Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Linn’ Category

Red pepper, chillies, bell-pepper, capsicum grossum – Mooligai Corner: Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

மூலிகை மூலை: குடிவெறி நீக்கும் மிளகாய்!

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bell-pepper, capsicum, Capsium Firutesceans, chillies, chilly, Herbs, Linn, medical, Mooligai, Moolikai, Naturotherapy, Pepper, Red pepper, Solonacea | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Kothamalli (Coriander)

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

மூலிகை மூலை: சாராய வெறி நீங்க…

விஜயராஜன்

ஒழுங்கற்ற வடிவ அமைப்பைக் கொண்ட இலையைக் கொண்ட சிறு செடி இனமாகும். இதன் இலையும் விதையும் மருத்துவக் குணம் கொண்டவை. கார்ப்புச் சுவையைக் கொண்டது. சீத வெப்பத்தை அதிகரிக்கும். பசியைத் தூண்டி வெப்பமுண்டாக்கி சிறுநீரைப் பெருக்கும். இதனை உண்பதால் உடல் சூடு, காய்ச்சல், பைத்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, பெரு ஏப்பம், புண் போன்றவை நீங்கும்.

வேறு பெயர்கள்:

  • தனியா,
  • உருள் அரிசி.

ஆங்கிலத்தில்:

  • coriandrum sativum,
  • linn;
  • Umbelliferae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

கொத்தமல்லி விதையை 5 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியளவாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து 2 வேளை குடித்துவர இதய பலவீனம், மிகுதாகம், நாவறட்சி, மயக்கம், இரத்தக் கழிச்சல், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாகும்.

கொத்தமல்லியைச் சிறிது காடியில்(வினிகரில்) அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும்.

கொத்தமல்லி விதை 100 கிராம், நெல்லிவற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் எடுத்துப் பொடியாக்கி அத்துடன் 200 கிராம் சர்க்கரை கலந்து 2 வேளை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரத் தலைசுற்றல், நெஞ்செரிச்சல், வாய் நீர் ஊறல் ஆகியவை குணமாகும்.

கொத்தமல்லி 300 கிராம், சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்ன இலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இள வறுவலாய் வறுத்துப் பொடியாக்கி அத்துடன் வெள்ளைக் கற்கண்டை 60 கிராம் பொடிசெய்து கலந்து 2 வேளை 1 தேக்கரண்டியளவு சாப்பிட்டுவர உடல் சூடு, குளிர்காய்ச்சல், பைத்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர பலவாறான தலைநோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனைத் தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்குளறல் குணமாகும்.

கொத்தமல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி, போராமுட்டி வகைக்கு 20 கிராம் எடுத்துச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மிலியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை கொடுக்கக் காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லி இலையை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை சீக்கிரம் கரையும் அல்லது பழுத்து உடையும்.

கொத்தமல்லி விதையை வறுத்துச் சாப்பிட இரத்தக் கழிச்சலும் செரியாமைக் கழிச்சலும் நீங்கும்.

கொத்தமல்லி விதையைச் சோம்புடன் கலந்து சாப்பிட ஏப்பம் நீங்கி, இருதயம் வலிமை அடையும்.

கொத்தமல்லி விதையை அரைத்துப் பற்றிட தலைவலி, மண்டையிடி(கபால சூலை) குணமாகும்.

கொத்தமல்லி விதையை 10 கிராம் சந்தனத்துடன் அரைத்துப் பூச பித்த தலைவலி குணமாகும். கொத்தமல்லி விதையைச் சந்தனத்துடன் அரைத்துக் கட்ட நாள்பட்ட புண், பிளவைகள் குணமாகும்.

கொத்தமல்லி, சந்தனம், நெல்லி வற்றல் வகைக்கு சம அளவாக எடுத்து நீரில் ஊறவைத்து குடிக்க தலை சுற்றல் நீங்கும்.

கொத்தமல்லி விதையை வாயிலிட்டு மெல்ல வாய் நாற்றம் நீங்கும்.

Posted in AA, Addiction, Alcoholism, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Coriander, coriandrum sativum, Detox, Health, Healthcare, Herbs, Kothamalli, Kothumalli, Linn, medical, Mooligai, Naturotherapy, Umbelliferae | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Nellikaai for Blood Pressure

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

மூலிகை மூலை: இரத்தக்கொதிப்புக்கு நெல்லி

விஜயராஜன்

மிகச்சிறிய இலைகளையும் இளம் மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மர வகையைச் சேர்ந்ததாகும் நெல்லி. காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளைக் கொண்டது. இலை, காய், வற்றல் மருத்துவக் குணமுடையது. இஃது ஒரு கற்ப மருத்துவக் குணம் உடையது. காய் வெப்பத்தை அகற்றும், சிறுநீரை பெருக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடல்வாயுவை அகற்றும். வேர், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லி வற்றல் குளிர்ச்சியை உண்டாக்கி உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். தமிழகம் எங்கும் காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

இதன் வேறுபெயர்கள்: அத்தகோரம், அந்தகோளம், அமுதம், ஆமலகம், அந்தோர்.

வகை: அரிநெல்லிக்காய்.

ஆங்கிலப் பெயர்: phyllamthus emblica, Linn, Euphorbiaceae

மருத்துவக் குணங்கள்:

நெல்லிக்காய்ச் சாறு, தேன், எலுமிச்சப்பழச் சாறு வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து காலையில் மட்டும் குடித்து வர மதுமேகம் குணமாகும்.

நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து அதில் அதிமதுரம் ஏலம், கோசுட்டம், பூலாய்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதி பத்திரி, திரிகடுகு, தான்றிக்காய், கடுக்காய்த் தோல் வகைக்கு 15 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து கலந்து சிறுதீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலைமுழுகி வர கண் காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் குணமாகும்.

நெல்லி வற்றல் 2 கிலோ எடுத்து 4 லிட்டர் நீரில் அரை கிலோ சர்க்கரை சேர்த்துப் பாகாக்கி அதில் திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெற்றிலை, குங்குலியம், கற்பூரம், வாய் விளங்கம், அதிமதுரம், கூகை நீறு, கொத்தமல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் எடுத்து பொடி செய்து போட்டுக் கிளறி, நெய் அரைலிட்டர் சேர்த்து இறக்கவும். கழற்சிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்து வர மேகச்சூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல், என்புருக்கி, இருமல், ஈழை, காசம், வாயு, கபம், பீனிசம், பொருமல் குணம் ஆகும்.

நெல்லி இலையை நீரில் கைப்பிடியளவு போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.

நெல்லி வேர்ப்பட்டையைத் தேனில் தோய்த்து தடவ நாக்குப் புண் குணமாகும்.

நெல்லி வற்றலும், பச்சை பயறும் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியாக 2 வேளை குடித்து வர தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு குணமாகும்.

நெல்லிக்காயை 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி தேன் 20 மில்லி கலந்து 40 மில்லியாக 3 வேளை 4 நாள்கள் குடித்து வர மிகுந்த பித்தம் தணியும்.

நெல்லி வற்றல் கியாழம் வைத்து 100 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை கலந்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பித்தசூடு, ஆண் குறியில் சிறு கொப்பளம், வாந்தி, அரோசகம் குணமாகும்.

Posted in Ayurveda, Ayurvedha, Blood Pressure, BP, Euphorbiaceae, Herbs, Linn, Mooligai Corner, Nature, Nelli, Nellikaai, Nellikkaai, organic, phyllamthus emblica | Leave a Comment »

Mooligai Corner – Vijayarajan in Dinamani Kathir: Pirandai

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

மூலிகை மூலை: வயிற்றுக் கோளாறை நீக்கும் பிரண்டை !

விஜயராஜன்

பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி உடையது. கால் அடி முதல் அரை அடி வரை நீளத்தில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது பெண் இனம் என்றும் அரை அடிக்கு மேல் ஓர் அடி வரை நீளவாட்டில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது ஆண் இனம் என்றும் அறிந்து கொள்ளலாம். இந்தக் கணுக்களில் இருந்தே சுருள் சுருளான விழுதுகள் வெளிப்பட்டு 15 நாளில் முற்றிய இலையாக மாறிவிடும். இது காட்டுப் பகுதிகளிலும் கரடுமுரடான கற்கள் நிறைந்த இடங்களிலும் காணப்படுகின்றன. இதற்கு அதிகமான தண்ணீரோ, ஈரப்பசையோ தேவையில்லை. காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் ஆற்றல் உடையது. குடல் வாயுவை அகற்றுதல், பசியை அதிகப்படுத்துதல், நுண்புழுக்களைக் கொல்லுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி.

வகைகள்: உருட்டை, சதுர வட்டை, முப்பிரண்டை, மூங்கிற்பிரண்டை, கோப்பிரண்டை.

ஆங்கிலப் பெயர்கள்: Cissus quadrangularis, Linn, Vitaceae.

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

பிரண்டையின் விழுது, கணு, மேல்தோல் இவற்றை நீக்கிவிட்டு உள்சதையில் இருக்கும் நரம்புகளையும் தனியாகப் பிரித்து நீக்கிவிட்டு பிரண்டையின் சதைப் பற்றை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, கொத்தமல்லி, மிளகு, புதினா, கொஞ்சம் புளி, இஞ்சி, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு வகைக்குத் தகுந்தாற்போல் எடுத்துச் சுத்தம் செய்து நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து துவையலாக்கி உண்டுவர நாவறட்சி, பித்தம், கிறுகிறுப்பு குமட்டல், குன்மம், செரிமானக் கோளாறு, வாய்வுத் தொல்லை குணமாகும். பசியைத் தூண்டும்.

பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றிட சதைப் பிடிப்பு, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு குணமாகும்.

பிரண்டையை அதிக அளவில் எடுத்து சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி தீ வைத்துக் கொளுத்த சாம்பலாகும். இதை எடுத்து அதற்கு 3 பங்கு தண்ணீர் ஊற்றி சுத்தமான பாத்திரத்தில் வைத்து அலச வேண்டும். பின்னர் தும்பு, தூசிகளை நீக்கி விட்டு ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மறுபடியும் கசடு உள்ள முதல் பாத்திரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி மறுபடியும் அலசி நீரை 2வது பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ஒரு நாள் வடித்த நீரை மூடி அசையாமல் வைத்திருந்தால் நீர் தெளிவாகிப் பன்னீர் போல இருக்கும். இந்த நீரை மறுநாள் எடுத்துப் பார்த்தால் தெளிந்திருக்க வேண்டும். அப்போது சரியாக தெளிந்திருக்கவில்லையென்றால் ஏதாவது ஒரே வகையான விறகையோ அல்லது வரட்டியையோ(பருத்தி செடிமார், கம்புத் தட்டை, பசுமா வரட்டி, கருவேலம் மரத்தின் கட்டைகள்) வைத்து சிறு தீயில் எரிக்க தண்ணீர் வற்றச் செய்து மெழுகு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தீ அதிகமானால் பொங்குவதோடு முறிந்து விடும். மெழுகுபதம் வந்ததும் கவனமாக அதை எடுத்து பீங்கான் கிண்ணத்தில் ஊற்றி அரை நாள் கழித்துப் பார்த்தால் குழம்பு பளிங்குப் பாறையாக வெண்மையான நிறத்தில் மாறி இருக்கும். இதைப் பிரண்டை உப்பு என்று கூறுவர். இதை ஒரு சம்பா அரிசி எடை எடுத்து பசும்பாலிலோ, ஆட்டுப் பாலிலோ, தாய்ப்பாலிலோ கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க நாக்கில் அச்சரம், வாயில் அச்சரம், உதட்டில் வெடிப்பு, புண், வயிற்றில் உள்ள குடல் புண், நுரையீரல் வீக்கம் குணமாகும்.

மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்ணெயில் குழைத்து 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும். இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு குணமாகும்.

குண்டுமணி அளவு பிரண்டை உப்பை எடுத்து 5 சொட்டு நெய்விட்டுக் கலந்து அதைக் கருணைக் கிழங்கு லேகியத்துடன் 2 வேளை உண்டு வர வாய்நாற்றம், மலவாய் அரிப்புடன் கூடிய உள், வெளி மூலங்களினால் சவ்வுகளில் ரத்தக் கசிவு, கம்பு முளைச் சீழ் வடிதல் குணமாகும்.

பிரண்டை உப்பு 2 அரிசி எடை எடுத்து பாலில் கலந்து 3 வேளை குடித்துவர சிறுகுழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி, நுரைத்த பச்சைப் பேதி நிற்கும்.

பிரண்டை உப்பை 1 குண்டுமணி அளவு நெய் அல்லது வெண்ணெயில் 2 மண்டலம் 2 வேளை சாப்பிட்டு வர சூதகச் சிக்கல், சூதக வலி குணம் ஆகும்.

Posted in Cissus quadrangularis, Dinamani Kathir, Herbs, Linn, Mooligai Corner, Natural Food, Naturotherapy, Organic Food, Pirandai, Pirantai, Prandai, Vijayarajan, Vitaceae | 7 Comments »

Mooligai Corner: Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

மூலிகை மூலை: அந்தரத் தாமரை

விஜயராஜன்

அடுக்கு அடுக்காய் வைத்தாற்போல இலைகளைக் கொண்டது அந்தரத் தாமரை. நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடி இனமாகும். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. இலைகளே மருத்துவக்குணம் உடையவை. உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் குளம், குட்டைகளில் தானாகவே வளர்கின்றது.

வேறுபெயர்கள்: அவை, ஆகாயமூலி, ஆகாயத்தாரை.

ஆங்கிலத்தில்: Pistia Steteotes, Linn, Areceae.

மருத்துவக் குணங்கள்:

அந்தரத் தாமரை இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.

அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.

அந்தரத் தாமரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.

அந்தரத் தாமரை இலையைச் சாறு பிழிந்து 100 மில்லியளவு எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி சூடு பொறுக்கும் அளவு துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.

அந்தரத் தாமரை இலையை மட்டும் அரைத்து தொழுநோய் புண் உள்ளவர்கள் அதன் மீது போட்டு வர ஆறும்.

அந்தரத் தாமரை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மீது இந்த இலையின் விழுதை வைத்துக் கட்ட ஆறும்.

அந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்.

அந்தரத் தாமரையிலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கருங்குறுவை அரிசி மாவும் சம அளவாக எடுத்து கலந்து பிட்டவியல் செய்து எடுத்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் மூலமுளை விழுந்து விடும்.

Posted in Allopathy, Areceae, cure, Disease, Doctor, Herbs, Homeopathy, Infection, Linn, medical, Medicine, Mooligai, Natural Therapy, Pistia Steteotes, unaani | Leave a Comment »