Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 8th, 2006

Aavani Thingal – Item Number gets axed & Receives a ‘U’

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

ஆபாசபாடலுக்கு தடை; `ஆவணித்திங்கள்’ படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

புதுமுக நடிகர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆவணித் திங்கள். இதில் தேஜினி, மதுஷா என இரு கதா நாயகிகள். ஹரிகிருஷ்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப் படத்தை இயக்கி யுள்ளார்.

இந்த படத்துக்கான படப் பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை வருகிற 17-ந்தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ராஜாராம்ரெட்டி முடிவு செய்தார். இதையடுத்து ஆவ ணித்திங்கள் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு பாடல் காட்சி மிகவும் ஆபாசமாக இடம் பெற்று இருந்தது.

திண்டுக்கல்லு பூட்டு திருப்பி போட்டு மாட்டு என்ற அந்த பாடலுக்கு லக்ஷா கவர்ச்சியாக நடனம் ஆட இருந்தார். பாடல் வரிகளும் நடனமும் ஆபாசமாக இருப்பதாக தணிக்கை குழுவினர் எதிர்த்தனர். பாடல் காட்சியை நீக்கும்படி வற்புறுத்தினர். அதற்கு டைரக்டரும்,தயாரிப்பாள ரும் சம்மதிக்கவில்லை. இதை யடுத்து வாக்குவாதம் ஏற்பட் டது. இறுதியாக பாடல்காட்சி முழுவதுமாக படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அதன்பிறகு படத்துக்கு `யு’ சான்றிதழ் கொடுத்து வெளி யிட அனுமதித்தனர்.

Posted in Aavani Thingal, Censor, Certificate, Dance, Glamor, Harikrishna, Kollywood, Laksha, Madhusha, Obscene, Rajaram Reddy, Srikumar, Tamil Film, Tamil Movie, Tamil songs, Thejini | Leave a Comment »

AIADMK presidium chairman Kalimuthu passes away – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மரணம்

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காளிமுத்து.

அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றி உள்ளார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் சபாநாயகராக இருந்தார். 2001-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை அவர் இந்த பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது.

இதனால் அவர் இருதய ஆபரேசன் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாத நோயும் தாக்கியது. இதனால் அவர் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.

உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கட்சிப் பணிகளில் ஈடுபட இயலவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் மீது தமிழக அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி காளிமுத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை அவர் உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்தில் காளிமுத்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 64.

காளிமுத்துவுக்கு 2 மனைவி, 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.

காளிமுத்து மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் மருத்துவமனைக்குபபபவிரைந்த னர். காலை 9 மணி அளவில் காளிமுத்து உடல் தேனாம் பேட்டையில் உள்ள செனடாப் ரோட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவர் உடலுக்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் காளிமுத்து உடல் அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அவர் மறைவுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெய லலிதா இரங்கல் தெரிவித்துள் ளார்.

ஜெயலலிதா அஞ்சலி

பகல் 12.10 மணிக்கு அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்று காளி முத்து உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெய லலிதாவைப்பார்த்ததும் காளிமுத்துவின் மனைவி மனோகரி, மகன்,மகள்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.

பின்னர் அங்கிருந்து 12.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். காளிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத் தியவர்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் அமைச்சர் கள்

  • முத்துசாமி,
  • செங்கோட்டை யன்,
  • தம்பித்துரை,
  • ஜெயக் குமார்,
  • தளவாய் சுந்தரம்,
  • செ.ம.வேலுச்சாமி,
  • மது சூதனன்,
  • செம்மலை,
  • கே.பி.அன்பழகன்,
  • சோமசுந்தரம்,
  • முன் னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்,
  • டி.டி. வி.தினகரன் எம்.பி.,
  • சுலோசனாசம்பத்,
  • ஜோதி எம்.பி,
  • கோகுல இந்திரா எம்.பி.,
  • துணைசபாநாயகர், வரகூர் அருணாசலம்,
  • முன்னாள் எம்.பி.க்கள் அன்பழகன்
  • பெரம்பலூர் ராஜரத்தினம்,
  • அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா,
  • எம்.எல்.ஏ.க்கள் எஸ்.வி.சேகர்,
  • திருத்தணி அரி,
  • முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி,
  • சுகுமார்பாபு,
  • வி.என். சிதம்பரம்,
  • வி.ஜி.சந்தோஷம்,
  • வேட்டவலம் மணிகண்டன்,
  • ஆதிராஜாராம்,
  • நடிகை சி.ஆர்.சரஸ்வதி,
  • நடிகர் குண்டு கல்யாணம்,
  • முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி,
  • மல்லை சத்யா,
  • கலைப்புலி எஸ்.தாணு
  • வேளச்சேரி மணிமாறன்,
  • மல்லிகா தயாளன்,
  • பட அதிபர் கே.டி.குஞ்சுமோன்,
  • அவ்வை நடராஜன் மற்றும் ஏராளமான அ.தி. மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக தேனாம் பேட்டை வீட்டில் காளிமுத்து உடலுக்கு

  • எம்.எல்.ஏ.க்கள் பதர்சயீத்,
  • கலைராஜன்,
  • செந்த மிழன்,
  • முள்ளான் துணை மேயர் கராத்தே தியாகராஜன்,
  • பழ.நெடுமாறன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பகல் 12.45 மணிக்கு காளிமுத்து உடல் ஆம்புலன்ஸ் வேனில் மதுரைக்குகொண்டு செல்லப்பட்டது.

`சிறந்த இலக்கிய- அரசியல் பேச்சாளர்’ காளிமுத்து வாழ்க்கை குறிப்பு

1942-ம் ஆண்டுபபசிவகாசி அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் காளிமுத்து பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள். எம்.ஏ. பி.எச்.டி. வரை படித்து உள்ளார். தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும் பொன்முத்துராமலிங்க தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி’ என்றும் பாராட்டி உள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக் கிய-அரசியல் பேச்சாளர் களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.

100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்த தால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.

1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ. ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அதி.மு.க.வில்பபசேர்ந்தார்.

1977, 1980 ஆகிய ஆண்டு களில் நடந்த தேர்தலில் திருப் பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

அமைச்சர்

1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை விவசாய துறை அமைச்சராகவும், 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

இதையடுத்து அவர் சபா நயாகராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாள ராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரண மாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவ ராக காளிமுத்து இருந்து வந்தார்.

காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.

காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.

2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள் ளனர். கயல்விழிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

Posted in ADMK, AIADMK, Apollo hospital, Assembly, Biosketch, chairman, general secretary, Jayalalitha, K Kalimuthu, Lok Sabha, Madurai Central, MGR, Sivakasi, Speaker, Tamil Literature, Tamil Nadu, Thirupparankunram | 2 Comments »

Govt moves to stub out smoking scenes on TV – Two Years Jail Sentence

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

`டி.வி.’யில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றால் 2 ஆண்டு ஜெயில்

டெலிவிஷன் காட்சிகள் மற்றும் விளம்பரங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் (தடை) சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நரேஷ் தயாள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளின் இணை செயலாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கட்சி எம்.பி. சச்சின் பைலட்டும் இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளார்.

புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதால், அதன் காரணமாக நிகழும் மரண விகிதங்களும் அதிகரித்து வருவதாக, பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலை பொருட்கள் தடை சட்டத்தின் 5-வது விதியை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புகைப்பழக்கத்தை பிரபலப்படுத்தி, சிகரெட் விற்பனையை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்த சட்ட விதி தடை செய்கிறது. இந்த விதியை மீறுகிறவர்களுக்கான தண்டனை விவரங்கள் 22 மற்றும் 23-வது விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அதன்படி, அந்த விதியை மீறினால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. 2-வது முறையாக இந்த விதி மீறல் நடந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

புகைப்பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விளம்பர பலகைகளை அழிக்கவும் அரசுக்கு இந்த சட்ட விதிகள் அதிகாரம் வழங்கி உள்ளன.

Posted in 2003, Ban, Cigar, Cigarette, Health Ministry, Healthcare, Jail, Law, Mahesh Bhatt, Naresh Dayal, Rigorous Imprisonment, Sachin Pilot, smoking, Television, Tobacco Products (Prohibition) Act, TV | Leave a Comment »

Sealing resumes in Delhi amid tight security – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

யார் செய்த தவறுகள்?

சட்டத்துக்குப் புறம்பாக உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து வணிகர்கள் தில்லி மாநகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய தில்லி அரசும் மத்திய அரசும் “”வர்த்தகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று சொல்லி சலுகை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.

தில்லியைத் தவிர, வேறு எங்கு இப்பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த அளவுக்கு மத்திய அரசு “கருணை’காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய அரசு, சட்டத்தை வளைந்து போகச் செய்வது சரியானதல்ல. தில்லியில் இன்று ஏற்பட்டுள்ள இதே பிரச்சினை எல்லா நகரங்களிலும் இருக்கிறது. தில்லியில் அரசு மேற்கொள்ளும் உறுதியான முடிவினால் இந்தியாவில் அனைத்து நகரங்களுக்கும் புதிய விடிவு பிறக்கும். மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.

“”கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசு வலிமையற்றது அல்ல. கழுத்தில் கத்தியை வைத்து சலுகையை யாரும் கேட்க முடியாது. சட்டம் ஒழுங்கை மீறி மக்களை பணயம் வைத்து சலுகை கேட்க முடியாது” என்று நீதிமன்றம் அளித்துள்ள பதில் மிக அழுத்தமானது.

நாற்பது ஆயிரம் வர்த்தகர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதை வர்த்தகர்களும் ஏற்க வேண்டும்.

தேவையற்ற ஆக்கிரமிப்புகளால் திணறிக் கொண்டிருக்கும் தில்லி நகரை சீரமைக்கும் முதல் முயற்சிக்கே இந்த அளவுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதற்குக் காரணம் அரசியல். வாக்குவங்கிகளை வசமாக்கும் முயற்சியில் எந்த வழியை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்ற அரசியலால் இந்த நிலைமை.

சட்டத்துக்குப் புறம்பான கடைகளைத் தொடக்க நிலையிலேயே தடுக்க வேண்டிய நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளே பல இடங்களில் இவை நிரந்தரமாக நீடிக்கக் காரணமாக இருக்கின்றனர்.

பல ஊர்களில், நிரந்தரக் கட்டடத்தில் கடை இருந்தாலும் அதை “தினசரி கடை’ என்பதாகக் குறைந்த கட்டணத்துக்கு (அதிகக் கையூட்டுப் பெற்று) நாள் வாடகை ரசீது கொடுக்கிறார்கள். அதே இடத்தில் பல ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாக ஒரு “ஆதாரத்தை’ ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஒரு நேர்மையான அதிகாரி இந்த ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டால், இந்த ரசீதுகளை ஆதாரமாகக் காட்டி, “தினசரி கடைகளை’த் தொடர்ந்து நடத்த அனுமதி கேட்டு வழக்குப்போட்டு, வழக்கு முடியும் வரை தினசரி கடைகள் மீது நடவடிக்கை கூடாது என்று தடையுத்தரவும் பெற்று, நிரந்தரக் கடைகள் நீடிக்கின்றன.

அண்மையில், ஒரு மாநகராட்சிக்குச் சொந்தமான 3.4 ஏக்கர் நிலம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் (பல ஆண்டுகள் கழித்து) கையகப்படுத்தப்பட்டது. அங்கிருந்த நூறு கடைக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் போராட்டத்தைக் கைவிட்ட கடைக்காரர்கள் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை இதுதான்: “”….நாங்கள் (ஓர் அரசியல்வாதியிடம்) முப்பதாயிரம், நாற்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம். அட்வான்ஸ் மட்டும் திரும்பக்கிடைக்க வகை செய்யுங்கள்”.

இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது, தில்லி போன்ற பெருநகரில் 40,000 வர்த்தகர்கள் மூலம் அரசுக் கருவூலத்துக்கு வராமல் திசைமாறிய தொகை எத்தனை கோடியாக இருக்கும்?
The areas being targetted are:

  • Category A – Defence Colony, Friends Colony, Panchsheel Park, Vasant Vihar.
  • Category B – G K 1, 2, 3 4, Green Park, Green Park Extension, Hauz Khas, Gulmohar Park, Panchsheel Enclave, South Extension.

டெல்லியில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு இன்று தொடங்கியது

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதி இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை இடித்தும், சீல் வைத்தும் டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செப்டம்பர் மாதம் நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.

இதை தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு பகுதி களில் உள்ள 44 ஆயிரம் கடைகளுக்கும் சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி யாக உத்தரவிட்டது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பில் ஈடுபட்டனர். தடியடி நடந்தது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. வியாபாரிகள் கல்வீசியதில் பஸ்கள் சேதம் அடைந்தது. துணை ராணுவத்தால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்று முதல் மீண்டும் கடைகளுக்கு சீல் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டெல்லி குடியிருப்பு பகுதிகளில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு பணி இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதங்கள் நடைபெற்று விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Ashram Chowk, Business, Commerce, Corruption, Customers, Delhi Shops, Dinamani, Editorial, Kapil Sibal, Municipal Corporation of Delhi, New Delhi, nexus, Politicians, Safdarjung, Shop owners, Supreme Court | Leave a Comment »

Railways to serve ‘Veggie Salad’ to passengers

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

ரயில் நிலையங்களில் “காய்கறி சாலட்’: லாலுவின் புதிய அறிமுகம்

புதுதில்லி, நவ. 8: ரயில்நிலையங்களில் மண் குடுவையில் தேநீர், மோர் ஆகியவை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இப்போது “காய்கறி சாலட்’ என்ற சுவையான தின்பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு “லிட்டி சோகா‘ என்று பெயராம்.

ரயில் பயணிகளிடம் “லிட்டி சோகாவுக்கு’ காய்கறிகள் நிறைந்த சாலட் உணவுப் பண்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து ரயில் நிலையங்களில் இதற்கென ஸ்டால் அமைக்க லாலு உத்தரவிட்டுள்ளதாக தலைமை வர்த்தக மேலாளர் கே.கே.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

இந்தியன் ரயில்வே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறது. இது தவிர ரயில்களிலும் உணவுப் பண்டங்கள் விற்கப்படுகின்றன. இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவும் இதில் அடங்கும்.

பாட்னா ரயில் நிலையத்தில் முதன் முறையாக காய்கறி சாலட் விற்பனை செய்யும் ஸ்டால் தொடங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் முக்கிய ரயில்நிலையங்களில் இதேபோன்ற ஸ்டால்கள் நிறுவப்பட உள்ளன என்றார் ஸ்ரீவாஸ்தவா.

Posted in Chief Commercial Manager, Dhanbad, Dosa, Fruits, Gaya, Hajipur, healthy snacks, Idli, Indian Railway, KK Srivastava, Kulhad, Laloo, Lalu prasad Yadav, Litti Chokha, Mattha, Mughal Sarai, Muzaffarpur, Patna, Railways, Samastipur, snack, Train, Vegetables, Veggie Salad | Leave a Comment »