரப் கொண்டு வந்ததோடு, உச்சநீதிமன்ற நீதிபதியையும் பதவி நீக்கம் செய்தார்.
நவ.15: வங்கதேசத்தில் சிடார் சூறாவளி தாக்கியதில் 3,300 பேர் பலி.
நவ.24: ஆஸ்திரேலிய பிரதமராக கெவின் ருட் வெற்றி.
நவ.28: தற்கொலைப்படைத் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார்.
டிச.3: ரஷிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அபார வெற்றி.
பாகிஸ்தானில் ஜன.8ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு தேர்தல் ஆணையம் தடை.
டிச.10: அமெரிக்கத் துணை அதிபர் அல்கோர் மற்றும் இந்திய விஞ்ஞானி ராஜேந்திர பச்சோரி ஆகியோருக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
டிச.27: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, தீவிரவாதி களால் சுட்டுக் கொலை.

Posted in 2007, Flashback, Incidents, Law, News, people, Recap, Vidudhalai, Viduthalai, Vitudhalai, Vituthalai | Leave a Comment »

Nov. 28 – Sri Lanka, Batticaloa News & Updates: Bomb Blast reactions

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

 


கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை ரயில்

நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை

இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


 

கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.


கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.

இதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.

இதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை

அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை
அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arms, Attacks, Batticaloa, Blasts, Bombs, Cleansing, Colombo, Communications, Concerns, dead, Douglas, Eelam, Eezham, ethnic, EU, Extremism, Extremists, Freedom, LTTE, Mobility, Rails, Railways, reactions, Security, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, Trains, Transport, Vavuniya, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, wavuniya, Weapons | Leave a Comment »

More clashes in Sri Lanka – fighting kills 24 in north

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தின் குறிசுட்டகுளம், தம்பனை, விளாத்திக்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நாவற்குளம் போன்ற இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற நேரடிச் சண்டை மற்றும் எறிகணை வீச்சு மோதல்களிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள், சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 43 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஐ நா மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Posted in Attacks, BBC, dead, Districts, Government, Govt, LTTE, Mannar, Peace, Rebels, Soldiers, Sri lanka, Srilanka, Thamilselvan, Tigers, Vavuniya, Vidudhalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »

Karuna’s trial for “war crimes” urged – Sri Lanka unveils biggest war budget as fighting escalates

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007

வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.

கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


இலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது

மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.

அடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

கடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

போர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா? மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.


லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கர்ணல் கருணா
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா

சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.

மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.

இப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.

கருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.

பிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.

Posted in Abductions, Airforce, Budget, Conflict, Crime, crimes, Defense, enquiry, Extremism, Fight, Freedom, Govt, HR, Independence, Inquiry, Karuna, Law, LTTE, Mahinda, majority, Military, minority, murders, Navy, Order, Peace, Rajapakse, Rebels, Sinhala, Sinhalese, Soldiers, Sri lanka, Srilanka, Tamils, Terrorism, TMVP, Torture, troops, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »

Political Leader of Tamil Tigers Brig. SP Tamilselvan killed in Sri Lanka Air Force aerial bombardment

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2007

“யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாகச் செயல்பட்டவர்! ‘

சென்னை, நவ. 2: இலங்கை விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாகச் செயல்பட்டவர்.

1984-ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழ்ச்செல்வன், படிப்படியாக பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சிப் பெற்று, புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக பணியாற்றினார்.

1986-ல் பிரபாகரன் தமிழகம் வந்து செல்வதற்கு தமிழ்ச்செல்வன் முக்கியப் பங்காற்றினார். அப்போது விடுதலைப் புலிகள் மத்தியில் அவருடைய பெயர் தினேஷ்.

1987 மே மாதம் யாழ்ப்பாணம், தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1991 வரை அப்பதவியில் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991-ல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயல்பட்டார். இலங்கை ராணுவத்துக்கு எதிராக விமான, கடல்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

மன்னார் சிலாபத்துறை ராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயல்பட்டார். பூநகரி ராணுவ முகாம் மீதான தாக்குதலின்போது தனது காலை இழந்தார்.

தென்மராட்சிப் பகுதி மீட்புத் தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார்.

1992-ல் “பலவேகய-2′ சண்டையில் தலைமை வகித்து இலங்கை ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டது, தச்சன்காடு ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது, காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றில் தலைமையேற்று பணியாற்றினார்.

1993-ல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையைப் பெற்று சாகும்வரை அப்பதவியில் இருந்தார்.

1994-95ல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தலைமை தாங்கினார்.

2002-ல் நார்வே பேச்சுவார்த்தைக் குழுவில், ஆன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து பணியாற்றினார். பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப் பணியை செய்துவந்தார்.

தாயகத்திலும், தமிழகத்திலும் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.


தமிழ்ச்செல்வன் மறைவு: நவ. 5 வரை தமிழீழ தேசிய துக்க நாளாக புலிகள் பிரகடனம்
கொழும்பு, நவ. 2: தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவையடுத்து நவம்பர் 5-ம் தேதி வரை தேசியத் துக்க நாளாக விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்தி:தமிழ்ச்செல்வன் மறைவினால் தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். வன்னிப் பகுதி முழுவதும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு-சிவப்பு-மஞ்சள் கொடிகளை தங்கள் வீடுகளில் கட்டிவருகின்றனர் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்: சு.ப.தமிழ்ச்செல்வனின் மரணச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்கு மேலும் மிக உயர்ந்த தியாகம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வனின் இந்த அளப்பரிய தியாகத்தினால் இன்னும் ஆயிரமாயிரம் தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள். தமிழீழ விடுதலைக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்வார்கள் என்பது உறுதி என்றார்.


“உலகத் தமிழினத்துக்கே இழப்பு’சென்னை, நவ. 2: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழ்ச் செல்வனின் மரணம் உலகத் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவருடைய இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத் தமிழினத்துக்கே நேர்ந்த மாபெரும் இழப்பாகும்.சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் சர்வதேச சமூகம் தமிழ்ச் செல்வன் இழப்பால் மிகுந்த வேதனைப்படும். ஈழச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு இறுதியானது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

அத்தகைய அரசியல் தெளிவும், போர்க்குணமும் கொண்ட தமிழ்ச் செல்வன் சிங்கள இனவெறிக் கும்பலின் ராணுவ வெறியாட்டத்தில் பலியாகி இருப்பது வேதனைக்குரியது.


“அதிர்ச்சியில் உள்ளம் உறைந்தது’சென்னை, நவ. 2: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது உள்ளம்.

தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த தமிழ்ச் செல்வன் ராணுவத்தோடு ஈழத்தின் விடுதலைப் போரில் பல போர்க்களங்களில் மரணத்தை எதிர்கொண்டு போராடி உள்ளார்.

1993 முதல் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராகச் செயல்பட்டார். அரசியல் பிரிவுக்குத் தலைமை ஏற்று நார்வே அரசு முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கு ஏற்று வந்தார். இலங்கையிலும் அயல் நாடுகளிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்றார்.


தமிழ்ச்செல்வன் படுகொலை: பழ. நெடுமாறன் இரங்கல்சென்னை, நவ. 2: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படை குண்டு வீச்சில் உயிரிழந்ததற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்ச்செல்வன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கையைப் பெற்றவர் அவர். பல்வேறு களங்களில் தலைமை தாங்கி போராடியவர்.

சந்திரிகா அரசு இருந்தபோது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பின்னர், நார்வேயின் முயற்சியால் நடைபெற்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் புலிகளின் பிரதிநிதியாக கலந்துகொண்டவர்.

இளம் வயதில் சர்வதேச ராஜதந்திர அரசியலில் சிறந்து விளங்கியவர். புலிகளின் சார்பில் சமரச பேச்சுகளுக்கு தலைமை தாங்கிய தளபதியை குறிவைத்து குண்டு வீசி படுகொலை செய்ததன் மூலம் இனி சமரசப் பேச்சுக்களுக்கு சிங்கள அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்திவிட்டது.

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க, மறைந்த தமிழ்ச்செல்வன் சிந்திய ரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

மறைந்த தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்தும்படி அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளையும் வேண்டிக்கொள்கிறேன்.


சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுகள்…பா. கிருஷ்ணன்
சென்னை, நவ. 2: கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை காலையில் இலங்கை விமானப் படையின் தாக்குதலில் உயிரிழந்த சு.ப. தமிழ்ச்செல்வன் நிதானமாகப் பேசும் திறனுள்ளவர். இதனால், நார்வே தூதுக் குழுவினரும், இலங்கை அரசு தரப்பினரும்கூட அவரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.2002-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதைலப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, கிளிநொச்சியில் 2002 மே மாதம் அவருடன் 3 நாள்கள் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவரை நாங்கள் சந்தித்த அதே நேரத்தில் சுமார் 15 சிங்கள பத்திரிகையாளர்கள் அவரைச் சந்தித்தனர். அதில் பங்கேற்க பிரத்யேக அழைப்பு விடுத்தார் தமிழ்ச்செல்வன்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேட்டி கண்டனர். அங்கே “சைலன்ட் ஸ்பெக்டேடராக’ அனுமதிக்கப்பட்டபோதும், “”நீங்களும் இப்பேட்டியின் கருத்துகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்றார் தமிழ்ச்செல்வன்.

“”ஆயுதத் தரகர்களே இந்தப் போரை நீடிக்க விரும்புகிறார்கள். உண்மையில் நாங்கள் சிங்களர்களுடன் சமாதானமாக வாழ விரும்புகிறோம். மக்களைச் சமாதானத்துக்குத் தயாராக்கி வருகிறோம்” என்றார்.

பிறகு சுமார் அரை மணி நேரம் பிரத்யேக பேட்டி காண நேர்ந்தது. பிறகு, தமிழ்ச்செல்வனிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, மக்களின் அல்லல்களைப் பற்றியே அவரது பேச்சு அமைந்திருந்தது. இந்தியாவைப் போன்ற அதிகாரங்கள் கொண்ட தனி மாநிலம் கூட அமைந்தால் ஏற்கத் தயார் என்ற ரீதியில் அவர் பேசினார். முதல் வேலையாக தமிழீழத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

“”எல்லாவற்றுக்கும் இந்தியாவைத்தான் நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் காலையில் விவசாயிகள், வியாபாரிகள், வயதானோர் என்று ஏராளமானோர் மனுக்களைக் கொண்டுவருவர். அவற்றைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றுக்கு ஏற்பாடு செய்வார். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது மகன்களைப் போரில் பலிகொடுத்தவர்களாக இருப்பர். சிலரை அழைத்து பேசுவதும் உண்டு.

கிளிநொச்சியில் இரவு தங்கியிருக்க ஏற்பாடு செய்தார். ஒரு ஏசி காரையும் கொடுத்து, வன்னிப் பகுதியில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். அதையடுத்த தினம் யாழ்ப்பாணம் வரை சென்று கிளிநொச்சிக்குத் திரும்பியபோது, கொழும்பு திரும்புவதற்கு டூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றி வழியனுப்பச் செய்தார் தமிழ்ச்செல்வன்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த தமிழ்ச்செல்வன் ஒரு கால் ஊனமடைந்தவர். நிதானமான நடப்பது மட்டுமின்றி, நிதானமாகப் பேசுவதும் அவரது பழக்கம். இலங்கையில் அனைத்து தரப்பு பத்திரிகையாளர்களுடனும் நட்பு கொண்டிருந்தார். போட்டி போராளிக் குழுக்களில் கூட அவருக்கு விரோதிகள் இல்லை என்றே சொல்லலாம். புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆன்டன் பாலசிங்கம் மறைந்த வெற்றிடத்தை எளிதாக நிரப்பிய பெருமை தமிழ்ச்செல்வனுக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் “பாலா’ உடல் நலம் குன்றியிருந்தபோது, நார்வே முன் முயற்சியால் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டிருக்கிறார்.

“பாலா’ மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை குறுகிய காலத்தில் இட்டு நிரப்பிவிட்டார் தமிழ்ச்செல்வன். ஆனால், அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை புலிகள் எப்படி நிரப்பப் போகிறார்கள்?


விமானப் படை குண்டுவீச்சில் புலிகள் உயர் தலைவர் பலிகொழும்பு, நவ. 2: இலங்கை விமானப் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.இலங்கையில் வடக்குப் பகுதியில் உள்ள கிளிநொச்சியில், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் திரண்டிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அப்பகுதியில் இலங்கை விமானப் படையினர் குண்டுவீசினர்.இத்தாக்குதலில் “பிரிகேடியர்’ என்று அன்பாக அழைக்கப்படும் சு.ப.தமிழ்ச்செல்வன், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் மிகுதன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் வாகைக்குமரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த செய்தியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக செயலர் சோ.சீரனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் மறைவுக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் முக்கியப் பொறுப்பை சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றுக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த முக்கியப் பொறுப்பில் தமிழ்ச்செல்வன் இருந்தார். பிரபாகரனின் வலதுகரமாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர்.

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் சார்பாகத் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.

அரசியல்துறைக்கு வருவதற்கு முன், விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பை வகித்துவந்தார். குறிப்பாக இந்திய அமைதிக் காப்புப் படை இலங்கை சென்றிருந்தபோது, விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவராக தமிழ்ச்செல்வன் இருந்தார்.

இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தமிழ்ச்செல்வன், கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்துக்குப் பிறகு 1984-ல் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தார். அவருடைய மனைவியும் புலிகளின் மகளிர் படைப் பிரிவில் வடக்கு யாழ்ப்பாண நகரின் தளபதியாக இருந்தவர்.

பூநகரியில் நடந்த சண்டையில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் ஒரு காலை இழந்தார்.

2001ல் இலங்கை ராணுவம் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் தமிழ்ச்செல்வன்.

இலங்கை ராணுவம் யாழ்ப்பாணம் நகரை கைப்பற்றியதற்கு பிறகுதான் புலிகள் அமைப்பில் தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு ஓங்கியது.

அமைதிப் பேச்சில்… ஆன்டன் பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நார்வே அமைதிப் பேச்சில் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார். அதேபோல் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.

விமானப்படை தாக்குதல்

வடகிழக்கு இலங்கையில் புலிகளைக் குறிவைத்து இலங்கை விமானப் படை கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை முல்லைத்தீவு அருகே விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினரின் முக்கிய இடமான புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

அதன் பிறகு கொக்குதொடுவாயில் வியாழக்கிழமை அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் புலிகளின் பயிற்சி முகாம் கடும் சேதமடைந்தது.

33 புலிகள் சாவு: இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களில் நடந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் 33 பேர் கொல்லப்பட்டனர்.


கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனின் இறுதி ஊர்வலம்; ஏராளமானோர் அஞ்சலி

இலங்கை அரச விமானப்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியாகிய விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்றதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

காலை முதல் பிற்பகல்வரை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் , விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளரும் புதிய அரசியல்துறை பொறுப்பாளருமாகிய பா.நடேசன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் வே.பாலகுமார், முக்கிய தளபதிகள், உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், அரச, அரசு சார்பற்ற நிறுவன அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

அஞ்சலி நிகழ்வையடுத்து கிளிநொச்சி நகரப்பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களின் அணியிசையுடன் தமிழ்ச்செல்வனின் உடல் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ச்செல்வனின் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றவேளை, கிளிநொச்சி நகரப்பிரதேச வான்பரப்பில் இலங்கை அரச விமானப்படையின் வேவு விமானம் வட்டமடித்து நோட்டம் விட்டதாகக் கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழ்ச்செல்வனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காகக் கிளிநொச்சிக்குச் சென்ற தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் ஓமந்தை சோதனைச்சாவடியில் கெடுபிடிகளுக்கு உள்ளாகியதன் பின்னரே தமது பிரயாணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி இன்று நண்பகலின் பின்னர் மூடப்பட்டிருந்ததனால், தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கிளிநொச்சியிலிருந்து ஓமந்தை வரையில் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல நேரிட்டதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறிச்சோடிக்கிடக்கும் வவுனியா வீதி

இதேவேளை, மறைந்த தமிழ்ச்செல்வனின் இறுதிக்கிரியைகளையொட்டி, இன்று வவுனியா மன்னார் மாவட்டங்களில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் காலையில் மூடப்பட்ட கடைகள் பின்னர் படையினரின் உத்தரவுக்கமைய திறக்கப்பட்டதாகவம் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியாவில் கடைகள், அரச தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன மூடிக்கிடந்தன. போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெற்றன. படையினரும் பொலிசாரும் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் சந்தேகத்திற்கிடமானர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை காணப்பட்டபோதிலும், இனந்தெரியாத ஒரு சோகம் காணப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்த பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தமிழ்ச்செல்வன் இரங்கல் – தமிழ்நாட்டில் சர்ச்சை

விடுதலைப் புலிகள் இயககத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ் நாளேடான ஜனசக்தி தனது தலையங்கத்தில், புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் கொலைசெய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருககிறது என்று கூறியிருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி தமிழ்செல்வனுககாக எழுதிய இரங்கல்கவிதை கருணாநிதிககும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இருக்கும் ரகசியத் தொடர்பினைத்தான் வெளிப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி, எனவே திமுக அரசு கலைககப்படவண்டும் எனக் கோரி அறிககை வெளியிட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் கண்டனங்களுகு பதில்தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஒருவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஓர் அடிப்படை மனிதநேயப் பண்பாடென்று கூறினார்.

இதனிடையே மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறக்கவும் இல்லை, அவரது கொலையாளிகளை மன்னிககவும் இல்லை எனக் கூறியிருககிறார்.

தமிழ்செல்வனுககு இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருககின்றனவே என செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து தங்கள் வேதனையினை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகக் கூறினார்.


மாவீரர்கள், Heroes: 1967 – 2.11.2007

Direct Report of personal incidents from a close LTTE associate in Eezham :: பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் – : “கே.பி.அறிவன்”

Global Voices Online » Sri Lanka: Death of LTTE’s Thamilselvan

எண்ணங்கள்: தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும்

க(வெ)ண் புறாவும் களவாணிப் பயல்களுமான கூத்தமைப்பு, மற்றும் தமிழ்நாட்டு தன்மானங் கெட்டவனுகளுக்கும்… (வாசகர் ஆக்கம்)

REPORTER

Nitharsanam.Net » Blog Archive » புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணம் குறித்தும் அது தொடர்பானதுமான: விரிவான செய்திகள் (புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)

பன்னாட்டு சமூகங்களின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்

சு.ப.தமிழ்ச்செல்வன் இலக்கானாரா?

குண்டுமணி: தமிழ்செல்வன் படுகொலை பழிவாங்கல் அல்ல. சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம்.

ஈழம் செய்திகள்: சர்வகளப் போராளி தமிழ்ச்செல்வன் – இதயச்சந்திரன்

பனிமலர்: வீரவணக்கம் தமிழ்ச்செல�

தோழர் பெரியார்: உயிர்நடுங்கும் – வேண்டுகோள்கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி

கவியரங்கம் உங்களை வரவேற்கிறது…: ஏய் பகையே… அடாது செய்தாய்!

சுந்தரவடிவேல்: இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறதா?

JVP Janatha Vimukthi Peramuna
JHU Jathika Hela Urumaya

SLFP Sri Lanka Freedom Party
UNP United National Party

UPF Upcountry People’s Front
CWC Ceylon Workers Congress

Political Leader of Tamil Tigers Brig. SP Tamilselvan killed in Sri Lanka Air Force aerial bombardment « Tamil News

சசியின் டைரி: தமிழ்ச்செல்வனின்

தமிழ் குரல்: கலைஞர் இரங்கல்

“சாத்தான்”குளத்து வேதம்: தமிழ்ச்செல்வனோடு சில நிமிடங்கள்

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ‘தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்செல்வனின் இறுதி உரை

IdlyVadai – இட்லிவடை: தமிழ்ச்செல்வன் மரண�

கதம்பம்: ஹே ராம் சிங்கள ரத்னா !

செய்தி அலசல்: தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது: வே.பிரபாகரன்

எனக்குள் உலகம்: சு. ப. தமிழ்ச்செல�

குண்டுமணி: தமிழ்செல்வனைக் கொல்ல பாவிக்கப்பட்டது thermobaric குண்டு..?!

மானாவளை: பிரிகேடியர் தமிழ்ச்செ�

சு.ப.தமிழ்ச்செல்வன் பற்றி …………. «

குறிஞ்சிமலர்: தமிழ்செல்வன் மறைவு குறித்து – சுவிஸ் வானொலி

வரவனையான்: ” நின்ற இடம் நடுகல் ; யாழ் வீரருக்கு “



Media Double Standards: (The Hindu & N Ram)

RAM Watch in Tamil: “மீண்டும் செய்திகளிலே கருணா அம்மான்”

RAM Watch in Tamil: “இந்துவின் இரண்டு செய்திகள்”


Podcasts, Audio:

குறிஞ்சிமலர்: சு.ப.தமிழ்ச்செல்வன் அஞ்சலி நிகழ்வு – சுவிஸ்


Counterpoints & Alternate Views: அகதி!:Fluechtlinge.: தமிழ்ச் செல்வன் சிந்திய

archunan: கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை – அர்ச்சுனன்

தமிழரங்கம்: உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் சமூகத்தை மாற்றாது.

நெருப்பு இணையத்தளம் » புலிகளின�: “புலிகள் மனிதர்களின் மரணங்களை மூலதனமாக்குபவர்கள். அதை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதை வைத்து தமது அதிகாரத்தை ஸ்தாபிப்பவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையற்றவர்கள். மரணங்களை பூசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் மனிதர்களை வெறுத்து நடுகற்களை வழிபடுபவர்கள்.

அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் மரணமும் தற்போது தமிழ்ச்செல்வனின் மரணமும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களின் உயிர்கள் அற்பமானவை என்றும் புலிகளின் தலைவர்களின் உயிர்கள் உப்பரிகை துயரங்கள் போலவும் ஏதோ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் சித்தரிக்கப்படுகின்றது. புலிகள் எட்டடி பாய்ந்தால் புலிகளின் ஊதுகுழலான தமிழ் ஊடகங்களோ பதினாறடி பாய்வார்கள். தமிழர்களுக்கு ஒரேயொரு ரட்சகர் இருந்தார் அவரும் போய்விட்டார் என்பது போல அரற்றுவார்கள்.

யாருடைய மரணமும் மனித நேயம் கொண்டவர்களுக்குஇ நாகரீகமான மனிதர்களுக்கு உவப்பானவையல்ல. தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் உற்றச் சுற்றத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒரு துயரம். இதேபோன்றதுதான் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவுகளினதும், உற்ற சுற்றத்தாரினதும் துயரம்.”

Nitharsanam.Net » Blog Archive » 21 கரும்புலிகளை பலி கொடுத்தும் சிறீலங்கா வன்படையின் தாக்குதலில் இருந்து தமிழ்ச்செல்வனைக் காப்பாற்ற முடியாத பிரபாகரன்!

நெருப்பு இணையத்தளம் » செல்வா எங்கு சென்றாய்? தம்பி ஸ்ரீசபாரத்தினத்தை, பத்மநாபாவை, ராஜீவை தேடி சென்றனையோ? கலைஞர் கருணாநிதியின் நீலிக்கண்ணீர்!

நெருப்பு இணையத்தளம் » எச்சரிக்கை- கலைஞரின் கவிதாஞ்சலி மறுவடிவம்:

எப்போதும் சிரித்திடும் முகம்- அதில்
தமிழ்கொலைகளை மறைத்திடும் அழகுவிதம்
இளமை இளமை இதயமோ-அது
தமிழ் மங்கையர் பலர் துணை இழந்து
வெண்மை வெண்மை சேலை தந்ததே

தூஷண சிங்கம் பாலசிங்கம்- வழியில்
பழமாய் பொய் உரைக்க
பக்குவம்பெற்ற படைத்தளபதி
உரமாய் தன்னையும்-தமிழர்
உரிமை மறுப்பு பாசிசபோருக்கென உதவிய
உடன்பிறப்பணையான்

தமிழர் வாழும் நிலமெல்லாம்
அவர்தம் உளமெல்லாம்- இவன் சுயரூபம்
இன்னும் அறிந்திலர் பலர்
நன்புகழ் செதுக்கிய செல்வா
கொன்ற தமிழரை-மீண்டும்
கொ(ன்று)ண்டுவர சென்றனயோ

-ஸ்ரீசபாரத்தினம்

நெருப்பு இணையத்தளம் » ஊராவீட்டு பிள்ளைகள் 21 கரும்புலிகள் இறப்பில் கொண்டாட்டம்! தமிழ்செல்வன் இறப்பில் மூன்று நாள் துக்கம். வன்னிபுலிகளின் இரைட்டைவேடம்!

ஒசாமா பீன்லேடனையே மிஞ்சிவிட்ட நயவஞ்சகத்தனமான பயங்கரவாதி பிரபாகரன்:

தமிழ் செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்பதனை உறுதியாக நாம் கூறுவதுடன் பிரபாகரனின் பணிப்பின்பேரிலேயே அவார் கொல்லப்பட்டார் என்பதனை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கும்

விமானத் தாக்குதலில் தமிழ்செல்வன் கொல்லப்படவில்லை எனவும் கடந்த சில மாதங்களாக புலிகளின் தலைமையுடன் தமிழ் செல்வனுக்கு எற்பட்டிருந்த முரண்பாடு காரணமாக விமானத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தினை சாதகமாகப் பயன்படுத்திய புலிகளின் தலைமை தமிழ் செல்வனை மாத்தையாவின் பாணியில் சுட்டுக்கொன்றதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் உறுதிப்படுத்தியுள்ளது

புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றும் தமிழ் செல்வன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரெனவும் அண்மைக் காலமாக பேச்சுவார்த்தைமூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்பதனை வலியுறுத்தியமை இன்றைய யாழ் மேலாதிக்கவர்க்கமென தெரிவிக்கப்படும் வல்வெட்டித்துறை புலித் தலைமை ஏற்றக்கொள்ளாமையே தமிழ் செல்வனுக்கும் பிரபாகரனுக்குமிடையிலான முரண்பாடு வளர்ச்சியடைந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zeroing In On Prabhakaran : outlookindia.com: “The successful air strike at Kilinochi will encourage the SLAF to re-double its efforts for a decapitation strike on Prabhakaran himself. He becomes more vulnerable to an air strike than in the past.”

The Hindu : International : Thamilchelvan was involved in many attacks: Colombo: “Lt. Colonel Anupumani alias Alex was the chief of LTTE’s “strategic communication division” and in charge of handling all communication activities between LTTE leader V. Prabhakaran and the other “international terrorist agents.”

Mr. Thamilchelvan, “terrorist turned political head” played a pivotal role in a number of attacks on members of the security forces in the most recent past including the assaults on Kilaly, Muhamale, Nagarkovil Forward Defence Lines (FDLs) in August 2006, just eight months after Mahinda Rajapaksa had taken over as President.

The MCNS claimed that he escaped death twice with injuries during Kilaly operation in October 1993 and counter attacks on Yaladevi operation launched by Security Forces. It said he also played a prominent role in the Elephant Pass “debacle” while commanding terrorist groups way back in July 1991.”


More Anjali & Memoirs:

மடத்துவாசல் பிள்ளையாரடி: உணர்விழந்து நிற்கின்றேன் 😦

மிளகாய்: தம்பி தமிழ்ச்செல்வா: ப�

முத்துகுமரன் குடில்: சுப.தமிழ்ச�

மிளகாய்: புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக நடேசன் நியமனம்

நெஞ்சின் அலைகள்: நெஞ்சை எரிக்கி

கீழ்வானம்: தியாகிகள் புதைக்கப்�

பாரதிய நவீன இளவரசன்: சு.ப. தமிழ்ச�

ஓசை செல்லாவின் கடல் நீர் கண்ணீர் போல் வற்றட்டும் .. சில பத்தடிகள்

ஓசை செல்லாவின் மறைந்தது தமிழ்.. கண்ணீரஞ்சலி

பேசலாம்: என் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்.

ஈழம் செய்திகள்: சமாதான : “முன்னெடுப்பாளரை படுகொலை செய்த காட்டுமிராண்டி சிறிலங்கா அரசு: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம்”

IdlyVadai – இட்லிவடை: சுப.தமிழ்ச்செல்வன் ் கொல்லப்பட்டார்

சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் | ச�

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன� ் வீரவணக்க படங்கள்

SKETCH: மரணம் வலி தருமா?

S.P. Thamilchelvan killed in an air force attack « தமி்ழ் உலகம்

மஹிந்த தரப்பிடம் நிதி பெற்றோமா?: “சு.ப.தமிழ்ச்செல்வன் கேள்வி”

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு

முக்கிய நிகழ்வுகள்: “எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: தமிழீழ விடுதலை புலிகள்”

ஈழம் செய்திகள்: பிரிகேடியர் ் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வித்துடல் மக்கள் வணக்கத்திற்கு.

அகரா: ஆகாயப் புழுகர்களை வென்ற பிரபா-ஞ்சப் புழுகு: ” பொய்யாமொழி தண்டாயுதபாணி (நன்றி தாயகம்)”

கடகம்: துக்கத்தில் பங்கேற்கிறேன்…!

LTTE cannot Guarantee Safe Passage of International Aid Vehicles « Tamil News

வான் தாக்குதலில தமிழ்ச்செல்வன் மறைவு: வி.புலிகள் துக்கதினம் அறிவிப்பு

ஒரு மனதின் ஒலம்….: உன் ரத்தத்தின் ் ஈரம் காய்வதேது..

மறுமலர்ச்சி: பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !

நாட்டு நடப்பு: தமிழ்ச்செல்வன் ் வீரச்சாவு.தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஈழம் செய்திகள்: தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவார்கள்: பழ.நெடுமாறன்

Ilakku.com » விமானத் தாக்குதலில்(?) புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி!!

ஒரு தகவல் » Blog Archive » வான் குண்டுத்தாக�

ஈழப்பெரும்சுவர்: அநுராதபுரத் த�: “சுப.தமிழச்செல்வன் படுகொலை- ராஜபக்ச அரசின் பேடித்தனம்!”

புலிகளின் அரசியல்துறைப் : “பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட ஆறு முக்கிய புலியுறுப்பினர்கள் பலி!!”

தமிழ்: சுப. தமிழ்ச்செல்வன் வீரமர

நயனம் – nayanam: சுப தமிழ்ச்செல்வன் மறை�

ஈழம் விளையாட்டு கழகம் Nürnberg


Lifeskecthes, Biography, History:

செய்தி அலசல்: தமிழ்ச்செல்வன் – ஒ�

சிந்தாநதி : ❒ யார் இந்த தமிழ்ச்ச�

Video: நான் காணும் உலகங்கள்: அனல் காற்�

நாம் ஒரு நாள் ஆறுபோல் ் சுதந்திரமாய் பாய்வோம்: மீளாத்துயில் கொள்ளும் அண்ணன்களுக்கு ஒர் சமானியனின் வீரவணக்கம்


Earlier News bits, op-eds, Opinions, Thoughts: LTTE « Tamil News

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders « Tamil News: “ஏன் இந்தத் தயக்கம்?” (Dinamani)


ஏகலைவா: சுப.தமிழ்ச்செல்வனின் நி�

TamilBrisbane.com :: Tamil Speaking Community Portal – Brisbane – Queensland – Australia – India : Tamilnadu Chief Minister Karunanithi remembers slain Tamil Political Head Brig. TamilSelvan

PRINCENRSAMA: அந்தோ! கொடுமை! கொடுமை! – திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வீரவணக்கம்

வரவனையான்: தானாய் ஆடும் தசைகள்


ஒரு தகவல் » Blog Archive » தமிழ்ச்செல்வன் ் படுகொலை: விடுதலைப்புலிகள் பதிலடிக்கு தயார்- இலங்கையில் பதட்டம்

*புலிகளின் அரசியல் பொறுப்பாளரா�: “புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தவர் பா.நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்பு சிறிலங்கா பொலிஸ்துறையில் சார்ஐன்ட் தரத்தில் கடமையாற்றியவர் என்பதும் இவரது மனைவி சிங்கள இனத்தைச் சே�”

புதுவை கோ.சுகுமாரன்: பிரிகேடியர�

ENB – English: S.P.Thamilchelvan killed

புதிய ஈழம்: சுப.தமி்ழ்ச்செல்வன்

குசும்பு: வீர வணக்கம் சு.ப.தமிழ்�

உலக தமிழ் மக்கள் அரங்கம்..: சுப.தம�

குப்பை வலை: மனதை பாதித்த மரணம்

English Blogs:

LTTE is back to zero – TULF leader :: Sri Lanka News by MulPituwa.Com: “With the death of the LTTE’s Political Wing Leader S. P. Thamilselvan, the Leader of the Tamil United Liberation Front (TULF) Veerasingam Anandasangaree, the politician who had written the highest number of letters and pleas to the terrorists, has again requested the LTTE leadership to comeback to the negotiating table to save young lives. In an interview with the Sunday Observer he said that the Tamil political parties are willing to help the LTTE if the terrorists end the armed struggle and entre the democratic stream. These youth have the courage to achieve whatever the deadly desires of the leadership risking their lives. So it is high time to use these valuable lives to develop the country. It is sad that they are sacrificing their lives for an unrealisable cause,’ he said.”

» Have the LTTE’s succession wars begun? | INI Signal: “Who’ll succeed Prabhakaran? His son Charles Anthony…or Pottu Amman, the intelligence chief? There is a strong belief among the Tiger leaders that Pottu Amman was involved in leaking this vital piece of information which only the first level of Tiger leaders knew.”

ENB – English: Thamilchelvan MURDER: World media round up

News from The Permanent Mission of Sri Lanka to the United Nations Office at Geneva: “This study will examine the multiple methods of fund generation by terrorist groups and the modalities used by such groups to transfer funds for weapons procurement and logistic support. The operations of the international network of the Liberation Tiger of Tamil Eelam (LTTE) will be used as a case study in relation to the topic on terrorist financing. The study will have two main focus areas namely, methods used by groups such as the LTTE for resource mobilization and the processes by which such funds are moved for procurement activity. The study recognizes that the LTTE has an active domestic fundraising operation, however the focus of this study will be limited to operations of the international network of the LTTE. Within the scope of the first focus area, the study will identify methods of fundraising and assess the progression of such methods in terms of institutionalization and sophistication. The study will expand on this by developing a four-tiered progression typology which reflects the growth and expansion of fundraising methods. The second part of the study will examine the illusive network of financial nodes and controllers that transfer funds for procurement purposes. The study will also identify the processes of fund transfer used by the LTTE for weapons procurement.”

Media & Op-Eds:

Sri Lanka Kills Rebel Leader – TIME

Lankan Army’s game plan: Seize East and weaken LTTE in North- Hindustan Times: “The attack on Commander, Lt. Gen. Sarath Fonseka triggered the aerial war in which Sri Lankan jets began bombarding the Tamil North almost daily,displacing lakhs of civilians and causing an international uproar.”

TheStar.com | News | Decades of Sri Lankan violence

FACTBOX-Slain Sri Lanka Tiger was public face of rebels | Reuters

The Associated Press: Sri Lanka Violence Timeline

The Associated Press: Background on Conflict in Sri Lanka

A return to full-blooded war | The Guardian | Guardian Unlimited: “With both sides in Sri Lanka’s civil war increasingly committed to military means, prospects for peace have all but evaporated, writes Randeep Ramesh”

CHRONOLOGY-Sri Lanka’s long running civil war | Reuters

Editorial: After Thamilselvan:”It was the Tigers who balked at the degree of autonomy on offer from Colombo after the 2002 cease-fire and walked away from the talks.”

Sri Lanka chronology | The Guardian | Guardian Unlimited

AFP: In Sri Lanka, war dead don’t add up: “The security forces say they killed 3,284 Tiger rebels between December 2005, when a Norwegian-brokered truce began falling apart, and September this year. Independent estimates put the size of the LTTE force at between 5,000 and 12,000 men and women — meaning that at this rate of killing they should soon be running out of recruits. Senior officials have in the past claimed there were only 500 Tiger rebels left, or that 85 percent of the guerrilla army had been wiped out.

Last year, they paid respects to 18,742 cadres killed since 1982.”

BBC NEWS | South Asia | Public face of the Tamil Tigers

BBC NEWS | South Asia | Civilians’ plight in Sri Lanka

BBC NEWS | South Asia | Sri Lanka: Stories from conflict zones

BBC NEWS | South Asia | Tales from Sri Lanka’s front line

BBC NEWS | South Asia | Full text: Tamil Tiger proposals

BBC NEWS | South Asia | Country profiles | Timeline: Sri Lanka

Security News | Sundayobserver.lk – Sri Lanka: “His vow to take revenge from the Security Forces once they lose entire Eastern province very clearly indicates that he was not at all committed for a political solution to the North east conflict. He had to choose the military fatigue once again when the leadership directed him to oversee the Pooneryn sector at a time when the movement was fast distancing itself from political affairs.

He did not give up his military activities even after participating in a number of peace talks rounds with his large contribution towards the attack on Kilali, Muhamalai and Nagar Kovil Security Forces defences on August 11, 2006

The assassination of former Indian Prime Minister Rajiv Gandhi, former Sri Lankan President Ranasinghe Premadasa, Opposition Leader Gamini Dissanayake, Dr. Neelan Thiruchelvan, former Foreign Minister Lakshman Kadirgamar and the assassination attempts on President Chandrika Bandaranaike Kumaratunga should also be put on the other side of the scale”


Post-Mortem Analysis, Op-eds, News:

IdlyVadai – இட்லிவடை: தமிழ்ச்செல்வன் மறைவு – ஜி.கே.வாசன், சுப்பிரமணியசாமி, வீரமணி கருத்து

தமிழ்ச்செல்வனின் : “மறைவால் ஏற்பட்டுள்ள சமாதான வெற்றிடம்”

ஒரு தலைபட்சமான : “சுதந்திரப் பிரகடனங்கள் – ஒரு பார்வை”


Democracy Now! | Assassination of Tamil Leader Prompts Fears of Escalated Sri Lankan Civil War: “Senator Patrick Leahy issued a statement Friday expressing concern at abuses by both the L.T.T.E and the Sri Lankan army. He said US aid to the Sri Lankan government was “not a blank check” and urged Congress to support a political and not a military resolution to the conflict. In the past year alone, Sri Lanka has seen over 4,000 people killed, 250,000 internally displaced, and more than a 1,000 civilians “disappeared.””

தமிழகத்தில் இலங்கை தமிழர் களுக்காக 25 மாவட்டங்களில் 117 முகாம்கள் உள்ளன. இவற்றில் 74 ஆயிரத்து 219 பேர் தங்கியுள்ளனர். வெளியே 23 ஆயிரத்து 489 பேர் தங்கியுள்ளனர்


1. King Of Mars…: தமிழ்ச்செல்வன்: விமானங்கள் வருகையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையா அந்த விமானத்தளத்தையே வேவு பார்த்து புலனாய்ந்த திறமைமிக்கவர்கள் ஒரு முக்கிய நபருக்குரிய பாதுகாப்பு விசயத்தில் இவ்வளவு கவனக்குறைவாகவா இருப்பார்கள்

2. பதிலடி: திருநெல்வேலியும் திருவ�: ‘தேசியத்தலைவரின்’ கைவண்ணம் அழகாகத் தெரிந்தது. தனது மகனையும் கையோடு கூட்டிவந்து தமிழ்ச்செல்வனின் தலைமாட்டில் நிற்கவைத்து தான் சடலத்துக்கு மாலை போடும் காட்சியை புகைப்படமாக்கினார். இங்கு புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு சொல்லாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது.

பாலசிங்கம் இறந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகவிருக்கும் போதும் அவரது இடத்துக்கு இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வு நிறைவு பெற முன்பே புலிகளின் பொலிஸ் பொறுப்பாளர் நடேசனுக்கு மேலதிக பதவியாக அவர் பதவி வகித்த அரசியல் துறையும் கொடுக்கப்பட்டது. இந்த அவசர அவசரமான புலித் தலைமையின் செயல் வழமைக்கு மாறானது. புலிகளின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதற்கு விளக்கவுரை மேலதிகமாக தேவைப்படாது.

புலிகள் இயக்கத்தில் உயர் பதவிகளை அடைவதற்கு அதன் தலைமை விரும்பும் திறமைகளுடன் ‘வல்வெட்டித்துறை’ என்பதும் சிறப்புத் தகுதியாகும். இந்த நடேசனின் பின்னணியும் இங்கு மிக முக்கியமானது. அவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் மட்டும் அல்ல பிரபாகரனுக்கு தாய் வழியில் சொந்தக்காரரும் ஆவார்.

கடந்த சில மாதங்களாக தமிழ்ச்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராக வெளிக்காடிக்கொண்டாலும் உண்மையில் அவரிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்த கால பகுதியில் நடந்த அரசியல் தொடர்பாடல்களிலும் அறிக்கைகளிலும் ‘அரசியல் துறை’ என்ற பொதுப்படையான கையப்பமிட்டு இருந்தது. இது நடேசனுக்கும் தமிழ்ச்செல்வனுக்கு இடையில் இருந்த பனிப்போர் ஒரு நிர்ணயமான இறுதிக்கட்டத்தை தொட்டுவிட்டது என்பற்கு சான்றாகும். சுவிஸ்சில் நடந்த சமாதான பேச்சு வார்த்தையின் போது தமிழ்ச்செல்வனுக்கும் நடேசனுக்கும் வாய்த்தர்க்கம் முற்றி பேச்சின் சுற்று முழுமை பெற முன்பே அதை விட்டு வெளியேறி தனி விமானம் எடுத்து கொழும்பில் இறங்கி வன்னி போன சங்கதி அனைவரும் அறிந்த இரகசியமே.

நடேசன் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக ”சாதி” பார்ப்பவர் என்பது அவரின் மீது உள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது.

தமிழ்ச்செல்வனின் மரணச்செய்தி அறிவித்த கையோடு ‘தீபம்’ தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தி தமிழ்ச்செல்வனின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளையும் பேட்டிகளையும் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒளிபரப்பியது. தமிழ்ச்செல்வன் தனது வாழ்நாளில் ‘தீபம்’ தொலைக்காட்சிக்கென பிரத்தியேக நேர்காணல் எதையும் வழங்கியது கிடையாது. அப்படி இருந்தும் ‘தீபம்’ வழமைக்கு மாறாக தமிழ்ச்செல்வனின் மரண ஒளிபரப்பில் நடந்து கொண்டமுறையில் முன்கூட்டிய திட்டமிடல் நன்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

பிரேமதாச காலத்தில் மாத்தையா தலைமையில் புலிகளின் அரசியல் துறை இலங்கை தேர்தல் ஆணையகத்தில் ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னணி’ (Peoples Front of Liberation Tigers – PFLT) என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்தது. அதன் பொறுப்பாளர் மாத்தையாவுக்கும் அவரது விசுவாசிகள் கிட்டத்தட்ட 800 பேருக்கும் நடந்த கோரமான முடிவை சொல்ல தனியாக பல கட்டுரைகள் எழுதலாம். இன்றும் உயிருடன் இருக்கும் தமிழ்ச்செல்வனின் அண்ணன் மூர்த்திக்கும் யோகிக்கும் அதைப் பற்றி மனதைத் திறந்து சொல்ல ஆயிரம் சம்பவங்கள் இருக்கும். புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களுக்கும் தலைமைக்கும் அப்படி ஒரு பொருத்தம்.

3. ஒரு தகவல் » Blog Archive » : “அனைத்துலக சமூகங்களின் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்”

4. நெருப்பு இணையத்தளம் » : “தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா”

5. TamilNet: 05.11.07 Thamilchelvan laid to rest, 25 000 attend funeral

6. TamilNet: 05.11.07 Loss of Thamilchelvan, a consequence of International injustice says Poddu Ammaan

7. TamilNet: 08.11.07 Peace keeper’s silence regretted – Nadesan

8. Sri Lanka | A war strange as fiction | Economist.com: “An opportunistic president and a dyed-in-the-wool rebel appear to have ended Sri Lanka’s best-ever hope for peace”

In the east the army now holds more ground than it has for a decade. With 25,000 soldiers around Batticaloa, it is trying to drive an estimated 500 Tigers from their last two eastern hideouts, in thick jungle to the north-west and south-west of the town. General Fonseka says this will be done within two weeks. Yet whether the army can retain its ground as the refugees return, with Tigers hiding among them, is uncertain. Either way, it would be wrong to call this campaign a military triumph. It owes more to the defection in 2004 of the Tigers’ eastern commander, Vinayagamoorthy Muralitharan, who is known as Colonel Karuna.

the many-times proven ability of 10,000 self-trained guerrillas to defeat the government’s 250,000 armed forces in conventional battles. A shimmering example of this is the Tigers’ latest weapons system: a fleet of ten light aircraft, imported in pieces during the ceasefire and unveiled in two recent bombing raids on Colombo. One night in April, as the capital’s air defences blazed wildly into the night sky, the flying Tigers dropped bombs on a gas installation and an air force base. The Czech-made planes are believed to have a top speed of 260kph. To shoot them down, the government is negotiating to buy five Russian MIG-29s, capable of a speed of 2,400kph. A top official suggested it would do better to buy a couple of second-world-war British Spitfires.

secret to Mr Rajapakse’s election was that, at the Tigers’ command, north-eastern Tamils did not vote. Had they done so, most would have plumped for Mr Wickremesinghe, whose peacemaking delivered freedoms to travel and trade that they had not enjoyed in decades. This had represented a challenge to Mr Prabhakaran. Autocratic to his fingertips, incapable of sharing power even with trusted deputies such as Colonel Karuna, he wanted out of the peace process.

Mr Prabhakaran declared the election a Sinhalese affair, not for independence-seeking Tamils. A Sinhalese-chauvinist government suits Mr Prabhakaran, helping bolster Tamil support for the Tigers. Recent reports have even suggested that he struck a secret deal with the opportunistic Mr Rajapakse. In return for, in effect, delivering Mr Rajapakse to power, Mr Prabhakaran was promised cash, Colonel Karuna in chains and recognition of the Tigers’ control of the east. Yet no sooner was Mr Rajapakse elected than both sides were shelling and murdering each other.

What could break the cycle? It is rather hard to imagine. As in other ethnic conflicts, from Palestine to Northern Ireland, the solution to Sri Lanka’s conflict seems obvious. Tamils require an end to the discrimination that has virtually barred them from holding jobs in the army and police. After so long a struggle, they also require a fair apportioning of power to a united north-eastern province. Nothing less will bind them to Sri Lanka and diminish Mr Prabhakaran’s brutish hold over them.

If Sri Lanka is to have peace, it may not be under Mr Rajapakse. And it may not be soon, with no general election due in Sri Lanka until 2010.

9. Sri Lanka’s war | The northern front | Economist.com: “The army thinks it can win. It is wrong”

In the east, meanwhile, the government has an opportunity to show Tamils they are better-off under the government than they were under the rebels. But its commitment to this goal is questionable. In a Trincomalee town hall with views of the glittering Indian Ocean, more than 80 families sleep on a concrete floor amid battered cardboard boxes of possessions. They have lived here for more than a year, since they were shelled out of their homes in nearby Sampur, a former Tiger stronghold; thousands more of their fellow townspeople languish in camps outside the town. Though few of them seem to know it, they are unlikely to return home: Sampur has been turned into a no-go high-security zone for the army.

10. Liberation Tigers of Tamil Eelam (Sri Lanka, separatists) – Council on Foreign Relations

The Sri Lankan Conflict – Council on Foreign Relations

11. INDIA TODAY – The most widely read newsweekly in South Asia.: “The Rajapakse Government’s relentless military onslaught on the LTTE suffers a big blow as the Tigers reinforce their presence with a devastating attack on the Anuradhapura airbase.”

12. Urban Battle Fields of South Asia: Lessons Learned from Sri Lanka, India & Pakistan – Google Book Search – By C. Christine Fair

Examines several case studies of sustained campaigns of urban terrorism perpetrated by various domestic groups in the countries of India, Pakistan and Sri Lanka.

Complete copy of the Research as an e-book: RAND_MG210.pdf (application/pdf Object)

13. Terrorism – In the Spotlight: Liberation Tigers of Tamil Eelam (LTTE)

14. ICT – International Institute for Counter-Terrorism – Articles – Countering NBC Terrorism: “According to Bruce Hoffman, it was not Aum but the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who were the first insurgent, guerrilla or terrorist organization to stage a chemical weapons attack. In June 1990, the group used chlorine gas in its assault on a besieged Sri Lankan Armed Forces camp. The attack, like Aum’s five years later, was relatively crude: thus again suggesting the impediments to mounting more sophisticated operations employing CBRN weapons.”

This article is reprinted from the book The New Terrorism – Anatomy, Trends and Counter-Strategies by Andrew Tan and Kumar Ramakrishna (eds.) (Singapore: Eastern Universities Press, 2002), pp. 193-206.

The first one concerns the problem of definition. Today many authors and specialists, especially Americans, use a variety of terms: mega-terrorism, super-terrorism, terrorism of weapons of mass destruction (WMD), and—one of the latest—catastrophic terrorism. We prefer to use the more classical term, non-conventional terrorism, referring thus to the use, or the threat to use, chemical, biological, nuclear and radiological agents or weapons.

The second remark is more substantial. It concerns the effect of non-conventional terrorist attacks. Most researchers consider such weapons WMD.

We distinguish between limited—or mass destruction—non-conventional terrorist attacks and extreme—or mass annihilation—attacks. The difference lies in the number of potential victims from such an attack. Only extreme non-conventional terrorist attacks could produce the destruction of a whole city with many thousands of victims and contaminate a large area for a long period of time. The limited attacks might cause hundreds, perhaps even more victims, but only on a limited scale (for instance in a stadium, an embassy, a mall, etc.), and without contaminating the place for a long period of time.

15. ICT – International Institute for Counter-Terrorism – Articles – Suicide Terrorism: Development & Characteristics: “It is the only organization that succeeded in assassinating two heads of states.”

16. International Institute for Strategic Studies – June 6th – – Straits Times – LTTE poses growing threat outside Sri Lanka: “In 2003, LTTE attacked the Chinese trawler Fu Yuan 225, killing 15 Chinese nationals and two Sri Lankans off the north-eastern coast of Sri Lanka. Last year, Tamil militants hijacked a Jordanian-owned cargo vessel and earlier this year they attempted to ram a Cambodian-owned cargo vessel carrying relief supplies.”

17. Creating Peace in Sri Lanka: Civil War and Reconciliation – TamilCanadian

Robert I. Rotberg, ‘Sri Lanka’s Civil War: From Mayhem toward Diplomatic Resolution’
Chris Smith, ‘Sri Lanka’s Enduring War’
David Little, ‘Religion and Ethnicity in the Sri Lankan Civil War’
Darini Rajasingam-Senanayake, ‘The Danger of Devolution: The Hidden Economics’
Saman Kelegama, ‘Economic Costs of Conflict in Sri Lanka’
Donald R. Snodgrass, ‘The Economic Development of Sri Lanka: A Tale of Missed Opportunities’
Chandra R. de Silva, ‘The Role of Education in Ameliorating Political Violence in Sri Lanka’
Teresita Schaffer, ‘Peacemaking in Sri Lanka: The Kumaratunge Initiative’
William Weisberg and Donna Hicks, ‘Overcoming Obstacles to Peace: An Examination of Third-Party Processes’
Jayadeva Uyangoda, ‘A Political Culture of Conflict’
Rohan Edirisinghe, ‘Constitutionalism, Pluralism, and Ethnic Conflict: The Need for a New Initiative’
Neelan Tiruchelvam, ‘Devolution and the Elusive Quest for Peace’

18. Blackwell Synergy – Int Affairs, Volume 83 Issue 1 Page 69-86, January 2007 (Enhanced Abstract): “The Eelam endgame? * CHRIS SMITH”

19. Propaganda blitzkrieg :: Frontline: “In making the ceasefire offer, the LTTE appears to have two main objectives: to buy time to equip itself to meet the new security situation, and to come out of its growing international isolation. V. SURYANARAYAN”

20. U.N. Wire | 2004.01.28 | Crossette :: Much of World’s Conflict Fueled by Small Arms: “South Asia’s most developed country, dehumanized by the Tamil rebellion, which was initially trained by Indian intelligence agencies, and by the violence of the Sinhalese leftist-nationalist People’s Liberation Front in the country’s south, fueled at one stage by a wave of anti-Indian anger.”

21. IngentaConnect Nurturing a Nation on the Net: The Case of Tamil Eelam: “This study deals with the use of the Internet to construct national identity. It argues that the Internet is an ideal tool to instil and reinforce distinct political identities among ethnonational diasporas by both nation-states and yet-to-be nation-states, and draws attention to the need to study the discourse on the Internet with regard to construction of national identity. It uses the example of the struggle of the Sri Lankan Tamils for recognition as a nation-state to highlight the potential of the Internet to instil a sense of nationhood among widely dispersed members and mobilize them in the struggle for transformation into a nation-state.”

Global Media Journal – Indian Edition: “Nurturing the nation on the Net: the selective presentation of culture in political websites :: Maya Ranganathan”

22. Political Bureau Release-Let’s make 2005, the year for rebuilding the country!: “Chandrika – Piribaharan agreement is as worst as the betrayal of Ranil – Piribaharan agreement!”

23. Srilanka Assessment 2007: “Fatalities between 2000 and 2006”

24. CJO – Abstract – Ethnonationalist networks and transnational opportunities: the Sri Lankan Tamil diaspora: “This article presents an empirical case study of a type of nonstate actor largely overlooked in the IR literature on transnationalism: the diaspora or transnational ethnic actor. Building upon findings from contentious politics or social movements scholarship, I highlight the nexus of domestic and transnational politics by demonstrating how actors form ethnic networks and utilise transnational opportunities to pursue political goals in various states. Specifically, I argue that the formation of ethnic networks in the Tamil diaspora has enabled the Liberation Tigers of Tamil Eelam (LTTE) or ‘Tigers’ to engage in protracted insurgency against the Sri Lankan government army. Whereas traditional contentious politics scholarship is unable to explain the longevity and intensity of that conflict, a consideration of the transnational dimension provides new insight into how ethnic conflicts may be sustained. The combination of greater political freedom, community organising and access to advanced communications and financial resources in receiving states has allowed Tamil separatists in the diaspora to maintain ‘transnational ethnic networks’ which are in turn used to mobilise funds that have prolonged the secessionist campaign in Sri Lanka.”

25. “A World of Exiles.” The Economist.: Why does Macedonia have no embassy in Australia? Macedonia has no embassy in Australia because Greeks think the former Yugoslav republic that calls itself Macedonia has purloined the name from them, and the Greek vote counts for a lot in Australia. The case of the missing embassy is an extreme, but typical, example of how diasporas have long exerted their influence: they have lobbied in their adopted countries for policies favorable to the homeland. Some 60 million Tamils live in India, and Sri Lanka’s politics have on at least one occasion fatefully affected India’s: Rajiv Gandhi, a former prime minister of India, was assassinated by a Tamil suicide bomber in 1991 in retribution for India’s involvement in Sri Lanka’s civil war.

26. Socialist Review: “Sri Lanka: On the March Back to Civil War? – Third World Report (Asia) by Barry Pavier, June 2006 :: Since the beginning of April this year at least 300 civilians have died as the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has begun to unravel.”

a resolution will only come if Sri Lankan politics can break from the ethnic nationalism that has consumed Sri Lanka since 1948. Here lies the constant problem. Large socialist parties were formed in the colonial period. Uniquely, at the end of the 1930s, the majority of the Communist Party supported Trotsky against Stalin and went on to form the largest Marxist party, the LSSP. A significant Communist Party continued to exist and activists from both parties were involved in the development of large trade unions.

The tragedy was that by 1970 both were drawn into government alliances with the main Sinhala nationalist party, the SLFP. This fatal compromise prevented them from promoting a decisive break with the politics of ethnic nationalism. In the 1970s this pattern continued, with a split from the Communist Party � the JVP � which moved from radical socialism to ethnic nationalism (although their supporters still parade their socialist credentials based on what they were, not what they have become).

27. Gender Mainstreaming in Conflict Transformation :: Building Sustainable Peace: The United National Party (UNP) Government launched an equally brutal counter-offensive. Because the police force had been particularly targeted by the JVP, the police and other security personnel had a vested interest in revenge and were motivated to extinguish the JVP. Those targeted, however, were not only members of the JVP (many youth were killed on mere suspicion of being JVP sympathies), but also men who worked for the opposition Sri Lanka Freedom Party (SLFP) in its various organisational committees. Words denoting ‘terror’, the ‘disappeared’ and ‘torture chamber’ entered the popular vocabulary (Perera, 1999: 19). Security personnel and paramilitary groups like the Black Cats and Kola Koti (Green Tigers), specially formed to eliminate the JVP.


Theory

Fully democratic regimes will always be more willing to accommodate separatist movements than less democratic or non-democratic regimes. In order to maintain legitimacy and stability of the regime a democracy must be willing to provide forums for free speech and minority requests to be heard.

Democratic regimes will seek democratic and non-violent means to a resolution. We also theorize that the length of the con°ict will increase the willingness of the government to accommodate separatist movements regardless of the regime type of the government. As the con°ict spreads over many years the cost both in monetary and human life terms will result in an increased willingness to accommodate. As elites weigh the costs of continuing to fight with no peaceful end in sight and the costs of some accommodation, they will see that greater progress toward peace can be made through negotiations rather than a continuation of current policies.

Contrary to perceptions of some separatists leaders we believe that increased levels of violence may not urge governments to accommodate. Higher levels of violence could have both positive and negative e®ects on attaining the goals of the independence movement. As violence increases it can alienate public support for the cause and force the government to respond with an even more resistant stance toward the movement.

As elites must respond to the threat of continued violence it is also possible that the government may be willing to accommodate to prevent further violence and loss of life. The level of violence is not a reliable predictor of how government will respond to ethnic separatist movements.

Hypotheses
* Democratic regimes will be more accommodating to separatist movements than non-democratic regimes.

* The level of violence used in an ethnic separatist movements does not predict the willingness of governments to accommodate.

* The longer the duration of the separatist movement the more willing governments will be to accommodate.



Consolidated History:

1. Sri Lanka’s Continuing War on Eelam Tamils -’02 todate…in the Shadow of the Ceasefire

2. CSAS I Centre for South Asian Studies

3. Welcome :: SPUR – Society for Peace, Unity and human Rights in Sri Lanka

4. Liberation Tigers of Tamil Eelam (LTTE), Terrorist Group of Sri Lanka

5. MIPT Terrorism Knowledge Base

6. P.O.V. – No More Tears Sister . History of the Conflict in Sri Lanka | PBS

7. Sri Lankan Civil War – Wikipedia, the free encyclopedia

———————————————————————————————————————————————————–
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்சென்னை, நவ. 3: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஒலித்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி, உலகத் தமிழர்கள் மட்டுமல்லாது அமைதியை விரும்பும் மனித சமுதாயத்துக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ராணுவத்தின் இந்த இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது. அதிலும் குறிப்பாக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது இலங்கை இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை நாட்டில் இத்தனை கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கே கொடுமைகளுக்கு இலக்காகியிருக்கும் மக்களுடன் இனம், மொழி, கலாசாரம் ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள தமிழர்கள் வசிக்கும் இந்தியா இதனை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளையும், மனித உரிமைகளையும் வழங்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

தாமதமின்றி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக மக்கள் சார்பில் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தா. பாண்டியன்:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் தருவதாக உள்ளது. இலங்கை அரசு ஆயுத பலத்தை கொண்டு, போர் நடத்தி இனப்பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிப்பது, இலங்கை வாழ் தமிழ் மக்களை கொன்று அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருதரப்பினரையும் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

எஸ். ஜெகத்ரட்சகன்:

சுப. தமிழ்ச்செல்வன் மறைவு தனிப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மட்டும் இழப்பல்ல, மானமுள்ள அனைத்து தமிழர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாகும்.

இதற்கு மேலும், இந்திய அரசு மௌவுனம் காட்டாமல் இலங்கையுடன் இருக்கிற எல்லா உறவுகளையும் உடனடியாக விலக்கிக் கொண்டு, ஐ.நா. மூலம் இந்த கொடுமைகளுக்கு முடிவு காண வேண்டும் என ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.

கி. வீரமணி:

ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தைகளைத் திறம்பட நடத்திய தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இரங்கல்

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறி க்கை: சில தினங்களுக்கு முன்னர்தான் விடுதலைப்புலிகள் மீதுள்ள தடையை அகற்றி தேர்தல்களில் அவர்கள் நேரடியாக போட்டியிட சட்டம் கொண்டு வரப்போவதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு பின்னர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அந்த அரசு நம்பத்தகுந்த அரசு அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
———————————————————————————————————————————————————–

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சென்னை,நவ. 3: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிதை நடையில் அவர் தெரிவித்துள்ள இரங்கலில் கூறி

யிருப்பதாவது:

எப்போதும் சிரித்திடும் முகம்-

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம் !

இளமை; இளமை; இதயமோ;

இமயத்தின் வலிமை ! வலிமை !

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்

பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி !

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய

உத்தம வாலிபன்- உயிரனையான்-

உடன்பிறப்பினையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்

தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய் ?

———————————————————————————————————————————————————–

புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, நவ. 3: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதை அடுத்து முதல்வர் கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ரகசியத் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————————————–

———————————————————————————————————————————————————–

Posted in Air Force, Airforce, Attack, dead, Eezham, Eezlam, LTTE, Nedumaran, Sri lanka, Srilanka, Tamilchelvan, Tamilselvan, Thamilchelvan, Thamilselvan, Thamizhchelvan, Thamizhselvan, VaiKo, Vidudhalai, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | 2 Comments »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

Tehelka on Gujarat riots: Neerja Chowdhury – Sting, Expose, Revelations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தெஹல்கா புலனாய்வுக்கு அப்பால்…!

நீரஜா சௌத்ரி

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரங்கள் குறித்து ஏற்கெனவே இருந்துவந்த சந்தேகங்களை தெஹல்காவின் ரகசியப் புலனாய்வு நடவடிக்கை நிரூபித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக நடைபெற்றதே அந்தக் கலவரம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிவந்ததை அது பொய்யாக்கியிருக்கிறது. பஜ்ரங்க தளம், விசுவ ஹிந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதே அப் படுகொலைகள் என்பதை அந்த ரகசியப் புலனாய்வு டேப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அதில் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தக் குற்றச்செயல்களைச் செய்தவர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பும் ஆதரவும் இருந்தது என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுதான். அக் குற்றங்களைச் செய்தவர்களே அவற்றை ஒப்புக்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறை.

தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு சென்ற, அன்னியரான தெஹல்கா நிருபரிடம் இத்தனை பேர் தாம் அக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கூறியிருப்பதிலிருந்தே, அவர்களை யாரும் தொட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமது இயக்கத்தின் எவ்வளவு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், எந்த அரசியல்வாதியும் அரசியல் கட்சி ஊழியர்களும் தமது குற்றங்களைப் பற்றி அவ்வளவு சாதாரணமாக அவரிடம் கூறிவிட மாட்டார்கள். ஆனால், தெஹல்கா நிருபரிடம் தமது செயல்களைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “முஸ்லிம் வெறுப்பு’ என்னும் செயல்திட்டத்தின் மூலமாகத்தான் குஜராத்தில் அரசியல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்று தெஹல்கா நிருபர் கூறியிருப்பதை நிரூபிப்பதாக அது இருக்கிறது.

மோடிக்கு “விசா’ அனுமதி வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்த பிறகும், மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்தான் தனது பாதையை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, “வளர்ச்சி’யில் அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி. ஆனால், கடந்த காலச் செயல்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பாடுதான், கரண் தாப்பருக்கு அளித்துக்கொண்டு இருந்த பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறிய செயல்.

மோடியின் சொந்தக் கட்சியோ அவரைக் கண்டிக்க விரும்பவுமில்லை; கட்சியால் கண்டிக்க முடியவுமில்லை. 2002-ல் குஜராத்தில் நடந்த சம்பவங்களால் வேதனைக்கு உள்ளான அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், “ராஜ தர்ம’த்தைக் கடைப்பிடிக்காததற்காக மோடியை லேசாகக் கடிந்துகொண்டார். ஆனால் கோவாவில் அவர் இருந்தபோது, கட்சியிலிருந்து அவருக்கு வந்த கடுமையான நெருக்குதல்கள் காரணமாக, தனது நிலையை அவசரமாக மாற்றிக்கொண்டுவிட்டார் அவர்.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகுதான் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி என்று கூறி, தெஹல்கா ரகசியப் புலனாய்வை மறுக்கின்றனர் பாஜக தலைவர்கள். அப்படிப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள “கறைபடிந்த’ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கேட்டிருக்கவே கூடாது. எத்தனையோ குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.யான சகாபுதீனைப் போன்ற ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட ஒரே காரணத்தால் புனிதராக ஆகிவிடுவாரா? கடந்த காலக் குற்றமோ, நிகழ்காலக் குற்றமோ எதுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றியானது அதிலிருந்து ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கும் தெஹல்காவுக்கும் இடையே ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக. இவ்வாறு விட்டேத்தியாகக் கூறியிருப்பதிலிருந்தே மோடி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் திட்டமும் அக் கட்சிக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவரது அனுமதி தேவை; தெஹல்கா ரகசியப் புலனாய்வின் அம்பலங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் மோடியின் ஒப்புதல் தேவை.

உண்மை என்னவென்றால், குஜராத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத அடிப்படையில் இருகூறாக அணிதிரளச் செய்துவிடக்கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற கவலையில் தத்தளிக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், அது மீண்டும் மோடிக்குச் சாதகமாகப் போய்விடும்.

மத்தியில் 2004-ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். ஆனால், 2002 கலவரத்தின்போது, அக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஈசான் ஜாப்ரி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகூட உருப்படியான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. “வளர்ச்சி’ என்னும் கோஷத்தை மோடி சுவீகரித்துக்கொள்ள விட்டுவிட்டது காங்கிரஸ். பயங்கரவாத அச்சுறுத்தலால் குஜராத்தி இந்து மத்தியதர மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளில், தமது தீவிர இந்துத்துவா அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், இன்றைய உலகமயமாக்கச் சூழலில் முன்னேற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்னும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில், “வளமை மிக்க குஜராத்’ என்ற கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் மோடி. வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினர்தான் அவருக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையாகும்.

மோடியை எதிர்கொள்ள சரியான திட்டமும் உறுதியும் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியவை ஓரணியில் திரட்டும் ஒரு திட்டத்தை ஏற்கெனவே காங்கிரஸ் வகுத்தது. அதோடு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரையும் அணிதிரட்டியிருந்தால், மோடிக்குச் சிறந்த மாற்று சக்தியாக அது உருவாகி இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் களத்தில் மாயாவதி போன்றோரும் நுழைந்துவிட்டதால், காங்கிரஸ் இன்னும் தாமதித்துக்கொண்டு இருக்க முடியாது.

தெஹல்கா அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள், இந்தியாவின் மற்ற பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திலிருந்து குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் வேறாகவும் இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மிக முக்கியம். இடதுசாரிகளின் ஆதரவை உதறிவிட்டு மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்பது குறித்து குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முடிவுசெய்யக்கூடும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்டதைப்போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழியை மற்ற மாநில முதல்வர்களும் கையாளத் தொடங்கினால், அதை எப்படி தடுப்பது? மொத்த மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க வருகின்றனர். அதில் 35%-லிருந்து 40% வாக்குகள் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஏதாவது ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து, மொத்த வாக்காளர்களில் 20 சதவிகிதத்துக்குக் குறைவானவர்களைக் கவர்ந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நிலை.

விசாரணையில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறவிருக்கும் 200 பேரின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல; இந்திய அரசின் அதிகாரம், அரசியல் சட்டத்தின் புனிதத்தன்மை, கடமைப் பொறுப்பு, குடிமக்களைக் காப்பதில் சட்டத்தின் பங்கு… என, ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு அவசியமான அனைத்துமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தெஹல்கா புலனாய்வு ஒளிப்பதிவுகளைப் பார்த்தவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போர்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால், இது 2002-ல் இந்தியாவில் நடந்திருக்கிறது. எனினும், அச் செயல்களில் ஈடுபட்டோர் அதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு, தண்டனை அனுபவிக்காமல் இன்னும் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தெஹல்கா புலனாய்வு அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள் குறித்து, குறைந்தபட்சம் விரிவான விசாரணையாவது நடத்தப்பட வேண்டும்.

—————————————————————————————————————–

மோடி வெற்றியின் எதிரொலிகள்

நீரஜா சௌத்ரி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், யாராலும் தோற்கடிக்க முடியாதவராக உருவெடுத்துவிட்டார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் மீது அதிருப்தி நிலவியபோதிலும், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், குஜராத்தின் சாதுக்களில் ஒரு பிரிவினர் அவரை எதிர்த்தபோதிலும் அவை அனைத்தையும் சமாளித்து, அதோடு அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எதிராக நிலவக்கூடிய இயல்பான அதிருப்தியையும் முறியடித்து மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

2002-ல் இருந்த ஆதரவை ஏறக்குறைய தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அவர். கட்சியின் செல்வாக்கையும் கடந்து மாபெரும் தலைவராகிவிட்டார் மோடி. கடந்த 12 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்துவந்த 45 சதவீத மக்களின் ஆதரவை மோடி என்ற தலைவருக்கான வாக்குகளாக மாற்றிவிட்டார் அவர்.

1971-ல் காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் பிரிவுத் தலைவர்களைப் புறந்தள்ளி, துர்க்கையாக உருவான இந்திரா காந்தியை நினைவூட்டுகிறது 2007-ம் ஆண்டின் குஜராத். 2000-மாவது ஆண்டு பிகார் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, லாலு பிரசாத் பெற்ற வெற்றியையும் ஒத்திருக்கிறது மோடியின் வெற்றி.

மோடியேகூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டோரோ என்று தோன்றுகிறது. தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது அவரது நடவடிக்கைகள் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை என்று அவரைச் சந்தித்தவர்கள் கூறினர். “”எனது கட்சி எனக்கு எதிராகப் போரிட்டபோதிலும் என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்” என்று, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 3 நாள்களுக்குமுன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் காந்திநகர், வடோதரா, ராஜ்கோட், மேஹ்சானாவையும் கடந்து எதிரொலிக்கும் என்பது தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தத் தேர்தலானது இரு பிரதான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மோடி மற்றும் எல்.கே. அத்வானி ஆகிய தனிப்பட்ட இரு தலைவர்களுக்கும் முக்கியமானதாக அமைந்துவிட்டது.

மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்னும் காங்கிரஸ் கட்சியின் யோசனையைக் கிடப்பில் போடச் செய்துவிட்டது, குஜராத்தில் அக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி.

மனந்தளர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியதாக குஜராத் வெற்றி அமைந்திருக்கும் நேரத்தில், தில்லியில் தனது ஆட்சியைப் பாதியில் முடிவுக்குக் கொண்டுவரும் அறிவீனத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஈடுபடாது. காங்கிரஸýக்கு மற்றொரு அபாய எச்சரிக்கை மாயாவதியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது. குஜராத்தில் அதை காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவிலேயே கர்நாடகத்திலும் தில்லியிலும் தேர்தல் வரவிருக்கிறது. அங்கும் காங்கிரஸýக்குத் தொல்லையாகவே அவர் இருக்கப் போகிறார்.

குஜராத் தேர்தல் முடிவின் எதிரொலி பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்திலும் கொஞ்சம் கேட்கக்கூடும். அங்கு கட்சி அணிகளிடையே கட்டுக்கோப்புக் குலைந்திருந்தபோதிலும், பாஜகவும் சிவசேனையும் ஒன்றுபட்டு உழைக்கும்பட்சத்தில் குஜராத் வெற்றியானது அவற்றுக்குப் பெருமளவில் கைகொடுக்கக்கூடும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் என்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையில் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைச் சந்திக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இதற்குப் பல வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மறுபுறம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் கதியும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 2008-ல் தேர்தல் வரக்கூடும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இடதுசாரிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் அணுசக்தி உடன்பாட்டுக்காக ஆட்சியைத் தியாகம் செய்யும் அளவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, எந்தவிதமான உருப்படியான முடிவுக்கும் வராமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸýம் இடதுசாரிகளும் பேசிக்கொண்டே காலம் கடத்துவர் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்தால், தாங்களும் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஆதரிப்போம் என்று ஜனநாயகக் கட்சியும் அறிவித்திருக்கிறது. எனவே, ஜார்ஜ் புஷ்-மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே அந்த உடன்பாடு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியானது, அண்மைக் காலமாக உரசல் போக்கில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரûஸயும் கைகோத்துக்கொள்ளச் செய்துவிடக்கூடும். பலம் மிக்க காங்கிரûஸவிட பலவீனமான காங்கிரஸýடன் அரசியல் உறவு வைத்துக்கொள்ளவே இடதுசாரிகள் விரும்பக்கூடும். ஆனால், இப்போது பாஜக புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவரும் சூழலில், காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்த இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்படும் 3-வது அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவிலும் குஜராத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஹிந்துத்துவாவின் புதிய வெற்றிச் சின்னமாக நரேந்திர மோடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதானது, மத்தியில் அத்வானியின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக விளங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. உடனடியாகவோ, 2009-ம் ஆண்டிலோ அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, பலமும் ஆதிக்கமும் மிக்க தலைமை ஆகியவற்றைக் குழைத்து மோடி உருவாக்கி இருக்கும் புதிய அரசியல் பாதையை, பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பாஜக வரித்துக்கொள்ளக்கூடும். எனினும் குஜராத்துக்கு வெளியே தனக்கு ஆதரவைத் திரட்டுவது மோடிக்கு சவாலாகவே இருக்கும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் அருண் ஜேட்லியைத் தவிர அவரை ஆதரிப்போர் யாருமில்லை.

குஜராத்தில் அசைக்க முடியாத வெற்றியை மோடி பெற்றிருப்பதால் அவருக்கு எதிராக யாரும் இப்போதைக்குக் குரல் எழுப்ப மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்கு முன்பேகூட, கேசுபாய் படேல், கான்ஷிராம் ராணா போன்ற தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையை நோட்டீஸ் அனுப்ப வைத்தவர் மோடி.

ஹிந்துத்துவாவின் வெற்றிச் சின்னமாக மோடி உருவெடுத்திருப்பதால், ஆர்எஸ்எஸ்ஸýம் விஎச்பியும்கூட அவருடன் சமாதானம் செய்துகொள்ள முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தலைவராக உருவாவதும், பாஜக கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க தலைவராக உருவாவதும்தான் இப்போது நரேந்திர மோடிக்கு முன்னுள்ள சவால்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் தனது 3-வது பதவிக் காலத்தில் பலதரப்பட்டோரையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய, நிதானப் போக்கு கொண்ட, அதாவது “காங்கிரஸ் முகம்’ கொண்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேசிய அரசியலில் குதிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார் மோடி. 2009-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைக்கும்பட்சத்தில் அதை தேசிய அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பாக மோடி பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

எனவே, இப்போதைக்கு தமக்கு குஜராத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அதன் முலம் குஜராத்திலிருந்து தனது ஆதரவாளர்கள் பலர் எம்.பி.க்களாவதை உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடக்கூடும்.

2004 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 92-ல் பாஜகவைவிட கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், 90 தொகுதிகளில்தான் காங்கிரûஸவிட கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், அப்போது நரேந்திர மோடி அரசின் மீது அந்த மாநில ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் மத்தியில் நிலவிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், அத் தேர்தல் முடிவுகளின் அறிகுறிகளை உணர்ந்துகொண்ட மோடியோ, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

அண்மையில் பாஜகவால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்.கே. அத்வானியைப் பொருத்தவரை, குஜராத் வெற்றியானது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பாகும். அத் தேர்தலில் மோடி தோற்றிருந்தால், அத்வானியின் தலைமையை ஆதரிப்போரின் கரங்களைப் பலப்படுத்துவதாக அது இருந்திருக்கும்.

மோடியின் மகத்தான வெற்றியானது, அவரை அத்வானி சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும். நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் விருப்பப்படிதான் கட்சி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனது விருப்பப்படியே தேர்தல் டிக்கெட் வழங்கப்படுவதை அவர் உறுதிசெய்துவிடுவார்.

பாரதிய ஜனதா கட்சிக்கும்கூட மோடியின் வெற்றியானது கசப்பும் இனிப்பும் கலந்த மாத்திரை போன்றுதான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த, சோர்வுற்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது குஜராத் தேர்தல் வெற்றி.

அதே நேரத்தில், தனியொருவரின் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமையை வலியுறுத்திவரும் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நரேந்திர மோடியின் எழுச்சியானது, ஏற்றுக்கொண்டாக வேண்டிய புதிய பரிமாணமாக அமைந்துவிட்டது.

சுருக்கமாக கூறவேண்டுமானால் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மக்கள் தலைவர் குஜராத்தில் இருந்து உருவாகி வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


மோடியின் வெற்றியும்- சோவின் துள்ளலும்!Viduthalai Editorial

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்துவிட்டது. நரேந்திர மோடி தான் வெற்றிக்குக் காரணம். நரேந்திர மோடியின் நேர்மையும், நல்லாட்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
சோனியா தாக்குதல், பிரதமர் பிரச்சாரம், வெளியேறிய பா.ஜ.க.,வினர், டெகல்கா விவகாரம் பத்திரிகைகள் எதிர்ப்பு, டெலிவிஷன்கள் கண்டனம், ஜாதிப் பிளவு – முயற்சி இவற்றை எல்லாம் மீறி மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று அட்டைப் படத்திலிருந்து தலையங்கம் வரை தீட்டி திருவாளர் சோ ராமசாமி துள்ளிக் குதிக்கிறார்.
நீரோ மன்னன் என்று இந்திய உச்சநீதிமன்றம் எந்த அர்த்தத்தில் விமர்சனம் செய்தது என்பதுபற்றி எல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், அவர் ஆட்சியைப் பயன்படுத்தி சிறு பான்மை மக்களை நரவேட்டையாடிய கொடுமை எல்லாம் சரியானதுதான் என்று திருவாளர் சோ. ராமசாமி சொல்ல வருகிறார் போலும்.

இதன்மூலம், சிறுபான்மை மக்களைப் படுகொலை செய்வது சரிதான் என்ற உற்சாகத்தை இந்து வெறியர் களுக்கு அவர் ஊட்ட முனைகிறார் என்று கருதலாமா?

இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி களைப் பிரித்துவிட்டால் என்ன அக்கிரமம், கொடூரமான – காட்டுவிலங்காண்டித்தனமான முறையில் செயல்பட்டாலும், வெற்றி கிடைக்கும் – அந்த வழியை நரேந்திர மோடி பின் பற்றி வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிலை இந்தியா முழு வதும் புயல் வேகத்தில் பரவட்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மதக் கலவரத்தை நடத்தினால்தான் வாக்கு வங்கிகளை இரு கூறுகளாகப் பிரித்து குளிர்காயலாம் என்று திருவாளர் சோ எழுதுவதை நிதானமாகக் கவனிக்கத் தவறக்கூடாது. தொடக்க முதலே நரேந்திர மோடியின் பக்கம் நின்று அவருக்குத் தொடர்ந்து சோ பராக்குக் கூவுவது இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான்.

பா.ஜ.க.,வின் செயற் குழுவில் அவர் பெயர் இல்லை என்ற போது கடுமையாக பா.ஜ.க.,வின் தலைமையைச் சாடி தலையங்கம் தீட்டிய பார்ப்பனர் இவர் என்பதை நினைவுகூர்ந்தால், இவரும் இன்னொரு வகை யிலான நரவேட்டை நரேந்திர மோடியின் மறுபதிப்புதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

டெகல்கா படம் பிடித்து அதிகாரப்பூர்வமாக ஆதாரப்பூர்வ மாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே – அவற்றை மோடியால் மறுக்க முடிந்ததா? மக்கள் வாக்களித்து முடிவு செய்கின்ற தீர்ப்பா இது? சொந்த கட்சி சட்டமன்ற உறுப் பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனரே – அவை எல்லாம் இல்லாமல் போய்விடுமா?

ஆட்சியின் சிறப்பைப்பற்றியெல்லாம் ஆகா ஓகோ என்று எழுதித் தள்ளியிருக்கிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது இந்த மோடி ஆளும் குஜராத்தில்தானே?

அய்ந்து ஆண்டுகாலம் அகதிகள் முகாம்களில் சிறு பான்மையினர் இருக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? பாசிச ஆட்சி என்றுதானே கருதவேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சாலைகளும், விளக்குகளும், வசதி களும் இந்துக்கள் வாழும் தெருக்களில் மட்டும்தான்; சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தொலைக்காட்சிகளே படம் எடுத்துக் காட்டினவே – மறுக்க முடியுமா?

படுகொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப் படுத்த தேர்தல் ஒன்றுதான் சரியான வழி – நீதிமன்ற முறை என்ற ஒன்று கூடாது என்று கூறப் போகிறதா இந்தக் கூட்டம்?

இதற்கு முன் தேர்தல் வெற்றி பெற்றவர்களையும், கட்சி களையும் – நரேந்திர மோடி வெற்றியின் கண்ணோட்டத்தில் சோ விமர்சித்ததுண்டா?

அடிப்படை ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு பார்ப்பனரிட மிருந்து வேறு வகையாக எதிர்பார்க்க முடியாதுதான்!

————————————————————————————————————————-
மகேசன் தீர்ப்பு
Dinamani Editorial

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!

————————————————————————————————————————-
குல்தீப் நய்யாரின் கூற்றைக் கவனியுங்கள்

Viduthalai Editorial

பிரபல அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் எழுதி யுள்ள கட்டுரை ஒன்றில் குஜராத் தேர்தல்பற்றி நுணுக்கமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) வகுப்புவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கையை ஏன் மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை.

(2) நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் வகுப்புவாதம் மட்டுமே கொள்கையாக இருந்தது – இருக்கிறது.

(3) முசுலிம்களுக்கு எதிராக நபருக்கு நபர் எதிர்பிரச்சாரம் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.

(4) இந்துத்துவா கொள்கையை வைத்து மோடியும், பா.ஜ.க.,வும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரண்டாக அல்லது மூன்றாக நாட்டைப் பிரித்துக் கொண்டு இருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான விஸ்வ இந்துபரிசத் கிறித்தவர்களைக் குறி வைக்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி., ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு வி.எச்.பி., செய்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

(5) வகுப்புவாதம் மோசமான நிலையில் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பெருமைகளைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

(6) வகுப்பு வாதத்தை எதிர்ப்பதை காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அது வெற்றி பெற்றால், பாசிசம் உண்டாகும்.

(7) குஜராத் ஒரு மாநிலம் அல்ல; அது இந்துத்துவா என்ற கொள்கையின் அடையாளமாக ஆக்கப்பட்டுவிட்டது. முழுப் பிரச்சாரத்தையும் ஒரே ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டனர். நீங்கள் ஒரு இந்து என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.
அனேகமாக அரசியல் விமர்சகர் குல்தீப் நய்யார் குஜராத் தேர்தலை மட்டுமல்ல; இந்துத்துவாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., அதன் சங் பரிவாரங்களின் நச்சுத் தன்மையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இனிமேல் அரசியல் நடத்த விரும்பும் நியாயவாதிகள், முற்போக்குக் கொள்கையாளர்கள், இடதுசாரிகள் யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் வரப்புகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே.பி., வகையறாக்களுக்கு எப்படி ஒரு பார்வை – இந்து என்ற பார்வையை மட்டும் மய்யப் படுத்தி மக்கள் மத்தியில் தூபம் போட்டு மதத் தன்மையில் ஒன் றிணைக்க விரும்புகிறார்களோ, அதேபோல, ஒரே நோக்கம், ஒரே பார்வை, ஒரே பாய்ச்சல் இந்த மதவாத – வகுப்புவாத சக்திகளை அவற்றின் ஆணி வேர் வரை சென்று நிர்மூலம் செய்வதில்தான் இருக்க வேண்டும்.

முதன்மையாக தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு முக்கியமாக இந்த குறிக்கோள் இருக்கவேண்டும்; அதன் அடிப்படையில் மதச் சார்பற்ற சக்திகளைச் சேதாரம் இல்லாமல், வீண் சச்சரவுகளை உண்டாக்கும் பிரச்சினை களை உற்பத்தி செய்யாமல், அணைத்துச் செல்லும் பக்குவத்தோடு பலத்தைப் பெருக்கி, ஒரே மூச்சில் மதவாதத்தை வீழ்த்தித் தள்ளிட வேண்டும்.

குஜராத்தில் இவ்வளவுப் பச்சையாக மதவாதத் தேர்தல் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் எப்படி அவற்றை அனுமதித்தது என்றே தெரியவில்லை.

பா.ஜ.க., செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அதன் பார்வை திரும்பக்கூடும்; அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அது பகற்கனவு என்று காட்ட வேண்டியது அம்மாநிலங்களின் கடமையாகும். அடுத்து நடக்க உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மதச் சார்பற்ற சக்திகள் ஒரு சோதனைக் களமாகக் கருதவேண்டும்.

2009 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்த லுக்குமுன் இந்த வகையில் தீவிரமாக திட்டமிட்ட வகையில் அறிவியல் கணிப்போடு செயல்பட்டே தீரவேண்டும்.
சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதுண்டு. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது என்பதையும் மனதிற்கொண்டு, சோர்வுக்குச் சிறிதும் இடமின்றி, தன்னம்பிக்கையுடன் இடதுசாரிகளும், மதச் சார்பற்ற அணிகளும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டியது அவசியம்.

————————————————————————————————————————-

Posted in Aajtak, abuse, Advani, America, Arrest, Ayodhya, Ayodya, Ayothya, Bajrang, Bharatiya Janata Party, BJP, CBI, Censure, Chowdhry, Chowdhury, CNN, Condemn, Congress, crimes, Criminal, dead, Elections, Expose, Godhra, Gujarat, Hindu, Hinduism, Hindutva, HT, Investigation, Islam, Judges, Justice, Killed, Law, massacre, Media, MLA, Modi, MP, MSM, Muslim, Nanavati, Narendhra, Narendra, Narendra Modi, Narenthira, Neerja, Operation Kalank, Order, Party, pogrom, Police, Polls, Power, Revelations, riots, RSS, Sting, Tehelka, USA, Vajpai, Vajpayee, Vajpayi, VHP, Vidudhalai, Viduthalai, Violence, Visa, Vituthalai | Leave a Comment »

ADMK & Jeyalalitha – Politics of Contradications & Alliances of Convenience :: Viduthalai Dravidar Kazhakam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

JJ ADMK Jeyalalitha Viduthalai Contradications Politics Alliances

Posted in Adams, ADMK, AIADMK, Alliance, Baalu, BJP, Bridge, CM, Construction, Contradications, Dam, Dhravidar, DK, DMK, Dravidar, Election, Fort, Govt, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Manifesto, MDMK, Minister, parliament, Politics, Poll, Project, Ramar, Sethu, Ships, Srilanka, Thravidar, TR Baalu, VaiGo, Veeramani, Vidudhalai, Viduthalai | Leave a Comment »