Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Death Sentence’ Category

Dharmapuri Bus burning: Death for 3 AIADMK men

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு: நடந்தது என்ன?

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர் மூன்று பேர் பஸ்ஸில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுக-வினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

2000-ம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேர், மாணவிகள், பேராசிரியைகள் உள்பட 50 பேர் தனித்தனி பஸ்களில் 12 நாள்கள் கல்விச்சுற்றுலா சென்றனர்.

பல ஊர்களுக்குச் சென்ற அவர்கள், தருமபுரி மாவட்டம் பையூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு பிப்.2-ம் தேதி வந்தனர். அன்றோடு சுற்றுலா முடிந்ததால், ஏற்காடு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

மாணவிகள் வந்திருந்த பஸ், ஏற்காடு மலைப்பாதையில் செல்ல இயலாது என்பதால், ஒகேனக்கல் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.

பிப்.2-ம் தேதி காலை பல்கலைக்கழக பஸ்ஸில் மாணவிகள் மட்டும் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் தருமபுரியை அடுத்த இலங்கியம்பட்டியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ், அதிமுகவினரால் மறிக்கப்பட்டது.

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் இந்த பஸ்ûஸ வழி மறித்தனர்.

அதிலிருந்த மாணவிகள் அனைவரும் இறங்குவதற்குள், பெட்ரோல் ஊற்றி பஸ்ஸþக்குத் தீயிடப்பட்டது. மளமளவென்று பற்றி எரிந்த பஸ்ஸில் சிக்கிக் கொண்ட மாணவிகள் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

இச்சம்பவத்தில் 18 மாணவிகள் தீக்காயங்களுடன் தப்பினர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து நடந்த விசாரணையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பஸ்ஸþக்குத் தீயிட்டனர். அவர்களை நேரடியாகப் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸôர், மோட்டார் சைக்கிளில் வந்தது அதிமுகவைச் சேர்ந்த புளியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் முனியப்பன் எனக் கண்டறிந்தனர். இதையொட்டி சேலத்தில் அவரை போலீஸôர் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் தருமபுரி நகர் அதிமுக கிளைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரத் துணைத்தலைவர் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, இலங்கியம்பட்டி நோக்கிச் சென்றனர்.

அப்போது வழியில் பாரதிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்ஸþக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பஸ்ஸþக்குள் பெட்ரோலை ஊற்றி தீயிட்டதாகவும் விசாரணையில் முனியப்பன் தெரிவித்தார்.

இதையொட்டி 2000-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸôர் கைது செய்தனர்.

இலக்கியம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தருமபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 28 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாஜில்திரேட் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சிபிசிஐடி போலீஸôர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 386 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தருமபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மே 2-ம் தேதி இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அங்கிருந்து ஜூலை 24-ம் தேதி கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

அங்கு 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இவ்வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. பஸ் எரிப்பு குறித்து புகார் செய்த கிராம நிர்வாக அதிகாரி உள்பட 20 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

பஸ் எரிப்பில் பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி இந்த வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி கனகராஜ், இவ்வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞராக சீனிவாசனை நியமித்து, 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோரில், அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவர் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் யார் யாரென்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலம் நீதிமன்றத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புக்கிடையே இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்த நீதிபதி கிருஷ்ணராஜா, முதலில் வேறு வழக்குகள் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து பகல் 10.53 மணிக்கு தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குறித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில், செல்லக்குட்டி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார். நீதிமன்றத்தில் மற்ற 30 பேரும் ஆஜராகியிருந்தனர்.

அவர்களில் எஸ்.பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இவ்வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் நீதிபதி.

அரசுத் தரப்பில் 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மற்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான குற்ற விவரத்தைப் படித்த நீதிபதி கிருஷ்ணராஜா, அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு பிரிவுகள் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதாகவும், தங்கள் கருத்தைக் கூறும்படியும் ஒவ்வொருவரிடமும் கேட்டார் நீதிபதி. அதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாது, முனியப்பன் ஆகியோர், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோரை கொலைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

இதையொட்டி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மற்றவர்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை; 25 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்

சேலம், பிப். 16-

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி இலக்கி யம்பட்டியில் கோவை வேளாண் கல்லூரி மாணவி கள் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரிந்து பலியானார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்ற வாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.

மாதேஷ், பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமானதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரம் இன்று அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரத்தை நீதிபதி கிருஷ்ணராஜா இன்று பகல் 10.45 மணிக்கு அறிவித்தார்.

கொலை குற்றம் நிரூபிக் கப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

25 பேர் பெயர் விவரம் வருமாறு:-

  1. முருகேசன்,
  2. தவுலத் பாஷா,
  3. வேலாயுதம்,
  4. முத்து என்கிற அறிவழகன்,
  5. ரவி,
  6. வி.முருகன்,
  7. வி.பி.முருகன்,
  8. வடிவேல்,
  9. சம்பத் மற்றும்
  10. நஞ்சன் என்கிற நஞ்சப்பன்,
  11. ராஜ×,
  12. மணி என்கிற கூடலர் மணி,
  13. மாது,
  14. ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்),
  15. சண்முகம்,
  16. சந்திரன்,
  17. செல்லகுட்டி,
  18. காவேரி,
  19. மணி,
  20. மாதையன்,
  21. செல்வம்,
  22. செல்வராஜ்,
  23. மாணிக் கம்,
  24. வீரமணி,
  25. உதயகுமார்.

நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-

கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது.

இது தவிர சொத்து சேதப் படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.

டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத் துடன் சட்டவிரோத கும்பலு டன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

“கெஞ்சிய மாணவிகளை கொளுத்தியது அரிதிலும் அரிய குற்றம்’

சேலம், பிப். 17: “உயிர் தப்பிக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய மாணவிகளை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் தீயிட்டுக் கொளுத்திய கொடுஞ்செயல் அரிதிலும் அரிதான சம்பவமாகும்’ என்று சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“குற்றம் நிரூபணமானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சட்டரீதியான நடவடிக்கையாகும்; அதேசமயத்தில் தூக்குத் தண்டனை விதிப்பது விதிவிலக்காகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியர் எரிப்பு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து அவர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 180 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

தருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அரிதிலும் அரிதான குற்றச் செயலாகக் கருத வேண்டியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அண்மையில் ஓரிரு வழக்குகளில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டோர் “திருத்த முடியாத குற்றவாளிகள்’ எனக் கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பஸ் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயன்றபோது “நாங்கள் இறங்கி விடுகிறோம், அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று பஸ்ஸýக்குள் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கெஞ்சியுள்ளனர்.

ஆனால் சிறிதும் கருணை காட்டாமல் பஸ்ஸின் முன்கதவை மூடி, தீயிட்டு மாணவிகளைக் கொளுத்தியுள்ளனர்.

அவர்களது நோக்கம் பஸ்ûஸ மட்டும் கொளுத்துவதாக இல்லை. பஸ்ஸில் இருந்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு குற்றம் சாட்டப்பட்டோர் செயல்பட்டதாகத் தெரிகிறது.

“பஸ் கதவை மூடுங்கடா; அனைவரையும் கொளுத்துங்கடா’ என சம்பவ இடத்தில் சப்தமிட்டதும் அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தகைய செயல் ஏற்க முடியாதது. ஏனென்றால் அங்கு நடந்த சம்பவத்தைப் பொதுமக்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எந்த விதத்திலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மாணவிகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்களை உயிரோடு கொளுத்துவது என்பது கோரமான செயலாகும். இக்கொடூரச் செயல் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது. சட்டத்தில் குறிப்பிட்ட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கட்சித் தலைமையோ, பிற நிர்வாகிகளோ தூண்டாத நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்டோர் தாங்களே சுயமாக இவ்வாறு செய்துள்ளனர் எனக் கருத வேண்டியுள்ளது.

“இப்படிச் செய்தால் அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம், செல்வாக்கு பெறலாம் என்ற அணுகுமுறையே இதற்குப் பின்னணியாக இருக்கக் கூடும்’ என்று வாதிட்டதை முக்கியமாகக் கருத வேண்டியுள்ளது.

இத்தகைய குற்றங்கள் செய்வோரை திருத்தவே முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டதின் அடிப்படையில், மூன்று மாணவிகளைக் கொளுத்திய செயலை அரிதிலும் அரிதான குற்றம் என ஏற்க வேண்டியுள்ளது.

இந்த கொடுஞ்செயலில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரது மனநிலை, தீயில் காயமடைந்த மாணவிகளின் நிலையைக் கருதி, நடந்த சம்பவத்தை கடும் குற்றச் செயலாகக் கருதி தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.

தருமபுரியில் அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தில் யாராலும் ஏற்க முடியாதது; மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி மாணவிகள் மூவரைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய குற்றமாகும் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

3 மாணவிகள் எரிப்பு வழக்கு: அடையாளம் காண உதவிய கேசட்டுகள்

சேலம், பிப். 17: தருமபுரி அருகே பஸ்ஸில் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண வழிவகுத்தவை தெளிவான- வலுவான விசாரணை, சாட்சியங்கள், ஆதாரமாய் அமைந்த தொலைக்காட்சி நிறுவன விடியோ கேசட்டுகள், புகைப்படங்கள்தான் என்று இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.

சேலம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மாணவிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினேன். அதற்கேற்ப இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி, இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்ததே, இவ்வழக்கின் திருப்புமுனையாகும்.

இச்சம்பவம் குறித்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டவுடன், நடத்தப்பட்டுள்ள விசாரணை, சேகரிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடத்தக்கவை.

அதிலும் குறிப்பாக அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் பஸ் எரிப்பு சம்பவத்தை மட்டும், வேறொரு நிறுவனத்தினர் விடியோவில் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

பஸ்ûஸ மறித்து தீயிட்டு எரிக்க முயற்சித்தவர்களையும் அடையாளம் கண்டறிய உதவியது அக் கேசட்டே.

அதோடு பத்திரிகைகளில் அன்று வெளியாகியிருந்த புகைப்படங்களும், கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காண உதவின.

இவ்வழக்கு விசாரணையை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ்.

இவ்வாறு இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றியதே, இதன் விசாரணையை சரியான முறையில் தொடர வழிவகுத்தது.

இவ்வழக்கில் சாட்சியமளித்தோர் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஆதாரமாய் அமைந்துள்ளது என்றார் சீனிவாசன்.

அச்சுறுத்தல்: இவ்வழக்கில் ஆஜரானவுடன் எனக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. என் வீட்டு மாடியில் துப்பாக்கியால் சுடப்பட்டது. அப்போது அதை நான் வெளியில் சொல்லவில்லை. வழக்கு விசாரணை பாதிப்பின்றி நடைபெற வேண்டும் என அமைதியாக இருந்துவிட்டேன் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.

Posted in 147 (unlawful assembly with deadly weapons), 341 (wrongful restraint), ADMK, Agriculture University, AIADMK, All India Anna Dravida Munnetra Kazhagam, Capital punishment, Cassettes, CBCID, Coimbatore, Courts, D. Krishna Raja, Death Sentence, Dharmapuri, Dr J Jeyalalitha, Dr. J Jayalalitha, IPC 302 (murder), IPC 307 (attempt to murder), J Jayalalitha, JJ, Judge, Justice, Kodaikanal Pleasant Stay Hotel, Kokilavani, Kovai, Law, Madhu, Mob, Muniappan, Nedunchezhian, News Broadcast, Order, Police, Politics, Prevention of Destruction, Proof, Public Property, Ravindran, Salem, Sections 188 (disobedience to the order duly promulgate, Sun TV, T. K. Rajendran, Tamil Nadu, Tamil Nadu Agricultural University, trial, TV, union secretary, video, Violence, Women | Leave a Comment »

Libyan Court Sentences Health Workers to Death in AIDS Case

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

எயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த குற்றச்சாட்டில் மருத்துவ பணியாளர்களுக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

குற்றஞ்சாட்டப்பட்ட சிலர்
 

நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி வைரஸை தொற்றச் செய்தார்கள் என்று குற்றங்காணப்பட்டதை அடுத்து, 5 பல்கேரிய நாட்டுத் தாதிமாருக்கும் மற்றும் ஒரு பாலஸ்தீன மருத்துவருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு, சர்வதேச கண்டனத்தைத் தூண்டியுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

இது இந்த வழக்கின் அரச சட்டவாதிகள் தரப்பை வலுவாக்கியிருந்தது.

இவர்கள் குற்றமற்றவர்கள் என்று லிபிய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்த பின்னர், இந்த வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் லிபியத் தலைமை தலையிடுவதற்கு உகந்த நேரம் இது என்று பல்கேரிய துணைப் பிரதமர், ஈவயில் ஹால்பின் அவர்கள் கூறியிருக்கிறார்.

ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு தமது அரசாங்கம் பணியாது என்றும், உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் லிபிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in AIDS, Benghazi, Bulgaria, Capital punishment, Children, conviction, Death Sentence, HIV, Judgement, Jury, Law, Libya, Murder, Nurses, Order, Palestine, Poor, Tamil, Virus | Leave a Comment »

Karuthu.com discussion on Capital Punishment switches gear to ‘Parppaneeyam’

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

“கருத்து’ கூட்டத்தில் கருத்து மோதல்

சென்னை, நவ. 30: மரண தண்டனை குறித்து கருத்து அமைப்பு சென்னையில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. “கருத்து‘ அமைப்பு சார்பில் மரணதண்டனை குறித்த கருத்துகளை பதிவு செய்யும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

  • கார்த்தி சிதம்பரம்,
  • பாஜக தலைவர் இல.கணேசன்,
  • மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வி.சுரேஷ்,
  • வழக்கறிஞர் அருள்மொழி,
  • கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

பாஜக தலைவர் இல.கணேசன் மரணதண்டனைக்கு ஆதரவாக தனது கருத்துகளை பதிவு செய்தார். அப்போது, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தியாகு, தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு வந்தனர்.

மரணதண்டனைக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்ததால் இல.கணேசனிடம் பலரும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டனர். அதற்கு, தனது பதில்களைத் தெரிவித்தார்.

இதனிடையே, மரணதண்டனை குறித்து இல.கணேசன் தெரிவித்த கருத்துகள் வேறுமாதிரி திசைதிரும்பியது. பார்ப்பனர்கள் தொடர்பான கருத்துகளுக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதற்கு, பார்வையாளர்களின் ஒருபிரிவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், மரணதண்டனை குறித்து தியாகு எழுப்பிய கேள்வியுடன் கூட்டம் நிறைவுற்றது.

Posted in Brahminism, Capital punishment, Death Sentence, Director, discussion, forum, Kanimozhi, Karthi Chidambaram, Karuththu, Karuthu.com, Parppaneeyam, Seeman, Thambi | 4 Comments »

US Elections to the Congress & Senate – Saddam Hussein Death Sentence in Iraq

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

அமெரிக்கத் தேர்தலில் இராக் நிகழ்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் புஷ்
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் புஷ்

அமெரிக்கக் காங்கிரஸிற்கு நாளை செவ்வாய்க்கிழமையன்று நடைபெற இருக்கும் தேர்தலில் இராக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெற்று வருகின்றன.

தேர்தல் நடைபெற இருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனிற்கு தண்டனை வழங்கப்பட்ட நேரத்திற்கும், அமெரிக்கத் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்புணர்த்தப்படுவதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் சார்பில் பேசவல்ல ஒருவர் மறுத்திருக்கிறார். இருந்த போதும், இராக்கிய நிகழ்வுகளை, தன்னுடைய குடியரசுக் கட்சிக்கு ஆதரவைக் கூட்டுவதிலும், ஆதரவாளர்களை ஒன்று திரட்டுவதிலும் அதிபர் புஷ் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்று ஃப்ளோரிடா, அர்கன்ஸாஸ் மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களில் இறுதி கட்ட தேர்தல் கூட்டங்களில் புஷ் பங்கேற்க இருக்கிறார். இராக்கில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கப் படையினர் ஆட்சேதத்திற்கு உள்ளாகி வருவது, இராக் ஆக்கிரமிப்பை ஒரு தேர்தல் விவகாரமாக பல தொகுதிகளில் ஆக்கியுள்ளதாக வாஷிங்டனில் உள்ள பி பி சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று இரு அவைகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நம்பும் ஜனநாயகக் கட்சியினர் பல இடங்களில் முன்னணியில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் குறிப்புணர்த்துகின்றன.

ஆனால், குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருவதாகவும் இந்தக் கணிப்புக்கள் காட்டுகின்றன.

Posted in Bush, Campaign, Capital punishment, Congress, Death Sentence, Elections, GW Bush, GWB, House of Representatives, Iraq, Polls, Saddam Hussein, Senate, US, USA | 3 Comments »

China to require all executions to be approved by its highest court

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

சீனாவில் மரண தண்டனை சீர்திருத்தம்

சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள்
சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள்

சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி மரண தண்டனைகளை விதிக்க, இனி நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள், சீனா மரண தண்டனை தொடர்பாக கடந்த இருபது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சீர்திருத்தம் என்று அந் நாட்டின் அரச ஊடகம் தெரிவிக்கிறது.

இதனால் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இனி மாகாண நீதிமன்றங்களுககு இருக்காது.

உலகிலேயே அதிக அளவு மரண தண்டனைகள் சீனாவில்தான் விதிக்கப்படுகின்றன. பல சமயங்களில் அநீதி இழைக்கப்படுகிறது என்ற குரல்கள் எழுவதால், அதைச் சமாளிக்க இது போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பீஜீங்கில் இருக்கும் பி பி சி நிருபர் தெரிவிக்கிறார். ஆனால் அதே சமயம் மரண தண்டனையை சீனா ஒழிக்கும் என்பதற்கான தடையங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Posted in Amnesty International, Capital punishment, China, Death Sentence, Judge, Life sentence, Supreme Court, Xinhua | Leave a Comment »