Archive for நவம்பர் 16th, 2006
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
கிரிக்கெட்டில் இந்தியப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை
 |
 |
கிரிகெட்டில் உலக சாதனைப் படைத்த இந்திய மாணவர்கள் |
இந்தியப் பள்ளி மாணவர்கள் இருவர் கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனைப் படைத்துள்ளார்கள்.
- முஹமது ஷைபாஸ் தும்பி மற்றும்
- மனோஜ் குமார்
ஜோடி செகந்தராபாதில் 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானப் போட்டியில் நாற்பது ஓவர்களில் 721 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளனர்.
உலக அளவில், ஒரு நாள் போட்டிகளில் ஜோடியாக எடுத்த ஓட்டங்களிலும் சரி, மிகப்பெரிய அளிவில் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும் சரி, இது தான் மிக அதிகமானது என கிரிக்கெட் விளையாட்டின் புள்ளி விபர நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
இவர்கள் இவ்வாறு எடுத்த ஓட்டங்களை கண்ட எதிர் அணியினர் 21 ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்தனர்.
பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் முந்தைய உலக சாதனையாக இருந்தது, சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்பிளியும் இணைந்து எடுத்த 664 ஓட்டங்கள் தான்.
Posted in Cricket, Harish, High School Team, Hyderabad, inter-school tournament, Manoj Kumar, Ramakant Achrekar, Ranji Trophy, Sachin Tendulkar, Secunderabad, Shaibaaz Tumbi, St Peter's, St Phillips school, Vinod Kambli | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: ஆண்டு விடுமுறை மொத்தம் 22 நாட்கள்
அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது,
இதனால் சில பண்டிகைகள் மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகள் வழங்கப்படாததால் பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்த பின்வரும் விடுமுறை நாட்களை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று முதல் – அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் விடுமுறை ரத்து செய்யப்பட்டு தற்போது விடுமுறை நாட்களாக கூடுதலாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் வருமாறு:-
1. ஜனவரி 1 -ந் தேதி – புத்தாண்டு தினம்.
2. ஜனவரி 17 -ந் தேதி – உழவர் திருநாள்.
3. மார்ச் 19 – ந் தேதி – தெலுங்கு புத்தாண்டு தினம்.
4. மார்ச் 31 – ந் தேதி – மகாவீர் ஜெயந்தி.
5. ஏப்ரல் 1 – ந் தேதி – மிலாது நபி.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Posted in 17, 22, Day off, employees, Government, Govt, Holiday, Karunanidhi, Mahavir Jayanthi, Milad un Nabi, Tamil Nadu, Telugu, Vacation, workers | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
Thatstamil.com
சிவாஜி ‘லேட்’ ஆகும்?
ரஜினிகாந்த்தின் சிவாஜி திட்டமிட்டபடி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகாது, மே மாதத்திற்குத் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷ்ரியா, நயனதாரா, ரகுவரன் நடிப்பில் உருவாகும் சிவாஜி படு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.
ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக செதுக்கி வருகிறார் ஷங்கர். வழக்கமாக படு நிதானமாக படப்பிடிப்புகளை நடத்தும் ஷங்கர், ரஜினியை முன்னிட்டு சற்றே வேகம் பிடித்து ஓடிக் கொண்டுள்ளார்.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் ரஜினிக்கு சில நாட்களுக்கு முன்பு போட்டுக் காட்டினாராம் ஷங்கர். படத்தைப் பார்த்த ரஜினி வியப்படைந்து விட்டாராம். இது நான்தானா? என்று தன்னைப் பார்த்து தானே ஆச்சரியமடைந்தாராம்.
இப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம், எனது படங்களிலேயே சிவாஜி மிகப் பெரிய படம், முக்கியமான படமாக இருக்கப் போகிறது பாருங்கள் என்று பாராட்டித் தள்ளி வருகிறாராம். இன்னும் 2 மாத ஷýட்டிங் பாக்கி உள்ளதாம்.
இந்தக் காட்சிகளை தற்போதுள்ள வேகத்தில் ஷங்கர் எடுத்தால் திட்டமிட்டபடி முடித்து விடலாமாம். இருப்பினும் படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடாமல் சற்றே தள்ளி வெளியிடலாம் என்று பேச்சு எழுந்துள்ளதாம்.
ஏப்ரல் 14க்குப் பதில் மே 8க்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதற்கு நியூமரலாஜி சென்டிமென்ட்தாõன் காரணம் என்று தெரிகிறது. ஷங்கருக்கு ராசியான எண் 8. எனவேதான் மே 8க்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
‘லேட்’டா வந்தாலும், ‘லேட்டஸ்’டாதானே வருவார் தலைவர்!
Posted in Nayanthara, Raghuvaran, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Shreya, Sivaji, Sreya, Sviaji the Boss | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள
- 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
- 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
- 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
- 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள
- 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
- 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
- 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
- 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
- மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.
நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.
சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.
மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Posted in ADMK, AIADMK, Chennai, Civic Polls, Condemn, Congress, Congress (I), Corporation, Era Sezhiyan, Indira Congress, Iraa Sezhiyan, Jayalalitha, Krishnasaamy, Krishnasamy, Krishnaswamy, local body elections, Madras, Meeting, Municipality, seats, Tamil Nadu | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
டைரக்டர் சூர்யா-நடிகை மீராஜாஸ்மின் திருமணமா?
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மீராஜாஸ்மின். இவர் தமிழில் `ரன்‘, `சண்டக் கோழி‘, உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது `திருமகன்‘ என்ற படத்தில் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து வருகிறார். 6 மாதங்களாக இதன் படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்கி நடித்துள்ளனர்.
அப்போது மீராஜாஸ்மினுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், காதல் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசிக் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப் பதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.
மீராஜாஸ்மின் ஏற்கனவே மலையாள பட டைரக்டர் லோகிததாசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவருடனான காதல் முறிந்து விட்டதாக மீராஜாஸ்மின் அறிவித்தார்.
எஸ்.ஜே.சூர்யாவை திருமணம் செய்வதற்காகவே அவர் லோகிததாசுடனான காதலை முறித்துக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மினும், எஸ்.ஜே.சூர்யாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் சம்மதித்து விட்டதாகவும், நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.
Posted in A Aa, BF, Director, Gossip, Kushi, Meera Jasmine, New, Rumor, Run, SJ Surya, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thirumagan, Vaali | 1 Comment »