Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 9th, 2006

‘Vallavan is my best movie’ – Nayan Thara

Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006

`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்?- நயன்தாரா பேட்டி

தீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன்? இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

இதுவரை

  • 5 மலையாளம்,
  • 8 தமிழ்,
  • 2 தெலுங்கு

என 15 படங்களில் நடித்தாயிற்று.

நான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த படத்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.

இதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

கிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.

சிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.

  1. முதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.
  2. இரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.
  3. மூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.

மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.

நேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றினால் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Chandramukhi, Interview, Malayalam, Nayan Thara, nayandhara, Rajini, Rajniganth, Shankar, Shivaji, Silambarasan, Simbu, Sivaji the Boss, Tamil Film, Tamil Movies, Telugu, Tollywood, Vallavan | Leave a Comment »

Iraa Sisubalan – Jobless Growth & Productionless Profit : SEZs

Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006

பட்டினிச்சாவுக்கு அஸ்திவாரம்

இரா. சிசுபாலன்

கடந்த சட்டமன்றத் தேர்தலில், பிரசாரத்தின் மையமான அம்சமாக, திமுகவின் தேர்தல் அறிக்கை திகழ்ந்தது. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வார்த்தைகளில் குறிப்பிட்டால் அத் தேர்தலின் “கதாநாயகனாக’ அந்த அறிக்கை விளங்கியது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் “சிக்குன் குனியா‘ மைய விவாதப்பொருளாக மாறியிருந்தது. சில அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளும் போகிற போக்கில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துகள் வெளிப்பட்டன.

சுமார் 15 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி “தேசிய சேதாரமாய்’ இருக்கும் நமது நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்க புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதேசமயம் உயர்தொழில்நுட்பக் கல்வி பயின்ற சிலருக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம், வேலைவாய்ப்பைப் பெருக்குமா என்பதே நமது கேள்வி!

“உற்பத்தி சாராத லாபம்’ (Productionless Profit), “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி’ (Jobless Growth) என்பவையே இன்றைய உலகமயத்தின் தாரக மந்திரங்களாகும். இப் பின்னணியில் இத் திட்டம் 2000-ம் ஆண்டில் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு 2005 ஜூன் 23 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 67 மண்டலங்களுக்கென 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும், இந்தியாவின் ஏகபோக நிறுவனங்களான அம்பானி, யூனிடெக், ஆடன், சகாரா, டிஎல்எப், டாடா, மகேந்திரா போன்றவையும் இச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.

வரிகளை முழுமையாகத் தளர்த்தி ஏற்றுமதியைப் பெருக்குவதே சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும். இங்கு அமையும் நிறுவனங்கள் எவ்வித வரியோ, அனுமதியோ இன்றி பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். 100% நேரடி அன்னிய முதலீடு இங்கே வரலாம். லாபம் முழுவதையும் தாராளமாக அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத வரிவிலக்குத் தரப்படும். லாபத்தை மறுமுதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

அரசு திட்டமிட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் அதன் மூலம் லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும். அதேசமயம் இந் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் மூலம் அரசுக்கு ரூ. 90,000 கோடி வரி இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சகம் குறிப்பிடுகிறது. “வரி இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இந்நிறுவனங்கள் விரும்பினால் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்திற்கு பெரும் கேடுகள் விளையும்’ என எச்சரிக்கிறார் சர்வதேச நிதிய அமைப்பின் தலைமைப் பொருளியலாளர் ராஜன்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்காக ஒதுக்கப்படுகின்றன. உலக அளவிலும், இந்தியாவிலும் இயங்கி வரும் இத்தகைய பொருளாதார மண்டலங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்கிறார் பேராசிரியர் பிரபுல் பித்வாய். மேலும், இத்தகைய நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் வெறும் பகற்கனவே என்கிறார் அவர்.

நாட்டில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்டத்திட்டங்கள் எவையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செல்லுபடியாகாது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கென தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்ளவும் சாத்வீக வழிகளில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவும், உரிமைகள் கிடையாது. சுற்றுப்புறச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் இந்நிறுவனங்களுக்கு அவசியமில்லை. நிலத்தடி நீரை எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக் கொள்ளலாம். மின்சாரம், சாலை வசதி போன்ற உள்கட்டுமான வசதிகளை முழுமையாக அவர்களுக்குச் செய்து தர வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந் நிறுவனங்களுக்கென நிலங்களைக் கையகப்படுத்த புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு பொதுக் காரியங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் நிலை மாறி தனிநபர்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. நிலக்குவியலைத் தடுத்து நிறுத்தி அனைவருக்கும் நிலம் என்ற லட்சியத்துடன் மேற்கொள்ளப்பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கைவிடப்பட்டு மீண்டும் நிலக்குவியலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்படும் இந்நிலங்களுக்கு மாற்று நிலங்களோ, போதுமான இழப்பீடோ வழங்கப்படுவதில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு விவசாய விளைநிலங்களை அரசு எடுக்காது என மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒசூர் அருகே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 3,000 ஏக்கர் நல்ல விவசாய விளைநிலம் (ஊங்ழ்ற்ண்ப்ங் ப்ஹய்க்) கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கில் மின்சார பம்பு செட்டுகளும் ஏரிகளும், குடியிருப்புகளும் அமைந்துள்ள இப் பகுதியைக் கைப்பற்றுவதால் இங்கிருந்து பெங்களூர், சென்னை, கேரளம் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் வர்த்தகம் முழுமையாகத் தடைபட்டுப் போகும். இதற்கு மாற்றாக, அப் பகுதியிலேயே உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டக் களமிறங்கி உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இவ்வாறு விவசாய விளைநிலங்களைப் பாழ்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள்.

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் 2.4 லட்சம் மக்களுக்கு உணவளித்து வரும் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமையவுள்ள 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். உலக அளவில் தனிநபர் உணவுப்பொருள் நுகர்வு 309 கிலோ கிராம் ஆகும். இந்தியாவில் இது 200 கிலோ கிராம் ஆக உள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தேவையான உணவுப்பொருள் வழங்க 310 மில்லியன் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது 200 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென விவசாய விளைநிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுவது தொடருமானால் நாட்டின் உணவுப்பொருள் உற்பத்தி மேலும் குறைந்து அது பட்டினிச்சாவுக்கு அஸ்திவாரமாகிவிடும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் 65 சதவீத மக்களின் வாழ்வோடு விளையாடுவதை மத்திய – மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும்!

Posted in Agriculture, Analysis, Capitalism, Commerce, Dinamani, Economics, Environment, Export zones, Faming, Farmer, Finance, Industry, Iraa Sisubalan, Irrigation, Jobless Growth, Law, MNC, Op-Ed, Research, SEZ, Socialism, Special status, Taxes, Titans, Water | Leave a Comment »

Automatic electronic tolls to be installed in National Highways

Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006

2 ஆண்டில் சுங்கச்சாவடிகள் நவீனமயம்: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்- டி.ஆர். பாலு தகவல்

புதுதில்லி, நவ. 9: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய சூழல் ஏற்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்தார்.

பொருளாதார பத்திரிகை ஆசிரியர் மாநாட்டில் புதன்கிழமை பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து பரவலாக புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு -தெற்கு மற்றும் கிழக்கு -மேற்கு இணைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவப்பட உள்ளன.

அதாவது, வாகனங்களில் சிறிய மின்பொறி பொருத்தப்படும். அதற்குத் தொடர்புடைய முக்கிய மின்பொறி, சோதனைச் சாவடியில் அமைக்கப்படும். வாகனம் சோதனைச் சாவடி அருகே வரும்போது, அதிலுள்ள மின்பொறியின் சமிக்ஞைக்கும் சோதனைச் சாவடி மின்பொறிக்கும் தொடர்பு ஏற்படும். அப்போது, அந்த வாகனத்துக்கான சுங்கச் சாவடிக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

அதாவது, சுங்கச் சாவடிக் கட்டணத்தை முன்னதாகவே செலுத்தியதற்கான தகவல், வாகனத்தில் உள்ள மின்பொறியில் பதிவு செய்யப்பட்டுவிடும். எப்போதெல்லாம் வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்கிறதோ, அப்போது தேவையான கட்டணம் குறைந்துவிடும். அதற்காக, வாகனம் அந்த இடத்தில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. தடையற்ற பயணம் உறுதி செய்யப்படும்.

இதேபோன்று எல்லா சோதனைச் சாவடிகளையும் நவீனப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.

ஏற்கெனவே, விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கச் சாவடிக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் மக்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் மேம்பாலம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திறந்து வைக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்றார் டி.ஆர். பாலு.

Posted in Chennai, Congestion, Economic Editors Conference, EZ-Pass, Flyovers, Golden Quadrilateral, Highway construction, Madras, Minister, National Highway Development Project, Road Transport and Highways, Shipping and Surface Transport, Toll, TR Baalu, TR Balu, Traffic | Leave a Comment »