Archive for the ‘Bihar’ Category
Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007
பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!
டி. புருஷோத்தமன்
எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.
பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.
மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.
கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.
ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.
குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.
ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!
பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.
பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.
துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.
உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.
அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Posted in Bengal, Bihar, BJP, BSP, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Citizen, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), credentials, Education, Election, eligibility, Gujarat, Haryana, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kerala, Lalloo, Laloo, Lalu, maharashtra, MLA, MP, people, Polls, Purushothaman, Qualifications, Requirements, RJD, Shiv Sena, Shivsena, Teachers, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Votes, WB, West Bengal, Yadav | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007
தவறான பாதை; தவறான பார்வை
பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.
மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.
9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.
இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.
இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.
அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!
இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.
Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007
துணுக்குத் தோரணம்
பொறுமையாளன்
“”சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்”- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.
மதிநுட்பம் இல்லாத மாநிலம்?
எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.
இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.
வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.
அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.
கோர்ட்டுக்குப் போன குதிரை!
நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.
வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.
குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.
பிரதமரைச் சந்திக்க மறுத்த ஜனாதிபதி?
மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.
கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “”நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது” என்றார்.
அதற்கு தவான், “”உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.
பற்று அற!
“”என்ன செய்கிறாய்?” என்று வேதனையோடு கேட்ட தாய்க்கு சாதாரணமாகச் சொன்னான் சிறுவன் “”வேறொன்றுமில்லை, என்னுடைய மெட்ரிகுலேஷன் சான்றிதழ்களை எரிக்கிறேன்”
“”ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்ட தாய்க்குச் சொன்னான்: “”இவற்றால் ஒன்றும் பயனில்லை. அம்மா, சூர்யாஜி போன்று பந்தக் கயிறுகளை அறுக்கவேண்டும். ஆசைகளை வேரிலேயே களைய வேண்டும். எனது அகங்காரம் ஒழிய வேண்டும்” என்றான் சிறுவன்.
சரி.. யார் அந்த சூர்யாஜி?
மராட்டிய சிவாஜியின் தளபதியான தானாஜி தம்பி.
சிம்மகட் என்ற பகுதியில் நடந்த யுத்தத்தில் தொடர்புடையவன். போரின் போது உறுதியான கயிற்றைக் கோட்டைமேல் கட்டிவிட்டு, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் கோட்டை மேல் ஏறிக் கடந்துகொண்டிருந்தனர். கடுமையாகப் போரிட்ட தானாஜியின் வீரர்கள் களைப்பு அடைந்தனர். தன் வீரர்கள் பின்வாங்கிவிடுவார்களோ என்று தானாஜி பயந்தார். அப்போது தானாஜியின் தம்பியான சூர்யா, “”அஞ்ச வேண்டாம். கயிற்றை முன்பே அறுத்து விட்டேன். இனி வீரர்கள் திரும்பிச் செல்லமுடியாது. போரிட்டுத்தான் தீரவேண்டும்” என்றார்.
சரி… இந்தக் கதையைத் தன் தாயிடம் சொன்ன அந்த சிறுவன் யார் என்று தெரியுமா? வினோபா பாவே.
Posted in APJ, Bave, Bengal, Bhave, Bihar, Dinamani, Education, Faces, Famous, Freedom, Horse, Incidents, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Kalam, Kalyanasundaram, Kalyanasundaranar, Kalyanasuntharam, Kalyanasuntharanar, Life, Maharasthra, Marathi, people, President, Rajaji, Rejendra Prasad, Shivaji, Sivaji, State, ThiruViKa, Vinoba, Vinobha, Vinobha Bhave, War, WB | குறிச்சொல்லிடப்பட்டது: துணுக்கு, வாழ்க்கை | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
பயங்கரவாதிகள் கூட்டு சதி?: லூதியானா குண்டுவெடிப்பு
லூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.
திரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
எனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.
அவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.
இந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
லூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
குண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Posted in Arms, Babbar Khalsa International, Bihar, BKI, Blast, Bombs, Cinema, dead, Democracy, explosion, Freedom, Independence, Investigation, Islam, Jihad, Khalistan, Liberation, Ludhiana, Movie, multiplex, Muslim, Punjab, RDX, Samrala, Separation, Sikhs, Singar, Terrorism, terrorist, Theater, Theatre | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007
தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மாணவர்களுக்கு தடை: பிகாரில் தொடரும் ஜாதிக் கொடுமை
சசாராம் (பிகார்), ஆக. 13: பிகாரில் அரசு நடத்தி வரும் தொடக்கப்பள்ளியில் தலித் பெண் சமைத்த மதிய உணவை மாணவர்கள் சாப்பிட பள்ளிக்குழு செயலர் கடந்த ஒரு மாதமாக தடை விதித்துள்ளார்.
21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நடப்பது சமூக நீதி ஆர்வலர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோடாஸ் மாவட்டத்தில் உள்ளது பிப்ரி கிராமம். உயர்ஜாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
இப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியை தலித் பெண் செய்து வருகிறார். இவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிடக் கூடாது என பள்ளிக் குழு செயலர் உமா சங்கர் திவாரி என்பவர் தடை விதித்துள்ளார்.
மகிளா சமாக்ய சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு பள்ளியில் மதிய உணவு தயாரிக்க தலித் பெண் நியமித்துள்ளது. அவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட நான் அனுமதிக்க மாட்டேன் என உமா சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகிளா சமாக்ய சங்க ஒருங்கிணைப்பாளர் சிகா குமாரி கூறியது:
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிப்பதற்காக 3 தலித் பெண்களும் 2 மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி செயலரிடம், மாணவர்களை மதிய உணவை சாப்பிட விடுங்கள் என பல முறை வற்புறுத்தியும் பலன் இல்லை. மாணவர்கள் தொடர்ந்து மதிய உணவு சாப்பிடாமல் செல்கின்றனர்.
திவாரியும் அவரது ஆட்களும் சமையல் கூடத்தை சேதப்படுத்தி சமையல் பாத்திரங்களையும் எடுத்து சென்று விட்டனர் என்றார்.
மனித வள துணை செயலர் ராஜேந்திர பிரசாத்துடன் பிப்ரி கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்று இது விசாரணை நடத்த உள்ளதாக மனித வள செயலர் எம்.எம். ஜா பாட்னாவில் கூறினார்.
இது குறித்து சதார் காவல் நிலையத்தில் திவாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரச்னைக்குரிய பள்ளியில் 39 தலித் மாணவர்கள் உட்பட 87 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட விடுப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Posted in Bihar, Caste, cook, Dalit, Eat, FC, Food, Hinduism, Hindus, Meals, Oppression | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
அடிப்படை உரிமையாகுமா கல்வி?
எஸ். சையது இப்ராஹிம்
“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.
கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.
கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.
பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.
இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.
ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.
இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!
தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.
எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.
அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.
அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.
அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.
அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.
தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.
பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!
—————————————————————————————————————-
மனித உரிமைக் கல்வி!
ஆர். நடராஜ்
வழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.
“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.
10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.
கட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.
சம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.
தரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.
இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களின் நிலை உயர்வது எப்போது? இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.
திசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.
கல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.
உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.
மனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி? சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.
காவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.
எழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.
பொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.
மக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே!
(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).
Posted in Allocation, Analysis, BE, Bihar, Boards, Budget, Colleges, Doctor, DOTE, Education, Engg, Engineering, Expenses, Fees, Finance, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, MBBS, medical, Medicine, Planning, Price, Professors, Rajasthan, rights, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Schools, Slates, Statistics, Stats, Statz, Students, Study, Teachers, Tech, Technology, University | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007
அனைவருக்கும் கல்வி
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.
மத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.
கல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.
அப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.
இந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.
மத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல!
——————————————————————————————————————
ஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.
இன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.
“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.
தமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.
அரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.
நாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
நாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்!
Posted in Abhiyan, Allocations, Bihar, Budget, Center, Centre, Constitutional, Education, elementary, Females, Finance, Funds, Government, Govt, Gujarat, Haryana, HSC, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Kerala, legal, Madhya Pradesh, MadhyaPradesh, MP, Op-Ed, Orissa, Quality, Rajasthan, Sarva Shiksha Abhiyan, Schools, She, SSA, State, Students, Study, Teacher, Utharakand, Utharakhand, Utharkhand, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Uttrakand, WB, Welfare, West Bengal, WestBengal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007
பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்
இராம. சீனுவாசன்
அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.
இப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.
இதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு
- 1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,
- 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.
வறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.
தனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
வருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.
1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.
- 1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து
- 2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.
ஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
இப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.
வறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.
இந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.
1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
கணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.
மாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.
வறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
மகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்
- 1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த
- 1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
எனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.
- 2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,
- நகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.
- மொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
- இதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்
- 8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.
தேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –
- பிகார்,
- சத்தீஸ்கர்,
- ஜார்க்கண்ட்,
- உத்தரப் பிரதேசம்,
- உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.
வறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.
(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)
———————————————————————————————-
ஏன் இந்த மௌனம்?
மத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.
சொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.
தரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்?
ஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.
எந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.
லாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.
————————————————————————————————–
சரியான நேரத்தில் சரியான யோசனை
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
அதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.
நாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.
சமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது!
————————————————————————————————–
Posted in Analysis, Backgrounder, Banks, Bihar, Calculations, Changes, Chattisgar, Chattisgarh, City, Consumer, Customer, Disparity, Divide, Economy, Education, Employment, Expenses, Finance, Food, GDP, Globalization, Govt, Healthcare, Hygiene, IMF, Improvements, Income, Industry, Inflation, Insights, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Luxury, maharashtra, Manufacturing, Metro, Mumbai, Necessity, Need, Needy, Numbers, Op-Ed, Percentages, Policy, Poor, Poverty, Power, Pune, Purchasing, Recession, Rich, Rural, Schemes, service, SEZ, Society, Stagflation, States, Statistics, Stats, Suburban, Survey, UP, Utharkhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Village, WB, Wealthy, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007
போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு
புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
- உத்தரப் பிரதேசம்,
- பிகார்,
- தில்லி,
- ஹரியாணா,
- பஞ்சாப்,
- குஜராத்,
- ராஜஸ்தான்,
- ஆந்திர பிரதேசம்,
- மகாராஷ்டிரம் மற்றும்
- மத்திய பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில்
- உ.பி.யில் 36 பேரும்,
- பிகாரில் 16 பேரும்,
- உத்தரகண்டில் 3 பேரும்,
- ஆந்திரத்தில் 2 பேரும்,
- ஹரியாணா,
- குஜராத்,
- மகாராஷ்டிரம்,
- ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.
செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Posted in Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra, Andhra Pradesh, AP, Bihar, Delhi, Eradication, Gujarat, Haryana, Health, Healthcare, Immunization, Immunize, Madhya Pradesh, maharashtra, medical, MP, New Delhi, Nigeria, Outbreak, Polio, Prevention, Punjab, Rajasthan, Shot, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, Uttrakand | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 9, 2007
ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை – அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்
சைவான், மே 9: லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
சகாபுதீன் அமைதி: தீர்ப்பைக் கேட்ட சகாபுதீன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மெüனமாக இருந்தார். நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த காவல் போடப்பட்டிருந்தது. பிகாரில் ராப்ரி தேவி ஆட்சியின்போது சகாபுதீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதெல்லாம் ஏராளமான ஆதரவாளர்கள் நீதிமன்றம் எதிரில் திரண்டு நிற்பார்கள். சகாபுதீனைப் பார்த்ததும் ஆரவாரம் செய்வார்கள். அவருக்கு ஆதரவாக கோஷம் போடுவார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற வளாகம் அமைதியாக இருந்தது. இப்போது நிதீஷ்குமார் தலைமையில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடப்பதால், சகாபுதீனின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் எதிரில் கூடவில்லை.
தூக்கில் போட்டிருக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை). சகாபுதீனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு அவருடைய தந்தை தீனநாத் குப்தா அதிருப்தி தெரிவித்தார். சகாபுதீன் செய்த அட்டூழியங்களுக்கு அவரை தூக்கிலேயே போட வேண்டும் என்றார். அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தால் எங்கள் குடும்பத்துக்கு திருப்தி ஏற்பட்டிருக்கும் என்று சோட்டே லாலின் மனைவி ரேணுவும் கூறினார்.
30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
- கொலை,
- கொலை முயற்சி,
- கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல்,
- ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது,
- சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது,
- திருட்டு,
- கலவரம் செய்தல்,
- ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல்,
- உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல்,
- வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல்,
- ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.
பதவியைப் பறிக்க வேண்டும்: சகாபுதீன் அரசியல்வாதி அல்ல, முழுக்க முழுக்க கிரிமினல், அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பிகார் மாநில செயலர் நந்தகிஷோர் பிரசாத் வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை பிகார் மாநில பாஜக தலைவர் ராதா மோகன் சிங்கும் வலியுறுத்தினார்.
போராட்டம்: சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.
ராஜிநாமாவுக்கு அவசியம் இல்லை: இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டிருந்தாலும் அப்பீல் செய்ய 3 மாதம் அவகாசம் தரப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றம் இத் தீர்ப்புக்கு தடை ஆணை வழங்கினால், அவர் பதவியில் நீடிக்க எந்தத் தடையும் இல்லை. தீர்ப்பு கூறிய உடனேயே சகாபுதீன் பதவி விலக வேண்டும் என்று சட்டத்தில் ஏதும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் ஒய்.வி. கிரி தெரிவித்தார்.
அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.
தேர்தலில் போட்டியிட முடியாது: சகாபுதீன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (3)-வது பிரிவு கூறுகிறது.
Posted in abuse, Bihar, Chhote Lal Gupta, Communist, CPI, CPI(M), CPI(ML), Criminal, Lalloo, Laloo, Lalu, Leninist, Marxist, ML, MP, Murder, nexus, Patna, Politics, Power, RJD, Sahabuddin, Sahabudhin, Shahabuddin, Shahabudhin, Yadav | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 8, 2007
உ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
புதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிகார்,
- ஆந்திரம் மற்றும் கர்நாடகம்
- ஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.
பிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
- அருணாசல பிரதேசம்,
- மிஜோரம்,
- நாகாலாந்து,
- லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
Posted in Andaman, Andhra, Andhra Pradesh, AP, Arunachal, Arunachal Pradesh, backward, Bengal, Bihar, Castes, Census, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Community, Dadra Nagar Haveli, Demographics, Demography, Empowerment, Goa, Information, Justice, Karnataka, Lakshadweep, MBC, Mizoram, Nagaland, Nicobar, OBC, Panchayat, Population, Reservation, SC, Social, ST, State, Statistics, Stats, Tripura, Union Terrirtory, UP, UT, Uttar Pradesh, Welfare, West Bengal | 1 Comment »
Posted by Snapjudge மேல் மே 2, 2007
அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து குடியிருப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.50 கோடி
புதுதில்லி, மே 2: அரசு பங்களாக்களை அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 400 பேர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடி என உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.16.83 லட்சம் மற்றும் ரூ.18.97 லட்சமாகும். அங்கீகாரம் இல்லாமல் அரசு பங்களாக்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து வாடகை வசூலிப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அது தொடர்பான பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த காங்கிரஸ் எம்.பி. சுனில் தத் ஆகியோரின் குடும்பத்தினர், பிகார் முன்னாள் ஆளுநர் புட்டா சிங் வாடகை பாக்கியை செலுத்தத் தவறி விட்டனர். காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், தில்லியில் அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துள்ள பங்களாக்களுக்கு செலுத்த வேண்டிய வாடைகை பாக்கி முறையே ரூ.13.45 லட்சம், ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.13.19 லட்சத்தை செலுத்தவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் 3 பேர், உரிமக் கட்டணம் / சேதங்களுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.1.10 கோடி. காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் தில்லி மாநில பிரிவுகள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.50.15 லட்சம் மற்றும் ரூ.19.31 லட்சம். நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை வசூலிக்க அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Posted in abuse, Bihar, BJP, Buta Singh, Congress, Court, Dutt, encroachment, Governor, J&K, Jammu and Kashmir, Jaswant, Jaswant Singh, Jaswanth, Jharkhand, K P S Gill, Kashmir, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, M S Bitta, MP, Order, P V Narasimha Rao, Power, PVNR, Rajasthan, Rajnath, Rajnath Singh, Rajya Sabha, Rao, Sanjay Dutt, SC, Sunil Dutt, Urban Development | 1 Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2007
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை
ஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.
சுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
சோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.
எம்.பி. படுகொலை
மக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.
கடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.
சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.
அரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.
ஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பிரச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.
நக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.
எம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு
ஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
ஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
லாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.
ஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை
ஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).
லஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.
பஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.
உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.
தகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.
லஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.
Posted in Andhra, Andhra Pradesh, Assassination, backward, Bakuria, Bihar, dead, FC, Forest, Hempram, Jamshedpur, Jharkand, Jharkhand, JMM, Lakshman, Landlords, Lashman, Lok Sabha, Madhya Pradesh, Mountains, MP, Naksal, Naxal, Naxalbari, Naxalite, Plateau, Ratan Diu, Separatists, Son, Sugadev, Sukhdev, Sunil Mahato, Terrorism, Violence, WB, West Bengal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007
மக்கள் அறியச் செய்யுங்கள்
இரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்
- பிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து
- உத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.
- மத்தியப் பிரதேசம்-24,
- ஜார்க்கண்ட்-21,
- ஒரிசா-19,
- ஆந்திரம்-13 மாவட்டங்கள்.
- தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:
- கடலூர்,
- திண்டுக்கல்,
- நாகப்பட்டினம்,
- சிவகங்கை,
- திருவண்ணாமலை,
- விழுப்புரம்.
தேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.
ஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
களஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.
ஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.
பயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.
Posted in Andhra, Andhra Pradesh, AP, Assam, backward, Backward Region Grant Fund, Bihar, BRGF, Collector, Collectorate, Cudaloore, Dindugul, Dindukal, Dindukkal, District Collector, fund scheme, Government, Jarkand, Jharkand, Jharkhand, Kadaloor, Madhya Pradesh, Manmohan Singh, MP, Nagapattinam, Orissa, Sivaganga, Sivagangai, Thiruvannamalai, UP, Uttar Pradesh, Viluppuram, Vizhuppuram | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007
பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு
பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Posted in activism, Attendance, Bihar, Chief Minister, Complaints, Corruption, doctors, Government, Healthcare, Hospitals, Indian, Instruments, Law, Machines, Madhepura, Malpractice, medical colleges, Medicine, Nalanda, Nalandha, Nitish Kumar, Patna, PHCs, PIL, public health centres, punctuality, sadar hospitals, solutions, state-run hospitals, Tracking, Web, Website | Leave a Comment »