Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Uttarakhand Kranti Dal’ Category

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

Congress receives drubbing in Punjab, Uttarakhand; retains Manipur

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பஞ்சாப், உத்தரகண்டில் ஆட்சியை இழந்தது காங்.

சண்டீகர்/டேராடூன், பிப். 28: பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மூன்று மாநிலங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் -பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரகண்டில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மணிப்பூரில் அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒருசில இடங்களே தேவைப்படுவதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற 116 தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிரோன்மணி அகாலி தளம் 48 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 44 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சிரோன்மணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

உத்தரகண்டில் மொத்தம் 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 34 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களிலும், ஐக்கிய கிராந்தி தளம் 3 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

ஐக்கிய கிராந்தி தள ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.கந்தூரி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

மணிப்பூரில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்று 30 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

முடிவு அறிவிக்கப்பட்ட 60 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மணிப்பூர் மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 5 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

Posted in Akali, Amarinder Singh, Assembly, BJP, BSP, Congress, Congress (I), Debacle, Elections, Manipur, Manipur People`s Party, MPP, Opposition, Polls, Punjab, Rajnath Singh, Results, RJD, SAD, SGPC, Shiromani Akali Dal, UKD, Utharakand, Utharakhand, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal | Leave a Comment »