Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Assassination’ Category

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

Posted in Arms, Assassin, Assassination, Assassinations, Belief, Biosketch, Bloc, Brahmins, Caste, Chandrabose, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Convict, Correctional, Courts, Dalit, dead, Emmanuel, employees, Faces, Faith, FB, FC, Forward Bloc, Forward Block, Freedom, Gandhi, Harijans, Hinduism, Hindutva, History, Immanuel, Independence, Jail, Jameen, Judge, Justice, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthik, Law, Madurai, Muthuramalinga, Muthuramalingam, Nethaji, Oppression, Order, people, Prisons, Rajaji, Religion, Sathiamoorthy, Sathiamurthy, Sathiyamoorthy, Sathiyamurthy, Shubash, Subash, Temple, Thevar, War, Weapons, workers | 142 Comments »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Prime Minister Lal Bahadur Shasthri – R Venkatraman (Biosketch)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

எளிமைக்கு இலக்கணம் சாஸ்திரி!

ஆர். வெங்கடராமன்

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டாலும் லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் லேசாக வலி ஏற்படுகிறது. ஈடு இணையற்ற எளிமையான மனிதர். பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் ஒரே மாதிரியாக இருந்தார். பதவியைத் தேடி அவர் சென்றதில்லை, மாறாக, பதவிகள்தான் அவரைத் தேடி வந்தன.

1950-ல் அப்போதைய நாடாளுமன்றத்துக்கு நான் சென்றபோது காமராஜரும் சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததைக் கண்டேன். இருவருமே ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவர்கள். இருவரும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள், சொந்தமாக சொத்தோ, செல்வாக்குள்ள தொடர்புகளோ இல்லாமல் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள். நேர்மை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றின் மூலம் உன்னத நிலைக்கு உயர்ந்தவர்கள். இருவருமே சமூகத்தில் வறிய பிரிவினர் மீது எல்லையற்ற கரிசனம் கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் தலைவிரித்தாடியபோது நடுநிலையுடனும் நியாயமாகவும் சாஸ்திரி அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்ட விதத்தால் மிகவும் வியப்படைந்தேன். ஒரு தரப்பு அல்லது ஒரு கோஷ்டி சொல்வதை மட்டும் கேட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டார்.

காமராஜரிடம் அதே குணம்தான். ஒருதலைப்பட்சமாக யாராவது ஏதாவது கூறினால் அவர், “”பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடுவார். தில்லி அரசியல் வட்டாரங்களில் காமராஜரின் அந்த பதில் ரொம்பப் பிரபலம். இருதரப்பையும் கேட்டு, விருப்புவெறுப்பு இல்லாமல் எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் சாஸ்திரியின் நல்ல குணம், உயர் பதவிகளை அவர் வகிக்கப் பெரிதும் கைகொடுத்தது.

சாஸ்திரியின் அடக்கமும் காங்கிரஸ்காரர்களிடையே மிகவும் பிரசித்தியாக இருந்தது. சாஸ்திரியின் மகன் ஹரி, சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். நீ என்னுடைய மகன் என்று யாருக்கும் தெரிவிக்கக்கூடாது, என் பெயரைச் சொல்லி நீ கூடுதலாக எந்தச் சலுகையையும் யாரிடமும் பெறக்கூடாது என்றே மகனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார் சாஸ்திரி. சாஸ்திரியாரின் மகளும் மாப்பிள்ளையும் சென்னைக்கு வந்தபோது ஆளுநர் இல்லமான ராஜ்பவனில் தங்க மறுத்துவிட்டனர்.

அவர் பிரதமராகப் பதவி வகிக்தபோது இரவு 10 மணிக்கு அவரை அவருடைய அலுவலகத்தில் சென்று பார்த்தேன். அப்போது அவருடைய கையெழுத்துக்கு ஒரு கோப்பு வந்தது. அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட மேஜையில் பேனாவைத் தேடினார் அவர். வெளிநாட்டில் வாங்கிய என்னுடைய பால்-பாயிண்ட் பேனாவை நான் உடனே அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி கையெழுத்திட்டுவிட்டு என்னிடம் திருப்பித்தந்த அவர், நன்றாக எழுதுகிறது என்று கூறினார். வெளியே புறப்பட்ட நான், சாஸ்திரியாரின் உதவியாளரை அழைத்து, இந்தப் பேனா அவருக்குப் பிடித்திருக்கிறது, இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன். அடுத்த நாள் சாஸ்திரியாரின் உதவியாளர் நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்து, சாஸ்திரியார் அதைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொன்னார், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

உத்தரப் பிரதேசத்திலும் மத்திய அரசிலும் தாம் வகித்த பதவிகளில் எல்லாம் தனி முத்திரை பதித்துச் சென்றார் சாஸ்திரி.

ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்களில் அப்போது நிலவிய பல்வேறு வகுப்புகளை அவர் ரத்து செய்தார். மேல் வகுப்பு, சாதாரண வகுப்பு என்ற இரண்டை மட்டும் அனுமதித்தார். சாதாரண வகுப்புப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தினார்.

தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, பெரிய தொழில் நிறுவனங்களுடன் கதர், கிராமத் தொழில்களும் வளர்ச்சி பெற உரிய முக்கியத்துவம் தந்தார்.

பிரதமராக இருந்தபோது, தொழில் வளர்ச்சி, ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு பட்டியிலில் இருந்து பலவற்றைப் படிப்படியாக நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாராளமயத்தை அப்போதே அவர் அனுமதித்தார்.

மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிராக பெரிய போராட்டம் நடைபெற்றது. 1965 ஜனவரி முதல் தேதி ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மாறிவிடுவார்கள் என்று பெரிய போராட்டம் வெடித்தது. தென்னிந்திய மாநில மக்களின் அச்சத்தைப் புரிந்துகொண்ட சாஸ்திரி, ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். 1965 ஜனவரி 1-க்குப் பிறகு ஹிந்தியுடன் ஆங்கிலமும் அரசு நிர்வாக நடைமுறையில் தொடர அவர் அதிகாரபூர்வ மொழி மசோதாவை அறிமுகம் செய்தார். காரியசாத்தியமாக முடிவெடுக்கும் அவருடைய பண்பு மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தமது துறையில் நடக்கும் தவறுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் அமைச்சர்தான் பொறுப்பு என்ற தார்மிக நெறியை முதலில் ஏற்படுத்தியவரே லால் பகதூர் சாஸ்திரிதான். அப்போதைய சென்னை மாகாணத்தில் நிகழ்ந்த பெரிய ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். நேருஜி எவ்வளவோ வலியுறுத்தி கேட்டுக்கொண்டும் அவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

பொதுச்சபை கூட்டத்துக்கும், சபையின் நிர்வாக நடுவர் மன்றக் கூட்டத்துக்கும் இந்தியாவின் பிரதிநிதியாக பல முறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கிருப்பவர்கள், “நேருஜிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரத் தகுதியானவர்கள் யார்?’ என்று என்னிடம் அக்கறையுடன் விசாரிப்பார்கள். ஜனநாயகம் தழைத்தோங்கும் எங்கள் நாட்டில், நேரம் வரும்போது உரியவரைத் தேர்ந்தெடுப்போம் என்றே நான் பதில் சொல்லிவந்தேன்.

நேருஜி மறைந்த பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு காமராஜரிடம் விடப்பட்டது. அப்போது கருத்தொற்றுமை மூலம் முடிவெடுப்பது என்ற உத்தியை காங்கிரஸ் பின்பற்றி வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி அவருடைய கருத்தை கேட்பது என்ற நடைமுறையை காமராஜர் பின்பற்றினார். மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி என்ற இருவர் இடையே போட்டி இருந்தது. பெரும்பாலானவர்கள் சாஸ்திரியையே விரும்பினர். அதை மொரார்ஜி தேசாயும் ஏற்றுக்கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக ஏற்கும் தீர்மானத்தை வழிமொழிந்தார்.

1966 ஜனவரி 11-ம் தேதி தாஷ்கெண்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. திறமையான ஒரு நிர்வாகியை, சாமானிய மனிதனின் உண்மையான நண்பனை நாடு இழந்துவிட்டது.

ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று அவர் தந்த கோஷம் என்றும் நிலைத்திருக்கும். ஹிந்துஸ்தானம் வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையின் விளைவாக அவருள் உதித்ததே இந்த கோஷம்.

(கட்டுரையாளர்: முன்னாள் குடியரசுத் தலைவர்)

Posted in Agriculture, Assassination, Biography, Biosketch, CCCP, dead, Faces, Farmer, LB Shasthri, LB Shastri, Murder, names, people, PM, President, Prez, Prime Minister, Russia, Shasthri, Shastri, Tashkent, USSR, Venkatraman | Leave a Comment »

Notorious criminal Vellai Ravi & associate killed in encounter

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi « Tamil News – வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?:

07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.


தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.

2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.
————————————————————————————————

அடுத்த குறி யார்?

சென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார்? என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.

ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் பட்டியல்:

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்

  • மாலைக்கண் செல்வம்,
  • காதுகுத்து ரவி,
  • கேட் ராஜேந்திரன்,
  • நாகேந்திரன்,
  • சேரா,
  • காட்டான் சுப்பிரமணியன்,
  • ஜெர்மன் ரவி,
  • கருப்பு பாலு,
  • ஸ்டாலின்,
  • திண்டுக்கல் பாண்டியன்

என போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————–
வெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா?

ஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:

புதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.

அப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.

என்னை ஏன் கடத்தப் போகிறார்கள்? என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.

என்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.

——————————————————————————————-
வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி

ஓசூர், ஆக. 3 –

ஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.

உறவினர்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

அடையாளம் காட்டினர்

வெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

4-வது மகன்

முன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

குணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-

காய்கறி வியாபாரம்

நானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

எனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.

தமிழில் பேசுவோம்

வெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.

எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.

இவ்வாறு தமிழ்அரசி கூறினார்.

——————————————————————————————-

லாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.

வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-

என் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.

எப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.

அவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.

கடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
——————————————————————————————-

வெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு

சென்னை, ஆக. 2-

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.

பின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.

இதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்

ஓசூர், ஆக. 2-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.

நேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.

இந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.

வெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.

வெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-

வெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு

பெரம்பூர், ஆக. 3-

சென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.

இதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.

அவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.

பக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.

செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.

பின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

என் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.

எப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.

இதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.

அப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.

அதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.

ஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.

அதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.

இவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.

———————————————————————————————————————

வெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்

சென்னை, ஆக. 4-

Vellai ravi photoசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.

அதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.

இதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.

வெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.

போலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.

இந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.

சானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.

சமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.

அவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.
அப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.

இதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.

—————————————————————–
காசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:

வட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.

அதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.

திருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.

———————————————————————————————————————
ரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்!

சென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

ரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.

எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன? முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.

ரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.

நான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.

“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.

3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

———————————————————————————————–

என்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது

சென்னை, ஆக. 8-

சென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்
மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.

போலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

என்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு

செய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.

மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.

நல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.

மாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.

சமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-

எனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.

நான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்னmaalaikkan selvam arcot veerasamy DMK Politics Party affiliations rowdy dada arrest செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.

சென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.

அதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.

இதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.

உடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

பின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.

———————————————————————————————–
அக்கா மகனை கொன்றதால்
பழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
புழல் சிறையில் அடைப்பு

செங்குன்றம், ஆக.10-

அக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட்டு பிடிக்க உத்தரவு

சென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.

இதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

செல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பழிக்கு பழி

கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

———————————————————————————————–

Posted in ACP, Akhthar, Akthar, Alcohol, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Arkadu, Arms, Arrack, Assassin, Assassination, Assembly, Bagalur, Bangalore, BJP, Bombs, Cabinet, Chennai, Cinema, Commissioner, CoP, Crime, Criminal, CSI, Dada, DCP, dead, Election, Electricity, Encounter, Extortion, Faces, gang, Guna, Hide, Hideout, Hijack, Hosoor, Hosur, HR, ICF, Illicit, Karnataka, Kidnap, kidnappping, Kumaran, Law, Leaders, Liquor, Maalaikan, Maalaikkan, Madras, Minister, MLA, Money, Movies, Murder, Murugan, Murukan, N Veerasamy, Nanjil, Nanjil Kumaran, National Highway, Neta, Netha, nexus, NH, Order, Osur, people, Peramboor, Perambur, Police, Poll, Raichoor, Raichur, Rajaram, ransom, Ravi, Rich, rights, Rowdy, Santhapuram, Selvam, Selvaraghavan, Shakeel, Story, TASMAC, Toddy, Veerachami, Veerachamy, Veeramani, Veerasami, Veerasamy, Vellai, Vellai Ravi, Venkatasaami, Venkatasaamy, Venkatasami, Venkatasamy, Venkatesa Pannaiyaar, Venkatesa Pannaiyar, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayakumar, Vijaykumar, Weapons | Leave a Comment »

Coimbatore blasts: Top accused Madani acquitted; Al-Umma founder S A Basha, 72 others convicted

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2007

கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு

கோவை, ஆக. 1-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.

ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு

புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.

பாஜக அதிருப்தி

கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.

“பிரார்த்தனை பலித்துவிட்டது’

கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.

மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–

5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்

கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.

இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.

வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

———————————————————————————————————————–

சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?

கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.

எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர்கள் விவரம்:

சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.

யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.

கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.

———————————————————————————————————————–

பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்

கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.

தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.

———————————————————————————————————————–

69 பேருக்கு கடும் தண்டனை?

கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:

எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.

இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

———————————————————————————————————————–

“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’

கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.

இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.

———————————————————————————————————————–

பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.

குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

———————————————————————————————————————–

கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி

கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:

கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

———————————————————————————————————————–

மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்

கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.

தனிகோர்ட்டு தீர்ப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிம்மதி அளிக்கிறது

எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.

அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–

ஜாமீனா? விடுதலையா?

கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.

பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.

இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.

மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.

ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.

இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.

இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.

மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்

ஒலி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்

Posted in 1997, 1998, Abdul Nasser Madani, acquit, Advani, Al-Umma, AlUmma, Ansari, Arms, Assassination, Baasha, Baatcha, Baatchaa, Basha, Bharatiya Janata Party, BJP, Blast, Blasts, Bombs, Campaign, case, CBI, chairman, Coimbatore, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Congress, consipiracy, constable, Convict, conviction, Courts, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Extremism, Extremists, founder, Guilty, Hindu, Hinduism, Hindutva, Investigation, ISI, Islam, Judge, Justice, Kerala, Kovai, L K Advani, Law, Leader, LK Advani, Madaani, Madani, Madhani, Malayalam, minority, Mogammad, Mohammad, Mohammed, Mohammed Ansari, Muhammad, Murder, Muslim, Order, PDP, People's Democratic Party, policeman, RAW, Religion, retaliation, RSS, SA Basha, Selvaraj, Serial, SIT, Terrorism, Terrorists, THIRUVANANTHAPURAM, Trivandrum, Weapons | Leave a Comment »

PCB insists it was a heart attack, but rumours give murder spin to Woolmer case

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு

கிங்ஸ்டன், மார்ச். 19-

உலககோப்பை போட்டி யில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப் பட்டனர்.

இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாந்தி எடுத்த நிலையில் தரையில் மயங்கி கிடந்தார். முக்கில் ரத்தம் வடிந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத் திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரண மாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.

பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறும்போது, தோல்விக்கு பால்உல்மர் பொறுக்கு ஏற்க முடியாது. கேப்டன்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஆடியதன் மூலம் பால்உல்மரை கொன்று விட்டனர்” என்றார்.

வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.

===============================================

தோல்வி விரக்தியால் ஊல்மர் தற்கொலை?: கிரிக்கெட் உலகமே துயரத்தில் மூழ்கியது

கராச்சி, மார்ச் 20: ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் திடீரென உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“”அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சியில் திங்கள்கிழமை வெளியான “ஜேங்’ பத்திரிகை, “ஊல்மர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும்’ என்று மே.இ.தீவுகளின் கிங்ஸ்டனில் உள்ள தங்கள் பத்திரிகையின் செய்தியாளர்கள் கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“”இருப்பினும் இவ்விஷயம் தொடர்பாக இப்போதே எந்தவித முடிவுக்கும் வர முடியாது. விசாரணைகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துக்கத்தில் பாக். அணியினர்: ஊல்மரின் மரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல் ஊல்மர் தங்களுடன் பழகிவந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“”வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை என்றால் அதற்கு பயிற்சியாளர் காரணமில்லை. அவர் மீது குறைகூற முடியாது” என டிவி சேனல் ஒன்றிடம் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

“டான்’, “நியூஸ்’ போன்ற பத்திரிகைகள் ஊல்மரின் மறைவுக்கும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கும் முடிச்சுப் போட்டு செய்திகளை வெளியிட்டன.

“விரக்தி அடைந்த உல்மர் சாவைத் தழுவினார்’ என்று “டான்’ பத்திரிகையும், “அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் ஊல்மர் மரணம்’ என்று “நியூஸ்’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக். அணியின் தோல்விக்கு காரணமானவர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள பலரையும் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் தலையங்கமே வெளியிட்டன.

பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் அஷ்ரபின் பெயரும் நிந்தனைக்கு உள்ளாகியுள்ளது.

ஊல்மரின் திடீர் மறைவு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே துயரத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஊல்மர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்களும் ஊல்மர் மறைவால் பெரிதும் துயரமடைவதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் ஊல்மர் பயிற்சி அளித்த காட்சிகளை திங்கள்கிழமை பல டிவி சேனல்களும் தொடர்ந்து ஒளிபரப்பின.

Posted in Assassination, Casino, Coach, Cricket, Cronje, diabetes, Gambling, Games, ICC, insulin, Inzamam, Inzi, Ireland, Loss, Manager, Match fixing, medical, Murder, Pakistan, Poison, SA, South Africa, Stroke, Suicide, Trainer, WC2007, Woolmer, World Cup | Leave a Comment »

Pakistan judge sacking sparks rows – Political Changes

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தானில் அரசியல் மாற்றம்?

பொ. லாசரஸ் சாம்ராஜ்

பாகிஸ்தானின் வரலாற்றில் முதன்முதலாக அந்நாட்டின் தலைமை நீதிபதியான இப்திகார் முகமது சௌத்ரி அதிபர் முஷாரபின் அதிரடி உத்தரவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் அரசியலில் இந்த நடவடிக்கை பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைகளும், அதிகாரத் துஷ்பிரயோகமும்தான் அவரின் பதவியைப் பறிக்க முக்கிய காரணங்கள் என்கிறார் அதிபர் முஷாரப்.

தலைமை நீதிபதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுக்களை அதிபர் நியமித்துள்ளார். இதில் மூவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் நீதிபதி அப்துல் ஹமீது டோகர் மீது நில மோசடி ஊழல் குறித்தும்; ஹுசைன் சௌத்ரி மீது அவர் மகளுக்கு மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பிற்கு சிபாரிசின் பேரில் இடம் வாங்கியது குறித்தும்; ஷாலத்தி மீது பல்கலைக்கழக நிதி மோசடி குறித்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் தவிர லாகூர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹுசைன் சௌத்ரிக்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியிடம் பல மனக்கசப்புகள் உள்ளன என்பது வெளிப்படை.

இப்படிப்பட்ட நீதிபதிகள் கொண்ட உயர்நிலைக் குழு விசாரணை செய்து கொடுக்கும் தீர்ப்பை தான் ஏற்பதாக முஷாரப் மார்தட்டி அறிவித்துள்ளது வேடிக்கையிலும் வேடிக்கை.

உண்மையில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் வேறு பல உள்ளன. நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன நீதிபதி இப்திகார் 2005 ஜூன் 30-ல் பணி மூப்பு அடிப்படையில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் அளித்த சில தீர்ப்புகள் மக்களின் பேராதரவைப் பெற்றன. இதனால் இவர் “மக்கள் நீதிபதி’ என்று புகழப்பட்டார்.

பொதுவாக, சர்வாதிகாரிகளும், புகழுக்கு அடிமையான அரசியல் தலைவர்களும், அதிகாரத்தையும், புகழையும் தான் விரும்புகிறவர்களுக்கு மட்டும் பிச்சையிட்டுத்தான் பழக்கப்பட்டவர்களேதவிர, பகிர்ந்தளிப்பவர்களல்ல. இத்துடன் தங்களை எவரும் கேள்வி கேட்பதையோ விமர்சிப்பதையோ இவர்கள் பொறுப்பவர்களல்ல. இதற்கு முஷாரபும் விதிவிலக்கல்ல.

நீதிபதி இப்திகார் மீது முஷாரபுக்கு தீராத வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில முக்கிய வழக்குகள் இன்னும் சில நாள்களில் இப்திகார் முன்பு விசாரணைக்கு வரவிருந்தன.

முதலாவது, இரட்டை குடியுரிமை பெற்றவரான பிரதமர் செüகத் அஜீஸ் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த வழக்காகும். இரண்டாவது வழக்கு அதிபர் முஷாரப் இன்னொரு முறை தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்த வழக்கு.

இவ்விரண்டு வழக்குகளையும் நேர்மையான நீதிபதி விசாரித்து சட்டப்படி தீர்ப்பளித்தால் அதிபர் மற்றும் பிரதமரின் பதவிகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த முஷாரப் முந்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை முதன்முறையாக பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளையும், பெரும்பாலான வழக்கறிஞர்களையும், பொது மக்களையும், மக்கள் தொடர்பு சாதனங்களையும், மாணவர்களையும், ஓரணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இந்தப் போராட்டம் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. முதலாவது, பாகிஸ்தான் வரலாற்றில் அமைதியாக எந்த பெரிய அரசியல் மாற்றமும் ஏற்பட்டதில்லை. இரண்டாவது, மக்கள் ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருந்தாலும், ராணுவ ஆட்சிக்குப் பழக்கப்பட்டு போனவர்கள். மூன்றாவதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையிலும், தனிநபர், பிராந்தியம், மதத்தை மையமாகக் கொண்டும் பிரிந்து கிடக்கின்றன.

புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்னால்டு டாயன்பி ஓர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டார். அதில் பிரதானமானது நீதித்துறையில் வளரும் ஊழல்.

இரண்டாவது, கல்வித்துறையில் உள்ள ஊழல். இவை இரண்டும் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியாவிலும் நச்சு விதைகளைப் பரப்பும் பெரும் மரங்களாய் பல்கிப் பெருகி வருகிறது.

பிறர் தவறிலிருந்து பாடம் படிப்பவன்தான் சிறந்த மாணவன். அதுபோல, பிற நாடுகளின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இல்லையென்றால், எதிர்கால இந்தியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவை சுயபரிசோதனை.

(கட்டுரையாளர்: பேராசிரியர், அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறை, புதுவை பல்கலைக்கழகம்).


பாகிஸ்தானில் 7 நீதிபதிகள் பதவி விலகல்

இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி
இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி

பாகிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகர் முகமது சௌத்திரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஏழு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.

கடந்த வாரம் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக் கூறி தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இது வரை எட்டு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.

பாகிஸ்தானின் பல வழக்குரைஞர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் பதிவி நீக்கம் நீதித் துறையின் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல் என அவர்கள் கூறியுள்ளார்கள்.

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கை தாம் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு கடுமையானது: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் விளக்கம்இஸ்லாமாபாத், மார்ச் 20: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள இஃப்திகார் செüத்ரி மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று அதிபர் பர்வீஸ் முஷாரப் தெரிவித்தார்.”தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலும் கிடையாது. பெஷாவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இஃப்திகார் மீது சில குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மார்ச் 5-ம் தேதி எனக்கு அனுப்பியிருந்தார். நாட்டின் மிக உயரிய பதவியில் இருப்பவர் என்பதால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முதலில் இது குறித்து தெரிவித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் அதற்கு அளித்த பதில் திருப்தியைத் தரவில்லை.இந் நிலையில் தலைமை நீதிபதியே என்னைச் சந்தித்து நேரில் விளக்கம் அளித்தார். அப்போது நான் குற்றச்சாட்டையும், அதற்கு தரப்பட்ட ஆதாரத்தையும் அவரிடம் தெரிவித்தேன். அவரால் சரியான பதிலைத் தர முடியவில்லை.இந் நிலையில்தான் அவரைத் தாற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்குள் இந்த விஷயம் அரசியல் எதிரிகளால் திரித்து பிரசாரம் செய்யப்பட்டது. “”ராணுவ ஆட்சியாளர் நாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் காலில்போட்டு மிதிக்கப் பார்க்கிறார்” என்று ஆதாரம் இல்லாமல் என்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த தவறான பிரசாரம் பாகிஸ்தானில் மட்டும் இல்லாமல் சர்வதேச அரங்கிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதி பகவன்தாஸ் இப்போது இந்தியாவில் யாத்திரை சென்றிருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை நாடு திரும்புகிறார். இஃப்திகார் மீதான குற்றச்சாட்டும் அதற்கான ஆதாரங்களும் அவர் தலைமையிலான பெஞ்சிடம் அளிக்கப்படும். அதன் பிறகு அவர் முடிவெடுக்கட்டும். அதுவரை காத்திருக்கத் தயார்.

தன் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதைத் தடுக்கவும், தன்னைத் தியாகியாகச் சித்திரித்துக் கொள்ளவும் நீதிபதி இஃப்திகார் செüத்ரி முற்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால் நீதித்துறைக்கு நன்மை ஏதும் விளையாது’ என்றார் அதிபர் பர்வீஸ் முஷாரப். குவெட்டாவிலிருந்து வந்திருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்களிடம் இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.

அந்த குற்றச்சாட்டுகள்தான் என்ன என்று கேட்டபோது, விஷயம் நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை வெளியே தெரிவிப்பது முறையாகாது என்றார் முஷாரப்.

6 நீதிபதிகள் ராஜிநாமா முடிவு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இப்திகார் செüத்ரிக்கு ஆதரவாக, தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த 6 நீதிபதிகள் முன்வந்துள்ளனர். இவர்களில் ரமேஷ் சந்திர என்பவர், தாற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பகவன்தாஸின் மாப்பிள்ளை ஆவார். மற்ற நீதிபதிகளின் பெயர்கள் வருமாறு:

  • அஷ்ரஃப் யார் கான்,
  • முஸ்தஃபா சஃபி,
  • ஈஷான் மாலிக்,
  • அல்லா பச்சாயோ கபூல்,
  • பிர் அசதுல்லா ஷா ரஷ்டி.

================================================================================
தலைமை நீதிபதி நீக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குவோம்: பாக். அரசு உறுதிமொழி

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

இஃப்திகார் முகமது மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறும் எண்ணமில்லை எனவும் அரசு மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஃப்திகார் முகமது, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், எதிர்ப்பின் வேகத்தைத் தணிப்பதற்காகவே பாகிஸ்தான் அரசு இத்தகைய உறுதிமொழியை அளித்துள்ளது.

முஷாரப்பின் 8 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அதிபர், பிரதமர் மற்றும் எம்.பி.களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; முற்றிலும் அரசமைப்புச் சட்டம் தொடர்பான இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளை அனுமதிக்கக் முடியாது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. உச்ச நீதிமன்ற குழு வழங்கும் தீர்ப்பு எதுவாயினும் அதை அரசு ஏற்றுக் கொள்ளும்.

வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்கும் (எதிர்க்கட்சிகளின்) முயற்சிகளை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என முஷாரப் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஃப்திகார் முகமது செüத்ரியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி போராடி வரும் எதிர்க்கட்சிகள் ஜனநாயக மீட்புக் கூட்டணியை அமைத்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் அரசு ஏராளமான எதிர்க்கட்சி தொண்டர்களை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளது.
================================================================================
முஷாரப் திறமையான பொய்யர்: பாக். மனித உரிமைக் கமிஷன் தலைவர் தாக்கு

நியூயார்க், மார்ச் 27: “அதிபர் பர்வீஸ் முஷாரப் ஒரு திறமையான பொய்யர்’ என கூறியுள்ளார் பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர்.

“ஆனால் முஷராபின் பிடி நழுவி வருகிறது; எல்லா இடங்களில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது’ என கூறியுள்ளார் அவர்.

தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரியை, முஷாரப் பதவி நீக்கம் செய்துள்ள விவகாரம் குறித்து குறிப்பிட்ட அஸ்மா, முஷாரப் மீண்டும் ஒரு முறை பொய் சொல்வதுடன், அனைவரையும் திசை திருப்புகிறார். அவரது இந்த நடவடிக்கை, அவரே கூறியுள்ளது போல இயல்பானதோ அல்லது வழக்கமானதோ அல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நீதித்துறையை முஷாரப் சீர்குலைப்பது இது முதல்முறை அல்ல. ஆட்சிக்கு வந்தவுடனே, அதிபருக்கு விசுவாசமாக இருப்பதாக பதவிப் பிரமாணம் எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வலியுறுத்தியவர் அவர்.

அதிபராகவும், ராணுவத் தலைமைத் தளபதியாகவும் முஷாரப் இரட்டைப் பதவி வகிப்பதற்கு எதிராக இப்திகார் உத்தரவிடலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை ஏற்க முடியாது. இப்திகார் உள்ளிட்ட எந்த நீதிபதிக்கும் அத்தகைய துணிச்சல் கிடையாது.

நீதிபதி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் மாதக் கணக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், வேலைநிறுத்தத்திலும் ஈடுபட முடியாது. எனவே அவர்களது போராட்டம் விரைவிலேயே உருக்குலைந்து போகும்.

பாகிஸ்தானில் காணாமல் போனவர்கள் பற்றி கவலை தெரிவித்து, அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார் முஷாரப். காணாமல் போனவர்கள் தீவிரவாதிகள் என உலகை நம்ப வைக்க முயற்சிக்கிறார் அவர். ஆனால் அது உண்மை அல்ல. காணாமல் போன 141 பேரில் 60 -70 சதவீதம் பேர், சிந்தி மற்றும் பலூச் தேசியவாதிகள். அவர்கள் அனைவரும் மதச்சார்பற்றவர்கள். சிலர் நாடு முழுவதும் நன்கறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்களுக்கும் தலிபான், அல்-காய்தா போன்ற அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இந்த விஷயத்தில் முஷாரப் புளுகுகிறார்.

காணாமல் போனவர்களை அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இப்திகார் முகமது உத்தரவிட்டது பற்றி அஸ்மாவிடம் கேட்கப்பட்டது.

இப்திகார் செüத்ரி காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் உத்தரவும் வழங்கவில்லை. மனித உரிமை ஆணையத்தின் புகாரை ஒன்றரை மாதங்கள் அவர் நிலுவையில் வைத்திருந்தார். வேறு வழியில்லாமல்தான் அந்த வழக்கை அவர் விசாரணைக்கு ஏற்றார்.

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை. அவர் செய்ததெல்லாம் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் போகும்போது எந்த நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியும் என்றார் அஸ்மா ஜஹாங்கீர்.
================================================================================
பாக். தலைமை நீதிபதியான பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தை படித்து பதவியேற்பு

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தாற்காலிக தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த ராணா பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தைப் படித்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பாகிஸ்தானில் 1985-ம் ஆண்டு ஜெனரல் ஜியா-உல் ஹக் சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சட்டத்தை ஏற்படுத்தினார்.

அச்சட்டத்தின்படி நீதிபதிகள் பதவியேற்பு உரையில் “”அல்லாவே என்னை வழிநடத்து, எனக்கு உதவி செய்” என்ற குர்-ஆன் வாசகம் இடம் பெற்றது. அதுவே வழக்கமாக இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் தாற்காலிக தலைமை நீதிபதியாக இந்து மதத்தைச் சேர்ந்த பகவான்தாஸ் நியமிக்கப்பட்டதை உலகமே கவனித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் திரும்பிய அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
================================================================================

பஜூர் பழங்குடிகளுடன் பாக். சமரச உடன்பாடு

இஸ்லாமாபாத், மார்ச் 28: ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, பஜூர் பழங்குடி இனத்தவருடன் சமரச உடன்பாட்டை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் பழங்குடி மக்களுடன் பாகிஸ்தான் அரசு (ராணுவம்) செய்துகொள்ளும் இரண்டாவது சமரச உடன்படிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

“வெளி நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் எவரையும் பழங்குடிகள் தங்கள் பகுதியில் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்; எதற்காகவும் இரக்கப்பட்டு புகலிடமும் தர மாட்டார்கள். இதற்குப் பிரதிபலனாக, பழங்குடி பகுதிகளில் எந்தவித ராணுவ நடவடிக்கையாக இருந்தாலும் அதை பழங்குடிகளின் தலைவர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் சம்மதத்துக்குப் பிறகே எடுக்கப்படும்.

“பழங்குடி மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் மதிக்கப்படும். அவர்களுடைய சமுதாயத் தலைவர்களின் செல்வாக்கிலும், நடவடிக்கைகளிலும் அரசோ, ராணுவமோ குறுக்கிடாது’ என்பதுதான் உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

இதன் மூலம், வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பழங்குடி மக்களுக்குள்ள தனிச் சிறப்புகளும், சுயேச்சை உரிமைகளும் அரசால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பஜூர் பழங்குடிகளுக்கு முன்னதாக, மாமுண்ட் என்ற பழங்குடிகளுடனும் இதே போன்ற ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்னால் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.

பஜூர் பழங்குடிகள், தலிபான் பழங்குடிகளுக்கும் அவர்களின் தலைக்கட்டுகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடிப் பகுதிகளில் உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் நடந்த மோதலில் 100 பேருக்கும் மேல் இறந்தனர். சமீபத்தில் நடந்த இத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசையே குற்றஞ்சாட்டியது அமெரிக்க அரசு.

வசீரிஸ்தான் பகுதியில் பழங்குடிகளுக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தித் தருகிறது இத்தகைய உடன்படிக்கைகள் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. இத்தகைய அதிகாரத்தால் அவர்கள் தலிபான்கள், அல்-காய்தா போன்ற அமைப்புகளை ஆதரிப்பதற்கு ஊக்கம் பெறுகிறார்கள் என்று சாடியது அமெரிக்கா. ஆனால் பாகிஸ்தான் இதற்கு நேர்மாறாக நினைக்கிறது. நமக்கும் அவர்களுக்கும் இடையிலான பலப்பரீட்சையைத் தவிர்த்துவிட்டால், அவர்கள் நாம் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்கிறது பாகிஸ்தான்.

கடந்த சில வாரங்களாகவே அன்னிய நாட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பழங்குடிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதுவே தங்களுடைய கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்கிறது பாகிஸ்தான் அரசு.

வசீரிஸ்தான் பிரதேசத்தில் பஜூர் பழங்குடிகள் பகுதியில் உள்ள மசூதியில் அல்-காய்தா தீவிரவாதிகளும் தலிபான்களும் பதுங்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க வான்படையும் சில மாதங்களுக்கு முன்னால் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் இறங்கின.

இதில் 80-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். முஸ்லிம் மதப்பள்ளிக்கூடம் ஒன்று தரைமட்டமானது. அதில் படித்த அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் அரசு மனம் மாறியது. அமெரிக்காவின் ஆலோசனையை உதறித்தள்ளிவிட்டு, பழங்குடிகளுடன் சமாதான ஒப்பந்தங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.

===========================================================
பாக். உளவுத்துறை அதிகாரி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், மார்ச் 29: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி மாஜ் ஹம்ஸôவும் அவருடன் காரில் வந்த மேலும் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாஜ் ஹம்ஸô உள்ளிட்ட 6 பேர் பெஷாவரில் இருந்து கர் என்ற பகுதிக்கு காரில் வந்துகொண்டு இருந்தனர். ராஷாகாய் என்ற பகுதியில் கார் வந்தபோது மறைந்திருந்த சிலர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மாஜ் ஹம்ஸô, பணியாளர் சுபேதார் சய்யீத், 2 மலைவாழ் மக்கள் கொல்லப்பட்டனர். கார் டிரைவர், மற்றொரு மலைவாசி ஆகியோர் காயங்களுடன் தப்பினர்.

வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் பழங்குடியினத் தலைவரின் அனுமதி பெற்றே எடுக்கும் என்று பஜூர் மற்றும் மாமுண்ட் இன மக்களிடம் பாகிஸ்தான் உடன்படிக்கை செய்து கொண்டது. இது பிடிக்காத சில தலிபான் ஆதரவு சக்திகள் அப்பகுதியில் அமைதியைக் கெடுக்கும் முயற்சியாக இக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

தெற்கு வஜிரிஸ்தானில் பழங்குடியினர் வாழும் டேங்க் பகுதியில் நடந்த தீவைப்பு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்களில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 6 வங்கிகளைக் கொள்ளையடித்து அவற்றுக்கு தீ வைத்தனர் என போலீஸôர் தெரிவித்தனர். அப்பகுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மற்றொரு சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் ஃபரீத் மெசூத் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய 12 தீவிரவாதிகள் அவரையும், அவருடைய சகோதரரையும் துப்பாக்கி முனையில் கடத்தினர்.


பாகிஸ்தான் தலைமை நீதிபதி மீதான விசாரணை இடை நிறுத்தம்

பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி
பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்திரி அவர்களுக்கு எதிரான, தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டுக்கான நீதி விசாரணையை பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம் குறித்த சௌத்திரி அவர்களின் சாவலை கையாண்டு முடிக்கும் வரை இந்த விசாரணையை ஆரம்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சௌத்திரி அவர்கள் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அதிபர் முஷாரப் அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் சௌத்திரியை பணி இடைநீக்கம் செய்தார்.

சௌத்திரி அவர்களின் நீக்கத்துக்கு எதிரான எதிர்ப்புகள், இராணுவ ஆட்சிக்கு எதிரான பரந்துபட்ட போராட்டமாக மாறியுள்ளதுடன், 7 வருடங்களுக்கு முன்னர் அதிபர் முஷாரப் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றியது முதல், இன்று வரையிலான காலப்பகுதியில் அவரது நிர்வாகத்துக்கு எதிரான மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.



 

Posted in abuse, Afghanistan, al-Qaeda, Assassination, Ayman al-Zawahri, Bajur, Bench, Bhagavandas, Bhagawandas, Bhagvandas, Bhagwandas, Chaudary, Chaudhary, Chaudhry, Chowdary, Chowdhary, Chowdhry, Chowthary, Courts, dead, Iftikhar Mohammed Chaudhry, ISI, Islam, Islamabad, Judge, Judiciary, Justice, Khar, Law, Militants, Musharaf, Musharaff, Muslim, Mutahida Majlis-e-Amal, Order, Pakistan, Party, Pashtun, Pervez, Politics, Power, Qazi Hussain Ahmad, Ramesh Chandra, South Asia, Supreme Court, Taleban, Taliban, tribal, tribal council | 7 Comments »

Conspiracy behind killing of JMM MP: DGP; ‘retaliatory action’: Govt.

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2007

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.

சுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

சோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.

எம்.பி. படுகொலை

மக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.

கடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.

அரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.

ஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பிரச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.

நக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.

எம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு

ஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

லாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.

ஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).

லஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.

பஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.

தகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.

லஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.

Posted in Andhra, Andhra Pradesh, Assassination, backward, Bakuria, Bihar, dead, FC, Forest, Hempram, Jamshedpur, Jharkand, Jharkhand, JMM, Lakshman, Landlords, Lashman, Lok Sabha, Madhya Pradesh, Mountains, MP, Naksal, Naxal, Naxalbari, Naxalite, Plateau, Ratan Diu, Separatists, Son, Sugadev, Sukhdev, Sunil Mahato, Terrorism, Violence, WB, West Bengal | Leave a Comment »

How did Lakshmi Rai’s photo get in the wrong place

Posted by Snapjudge மேல் மார்ச் 2, 2007

விபசார புரோக்கர் ஆல்பத்தில் நடிகை லட்சுமி ராய் படம் இடம் பெற்றது எப்படி? புதிய தகவல்கள்

சென்னை, பிப். 27-

சென்னையில் விபசாரத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடபழனியில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி நடிகை செல்வி, தெலுங்கு டைரக்ட ரும் விபசார புரோக்கருமான நிரஞ்சன் ஆகியோரை கைது செய்தனர்.

நிரஞ்சன் பங்களாவில் போலீசார் நடத்திய சோதனை யில் நடிகைகளின் கிளு கிளு ஆல்பம் சிக்கியது. அதில் தெலுங்கு கவர்ச்சி நடிகைகள் ரேகாஸ்ரீ, சோனியா தத், பத்மா ஷெட்டி, ஜோதி ஆகியோரின் போட்டோக்களுடன் நடிகை லட்சுமிராயின் போட்டோவும் இடம் பெற்றிருந்தது போலீ சாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்தப் போட்டோவில் நடிகை லட்சுமிராய் மார்டன் உடையில் கையில் பந்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தார். `கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் கதாநாய கியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமிராய், தொடர்ந்து இவர் குண்டக்க… மண்டக்க…, தர்மபுரி, நெஞ்சை தொடு, உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாய கியாகவும், 2-வது நாயகியாக வும் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தும் கவர்ச்சி கதாநாய கிகளில் லட்சுமிராயும் ஒருவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் முத்தக் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறினார். அந்த பர பரப்பு அடங்குவதற்கு முன் பாகவே விபசார புரோக்கர் களின் ஆல்பத்தில் லட்சுமி ராய் படம் இடம் பிடித்திருப்பது புரியாத புதிராய் இருந்தது.

இது தொடர்பாக நடிகை லட்சுமிராய் கூறும் போது, எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது என்றும், ஆல்பத் தில் இடம் பெற்றுள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றும் கூறி கதறினார்.

ஆல்பத்தில் லட்சுமிராய் படம் இடம் பெற்றது தொடர் பாக புரோக்கர் நிரஞ்சன் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் நடிகராகும் ஆசையில், சினிமாவிற்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமா கம்பெனிகளில் எடு பிடி வேலைகளை செய்து வந் தேன். அப்போது சில டைரக் டர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை உதவி டைரக்டராக வைத்துக் கொண்டனர். அதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. அதனால் துணை நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தினேன்.

அது போல் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிவரும் பெண் களிடம் போட்டோவை பெற் றுக் கொண்டு வாய்ப்பு வரும் போது தகவல் தருவதாக கூறுவேன். அவர்களும் தொடர்பு கொள்ள செல் போன் நம்பர்கள் கொடுப் பார்கள். அந்த போட்டோவை வைத்துக் கொண்டு நடிகைகள் விபசாரத்திற்கு கைவசம் உள்ளதாக சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடம் பேசி சரி கட்டுவேன்.

பின்னர் அந்த பெண்களிடம் இவர் தயாரிப்பு நிர்வாகி இவரை செக்சில் திருப்தி படுத்தினால் சான்ஸ் தருவார் என கூறி பார்ட்டிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வைப்பேன். இதன் மூலம் எனக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொட்டியது.

இது போல் தான் ஒரு நாள் நடிகை லட்சுமிராய் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு அவரது தாயுடன் வந்தார். தன் மக ளுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தருமாறு கேட்டார். அவரை தொடர்பு கொள்வதற்காக போட்டோவுடன் செல்போன் நம்பரும் கொடுத்தார்.

சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த லட்சுமிராய் அழகி பட்டம் பெற்றவர் என்ப தால் அவரை வைத்து லட்சக் கணக்கில் பணம் சம்பா திக்க திட்டமிட்டேன். அதன்படி வாய்ப்பு தருகிறேன் என கூறி அவரை சிலருக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்தேன்.

இதற்கிடையே அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் என்னுடனான நெருக்கமான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். பெரிய பார்ட்டிகள் என்றால் மட்டும் வந்து செல்வார். இந்த ஆல்பத்தில் உள்ள நடிகைகள் எல்லோரும் அப்படி தொடர் பில் இருப்பவர்கள் தான்.

இவர்கள் `அதற்கு’ வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு முன்பாகவே புக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்து செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

லட்சுமிராய் தெரிவித்த மறுப்புக்கு பதிலடியாக நிரஞ்சனின் வாக்குமூலம் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Posted in Assassination, Character, Dharmapuri, Exploitation, Image, Karkka Kasadara, Kundakka Mandakka, Lakshmi Rai, Lakshmi Ray, Laxmi Rai, Niranjan, Padma Shetty, parthiban, Photo, Prostituition, Rekasri, Sex, Sonia Dutt, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Paadam, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, XXX | Leave a Comment »

Pakistan woman minister shot dead – Provincial minister Zill-e-Huma Usman

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

பாகிஸ்தானில் பெண் அமைச்சர் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் வரைப்படம்
பாகிஸ்தான் வரைப்படம்

பாகிஸ்தானில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரான, சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய தீவிரவாதிகள், அங்கு பஞ்சாப் மாகாணத்தில் பெண் அமைச்சர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

பஞ்சாப் மாகாண அரசின், சமூக நல அபிவிருத்தி அமைச்சர், ஷில் இ ஹுமா உஸ்மான் அவர்கள், தனது கட்சி அலுவலகத்தில் உரையாற்றத் தயாரான வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சந்தேக நபர் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் விசாரணைகளின் போது, தான், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரானவர் என்று கூறியதாகவும் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in Assassination, Female, Gujranwala, Islam, Lady, Minister, Muslim, Muslim League, Pakistan, Politics, Punjab, Religion, Social Welfare, Terrorism, Women, Zill-e-Huma Usman | Leave a Comment »

Suspected LTTE shot dead Hindu priest for garlanding Rajapaksa

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

ஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம்
ஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம்

ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை

இலங்கை ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைக்குச் சென்ற போது, அங்கு அவரை வரவேற்ற இந்து அர்ச்சகர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.

அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார். அவர் அப்போது ஜனதிபதிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம்
கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம்

ஜனாதிபதியின் வாகரைக்கான விஜய தினத்தன்று தனது கணவரை இராணுவத்தினர் பூசைக்கென்றே அழைத்துச் சென்றதாகவும், ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஆயினும் கொலையாளிகளை தன்னால் அடையாளம் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் இதனை மறுத்துள்ளார்கள்.

இந்தக் கொலை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Posted in abuse, Assassination, Autocracy, Batticaloa, Buddhism, civil war, clergyman, Eelam, Eezham, Hindu, Hinduism, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapakse, Mattakalappu, Mattakkalappu, Military, Militia, Parameshwara Kurukkal, Power, President, priest, Sri lanka, Srilanka, Tamil Tigers, Terrorism, Tiger rebels, Vagarai, Vakarai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Hariri’s son blames Syria for assassination of Lebanese minister

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

லெபனான் தொழில் துறை அமைச்சர் சுட்டுக் கொலை

லெபனான் தொழில்துறை அமைச்சர், பியர் கமாயெல், பெய்ரூட் அருகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிறித்தவமக்கள் வாழும் பகுதியில் அவரது வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் சுட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

அமைச்சர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார். தாக்கியவர்கள் அடையாளம் இன்னும் தெரியவில்லை. முன்னாள் லெபனான் அதிபர், அமின் கமாயெல் அவர்களின் மகனான, பியர் கமாயெல், ஒருமுன்னோடி சிரியா-எதிர்ப்பு கிறித்தவ அரசியல்வாதி ஆவார்.

முன்னர் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர், ரபீக் ஹரிரியின் மகன் சிரியாதான் தனது தந்தையின் படுகொலைக்கும், இந்த கமாயெல்லின் படுகொலைக்கும் பின்னணியில் இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரியாவிடமிருந்து உடனடியாக எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை.

சிரியாவிற்கு ஆதரவான ஆறு அமைச்சர்கள் லெபனான் அரசிலிருந்து சமீபத்தில் பதவி விலகியுள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் கமாயெல்லின் கொலை வருகிறது.


இராக், சிரியா இடையே மீண்டும் ராஜதந்திர உறவுகள்

இராக்கும் சிரியாவும் தங்களுக்கு இடையேயான ராஜீய உறவுகளை இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சதாம் ஹூசேனின் ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் இந்த உறவுகள் முறிந்தன.

சிரியா, இராக் இடையில் உடன்பாடு
சிரியா, இராக் இடையில் உடன்பாடு

பாக்தாத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிரியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்த முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இராக்கில் நடைபெறும் வன்செயல்களைத் தடுக்க சிரியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சிரியா, இராக் அரசுக்கு உதவ தனது உறுதிப்பாட்டினை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகம் கூறியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகள் மூலம் இராக்குக்குள் ஊடுருவதை தடுக்க சிரியா முன்வர வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது.

இராக்கில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்காலத்தில் குறையக் கூடிய சூழலுக்கு இராக்கும், சிரியாவும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக பி பி சியின் ராஜாங்க விவகார செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இராக்குக்கும் இரானுக்கும் இடையேயான ஒரு உச்சிமாநாடு இந்த வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கு சிரியா அழைக்கப்பட்டுள்ளது.

Posted in Assassination, Beirut, Christian, Druse, Druze, Fouad Siniora, Hariri, Hezbolla, Hezbollah, Iran, Iraq, Islam, Lebanon, Mid-east, Middle East, Muslim, Phalange Party, Pierre Gemayel, Rafik Hariri, Saad Hariri, Sheik Hassan Nasrallah, Shiite, Sunni, Syria, terrorist, United States | Leave a Comment »

Indian Ambassador to Sri Lanka pokes her Head in Internal Affairs

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க

இந்தியத் தூதுவர் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதாக இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

இலங்கையின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களின் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ் அவசியமின்றித் தலையிடுவதாகவும், அதனை அவர் உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான, அனுரா பண்டாரநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, “இலங்கையர்களாகிய எமக்கு எமது நாட்டை எவ்வாறு பாரமரிக்க வேண்டுமென்பது நன்கு தெரியும். இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ், அவரது தூதரகத்தின் நடவடிக்கைகளை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். நாம் யாருடன் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து எமக்குத் தெரியும். எமது நாட்டுப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது குறித்து அவர் ஆலோசனை எதனையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆவேசம் பொங்க தெரிவித்திருக்கிறார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், இலங்கையில் இந்தியத் தூதுவராகக் முன்னர் கடமையாற்றிய, காலஞ்சென்ற ஜே.என். டீக்சித், இலங்கை தொடர்பில் தனது தான்தோன்றித்தனமான பிடிவாதம் மிக்க அரசியல் கொள்கையினால்தான் அப்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவிவந்த பரஸ்பர நட்புறவில் விரிசல் ஏற்பட்டது என்றும் இதன்காரணமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அதிகபட்ச விலையாகத் தனது உயிரையே கொடுக்க வேண்டி நேர்ந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது உரையின் போது, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அண்மையில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இலங்கைக்கான முன்னாள் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகம்மட், தன்மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையான – றோ அமைப்பே காரணம் என இஸ்லாமாபாத்தில் தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டிய பண்டாரநாயக்க, இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் தமது பிணக்குகளிற்கான களமாக இலங்கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியா மறுப்பு

இதேவேளை இலங்கை அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி, எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடுவது இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், இலங்கைக்கான தமது தூதுவரான நிரூபமா ராவ் அவர்கள் ஒரு மூத்த இராஜதந்திரி என்றும், அவர் உயர் தொழில்சார் தரத்துடனேயே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை- இந்திய இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது பங்களிப்பு அரசாங்கத்தினால் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Ambassador, Anura Bhandaranayakha, Assassination, Attempt, India, Internal Affairs, JN Dixit, Nirupama Rao, Pakistan, SAARC, Sri lanka, Tamil | Leave a Comment »