Archive for the ‘Telugu Cinema’ Category
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007
ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்
நகரி, பிப். 11-
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன். அல்லு அர்ஜுன் நடித்த “தேச முதுரு” படம் 100 நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் அநியாயங்களைச் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார்.
இப் படத்தின் வெற்றி விழா குண்டூரில் உள்ள `ராஜ் சென்டர்’ அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அவருடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அல்லு அர்ஜுனை ரசிகர்கள் போல சூழ்ந்து கொண்டது.
தன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பது திருடர்கள் என்பதை அறியாத அர்ஜுன் அவர்களுடன் கை குலுக்கினார்.
அப்போது திருடர்கள், `அல்லு அர்ஜுன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர் அவரை கட்டிபிடித்து வாழ்த்துவது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த பெரிய தங்க செயின், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், வைர மோதிரம், தங்க கடிகாரம், செல்போன், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸ்.. என்று ஒவ்வொன்றாகப் பறித்தனர்.
பின்னர் கூட்டத்தோடு கூட்டமாக திருடர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டனர்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் திருடர்களிடம் அத்தனை நகைகளையும், பணத்தையும் இழந்ததால் அல்லு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தார்.
அவர் கூறும்போது `ரசிகர்கள்தான் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்தேன். திருடர்கள் இந்த அளவுக்கு துணிச்சலுடன் பொது நிகழ்ச்சிலேயே எனது அத்தனை நகைகளையும் பறித்து சென்றது வேதனையாக உள்ளது. இனி நடிகர்கள், ரசிகர்கள் கும்பலாக வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது’ என்றார்.
இதே விழாவில் பலரது செல்போன்களும், நகைகளும் திருட்டு போனது. இது பற்றி குண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு கும்பலை தேடிவருகிறார்கள்.
Posted in 100th day, Allu Arjun, Andhra, Andhra Pradesh, AP, Celebration, Chiranchivi, Chiranjeevi, Desamudru, Desamuduru, Fans, Pokkiri, Raj Center, Robbery, Siranjeevi, Telugu, Telugu Cinema, Telugu Films, Theft, Thief, Tollywood | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007
என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேருகிறார்
ஐதராபாத், ஜன.30-
ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய நடிகர் என்.டி.ராமராவ். அந்த மாநில மக்களால் கடவுளாக மதிக்கப்பட்டவர். சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே கடந்த 1982-ம் ஆண்டு திடீரென அரசியலில் நுழைந்தார்.
தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 9 மாதத்திலேயே அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரி ஆனார்.
1995-ம் ஆண்டு என்.டி.ராமராவின் மருமகனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், மந்திரி பதவி வகித்து வந்தவருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் என்.டி.ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அந்த கட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் அடுத்த ஆண்டிலேயே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.
மறுவருடம் 1996-ல் என்.டி.ராமராவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
என்.டி.ராமராவின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் சமீபத்தில் அவர் கட்சியில் சேர்ந்தார்.
2-வது மகன் பாலகிருஷ்ணா. பிரபல முன்னணி நடிகர். பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2004-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் அவர் விடுதலையானார்.
கடந்த 18-ந் தேதி என்.டி.ராமராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா “என் தந்தை 1982-ம் ஆண்டு திடீரென அரசியலுக்கு வந்தது போல நானும் திடீரென அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவிதார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணா நேற்று திடீரென தனது மைத்துனரும், முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை சந்திரபாபு நாயுடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்தது. ஆகவே பாலகிருஷ்ணாவின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு, “பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் அவரே அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
ஆனால் பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வந்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமையும். ஏனென்றால் அந்த கட்சி கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இப்போது நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. ஆகவே பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
Posted in Actors, Andhra, Andhra Pradesh, AP, Balakrishna, Chandrababu Naidu, Chief Minister, CM, Elections, Films, Harikrishna, Lok Sabha, Naidu, NT Rama Rao, NTR, Party, Politics, TDP, Telugu Cinema, Telugu Desam, Telugu Movies, Tollywood | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007
தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு
ஐதராபாத், ஜன. 29-

LIGHTS, CAMERA, ACTION: Chief Minister Y.S. Rajasekhara Reddy sounds the clapper board to launch the celebrations of the platinum jubilee of the Telugu film industry. Also seen are (L-R) film actor Krishna, his wife Vijayanirmala, Union Minister Dasa ri Narayana Rao, Finance Minister K. Rosaiah, Information Minister Mohd Ali Shabbir, film actor Mohan Babu, producer Seshagiri Rao.— Photo: Mohd. Yousuf
தெலுங்கு பட உலகின் 75-ம் ஆண்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி ராஜ சேகர ரெட்டி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார்.
விழாவில்
- தாசரி நாராயணராவ்,
- அஞ்சலிதேவி,
- சிரஞ்சீவி ஆகியோருக்கு சாதனை யாளர் விருதுகள் வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தாசரி நாராயணராவ் மேடைக்கு சென்று விருதை பெற்றார். சிரஞ்சீவிக்கு விருது கொடுக்கும் முன் நடிகர் மோகன்பாபுவை பேச அழைத்தனர். அவருக்கு பிரபலமானவர் என்ற விருதை அளித்தனர். அவ்விருதை பெற மோகன்பாபு மறுத்து விட்டார்.
விழாவில் மோகன்பாபு ஆவேசமாக பேசியதாவது:-
எனக்கு சாதளையாளர் விருது தராதது துரதிர்ஷ்டவசமானது. நான் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளேன். மேல்- சபை எம்.பி. பதவி வகித்துள்ளேன். சாதி மதத்துக்கு அப்பாற் பட்டு பள்ளிக்கூடம் நடத்துகி றேன். அந்த பள்ளியில் ஏழைகளுக்கு 25 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கிறேன். 510 படங்களில் நடித்து இருக்கி றேன். 49 படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் “சாதனையாளன்” கிடையாதா? எனக்கு ஏன் அந்த விருதை தரவில்லை.
விஜயநிர்மலா பெண் இயக்குனர். அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. கிரிபாபு நடிகராக, இயக்குனராக தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை இவ்விழாவுக்கு அழைக்க வில்லை. தெலுங்கு பட உலகம் இரண்டு, மூன்று பேருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நினைக்கிறார்கள்.
இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் இறங்கிவிட்டார்.
இதையடுத்து சிரஞ்சீவி பேசியதாவது:-
நாமெல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறோம். நம் ஆரம்ப காலத்தையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் மறக்க கூடாது. ஏழைகளாக இருந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கர்வம், அகந்தை இருக்ககூடாது.
சினிமா ஒரு குடும்பம். நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அதை திரைக்கு பின்னால்தான் பேச வேண்டும். எல்லோருக்கும் தெரியுற மாதிரி பேசி அவமானப்படுத்தக்கூடாது. நாம் சண்டை போடுவது வெளியே தெரியக்கூடாது.
கோவா பட விழாவில் என்.டி.ஆர். படம் வைக்கவில்லை. மும்பை, டெல்லி, கோவா வரை நம்மால் போக முடியவில்லை. சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததுதான்.
ஒரு திருமணத்துக்கு போய் இருந்தேன். தாலி கட்டுவதை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டேன். மற்றவர்கள் சந்தோஷம்தான் முக்கியம்.
நான் வயதில் சிறியவன், வெங்கடேஷ், நாகார்ஜுனா என் வயதில் உள்ளவர்கள். அவர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. சாதனையாளர் விருதுக்கு நான் தகுதி இல்லை. 100-வது நாள் பட விழா நடக்கும்போது நான் திரையுலகில் இருப்பேன். அப்போது விருதை வாங்கி கொள்கிறேன்.
இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் சென்று விட்டார்.
Posted in 75, Andhra Pradesh, Andhra Pradesh State Film, Anjali Devi, APSFTTDC, Awards, Celebrations, Chandrababu Naidu, Chiranjeevi, Cong (I), Congress, Dasari Narayana Rao, Dhasari Narayanarao, Fights, Giribabu, Indira Congress, K. Rosaiah, Krishna, Lifetime Achievement, Mallemala, Mogan Babu, Mohan Babu, Mohd Ali Shabbir, Nagarjuna, NT Ramarao, NTR, Padhmashree, Padma Sri, Platinum Jubilee, Raja shekara Reddy, Rajasekara Reddy, Seshagiri Rao, Siranjeevi, Teleugu Film, Television and Theatre Development Corporation, Telugu Cinema, Telugu Desam, Tollywood, Venkatesh, Vijaya Nirmala, Vijayanirmala, YS Rajasekhara Reddy | 1 Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2006
படப்பிடிப்பில் அஸின் காயம்
சென்னை, டிச.8: “போக்கிரி‘ படத்தில் இடம்பெறும் ஒரு நடனக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது நடிகை அஸினுக்கு காயம் ஏற்பட்டது.
நடிகர் விஜய், அஸின் நடித்து வரும் “போக்கிரி’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி புதன்கிழமை படமாக்கப்பட்டது.
பட இயக்குநர் பிரபுதேவா நடன அசைவுகளைப் பற்றி விஜய், அஸின் ஆகியோருக்கு விளக்கி படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அஸினிடம் “ஷூவை கழற்றிவிட்டு நடனமாடினால் காட்சி இன்னும் சிறப்பாக வரும்’ என்று கூறியுள்ளார்.
இதனால் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அஸின் வெறும் காலுடன் ஆடியுள்ளார். அப்போது பலகையில் இருந்த ஓர் ஆணி அஸின் பாதத்தில் பாய்ந்து ரத்தம் வழிந்துள்ளது.
உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
Posted in Accident, Asin, Blood, Dance Master, Heroine, Ilaiya Thalapathi, Ilaiya Thalapathy, Pokkiri, Prabhudeva, Remake, Rest, Shoes, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil songs, Telugu Cinema, Tollywood, Vijay | 4 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006
எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்தார்: 9 வயதில் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி மரணம்
சென்னை, நவ. 27- பழம்பெரும் நடிகை ஜி.வர லட்சுமி சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. வரலட்சுமி ஆந்திராவை சேர்ந்தவர். அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் 27.9.1927-ல் பிறந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 80 படங்கள் நடித்துள்ளார். இவரது முதல் படம் பக்தபிரகலாதா. தனது 9வது வயதில் குழந்தை நட்சத் திரமாக இதில் அறிமுகமானார். கதாநாயகியாக நடித்த முதல் படம் துரோகி. இப்படத்தில் எல்.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்தார்.
தமிழில் குழந்தையும் தெய்வ மும், நான் பெற்ற செல் வம், அரிச்சந்திரா ஆகிய படங்க ளில் நடித்துள்ளார். குலேபகா வலியில் எம்.ஜி.ஆருக்கு இவர் ஜோடி. அரிச்சந்திராவில் சிவாஜி ஜோடியாக நடித் தார். அரிச்சந்திரா படம் வரலட்சுமியின் சொந்த படம். இது `சென்சார்’ பிரச்சினையில் சிக்கி ரொம்ப நாள் ரிலீசாகாமல் இருந்தது. ரிலீசான பிறகும் சரியாக ஓடவில்லை.
இவர் நடித்த `அண்ணி’ படம் தமிழ், தெலுங்கில் தயாரானது. வளர்ப்புத்தாய் கேரக்டரில் இதில் நடித்தார். இப்படம் இரு மொழிகளில் அதிக நாட்கள் ஓடி சக்கை போடு போட்டது.
வரலட்சுமி இளம் வயதில் மல்யுத்த போட்டி பிரியையாக இருந்தார். அந்த காலத்தில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தினமும் மல்யுத்த போட்டிகள் நடக்கும்.
இப்போட்டியை காண மைதானம் நிரம்பி வழியுமாம். இங்கு நடைபெறும் தாரா சிங், கிங்காங் மல்யுத்த சண்டைக்கு தனி மவுசு உண்டு. இந்த போட்டிகளை காண வரலட்சுமி தினமும் செல்வாராம். தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவும் செய்துள்ளார்.
பிரபல டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவை திருமணம் செய்து கொண்டார். பிரகாஷ் ராவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத் தக்கது.
குழந்தை நட்சத்திரம், கதா நாயகி, வில்லி கேரக்டர் களில் நடித்த வரலட்சுமியின் கடைசி படம் வேதமனசுலு. அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.
இவரது மகன் பிரகாஷ் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 30வது வயதில் அவர் மரணம் அடைந்தார்.
கடைசி காலத்தில் பெசன்ட் நகரில் உள்ள மகள் கனகதுர்கா வீட்டில் தங்கி இருந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று மரணம் அடைந்தார்.
பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது.
Posted in Andhra Pradesh, AP, Biosketch, G Varalakshmi, Kollywood, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Actress, Telugu Cinema | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
பழம்பெரும் நடிகை வரலட்சுமி காலமானார்
சென்னை, நவ. 27 உடல்நலக் குறைவு காரணமாக பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை ஜி. வரலட்சுமி (80) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கனகதுர்கா வீட்டில் அவர் காலமானார்.
- அண்ணி,
- குலேபகாவலி,
- நான் பெற்ற பிள்ளை,
- நல்ல தங்காள்,
- அரிச்சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவரது கணவர் கே.எஸ். பிரகாஷ் ராவ் “வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Cinema, Tollywood, Varalakshmi | 1 Comment »