Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘JMM’ Category

Maoists kill 18 in Jharkhand village: Giridih Massacre

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தவறான பாதை; தவறான பார்வை

பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.

மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.

9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.

இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.

அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.

Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »

Conspiracy behind killing of JMM MP: DGP; ‘retaliatory action’: Govt.

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2007

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.

சுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

சோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.

எம்.பி. படுகொலை

மக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.

கடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.

அரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.

ஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பிரச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.

நக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.

எம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு

ஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

லாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.

ஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை

ஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).

லஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.

பஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.

தகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.

லஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.

Posted in Andhra, Andhra Pradesh, Assassination, backward, Bakuria, Bihar, dead, FC, Forest, Hempram, Jamshedpur, Jharkand, Jharkhand, JMM, Lakshman, Landlords, Lashman, Lok Sabha, Madhya Pradesh, Mountains, MP, Naksal, Naxal, Naxalbari, Naxalite, Plateau, Ratan Diu, Separatists, Son, Sugadev, Sukhdev, Sunil Mahato, Terrorism, Violence, WB, West Bengal | Leave a Comment »

Sibu Soren & Sasinath Jha Murder – History, Background & Information

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

சிபு சோரன் தனிச்செயலர் கொலை செய்யப்பட்டது ஏன்?

புதுதில்லி, டிச. 11: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் ஊழல் விவகாரங்கள் உள்ளிட்ட ரகசியங்களை சதிநாத் ஜா தெரிந்துவைத்திருந்ததால் அவரை திட்டமிட்டு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

மேலும் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என சசிநாத் ஜா அடிக்கடி சிபுசோரனை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சசிநாத் ஜா கொலை வழக்கில் சிபு சோரன் மற்றும் 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்புக் கூறியுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் தனிச் செயலராக இருந்த சசிநாத் ஜா, 1993-ம் ஆண்டு சிறுபான்மை அரசாக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் அரசைக் காப்பாற்ற சிபு சோரன் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களைத் தெரிந்துவைத்திருந்தார்.

1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நரசிம்மராவ் அரசை காப்பாற்ற சிபுசோரன் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றார். இதில் ரூ.30 லட்சத்தை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நௌரோஜி நகர் கிளையில் டெபாசிட் செய்திருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை சசிநாத் ஜா கேட்டார். ஆனால் இதற்கு உடன்பட சோரன் மறுத்துவிட்டார்.

சசிநாத் ஜாவின் இரு மகள்களான கவிதா, ப்ரீத்தி ஆகிய இருவரையும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சிபுசோரன் முன்வந்துள்ளார்.

தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற கொலையுண்ட சசி நாத் ஜாவின் சகோதரர் விஜயநாத் ஜாவுக்கு ரூ.4 லட்சம் தர சிபுசோரன் முன்வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

சிபுசோரன், தில்லியில் எமஸ்ஸர்ஸ் சிமெக்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை முதல் போட்டு தொடங்கினார். இதில் சசிநாத் ஜா, அவரது மனைவி, சுசில் குமார் என்பவர், மகன் ஹேமந்த் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் 1994-ல் இந்நிறுவனத்திலிருந்து ஜா நீக்கப்பட்டார்.

இதையடுத்து ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக சிபு சோரனை மிரட்டி சசிநாத் ஜா பணம் பறித்து வந்தார். ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்த சோரன், அவரை கடத்திச் சென்று தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் என்று தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.கெடியா தனது 191 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Ajay Kumar Mehta, Ashish Thakur, Bihar, CBI, Congress (I), Corruption, Dhaula Kuan, Dumka, Durga Soren, Howrah-Rajdhani Express, Jharkhand, JMM, Nand Kishore Mehta, Narasimha Rao, no-confidence motion, Pashupati Nath Mehta, PV Narasimma Rao, Ranchi, Sasinath Jha, Shailendra Bhattacharya, Shashi Nath Jha, Shibu Soren, Simex International, Sunil Khaware | Leave a Comment »

Tribal Leader Shibu Soren – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மகன் கொலைக்காக போராடிய தாய்: சிபுசோரன் சிக்கியது எப்படி?

புதுடெல்லி,நவ. 29- கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய மந்திரி சிபு சோரன் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

63 வயதாகும் சிபுசோரனை கம்பி எண்ண வைத்திருக் கும் கொலை வழக்கு தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இதில் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் இப்போது தெரிய வந் துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

1993-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவிக்க நேரிட்டது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

லஞ்சப்பணத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று சிபுசோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கேட்டார் .அவருக்கு ரூ.15லட்சம் சிபுசோரன் கொடுத்தார். அதன்பிறகு மீண்டும் பணம் வேண்டும் என்று சசிநாத் ஜா கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிபுசோரன் 1994-ம் ஆண்டு மே மாதம் சசிநாத் ஜாவை விருந்துக்கு அழைத்தார். பிறகு அவரை தெற்கு டெல்லியில்இருந்து ராஞ்சிக்கு கடத்திச் சென்றனர். அங்கு சசிநாத்ஜா கொலை செய்யப்பட்டார். இதுபற்றி சசிநாத்ஜா சகோதரர் அமர்நாத் ஜா பாராளுமன்ற போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அதில் வேகம் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிநாத்ஜா தாய் பிரியம்வதாதேவி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் தன் மகன் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

சி.பி.ஐ. தீவிரவிசாரணை நடத்தி சசிநாத்ஜா கொலை சதி திட்டங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வந்தது. சிபுசோரனின் தூண்டுதல் பேரில் திட்டமிட்டு கொலை நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தது. அதோடு சசிநாத்ஜா பிணத்தை தோண்டி எடுத்து சிபிஐ விசாரித்தது.

சசிநாத்ஜா எலும்புக்கூடு பல்வேறு நிலைகளில் டிஎன்ஏ சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மண்டைஓடு “சூப்பர் இம்போசிங்” முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த மண்டை ஓடு சசிநாத் ஜா உடையது என்பது உறுதியானது.

சசிநாத்ஜாவின் எலும்புக்கூடுகளில் நடந்த அதிநுட்ப தடயவியல் சோதனைகள் மூலம் அவர் படுகொலை ஆனதும் உறுதியானது. மண்டை ஓடு, எலும்புக்கூடு ஆகிய இரு சோதனைகளும் சிபுசோரன் சிக்க முக்கிய கார ணமாக அமைந்தது.

இந்த விபரங்களை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு கோர்ட்டில் ஒப்படைத்தது. கொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சிபுசோரனால் தப்ப இயல வில்லை.

மொத்தம் 47 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த சாட்சியங்களும் சி.பி.ஐ. விசாரணை முடிவுகளும் முழு அளவில் ஒத்துப்போனது. இதனால் சிபுசோரன் மீது விழுந்த பிடி இறுகியது.

இந்த வழக்கில்

  • சிபு சோரன்,
  • நந்தகிஷோர்,
  • அஜய்குமார்மேத்தா,
  • சைலேந்திரபட்டாச்சார்யா,
  • பசுபதிநாத், மேத்தா ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இவர்கள் 5 பேரும் நேற்றே கோர்ட்டு உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

சிபுசோரனுக்கும் மற்றும் 4பேருக்கும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது நாளை தெரிய வரும். அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குருஜி” சிபுசோரனின் எழுச்சியும்-வீழ்ச்சியும் 12 ஆண்டுகள் காட்டில் வசித்தவர்

“கொலையாளி” என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியையும், தலை குனிவையும் ஏற்படுத்தி விட் டார் சிபுசோரன்.

வட மாநில அரசியலில் ரவுடியிசம் என்பது அதிகம்… கொலை, ஆள் கடத்தல் என்பதெல்லாம் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு “சும்மா” பொரி கடலை சாப் பிடுவது மாதிரி சாதாரண சமாச்சாரம்.

ஆனால் ஒரு கட்சிக்கு தலை வராக இருப்பவர் கொலை, ஆள் கடத்தல், சொத்துக் குவிப்பு என பலதரப்பட்ட வழக்குகளில் சிக்கியது இது வரை கேள்விப்படாத ஒன்று. அந்த சிறுமையை ஏற்படுத்தி இருப்பவர் சிபுசோரன்.

1942ம் ஆண்டு இவர் பீகார் மாநிலம் கஜிரிபாத் அருகே உள்ள சந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆசிரியர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்த வர்கள்.

சிபுசோரனுக்கு 10 வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்தார். இது அவரது வாழ்க்கைப் பாதையை புரட் டிப் போட்டு விட்டது.பணக்காரர்கள், ஜமீன் தாரர்களுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார். 1952-ம் ஆண்டு அவரது இந்த போராட் டம் தொடங்கியது.

ஜார்க்கண்ட் இன மலை வாழ் மக்களின் முன்னேற்றத் துக்காக போராடுவதாக இவர் அறிவித்தார். ஜமீன்தாரர்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுவார். 1970-ம் ஆண்டு வரை அவர் வாழ்க்கை இப் படித் தான் கழிந்தது.

அதன் பிறகு ஜார்க்கண்ட் இன மக்களுக்காக ஒரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று சிபுசோர னுக்கு தோன்றியது. 1973-ம் ஆண்டு அவர் வக்கீல் வினோத் பிகாரி மகோதா என்பவருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) எனும் அமைப்பை தொடங்கினார். பிறகு இது அரசியல் கட்சியாக மாறியது.

இந்த நிலையில் ஜே.எம்.எம்.மின் முக்கிய தலைவராக திகழ்ந்த மகோதா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகே சிபுசோரனின் நடவடிக்கைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மக்களுக்காக அவர் பேரணி போன்றவை நடத்தி மக்கள் கவனத்தை கவர்ந்தார். இதனால் பீகா ரில் அவர் வளர்ச்சி தடுக்க முடியாதபடி இருந்தது. மலை வாழ் இன மக்கள் இவரை “குருஜி” என்று அழைத் தனர்.

பெரும்பாலான மலைவாழ் இன மக்கள் வீடுகளில் இவரது படத்தை கடவுள் படங்களுக்கு இÛணையாக வைத்து பூஜித்தனர். இதனால் ஜார்க்கண்டில் இவர் அசைக்க முடி யாத சக்தியாக மாறினார். இவரை எதிர்த்தவர்கள் கடத் தப்பட்டனர். கொல்லப்பட் டனர்.

சரியோ, தவறோ இவரது பெயர் பரபரப்பாக நாடெங் கும் பேசப்பட்டது. 1980ம் ஆண்டு இவரும் இவரது ஆதரவாளர்களும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன் பிறகு சிபுசோரனின் அரசியல் ஆவேசமும் ஆதிக்கமும் அதி கரித்து விட்டது. அவரது தகாத செயல் களுக்கு சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் அவர் இதுவரை தப்பித்து வந்தார். ஆனாலும் அவர் மீது தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதில் 2 கொலை வழக்கு கள் சிபுசோரனின் மறுபக்க வாழ்க்கையை தோலுரித்து உலகிற்கு காட்டி விட்டது. 1975-ம் ஆண்டு சிருடி என்ப வரை கொலை செய்த வழக் கில் இவர் சிக்கினார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் தண்ட னையில் இருந்து தப்பி விட் டார்.என்றாலும் 1994-ல் தன் உதவியாளர் சசிநாத் ஜாவை கொலை செய்த வழக் கில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். சி.பி.ஐ. அதிகா ரிகள் மண்டை ஓட்டை வைத்து நடத்திய திறமையான ஆய்வு சிபுசோரனுக்கு “ஆப்பு” அடித்து விட்டது.

சிபுசோரன் பற்றிய நிஜமுகம் தெரிய வந்ததும் ஜார்க்கண்ட் மக்களும் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
குருஜி என்று மரியாதையாக அழைத்து வந்த மக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரை குப்புற தள்ளி விட்டனர். தன் மகனை எப்படி யாவது ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஆக்கி விட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ஜார்க்கண்ட் மக்கள் அவர் மகனை வெற்றி பெற கூட செய்யவில்லை.

இந்த வீழ்ச்சிக்கிடையே தற்போது சிபுசோரன் சிறைக் குள் தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் இனி அவர் கதை முடிந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கொலைகாரன் என்ற தீர்ப்பு காரணமாக பதவி விலகிய முதல் மத்திய மந்திரி என்ற கறை முத்திரையை அவர் பதித்துள்ளார். துடைக்க முடியாத களங்க முத்தி ரையால் சிபுசோரன் மீண்டு எழ முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

நாளை (வியாழக்கிழமை) டெல்லி கோர்ட்டு வழங்கும் தண்டனை தான் சிபுசோரனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே அந்த தீர்ப்பை ஜார்க்கண்ட் மாநில மக்கள் படபடப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Posted in Bihar, Biography, Biosketch, CBI, Corruption, Jha, JMM, Lifesketch, Memoirs, Murder, Narasimha Rao, Ranchi, Secretary, Shibu Soren, Sibu Soren | Leave a Comment »

Shibu Soren convicted in his secretary Jha’s murder case

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2006

கொலை வழக்கில் ஷிபு சோரனுக்கு எதிராகத் தீர்ப்பு

ஷிபு சோரன்
ஷிபு சோரன்

கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட, இந்திய நடுவண் அரசின் மூத்த அமைச்சர் ஷிபு சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஷிபு சோரன் தனது உதவியாளரை கடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார், என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக டில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஷிபு சோரன் நிலக்கரித் துறையை வகித்து வந்தார். தீர்ப்பு வந்த பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் உருவாக முக்கியப் பங்கு வகித்த ஷிபு சோரன், ஏற்கனவே ஒரு கொலை வழக்குத் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பதும் பிறகு மீண்டும் பதவியேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெறுவது இந்தியாவில் இதுதான் முதல் முறை.

Posted in Bribe, Cabinet, CBI, Chiroari massacre, Corruption, India, Jharkhand, Jharkhand Mukti Morcha, JMM, Minister, Prime Minister, Shashinath Jha, Shibu Soren, Shiv Sena, Union Minister for Steel and Mines, UPA | Leave a Comment »