Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 23rd, 2006

Ginger, Mango, Garlic pickles from AP & TN have pesticides & banned in USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

இந்திய ஊறுகாய்களில் பூச்சிக் கொல்லி மருந்து: அமெரிக்கா கூறுகிறது

நியூயார்க், நவ. 23: கோககோலா மற்றும் பெப்சியில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இப்போது அமெரிக்காவும் தன் பங்கிற்கு இந்திய ஊறுகாய்களில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாகக் கூறி தடைவிதித்துள்ளது.

ஹைதராபாத் நிறுவனம் தயாரிக்கும்

  • பூண்டு கலந்த மற்றும் கலக்காத
  • மாங்காய் ஊறுகாய்க்கும்,
  • மகாராஷ்ட்டிரா நிறுவனம் தயாரிக்கும் மாம்பழ ஜூஸ்,
  • அன்னாசி ஜூஸ் ஆகியவற்றுக்கும்,
  • தமிழக நிறுவனம் தயாரிக்கும் மாங்காய்
  • இஞ்சி ஊறுகாய்க்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

Posted in Annaasi, Ban, condiments, Exports, Garlic, Ginger, Imports, India, Inji, Maambazham, Mango, oorugaai, Pickle, pineapple, Poondu, USA | Leave a Comment »

Vallikkannan Memoirs – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

“நவீன இலக்கிய ரிஷி’

சு. நயினார்

எண்ணத்தையும் எழுத்தையும் உயர்வாகப் போற்றிய வல்லிக்கண்ணன் எழுதுவதும் சொல்வதும் போலவே இறுதிவரை வாழ்ந்தவர். இன்றைய ஆரவாரமிக்க உலகில் ஆடாமல் அமைதியான முறையில் ஓர் எழுத்துப் புரட்சியைத் தோற்றுவித்த படிப்பாளியும் படைப்பாளியுமாவார். இவர் சிரிக்காமல் சிந்தித்து தரமிக்க இலக்கியங்களைத் தமிழுலகிற்கு வழங்கியவர். வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கிய வகைமைகள் பலவற்றினுள் – வசனகவிதை, புதுக்கவிதை, நாடகம், சிறுகதை, புதினம், வாழ்க்கை, இலக்கிய வரலாறு, இதழியல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், கட்டுரை – தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தடம் பதித்தவர்.

கொள்கை – கோட்பாட்டிலிருந்து விலகாத வல்லிக்கண்ணன் எழுபத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய வாழ்வை மேற்கொண்ட “நவீன இலக்கியரிஷி’. இவர் மண்ணின் மனத்தைப் படைப்புகளாக்கினார். புதுக்கவிதை முன்னோடிகள் நால்வருள் ஒருவரான வல்லிக்கண்ணன், அறிவாளிகள் எதிர்பார்க்கும் உன்னதமான படைப்புகள் பலப்பல படைத்தவர். பணத்தையும் புகழையும் விரும்பாதவர். பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்குவதில் சமூகப் பொறுப்பாளியாகச் செயல்பட்ட இவரை எந்த இயக்கமும் ஒதுக்கியதில்லை எனலாம்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய மேம்பாட்டிற்கு இவர் செய்திருக்கும் பணி வரலாற்றில் சுட்டத்தக்கன. சாதி, மத, இன உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட வல்லிக்கண்ணன் எந்தவொரு நச்சு – நசிவு இயக்கத்திற்காக நின்று இயங்கியதும் – இயக்கியதும் இல்லை. இவர் எழுத்துச் செல்வராக இலக்கிய ரிஷியாக, கவிஞராக, சிறுகதை – புதின ஆசிரியராக, கட்டுரையாளராக, விமர்சகராக, இதழாசிரியராக, வரலாற்றாய்வாளராக, ஒப்பீட்டாளராக, மொழி பெயர்ப்பாளராக… பன்முகத் தன்மையில் தமிழ் இலக்கியப் போக்கினை உணர்த்திய விடிவெள்ளி! பேராண்மை மிக்கவர்! நல்ல நினைவாற்றல் மிக்க இவர் சிறு பத்திரிகைகளின் “தகவல் களஞ்சியம்’ எனில் மிகையன்று! ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு எழுதினாரில்லை! நடப்பியல் உண்மைகளை நயமாக எடுத்துக்காட்டவும் இவர் தயங்கினாரில்லை. நான்கு தலைமுறை எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளுள் “”வல்லிக்கண்ணனின் ஆளுமை வெளிப்பாடும் விலகல் மனோபாவமும்’ பலருக்கு வியப்பளிக்கும்.

இவருக்கு எவற்றினுள் பற்று ஏற்பட்டதோ அவை இவரது வெளிப்பாடாக மலர்ந்தன. புதுமை இலக்கியம் படைக்கும் எழுத்து, இளம் எழுத்தாளர்களை அரவணைப்பது, வரலாற்று நோக்கு (புதுக்கவிதை, சிற்றிதழ், வாசகர், விமர்சகர்கள் உரைநடை), மறுமலர்ச்சிப்போக்கு, எளிமையை விரும்புதல் போல்வனவற்றுடன் மிகுதியான பற்றுக் கொண்டவர்.

வல்லிக்கண்ணனின் பற்றின்மை: விளம்பரப்புகழ், பணம், மது, குடும்பவாழ்வு, அரசியல் சார்பு, மதம், திரையுலக வாழ்வு, ஜனரஞ்சகப் பத்திரிகை போன்றவற்றில் பற்றில்லாமல் விலகி இருந்த நிலை எண்ணற்குரியது; எவரிடத்தும் இத்தனைப் பற்றின்மைகளைக் காண்பதரிது!

பள்ளியிறுதி வகுப்பை முடித்து 1937-ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த இவருக்கு எழுத முடியாத சூழல். அவ்வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்ட வல்லிக்கண்ணன் ஒருபோதும் பிற்போக்கு இலக்கியவாதிகளின் தாக்கங்களுக்குட்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும்; புகழ் பெற வேண்டும்; வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணியதோ – செயல்பட்டதோ இல்லை. தனிமரமாக நின்ற வல்லிக்கண்ணன் வறுமையிலே உழன்றாலும் செம்மையாக வாழ்ந்தார். இவர் யாரிடமும் கையேந்தாமல் கொள்கைப் பிடிப்புடன் – வைராக்கியத்துடன் வாழ்ந்த இலக்கியப்பித்தன். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் இவரும் இடம் பெறத்தக்கவராவார். இவரது முதல் பாகச் சுயசரிதம் பலருக்குப் பயனளிக்கும். இராசவல்லிபுரத்தில் 12-11-1920-இல் பிறந்த வல்லிக்கண்ணன் 10-11-2006-இல் இறந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி, அவரிட்டுச் சென்ற பணியினைத் தொடருவோமாக.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Literature, Vallikkannan | Leave a Comment »

Sivaji movie shooting in Forest gets reprimand – Rajni & Shankar fined

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

சிவாஜி படப்பிடிப்பில் பரபரப்பு: வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு

சென்னை, நவ. 23: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் சிவாஜி படப்பிடிப்பின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.

திருப்போரூர் அருகே உள்ளது ஆழத்தூர். இங்கு சிப்காட் தொழில்பேட்டை அமைந்துள்ளது. மேலும், வனத்துறைக்கு சொந்தமான பகுதியும் இங்கு உள்ளது.

சிவாஜி படப்பிடிப்பு:இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருப்போரூர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி லீமா தோஷி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக படக்குழுவினரிடம் தெரிவித்தனர்.

ஆனால், நெடுஞ்சாலைத் துறையிடம் உரிய அனுமதி பெற்று இருப்பதாக படக்குழுவினர் பதில் அளித்தனர். இதை ஏற்காத வனத்துறை அதிகாரிகள்,””நீங்கள் படப்படிப்பு நடத்திய இடம் வனத்துறைக்கு சொந்தமானது,” எனத் தெரிவித்தனர்.

உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக படக்குழுவினருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் நடிகர் ரஜினியும், இயக்குநர் சங்கரும் இருந்தனர்.

Posted in Location, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Shooting, Sivaji, Sivaji the Boss, Tamil, Tamil Cinema, Tamil Film, Tamil Movies | Leave a Comment »

Accord signed in France on sun emulating nuclear reactor

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

உலகின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேசத் திட்டம்

புதிய உலையின் வரைபடம்
புதிய உலையின் வரைபடம்

ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் இணைந்து தெர்மோ நியூக்ளியர் ரியக்டர் எனப்படும் – அணு சேர்வு மூலம் செயல்படும்
சர்வதேச அணுஉலையை அமைக்கும் சோதனைத் திட்டத்தை செயல்படுத்த பிரான்ஸ் தலைநகர் பேரிசில் ஒரு ஒப்பந்தத்தில் கைழெழுத்திட்டுள்ளன.

இத்திட்டத்தின் படி தெற்கு பிரான்சில் உள்ள காதர்ஷ் என்ற இடத்தில் இந்த சோதனை அணு உலை அமைக்கப்படும். இதை கட்டி முடிக்க பத்து ஆண்டுகள் ஆகும்.

சர்வதேச அணு சேர்வு உலையை அமைக்க குறைந்து 13 பில்லியன் டாலர்கள் செலவாகும்.

தற்போது அணுவைப் பிளப்பதன் மூலம் வெளியாகும் சக்தியிலிருந்து எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. ஆனால் புதிய முறையில் அணுவை சேர்பதன் மூலம் எரிசக்தியைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சூரியனில் அணு சேர்க்கை மூலமே வெப்பம் உருவாவதை சுட்டிக் காட்டும் விஞ்ஞானிகள், அதே முறையை செயல்படுத்த இங்கு முயற்சி எடுக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

இம் முறையில் பெறப்படும் சக்தியின் அளவு மிகவும் அதிகம். அதாவது பத்து லட்சம் கிராம் நிலக்கரி அல்லது பெட்ரோலிய எண்ணையில் இருந்து கிடைக்கும் சக்தி ஒரு கிராம் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச அணு சேர்ப்பு திட்டமானது, பணச் செலவு உள்ளிட்ட, பல சிக்கல்களைத் தாண்டிவர வேண்டி வேண்டியுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் பூமியில் உள்ள, நிலக்கரி மற்றும் எண்ணை வளங்கள் நூறு ஆண்டுகளில் முற்றாக பயன்படுத்தப்பட்டு விடும் என்றும் அதனால் எரிசக்தி வளத்துக்கு புதிய தீர்வை விஞ்ஞானிகள் கண்டறியவேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.

புதிய திட்டம் உலகின் எரிசக்தித் தேவையைத் தீர்க்குமா என்பது குறித்த பெட்டகத்தை இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.

Posted in China, energy, EU, India, international consortium, International Thermonuclear Experimental Reactor, ITER, Japan, Nuclear, Russia, South Korea, USA | Leave a Comment »