Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 17th, 2006

Sivaji – The Boss: Movie Preview – Location spot: USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

`சிவாஜி’ படப்பிடிப்பு; ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்; தந்தை `கெட்டப்’ படமாகிறது

ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள் ளது. புனேயில் நயன்தாராவின் நடன காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி காட்சிகளும் எடுக்கப்பட்டன.

கதைப்படி அமெரிக்காவில் வாழும் கோடீசுவர இந்தி யரின் மகனான ரஜினி தமிழக மக்களுக்கு சேவை செய்ய பணத்துடன் வருகிறார். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உதவி செய்கிறார். ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக் கிறார்.

இதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். அவர் மீது எரிச்சல்படும் அரசியல் வாதிகள் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சொத்துக் கள் பறிபோகிறது. ஏழையா கும் அவர் மீண்டும் பணக்கார ராகிறார்.

சிவாஜிக்காக புனேயில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனங் களில் சிவாஜி யுனிவர்சிட்டி கல்லூரி என்றெல்லாம் பெயர் பலகைகள் வைத்து ஆடம்பமாக படமாக்கப்பட்டது.

கல்லூரியை ரஜினி திறப்பது போல் காட்சி கள் எடுக்கப்பட்டன. மாண வர்களை அந்த கல்லூரியில் ரஜினி சேர்த்து இலவசமாக படிக்க வைக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டுது.அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

சிவாஜியில் ரஜினிக்கு இரட்டை வேடம் தந்தை, மகன் கெட்டப்பில் நடிக் கிறர். தந்தை கேரக்டர் அமெரிக் காவில் தொழில் அதிபராக இருப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை `கெட்ப்’புக்காக ரஜினி நடித்த பழைய படங்களின் ஸ்டில்களை டைரக்டர் ஷங்கர் பார்த்து அதிலிருந்து தலையில் வகிடெடுத்துள்ள தோற்றத்தை தேர்வு செய்துள்ளார். அதே கெட்டப்பில் தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. `டூயட்’ பாடல் காட்சியும் படமாக் கப்படுகிறது.

இதற்காக ரஜினி, ஸ்ரேயா, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்கள்.

`சிவாஜி’ படத்தில் பிரபு தேவா நடன பயிற்சி அளித் துள்ளார். 10 நாட்கள் இந்த நடன காட்சிகள் படமாக் கப்பட்டு உள்ளன. ரஜினி வளைந்து நெளிந்து அபாரமாக ஆடி நடித்ததாக பிரபுதேவா கூறினார்.

வில்லன் பாத்திரத்தில் சுமன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி நண்பராக ரகுவரன் நடிக்கிறார். ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் புனேயில் படமாக்கப்பட்டு விட்டது.

அறிமுக பாடல்

`சிவாஜி’ படத்தில் ரஜினி அறிமுக பாடல் ஒன்று இடம்பெறுகிறது. எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியும் புனேயில் படமாக்கப்பட்டது. 5 ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் இப்பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது.

சிவாஜி படத்தில் ரஜினி உடுத்தும் ஆடைகள் இதுவரை இல்லா அளவிற்கு மிகவும் வித்தியசமாகவும், ஸ்டைலாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், ப்ரீத்தாஜிந்தா, ராணிமுகர்ஜி போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்ப வரான மணிஷ் சிவாஜி படத்திற்கு அடை ஆலங்காரம் செய்கிறார்.

Posted in Nayanthara, Prabhu Deva, Raghuvaran, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji the boss, Shreya, Sivaji, Sreya, Suman, Tamil | Leave a Comment »

‘Thanga Vettai’ Vijayalakshmi to marry Kannada Actor’s son

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

கன்னட நடிகர் மகனை மணக்கிறார்: நடிகை விஜயலட்சுமி காதல் திருமணம்

Thanga Vettai compere Actress Vijayalakshmi Suicide – Background Details « Tamil News: “சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.”

“ப்ரண்ட்ஸ்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.

சூரி, கலகலப்பு உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் டி.வி. தொடர்களிலும் நடித்தி ருக்கிறார்.

தமிழில் பிரபல கேம்ஷோ டி.வி. தொடராக விளங்கிய தங்கவேட்டையின் கன்னட பதிப்பை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

தங்கவேட்டை ஷூட்டிங்கின்போது அதன் இயக்குனர் ரமேஷ் கொடுத்த மன உளைச்சலினாலேயே தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

தன்னை காதலிக்க ரமேஷ் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். விஜயலட்சுமிதான் ரமேஷை காதல் நச்சரிப்பு செய்ததாக அவர் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்தனர்.

தற்போது டி.வி. தொடர் களில் அதிகக் கவனம் செலுத்தி வரும் விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான லோகேஷின் மகனான சுருஜன் லோகேஷை விரைவில் விஜயலட்சுமி மணக்க உள்ளார். இதற்கான நிச்சயதார்த்தம் சமீபத்தில் பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது.

சுருஜனுக்கும், விஜயலட்சுமிக்கும் ஏற்கனவே காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Posted in Bangalore, Betrothal, Friends, Kannada, Logesh, Lokesh, Marriage, Ramesh, Soori, Suicide, Surujan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Thanga Vettai, TV, Vijayalakshmi | 1 Comment »

Haj subsidy for 10,000 more pilgrims

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

மேலும் 10 ஆயிரம் பேருக்கு ஹஜ் பயணம் செல்ல நிதி உதவி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, நவ. 17- இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதும் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ்பய ணம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஹஜ்பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்கள் நல னுக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் மானியம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சம் முஸ்லிம்கள் மத்திய அரசு மானியம் மூலம் பயன் பெற்றனர்.

இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேருக்கு புனித ஹஜ் பயண நிதி உதவி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நேற்று இதற்கான முடிவு எடுக் கப்பட்டது. எனவே இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் ஹஜ் பயணிகள் மத்திய அரசு மானியம் பெறுவார்கள்.

இதற்கான பயனாளிகளை ஹஜ்கமிட்டி தேர்வு செய்கிறது. தேர்வு பெறுபவர்களுக்கு மத்திய அரசு தலா ரூ.45 ஆயிரம் பயண கட்டணத்தை மானியமாக வழங்கும். இத னால் மத்திய அரசுக்கு ரூ.3.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஹஜ்பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற் காக

  • கொல்கத்தா,
  • கள்ளிக் கோட்டை,
  • நாகபுரி,
  • அவுரங் காபாத்,
  • பாட்னா,
  • கவுகாத்தி,
  • ஜெய்ப்பூர்,
  • ஸ்ரீநகரில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்.

Posted in Air India, Budget, Economics, Finance, Free, Haj, Holiday, Holy, India, Islam, Mecca, Medina, Muslim, Pilgrimage, Politics, Religion, Tamil, Trips, Vacation | 2 Comments »

Racial remarks against Indians – Jolie’s bodyguards arrested: scuffle with kids parents

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

குழந்தைகள் பெற்றோர் மீது தாக்குதல்: நடிகை ஏஞ்சலினா பாதுகாவலர்கள் கைது

மும்பை, நவ. 17- ஆஸ்கர் விருது பெற்ற ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி தனது கணவர் பிராட் பிட்னுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஒரு மாதமாக அவர் மும்பையில் தங்கி இருந்து `மைட்டி ஹார்ட்‘ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மும்பையில் உள்ள அஞ்சு மான்-இ-இஸ்லாம் பள்ளிக் கூடத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்தது. இதை யொட்டி அந்த பள்ளிக்கூடத்தின் கதவை படப்பிடிப்பு குழுவினர் இழுத்து மூடிவிட் டனர்.

மாலையில் அந்த பள்ளிக்கூடத்தின் கதவு திறக்கப்பட்டது. அப்போது குழந்தைகளை அழைத்து போக வந்த பெற் றோர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களை நடிகை ஏஞ்சலினாவின் பாதுகாவலர்கள் பிடித்து தள்ளினார்கள். பெண் களையும் அவர்கள் பிடித்து தள்ளினார்கள். சில பெற்றோர் நடிகையை பார்க்கும் ஆர்வத் தில் அங்கு திரண்டனர். அவர்களை பாதுகாவலர்கள் தாக்கினார்கள். இந்தியர்களை தரக்குறைவாகவும் அவர்கள் திட்டினார்கள்.

இதுபற்றி பெற்றோர் மும்பை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஏஞ்சலினா ஜுலியின் பாதுகாவலர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது

  • 323(தாக்குதல் நடத்தியது)
  • 504(அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.

ஏற்கனவே கடந்த மாதம் புனேயில் ஏஞ்சலினாவின் பாதுகாவலர்கள் புகைப்பட காரர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து புகைப்படக்காரர் ஒருவரை ஓட்டல் அருகே இந்த பாதுகாவலரின் தாக்கி னார்கள்.

Posted in A Mighty Heart, Angelina Jolie, Anjuman-E-Islam, Azad Maidan, Badruddin Tayyabji, Brad Pitt, causing hurt, criminal intimidation, Daniel Pearl, India, intentional insult to provoke breach of peace, IPC 323, IPC section 506, Machael John Bretti, Robbert Patrick Donne, section 298, section 504, Tamil, Thomas Edward Mcadams, uttering words to wound religious feelings | Leave a Comment »

‘LTTE using Indian Fishing Trawlers to transport war like material’ – Sri Lanka

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்த இந்திய படகுகள்: இலங்கை அரசு குற்றச்சாட்டு

கொழும்பு, நவ. 17- இந்திய மீன்பிடி படகுகளில் விடுதலைப்புலிகள் ஆயு தம் கடத்தி வருவதாக இலங்கை அரசு புகார் கூறியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இலங்கை கடற் படையினருக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் பற்றி இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-

தாக்குதல் நடத்தி வரும் விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்து வருகிறோம். இந்திய மீன்பிடி படகுகள் மூலம் விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கடத்தப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளில் அயுதங்கள் கடத்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசை கேட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்ததயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபச்சே பாராளுமன்றத்தில் பேசும்போது “விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தைக்கு வரும் படி மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதி முயற்சி மூலம் பிரச்சினைக்கு தீர்வுகான இலங்கை அரசு தயார்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராணுவ செலவுக்கு 45 சதவீதம் கூடுதலாக அவர் ஒதுக்கி இருக்கிறார்.

Posted in Allegations, Atrocities, Countercharges, Eezham, Fight, Geneva, Independence, Jenoa, Liberation, LTTE, Rajapakse, Refugees, Sri lanka, Tamil, Terrorism, Viduthalai Puligal, War, Weapons | Leave a Comment »

Poo Aalalasundaranaar – Tamil Scholar’s Anniversary : Bioskectch

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

சிவநெறிச்செல்வரின் நூற்றாண்டு

மு.அ. மாணிக்க வேலு

இருபதாம் நூற்றாண்டில் தோன்றி, தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியோர்களுள் ஒருவர் பேராசிரியர் பூ. ஆலாலசுந்தரனார். அவர் வேலு செட்டியாருக்கும் இராசம்மாளுக்கும் 1907-ம் ஆண்டு நவம்பர்த் திங்கள் ஐந்தாம் நாள் மகனாகப் பிறந்தார்; சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் 1917-ம் ஆண்டு முதல் 1927-ம் ஆண்டு வரை படித்தார்.

அவர் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரியில் 1927 முதல் 1929 வரை படித்து, இடைநிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றார். முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா, அப்பாண்டை ராஜன், நடேசன் முதலியோர் அவருடன் படித்த தோழர்கள் ஆவர்.

அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைத் தமிழ்ப் பிரிவு தொடங்கப்படவில்லை. அப்பொழுது கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பி பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க, அவருக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.

அவர் தமிழ் படிக்க விரும்பி வந்ததைப் பாராட்டி, உதவித்தொகைகளை வழங்கினார் இராஜா சர் எம்.ஏ . முத்தையா செட்டியார். ஆலாலசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1932-ம் ஆண்டில் தமிழ்ப் பேரவையின் செயலாளராகப் பணியாற்றினார்; 1932-33-ம் ஆண்டில் அப் பல்கலைக் கழகப் பேரவையின் இரண்டாம் பருவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1934-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார்; அதன் வாயிலாக, 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.

சென்னைக் கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், அவரை உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராக நியமித்தார். அக்காலத்தில் கிறித்துவ உயர்நிலைப் பள்ளியும், கிறித்துவக் கல்லூரியும் ஒரே கட்டடத்தில், சென்னை முத்தியாலுப்பேட்டை லிங்கிச் செட்டித் தெருவில் இருந்தன. மொழியாசிரியர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் பாடம் நடத்தினர். ஆதலால், ஆலாலசுந்தரனார் கல்லூரி இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்பித்து வந்தார்.

1937-ம் ஆண்டு கிறித்துவக் கல்லூரி தாம்பரத்திலுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அப்பொழுது பேராசிரியரும் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டார். அவர் 1951-ம் ஆண்டு தமிழ்த்துறைத் தலைவர் பதவியும் தமிழ்ப் பேராசிரியர் பதவியும் பெற்றார்; 1964-ம் ஆண்டிலிருந்து 1968-ம் ஆண்டுவரை மொழித்துறைத் தலைவராகத் தொண்டாற்றினார்; 1968-ம் ஆண்டிலிருந்து 1973-ம் ஆண்டுவரை, இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழுவின் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார்; 1973-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அதே கல்லூரியில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றினார்.

அவர், இயற்றமிழ், கட்டுரை விருந்து, சுந்தரச் சொல்லோவியம் ஆகிய நூல்களின் ஆசிரியர்; சென்னை கந்தகோட்டத் தலபுராணத்திற்கு உரையாசிரியர்; 80-க்கும் மேற்பட்ட மலர்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன; கிண்டியில் உள்ள கல்லூரி மாணவர் இலவச விடுதியில் ஞாயிறுதோறும் திருக்குறள், திருவாசகம், கந்தரனுபூதி முதலியவை பற்றி 15 ஆண்டுகள் தொடர்ந்து வகுப்பு நடத்தினார். தமிழக ஆளுநர் மைசூர் அரசர் ஜெயசாமராஜ உடையாருக்கு தமிழ் கற்பித்தார்.

பேராசிரியர் ஒவ்வோர் ஆண்டும் ஆனித் திருமஞ்சனத்தன்றும், மார்கழித் திருவாதிரையன்றும் சிதம்பரம் சென்று, நடராசப் பெருமானை வழிபட்டு வருவார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்று, இறைவனை வணங்கி வந்தார்.

அவர் 1982-ம் ஆண்டு மார்கழித் திருவாதிரைக்குச் சிதம்பரம் சென்று கடைசி முறையாக நடராசப் பெருமானை வணங்கி வருகிறேன்; அதன்பிறகு, பார்வைக்குறைவினால் செல்ல இயலாது என்று கூறிச் சென்றார்.

மார்கழித் திருவாதிரையன்று காலை சிதம்பரம் கோயிலுக்குச் சென்று நடராசப் பெருமானின் அபிஷேகத்தைத் தரிசித்துவிட்டு, அங்கு தாம் தங்கும் செ. ரெத்தினசாமி செட்டியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்; சென்ற சில நிமிடங்களில் மார்பு வலிக்கிறது என்று கூறியுள்ளார்; ஆனால், மருத்துவர் வருவதற்குள் இறைவன் திருவடியைச் சென்று சேர்ந்து விட்டார் பேராசிரியர்.

அவர் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கிலம் – தமிழ் அகராதியினைத் தொகுத்த அறிவுரைக் குழுவின் உறுப்பினராக 1961லிருந்து பணியாற்றினார்; 1970 முதல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதித் திருத்தக் குழுவின் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.

தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர் அவர். நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இத்தருணத்தில் அவருடைய கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்து, நாமும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.

Posted in Aalalasundaranaar, Aanmikam, Anna, Annamalai University, Anniversary, Bioskectch, Chidambaram, Literature, MA Muthiah, Madras Christian College, MCC, Memoirs, Pachaiyappa, Scriptures, Tamil Scholar, UGC | Leave a Comment »

Anil Ambani supports Mani Ratnam’s Guru – Mukesh Ambani wants to watch it

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

சிக்கலில் மணிரத்னத்தின் “குரு’

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்கும் “குரு’ படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று மணிரத்னம் தரப்பிடம் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அதே சமயம் அம்பானியின் இன்னொரு மகன் அனில் அம்பானி “குரு’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய அட்லாப்ஸ் நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.

“முருகா’ போஸ்டருக்கு தடை

காக்டெய்ல் ட்ரீம் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் “முருகா’. இதில் அசோக், ஸ்ருதிசர்மா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு, சமிக்ஷா, ரியாஸ்கான், மகாதேவன், அசோகன் வின்சென்ட், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ஆர்.டி.நேசன். திரைப்படக் கல்லூரி மாணவரான இவருக்கு இது முதல் படம்.

இந்தப் படத்துக்காக சென்னை நகர் முழுவதும் மிக அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கதாநாயகனை போலீஸ் அதிகாரி ஒருவர் சேற்றில் வைத்து காலால் அழுத்தும் (படத்தில் வரும்) காட்சியை விளம்பர பேனராக அமைத்து சென்னை அண்ணா சாலையில் வைத்திருந்தனர். இதைப் பார்த்த போலீஸ் கமிஷனர் இது போன்ற பேனர் வைத்தால் மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் பதிவு செய்து வழக்கு தொடரப்படும் என எச்சரித்ததையடுத்து அந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டு வேறு பேனர் வைக்கப்பட்டுவிட்டது.

Posted in Adlabs, Anil Ambani, Banner, Bollywood, Guru, Hindi Movie, Human Rights, Kollywood, Mani Ratnam, Movies, Mukesh Ambani, Muruga, Poster, Reliance, Tamil Cinema | 1 Comment »